என் மலர்
நீங்கள் தேடியது "மகாராஷ்டிரா"
- மற்றவர்கள் தர்காவில் காவி கொடி உயர்த்தப்பட்டபோது கைதட்டினர்.
- அப்பகுதியில் உள்ள சிவாஜி சிலையில் கருப்பு மை பூசப்பட்டிருப்பதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பரவியது,
மகாராஷ்டிரா மாநிலம் ஆலியாநகர் மாவட்டம் ரஹுரி பகுதியில் அமைந்துள்ள ஹஸ்ரத் அகமது சிஷ்டி தர்காவுக்குள் புகுந்து கும்பல் ஒன்று, பச்சைக் கொடியை அகற்றி, காவி கொடியை ஏற்றியுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், கும்பல் வலுக்கட்டாயமாக தர்காவிற்குள் நுழைந்து, பச்சைக் கொடியை அகற்றி, அதற்குப் பதிலாக காவி கொடியை ஏற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. சிலர் "ஜெய் ஸ்ரீ ராம்" என்று கோஷமிடுவதை கேட்க முடிகிறது. மற்றவர்கள் தர்காவில் காவி கொடி உயர்த்தப்பட்டபோது கைதட்டினர்.
"அவர்கள் தர்காவைத் தாக்கி அதன் மீது காவி கொடியை ஏற்றும்போது, போலீசார் அங்கேயே அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களைத் தடுக்க அவர்கள் எதுவும் செய்யவில்லை" என சம்பவத்தின்போது அங்கிருந்த ஒருவர் ஊடகத்திடம் தெரிவித்தார்.
இந்த சம்பவம் நேற்று முன் தினம் (மார்ச் 26) அன்று நடந்துள்ளது. அப்பகுதியில் உள்ள சிவாஜி சிலையில் கருப்பு மை பூசப்பட்டிருப்பதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பரவியதைத்த அடுத்து அமைதியின்மை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர்.
- குல்தாபாத்தில் ஔரங்கசீப்பின் கல்லறைக்கு போலீஸ் காவல் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
- அடுத்த சில நாட்களில் முக்கிய பண்டிகைகள் அணிவகுத்து வருகின்றன.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள குல்தாபாத்தில் அமைந்துள்ள முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த கல்லறையை அகற்றக்கோரி நாக்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் இஸ்லாமியர்களின் புனித போர்வை எரிக்கப்பட்டதாக பரவிய வதந்தியால் கலவரம் வெடித்தது. குல்தாபாத்தில் ஔரங்கசீப்பின் கல்லறைக்கு போலீஸ் காவல் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் அடுத்த சில நாட்களில் முக்கிய பண்டிகைகள் அணிவகுத்து வருகின்றன. அதிலும் குறிப்பாக 29-ந் தேதி சத்ரபதி சம்பாஜியின் நினைவுநாள் வருகிறது. இதைத்தொடர்ந்து 30-ந் தேதி மராட்டிய புத்தாண்டான 'குடிபட்வா' விழாவும், 31-ந் தேதி ரம்ஜான் மற்றும் ஜூலேலால் ஜெயந்தி மற்றும் ஏப்ரல் 6-ந் தேதி ராம நவமி போன்ற விழாக்களும் வருகிறது.
மேற்கண்ட நாட்களில் இந்து அமைப்புகள் ஔரங்கசீப்பின் கல்லறைக்கு எதிராக போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக வெளியான தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
எனவே சத்ரபதி சம்பாஜிநகரில் அசம்பாவிதத்தை தவிர்க்கவும், சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 8-ந் தேதி வரை 144 தடை உத்தரவு விதித்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.
- மகாத்மா பட்டம் நாட்டில் உள்ள எல்லாவற்றிற்கும் மேலானது. அதை இரண்டு பேர் மட்டுமே அனுபவித்தனர்.
- ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் ஆகியோர் சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் கல்வியில் முன்னோடிகளாக திகழ்ந்தவர்கள்.
சமூக சீர்திருத்தவாதிகளான மகாத்மா ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலே ஆகியோருக்கு இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமைச்சர் ஜெயக்குமார் ராவல் தீர்மானத்தை தாக்கல் செய்ய, தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. சாகன் புஜ்பா், காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜய் வடேட்டிவார் ஆகியோர் ஆதரித்து பேசினர்.
மகாத்மா பட்டம் நாட்டில் உள்ள எல்லாவற்றிற்கும் மேலானது. அதை இரண்டு பேர் மட்டுமே அனுபவித்தனர். அவர்கள் மகாத்மா காந்தி மற்றும் மகாத்மா பூலே என அமைச்சர் ஜெயக்குமார் ராவல் தெரிவித்தார்.
ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் ஆகியோர் சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் கல்வியில் முன்னோடிகளாக திகழ்ந்தவர்கள்.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றது.
- பேருந்து ஓட்டுநர் ஒருவர் செல்போனில் ஐபிஎல் பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கியுள்ளார்.
ஐபிஎல் 2025 சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் கே.கே.ஆர்.- ஆர்.சி.பி. போட்டியை பேருந்து ஓட்டுநர் ஒருவர் செல்போனில் பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஐ.பி.எல் போட்டியை பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கிய ஓட்டுநரின் செயலை பயணி ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் முதல்வர் தேவேந்திர பட்நாவிசை அவர் டேக் செய்திருந்தார். இதனையடுத்து பேருந்து ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
- கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 35 போலீசார் காயம் அடைந்தனர்.
- பதட்டமான பகுதிகளில் ரோந்துப் பணி தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள குல்தாபாத்தில் அமைந்துள்ள முகலாயப் மன்னர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் தலைமையிலான போராட்டங்களை நடத்தின.
அப்போது இஸ்லாமிய புனித எழுத்துக்கள் கொண்ட 'சதர்' துணி எரிக்கப்பட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், மத்திய நாக்பூர் பகுதிகளில் கடந்த திங்கள்கிழமை (மார்ச் 17) இரவு வன்முறை வெடித்தது.
குறிப்பாக மகால், ஹன்சாபுரி பகுதிகளில் போராட்டக்காரர்கள் பல வாகனங்களை தீவைத்து எரித்தனர். இதில், 42 வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 35 போலீசார் காயம் அடைந்தனர்.
இந்த வன்முறையைத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியதால் நாக்பூர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நேற்றும் நேற்று முன்தினமும் சில பகுதிகளில் ஊரடங்கு நீக்கப்பட்டது.

இந்நிலையில் கலவரத்தின்பின் 6 நாட்களுக்கு பிறகு இன்று மதியம் 3 மணியளவில் மீதமுள்ள பகுதிகளிலும் ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. கலவரம் தொடர்பாக இதுவரை 100 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பதட்டமான பகுதிகளில் ரோந்துப் பணி தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், நாக்பூரில் நிலைமை முற்றிலும் அமைதியாக உள்ளது. எங்கும் பதற்றம் இல்லை. அனைத்து மதத்தினரும் அமைதியாக வாழ்கிறார்கள். எனவே, ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நாகப்பூர் தொகுதி எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது.
- இன்றும் பிரிவினைவாத சக்திகள் தீவிரமாக செயல்படுகின்றன.
- பௌத்தமும் தமிழ்நாட்டில் பரவலாக பின்பற்றப்பட்டது.
மும்பை ஆளுநர் மாளிகையில் இங்கிலாந்து வாழ் இந்தியரான சச்சின் நந்தா எழுதிய 'ஹெட்கேவர் - வாழ்க்கை வரலாறு' என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, "பேரரசர் அசோகர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்திய துணை கண்டத்தை ஒன்றிணைத்தார். கலாசார ரீதியாகவும் பாரம்பரியமாகவும், இந்தியா எப்போதும் ஒரே நாடாகத்தான் இருந்தது. அந்நிய படையெடுப்பாளர்களால் இந்தியாவை பிரித்து அதை ஆள முடிந்தது. சில மாநிலங்களில் இன்றும் பிரிவினைவாத சக்திகள் தீவிரமாக செயல்படுகின்றன.
ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் கே.பி. ஹெட்கேவர் முன்வைத்த ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு பற்றிய சிந்தனைகள் முன் எப்போதையும் விட தற்போது மிகவும் பொருத்தமானவையாகும். ஆர்.எஸ்.எஸ். தனது நீண்ட பயணத்தில் நூற்றுக்கணக்கான தேசபக்தர்களை உருவாக்கியது. அவர்கள் தன்னலமின்றி வாழ்ந்து தேசத்திற்காக இறந்தனர்.
சமண மதம் தோன்றியபோது, மூன்றில் இரண்டு பங்கு தமிழர்கள் அதைப் பின்பற்றினர். இன்று 40,000 தமிழ் சமணர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். சமண மதம் பரவியபோது, அது தானாகவே பரவியது. பௌத்தமும் தமிழ்நாட்டில் பரவலாக பின்பற்றப்பட்டது.
தமிழ்நாடு ஆங்கிலேயர்களால் அரசியல் ரீதியாக உருவாக்கப்பட்டது. எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கவில்லை. வரலாற்று ரீதியாக, தமிழ்நாடு சேர, சோழ, பாண்டிய, கொங்குநாடு எனப் பிரிக்கப்பட்டது - அவை தனித்தனி ராஜ்ஜியங்களாக இருந்தன. நாம் அதை மேலும் பிரித்துக் கொண்டே போனால், அது ஒரு டவுன் பேருந்தில் ஏறுவது போல, அங்கு நீங்கள் சென்றிடவும், திரும்பி வருவதற்கும் உங்கள் பாஸ்போர்ட்டை காண்பிக்க வேண்டும். அதுதான் அடிப்படை யதார்த்தம்," என்று தெரிவித்தார்.
- நாட்டை வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்ல சிவாஜி மறு அவதாரம் எடுத்துள்ளார்
- பாஜக எம்.பி. பிரதீப் புரோகித்தின் இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி முந்தைய பிறவியில் புகழ்பெற்ற மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியாக பிறந்தார் என்று என்று பாஜக எம்.பி. பிரதீப் புரோகித் மக்களவையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மக்களவையில் பேசிய பிரதீப் புரோகித், "பிரதமர் மோடி அவரது முந்தைய பிறவியில் சத்ரபதி சிவாஜியாக பிறந்தார் என்று ஒரு துறவி என்னிடம் கூறினார். பிரதமர் மோடி உண்மையிலேயே சத்ரபதி சிவாஜி தான் என்றும், மகாராஷ்டிராவையும் நாட்டையும் வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்ல அவர் மறு அவதாரம் எடுத்துள்ளார்" என்று தெரிவித்தார்.
பாஜக எம்.பி. பிரதீப் புரோகித்தின் இந்த கருத்து மகாராஷ்டிராவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சத்ரபதி சிவாஜியை அவமதித்து விட்டார் என்று பாஜக எம்.பி.க்கு எதிர் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
- இன்று, மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் அவுங்கரசீப்புக்கு இணையாக கொடுங்கோல் ஆட்சி செய்கிறார்.
- மதம் தொடர்பான விசயங்களுக்கு அவர் எப்போதும் ஆதரவாக இருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்கசீப்பின் கல்லறையை அப்புறப்படுத்த வேண்டும் என சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பெரும் புயலை கிளப்பி வருகிறது. இதனால் அவுரங்கசீப் கல்லைறை இருக்கும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அடையாள அட்டை காண்பித்துதான் அந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலவைர் ஹர்ஷ்வர்தன் சப்கால், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸை அவுரங்கசீப் உடன் ஒப்பிட்டதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கால் பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது "அவுரங்கசீப் கொடுங்கோல் ஆட்சி செய்தார். இன்று, மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் அவுங்கரசீப்புக்கு இணையாக கொடுங்கோல் ஆட்சி செய்கிறார். மதம் தொடர்பான விசயங்களுக்கு அவர் எப்போதும் ஆதரவாக இருக்கிறார். ஆனால், சர்பாஞ்ச் சந்தோஷ் தேஷ்முக் கொலை போன்ற வழக்குகளில் எதுவுமே செய்யவில்லை" எனக் கூறியிருந்தார்.
இந்த கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரது ஒப்பீடு சிறுபிள்ளைத்தனமானது எனத் தெரிவித்துள்ளது.
பாஜக எம்.பி. பகவத் கராத் இது தொடர்பாக கூறுகையில் "இது மிகவும் தவறானது, கண்டிக்கத்தக்கது. பட்நாவிஸ் மாநிலத்திற்கான நல்ல விசயங்களை செய்து வருகிறார். அவருக்கு நல்ல அனுபவம் உள்ளது. விக்ஷித் மகாராஷ்டிரா நோக்கி பணியாற்றிக் கொண்டிருக்கிறார். காங்கிஸ் தலைவரின் ஒப்பீடு சிறுபிள்ளைத்தனமானது.
தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் ஒப்பீடு நல்லதல்ல என கருத்து தெரிவித்துள்ளனர்.
- அதிகாலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
- இந்த சம்பவத்தில் வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.
மகாராஷ்டிராவில் வாகனம் ஓட்டும் போது ஒருவருக்கு மாரடைப்பு, கார் பல வாகனங்களில் மோதுவது போன்ற காட்சிகள் வீடியோவில் காட்டப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் கார் ஓட்டும்போது நபர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதியது. மேலும் மாரடைப்பு மற்றும் விபத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக கார் ஓட்டியும் பரிதாபமாக உயிரிழந்தார்.
இறந்தவர் தீரஜ் பாட்டீல் (55) என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் நேற்று (சனிக்கிழமை) அதிகாலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் சம்பவத்தின்போது மேம்பாலம் அருகே தீரஜ் வந்துகொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து, ஒரு ஆட்டோ, ஒரு கார், ஒரு இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பல வாகனங்கள் மீது மோதியது.
இந்த சம்பவத்தில் வாகனங்கள் பலத்த சேதமடைந்தன, இது சிசிடிவியிலும் பதிவாகியுள்ளது. தீரஜ்ஜின் பிரேத பரிசோதனை அறிக்கையில், வாகனம் ஓட்டும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதுவே விபத்திற்குக் காரணமாக அமைந்து, அவரது மரணத்திற்கு வழிவகுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
- எல்லோரும் ஆளுங்கட்சியில் இணைந்தால் ஜனநாயக அமைப்பு சமநிலையை இழந்துவிடும்.
- நாம் இருக்கும் இடத்திலேயே இருந்து, எதிர்க்கட்சியில் நமது பங்கை தொடர்ந்து ஆற்றுவோம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்), சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
படுதோல்வியடைந்த சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பல தலைவர்கள் கட்சித்தாவ வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. கடந்த சில நாட்களாக அந்த கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் கட்சி மாறுவார் என யூகங்கள் வெளியாகி வருகின்றன.
இதற்கிடையில் நான்கு நாட்கள் நடைபெறும் லத்தூர் சர்வதேச சினிமா விழா நேற்று தொடங்கியது. இந்த விழாவில் பேசியபோது அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.சி, விக்ரம் காலே, "தேஷ்முக் கட்சி மாறி ஆளுங்கட்சிக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து மந்திரியாக தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்" என நகைச்சுவையாக தெரிவித்திருந்தார்.
இதற்கு லத்தூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அமித் தேஷ்முக் பதில் அளிக்கையில் "எல்லோரும் ஆளுங்கட்சியில் இணைந்தால் ஜனநாயக அமைப்பு சமநிலையை இழந்துவிடும். அது நம் யாராலும் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்று. எனவே, நாம் இருக்கும் இடத்திலேயே இருந்து, எதிர்க்கட்சியில் நமது பங்கை தொடர்ந்து ஆற்றுவோம்.
ஆளும் கட்சி பலம் பெற்று வருவதாக பலர் உணர்ந்தால், அவர்கள் கட்சி மாறக்கூடும். ஆனால் நாங்கள் எங்கள் நிலைப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ளவும், எங்கள் கொள்கைகளுக்கு உண்மையாக இருக்கவும் தயாராக இருக்கிறோம்" என்றார்.
- மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டு 2,635 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக அமைச்சர் தகவல்.
- விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு கொள்கை தயார் செய்ய வேண்டும்.
மகாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கை கவலை அளிக்கும் விதமாக உள்ளது. விவசாயிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு இதற்கு கொள்கை வகுக்க வேண்டும் என சரத் பவார் வலியுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டு 2,635 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக, சட்டசபையில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக சரத் பவார் கூறுகையில் "மராத்வாடா மற்றும் விதர்பா பகுதிகளில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை தொடர்பாக வெளியான தகவல் கவலையளிக்கும் விதமாக உள்ளது. நாங்கள் வெவ்வேறு இடங்களில் சரியான தரவுகளை சேகரிக்க உள்ளோம். விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு கொள்கை தயார் செய்ய வேண்டும்.
இவ்வாறு சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மேலும், சரத் பவார் கட்சியின் ஜெயந்த் பாட்டீல் அஜித் பவார் கட்சிக்கு மாற இருப்பதாக தகவல் வெளியானது குறித்து கேட்க கேள்விக்கு, இது தொடர்பாக மீடியாவுக்கு அவர் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்" என்றார்.
பாராமதியில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது ஜெயந்த் பாட்டீல் சரத் பவாரை சந்தித்து பேசினார். பின்னர், தான் விரக்தியில் உள்ளது. தன்னுடைய கருத்தில் இருந்து தவறான முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
- மும்பை சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையத்தில் இருந்து அமராவதி நோக்கி மும்பை-அமராவதி எக்ஸ்பிரஸ் வந்துகொண்டிருந்தது.
- ரெயிலின் வேகம் குறைவாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மகாராஷ்டிராவின் மும்பை சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையத்தில் இருந்து அமராவதி நோக்கி மும்பை-அமராவதி எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை பயணித்துக்கொண்டிருந்தது.
ஜல்கான் மாவட்டத்தில் உள்ள போட்வாட் ரெயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 4 மணியளவில் ரெயில் வந்துகொண்டிருந்தபோது கோதுமை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று ரெயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றது.
அப்போது ரெயில் லாரி மீது மோதி சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு அதை இழுத்துச் சென்றது. இதில் லாரி இரண்டாக உடைந்தது. ரெயிலின் வேகம் குறைவாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
விபத்துக்குப் பிறகு லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை காவல்துறையினரும் ரெயில்வே நிர்வாகமும் தேடி வருகின்றனர்.
லாரி ரெயில்வே தடுப்பை உடைத்து சட்டவிரோதமாக ரெயில் பாதையில் வந்தது தெரியவந்தது. இந்த திடீர் விபத்தால் ரெயிலில் பயணித்த பயணிகள் பீதியடைந்தனர். மேலும் இந்த விபத்தால் சில மணி நேரங்களாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டன. தாண்டவத்தை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.