என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெலுங்கானா சட்டசபை தேர்தல்"

    • பா.ஜனதா கூட்டணியில் ஏற்கனவே தெலுங்கு தேசம் அங்கம் வகித்துள்ளது
    • தெலுங்கானா சட்டசபை தேர்தலை இணைந்து சந்திக்க வாய்ப்பு இருக்கலாம் எனத் தகவல்

    ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷாவை சந்தித்துள்ளார். மேலும், பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டாவையும் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நடந்துள்ளது.

    இந்த சந்திப்பால் தெலுங்கு தேசம் கட்சி பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாம் எனத் தெரிகிறது. இந்த வருடம் இறுதியில் தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்பின் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    2014 தேர்தலின்போது என்.டி.ஏ. கூட்டணியில் தெலுங்குதேசம் கட்சி ஒரு பகுதியாக இருந்தது. 2019-ம் தேர்தலுக்கு முன் 2018-ல் கூட்டணியில் இருந்து வெளியேறியது. இருந்தாலும், போர்ட் பிளேயர் நகராட்சி தேர்தலின்போது இரண்டு கட்சிகளும் இணைந்து களம் இறங்கின.

    கடந்த மாதம் நடைபெற்ற மன் கி பாத் நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சி நிறுவனரும், முன்னாள் முதல்வருடம் ஆன என்.டி. ராமராவ் குறித்து நினைவு கூர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் கட்சி 88 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.

    • சந்திரசேகர ராவ் பா.ஜனதாவின் ‘பி’ கட்சியாக செயல்பட்டு வருகிறார்
    • தெலுங்கானாவில் பா.ஜனதா இல்லை. அவர்களுடைய நான்கு டயர்களும் பஞ்சராகிவிட்டன

    தெலுங்கானாவில் இந்த வருடம் இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தெலுங்கானா உடன் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற இருக்கிறது. மற்று மூன்று மாநிலங்களிலும் தேசிய கட்சிகளான காங்கிரஸ்- பா.ஜனதா இடையே நேரடி போட்டி நிலவும். ஆனால், தெலுங்கானாவில் ஆட்சி செய்து வரும் சந்திரசேகர ராவ் கட்சியுடன் இரு கட்சிகளும் மோத உள்ளன. பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய அளவில் செல்வாக்கு இல்லை என்றாலும் காலூன்ற நினைக்கிறது.

    இதனால் தெலுங்கானா வரும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சந்திரசேகர ராவையும், அவர் கட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

    நேற்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி கம்மம் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    சந்திரசேகர ராவ் பா.ஜனதாவின் 'பி' கட்சியாக செயல்பட்டு வருகிறார். அந்த கட்சியை பா.ஜனதா ரெஷ்தேதார் (உறவு) சமிதி என்று அழைக்கலாம். சந்திரசேகர ராவ் மற்றும் அவரது கட்சியில் உள்ளவர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டு பா.ஜனதாவுக்கு அடிபணியச் செய்துள்ளது. சந்திரசேகர ராவ் உடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது. அவர் இருக்கும் கூட்டணியில் ஒருபோதும் காங்கிரஸ் இருக்காது என்பதை எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் வலியுறுத்துகிறேன்.

    சந்திரசேகர ராவ் மோடியிடம் உள்ள ரிமோட் கன்ட்ரோலால் இயக்கப்படுகிறார். சந்திரசேகர ராவ் தன்னை மன்னராகவும், தெலுங்கானா அவருடை ராஜ்ஜியம் என்றும் நினைக்கிறார்.

    கர்நாடகாவில் ஊழல், மக்கள் எதிர்ப்பு அரசுக்கு எதிராக போராடி ஏழை மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களால் பா.ஜனதாவை தோற்கடித்தோம்.

    அதபோல் நிலை தெலுங்கானாவில் நடக்கப்போகிறது. ஒரு பக்கம் அரசின் பணக்காரர்களும், அதிகாரம் படைத்தவர்களும் இருப்பார்கள். இன்னொரு பக்கம் ஏழைகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், விவசாயிகள் மற்றும் சிறு கடைக்காரர்கள் எங்களுடன் இருப்பார்கள். கர்நாடகாவில் என்ன நடந்ததோ அப்படியே தெலுங்கானாவில் நடக்கும்.

    தெலுங்கானாவில் பா.ஜனதா இல்லை. அவர்களுடைய நான்கு டயர்களும் பஞ்சராகிவிட்டன. தற்போது காங்கிரஸ் கட்சிக்கும்- பா.ஜனதாவின் 'பி' அணிக்கும் இடையில்தான் போட்டி.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

    • ராகுல்காந்தி பாத யாத்திரை மேற்கொண்டதும் அங்கு மீண்டும் காங்கிரசாருக்கு புத்துயிர் பிறந்தது போல் ஆனது.
    • மூத்த நடிகை விஜயசாந்தி மேதக் தொகுதியிலும், நடிகை ஜெயசுதா செகந்திராபாத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும்.

    தெலுங்கானாவில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மும்முனை போட்டி நிலவுகிறது.

    ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே யார் ஆட்சியை பிடிப்பது எனும் போட்டி கடுமையாக உள்ளது.

    தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சி தற்போது, பாரத் ராஷ்டிர சமிதி கட்சியாக தேசிய அவதாரம் எடுத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் அல்லாத 3-வது அணியை உருவாக்கி, அக்கூட்டணி மத்தியில் ஆட்சி செய்ய வேண்டும் என தேசிய அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

    தெலுங்கானாவில் இவர் மீதும், இவரது ஆட்சி மீதும் சற்று அதிருப்தி நிலவி வருகிறது. என்றாலும், இவருக்கு எம்.ஐ.எம். கட்சி மறைமுகமாக ஆதரவு தருவதாலும், தெலுங்கானாவில் முஸ்லிம்களின் வாக்கு அதிகம் இருப்பதாலும், சந்திரசேகர ராவே 3-வது முறையாக முதல்வராக ஆட்சி அமைப்பார் என கூறப்படுகிறது.

    ஆனால், தெலுங்கானாவில் பாஜக அசுர வளர்ச்சி அடைந்து, இதுவரை நடந்த அனைத்து இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஆளும் கட்சியை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில், 46 இடங்களில் வெற்றி பெற்று ஐதராபாத்தில் 2-வது செல்வாக்கு மிக்க கட்சியாக பா.ஜ.க. தன்னை வெளிப்படுத்தி கொண்டது.

    காங்கிரஸ் தான் தனது எதிரி என்பதை இதன் மூலம் சந்திரசேகர ராவ் மாற்றி கொண்டு, பா.ஜ.க.வை குறிவைக்க தொடங்கினார்.

    ராகுல்காந்தி பாத யாத்திரை மேற்கொண்டதும் அங்கு மீண்டும் காங்கிரசாருக்கு புத்துயிர் பிறந்தது போல் ஆனது. இதனை தொடர்ந்து அண்டை மாநிலமான கர்நாடகத்தில் பா.ஜ.க. வை வீழ்ச்சி அடைய செய்து, காங்கிரஸ் வெற்றி பெற்றதால், தெலுங்கானா காங்கிரஸாருக்கு புதிய உற்சாகம் பிறந்துள்ளது.

    இம்முறை கண்டிப்பாக தெலுங்கானாவையும் நாம் தான் கைப்பற்றுவோம் என காங்கிரஸ் கட்சியினர் மார்தட்டி கூறும் அளவிற்கு சென்று விட்டது.

    இந்நிலையில், பா.ஜ.க. , தெலுங்கானா தலைமையை மாற்றியது. மாநில தலைவராக இருந்த பண்டி சஞ்சய்க்கு பதில், மத்திய இணை மந்திரி கிஷண் ரெட்டியை தெலுங்கானா மாநில தலைவராக அறிவித்தது.

    இதனை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையாக ஆகர்ஷ் தெலுங்கானா எனும் திட்டத்தின் கீழ் முக்கிய பிரபலங்களை பா.ஜ.க.வில் இழுக்கும் படலம் தொடங்கி விட்டது. இந்நிலையில்தான் நடிகை ஜெயசுதா பா.ஜ.க.வில் இணைந்தார்.

    இதனை தொடர்ந்து, வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதற்கட்டமாக 30 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது. இதில், மூத்த நடிகை விஜயசாந்தி மேதக் தொகுதியிலும், நடிகை ஜெயசுதா செகந்திராபாத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய இணை மந்திரி கிஷண் ரெட்டி அம்பர் பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இது தவிர வேணு கோபால் ரெட்டி, முரளிதர ராவ், இந்திர சேனா ரெட்டி, விவேக், இந்திர லட்சுமி நாராயணா, ராமச்சந்திர ராவ், பிரபாகர், ஆச்சாரி, மகேஸ்வர ரெட்டி, ராத்தூர் ரமேஷ், பாபு மோகன், ஸ்ரீகாந்த், விஸ்வேஸ்வர ராவ், மகேஸ்வர் ரெட்டி, நரசைய்யா கவுட், பிரதீப் ராய், ராகேஷ் ரெட்டி, ஹரிஷ் பாபு, சத்திய நாராயணா, கிஷன் ரெட்டி, லட்சுமண், பண்டி சஞ்சய், ஷோயம் பாபுராவ், ஈட்ல ராஜேந்தர், ரகுவந்தன் ராவ், டி.கே. அருணா, ஜிதேந்திரா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    வரும் தேர்தலில் "டார்கெட் 75" என்ற இலக்கு நிர்ணயித்து பா.ஜ.க.வினர் 75 இடங்களில் வெற்றி பெற வேண்டுமென பா.ஜ.க. தலைவர் அமித்ஷா நிர்வாகிகளுக்கு வலியுறுத்தி உள்ளார். 2-ம் கட்டமாக 45 பேர் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 119 தொகுதிகளில் 115 தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர் அறிவிப்பு
    • சந்திரசேகர ராவ் இரண்டு இடங்களில் போட்டியிடுகிறார்

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த வருட இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சி செய்து வரும், சந்திரசேகர ராவின் பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி 119 இடங்களில் 115 இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், அனைத்து கட்சிகளையும் ஆச்சர்யத்திற்குள் ஆழ்த்தும் வகையில், வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. நர்சாபுர், நம்பல்லி, கோஷமஹால், ஜன்கயோன் ஆகிய நான்கு இடத்திற்கு மட்டும் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

    வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட சந்திரசேகர ராவ், ''நாங்கள் 95 முதல் 105 இடங்களில் வெற்றி பெற்று, தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைப்போம்'' எனத் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே இருந்த பட்டியலில் ஏழு மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் பெரும்பாலானோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    சந்திரசேகர ராவ், காஜ்வெல் தொகுதியில் போட்டியிடுகிறார். அத்துடன் தற்போது கமரெட்டி தொகுதியிலும் போட்டியிடுகிறார். இந்த கட்சியை சேர்ந்த கம்பா கோவர்தன் தொடர்ந்து நான்கு முறை இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மக்களவை தேர்தலில் ஓவைசி கட்சியுடன் கூட்டணி அமைத்தோம். அந்த கூட்டணி தொடரும் என உறுதியாக தெரிவித்துள்ளார்.

    தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிதான், பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. தற்போது, வேட்பாளர்களுக்கான விண்ணபத்தை வினியோகம் செய்துள்ளது. கடந்த 18-ந்தேதி முதல் ஆகஸ்ட் 25-ந்தேதி வரை போட்டியிட விரும்புவோம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

    கடந்த தேர்தலில் காங்கிரஸ், தெலுங்கானா ஜன சமிதி, தெலுங்கு தேசம், சிபிஐ ஆகிய நான்கு கட்சிகள் சேர்ந்து மெகா கூட்டணியை அமைத்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (தற்போது பாரத ராஷ்டிய சமிதி) தோற்கடிக்க முயற்சி செய்தன. ஆனால் மகா கூட்டணிக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை.

    சந்திரசேகர ராவ் கட்சி 88 இடங்களிலும், காங்கிரஸ் 19 இடங்களிலும், ஒவைசி கட்சி 7 இடங்களிலும், தெலுங்கு தேசம் 2 இடங்களிலும், பா.ஜனதா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

    • 115 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சந்திரசேகர ராவ் வெளியிட்டார்
    • ஏழு மாற்றங்கள் மட்டுமே இடம் பிடித்திருந்ததால், ஏற்கனவே உள்ளவர்களுக்கு வாய்ப்பு

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் இந்த வருடம் இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ், 115 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில் ஏழு மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வாய்ப்பு அளிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, கிடைக்காததால் தலைவர் ஒருவர் கண்ணீர் விட்டு அழும் காட்சி வெளியாகியுள்ளது.

    ஸ்டேசன் கான்புர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, தட்டிகோண்டா ராஜையா விண்ணப்பத்திருந்தார். ஆனால், அவருக்கு பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி வாய்ப்பு வழங்கவில்லை. வாய்ப்பை கிடைக்காததை பொறுத்துக் கொள்ள முடியாத அவர், மண்டியிட்டு கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் அவரது ஆதரவாளர்கள் அவரை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.

    கடந்த தேர்தலில் காங்கிரஸ், தெலுங்கானா ஜன சமிதி, தெலுங்கு தேசம், சிபிஐ ஆகிய நான்கு கட்சிகள் சேர்ந்து மெகா கூட்டணியை அமைத்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (தற்போது பாரத ராஷ்டிய சமிதி) தோற்கடிக்க முயற்சி செய்தன. ஆனால் மகா கூட்டணிக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை.

    சந்திரசேகர ராவ் கட்சி 88 இடங்களிலும், காங்கிரஸ் 19 இடங்களிலும், ஒவைசி கட்சி 7 இடங்களிலும், தெலுங்கு தேசம் 2 இடங்களிலும், பா.ஜனதா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

    • தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் மாநகராட்சியில் நடந்த தேர்தல் மூலம் பா.ஜ.க 2-வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
    • தெலுங்கானா மாநிலத்தில் கர்நாடக மாநில பார்முலாவை பயன்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் 119 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தனி பெரும்பான்மை பெற 60 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும்.

    வருகிற நவம்பர் மாதம் 30-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 2014-ம் ஆண்டு மாநிலம் உருவான போது அதிக செல்வாக்கு உள்ள பி.ஆர்.எஸ். கட்சியை சேர்ந்த சந்திரசேகரராவ் ஆட்சியை பிடித்தார்.

    தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் அவர் 3-வது முறையாக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பல்வேறு விதமான வியூகம் வகுத்து வருகிறார்.

    மாநிலத்தில் அதிக செல்வாக்கு பெற்றுள்ள அவரது கட்சி ஆட்சியைப் பிடிக்கும் வகையில் வேட்பாளர்கள் தேர்வு நடந்து வருகிறது. 115 தொகுதிகளில் அவரது கட்சி வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிடுகின்றனர்.

    வாக்காளர்களை கவரும் வகையில் தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது. சந்திரசேகரராவ் கட்சியில் அவரது மகள் கவிதாவுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்படுகிறது. இதனால் வாரிசு அரசியல் என்ற பிரசாரத்தை எதிர்க்கட்சிகள் தொடங்கியுள்ளன.

    ஆனாலும் அவற்றையெல்லாம் உடைத்து மக்களுக்கான நலத்திட்டங்கள் மூலம் மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் மாநகராட்சியில் நடந்த தேர்தல் மூலம் பா.ஜ.க 2-வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

    கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி 2 இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் பேசினார். தொடர்ந்து அமித்ஷா மத்திய மந்திரிகளும் பிரசார ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    தெலுங்கானாவில் டார்கெட் 75 என்ற இலக்குடன் பா.ஜ.க. களமிறங்குகிறது. நடிகைகள் விஜயசாந்தி, ஜெயசுதா உள்ளிட்ட 25 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் திட்டங்கள் மூலம் வாக்குகளை பெறுவதற்கு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் கர்நாடக மாநில பார்முலாவை பயன்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இந்த மாநிலத்தில் நடத்தப்பட்டது.

    அப்போது பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2500, ரூ.500-க்கு சமையல் கியாஸ் சிலிண்டர், பெண்களுக்கு இலவச பஸ் பயணம் மற்றும் விவசாயிகளுக்கு உதவி தொகை என 6 முக்கிய வாக்குறுதிகளை சோனியா காந்தி அறிவித்தார். இதன் மூலம் பெண்கள் வாக்குகளை எளிதாக கவர முடியும் என காங்கிரஸ் கணக்கிட்டு உள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தவரை தற்போது காங்கிரஸ் கட்சி 3-வது இடத்தில் உள்ளது. தெலுங்கானா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சர்மிளாவை அந்த கட்சியில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    அது நிறைவேறவில்லை. தெலுங்கானா மாநிலத்தில் இந்த சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஆட்சியைப் பிடிக்க ஆளும் பி.ஆர். எஸ். கட்சி, பா.ஜ.க., காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடும் பிரசார வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

    • மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பிரசாரத்தில் ஈடுபட சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார்.
    • பொதுக்கூட்ட ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்திலிருந்து 2014-ம் ஆண்டு தெலுங்கானா மாநிலம் புதிதாக உருவானது.

    அப்போது மாநில பிரிவினைக்கு பெரும் பங்கு வகித்த சந்திரசேகர ராவ் கட்சி 63 இடங்களை கைபற்றி முதல் முறையாக ஆட்சிக்கு வந்தது. அதற்கு பின்னர் 2018-ம் ஆண்டு தேர்தலில் 88 இடங்களை பெற்று 2-வது முறையாக ஆட்சியை பிடித்தது.

    இந்த நிலையில் நவம்பர் மாதம் 30-ந்தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தெலுங்கானா மாநிலத்தில் முதல்- மந்திரி சந்திரசேகர ராவ் பல்வேறு வியூகங்கள் வகுத்து வருகிறார்.

    அவருக்கு ராசியான இடமாக கருதப்படும் ஹீஸ்னாபபாத்தில் இருந்து தேர்தல் பிரசாரத்தை வருகிற 15-ந்தேதி தொடங்குகிறார். அன்று காலை கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்.

    வழக்கம் போல காமரெட்டி பகுதியில் அவர் போட்டியிட முடிவு செய்துள்ளார். முன்னதாக கோனை பள்ளியில் உள்ள வெங்கடேஸ்வரா சாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அக்டோபர் 15-ந்தேதி வேட்பாளர்களுக்கு பி-படிவங்களையும் அவர் வழங்குகிறார். இதைத் தொடர்ந்து மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பிரசாரத்தில் ஈடுபட அவர் முடிவு செய்துள்ளார்.

    இதற்கான பொதுக்கூட்ட ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • தெலுங்கானாவில் ஆட்சிக்கு வந்தால் 93 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் காப்பீடு அளிக்கப்படும்.
    • ரூ.400 விலையில் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும் என முதல் மந்திரி சந்திரசேகர ராவ் வாக்குறுதி அளித்தார்.

    ஐதராபாத்:

    தெலுங்கானா சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 30-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, அங்கு ஆளுங்கட்சியாக உள்ள பாரத ராஷ்டிர சமிதி நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. கட்சித் தலைவரும், முதல் மந்திரியுமான சந்திரசேகர ராவ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    தெலுங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தகுதியுள்ள பயனாளிகளுக்கு ரூ.400 விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும். மீதி தொகையை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும்.

    வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 93 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் காப்பீடு அளிக்கப்படும். அதற்கான பிரீமியம் தொகையை மாநில அரசு செலுத்திவிடும்.

    'ஆரோக்கிய ஸ்ரீ' திட்டத்தின்கீழ், தகுதியுள்ள பயனாளிகளுக்கு தலா ரூ.5 லட்சம் சுகாதார காப்பீடு அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை ரூ.15 லட்சமாக உயர்த்தப்படும்.

    சமூக பாதுகாப்பு ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வரும் ரூ.2,016 மாதாந்திர தொகை, 5 ஆண்டுகளில் ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும். முதல் ஆண்டிலேயே ரூ.3,016 ஆக அதிகரிக்கப்படும்.

    மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் தற்போதைய ரூ.4 ஆயிரத்து 16-ல் இருந்து 5 ஆண்டுகளில் ரூ.6 ஆயிரத்து 16 ஆக உயர்த்தப்படும்.

    விவசாயிகளுக்கான முதலீட்டு பாதுகாப்பு திட்டத்தில், ஒரு ஏக்கருக்கு ஆண்டொன்றுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்தொகை 5 ஆண்டுகளில் படிப்படியாக ரூ.16 ஆயிரமாக உயர்த்தப்படும்.

    நிச்சயமாக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம். ஆட்சிக்கு வந்த 6 முதல் 7 மாதங்களிலேயே வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். தனிநபர் வருமானம், மின்சார பயன்பாடு ஆகியவற்றில் தெலுங்கானா முதன்மை மாநிலமாக உருவெடுத்துள்ளது என தெரிவித்தார்.

    • 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
    • தெலுங்கானா மாநிலத்துக்கு நவம்பர் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    ஐதராபாத்:

    மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, தெலுங்கானா மாநிலத்துக்கு நவம்பர் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, தெலுங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்ற ஆளும் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.

    இந்நிலையில், தேர்தலுக்காக மட்டுமே வருபவர் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி என தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக கவிதா கூறுகையில், தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் நடக்கும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தியும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இன்று தெலுங்கானா வருகிறார்கள். அவர்கள் உத்தரவாதம் அளித்து பொய்யான வாக்குறுதிகளை அளிக்கின்றனர். காங்கிரஸ் கட்சி சொல்வதை அவர்கள் செய்யவே மாட்டார்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் ராகுல் காந்தி வருவதால் அவரை தேர்தல் காந்தி என்றே அழைப்பேன் என தெரிவித்துள்ளார்.

    • தெலுங்கானா மாநிலத்துக்கு நவம்பர் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.
    • அங்கு ஆட்சியைக் கைப்பற்ற ஆளும் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் போட்டி நிலவி வருகிறது.

    ஐதராபாத்:

    மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, தெலுங்கானா மாநிலத்துக்கு நவம்பர் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, தெலுங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்ற ஆளும் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி ஒரு காகிதப் புலி என தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா தெரிவித்துள்ளார்

    இதுதொடர்பாக கவிதா கூறுகையில், ராகுல் காந்தி காட்டு சிங்கம் அல்ல; அவர் ஒரு காகிதப் புலி. ஏனென்றால், யார், எதை எழுதி கொடுத்தாலும், அதைத்தான் படித்துவிட்டுப் போவார். உள்ளூர் சூழ்நிலையைப் புரிந்து கொள்ள மாட்டார். இந்தப் பிராந்தியத்தின் உள்ளூர் மரபுகள் அல்லது கலாசாரத்தை அவர் மதிக்கவில்லை அல்லது புரிந்து கொள்ளவில்லை என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கானா சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ம் தேதி நடக்கிறது.
    • பா.ஜ.க. முதல் கட்டமாக 52 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தெலுங்கானாவில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் இருக்கும் சந்திரசேகர் ராவ், இந்த முறையும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.

    ஆளும் கட்சியை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ், பா.ஜ.க. ஆகியவை வியூகம் வகுத்து செயல்பட்டு வருகின்றன.

    தெலுங்கானாவில் இந்த முறை பாரதிய ராஷ்டிர சமிதி கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என தேர்தல் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. பாஜகவும் கணிசமான தொகுதிகளை வெல்லும் என்றும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. சட்டசபை தேர்தலுக்கு ஒரு மாதமே எஞ்சியிருப்பதால் அங்கு தேர்தல் களம் சூடு பறக்க ஆரம்பித்துள்ளது.

    இந்நிலையில், பா.ஜ.க. இன்று முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 52 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. போத் தொகுதியில் பா.ஜ.க. எம்.பி சோயம் பாபு ராவும், அரவிந்த் தர்மபுரி கொரூட்லா தொகுதியிலும், சஞ்சய் குமார் பண்டி கரிம் நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

    • தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் 30-ம் தேதி சட்டசப்பைத் தேர்தல் நடைபெற உள்ளது.
    • அங்கு ஆளும் கட்சியாக உள்ள பாரத ராஷ்டிரீய சமிதி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் 30-ம் தேதி சட்டசப்பைத் தேர்தல் நடைபெற உள்ளது.

    அங்கு ஆளும் கட்சியாக உள்ள பாரத ராஷ்டிரீய சமிதி, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, தனியார் டி.வி. நேரலை விவாத நிகழ்ச்சி சமீபத்தில் நடத்தியது. இதில் சந்திரசேகரராவ் கட்சி எம்.எல்.ஏ. விவேகானந்தர் மற்றும் பா.ஜ.க வேட்பாளரான குணா ஸ்ரீசைலம் கவுட் ஆகியோர் பங்கேற்றனர்.

    பா.ஜ.க. வேட்பாளர் குணா ஸ்ரீசைலம் கவுட் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஆத்திரமடைந்த விவேகானந்தர் எம்.எல்.ஏ, பா.ஜ.க வேட்பாளரின் கழுத்தை இறுக்கி பிடித்துக் கொண்டு முகத்தில் கையால் குத்தினார்.

    இதனை நேரடியாக பார்த்த பல்லாயிரக்கணக்கானோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பா.ஜ.க. சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இந்நிலையில், தெலுங்கானா பா.ஜ.க. மாநில தலைவரும், மத்திய மந்திரியுமான கிஷன் ரெட்டி கூறுகையில், விவேகானந்தர் எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவேண்டும். இல்லை என்றால் பா.ஜ.க. சார்பில் சட்டப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

    ×