என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்லூர் ராஜூ"

    • பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க.வை எப்போது விரட்டலாம் என மக்கள் காத்திருக்கிறார்கள்.
    • போதைப்பொருள் கடத்தலில் இருப்பவர்கள் எல்லாம் தி.மு.க.வினர் தான்.

    மதுரை:

    மதுரை மாநகர் மாவட்ட அதி.மு.க. அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தினத்தை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    அதிகார வர்க்கத்திலிருந்து தொழிலாளர்களை காப்பதற்காக வேலை நேரத்தை 8 மணி நேரமாக உருவாக்கி, தொழிலாளர் நலன் காக்க இந்த மே தின கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அனைத்து தொழிலாளர்களுக்கும் அதி.மு.க. சார்பில் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம். இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழ்நாட்டில் தான் மே தினத்தை நமது முன்னோர்கள் கொண்டாடினர். உழைக்கும் வர்க்கத்தை மேற்கோள் காட்ட மெரினாவில் சிலை வைத்தனர்.

    விடியல் தருவோம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் 5 சதவீத சம்பள உயர்வு தான் கொடுத்து உள்ளனர். அப்பாவுக்கு தப்பாத பிள்ளையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை அறிவித்து வாயில் தான் வடை சுடுகிறார் .

    பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க.வை எப்போது விரட்டலாம் என மக்கள் காத்திருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் மட்டும் தான் 234 தொகுதியிலும் ஜெயிப்போம் என கூறிவருகிறாரே தவிர மக்களை நினைக்கவில்லை.

    பா.ஜ.க.வுடன் அதி.மு.க. கூட்டணி வைத்தால் மட்டும் மு.க.ஸ்டாலின் கொதித்து பேசுகிறார். நீங்க கூட்டணி வைத்தால் மட்டும் இனிக்கும். கூடாநட்பு கேடில் முடியும் என உங்கள் அப்பாவே காங்கிரஸ் கட்சி குறித்து பேசியுள்ளார். பிறகு ஏன் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தீர்கள்.

    தமிழ்நாட்டில் நடக்கும் அக்கிரமங்களுக்கும் கூட்டணியில் உள்ள மார்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி இதுவரை மக்களுக்கு ஆதரவாகவும், ஆட்சிக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறதா? தி.மு.க.வுக்கு ஆதரவாகத்தான் கம்யூனிஸ்டு கட்சிகள் செயல்படுகிறது. தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்கிறேன் என கூறி ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை பணி நிரந்தரம் செய்யாமல் இருப்பதாக போராட்டம் நடத்தி வரு கின்றனர்.

    தி.மு.க. தலைமையிலான அமைச்சரவை ஜாமின் பெற்ற அமைச்சரவை. அமைச்சர்கள் முழுவதும் வாய்தாவுக்கு சென்று வருகிறார்கள். தி.மு.க. அமைச்சர்களை பொறுத்த வரையில் கலெக்ஷன், கரப்சன் தான். அமைச்சர் பொன்முடி தொடர்ந்து பெண்களை இழிந்து பேசுவதும், தாழ்த்தப்பட்ட பெண் கவுன்சிலரை அவமரியாதை செய்வதும், பெண்களை ஓசி என கூறியதற்கு இன்றைக்கு எங்க அம்மா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் பொன்முடி என்றைக்கோ ஜெயிலுக்கு போயிருப்பார்.

    பாரத பிரதமரே இந்திய முதல்வர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என பாராட்டிய ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி தான்.

    போதைப் பொருள் கடத்தலில் இருப்பவர்கள் எல்லாம் தி.மு.க.வினர் தான். குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலையில் தமிழக காவல்துறை இருந்து வருகிறது. உண்மையான விடுதலை, விடியலை வரும் 2026-ல் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் உழைப்பாளர் தினத்தில் கொண்டாடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற தேர்தலில் 200 தொகுதிக்கு மேல் ஜெயிப்போம் என்கிறார். அது நடக்கப்போவதில்லை.
    • ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், எடப்பாடி பழனிசாமி 16 அடி பாய கூடியவர்.

    மதுரை:

    மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏற்குடி அச்சம்பத்து பகுதியில் அம்மா பூங்கா சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சிக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-

    தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த அமைச்சர் பொன்முடி இன்றைக்கு கட்சியின் பொறுப்பை இழந்துள்ளார். அமைச்சர் பொன்முடி பெண்களுக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்ட ஏழை, எளிய பெண்கள் குறித்தும் தர குறைவாக பேசுவது இன்று நேற்றல்ல அவருக்கு வாடிக்கையான ஒன்றுதான்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலவச பேருந்தில் பயணம் செய்யும் பெண்களை ஓசி பயணம் என்று விமர்சித்து பேசினார். எல்லாமே ஓசி என்று கேலியும் கிண்டலுமாக பேசினார். அதனை தமிழகத்தில் முதன் முதலாக கண்டித்தவன் நான் தான்.

    அமைச்சரான பொன்முடிக்கு அனைத்தும் ஓசி தான். அவருக்குரிய சலுகைகளை மற்றும் உபசரிப்புகளை எல்லாம் அப்போதே குறிப்பிட்டு நான் அவருக்கு கண்டனம் தெரிவித்திருந்தேன். சமீபத்தில் கூட டெல்லி சென்ற பொன்முடி விமானத்தில் ஓசியில்தான் சென்று வந்தார். இதுவும் மக்களின் வரிப்பணம்.

    பொன்முடி மீதான குற்றச்சாட்டுக்கள் முதலமைச்சருக்கு தாமதமாகவே தெரிய வந்திருக்கிறது. இதுபோல மக்கள் பிரச்சனைகளையும் லேட்டாகவே புரிந்து கொள்கிறார். எனவே தமிழக மக்கள் படும் பாட்டை முதலமைச்சருக்கு யாராவது விரைவாக எடுத்து தெரிவிக்க வேண்டும். எனவே தான் எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என்று தமிழக மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.

    ஆனாலும் முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற தேர்தலில் 200 தொகுதிக்கு மேல் ஜெயிப்போம் என்கிறார். அது நடக்கப்போவதில்லை. கடந்த 9-ந்தேதி நீட் தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அதி.மு.க., பா.ஜ.க. கட்சிகள் பங்கேற்கவில்லை. காரணம் என்னவென்றால், தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடனேயே முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து தான் என்று துணை முதலமைச்சர் உதயநிதி கூறி இருந்தார்.

    ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஆனால் சட்டமன்றத்தில் இரண்டு முறை தீர்மானங்களை கொண்டு வந்தார்கள் தவிர வேறு எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. பின்னர் ஒரு கோடி கையெழுத்து என்றார்கள். இதுவெல்லாம் நாடகமாகவே நடந்து முடிந்து விட்டது.

    எனவே தான் இப்போது மீண்டும் தொடக்கத்தில் இருந்து ஆலோசனை கூட்டம் என்று மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். தேர்தல் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்பட வேண்டியது. தேர்தல் நேரத்தில் தான் எந்தெந்த கட்சிகள் எந்தெந்த அணியில் இருக்கும் என்பது தெரியும். அதனை எங்கள் பொதுச்செயலாளர் உறுதியாக வலுவாக முடிவெடுப்பார்.

    பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை சந்திப்பதாக இருந்தால் முன்கூட்டியே எடப்பாடி பழனிசாமி தெரிவிப்பார். ஊடகங்கள், கற்பனை கதைகள் எழுத தேவையில்லை. பாரதிய ஜனதா மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலையை மாற்றினால் வருத்தமோ, மகிழ்ச்சியோ இல்லை. அது அவர்களது கட்சி விவகாரம்.

    ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், எடப்பாடி பழனிசாமி 16 அடி பாய கூடியவர். யாரையும் வலுக்கட்டாயமாகவோ, வற்புறுத்தியோ சந்திக்க மாட்டார். ஜெயலலிதா சிங்கப்பெண் என்றால் எடப்பாடி பழனிசாமி சிங்கக்குட்டி. எனவே அதி.மு.க. கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். மக்களுக்கு தேவையான நல்ல ஒரு கூட்டணியை எடப்பாடி பழனிசாமி அமைப்பார். அது வெற்றி கூட்டணியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீரில் தெர்மாகோல் விடுவது எளிது, விமான நிலையம் அமைப்பது அப்படியல்ல- சட்டசபையில் அமைச்சர் பேச்சு.
    • நான் கடைசி பெஞ்ச் மாணவன். என்னைப் போன்ற கடைசி பெஞ்ச் மாணவர்களுக்கு உதவ வேண்டும்.

    தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2-வது நாள் விவாதம் இன்று நடைபெற்றது. முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

    ராமேஸ்வரத்தில் இன்னும் ஓராண்டில் எப்படி விமான நிலையம் அமைக்க முடியும். தி.மு.க. ஆட்சி முடிய இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் ஏர்போர்ட் எப்படி அமைப்பீர்கள்? என செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, "மதுரைக்காரர்களுக்கு மட்டும் ஏர்போர்ட் இருந்தால் போதுமா? ராமநாதபுரத்திற்கு வேண்டாமா? படிப்படியாக பணி தொடங்கும். ஏர்போர்ட் ஜீபூம்பா வேலை இல்லை. கட்டமைப்பை ஏற்படுத்தியதும் உரிய காலத்தில் கட்டி முடிப்போம்" என்று கூறினார்.

    அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா "நீரில் தெர்மாகோல் விடுவது எளிது, விமான நிலையம் அமைப்பது அப்படியல்ல. நிலம் கையகப்படுத்துவது குறித்து ஆராய்ந்து மத்திய அரசின் அனுமதி பெற்று ஓசூரில் ஏர்போர்ட் விரைவில் அமைக்கப்படும்" என என பதில் அளித்தார்.

    ஏர்போர்ட் குறித்து விவரம் இல்லையே என கேட்டால் விவகாரமாக பேசுகிறீர்கள். அதிகாரி சொன்னதைத்தான் செய்தோம். தெர்மாகோல் என கிண்டலடிக்கிறீர்கள், பரவாயில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

    இன்றைய சட்டசபை நிகழ்வில் பேசுவதற்கு கொடுக்கப்பட்ட நேரம் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செல்லூர் ராஜூ பதில் அளிக்கையில் "எனக்கு பேசுவதற்கு போதுமான நேரம் கொடுக்கப்படவில்லை. அமைச்சர்களில் சைகளை பார்த்துதான் சபாநாயகர் செயல்படுகிறார்.

    நடுநிலையாக இல்லை. அவர் ஆசிரியராக இருந்தவர். நான் கடைசி பெஞ்ச் மாணவன். என்னைப் போன்ற கடைசி பெஞ்ச் மாணவர்களுக்கு உதவ வேண்டும். இல்லையென்றால் உபத்ரவம் கூட கொடுக்காமல் இருக்கலாம். அதை செய்யல.

    இன்னும் என்னை தெர்மாகோல், தெர்மாகோல்னு ஓட்டுறாங்க... இன்னைக்கு அமைச்சர்கள் எல்லாம் அதிகாரிகள் ஒரு திட்டத்தை சொன்னால் நேரில் சென்று பார்க்கிறார்கள். அதைபோன்று எங்களது மாவட்ட ஆட்சியாளர்கள், முதன்மை பொறியாளர் எங்களை அழைத்துச் சென்றார்கள். மக்களின் பிரச்சனைக்காக நான் சென்ற கலந்து இருக்கிறேன். அதுக்கு என்னங்க... இன்னும் ஓட்டிக்கிட்டு இருந்தால் என்ன அர்த்தம்" என்றார்.

    • அமைச்சர் துரைமுருகன்-தெரியவில்லை என்றால் கண் டாக்டரை பார்த்து கண்ணாடி போடவும்.
    • 50 ஆண்டுகள் கட்டப்படாத பள்ளிகள் எல்லாம் அழகான பள்ளிகளாக உருவாக்கியவர் எங்கள் முதலமைச்சர்.

    சென்னை:

    சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ (அ.தி.மு.க) பேசினார். அவரது ஒவ்வொரு கேள்விக்கும் அமைச்சர்கள் குறுக்கிட்டு பதில் அளித்தனர்.

    செல்லூர் ராஜூ-அண்ணாவின் கோட்பாடுகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்டு உள்ளது. ஆனால் நிதி நிலை அறிக்கையில் ஒன்று கூட இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

    அமைச்சர் துரைமுருகன்-தெரியவில்லை என்றால் கண் டாக்டரை பார்த்து கண்ணாடி போடவும்.

    செல்லூர்ராஜூ- கலைஞர் கனவு இல்ல திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விட குறைவான நிதி தான் செலவு செய்யப்பட்டு உள்ளது.

    அமைச்சர் ஐ. பெரியசாமி- நீங்கள் பசுமை வீடு திட்டம் அறிவித்து இருந்தீர்கள், அதை முழுமையாக செயல்படுத்தவில்லை. நீங்கள் அறிவித்ததை நாங்கள் கட்டி வருகிறோம்.

    எடுத்த உடனே எந்த திட்டத்துக்கு முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது இல்லை. படிப்படியாக தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    செல்லூர் ராஜூ- பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் பலகோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் பெரும்பாலான பள்ளி கட்டிடம் சேதமடைந்து உள்ளது.

    50 ஆண்டுகள் கட்டப்படாத பள்ளிகள் எல்லாம் அழகான பள்ளிகளாக உருவாக்கியவர் எங்கள் முதலமைச்சர்.

    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி- அ.தி.மு.க ஆட்சியில் அதிக பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. நிறைய பள்ளிகள் கட்டப்பட்டு உள்ளது.

    செல்லூர் ராஜூ- நாங்கள் 2016-ல் தனித்து நின்று வென்றோம்.

    அமைச்சர் எ.வ.வேலு- இனி தமிழ்நாட்டில் தி.மு.க.வை தவிர எந்த கட்சியும் வெற்றி பெற முடியாது.

    செல்லூர் ராஜூ- தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு எத்தனை பஸ்கள் வாங்கப்பட்டது என விளக்கப்படவில்லை.

    அமைச்சர் சிவசங்கர்- சனிக்கிழமை காலை வந்தால் எத்தனை பஸ்கள் வாங்க உள்ளோம் என்பதை நேரில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மினி பஸ்களுக்கான அனுமதி தொடர்பாக வழித்தடங்கள் வழங்கப்பட்டு விட்டது. மே மாதம் முதல் வாரத்தில் மினி பஸ் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.

    செல்லூர் ராஜூ- 4 ஆண்டுகள் ஆகி விட்டது அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு நீங்கள் எதுவும் செய்யவில்லை. சரண்டர் விடுப்பு அறிவிப்பை இந்த ஆண்டு அறிவித்து இருக்கிறீர்கள். இது அடுத்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் வர வேண்டியது

    அமைச்சர் தங்கம் தென்னரசு- கொரோனா காலத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான சலுகைகளை நீங்கள் தான் நிறுத்துனீர்கள். இப்போது ஏன் நிறுத்தினீர்கள் என கேட்கிறீர்கள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை சிறையில் அடைத்தது யார்? ஆட்சியில் என்பது மனசாட்சி இருந்தால் தெரியும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    • மதுரைக்காரர்களுக்கு மட்டும் ஏர்போர்ட் இருந்தால் போதுமா?
    • நிலம் கையகப்படுத்துவது குறித்து ஆராய்ந்து மத்திய அரசின் அனுமதி பெற்று ஓசூரில் ஏர்போர்ட் விரைவில் அமைக்கப்படும்.

    தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இன்னும் ஓராண்டில் எப்படி விமான நிலையம் அமைக்க முடியும். தி.மு.க. ஆட்சி முடிய இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் ஏர்போர்ட் எப்படி அமைப்பீர்கள்? என செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரைக்காரர்களுக்கு மட்டும் ஏர்போர்ட் இருந்தால் போதுமா? ராமநாதபுரத்திற்கு வேண்டாமா? படிப்படியாக பணி தொடங்கும். ஏர்போர்ட் ஜீபூம்பா வேலை இல்லை. கட்டமைப்பை ஏற்படுத்தியதும் உரிய காலத்தில் கட்டி முடிப்போம் என்று கூறினார்.

    நீரில் தெர்மாகோல் விடுவது எளிது, விமான நிலையம் அமைப்பது அப்படியல்ல. நிலம் கையகப்படுத்துவது குறித்து ஆராய்ந்து மத்திய அரசின் அனுமதி பெற்று ஓசூரில் ஏர்போர்ட் விரைவில் அமைக்கப்படும் என செல்லூர் ராஜூக்கு டிஆர்பி ராஜா பதில் அளித்தார்.

    ஓசூர் ஏர்போர்ட் குறித்து விவரம் இல்லையே என கேட்டால் விவகாரமாக பேசுகிறீர்கள். அதிகாரி சொன்னதை தான் செய்தோம், தெர்மாகோல் என கிண்டலடிக்கிறீர்கள், பரவாயில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

    • எங்களின் ஒரே அரசியல் எதிரி தி.மு.க. தான்.
    • தி.மு.க. உடைத்தால் மண்குடம். நாங்கள் உடைத்தால் பொன் குடமா?

    மதுரை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வுடன் ஒருபோதும் அ.தி.மு.க. கூட்டணி அமைக்காது என்று கூறி வந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிருபர்கள் சந்திப்பில் வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு அது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

    இது அரசியல் களத்தில் சில அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிசாமியின் இந்த திடீர் மனமாற்றம் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறி இருக்கிறார். அதில் எந்த தவறும் இல்லை. எங்களின் தலைவர் புரட்சித்தலைவி அம்மா தி.மு.க. என்ற தீய சக்தியை ஒழிக்க உருவாக்கப்பட்ட அ.தி.மு.க.வை லட்சியத்தோடு வளர்த்தார்.

    எங்களின் ஒரே அரசியல் எதிரி தி.மு.க. தான். அன்றைக்கு காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணியை முறித்தபோது இனியொரு போதும் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி இல்லை. அப்படி கூட்டணி வைத்தால் அது தற்கொலை செய்து கொள்வதற்கு சமம் என்று கருணாநிதி கூறினார். ஆனால் அதே கருணாநிதி தான் சொன்னதையும் மீறி காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டார் .

    தி.மு.க. உடைத்தால் மண்குடம். நாங்கள் உடைத்தால் பொன் குடமா? தற்கொலைக்கு சமம் என்று சொன்ன கருணாநிதியே தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு காங்கிரசுடன் கூட்டணி வைத்தார். அந்த அளவுக்கு கூட எங்கள் அண்ணன் (எடப்பாடியார்) இப்போது தெரிவிக்கவில்லை. எனவே தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    செல்லூர் ராஜூவின் இந்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களிலும், அரசியல் தலைவர்கள் மத்தியிலும் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

    • அ.தி.மு.க.வை பொறுத்தவரை இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களையும் நிர்வாகிகளையும் கட்டுக்கோப்பாக வழி நடத்தி வருகிறார்.
    • அ.தி.மு.க.வில் சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் சேருவது குறித்து காலம்தான் பதில் சொல்லும்.

    மதுரை:

    மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாராபட்டி பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் பாலம் மற்றும் பயணிகள் நிழற்குடை உள்ளிட்ட திட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று தொடங்கி வைத்தார்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளாக கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்து தமிழக மக்களுக்கு சேவை ஆற்றியுள்ளேன். என்னை உலகறிய செய்ய சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மதுரை மேற்கு தொகுதி மக்களுக்கு நானும் என் குடும்பமும் உயிர் உள்ள வரை சேவையாற்றுவோம்.

    மதுரை நகரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன. கொடிமங்கலம் பகுதியில் ரூ.17 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட்டதால் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    தற்போது தேனூர் பகுதியில் ரூ.26 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்ட திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைந்து பணியை செய்வதாக அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்துள்ளார்.

    அ.தி.மு.க.வின் இடைக்கால பொது செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சியை திறம்பட நடத்தி வருகிறார். தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்திற்கு சிறந்த மாலுமியாக கேப்டனாக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார்.

    கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளும் திறம்பட செயல்பட்டன. குறிப்பாக கூட்டுறவுத் துறையில் எவ்வித தவறும் இன்றி சிறப்பாக மக்களுக்கு சேவை செய்யப்பட்டன.

    நான் அமைச்சராக பொறுப்பு வகித்த 10 ஆண்டுகளில் இரண்டு முறை நேர்மையாக கூட்டுறவு சங்க தேர்தல்கள் நடத்தப்பட்டன. தி.மு.க. ஆட்சியில் குத்து வெட்டும் நடந்ததால் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி கூட்டுறவு சங்க தேர்தலை நடத்துவதையே கைவிட்டு விட்டார்.

    ஆனால் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொடுத்த உத்வேகம் காரணமாக இரண்டு முறை சிறப்பான முறையில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தினோம். கூட்டுறவுத்துறை சிறப்பாக செயல்பட்டதால் 27 விருதுகளை பெற்றோம்.

    அ.தி.மு.க. ஆட்சியில் ரேஷன் கடைகளில் தரமான பொருள்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

    கொரோனா காலத்தில் கூட பொதுமக்களுக்கு நேர்மையான முறையில் தரமான பொருட்களை விநியோகம் செய்யப்பட்டன. தவறு செய்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆயிரம் பொய் சொல்லி திருமணத்தை நடத்த வேண்டும் என்பார்கள். ஆனால் லட்சக்கணக்கில் பொய் சொல்லி தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டது.

    ஆனால் இந்த ஆட்சி மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இனி எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க.-தி.மு.க. என்கிற திராவிட இயக்கங்கள் தான் ஆட்சி அமைக்க முடியும்.

    இப்போது அ.தி.மு.க. என்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் டெல்லி நோக்கி புறப்பட்டு விட்டது. இதை நம்பி ஏறினால் டெல்லி செல்வார்கள். இல்லாவிட்டால் வீட்டில் இருப்பார்கள். அ.தி.மு.க.வை பொருத்தவரை எங்களின் நம்பி வருபவர்களை கை தூக்கி விடுவோம்.

    தமிழகத்தில் அ.தி.மு.க.வை பின் தள்ளிவிட்டு பாரதிய ஜனதா ராட்சசன் ஆக வளர்ந்து வருவதாக தி.மு.க. மூத்த அமைச்சர் துரைமுருகன் கூறியிருப்பது பாரதிய ஜனதா அரசு மீது துரைமுருகனுக்கு ஏற்பட்டுள்ள பயத்தை காட்டுகிறது.

    அ.தி.மு.க. என்றைக்கும் தமிழகத்தில் முதன்மையான இயக்கமாகும். தி.மு.க.வை ஓட ஓட விரட்டக்கூடிய லட்சக்கணக்கான ராணுவ படையை கொண்ட ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான். தேர்தல் நேரத்தில் கூட்டணி என்பது அன்றைய சூழ்நிலையை பொறுத்து அமையும். 2014 பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற இயக்கம் அ.தி.மு.க.

    கடந்து 2019 தேர்தலை வைத்து எதையும் கணிக்க கூடாது. தேர்தல் முடிவுகள் ஒவ்வொரு தேர்தலிலும் மாறக்கூடியது தான். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்தெந்த கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கும் என்பது அப்போது தான் தெரியும்.

    அ.தி.மு.க.வை பொறுத்தவரை இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களையும் நிர்வாகிகளையும் கட்டுக்கோப்பாக வழி நடத்தி வருகிறார். அ.தி.மு.க.விலிருந்து சிலர் விலகி இருக்கிறார்கள். அவர்களும் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேசினால் தீர்வு கிடைக்கும்.

    அ.தி.மு.க.வில் சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் சேருவது குறித்து காலம்தான் பதில் சொல்லும். அ.தி.மு.க.வை நம்பி வருகிற யாரையும் நாங்கள் கைவிட மாட்டோம். கை தூக்கி விடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்ட மதுரை மக்கள் திரள வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
    • மேலும் மாநகர பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் நினைவு நாள் நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.

    மதுரை

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு நாள் வருகிற 5-ந் தேதி கடை பிடிக்கப்படுகிறது. மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அன்றைய தினம் மவுன ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை காமராஜர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அவை தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.துணை செயலாளர் வில்லா புரம் ராஜா முன்னிலை வைத்தார். கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு ஆலோ சனைகள் வழங்கி பேசிய தாவது-

    அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி, முதியோர் உதவித்தொகை, என்று அனைத்து நலத்திட்டங்களை யும் ரத்து செய்துவிட்டு மு.க. ஸ்டாலின் அ.தி.மு.க. அரசை குறை கூற என்ன தகுதி இருக்கிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை.தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள். மின் கட்டணத்தை குறைப்போம் என்று சொன்ன அவர்கள் தற்போது ஆதாரை இணை யுங்கள் என்று பிரச்சினை யை திசை திருப்பு கிறார்கள்.

    மது கடையை மூடுவோம் என்றார்கள். ஆனால் டார்கெட் வைத்து மதுவை விற்பனை செய்கிறார்கள். தி.மு.க. எப்போதும் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று. எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள்.எனவே வருகிற பாராளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் மாபெரும் வெற்றியை பெறுவது உறுதி.

    புரட்சி தலைவியின் அவரது நினைவு நாளை அனுசரிக்கும் வகையில் வருகிற 5-ந் தேதி காலை கே.கே.நகரில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. மேலும் மாநகர பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் நினைவு நாள் நிகழ்ச்சியை நடத்த வேண்டும். அன்று மாலை 4 மணி அளவில் மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து நேதாஜி ரோடு மேலமாசி வீதி வழியாக மேலமாசி வீதி-வடக்கு சந்திப்பு வரை ஊர்வலமாக வந்து புரட்சித்தலைவி அம்மாவு க்கு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்த உள்ளோம்

    இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மட்டுமல்ல. தி.மு.க. அரசால் பாதிக்கப்பட்ட மதுரை மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தி.மு.க. அரசுக்கு சரியான பாடத்தை புகட்ட ஓரணியில் திரள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் நிர்வாகிகள் எம்.எஸ். பாண்டியன், கணேஷ்பிரபு, பரவை ராஜா, சோலை ராஜா, சண்முக வள்ளி, சுகந்திஅசோக், குமார், பாஸ்கரன், மாயத்தேவன், கே.வி.கே.கண்ணன், பார்த்திபன், பரமேஸ்வரன், கறிக்கடை முத்துகிருஷ்ணன், கலைச் செல்வம், புதூர் அபுதாகிர், ரமேஷ், முத்துராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளிகளுக்கு முன்பு போதைப் பொருட்கள் விற்கப்படுகிறது.
    • பள்ளி, கல்லூரி மாணவர்கள் மது குடிக்கின்றனர்.

    தமிழகத்தில் சொத்துவரி, பால் விலை மற்றும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க சார்பில் பரவை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டதிற்கு தலைமை தாங்கிய பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளதாவது:

    குஜராத்தை பொறுத்தவரை அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோருக்கு சொந்த ஊர். எனவே அப்பகுதி மக்கள் வாக்களித்துள்ளனர். காசியில் தமிழ் பற்றி பேசியதால் அப்பகுதி தமிழர்கள் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் பா.ஜ.க வளர்ந்து வருகிற கட்சி. அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறும். அது பா.ஜ.க கையில்தான் உள்ளது. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்.

    கோவை செல்வராஜ் ஏற்கனவே காங்கிரசில் இருந்தார். பின்னர் இப்போது தி.மு.க.வில் சேர்ந்துள்ளார். அவர் அடிக்கடி கட்சி மாறுவார். அ.தி.மு.க.வில் இருந்து கட்சி மாறியவர்கள் கூட தி.மு.க.வில் தற்போது அமைச்சர்களாக உள்ளனர். தற்போது தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடவில்லை, எங்கு பார்த்தாலும் போதை ஆறு தான் ஓடுகிறது. ஒரு காலத்தில் பெரியவர்கள் மட்டுமே மது குடித்த நிலை இருந்தது.

    ஆனால் தற்போது பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவரும் மது குடிக்கின்றனர். பள்ளிகளுக்கு முன்பாக போதைப் பொருட்கள் தாராளமாக விற்கப்படுகிறது. இதை பார்க்கும் போதும், கேட்கும் போதும் வேதனையாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    • எம்ஜிஆர் ஒரு தெய்வ பிறவி, அவர் சிலை மீது காவித்துண்டு போடுபவர்கள் மனித பிறவி அல்ல
    • இப்படிப்பட்ட ஈன பிறவிகள் எங்களிடம் சிக்கினால் காலில் போட்டு மிதிப்போம்.

    அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    அதிமுக ஒரு கட்டுக்கோப்பான இயக்கம், இந்த இயக்கத்தை தோற்றுவித்த எம்ஜிஆர், சாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர். அவர் ஒரு தெய்வ பிறவி. அவருடைய சிலையில் காவித்துண்டை போடுபவர்கள் மனித பிறவி அல்ல, ஒரு இழிவான பிறவி. எம்ஜிஆர் ஏழை எளிய மக்களுக்கு தெய்வமாக வாழ்ந்தவர் அவரை கொச்சைப்படுத்துவது இழிவான பிறவிகளுக்கு உரிய குணமாகும். காவிதுண்டை எங்கு போட வேண்டுமோ அங்கு போட வேண்டும். குங்குமத்தை நெற்றியில் தான் வைக்க வேண்டும்.

    அதை தரையில் போட்டு மிதிக்க கூடாது. அது போல நாடு போற்றும் மக்கள் தலைவரின் சிலைக்கு காவி துண்டு போட்டு கொச்சைப்படுத்துபவர்கள் இழிவான பிறவிகள். தமிழக அரசு வேடிக்கை பார்க்காமல் இப்படி செயல் படுபவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இப்படிப்பட்ட ஈன பிறவிகள் எங்களிடம் சிக்கினால் காலில் போட்டு மிதிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • 33 வார்டுகளுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட தி.மு.க. அமைச்சர்கள் இதுவரை எந்த ஒரு துரும்பையும் ஈரோட்டுக்கு கிள்ளி கூட போடவில்லை.
    • நூல் விலை உயர்வினால் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் ஆகி விட்டது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு எந்த திட்டங்களும் நிறைவேற்றவில்லை. நமது ஆட்சியில் கொண்டு வந்த ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை.

    33 வார்டுகளுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட தி.மு.க. அமைச்சர்கள் இதுவரை எந்த ஒரு துரும்பையும் ஈரோட்டுக்கு கிள்ளி கூட போடவில்லை. காரில் பவனி வருகிறார்கள்.

    சொத்து வரி, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, குடிநீர் கட்டண வரி என பல்வேறு வரி உயர்வினாலும், விலைவாசி ஏற்றத்தாலும் மக்கள் கடும் துயரத்தில் உள்ளனர். நூல் விலை உயர்வினால் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்.

    விடியல் தருவேன் என கூறி மக்களை ஏமாற்றி 505 வாக்குறுதிகளை தந்து எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கும் தி.மு.க. அரசுக்கு மக்கள் இடைத்தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள். தொகுதியெங்கும் தி.மு.க. காரர்கள் தான் உள்ளனர். கண்ணுக்கெட்டிய தூரம் காங்கிரஸ்காரர்களை காணவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாஜகவிலிருந்து விலகியவர்களை அதிமுகவில் சேர்த்துக் கொண்டதைக் கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
    • பாஜகவினருக்கு சகிப்புத்தன்மை வேண்டும் என செல்லூர் ராஜூ வலியுறுத்தல்

    சென்னை:

    பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் சமீபத்தில் வெளியேறி கூட்டணி கட்சியான அதிமுகவில் இணைந்தனர். இது தொடர்பாக இரு கட்சி தலைவர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். பாஜகவிலிருந்து விலகியவர்களை கூட்டணி தர்மத்தை மீறி அதிமுகவில் சேர்த்துக் கொண்டதைக் கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பாஜகவில் இருந்து ஆட்களை அழைத்துச் சென்றால் தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை உருவாகி உள்ளதாகவும், இது பாஜகவின் வளர்ச்சியை காட்டுகிறது என்றும் அண்ணாமலை கூறினார்.

    இது தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-

    எங்கள் கட்சியில் இருந்து சென்றவர்களை பாஜகவில் சேர்த்தபோது இனித்தது. இப்போது அங்கே இருந்து இங்கே வரும்போது கசக்கிறதா? பாஜகவினருக்கு சகிப்புத்தன்மை வேண்டும், வாயடக்கம் தேவை. வாய்க்கொழுப்போடு பேசக்கூடாது. மத்தியில் ஆளும் திமிரோடு பேசக்கூடாது.

    கூட்டணி கட்சிகள் தோளில் ஏறி உட்கார்ந்து காதை கடிப்பதையெல்லாம் அதிமுக பொறுத்துக்கொண்டிருக்காது. எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரிக்கும் அளவிற்கு தரம் தாழ்ந்து போய்விட்டார்கள்.

    இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார்.

    ×