என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஞ்சி கோப்பை கிரிக்கெட்"

    • மும்பை அணிக்காக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 80 பந்துகளில் 90 ரன்கள் குவித்துள்ளார்.
    • அதில் 15 பவுண்டரிகளும் 1 சிக்சரும் அடங்கும்.

    இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் இந்த ஆண்டுக்கான சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் மிக பிரபலமான இந்த ரஞ்சி தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு தேசிய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்பதனால் அனைத்து மாநில அணிகளை சேர்ந்த வீரர்களும் இந்த தொடரில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதன்மை அணிக்கு தேர்வாகும் வாய்ப்பினை எதிர்நோக்கி சிறப்பாக செயல்படுவார்கள்.

    அந்த வகையில் இந்த ஆண்டு தற்போது நடைபெற்று வரும் இந்த ரஞ்சி தொடரில் பல்வேறு இந்திய வீரர்களும் கலந்து கொண்டு விளையாடி வரும் வேளையில் மும்பை அணிக்காக சூர்யகுமார் யாதவ் இன்று நடைபெற்று வரும் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி வருகிறார். ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் தான் இடம் பிடித்து விளையாட ஆசைப்படுவதால் நிச்சயம் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என்று உறுதியளித்திருந்தார்.

    மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என்று கூட பாராமல் 80 பந்துகளில் 15 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர்கள் என தனது வழக்கமான அதிரடியை கையிலெடுத்து 80 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் தனது அதிரடியான ரன் குவிப்பை இன்றும் அவர் மும்பை அணிக்காக வழங்கினார். ரகானே தலைமையிலான மும்பை அணியானது தற்போது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்த போட்டியில் ப்ரித்வி ஷா 19 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 90 ரன்களிலும் ஆட்டம் இழந்தாலும் ஜெய்ஷ்வால் மற்றும் ரகானே ஆகியோரது ஜோடி தற்போது மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது.

    ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படையாக சூர்யகுமார் யாதவ் கூறியவேளையில் தற்போது ரஞ்சி போட்டியிலும் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடியுள்ளதால் அவரின் டெஸ்ட் வாய்ப்பை பிடிக்காமல் விடமாட்டார் என்றே தோன்றுகிறது.

    • மத்திய பிரதேச அணிக்கு 320 ரன்களை விதர்பா அணி இலக்காக நிர்ணயித்தது.
    • 2-வது இன்னிங்சில் மத்திய பிரதேசம் அணி 258 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இந்தியாவில் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப்போட்டியில் விதர்பா மற்றும் மத்திய பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    இதில் டாஸ் வென்ற விதர்பா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய விதர்பா அணி கருண் நாயரின் அரைசதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 170 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. மத்திய பிரதேச அணி தரப்பில் அவேஷ் கான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய மத்திய பிரதேச அணி 252 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹிமன்ஷு மந்த்ரி சதமடித்து அசத்தினார். இதன்மூலம் மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 82 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

    அதன்பின் இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த விதர்பா அணி யாஷ் ரத்தோட் (141), அக்ஷய் வாத்கர்(77) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 402 ரன்களைச் சேர்த்து அசத்தியதுடன், மத்திய பிரதேச அணிக்கு 320 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

    அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய மத்திய பிரதேச அணிக்கு யாஷ் துபே - ஹர்ஷ் கௌலி ஜோடி அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இந்த ஜோடி 100 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தனர். துபே 94 ரனகளிலும் ஹர்ஷ் கௌலி 67 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து வந்த வேகத்தில் பெவிலியனுக்கு திரும்பினர்.

    இதனால் அந்த அணி இரண்டாவது இன்னிங்சில் 258 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. விதர்பா தரப்பில் யாஷ் தாக்கூர், அக்ஷய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதன்மூலம் விதர்பா அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் மத்திய பிரதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளது.

    இறுதிபோட்டியில் மும்பை - விதர்பா அணிகள் வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது.

    • ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது.
    • இந்த தொடரில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் பிரபலமான முதல்தர கிரிக்கெட்டான ரஞ்சி கோப்பை போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்த சீசனுக்கான 90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் (4 நாள் ஆட்டம்) டெல்லி, ஜெய்ப்பூர், லக்னோ, நாக்பூர், இந்தூர் உள்பட பல்வேறு நகரங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. 2 கட்டமாக அடுத்த ஆண்டு மார்ச் 2-ந் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

    இதில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்த போட்டியில் இஷான் கிஷன் (ஜார்கண்ட்), ஸ்ரேயாஸ் அய்யர், ரஹானே, பிரித்வி ஷா (மும்பை), அபிமன்யு ஈஸ்வரன், விருத்திமான் சஹா (பெங்கால்), ருதுராஜ் கெய்க்வாட் (மராட்டியம்), சாய் சுதர்சன் (தமிழ்நாடு), புஜாரா (சவுராஷ்டிரா), ஹனுமா விஹாரி (ஆந்திரா), மயங்க் அகர்வால் (கர்நாடகா) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் களம் காணுகிறார்கள். இதனால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. தமிழக ஆல்-ரவுண்டர் பாபா அபராஜித் இந்த சீசனில் கேரளா அணிக்காக ஆடுகிறார்.

    இந்நிலையில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்த தொடரில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வங்கதேசம் அணிக்கு எதிரான டி20 தொடர் நாளையுடன் முடிவடைய உள்ளது. இந்த தொடர் முடிந்தவுடன் மும்பை அணிக்காக அவர் விளையாட உள்ளார். அவர் 2-வது போட்டியில் மகாராஷ்டிராவுக்கு எதிரான விளையாட வாய்ப்புள்ளது.

    • ரஞ்சி கோப்பையில் மும்பை அணிக்காக சூர்யகுமார் யாதவ் விளையாட உள்ளார்.
    • அந்த போட்டியில் விளையாடுவதற்காக சூர்யகுமார் யாதவ் கோயம்புத்தூர் வந்துள்ளார்.

    இந்தியாவின் பிரபலமான முதல்தர கிரிக்கெட்டான ரஞ்சி கோப்பை போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்த சீசனுக்கான 90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் (4 நாள் ஆட்டம்) பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 2 கட்டமாக அடுத்த ஆண்டு மார்ச் 2-ந் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது. இதில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்த தொடரில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மும்பை அணிக்காக விளையாட உள்ளார். அதற்காக தமிழ்நாட்டில் உள்ள கோயமுத்தூரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

     

    இந்நிலையில் அந்த கிரிக்கெட் மைதான ஊழியர்களை இன்ஸ்டாகிராமில் பாராட்டி உள்ளார். அதில் நம்பமுடியாத காட்சிகள்... கிரிக்கெட் விளையாட்டிற்குப் பிறகு இது போன்ற விஷயங்கள் கவனிக்கப்படாமல் போகிறது. கிரவுண்ட்ஸ்டாஃப்... ஜஸ்ட் வாவ், என பதிவிட்டிருந்தார்.

    அக்டோபர் 13-ந் தேதி மாலை 5 மணிக்கும், அக்டோபர் 14-ம் தேதி காலை 7 மணிக்கும் மைதானத்தைக் காண்பிக்கும் முன்-பின் படங்களைப் பகிர்ந்துள்ளது.

    அவர் கூறுவது போல கிரிக்கெட் போட்டியை மட்டும் பார்த்து ரசிக்கின்றோம். ஆனால் அதற்கு உதவியாக இருக்கும் ஊழியர்களை நினைத்து பார்ப்பது எத்தனை பேர் என்பது சந்தேகம் உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிக எடையுடன் இருப்பதாகவும் வலை பயிற்சியின் போது மெத்தனாக இருப்பதாகவும் மும்பை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    • மும்பை அணியில் இருந்து நீக்கியதற்கு இன்ஸ்டாகிராமில் பிரித்வி ஷா ஓய்வு தேவை நன்றி என ஸ்டோரி வைத்துள்ளார்.

    90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் எலைட் பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் மும்பை அணி தான் மோதிய 2 போட்டிகளில் 1 தோல்வி 1 வெற்றி பெற்றுள்ளது.

    மும்பை அணி, முதல் போட்டியில் பரோடா அணிக்கு எதிரான போட்டியில் 84 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மகாராஷ்டிரா அணிக்கு எதிரான 2-வது போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து 3-வது போட்டியில் திரிபுரா அணியுடன் 26-ந் தேதி மோத உள்ளது.

    இந்நிலையில் பிரித்வி ஷா மும்பை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் அதிக எடையுடன் இருப்பதாகவும் வலை பயிற்சியின் போது மெத்தனாக இருப்பதாகவும் மும்பை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மேலும் இந்திய அணிக்காக அதிக போட்டிகள் விளையாடிய ரகானே, ஷ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாகூர் ஆகியோர் தீவிரமாக வலை பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் இவர் மட்டும் அதனை புறக்கணிப்பதாகவும் மும்பை நிர்வாகம் கூறியது.

    மும்பை அணியில் இருந்து நீக்கியதற்கு இன்ஸ்டாகிராமில் பிரித்வி ஷா ஓய்வு தேவை நன்றி என ஸ்டோரி வைத்துள்ளார். இரண்டு போட்டிகளில் விளையாடிய பிரித்வி ஷா 4 இன்னிங்ஸ்களில் 59 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

    • சவுராஷ்டிரா அணிக்காக களமிறங்கிய ஜடேஜா பந்து வீச்சில் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
    • அதில் ரிஷப் பண்ட் விக்கெட்டும் அடங்கும்.

    கடந்த ஆண்டு இறுதியில் சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்று முடிந்த பார்டர் கவாஸ்கர் தொடர் என கடைசி எட்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி ஒரு போட்டியை சமன் செய்தது.

    எட்டு போட்டிகளிலும் இந்திய அணியின் பேட்டிங் சுமாராகவே இருந்தது. குறிப்பாக இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் ஃபார்ம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதைத் தொடர்ந்து ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து இந்திய வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென பி.சி.சி.ஐ. உத்தரவிட்டது.

    இதனையடுத்து ரஞ்சி போட்டியில் இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்கள் களமிறங்கி விளையாடி வருகின்றனர். மும்பை அணிக்காக களமிறங்கிய ரோகித் சர்மா 3 ரன்னிலும் ஜெய்ஸ்வால் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதேபோல் பஞ்சாப் மற்றும் கர்நாடக அணிகள் மோதிய போட்டியில் பஞ்சாப் கேப்டன் சுப்மன் கில் 4 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    மேலும் சவுராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்காக களமிறங்கிய ரிஷப் பண்ட 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் ரஞ்சியில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி உள்ளனர். இதனால் அவர்கள் ஃபார்ம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சங்கள் எழுந்துள்ளன.

    இந்நிலையில் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பி வரும் நிலையில் சவுராஷ்டிரா அணிக்காக களமிறங்கிய ஜடேஜா பந்து வீச்சில் 5 விக்கெட்டுகளை அள்ளினார். அதில் ரிஷப் பண்ட் விக்கெட்டும் அடங்கும். மேலும் பேட்டிங்கிலும் அவர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 36 பந்தில் 38 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரி 3 சிக்சர்கள் அடங்கும்.

    முன்னணி பேட்ஸ்மேன்கள் 10 ரன்கள் கூட எடுக்க முடியாத நிலையில் பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    • தமிழ்நாடு அணிக்கு 401 ரன்கள் இலக்காக விதர்பா அணி நிர்ணயித்தது.
    • 2-வது இன்னிங்சில் தமிழ்நாடு அணி 202 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    நாக்பூர்:

    90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் காலிறுதி ஆட்டங்கள் தற்போது நடந்து வருகிறது. நாக்பூரில் தொடங்கியுள்ள ஆட்டத்தில் தமிழ்நாடு- விதர்பா அணிகள் மோதின. இதில் முதல் இன்னிங்சில் விதர்பா 353 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய தமிழக அணி 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்து தடுமாறியது.

    நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய தமிழக அணி தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 7 ரன்னிலும், அடுத்து வந்த முகமது ஒரு ரன்னிலும், பிரதோஷ் ரஞ்சன் பால் 48 ரன்னிலும், சோனு யாதவ் 32 ரன்னிலும் அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்ந்தனர். முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 64.3 ஓவர்களில் 225 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. விதர்பா தரப்பில் ஆதித்ய தாக்ரே 5 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 128 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 5 விக்கெட்டுக்கு 169 ரன்கள் அடித்து 297 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. யாஷ் ரத்தோட் 55 ரன்னுடனும், ஹர்ஷ் துபே 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தமிழக அணி தரப்பில் சாய்கிஷோர் 2 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.

    இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த விதர்பா 272 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தமிழகம் வெற்றி பெற 401 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக யாஷ் ரத்தோட் 112 ரன்களும், ஹர்ஷ் துபே 64 ரன்களும் குவித்தனர். தமிழகம் தரப்பில் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதனையடுத்து 401 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய தமிழக அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் தமிழக அணி 61.1 ஓவர்களில் 202 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் விதர்பா அணி 198 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    • பந்து வீச்சில் ஷிவம் துபே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 188 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

    நாக்பூர்:

    90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்குகிறது. 32 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரில் லீக் மற்றும் காலிறுதி சுற்று ஆட்டங்களின் முடிவில் குஜராத், கேரளா, விதர்பா மற்றும் மும்பை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இந்நிலையில் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின.

    இதில் நாக்பூரில் நடைபெற்று வரும் ஒரு அரையிறுதி ஆட்டத்தில் மும்பை - விதர்பா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் மும்பை அணிக்காக இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷிவம் துபே களமிறங்கினர். இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி ஆரம்பம் முதலே சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.

    துருவ் ஷோரே (74 ரன்கள்), டேனிஷ் மாலேவார் (79 ரன்கள்), கருண் நாயர் (45 ரன்கள்) ரத்தோட் (54), ஆகியோரின் கணிசமான பங்களிப்புடன் விதர்பா முதல் இன்னிங்சில் 383 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. மும்பை தரப்பில் ஷிவம் துபே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணியில் ஆயுஷ் மத்ரே 9, சித்தேஷ் லாட் 35, ரகானே 18 என வெளியேறினார். இதனையடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவும் ஷிவம் துபேவும் டக் அவுட்டில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.

    இதனால் 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 188 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. ஆகாஷ் ஆனந்த் 67 ரன்களுடனும் தனுஷ் கோட்யான் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    • விதர்பா முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் காரணமாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
    • விதர்பா அணிக்கு ரூ.3 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என விதர்பா கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

    நாக்பூர்:

    90-வது ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் விதர்பா - கேரளா அணிகள் ஆடின. இதில் முதல் இன்னிங்சில் விதர்பா 379 ரன்னும், கேரளா 342 ரன்னும் எடுத்தன. தொடர்ந்து 37 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய விதர்பா 375 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டத்தை டிராவில் முடித்து கொள்ள இரு கேப்டன்களும் ஒப்புகொண்டனர்.

    விதர்பா முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் காரணமாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகன் விருது டேனிஷ் மலேவருக்கும், தொடரின் தொடர் நாயகன் விருது ஹார்ஷ் துபேவுக்கும் வழங்கப்பட்டது.

    இந்நிலையில், ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் மகுடம் சூடிய விதர்பா அணிக்கு ரூ.3 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என விதர்பா கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

    மேலும், ஒரே சீசனில் 69 விக்கெட்டுகள் வீழ்த்தி அமர்க்களப்படுத்திய சுழற்பந்து வீச்சாளர் ஹார்ஷ் துபேவுக்கு ரூ.25 லட்சமும், இந்த தொடரில் ரன்கள் குவித்த யாஷ் ரதோட் (960 ரன்), கருண் நாயர் (863 ரன்) ஆகியோருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது. அத்துடன் தலைமை பயிற்சியாளர் உஸ்மான் கானிக்கு ரூ.15 லட்சமும், உதவி பயிற்சியாளர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

    • மத்திய பிரதேச அணியில் 3 வீரர்கள் சதம் அடித்து முத்திரை பதித்தனர்.
    • முதல் இன்னிங்சில் பெற்ற கூடுதல் ரன் மூலம் மத்திய பிரதேச அணி முதல் முறையாக ரஞ்சி கோப்பையை கைப்பற்றுகிறது.

    பெங்களூரு:

    மும்பை-மத்திய பிரரேச அணிகள் மோதும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது.

    மும்பை அணி முதல் இன்னிங்சில் 374 ரன் குவித்தது. சர்பிராஸ்கான் சதம் (134 ரன்) அடித்தார். கவுரவ் யாதவ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய மத்திய பிரதேசம் பதிலடி கொடுத்தது. நேற்றைய ஆட்டத்தின் முடிவில் மத்திய பிரதேசம் 3 விக்கெட் இழப்புக்கு 368 ரன் எடுத்து இருந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது.

    தொடர்ந்து விளையாடிய மத்திய பிரதேசம் அணி மும்பையின் ஸ்கோரை தாண்டி முன்னிலை பெற்றது. 155 ஓவர் வீசி முடிக்கப்பட்டபோது அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 473 ரன் குவித்து இருந்தது.

    4-வது வீரராக களம் இறங்கிய ரஜத் படிதார் சதம் அடித்தார். தொடக்க வீரர் யாஷ் துபே, 3-வது வரிசையில் ஆடிய சுபம் சர்மா ஆகியோர் ஏற்கனவே சதம் அடித்து இருந்தனர். தற்போது மத்திய பிரதேச அணியில் 3-வது வீரர் செஞ்சுரி அடித்து முத்திரை பதித்தார்.

    இந்த போட்டி டிராவில் முடிய வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் முதல் இன்னிங்சில் பெற்ற கூடுதல் ரன் மூலம் மத்திய பிரதேச அணி முதல் முறையாக ரஞ்சி கோப்பையை கைப்பற்றுகிறது.

    • முதல் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்துள்ளது.
    • சிறப்பாக விளையாடிய சர்ப்ராஸ் கான் 134 ரன்கள் குவித்தார்.

    87-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் மும்பையும், மத்தியபிரதேசமும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் சாம்பியன் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்துள்ளது. சர்ப்ராஸ் கான் 40 ரன்னுடனும், ஷம்ஸ் முலானி 12 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இதனை தொடர்ந்து இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது.

    சிறப்பாக விளையாடிய சர்ப்ராஸ் கான் 134 ரன்கள் குவித்தார். சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 374 ரன்கள் எடுத்தது. மத்திய பிரதேசம் தரப்பில் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • மத்தியபிரதேச அணி இதுவரை ரஞ்சி கோப்பையை வென்றதில்லை.
    • 42-வது முறையாக பட்டம் வெல்ல குறி வைத்துள்ள மும்பை அணி ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்புள்ளது.

    பெங்களூரு:

    38 அணிகள் பங்கேற்ற 87-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் மும்பையும், மத்தியபிரதேசமும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் சாம்பியன் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் (5 நாள்) பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.

    பிரித்வி ஷா தலைமையிலான மும்பை அணி கால்இறுதியில் 725 ரன்கள் வித்தியாசத்தில் உத்தரகாண்டை ஊதித்தள்ளியது. உத்தரபிரதேசத்துக்கு எதிரான அரைஇறுதியிலும் ரன்மழை பொழிந்த மும்பை அணி மொத்தம் 746 ரன்கள் முன்னிலையோடு 'டிரா' கண்டு இறுதிசுற்றுக்குள் நுழைந்தது. 42-வது முறையாக பட்டம் வெல்ல குறி வைத்துள்ள மும்பை அணி ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்புள்ளது.

    மத்தியபிரதேச அணி இதுவரை ரஞ்சி கோப்பையை வென்றதில்லை. 1998-99-ம் ஆண்டில் இறுதிப்போட்டி வரை வந்து தோற்று இருக்கிறது. முதல்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் அந்த அணியினர் தங்களை தயார்படுத்தியுள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக மத்தியபிரதேச அணிக்கு மும்பையைச் சேர்ந்த சந்திரகாந்த் பண்டிட் பயிற்சியாளராக இருப்பது கூடுதல் பலமாகும். இவர் ஏற்கனவே மும்பை ரஞ்சி அணிக்கு பயிற்சியாளராக இருந்து கோப்பையும் பெற்றுத் தந்துள்ளார். மேலும், தற்போது மும்பை அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றும் அமோல் முஜூம்தார், சந்திரகாந்த் பண்டிட் பயிற்சியின் கீழ் விளையாடி இருக்கிறார். இருவரும் நண்பர்கள் ஆவர். ஆக நன்கு பரிட்சயமான இவ்விரு பயிற்சியாளர்களில் யாருடைய யுக்தி எடுபடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    ×