search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ரஞ்சி கோப்பையில் களமிறங்கும் சூர்யகுமார்?
    X

    ரஞ்சி கோப்பையில் களமிறங்கும் சூர்யகுமார்?

    • ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது.
    • இந்த தொடரில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் பிரபலமான முதல்தர கிரிக்கெட்டான ரஞ்சி கோப்பை போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்த சீசனுக்கான 90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் (4 நாள் ஆட்டம்) டெல்லி, ஜெய்ப்பூர், லக்னோ, நாக்பூர், இந்தூர் உள்பட பல்வேறு நகரங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. 2 கட்டமாக அடுத்த ஆண்டு மார்ச் 2-ந் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

    இதில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்த போட்டியில் இஷான் கிஷன் (ஜார்கண்ட்), ஸ்ரேயாஸ் அய்யர், ரஹானே, பிரித்வி ஷா (மும்பை), அபிமன்யு ஈஸ்வரன், விருத்திமான் சஹா (பெங்கால்), ருதுராஜ் கெய்க்வாட் (மராட்டியம்), சாய் சுதர்சன் (தமிழ்நாடு), புஜாரா (சவுராஷ்டிரா), ஹனுமா விஹாரி (ஆந்திரா), மயங்க் அகர்வால் (கர்நாடகா) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் களம் காணுகிறார்கள். இதனால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. தமிழக ஆல்-ரவுண்டர் பாபா அபராஜித் இந்த சீசனில் கேரளா அணிக்காக ஆடுகிறார்.

    இந்நிலையில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்த தொடரில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வங்கதேசம் அணிக்கு எதிரான டி20 தொடர் நாளையுடன் முடிவடைய உள்ளது. இந்த தொடர் முடிந்தவுடன் மும்பை அணிக்காக அவர் விளையாட உள்ளார். அவர் 2-வது போட்டியில் மகாராஷ்டிராவுக்கு எதிரான விளையாட வாய்ப்புள்ளது.

    Next Story
    ×