என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரிணாமுல் காங்கிரஸ்"

    • கடந்த 11 வருடத்தில் அமலாக்கத்துறையால் 5,297 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    • அவைகளில் எத்தனை வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன?. வெறும் 47 வழக்குகள்.

    அரசியல்வாதிகள் மீதான அமலாக்கத்துறையின் வழக்குகளில் 98 சதவீதம் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிரானது. மீதமுள்ள 2 சதவீதம் இங்கிருந்து வெளியேறி, பாஜக-வின் வாஷிங் மெஷினில் இணைந்தவர்கள் என சாகேத் கோகலே தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சாகேத் கோகலே தனது எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

    நேற்று அமலாக்கத்துறை டைரக்டர், பிரதமர் மோடி 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு வழக்குகள் அதிக அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 11 வருடத்தில் அமலாக்கத்துறையால் 5,297 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவைகளில் எத்தனை வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன?. வெறும் 47 வழக்குகள்.

    அமலாக்கத்துறை வழக்குகளில் தண்டனை விகிதம் 0.7 சதவீதம். இதன் அர்த்தம் ஒவ்வொரு 1000 வழக்குப் பதிவுகளுக்கு வெறும் 7 வழக்குகளில் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளியாக கண்டறியப்பட்டுள்ளனர்.

    ஆகவே, ஒவ்வொரு 1000 வழக்குகளிலும், 993 வழக்குகள் ஒருவரை சிறையில் வைத்திருப்பதற்காகவே அமலாக்கத்துறையால் தாக்கல் செய்யப்படுகின்றன. ஏனெனில் கடுமையான பணம் மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாமின் பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

    இவ்வாறு சாகேத் கோகலே தெரிவித்துள்ளார்.

    • பெயர் குறிப்பிடப்படாத பெண் தலைவரை "versatile international lady" என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.
    • தனிப்பட்ட விஷயங்களை பாஜக பகிர்ந்து அரசியல் செய்வதை திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சௌகதா ராய் சாடியுள்ளார்.

    மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அங்கு எவ்வளவு முயன்றும் மீடேற முடியவில்லை. அடுத்த வருடம் மேற்கு வங்காளத்துக்கு சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் பாஜக தனது வேலையை தொடங்கி உள்ளது.

    அந்த வகையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் கல்யாண் பானர்ஜி மற்றும் கீர்த்தி ஆசாத் இருவடையேயான தனிப்பட்ட வாட்ஸ்அப் chat-களின் ஸ்க்ரீன் ஷாட்களை பாஜக தலைவர் அமித் மாளவியா கசிய விட்டுள்ளார். இதோடு, தேர்தல் ஆணையத்தில் வைத்து திரிணாமுல் எம்பிக்கள் இருவர் சண்டையிட்டு கொண்ட வீடியோவையும் பாஜக தலைவர் அமித் மாளவியா பகிர்ந்துள்ளார்.

    அவர் வெளியிட்ட chat-களில் கல்யாண் பானர்ஜி, சொந்த கட்சியில் இருக்கும் மற்றொரு பெயர் குறிப்பிடப்படாத பெண் தலைவர் குறித்து குறை கூறுகிறார். அவரை கீர்த்தி ஆசாத் சமாதானப்படுத்துகிறார். அந்த பெயர் குறிப்பிடப்படாத பெண் தலைவரை "versatile international lady" என்று குறிப்பிட்டு கல்யாண் பானர்ஜி ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அந்த சாட்-இல் பேசியிருக்கிறார்.

    இந்நிலையில் இவ்வாறு கட்சியின் தனிப்பட்ட விஷயங்களை பாஜக பகிர்ந்து அரசியல் செய்வதை திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சௌகதா ராய் சாடியுள்ளார்.

    அவர் கூறியதாவது, "வெளியிடப்பட்ட ஸ்கிரீன் ஷாட்கள் எங்களை அவமானப்படுத்தியுள்ளன, சங்கடப்படுத்தியுள்ளன. இது நடந்திருக்கக்கூடாது. ஒவ்வொரு கட்சியின் உள் தனியுரிமையை பராமரிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

    • ஜனாதிபதி குறித்த திரிணாமுல் காங்கிரஸ் மந்திரியின் கருத்துக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்தது.
    • திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி பதவி விலகக் கோரி பா.ஜ.க. போராட்டம் நடத்தியது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் மந்திரியாக இருப்பவர் அகில் கிரி. பா.ஜ.க.வைச் சேர்ந்த சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியில் கூடியிருந்த பொதுமக்களின் முன்னால் அவர் பேசுகையில், சுவேந்து அதிகாரி எனது தோற்றம் நன்றாக இல்லை என கூறுகிறார். அவர் எவ்வளவு அழகாக இருக்கிறார். ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மக்களின் தோற்றத்தின் அடிப்படையில் அவர்களை எடை போடாது. உங்களது ஜனாதிபதி பதவியை நாங்கள் மதிக்கிறோம். உங்களுடைய ஜனாதிபதி எப்படி தோற்றமளிக்கிறார்? என பேசியுள்ளார். அவரது பேச்சைக் கேட்ட சுற்றியிருந்த மக்கள் ஆரவாரம் எழுப்பினர்.

    இதற்கிடையே, மந்திரியின் இந்த பேச்சுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு குறித்து திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி அகில் கிரி பயன்படுத்திய மொழி ஏற்றுக்கொள்ள முடியாதது என பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார். ஒடிசாவில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி பதவி விலகக் கோரி பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில், பா.ஜ.க. போராட்டம் எதிரொலியாக ஜனாதிபதி பற்றி சர்ச்சையாக பேசியதற்கு திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி அகில் கிரி மன்னிப்பு கோரினார்.

    திரிணமுல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மந்திரியின் அந்தக் கருத்து பொறுப்பற்ற தன்மையில் உள்ளது. அது திரிணமுல்லின் கருத்து இல்லை. ஜனாதிபதி மீது எப்போதும் தங்கள் கட்சி மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளது என தெரிவித்தது.

    • ஜனாதிபதி குறித்த திரிணாமுல் காங்கிரஸ் மந்திரியின் கருத்துக்கு திரிணாமுல் கண்டனம் தெரிவித்தது.
    • திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி பதவி விலகக் கோரி பா.ஜ.க. போராட்டம் நடத்தியது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் மந்திரியாக இருப்பவர் அகில் கிரி. பா.ஜ.க.வைச் சேர்ந்த சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியில் கூடியிருந்த பொதுமக்களின் முன்னால் அவர் பேசுகையில், சுவேந்து அதிகாரி எனது தோற்றம் நன்றாக இல்லை என கூறுகிறார். அவர் எவ்வளவு அழகாக இருக்கிறார். ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மக்களின் தோற்றத்தின் அடிப்படையில் அவர்களை எடை போடாது. உங்களது ஜனாதிபதி பதவியை நாங்கள் மதிக்கிறோம். உங்களுடைய ஜனாதிபதி எப்படி தோற்றமளிக்கிறார்? என பேசியுள்ளார். அவரது பேச்சைக் கேட்ட சுற்றியிருந்த மக்கள் ஆரவாரம் எழுப்பினர்.

    மந்திரியின் இந்த பேச்சுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒடிசாவில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி பதவி விலகக் கோரியும் பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடந்தது.

    இதற்கிடையே, பா.ஜ.க. போராட்டத்தின் எதிரொலியாக ஜனாதிபதி பற்றி சர்ச்சையாக பேசியதற்கு திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி அகில் கிரி மன்னிப்பு கோரினார்.

    இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பற்றிய அகில் கிரியின் கருத்தை முதல் மந்திரி மம்தா பானர்ஜி வருத்தம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பற்றிய அகில் கிரியின் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அகில் செய்தது தவறு. அத்தகைய கருத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. அவர் எனது கட்சி சகா என்பதால் எனது கட்சி சார்பில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கட்சி ஏற்கனவே அகில் கிரியை எச்சரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

    • ஆளுங்கட்சியின் தலைவரால் தனது சொந்த மாநிலத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை.
    • செல்வந்தர்கள் பணம் செலுத்தி மற்ற நாடுகளின் குடியுரிமையைப் பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள்.

    புதுடெல்லி:

    மக்களவையில் 2022-23ஆம் ஆண்டிற்கான கூடுதல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா பேசும்போது, தொழில்துறை உற்பத்தி தொடர்பான தரவுகளை மேற்கோள் காட்டி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:-

    பொருளாதார முன்னேற்றம் குறித்து அரசு பொய்யான தகவல்களைக் கூறி வருகிறது. பொருளாதாரம் சிறப்பாக உள்ளது, அனைவருக்கும் எரிவாயு சிலிண்டர்கள், வீடுகள் மற்றும் மின்சாரம் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கிறது என்று பிப்ரவரி மாதம்தோறும் மத்திய அரசு பொதுமக்களை நம்ப வைக்கப் பார்க்கிறது.

    ஆனால் மத்திய அரசு கூறியது அனைத்தும் பொய். 8 மாதங்களுக்கு பிறகு உண்மை இப்போது வெளிவருகிறது. இப்போது மத்திய அரசுக்குச் செலவுகளைச் சமாளிக்க பட்ஜெட் மதிப்பீட்டை விட கூடுதலாக ரூ.3.26 லட்சம் கோடி நிதி தேவை என்று அரசே கூறியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றி நரேந்திர மோடி அரசு தவறான தகவல்களைப் பரப்பி வருகிறது. இப்போது இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. அதை மேம்படுத்த நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பப்பு என்ற சொல்லை உருவாக்கியது இந்த அரசாங்கமும் ஆளும் கட்சியும்தான். இழிவுபடுத்தவும் திறமையின்மையை குறிக்கவும் அந்த வார்த்தையை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். ஆனால் உண்மையான பப்பு யார்? என்பதை புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அக்டோபர் மாதத்தில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி 26 மாதங்களில் இல்லாத அளவிற்கு நான்கு சதவீதம் சரிந்தது. மிகப்பெரிய வேலைகளை உருவாக்கும் உற்பத்தித் துறை 5.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆளுங்கட்சியின் தலைவரால் தனது சொந்த மாநிலத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. இப்போது சொல்லுங்கள் யார் பப்பு?

    நேற்று கேள்வி நேரத்தின் போது, ​​வளர்ந்து வரும் சந்தைகளில் செய்யப்படும் முதலீடுகளில் 50% வெளிநாட்டு நேரடி முதலீடுகள் இந்தியாவிற்குள் வருவதாக நிதி மந்திரி குறிப்பிட்டார். ஆனால் வெளியுறவுத்துறை இணை மந்திரி, கடந்த வெள்ளிக்கிழமை, இதே அவையில் ஒரு தகவலை தெரிவித்தார். அதாவது இந்த ஆண்டு முதல் பத்து மாதங்களில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர், தங்கள் இந்திய குடியுரிமையை துறந்துள்ளதாகத் தெரிவித்தார். இந்த அரசு அமைந்த பிறகு 2014 முதல் சுமார் 12.5 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் இந்திய குடியுரிமையைத் துறந்துள்ளனர். செல்வந்தர்கள் பணம் செலுத்தி மற்ற நாடுகளின் குடியுரிமையைப் பெற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார்கள். இதுதான் ஆரோக்கியமான பொருளாதாரச் சூழலின் அறிகுறியா? இதுதான் ஆரோக்கியமான வரிச் சூழலா? இப்போது சொல்லுங்கள் யார் பப்பு?

    இந்த நாட்டில் ஒரு பயங்கரமான சூழல் நிலவுகிறது. அதிக சொத்து வைத்துள்ளவர்கள், தொழிலதிபர்களின் தலைக்கு மேலே அமலாக்கத் துறையின் கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது.

    ஆளுங்கட்சி பல நூறு கோடியை செலவழித்து மக்கள் பிரதிநிதிகளை வாங்குகிறது. அதேநேரம் அமலாக்கத்துறை விசாரிக்கும் 95 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் குறி வைத்தே இருக்கிறது. 2016-ல் அறிவிக்கப் பணமதிப்பு நீக்க நடவடிக்கையானது அதன் இலக்கை அடைவதில் தோல்வி அடைந்துவிட்டது. கள்ள நோட்டுகளை ஒழிப்பது இன்னுமே கூட கனவாகவே உள்ளது

    இவ்வாறு அவர் பேசினார்.

    திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவின் இந்த அனல்பறக்கும் உரையானது வைரலாகி வருகிறது.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு அமித் ஷா மேற்கு வங்காளத்திற்கு வந்தார்.
    • தற்போது மம்தாவுடன் சமரசம் செய்து கொள்ள பிரதமர் மோடி வருகிறார்.

    பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காள மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். ரூ.7800 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைக்கும் அவர், முடிக்கப்பட்ட திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

    கொல்கத்தாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஹவுரா-நியூ ஜல்பாய்குரியை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கத்தை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மேலும் ஜோகா-தரதாலா இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

    இந்நிலையில், பிரதமரின் மேற்கு வங்க பயணத்தை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள மேற்கு வங்க காங்கிரஸ் தலைவரும், அக்கட்சியின் மூத்த எம்.பி.யுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளதாவது:

    ஒரு ரெயில் இயக்கத்தை நாட்டின் பிரதமர் தொடங்கி வைக்கிறார் என்பதை நாம் கேள்விப்பட்டதே இல்லை. நான் ரெயில்வே அமைச்சராகவும் இருந்துள்ளேன். ஆனால் எங்கள் ஆட்சியின் போது பிரதமர் மன்மோகன் சிங் எந்த ரெயில் இயக்கத்தையும் தொடங்கி வைத்ததில்லை.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்துறை மந்திரி அமித் ஷா மேற்கு வங்காளத்திற்கு வந்தார். தற்போது மம்தாவுடன் சமரசம் செய்ய பிரதமர் மோடி வருகிறார். இதனால் மம்தா மற்றும் அவரது கட்சியினருக்கு எதிரான சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணையின் வேகம் குறையும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • அர்பிதா வீடுகளில் நடந்த சோதனையின்போது ஏராளமான தங்க நகைகள் மற்றும் கோடிக்கணக்கான ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    • குந்தன் கோஷ் பலரிடம் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி கொண்டு ஏமாற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த ஆசிரியர் பணி நியமன மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சமீபத்தில் முன்னாள் கல்வி மந்திரி பார்த்தா சட்டர்ஜி மற்றும் அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அர்பிதா வீடுகளில் நடந்த சோதனையின் போது ஏராளமான தங்க நகைகள் மற்றும் கோடிக்கணக்கான ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக மேற்கு வங்காள மாநில திரிணாமுல் காங்கிரஸ் இளைஞர் பிரிவு தலைவர் குந்தன் கோஷ் பலரிடம் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி கொண்டு ஏமாற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

    இதையடுத்து அவருக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்நிலையில் இன்று குந்தன்கோஷ் கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் ஆணையம் தேசிய கட்சி என்ற அந்தஸ்தை வழங்கி உள்ளது.
    • இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தேசிய அந்தஸ்து திரும்ப பெறப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த தேசிய கட்சி என்ற அந்தஸ்தை தலைமை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றுள்ளது. இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தேசிய அந்தஸ்தும் திரும்ப பெறப்பட்டுள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் ராஷ்டிரிய லோக் தளம், ஆந்திராவில் பாரத் ராஷ்டிர சமிதி, மணிப்பூரில் பிடிஏ கட்சி, புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கடசி, மேற்கு வங்காளத்தில் ஆர்எஸ்பி, மிசோரமில் எம்பிசி ஆகிய கட்சிகளுக்கு வழங்கப்பட்ட மாநிலக் கட்சி அந்தஸ்தையும் தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.

    அதேசமயம், டெல்லி, கோவா, பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பெற்ற வாக்குகள் மற்றும் செயல்திறனின் அடிப்படையில், ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தற்போது டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது.

    சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் செயல்திறனின் அடிப்படையில், நாகாலாந்தில் தேசியவாத காங்கிரசும், மேகாலயாவில் திரிணாமுல் காங்கிரசும் மாநில கட்சிகளாக அங்கீகரிக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.

    பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் கட்சி, தேசிய மக்கள் கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகிய கட்சிகள் இப்போது தேசிய கட்சிகளாக உள்ளன. 

    • கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.
    • வாகனங்களில் சென்றவர்கள் கண்டும், காணாமல் சென்றது போலவும் இடம் பெற்று இருந்தது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் தன்பான் பகுதியை சேர்ந்த பழங்குடி இனத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 4 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதியஜனதா கட்சியில் இணைந்தனர்.

    இதற்கிடையில் அந்த பெண்களை ரோட்டில் தவழ வைத்து நூதன தண்டனை கொடுப்பது போன்ற வீடியோவை மேற்கு வங்காள மாநில பாரதிய ஜனதா தலைவர் சுகந்தா மஜூம்தார் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

    அந்த வீடியோவில் 3 பெண்களும் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் ரோட்டில் படுத்து தவழ்ந்து ,தவழ்ந்து செல்வதும், இதனை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் கண்டும், காணாமல் சென்றது போலவும் இடம் பெற்று இருந்தது.

    இந்த வீடியோ பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 3 பழங்குடி இன பெண்கள் பாரதியஜனதா கட்சியில் சேர்ந்ததால் ஆத்திரம் அடைந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அவர்களை மீண்டும் தங்கள் கட்சியில் சேருமாறு இந்த தண்டனையை கொடுத்ததாக பா.ஜனதா குற்றம்சாட்டி உள்ளது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது. 

    • கடந்த ஆண்டு பார்த்தா சாட்டர்ஜி வீட்டிலும், அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
    • சிரியர் பணிக்கு பலரிடம் பணம் வாங்கியதாக ஜிபன் கிருஷ்ணா மீது குற்றச்சாட்டு உள்ளது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

    இதில் 2014-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை கல்வித்துறை மந்திரியாக பார்த்தா சாட்டர்ஜி செயல்பட்ட போது ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ.யும் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகின்றன.

    கடந்த ஆண்டு பார்த்தா சாட்டர்ஜி வீட்டிலும், அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில் அர்பிதா வீட்டில் ரூ.20 கோடி சிக்கியது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    மேலும் இந்த வழக்கில் மாணிக் பட்டாச்சார்யா எம்.எல்.ஏ.வை சி.பி.ஐ. கைது செய்தது. இந்த நிலையில் ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ஜிபன் கிருஷ்ணா சஹாவிடம் கடந்த 14-ந்தேதி முதல் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

    முர்ஷிதா பாத் மாவட்டம் பர்வானில் உள்ள இல்லத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடந்தது. இந்த நிலையில் ஜிபன் கிருஷ்ணா சஹா எம்.எல்.ஏ.வை இன்று காலை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    சி.ஆர்.பி.எப். பாதுகாப்புடன் வாகனத்தில் அழைத்து சென்றனர். அவர் கொல்கத்தாவில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சி.பி.ஐ. அதிகாரிகள் கூறும்போது, 'ஜிபன் கிருஷ்ணா சஹா தனது இரண்டு செல்போன்களை வீட்டை ஒட்டியுள்ள குளத்தில் வீசியுள்ளார். அதில் இருந்து தண்ணீரை வெளியேற்றி ஒரு செல்போன் மீட்கப்பட்டது. அவரது செல்போன் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

    மீட்கப்பட்ட செல்போனில் உள்ள தகவல்களை மீட்டெடுக்கும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளார்கள். விசாரணையில் சி.பி.ஐ. அதிகாரிகள் வந்த போது செல்போன்களை குளத்தில் வீசியதாக கூறப்படுகிறது.

    ஆசிரியர் பணிக்கு பலரிடம் பணம் வாங்கியதாக ஜிபன் கிருஷ்ணா மீது குற்றச்சாட்டு உள்ளது. சோதனையில் முறைகேடு தொடர்பாக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சி.பி.ஐ. தெரிவித்து இருந்த நிலையில் ஜிபன் கிருஷ்ணா சஜா எம்.எல்.ஏ. இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

    • சொந்த வேலை காரணமாக டெல்லி சென்ற முகுல் ராய், எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்தார்.
    • சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்ததாக தகவல்

    கொல்கத்தா:

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முகுல் ராய் பாஜகவில் இணைய விரும்புவதாக கூறியிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மம்தா பானர்ஜிக்கு அடுத்த தலைவராக இருந்த முகுல் ராய், கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017ல் பாஜகவுக்கு தாவினார். 2020ல் பாஜக தேசிய துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் திடீரென மமதா பானர்ஜியின் தலைமையை ஏற்று மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சொந்த வேலை காரணமாக டெல்லி சென்ற முகுல் ராய், எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்தார். அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை என்று கட்சியினரும் குடும்பத்தினரும் தெரிவித்தனர்.

    அதன்பின்னர் நேற்று மாலை செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த முகுல் ராய் கூறியதாவது:-

    நான் பாஜக சட்டமன்ற உறுப்பினர். நான் பாஜகவுடன் இருக்க விரும்புகிறேன். உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் கட்சி தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்த பேச விரும்புகிறேன்.

    சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தேன். தற்போது நான் நலமாக உள்ளேன், மீண்டும் அரசியலில் ஈடுபட உள்ளேன். அதேசமயம் திரிணாமுல் காங்கிரசுடன் ஒருபோதும் இணைந்து செயல்படமாட்டேன் என்று 100 சதவீதம் நம்பிக்கை இருக்கிறது. இதேபோல் என் மகன் சுபரங்ஷுவும் பா.ஜ.க.வில் சேர வேண்டும், அது அவருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தினாஜ்பூர் மாவட்டத்தில் நேற்று மர்ம நபர்கள் 3 பேரை சுட்டுக்கொன்றனர்.
    • வீடு ஒன்றில் 7 பைகளில் வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 8-ந்தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளின் போது எதிர்கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களை மனுதாக்கல் செய்யவிடாமல் தடுத்ததாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    இதற்கிடையில் தினாஜ்பூர் மாவட்டத்தில் நேற்று மர்ம நபர்கள் 3 பேரை சுட்டுக்கொன்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.

    இன்று காலை பாங்கூர் என்ற பகுதியில் ஆட்கள் யாரும் இல்லாத வீடு ஒன்றில் 7 பைகளில் வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி அறிந்ததும் போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து சென்றனர்.

    7 பைகளில் இருந்த வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வெடிகுண்டுகளை பதுக்கி வைத்தது யார்?என்று தெரியவில்லை. பஞ்சாயத்து தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதனை சீர்குலைக்கும் வகையில் நாசவேலைக்காக இந்த குண்டுகளை யாராவது வைத்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது மேற்கு வங்க மாநிலத்தில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    ×