என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இடைத்தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளுக்கும் அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்
Byமாலை மலர்29 Oct 2018 8:54 AM GMT (Updated: 29 Oct 2018 8:54 AM GMT)
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 20 தொகுதிகளுக்கும் அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். #TNByElections #OPS
சென்னை:
தமிழகத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் காலியான 18 தொகுதிகள் என மொத்தம் 20 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் ஆளுங்கட்சியான அதிமுக இந்த 20 தொகுதிகளுக்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை இன்று நியமித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தொகுதி வாரியாக வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அந்தந்த தொகுதிகளின் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு கட்சி நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு நல்கி சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. #TNByElections #OPS
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X