search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 114624"

    எடப்பாடிக்கு கருணாநிதி மீது திடீர் பாசம் ஏன்? என்று ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பி உள்ளார். #LokSabhaElections2019 #Vaiko
    ஈரோடு:

    ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ ஈரோடு தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம் பகுதியில் ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

    மத்தியில் உள்ள ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் அதற்கு உங்கள் ஆதரவு வேண்டும். மத்திய அரசு பாசிச வெறியாட்டம் ஆடிவருகிறது.

    மகாத்மா காந்தியின் உருவபொம்மையை வைத்துக்கொண்டு ஒரு கும்பல் துப்பாக்கியால் சுடுகிறது. கோட்சேக்கு நாடு முழுவதும் சிலை வைக்கப்போவதாகவும் அந்த கும்பல் கூறுகிறது. மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? வேடிக்கைதான் பார்த்தது.

    ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறியவரே துணை முதல்வர் ஓ.பி.எஸ்.தான் அவரிடம் விசாரணை நடத்த இந்த அரசு தயாரா? இன்று கலைஞர் மீது எடப்பாடிக்கு திடீர் பாசம் வந்துள்ளது. அவரை பற்றியெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசிவருகிறார். ஏதோ விசாரணை நடத்தப் போகிறாராம். கலைஞரை ஸ்டாலின் பெற்ற பிள்ளையைபோல் பார்த்து கொண்டார். ஏன்.. பிரதமர் மோடி உள்பட அனைவரும் அவரை பார்த்து சென்றவர்கள்தானே?

    கலைஞர் மறைந்த பிறகு ஸ்டாலின் உள்பட அவரது குடும்பத்தினர் மெரினாவில் இடம் கேட்டு வந்தார்களே... முடியாது என்று சொன்னவர்கள்தானே... நீங்கள்? இப்போது மட்டும் கலைஞர் மீது பாசம் வந்துவிட்டதா?

    தி.மு.க. வக்கீல்கள் போராடி வாதாடி மெரினாவில் இடம் வாங்கி கொடுத்தார்கள். தமிழகத்தில் 18 சட்டசபை இடைத்தேர்தலோடு மேலும் 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதனால் மத்தியில் மட்டுமல்ல... மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும்.

    இவ்வாறு வைகோ பேசினார்.  #LokSabhaElections2019 #Vaiko



    எடப்பாடி அருகே விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எடப்பாடி:

    ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த பி.மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாட்டுசாமி. இவரது மகன் சந்தானபாரதி (வயது 28). வேன் டிரைவர். திருமணம் ஆகவில்லை.

    இவர் கறிக்கடைகளுக்கு கோழிகள் சப்ளை செய்யும் வேனில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இன்று அதிகாலை சந்தானபாரதி வேன் மூலம் எடப்பாடி பகுதிகளுக்கு கோழிகளை சப்ளை செய்த பின்னர், மீதமுள்ள கோழிகளுடன் சங்ககிரி நோக்கி வேனை ஓட்டிச் சென்றார்.

    எடப்பாடி- சங்ககிரி சாலையில் உள்ள கோனமோரி மேடு பகுதியில் காலேஜ் இறக்கம் பகுதியில் வேன் சென்றபோது, எதிர்திசையில் சங்ககிரியிலிருந்து எடப்பாடி நோக்கி வந்த சுற்றுலா பஸ்சுடன் நேருக்கு நேர் மோதியது.

    இதில் படுகாயமடைந்த சந்தானபாரதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். சுற்றுலா பஸ்சில் வந்த பயணிகளுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பலியான வேன் டிரைவர் சந்தானபாரதியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தர்.

    மேலும் வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எடப்பாடி அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள செட்டிப்பொட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி பாப்பாத்தி (வயது 35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. நேற்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த பாப்பாத்தி வழக்கம் போல் தூங்க சென்றார். பின்னர் காலை வெகு நேரம் ஆகியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த ராதாகிருஷ்ணன் ஜன்னல் வழியாக பார்த்த போது பாப்பாத்தி தூக்கில் பிணமாக தொங்கினார். இதையடுத்து மனைவி உடலை பார்த்து ராதாகிருஷ்ணன் கதறி அழுதார். உடனே அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உடலை மீட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த தேவூர் போலீசார் பாப்பாத்தி உடலை மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 20 தொகுதிகளுக்கும் அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். #TNByElections #OPS
    சென்னை:

    தமிழகத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் காலியான 18 தொகுதிகள் என மொத்தம் 20 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

    இந்நிலையில் ஆளுங்கட்சியான அதிமுக இந்த 20 தொகுதிகளுக்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை இன்று நியமித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.



    தொகுதி வாரியாக வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    அந்தந்த தொகுதிகளின் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு கட்சி நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு நல்கி சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. #TNByElections #OPS
    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. #ADMK #EdappadiPalaniswami

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வ்ம ஆகியோர் இன்று காலை திடீர் என்று ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகம் வந்தனர்.

    அவர்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோருடன் அவசர ஆலோசனை நடத்தினர்.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தினகரனை ஆதரிப்பவர்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக அழைப்பு விடுத்து இருந்தனர்.

    அதுபற்றி இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் தினகரன் ஆதரவாளர்கள் 18 தொகுதி இடைத்தேர்தலை சந்திப்பதா? அல்லது அப்பீல் செய்வதா? என்று ஆலோசித்து வருகிறார்கள். இதுபற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. #ADMK #EdappadiPalaniswami

    எடப்பாடி அருகே மனைவியை பிரிந்து வாழ்ந்ததால் வி‌ஷ விதையை தின்ற நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    எடப்பாடி:

    எடப்பாடி அடுத்த சித்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெடிக்காரண்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (55). இவருக்கு காவியா(25), விஜயா(20) என இரு மகள்கள் உள்ளனர். மகள்கள் திருமணம் முடித்து கணவர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். இந்த நிலையில் மனைவியை பிரிந்து பழனிசாமி தனியாக வாழந்து வந்தார். இதனால் மனம் உடைந்து காணப்பட்ட பழனிசாமி நேற்று அரளி  விதைகளை அரைத்து குடித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் வாந்தி ஏற்பட்டு மயங்கி கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்துவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பழனிசாமி நேற்றிரவு உயிரிழந்தார். பழனிசாமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பூலாம்பட்டி போலீசார் அவரது இறப்பு குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். #Tamilnews
    திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய சென்ற தமிழக முதலமைச்சர் முன் சாமியாடிய நபர், தமிழகம் சீரழிந்துவிட்டதாக குற்றம்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    திருப்பதி:

    திருப்பதியில் நேற்று இரவு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வராக சாமி கோவிலில் தரிசனம் செய்த பின்னர் ஹயக்ரீவர் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்றார்.

    அப்போது கோவிலில் உள்ள அர்ச்சகர் போன்று இருந்த ஒருவர் திடீரென சாமியாடினார். அவர் எடப்பாடியை என்ன வந்து பார்த்துட்டு போகச்சொல்லு. தமிழ்நாடு சீரழிந்து போய்ட்டு. வரச் சொல்லுடா முதல்ல என்று பலத்த சத்தத்துடன் சாமியாடினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே முதல்வரின் பாதுகாப்பு படையைச் சேர்ந்த போலீசார் விரைந்து சென்று அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.



    இதில் அவர், ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த ஸ்ரீராமலு என்று தெரியவந்தது. அவரை போலீசார் குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். அவரை எச்சரித்து விடுவித்தனர்.

    நான் இந்த மலையில் இருக்க பகவான் எனக்கு அருள்பாலித்துள்ளார். 1 வாரமாக இங்கு தங்கி உள்ளேன்.

    எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் தமிழகம் சீரழிந்துவிட்டது. அனைத்தும் முடங்கி கிடக்கிறது. இதனால் பெருமாள் எனது ரூபத்தில் வந்து அவரை சந்திக்க வேண்டும் என்றார். அதனால் தான் அவரை சந்திக்க வேண்டும் என்று கூறினேன். ஆனால் அவர் என்னை சந்திக்காமல் அலட்சியப்படுத்தி சென்றுவிட்டார் என்றார்.

    ×