search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்.ஆர்.தனபாலன்"

    • சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அனைவருக்கும் சமமான நீதி கிடைக்க வழி செய்ய தமிழக அரசு முற்பட வேண்டும்.
    • இட ஒதுக்கீடு செய்யப்படுவதற்கான முயற்சியையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாழும் நாடார் சமுதாய மக்களுக்கு போதிய கல்வித் தகுதி இருந்தும் அரசு பதவியில் முன்னுரிமை கிடைப்பதில்லை.

    பீகார், தெலுங்கானா போன்ற மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்படுவதற்கான முயற்சியையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஆனால் தமிழ்நாடு அரசு, மத்திய அரசுதான் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கூறி வருவது வேடிக்கையாக இருக்கிறது.

    மத்திய அரசு மீது பழிபோட்டு சமூக நீதியை புறக்கணிக்க நினைக்கும் எண்ணத்தை கைவிட்டு தமிழ்நாட்டில் சமூக நீதியை காப்பாற்றிட, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அனைவருக்கும் சமமான நீதி கிடைக்க வழி செய்ய தமிழக அரசு முற்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசின் சுற்று சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியிருப்பது குறித்து என்.ஆர்.தனபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார். #MekedatuDam
    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னுமிடத்தில் 5912 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசின் சுற்று சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

    மேகதாதுவில் புதிய அணை கட்டும்பட்சத்தில் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது முழுமையாக நின்று விடும். இதனால் தமிழகத்தின் விவசாயம் முழுமையாக அழிக்கப்பட்டுவிடும். மத்திய அரசு தமிழகத்தையும், தமிழக மக்களையும் வஞ்சிக்கிற விதமாக நடந்து கொள்வது துரதிஷ்டவசமானது. நீதிமன்றங்களின் தீர்ப்பை மதித்து சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதியை திரும்ப பெற வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார். #MekedatuDam
    ×