search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பும்ரா"

    • எம்.எஸ். டோனியை விக்கெட் கீப்பராக தேர்வு செய்துள்ளார்.
    • விராட் கோலிக்கு பேட்டிங் வரிசையில் 5-வது இடம் கொடுத்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை தொடக்க பேட்ஸ்மேனாக விளங்கியவர் கவுதம் கம்பீர். இவர் தற்போது இந்திய தேசிய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார்.

    இவர் ஆல்-டைம் இந்தியா லெவன் அணியை வெளியிட்டுள்ளார். இதில் ரோகித் சர்மா, கங்குலி ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. அவர்கள் மட்டுமல்ல பும்ராவுக்கும் இடம் கொடுக்கவில்லை.

    அவருடன் (கம்பீர்) சேவாக் தொடக்க வீரராக இடம் பிடித்துள்ளார். 3-வது இடம் ராகுல் டிராவிட்டுக்கும், 4-வது இடம் சச்சின் தெண்டுல்கருக்கும் கொடுத்துள்ளார். 5-வது இடத்தை விராட் கோலிக்கு வழங்கியுள்ளார். யுவராஜ் சிங் 6வது இடத்தை பெற்றுள்ளார். கம்பீரின் அணியில் யுவராஜ் சிங் மட்டுமே ஆல்-ரவுண்டர் ஆவார். பந்து வீச்சில் கும்ப்ளே, அஸ்வின், பதான், ஜாகீர் கான் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். எம்.எஸ். டோனியை விக்கெட் கீப்பராக சேர்த்துள்ளார்.

    கவுதம் கம்பீரின் ஆல்-டைம் இந்தியா லெவன்:-

    1. சேவாக், 2, கம்பீர், 3. ராகுல் டிராவிட், 4. சச்சின் தெண்டுல்கர், 5. விராட் கோலி, 6. யுவராஜ் சிங், 7. எம்.எஸ். டோனி (வி.கீப்பர்), 8. அனில் கும்ப்ளே, 9. அஸ்வின், 10. இர்பான் பதான், 11. ஜாகீர் கான்.

    கவுதம் கம்பீர் 2003-ம் ஆண்டு வங்காளதேசம் அணிக்கெதிராக டாக்காவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இநதிய அணியில் அறிமுகம் ஆனார். இந்திய அணிக்காக 147 ஒருநாள், 58 டெஸ்ட், 37 டி20 போட்டிகளில் விளையாடி 10,324 ரன்கள் அடித்துள்ளார். 2007-ல் டி20 உலகக் கோப்பையையும், 2011-ல் 50 ஓவர் உலகக் கோப்பையையும் வென்றவர் ஆவார்.

    • வேகம்தான் நம்முடைய பலம் என்பது உலகிற்கே தெரியும்.
    • நம்முடைய டாப் வேகப்பந்து வீச்சாளர்கள் அதே வேகத்தில் வீசுவதில்லை.

    லாகூர்:

    பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி பெற்றது.இந்த தோல்விக்கு பாகிஸ்தான் பவுலர்கள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றனர்.

    இந்நிலையில் பாகிஸ்தான் பவுலர்களை அந்நாட்டு முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் கடுமையாக சாடியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:- 

    வேகம்தான் நம்முடைய பலம் என்பது உலகிற்கே தெரியும். ஆனால் தற்போது நம்முடைய டாப் வேகப்பந்து வீச்சாளர்கள் அதே வேகத்தில் வீசுவதில்லை. அதுதான் முதல் போட்டியில் தோல்வியை சந்திக்க காரணம். அவர்களின் வேகம் அதிகமாக குறைந்து விட்டது. ஒருவேளை காயம் இருந்தால் அதை அவர்கள் வெளியே சொல்ல வேண்டும். ஷாஹீன், நசீம், குர்ராம் ஆகியோர் 145 கி.மீ வேகத்தில் தங்களது கெரியரை தொடங்கினர். ஆனால் தற்போது அவர்களுடைய வேகம் 130க்கு கீழே வந்து விட்டது. நம்முடைய பயிற்சியாளர்களை குறை சொல்ல வேண்டும்.

    ஜோப்ரா ஆர்ச்சர் காயத்தை சந்தித்து 2 வருடங்கள் கழித்து வந்தார். அப்போதும் அவர் தனது வேகத்தை இழக்கவில்லை. ஜஸ்பிரித் பும்ரா முதுகில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு வந்த பின்பும் அதே வேகத்தில் வீசுகிறார். காயத்தால் நீண்ட காலம் விளையாடாத பேட் கம்மின்ஸ் மீண்டும் விளையாடியபோது வேகம் குறைந்ததாக தெரியவில்லை. ஆனால் நமது பவுலர்களின் வேகம் ஏன் குறைந்து விட்டது? இத்தனைக்கும் நமது பயிற்சியாளர்கள் தேவையான வேலையை செய்கின்றனர். இருப்பினும் வேகம் 144 கிலோமீட்டரில் இருந்து 128ஆக குறைந்து விட்டது.

    என்று அவர் கூறினார்.

    • பேட்மிண்டனை காட்டிலும் கிரிக்கெட் கடினமானது அல்ல என சாய்னா நேவால் தெரிவித்தார்.
    • சானியா நேவாலிடம் கொல்கத்தா வீரர் ரகுவன்ஷி மன்னிப்பு கோரினார்.

    பேட்மிண்டனில் இந்திய நட்சத்திர வீராங்கனையாக வலம் வந்த சாய்னா நேவால் 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்தார். மேலும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் 2 பதக்கம் வென்றுள்ள அவர் தரவரிசையில் 'நம்பர் 1' இடத்தையும் அலங்கரித்தார். காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கத்தினையும் வென்றுள்ளார்.

    ஆனால் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓரிரு ஆண்டுகளில் அவரது ஆட்டத்திறன் வெகுவாக பாதிக்கப்பட்டது. முழு உடல்தகுதியை எட்ட முடியாமல் போராடி வருகிறார்.

    இந்நிலையில் டென்னிஸ், பேட்மிண்டன், கூடைப்பந்து விளையாட்டை காட்டிலும் கிரிக்கெட் உடல் ரீதியாக கடினமானது அல்ல என கடந்த மாதம் சாய்னா நேவால் தெரிவித்தார்.

    இதற்கு கொல்கத்தா அணியின் இளம் வீரர் ரகுவன்ஷி பதலளிக்கும் வகையில், நீங்கள் பும்ராவின் 150 கி.மீ வேகத்தை தலையில் வாங்கி பாருங்கள் அப்போது தெரியும் என கூறினார். இந்த கருத்து ரசிகர்களிடையே எதிர்ப்பை தெரிவித்து வந்தது.

    இதனையடுத்து அந்த கருத்து தொடர்பாக சாய்னா நேவாலிடம் ரகுவன்ஷி மன்னிப்பு கேட்டார்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சுபங்கர் மிஸ்ராவின் போட்காஸ்டில் சாய்னா நேவால் பேசியுள்ளார்.

    விராட் கோலி, ரோகித் போன்று ஆக வேண்டும் பலர் ஆசைப்படுவார்கள். ஆனால் சில வீரர்களால் மட்டும் தான் அதை அடைவார்கள். அதை நான் திறமை என்று நெனைக்கிறேன். நான் ஏன் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்ள வேண்டும்.

    பும்ரா பேட்மிண்டன் விளையாடினால் அவர் என்னுடைய 300 கிமீ வேகத்திலான ஸ்மாஷ்-ஐ எதிர்கொள்ள முடியாது.

    நாம் நமது நாட்டுக்குள்ளே இப்படி சண்டையிட்டுக் கொண்டிருக்கக் கூடாது. ஒவ்வொரு விளையாட்டுக்கும் இங்கே இடம் உள்ளது. ஆனால், நீங்கள் மற்ற விளையாட்டுக்கும் மதிப்பு கொடுங்கள். எப்போதும் நாம் கிரிக்கெட் மற்றும் பாலிவுட் மீதுதான் கவனம் செலுத்துகிறோம்.

    நம்மிடம் எத்தனை பேட்மிண்டன் அகாடமிகள் உள்ளன? கிரிக்கெட்டில் எத்தனை அகாடமிகள் உள்ளன. பேட்மிண்டன் விளையாட்டுக்கு போதுமான வசதிகள் இருந்தால் தரமான வீரர்கள் உருவாகுவார்கள்" என்று பேசியுள்ளார்.

    • ரோகித், கோலி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா போன்றவர்களுக்கு விதிவிலக்குகள் வழங்கப்படும்.
    • குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு போட்டியிலாவது விளையாட வேண்டும்.

    இந்திய கிரிக்கெட் தொடரில் இருந்து நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் இடம் பெறவில்லை என்றால், உள்நாட்டு தொடரில் விளையாடுவதற்காக தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஜெய்ஷா தெரிவித்தார். ஆனால் ரோகித், விராட் கோலி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா போன்றவர்களுக்கு விதிவிலக்குகள் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

    மேலும் வங்காள தேசம் மற்றும் நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னோடியாக துலீப் டிராபி பார்க்கப்படுகிறது. அதனால் இந்திய அணியில் இடம் பிடிக்காத மற்ற அனைத்து டெஸ்ட் வீரர்களும் இந்த தொடரில் பங்கேற்க வேண்டும். குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு போட்டியிலாவது விளையாட வேண்டும் என்று பிசிசிஐ விரும்புகிறது.

    இது குறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறியதாவது:-

    இந்த முறை துலீப் டிராபிக்கு மண்டலத் தேர்வுக் குழு இல்லை. தேசிய தேர்வுக் குழு மட்டுமே துலீப் அணிகளைத் தேர்ந்தெடுக்கும். அனைத்து டெஸ்ட் அணி வீரர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். ரோகித், விராட், பும்ரா ஆகியோர் விளையாடுவது அவர்களின் விருப்பம்.

    என கூறுகின்றது. 

    • இலங்கை தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்க உள்ளார்.
    • இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி ஜூலை 27-ந் தேதி நடக்கிறது.

    இந்திய அணி 3 வடிவிலான தொடரில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதில் முதலில் டி20 தொடரும் அடுத்து ஒருநாள் தொடரும் அதன் பின் டெஸ்ட் தொடரும் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி ஜூலை 27-ந் தேதி நடக்கிறது.

    டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுலும் நியமிக்கப்பட்டுள்ளனர். டி20 தொடரில் ரோகித், விராட் கோலி ஆகியோர் ஓய்வு அறிவித்தனர். இதனால் ரோகித், விராட் மட்டுமின்றி பும்ரா ஆகியோருக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இலங்கை தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ள கவுதம் கம்பீர், ரோகித், விராட் கோலி, பும்ரா ஆகியோரை இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட வேண்டும் என கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

    மேலும் டி20 தொடரில் கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா, தனிப்பட்ட காரணங்களுக்காக விலக உள்ளதாக பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • 3-வது 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது.
    • வருகிற 14-ந்தேதியுடன் ஜிம்பாப்வே தொடர் முடிவடைகிறது.

    புதுடெல்லி:

    வெஸ்ட் இண்டீசில் சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. அதோடு ரோகித் சர்மா, விராட்கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் 20 ஓவர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதற்காக அறிவித்தனர்.

    தற்போது சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் 2 ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை காணப்படுகிறது.

    3-வது 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது. வருகிற 14-ந்தேதியுடன் ஜிம்பாப்வே தொடர் முடிவடைகிறது.

    இதற்கிடையே இந்திய அணி இந்த மாதம் இறுதியில் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது.

    ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் 20 ஓவர் போட்டியில் மட்டுமே ஓய்வு அறிவித்து இருந்தனர். ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரில் தொடர்ந்து ஆடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா, வீராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோர் ஆடமாட்டார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. 3 பேருக்கும் ஓய்வு கொடுக்கப்படுகிறது.

    டெஸ்ட் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்து விளையாட உள்ளதால் இலங்கைக்கு எதிரான 3 ஒரு நாள் தொடரில் 3 பேரும் விளையாடவில்லை எனறு கூறப்படுகிறது.

    சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர் அவர்கள் பயிற்சி பெற போதுமானதாக இருக்கும்.

    இந்திய அணி செப்டம்பர்-ஜனவரி இடைவெளியில் 10 டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. வங்காளதேசம் (2 டெஸ்ட்), நியூசிலாந்து (3 டெஸ்ட்) ஆஸ்திரேலியா (5 டெஸ்ட்) ஆகியவற்றுடன் மோத இருக்கிறது.

    இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கும்பட்சத்தில் ஹர்திக் பாண்ட்யா அல்லது கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.

    • கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு நேற்று வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
    • இந்திய அணியின் வெற்றிக்கு பும்ரா தான் முக்கியமான காரணம் என்பதை மீண்டும் மீண்டும் விராட் கோலி தெரிவித்து பாராட்டினார்.

    நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் எடுத்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா வெற்றியை நோக்கி வேகமாக சேசிங் செய்தது. 177 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய அந்த அணி 15 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்திருந்தது. 15-வது ஓவரில் 24 ரன்கள் குவித்த அந்த அணி பெரிய அளவில் தன்னம்பிக்கையை பெற்றது.

    ஆனால், 16 வது ஓவர் மற்றும் 18வது ஓவரை வீசிய பும்ரா அந்த இரண்டு ஓவர்களில் மொத்தமே ஆறு ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். பும்ராவின் பந்துவீச்சை சந்திக்க தென்னாப்பிரிக்கா அணி திணறியது. அதன் காரணமாக, அந்த அணிக்கு இருந்த அழுத்தம், இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. கடைசியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றியது. 17 ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இதையடுத்து, கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு நேற்று வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. முன்னதாக அலைகடலென குவிந்திருந்த ரசிகர்கள் மத்தியில் இந்திய அணி வீரர்கள் பயணித்த பேருந்து ஊர்ந்து வந்தது.

    பாராட்டு விழாவில், பும்ராவை 'உலகின் எட்டாவது அதிசயம்' மற்றும் 'தேசிய பொக்கிஷம்' என்று அழைக்கும் மனுவில் கையெழுத்திடுவீர்களா என்று கேட்டதற்கு, கோலி சிறிதும் தயங்காமல் கையெழுத்திடுவேன் என்று விராட் கோலி கூறினார். மேலும் அவர் கூறியதாவது:- மைதானத்தில் இருந்த அனைவரையும் போலவே ஒரு கட்டத்தில் இந்த உலகக் கோப்பையும் கையை விட்டு நழுவுகிறது என்று நினைத்தோம். ஆனால், கடைசி ஐந்து ஓவரில் என்ன நடந்ததோ அது மிகவும் அற்புதமானது. நாம் அனைவரும் இந்த போட்டியில் நம்மை மீண்டும் வெற்றியை நோக்கி கொண்டு வந்த வீரரை பாராட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் இந்த தொடரில் மீண்டும், மீண்டும் அதை செய்தார். அந்த கடைசி ஐந்து ஓவரில் பும்ரா இரண்டு ஓவர்களை வீசினார். அது அற்புதமாக இருந்தது என்றார்.

    இதனிடையே இந்திய அணியின் வெற்றிக்கு பும்ரா தான் முக்கியமான காரணம் என்பதை மீண்டும் மீண்டும் விராட் கோலி தெரிவித்து பாராட்டினார்.

    • மீண்டும் மீண்டும் அவர் அழுத்தமான சூழ்நிலையில் வந்து அசத்தலாக செயல்படுகிறார்.
    • புத்திசாலித்தனம், அற்புதம் ஆகியவை அவருக்கு பொருந்தக்கூடிய வார்த்தைகளாகும்.

    இந்திய அணி 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்த தொடரின் தொடர் நாயகன் விருது ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கும், இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருது விராட் கோலிக்கும் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் கோஹினூர் வைரத்தை விட இந்தியாவின் ஜஸ்ப்ரித் பும்ரா அதிக மதிப்புமிக்கவர் என இந்தியாவின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார். 

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இறுதிப் போட்டியின் வர்ணனையில் இருந்த போது அவரை நான் கோகினூர் வைரத்தை விட விலைமதிப்பு மிக்கவர் என்று சொல்லியிருந்தேன். உண்மையில் உலக கிரிக்கெட்டில் அவர் தற்போது அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளுக்கும் பொருந்த கூடிய பந்து வீச்சாளராக இருக்கிறார். மீண்டும் மீண்டும் அவர் அழுத்தமான சூழ்நிலையில் வந்து அசத்தலாக செயல்படுகிறார்.

    அதை இங்கே பலரும் செய்வதில்லை. எந்த ஒரு போட்டியிலும், எந்த நேரத்திலும் வெற்றி பெற விரும்பும் கேப்டன் அவரை பயன்படுத்த விரும்புவார்கள். அதுவே அவருடைய ஸ்பெஷலாகும். புத்திசாலித்தனம், அற்புதம் ஆகியவை அவருக்கு பொருந்தக்கூடிய வார்த்தைகளாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுவாக நான் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வேலையை முடிப்பவன். ஆனால் இன்று சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை.
    • நாங்கள் தோல்வியின் பிடியில் இருந்தோம். ஆனால் அங்கிருந்து வென்றது நிலாவின் மேல் நடப்பது போல் இருக்கிறது.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் நேற்று மோதின. பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடரில் மொத்தமாக 15 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். குறிப்பாக இறுதிப்போட்டியில் 16, 18-வது ஓவரில் வெறும் 4, 2 ரன் மட்டுமே கொடுத்த அவர் 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காக இருந்தார்.

    பொதுவாக நான் போட்டி முடிந்ததும் அழ மாட்டேன. ஆனால் இன்று உணர்ச்சிகள் என்னை தூண்டியது என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பொதுவாக நான் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வேலையை முடிப்பவன். ஆனால் இன்று சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. பொதுவாக நான் போட்டி முடிந்ததும் அழ மாட்டேன். ஆனால் இன்று உணர்ச்சிகள் என்னை தூண்டுகிறது. நாங்கள் தோல்வியின் பிடியில் இருந்தோம். ஆனால் அங்கிருந்து வென்றது நிலாவின் மேல் நடப்பது போல் இருக்கிறது. இங்கே என்னுடைய குடும்பமும் இருக்கிறது.

    கடந்த முறை நெருங்கியும் எங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் இன்று எங்களுடைய வேலை முடிந்துள்ளது. இது போன்ற போட்டியில் உங்களுடைய அணியை வெற்றி கோட்டை தாண்ட வைப்பதை விட வேறு சிறந்த உணர்வு இருக்க முடியாது. இது போன்ற பெரிய நாட்கள் வரும் போது நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். இந்த தொடர் முழுவதுமே நான் தெளிவாக உணர்ந்தேன்.

    எப்போதும் நான் ஒரு நேரத்தில் ஒரு பந்தை பற்றி மட்டுமே சிந்திப்பேன். அதைத் தவிர்த்து அதிகமாக சிந்திப்பதில்லை. ஆனாலும் அங்கே உங்களை உணர்ச்சிகள் மேலே தூக்கும். இருப்பினும் நீங்கள் போட்டியை முடிந்த பின் உணர்ச்சியை வெளிப்படுத்தலாம். 16-வது ஓவரில் பந்தில் கொஞ்சம் கசடு இருந்தது போல் தெரிந்தது. அதை என்னால் ரிவர்ஸ் செய்ய முடியும். அதை செய்யும் போது எந்த பேட்ஸ்மேனுக்கும் அடிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.

    இவ்வாறு பும்ரா கூறினார். 

    • பும்ரா பந்தில் ஹென்ரிக்ஸ் க்ளீன் போல்டானார்.
    • மார்கிராம் அர்ஷ்தீப் சிங் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    டி20 உலகக் கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலி (76), அக்சர் பட்டேல் (47) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.

    பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்காவின் டி காக், ஹென்ரிக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரில் தென்ஆப்பிரிக்கா ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் அடித்தது.

    2-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஹென்ரிக்ஸ் க்ளீன் போல்டானார். ஹென்ரிக்ஸ் 5 பந்தில் 4 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து மார்கிராம் களம் இறங்கினார். இவர் அர்ஷ்தீப் சிங் வீசிய 3-வது ஓவரின் 3வது பந்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மார்கிராம் 5 பந்தில் 4 ரன்கள் எடுத்தார். அடுத்து ஸ்டப்ஸ் களம் இறங்கினார். 3 ஓவர் முடிவில் தென்ஆப்பிரிக்கா 14 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.

    4-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் டி காக் ஒரு பவுண்டரி அடித்தார். பும்ரா இந்த ஓவரில் 8 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் எடுத்திருந்தது.

    5-வது ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் அக்சர் பட்டேல் இரண்டு பவுண்டரியுடன் 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்தது.

    6-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 10 ரன்கள் விட்டுக்கொடுக்க தென்ஆப்பிரிக்கா பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்துள்ளது. டி காக் 20 ரன்னுடனும், ஸ்டப்ஸ் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    • 23 ஓவர்களில் சராசரியாக 4.08 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
    • தற்போதைய இந்திய அணியின் வீரர்களையும், ஒட்டுமொத்த உடற்தகுதி நிலைகளையும் பாராட்டியுள்ளார்.

    இந்தியாவுக்கு முதன்முறையாக உலகக் கோப்பையை வாங்கி கொடுத்த கேப்டன் கபில் தேவ், ஜஸ்பிரித் பும்ரா எனது காலத்தில் இருந்ததைவிட 1000 மடங்கு சிறந்த பந்து வீச்சாளராக திகழ்கிறார் என புகழாரம் சூட்டியுள்ளார்.

    தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு வரும் பும்ரா, இதுவரை வீசிய 23 ஓவர்களில் சராசரியாக 4.08 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    "என்னை விட பும்ரா 1000 மடங்கு சிறந்தவர். தற்போது இளம் பையன்கள் எங்களை விட மிகவும் சிறந்தவர்கள். எங்களுக்கு அதிக அனுபவம் இருந்தது. அவர்கள் சிறந்தவர்கள்" என்று கபில் பிரபல செய்தி நிறுவன பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் இப்போது சிறந்த வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் பும்ரா, இந்தியாவுக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் ஒரு ஓவருக்கு மூன்று ரன்களுக்கு குறைவாகவே விட்டுக்கொடுத்து 159 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 89 ஒருநாள் போட்டிகளில் 149 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 68 போட்டிகளில் 85 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.


    434 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற உலக சாதனையுடன் ஓய்வு பெற்ற கபில் தேவ், கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் வெற்றியைப் பெற்றார். அவரது 253 விக்கெட்டுகளைப் பெற்றார்.

    1983-ல் இந்தியாவை முதல் உலகக் கோப்பை பட்டத்திற்கு அழைத்துச் சென்ற 65 வயதான கபில் தேவ், தற்போதைய இந்திய அணியின் வீரர்களையும், ஒட்டுமொத்த உடற்தகுதி நிலைகளையும் பாராட்டியுள்ளார்.

    தற்போதைய இந்திய அணியினரை "அவர்கள் மிகவும் சிறந்தவர்கள். அவர்கள் உடற்தகுதி உடையவர்கள். அவர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள். அவர்கள் அற்புதமானவர்கள்" என்று கபில்தேவ் கூறியுள்ளார்.

    • டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் போட்டிகள் என மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் பும்ரா அசத்தி வருகிறார்.
    • ஐசிசி-யின் டெஸ்ட் போட்டியின் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா முதல் இடத்தை பிடித்தார்.

    இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக பும்ரா திகழ்ந்து வருகிறார். டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் போட்டிகள் என மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் அசத்தி வருகிறார்.

    கடந்த பிப்ரவரி மாதம் ஐசிசி-யின் டெஸ்ட் போட்டியின் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா முதல் இடத்தை பிடித்தார். முதன்முறையாக பும்ரா முதல் இடத்திற்கு முன்னேறினார்.

    டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இதுவரை முதல் இடத்தை பிடித்தது கிடையாது. தற்போது பும்ரா முதல் இடத்தை பிடித்து வரலாற்று சாதனையை பதிவு செய்தார்.

    தற்போது நடந்து வரும் 20 ஓவர் உலகக்கோப்பையில் இந்திய அணியின் தொடர் வெற்றிகளுக்கு பும்ரா காரணமாக இருக்கிறார்.

    இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தனது பேஸ்புக் மற்றும் எக்ஸ் பக்கத்தில் கவர் போட்டோவாக பும்ராவின் புகைப்படத்தை வைத்து பும்ராவுக்கு பெருமை சேர்ந்துள்ளது.

    ×