search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக"

    பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தேசத்துரோக சட்டத்தை மேலும் கடுமையாக்குவோம் என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார். #LokSabhaElections2019 #RajnathSingh
    காந்திதாம்:

    குஜராத் மாநிலம் கட்ச்  மாவட்டத்தில் உள்ள காந்திதாம் நகரில்  நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மோடி தலைமையிலான பாஜக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஊழலை வேரோடு அகற்றிவிட்டோம் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால், அந்த இலக்கை நோக்கிய உறுதியான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

    தேசத்துரோக சட்டத்தை ரத்து செய்வோம் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிப்பவர்களை நாம் மன்னித்து விட வேண்டுமா? எங்களுக்கு அதிகாரம் கிடைத்தால் தேசத்துரோக சட்டத்தை மேலும் கடுமையாக்குவோம்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு தனியாக பிரதமரை நியமிக்க வேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுபோன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370, 35ஏ ஆகியவை திரும்பப் பெறப்படும்.



    கடந்த 2007ஆம் ஆண்டே செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை உருவாக்கும் திட்டம் விஞ்ஞானிகளிடம் இருந்தது. ஆனால், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அந்த சமயத்தில் ரஷியா, சீனா, அமெரிக்கா மட்டுமே இந்த தொழில்நுட்பத்தை கொண்டிருந்தன. தற்போது, மோடி ஆட்சியில் மிஷன் சக்தி என்ற பெயரில் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. #LokSabhaElections2019 #RajnathSingh

    என்.ஆர். காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படும் கவர்னர் கிரண்பேடியை உடனடியாக மாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்டு கம்யூ. வலியுறுத்தியுள்ளது. #governorkiranbedi

    புதுச்சேரி:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதா வது:-

    தட்டாஞ்சாவடியில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த அசோக் ஆனந்த் தொடர்பான வழக்கில் கோர்ட்டு தண்டனை வழங்கியதை அடுத்து அவரது பதவி தானாக பறிபோனது.

    அவர் பதவி இழந்ததாக சபாநாயகர் விதிமுறைகள் படி அறிவிப்பு வெளியிட்டார். இப்போது அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் அசோக் ஆனந்த் தனது பதவி பறிப்பு சம்பந்தமாக கவர்னரிடம் கொடுத்த மனுவை கவர்னர் ஜனாதிபதியின் பார்வைக்கு அனுப்பி உள்ளார்.

    அதில் யூனியன் பிரதேச சட்ட விதியின்படி சட்டமன்ற உறுப்பினர் பதவியை தகுதி இழப்பு செய்வதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. ஜனாதிபதி இதனை விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது, புதுவை பிரதேச விதிகளுக்கு எதிரானது.

    புதுவை அலுவல் விதிகள்படி எம்.எல்.ஏ. தகுதி இழப்பு தொடர்பாக கேள்வி எழுமானால் அமைச்சரவையின் முடிவு படிதான் செயல்பட வேண்டும். ஆனால், முதல்-அமைச்சருக்கும், அமைச்சரவைக்கும் தெரியாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்காமல் 15.3.2019 அன்று ஜனாதிபதிக்கும், மத்திய உள்துறை செயலாளருக்கும் அனுப்பி உள்ளனர்.

    தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் இந்த கடிதம் அனுப்பப்பட்டது தேர்தல் விதிமுறைகளுக்கும், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கும் மாறானதாகும்.எனவே, இந்திய தேர்தல் ஆணையமும், புதுவை தேர்தல் துறையும் விசாரித்து பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் கவர்னர் கிரண்பேடி பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ள என்.ஆர். காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார். எனவே அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். அல்லது தேர்தல் முடியும் வரை அவரை விடுமுறையில் செல்ல உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறியுள்ளோம். இதுதொடர்பாக ஜனாதி பதிக்கும் புகார் மனு அனுப்ப உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. உடன் இருந்தார்.

    காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், சோனியா காந்தியின் நெருங்கிய உதவியாளருமான டாம் வடக்கண் பாஜகவில் இன்று இணைந்துள்ளார். #CongressSpokesperson #TomvadakkanJoinsBJP
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி பல்வேறு கட்டமாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தல் கமிஷனும் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு கட்சிகளில் உள்ளோர் வெவ்வேறு கட்சிகளுக்கு மாறியும் வருகின்றனர்.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோனியா காந்தியின் நெருங்கிய உதவியாளருமான டாம் வடக்கண்  இன்று காலை  மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத்தின் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.



    இது குறித்து டாம் வடக்கண் கூறியிருப்பதாவது:

    புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சியின் கருத்து ஏற்புடையதல்ல. காங்கிரசின் கருத்து நாட்டு நலனுக்கு எதிரானது. இதனால் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளானேன். கட்சிக்காக நான் 20 ஆண்டுகளாக என் வாழ்க்கையை அர்ப்பணித்தேன். ஆனால், இப்போது என்னை தூக்கி எறிகிறார்கள். பரம்பரை அரசியல் காங்கிரஸில் உச்சத்தினை பெற்றுள்ளது.  இதன் காரணமாகவே நான் பாஜகவில் இணைந்துள்ளேன். நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவார் என பிரதமர் மோடியின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராகவும் செய்தித் தொடர்பாளராகவும் செயல்பட்டு வந்த டாம் வடக்கண் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் விலகியது கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    பாஜகவில் இணைந்த டாம் வடக்கண்ணிற்கு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில், கேரளாவில் சீட் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #CongressSpokesperson #TomvadakkanJoinsBJP
    கர்நாடக மாநிலம், சொகுசு ஓட்டலில் தாக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனந்த் சிங் காயங்களுடன் சிகிச்சை பெறும் புகைப்படம் வெளியாகியுள்ளது. #Karnataka #CongressMLA #BengaluruResort #MLAAnandsingh
    பெங்களூரு:
       
    கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாரதீய ஜனதா கட்சி முயற்சிப்பதாக புகார் எழுந்தது.
     
    இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராம்நகர் அருகேயுள்ள தனியார் சொகுசு ஓட்டலில் (ரெசார்ட்) தங்க வைக்கப்பட்டனர். பாரதீய ஜனதாவின் குதிரை பேரத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில்தான் இப்படி செய்திருப்பதாக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்திருந்தார்.

    நேற்று முன்தினம் இரவு, ரெசார்ட்டில் உள்ள ஒரு அறையில் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த் சிங், பீமா நாயக், கணேஷ் ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடையே திடீர் மோதல் ஏற்பட்டது.

    பீமா நாயக், கணேஷ் ஆகியோர் ஆனந்த்சிங்கிடம், ‘நாங்கள் பா.ஜனதாவுக்கு செல்ல இருந்த ரகசிய திட்டத்தை நீங்கள் தான் காங்கிரஸ் கட்சி தலைவர்களிடம் கூறிவிட்டீர்கள்’ என்று குற்றம்சாட்டியதாக தெரிகிறது. 

    இதனால் அவர்களிடையே கடும் வாக்குவாதம் நடந்தது. வாக்குவாதம் முற்றிய நிலையில், கணேசும், பீமா நாயக்கும் சேர்ந்து தாக்கியதில் ஆனந்த் சிங் படுகாயம் அடைந்தார். பெங்களூருவில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று நேற்று தகவல்கள் வெளியாகின.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல் ஏற்பட்டு, அடிதடியில் முடிந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சிகிச்சை பெறும் ஆனந்த் சிங்கை மந்திரி ஜமீர் அகமதுகான் சந்தித்து நலம் விசாரித்தார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ரெசார்ட்டில் நண்பர்களுக்குள் சிறிய அளவில் தகராறு நடந்துள்ளது. பெரிய சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. இதை ஊடகங்கள் தான் பெரிது படுத்துகின்றன’ என்றார்.

    மற்றொரு மந்திரியான டி.கே.சிவக்குமார், ‘எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. ஊடகங்கள் தான் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றன’ என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், ஆனந்த் சிங் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தலை மற்றும் நெஞ்சு பகுதியில் பலமாக தாக்கப்பட்ட நிலையில் அவர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடபட்டுள்ளது.

    இதற்கிடையில், மருத்துவமனையில் வீங்கிய முகத்துடன் ஆனந்த் சிங் படுத்திருக்கும் புகைப்படம் சில ஊடகங்களில் வெளியாகி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்குள் மோதல் நடந்தது உண்மைதான் என்பதை நிரூபித்துள்ளது. #Karnataka #CongressMLA #BengaluruResort #MLAAnandsingh
    ×