என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி"

    • நீதிமன்ற உத்தரவின் பேரில், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
    • வீரர் வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவிக்க விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தருக்கு வந்தனர்.

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான 66 வயதான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், மனரீதியில் துன்புறுத்தியதாக குற்றம்சாட்டி இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தொடர் போராட்டத்தை அடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். தன் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வரும் பிரிஜ் பூஷன் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தெரிவித்து வருகின்றனர். 

     

    மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வீரர் வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவிக்க பாரதிய கிசான் யூனியனை சேர்ந்த விவசாயிகள் இன்று காலை டெல்லி ஜந்தர் மந்தருக்கு வந்தனர். விவசாயிகள் வருவதை அறிந்து போலீசார் பேரிகார்டுகளை வைத்திருந்தனர்.

    விவசாயிகளை பார்த்ததும், போலீசார் அவர்களிடம் நுழைவு வாயில் வழியே செல்லுமாறு கூறியுள்ளனர். எனினும், அதிக எண்ணிக்கையில் வந்திருந்த விவசாயிகள் ஒரே சமயத்தில் போராட்டக்களத்திற்கு செல்ல முயற்சித்தனர். இதன் காரணமாக சிவ விவசாயிகள் பேரிகார்டுகளை தகர்த்தும், மேலும் சிலர் அதன் மீது ஏறியும் போராட்டக்களத்துக்கு சென்றனர்.

    இதன் காரணமாக ஜந்தர் மந்தர் பகுதியில் திடீர் சலசலப்பு நிலவியது. இறுதியில் பேரிகார்டுகளை கடந்து போராட்டக்களம் சென்ற விவசாயிகள் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு தங்களது ஆதரவை தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • ரூ. 4 ஆயிரம் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்தது.
    • கூட்டத்தை பார்த்து பயந்த வருண், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அலுவலகத்தினுள் சரமாரியாக சுட்டார்.

    டெல்லியில் இருதரப்பினர் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் ஏற்பட்ட சலசலப்பு துப்பாக்கி சூட்டில் முடிந்தது. துப்பாக்கி சூட்டில் சிக்கிய நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    வழக்கறிஞர் சுஷில் குப்தா தனது தரப்பை சேர்ந்த ஜஃப்ரூல் மற்றும் சையத் முக்கிம் ராசா என்பவரை தனது அலுவலகத்திற்கு அழைத்திருந்தார். ரூ. 4 ஆயிரம் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதை பேச்சுவார்த்தையில் முடித்துக் கொள்ளும் நோக்கிலேயே முக்கிம் ரசா சுஷில் குப்தா அலுவலகத்துக்கு வந்திருந்தார்.

    முக்கிம் ரசாவுடன் அன்கித், முகிம், வருண் மற்றும் குலாம் முகமது உள்ளிட்டோரும் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். பேச்சுவார்த்தையின் போது இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதையறிந்து அங்கிருந்த பொது மக்கள் அலுவலக வாசலில் திரண்டனர். கூட்டத்தை பார்த்து பயந்த வருண், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அலுவலகத்தினுள் சரமாரியாக சுட்டார்.

    இதில் அங்கிருந்த அனாஸ் அகமது மீது தோட்டா பாய்ந்தது. காயமுற்ற அனாஸ் அகமதுவை அங்கிருந்தவர்கள் அருகாமையில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். மருத்துவமனையில் அனாஸ் அகமதுவை சோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.

    துப்பாக்கி சூடு நடத்திய பின் அங்கிருந்து தப்பிக்க முயன்ற குலாமை அங்கிருந்த பொதுமக்கள் பிடித்து கடுமையாக தாக்கினர். இதோடு அங்கு நிறுத்தப்பட்டு இருந்த காரையும் பொது மக்கள் தாக்கினர். பொதுமக்களால் தாக்கப்பட்ட குலாமுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று நினைத்து பொதுமக்கள் மூன்று பேரை தாக்கினர்.

    இதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்ற அன்கித் மற்றும் முகிம் ஆகியோரை போலீசார் இரண்டு மணி நேரங்களில் கண்டுபிடித்தனர். மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • நான்கு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு இரண்டு தொழிலாளர்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
    • கட்டிடம் இடிந்து விழுந்ததற்கு நகரில் பெய்த கனமழை காரணமாக இருக்கலாம் என சந்தேகம்.

    தெற்கு டெல்லியின் அம்பேத்கர் நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் இரண்டு தளங்கள் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் தொழிலாளர்கள் பலர் சிக்கியுள்ளனர்.

    விபத்து தொடர்பாக, காவல் துறைக்கு நேற்று மாலை 4.25 மணியளவில் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதில், நான்கு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு இரண்டு தொழிலாளர்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    காவல்துறை மற்றும் டெல்லி தீயணைப்பு துறை இணைந்து நடத்திய மீட்பு நடவடிக்கையில் மீட்கப்பட்ட இரண்டு தொழிலாளர்களும் சிறு காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகள் கூறுகையில், "கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டுள்ளது. டி-இரும்புடன் கூரைகள் இடிந்து விழுந்ததில், தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்.

    இதற்கு காரணமானவர்கள் மீது டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டத்தின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது" என்றார்.

    மேலும், இந்த கட்டிடம் இடிந்து விழுந்ததற்கு நகரில் பெய்த கனமழை காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • ஜி20 உச்சி மாநாட்டை ஒட்டி பொது மக்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
    • ஜி20 உச்சி மாநாடு காரணமாக டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

    ஜி20 உச்சி மாநாடு அடுத்த மாதம் (செப்டம்பர்) 9 மற்றும் 10-ம் தேதிகளில் டெல்லியில் நடக்கிறது. வெளிநாட்டு தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். ஜி20 உச்சி மாநாடு நடைபெற இருப்பதை ஒட்டி, டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மேலும் பொது மக்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜி20 உச்சி மாநாடு நடைபெறுவதால், தலைவர்கள் பாதுகாப்பு காரணமாக விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் பொது மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தலாம், பொதுமக்கள் காரணத்தை புரிந்து கொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் கோரிக்கை விடுத்து இருந்தார்.

     

    இந்த நிலையில், டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுவதால், டெல்லியின் என்.சி.டி.-க்கு உட்பட்ட பகுதிகளின் வான் பரப்பில் பறக்கும் பொருட்கள்- அதாவது பாராகிலைடர்கள், பாரா மோட்டார்கள், தொங்கும் கிலைடர்கள், யு.ஏ.வி.-க்கள், யு.ஏ.எஸ்., மிகக் குறைந்த எடை கொண்ட விமானங்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் விமானங்கள், ராட்சத பலூன்கள், சிறிய அளவிலான விமானங்கள் மற்றும் குவாட்காப்டர்கள் பறக்க அனுமதி கிடையாது என டெல்லி காவல் துறை ஆணயரகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி இந்த பகுதியில் மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் பறக்கும் பொருட்கள் பறப்பதற்கான தடை உத்தரவு இன்று (ஆகஸ்ட் 29) துவங்கி, செப்டம்பர் 12-ம் தேதி ஆகிய 15 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • டெல்லியில் ஜி20 மாநாடு இரண்டு நாட்களுக்கு நடைபெற இருக்கிறது.
    • ஜி20 மாநாடு நடைபெறுவதால் டெல்லி முழுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

    ஜி20 உச்சி மாநாடு அடுத்த வாரம் (செப்டம்பர்) 9 மற்றும் 10-ம் தேதிகளில் டெல்லியில் நடக்கிறது. பல நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு தலைவர்கள் பலர் இதில் கலந்து கொள்கிறார்கள். ஜி20 உச்சி மாநாடு நடைபெற இருப்பதை ஒட்டி, டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி20 உச்சி மாநாடு அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பதால் பொது மக்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உச்சி மாநாடு நடைபெறுவதால், தலைவர்கள் பாதுகாப்பு காரணமாக விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் பொது மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தலாம், பொதுமக்கள் காரணத்தை புரிந்து கொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் கோரிக்கை விடுத்து இருந்தார்.

    இந்த நிலையில், ஜி20 உச்சி மாநாட்டை ஒட்டி செப்டம்பர் 9, 10 மற்றும் 11 ஆகிய மூன்று நாட்களுக்கு ரெயில் சேவைகள் பாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த மூன்று நாட்களுக்கு 207 ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதுதவிர 36 ரெயில் சேவைகள் குறுகிய காலத்திற்கு இயக்கப்படும் என்று தெரிகிறது. 

    • அப்பெண்ணிற்கு தரகர் ஒருவரும் அவர் நண்பரும் அறிமுகமானார்கள்
    • காலியாக இருந்த ஃப்ளாட்டிற்கு அப்பெண்ணை அழைத்து சென்றனர்

    புது டெல்லியின் வடக்கே உள்ளது புராரி பகுதி.

    இப்பகுதியில் சுமார் 30 வயதுடைய பெண் ஒருவர் குடியிருக்க வீடு தேடி அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாடகைக்கு உள்ளதா என விசாரித்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வீடுகளை வாங்கவும் விற்கவும் உதவும் ஜிதேந்திர சவுத்ரி எனும் தரகரும் அவரது நண்பர் ஒருவரும் அறிமுகமானார்கள். அப்பெண்ணிற்கு உதவ அவர்கள் இருவரும் முன்வந்தனர்.

    அங்குள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் ஃப்ளாட் ஒன்று வாடகைக்கு இருப்பதாக அவர்கள் இருவரும் கூறினர். இதனையடுத்து அவர்களுடன் அப்பெண் அந்த வீட்டை பார்க்க சென்றார்.

    காலியாக இருந்த அவர்கள் கூறிய அந்த ஃப்ளாட்டிற்கு அவர்கள் இருவரும் அப்பெண்ணை அழைத்து சென்றனர். அங்கு அப்பெண்ணுக்கு குடிக்க நீர் வழங்கினர். அதை குடித்ததும் அப்பெண் மயக்கமடைந்தார். அதன் பின், அவர்கள் இருவரும் அவரை பாலியல் ரீதியாக தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    நினைவு திரும்பியதும் தனக்கு நேர்ந்த விபரீதம் குறித்து அறிந்த அப்பெண் அதிர்ச்சியடைந்தார்.

    உடனடியாக அருகிலிருந்த புராரி காவல்நிலையத்திற்கு சென்று, குடிநீரில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து தன் மீது கூட்டு பாலியல் தாக்குதல் நடத்தியதாக அந்த இருவர் மீதும் புகாரளித்தார்.

    கூட்டு பாலியல் வன்முறை வழக்கை பதிவு செய்த புராரி காவல்துறையினர், இது குறித்து மேலும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    • டெல்லி அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
    • காற்று மாசு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் வலியுறுத்தி இருக்கிறார்.

    டெல்லியில் காற்று மாசை குறைக்க டெல்லி மற்றும் மத்திய அரசு போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி குற்றம்சாட்டி உள்ளார். மேலும் டெல்லியில் நிலவும் காற்று மாசு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் வலியுறுத்தி இருக்கிறார்.

    இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அரவிந்தர் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் முக கவசம் மற்றும் வெங்காய மாலை அணிந்திருந்தனர். டெல்லியில் நிலவும் காற்று மாசு மற்றும் வெங்காய விலை உயர்வை குறிக்கும் வகையில், அவர்கள் இவ்வாறு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து பேசிய அரவிந்தர் சிங், "எதிர்கட்சி தலைவர்கள் பிரச்சினைகள் குறித்து பேசும் போது, டெல்லி அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. நிலைமை மோசமான பிறகுதான் அவர்கள் நடவடிக்கை எடுக்கின்றனர், அதுவும் அவர்கள் தற்காலிக தீர்வுக்கான வழியை பின்பற்றுகின்றனர். காற்று மாசு விவகாரம் தொடர்பாக அரசாங்கம் ஆண்டு முழுக்க கவனம் செலுத்த வேண்டும்."

    "காற்று மாசு ஏற்பட முக்கிய காரணம் தூசிகள் தான். மெட்ரோ கட்டுமானங்கள் டெல்லியில் ஐந்து ஆண்டுகள் வரை தாமதமாகி இருக்கின்றன. இதே நிலைதான் மேம்பாலம் மற்றும் இதர உள்கட்டமைப்பு சார்ந்த கட்டுமான பணிகளின் போதும் தொடர்கிறது. பொது போக்குவரத்து முறை முற்றிலுமாக தகர்ந்துவிட்டது. வாகன போக்குவரத்து காரணமாக டெல்லியில் 40 சதவீத மாசு ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது," என்று தெரிவித்தார்.

    • வடக்கு ரெயில்வேயில் மேம்பாட்டு பணி நடந்து வருகிறது.
    • ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் டெல்லி செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படும்.

    மதுரை

    ரெயில்களை பாதுகாப்பாக இயக்க, வடக்கு ரெயில்வே ஆக்ரா கோட்டத்தில் உள்ள மதுரா ரெயில் நிலையம் மற்றும் மதுரா - பல்வால் ரெயில் நிலைய பிரிவில் ரெயில் பாதை மற்றும் சிக்னல் மேம்பாட்டு பணிகள் நடைபெற இருக்கிறது.

    இதன் காரணமாக வருகிற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தென் மாவட்டங்களில் இருந்து டெல்லி செல்லும் ரெயில் கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதன்படி ஜனவரி 10, 12, 17, 19, 24, 26, 31 பிப்ரவரி 2 ஆகிய நாட்களில் கன்னியா குமரியில் இருந்து புறப்பட வேண்டிய கன்னியாகுமரி -டெல்லி நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12641), ஜனவரி 14, 16, 21, 23, 28, 30 பிப்ரவரி 4 ஆகிய நாட்களில் மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை-டெல்லி நிஜா முதீன் எக்ஸ்பிரஸ் (12651), டிசம்பர் 6,

    ஜனவரி 10, 14, 17, 21, 24, 28, 31 ஆகிய நாட்களில் மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை - சண்டிகர் எக்ஸ்பிரஸ் (12687), ஜனவரி 8,15, 22, 29 ஆகிய நாட்களில் திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய திரு நெல்வேலி-ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ரா எக்ஸ்பிரஸ் (16787) ஆகியவை முழுமை யாக ரத்து செய்யப்படுகிறது.

    மறுமார்க்கத்தில் ஜனவரி 13, 15, 20, 22, 27, 29, பிப்ரவரி 3, 5 ஆகிய நாட்களில் டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி நிஜாமுதீன் - கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12642), ஜனவரி 16, 18, 23, 25, 30 பிப்ரவரி 1, 6 ஆகிய நாட்களில் டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி நிஜாமுதீன் - மதுரை எக்ஸ்பிரஸ் (12652), டிசம்பர் 11, ஜனவரி 15, 19, 22, 26, 29, பிப்ரவரி 2, 5 ஆகிய நாட்களில் சண்டிகரில் இருந்து புறப்பட வேண்டிய சண்டிகர் - மதுரை எக்ஸ்பிரஸ் (12688), ஜனவரி 11, 18, 25, பிப்ரவரி 1 ஆகிய நாட்களில் ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ராவில் இருந்து புறப்பட வேண்டிய ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ரா - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் (16788) ஆகியவை முழுமை யாக ரத்து செய்யப்படுகிறது.

    இத்தகவலை தென்னக ரெயில்வே மதுரை கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • எந்த காரணமும் இல்லாமல் எனது மனைவி என்னுடன் சண்டை போட்டார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுடெல்லி:

    டெல்லியை சேர்ந்த 45 வயதான வாலிபர் ஒருவர், மனைவி தனது காதை கடித்து துண்டித்து துப்பியதாக டெல்லி போலீசில் பரபரப்பான புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறி இருப்பதாவது:-

    நான் டெல்லியின் புறநகர் பகுதியான சுல்தான்புரியில் வசித்து வருகிறேன். கடந்த 20-ந் தேதி காலையில் நான் வீட்டில் இருந்தேன். அப்போது எந்த காரணமும் இல்லாமல் எனது மனைவி என்னுடன் சண்டை போட்டார்.

    அப்போது அவர் என்னிடம், 'நான் குழந்தையுடன் தனியாக வசிக்க விரும்புகிறேன். எனவே வீட்டை விற்று அதில் ஒரு பங்கு பணத்தை தாருங்கள்' என்று கேட்டார். அதற்கு நான் மறுத்து விட்டேன். மேலும் அவரை நான் சமாதானப்படுத்த முயற்சித்தேன். அப்போது எங்களுக்கு வாய்த்தகராறு ஏற்பட்டது. அவர் என்னை அடிக்க முயன்றார். இதனால் நான் அவரை பிடித்து தள்ளி விட்டேன்.

    பின்னர் நான் வீட்டை விட்டு வெளியே செல்ல முயன்றேன். அப்போது அவர் பின்னால் இருந்து என்னை கெட்டியாக பிடித்துக் கொண்டார். பின்னர் எனது வலது காதை வேகமாக கடித்தார். நான் வலியால் அலறி துடித்தேன். அப்போதும் அவர் என்னை விடவில்லை. காதை கடித்து தனியாக துண்டித்து துப்பினார். இதனால் எனது வலது காதின் மேல் பகுதி துண்டிக்கப்பட்டது.

    இதையடுத்து எனது மகன் என்னை மங்கோல்புரியில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றான்.

    இவ்வாறு அவர் தனது புகாரில் கூறி இருந்தார்.

    இது தொடர்பாக போலீசார் அந்த பெண்ணின் மீது 324 (அபாயகரமான ஆயுதங்கள் அல்லது வேறு வழிகளில் காயப்படுத்துதல்) என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.

    இது குறித்து போலீசார் கூறுகையில், 'கடந்த 20-ந்தேதி கணவரின் காதை மனைவி கடித்து துப்பியதாக மருத்துவமனையில் இருந்து எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நாங்கள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினோம். அப்போது அவர் வாக்குமூலம் அளிக்க முடியாத நிலையில் காணப்பட்டார். பின்னர் அவர் கடந்த 22-ந்தேதி எங்களை அணுகி

    எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். இதையடுத்து அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். இந்த விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது" என்றனர்.

    இந்த நிலையில் அவருக்கு காதை மீண்டும் ஒட்டவைப்பதற்காக வேறொரு ஆஸ்பத்திரியில் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.

    • சம்பவ இடத்தில் காவல் துறை விசாரணை.
    • காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

    டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகில் அதிபயங்கர சத்தம் கேட்டதாக டெல்லி காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. தொலைபேசியில் கிடைத்த தகவலை வைத்து சம்பவ இடத்திற்கு காவல் துறை விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டது.

    மேலும் தூதரகம் அமைந்துள்ள பகுதிகளில் காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். எனினும், அந்த பகுதியில் இருந்து அத்தகைய சத்தம் வந்ததற்கான ஆதாரம் எதுவும் காவல் துறைக்கு கிடைக்கவில்லை.

    இன்று மாலை 5 மணி அளவில் தூதரகம் அருகில் குண்டு வெடிப்புக்கு இணையான அளவு அதிபயங்கரமான சத்தம் கேட்டதாக இஸ்ரேல் தூதரக செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.

    இந்த சம்பவத்தில் தூதரக ஊழியர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று இஸ்ரேல் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    • இருவருக்கு ஒமிக்ரான் வகை பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
    • பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 109 ஆக அதிகரிப்பு.

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் துவங்கி இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு மெல்ல தலைதூக்கும் நிலையில், டெல்லியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஜே.என். 1 வகை பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    "டெல்லியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஜே.என். 1 வகை பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மூன்று பேரில் ஒருவருக்கு ஜே.என்.1 வகை பாதிப்பும், மற்ற இருவருக்கு ஒமிக்ரான் வகை பாதிப்பும் ஏற்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கிறது," என டெல்லி சுகாதார துறை மந்திரி சௌரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

    இதன் மூலம் நாடு முழுக்க டிசம்பர் 26-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் கொரோனா ஜே.என்.1 வகை மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்து இருப்பதாக சுகாதார துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    "புதிய வகை கொரோனா பாதிப்புகள் தற்போதைக்கு வீரியம் குறைந்த ஒன்றாகவே காணப்படுகின்றன. இவை ஒமிக்ரான் குடும்பத்தை விட்டு தள்ளியே இருப்பதால், இது குறித்து அதிகம் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், மீண்டும் கொரோனா பாதிப்பு பரவுவது வருந்தக்குரிய விஷயம் தான்."

    "இதன் காரணமாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். முன்னெச்சரிக்கையாக இருப்பதன் மூலம், அவை பரவுவதை தடுக்க முடியும்," என்று கங்காராம் மருத்துவமனையின் இருதவியல் துறையின் துணை தலைவர் மருத்துவர் பாபி பாலோத்ரா தெரிவித்து இருக்கிறார்.  

    • டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக உள்ள ஸ்வாதி மாலிவாலை ராஜ்ய சபா தேர்தலில் வேட்பாளராக ஆம் ஆத்மி பரிந்துரை
    • ஸ்வாதி மாலிவால், சஞ்சய் சிங் மற்றும் என் டி குப்தா ஆகிய மூன்று ஆம் ஆத்மி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    டெல்லியில் காலியாக உள்ள ராஜ்ய சபா இடங்களுக்கு மூன்று பேரை ஆம் ஆத்மி பரிந்துரை செய்ய வேண்டும். தற்போது ஆம் ஆதிமியின் ராஜ்ய சபா உறுப்பினர்களாக உள்ள சஞ்சய் சிங் மற்றும் என்.டி.குப்தா வின் பதவி காலம் ஜனவரி 27 அன்று முடிவடைகிறது. இருவரையும் மேலவை உறுப்பினர்களாக நியமனம் செய்ய ஆம் ஆத்மியின் அரசியல் விவகாரக் குழு முடிவு செய்துள்ளது.

    டெல்லி கலால் ஊழல் தொடர்பான பண மோசடி வழக்கில் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ராஜ்யசபா நியமனத்திற்கான படிவங்கள் மற்றும் ஆவணங்களில் கையெழுத்திட அனுமதிக்குமாறு திகார் சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடக்கோரி, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் பிறகு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி வழங்கியது

    தொடர்ந்து, டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக உள்ள ஸ்வாதி மாலிவாலை ராஜ்ய சபா தேர்தலில் வேட்பாளராக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில், டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக ஸ்வாதி மாலிவால் நியமிக்கப்பட்டார், ஆசிட் தாக்குதல்கள், பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்கள் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முன்முயற்சிகளில் ஸ்வாதி மாலிவால் முக்கிய பங்கு வகித்தார்

    டெல்லியில் ஜனவரி 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் ஜனவரி 3-ம் தேதி தொடங்கியது. டெல்லி சட்டமன்றத்தில் உள்ள 70 இடங்களிலும் ஆம் ஆத்மி 62 இடங்களை கொண்டிருப்பதால், ஸ்வாதி மாலிவால், சஞ்சய் சிங் மற்றும் என் டி குப்தா ஆகிய மூன்று ஆம் ஆத்மி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    ராகவ் சதா, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட ஆம் ஆத்மியை சேர்ந்த 10 பேர் மேலவையில் உள்ளனர். பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதையடுத்து, மாநிலங்களவையில் ஆம் ஆத்மியின் பலம் அதிகரித்துள்ளது.

    ×