search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலங்காரம்"

    • அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளினார்.
    • 4 வீதிகளை சுற்றுவந்து தேர் மீண்டும் நிலையை அடைந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை தாலுகா, நீடூர் சோமநாதர் சுவாமி கோயிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஆலாலசுந்தரி பத்ரகாளி அம்பாள் கோயிலில் சித்திரை மாத தேர் திருவிழா நடைபெற்றது.

    தொடர்ந்து 27-ஆம் தேதி காப்பு கட்டுதல், மே 2-ஆம் தேதி பால்குடம் ஆகிய உற்சவங்கள் நடைபெற்றது.

    உற்சவத்தின் சிகர விழாவான தேர் திருவிழா நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தேரில் எழுந்தருளச் செய்யப்ப ட்டார்.

    பின்னர், மகா தீபாராதனை காண்பிக்க ப்பட்டு ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர் தேரை இழுத்தனர்.

    முஸ்லிம், கிரிஸ்டன், இந்து வசிக்கும் கோயிலின் நான்கு வீதிகளைச் சுற்றுவந்து மீண்டும் நிலையை அடைந்தது.

    வழியெங்கும் பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன்பு அம்பாளுக்கு மாவிளக்கு தீபமிட்டு வழிபாடு நடத்தினர்.

    மேலும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் தங்கள் வீட்டின் முன்பு அம்பாளுக்கு மலர் சாற்றி, தீபாராதனை எடுத்து வழிபட்டனர்.

    இது மத நல்லிணக்கத்துக்கு சிறந்த உதாரணமாக விளங்கியது.

    இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    இவ்விழா நிகழ்ச்சி ஏற்பாடு களை நீடூர் கிராமவாசிகள் செய்திருந்தனர்

    • புனித நீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
    • சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் பூரணா புஷ்கலா சமேத அன்னப்ப சாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 7-ம் ஆண்டை முன்னிட்டு புனித நீர் அடங்கிய கலசங்கள் குடங்கள் வைத்து சிறப்பு பூஜை யாகம் நடைபெற்றது.

    பின்பு புனித நீர் அடங்கிய குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. சுவாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு அம்மனுக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி ஐதீக முறைப்படி நடைபெற்றது.

    இதில் பெண்களுக்கு மங்களப் பொருட்கள் சேலை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா மற்றும் சுகாதார பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அவர்களுக்கு சீர் பலகாரம், அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சி ஏற்பாட்டை சென்னை சேர்ந்த குருமூர்த்தி, லட்சுமி நாராயணன், குமார் மற்றும் பலர் செய்து இருந்தனர்.

    • மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது.
    • வரதராஜபெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகலில் பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் நேற்று அமாவாசையையொட்டி வரதராஜபெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    அப்போது மஞ்சள் பொடி, சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து வரதராஜபெருமாள் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கைரேகை மட்டுமல்ல, மனிதர்களின் ஒவ்வொரு தோற்றமும் அவர்களது குணத்தை சொல்லும். இதோ உங்கள் கூந்தல் அலங்காரத்தையும், உங்கள் குணத்தையும் ஒப்பிட்டுப் பாருங்களேன்...
    கைரேகை மட்டுமல்ல, மனிதர்களின் ஒவ்வொரு தோற்றமும் அவர்களது குணத்தை சொல்லும். உங்கள் கூந்தல் அலங்காரம்கூட நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை காட்டிக் கொடுக்கும். இதோ உங்கள் கூந்தல் அலங்காரத்தையும், உங்கள் குணத்தையும் ஒப்பிட்டுப் பாருங்களேன்...

    கூந்தல் தோள்பட்டையை தொட முயற்சிக்கும் ‘பாப் கட்டிங்’, பெண்ணாக நீங்கள் இருந்தால், பாசி்ட்டிவ்வான எண்ணம் கொண்டவர். எதிலும் இருக்கும் நிறைகளை அலசுவீர்கள். குறைகளை சொல்லமாட்டீர்கள். பண்பாளராக திகழ்வீர்கள். உண்மை பேசுபவராகவும், மற்றவர்களைவிட தனித்துவம் பெற்றவராகவும் இருப்பீர்கள். எந்த சூழ்நிலையிலும் நிலைகுலைந்து போகாமல் நிதானமும், பொறுமையும் மிக்கவராக வாழ்க்கையை நடத்திச்செல்வீர்கள். மற்றவர்களைப் போல வழக்கமான வாழ்க்கையை வாழ விரும்பாதவராக, புதுமை படைப்பவராக வித்தியாசமான எண்ணங்களுடன் வலம் வருவீர்கள். காதலில்கூட உங்கள் எண்ணம் புதுமையானதாக இருக்கும். ஜொள்ளுப் பார்ட்டிகள் உங்களிடம் வழிந்து காதலைச் சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். அதே நேரத்தில் பண்பான ஒருவரைப் பார்த்தால் நீங்களாக காதலைச் சொல்லவும் தயங்கமாட்டீர்கள்.

    ‘பிக்சி கட்’ எனப்படும் இந்த குட்டையான கூந்தல் தோற்றம் உங்கள் உருவத்திற்கு கச்சிதமாகப் பொருந்துவதாக நினைக்கிறீர்களா? நீங்கள் தன்னம்பிக்கை நிறைந்தவர் என்பதை காட்டுகிறது இந்த தோற்றம். உங்களுக்கு சமூக அக்கறையும் அதிகம். கொஞ்சம் ஜாலிப் பேர்வழியும்கூட. காதல் உணர்வு அதிகமாக இருக்கும். ஆனால் காதலுக்கு மேல் எல்லைமீற மாட்டீர்கள் என்று சொல்லலாம்.

    உங்களுக்கு நிறைய நண்பர்களும், பிரியமானவர்களும் இருப்பார்கள். அந்த அளவுக்கு எளிமையாக, பண்பாக பழகும் ஆற்றல் கொண்டவர். வேலையிலும் இன்பம் காண்பவர். சுய உள்ளுணர்வால் தூண்டப்பட்டு எதையும் புதுமையாகச் செய்யும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பீர்கள். அதே நேரத்தில் சுய கட்டுப்பாடு மிகுந்தவராகவும் விளங்குவீர்கள். எவரும் உங்களைப் பாராட்டவும் பழகவும் விரும்புவார்கள். உங்களுடன் இணைந்து செயல்படவும் ஆசைப்படுவார்கள்.

    கூந்தல் உங்கள் தோள்பட்டையை தொட்டுக் கொண்டிருக்கும் இது ‘லோப் கட்டிங்’ எனப்படுகிறது. நீங்கள் பெண்ணிய கருத்துக்கள் கொண்டவராக இருப்பீர்கள். உங்கள் இயற்கை அழகு உங்களை கடந்து செல்லும் ஒவ்வொருவரையும் ஈர்க்கும். பழகிப் பார்ப்பவர்களுக்கு உங்கள் பண்பாடும், கலாசாரமும் பிடித்துப் போகும். சவால்களை ஏற்றுச் செய்வதில் உங்களுக்கு விருப்பம் அதிகம். நண்பர்களை அதிகமாக உருவாக்கிக் கொள்வீர்கள். நண்பர்களுக்கு உதவுவதில் முன்னணியில் இருப்பீர்கள். நீங்கள் ஆண்களிடம் கனிவாகப் பேசுவீர்கள். ஆனால் அவ்வளவு எளிதாக காதல்வலையில் விழுந்துவிடமாட்டீர்கள். மற்றவர்கள் உங்களை அதிகமாக பேசுபவராக கருதுவார்கள். நிஜத்தில் நீங்கள் பேச்சைவிட செயலிலே அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

    பின்னே புஜத்திற்கு கீழே, முன்னே மார்பகத்தை மறைக்கும் அளவுக்கு தொங்கும் இது ‘லாங் ஹேர் கட்’ எனப்படுகிறது. அதிகமாக வளரும் கூந்தலை நுனியில் மட்டும் கத்தரித்து அழகு செய்துகொள்ளும் நீங்கள் எதிலும் கவனமாக இருப்பவர். பொறுமை மிக்கவர். உங்களுக்கு மிகப்பெரிய கனவுகள் இருக்கும். நீங்கள் எதற்கும் கலங்குவதில்லை. அதை மற்றவர்களும் அறிவார்கள். உறவை பேணுவதிலும் வல்லவர். கடினமான மனிதர்களிடம்கூட நட்பு பாராட்டி உறவை பேண உங்களால் முடியும். ஆனால் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வதில் மட்டும் கறாராக இருப்பீர்கள். ஏனோதானோ என்று செயல்பட மாட்டீர்கள். உங்கள் கனவுகள் நிறைவேற போராடுவீர்கள், பாடுபடுவீர்கள். இலக்கை அடையாமல் ஓயமாட்டீர்கள்.
    தா.பேட்டையை அடுத்த கரிகாலி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், சந்தன காப்பு மற்றும் சாக்லெட் அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    தா.பேட்டையை அடுத்த கரிகாலி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், நேற்று அமாவாசையை முன்னிட்டு மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதை முன்னிட்டு மாரியம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து சந்தன காப்பு மற்றும் சாக்லெட் அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். 
    மணப்பெண் அலங்காரத்தில் பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டிருக்கின்றன. அந்த புதுமைகளை பெற்று, தங்களை முழுமையாக அழகுப்படுத்த விரும்பும் பெண்கள் கவனிக்கத்தக்க விஷயங்கள் நிறைய இருக்கின்றன.
    மணப்பெண் அலங்காரத்தில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்:

    திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள் அனைவருமே, மணப்பெண் அலங்காரத்தை விரும்புகிறார்கள். அவர்களது விருப்பத்தை நிறைவேற்றும் விதத்தில் மணப்பெண் அலங்காரத்திலும் பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டிருக்கின்றன. அந்த புதுமைகளை பெற்று, தங்களை முழுமையாக அழகுப்படுத்த விரும்பும் பெண்கள் கவனிக்கத்தக்க விஷயங்கள் நிறைய இருக்கின்றன.

    * எந்த இடத்தில் திருமணம் நடக்கிறதோ அந்த இடத்துக்கு தக்கபடி அலங்கார விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதிக மேக்கப் செய்து கொண்டு கோவிலில் எளிமையாக திருமணம் செய்வது முரண்பாடாக அமையும்.

    * ஏ.சி. வசதி இல்லாத இடத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தால் அதற்கு தக்கபடி மேக்கப் செய்து கொள்வது சவுகரியமாக இருக்கும்.

    * நீங்கள் எல்லா நாட்களிலும் எப்படி சிகை அலங்காரம் செய்கிறீர்களோ அதே மாதிரியான அலங்காரத்தைதான் திருமணத்தின்போதும் பின்பற்ற வேண்டும். வழக்கத்துக்கு மாறாக சிகை அலங்காரம் செய்தால் அது ஒட்டுமொத்த அழகையும் கெடுத்துவிடும்.

    * சிலருக்கு கூந்தலை விதவிதமான ஸ்டைல்களில் அலங்கரித்தால் பார்க்க அழகாக இருக்கும். சிலருக்கு சாதாரணமாக சிகை அலங்காரம் செய்தாலே அருமையாக அமைந்துவிடும். எது பொருத்தமாக இருக்குமோ அதனையே பின்பற்றலாம்.



    * திருமணத்திற்கு முன்பாக கட்டாயம் மேக்அப் ஒத்திகை பார்க்க வேண்டும். ஒரு தடவையாவது எந்த மாதிரியான மேக்கப் செய்வது நன்றாக இருக்கும் என்று பரிசோதித்து பார்த்தால்தான் உங்களுக்கும், அழகுக்கலை நிபுணருக்கும் நம்பிக்கையும், திருப்தியும் ஏற்படும்.

    * மேக்அப் ஒத்திகை செய்யும்போது திருமணத்திற்கு உடுத்தப்போகும் புடவை, அணியும் ஆபரணம் போன்றவற்றை உடன் எடுத்து செல்லவேண்டும். அது மேக்கப்பை முழுமைப்படுத்தும். நிறை, குறைகளை சரி செய்ய உதவியாக இருக்கும். ஜீன்ஸ், டாப் போன்ற மேற்கத்திய ஆடைகளை அணிந்து கொண்டு மேக்கப் ஒத்திகைக்கு சென்றால் பலன் தராது.

    * சிலருக்கு தங்கள் முகத்தில் எந்த உறுப்பு அழகாக இருக்கிறது என்பது தெரியாது. உதடுதான் அழகாக இருப்பதாக நினைப்பார்கள். ஆனால் கண்கள்தான் வசீகரிக்கும் அழகை கொண்டிருக்கும். முகத்தில் எந்த உறுப்பு அழகாக இருக்கிறதோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதுதான் ஒப்பனைக்கு கூடுதல் அழகு சேர்க்கும்.

    * மணப்பெண் அலங்காரம் பெரும்பாலும் காலை வேளையில்தான் அதிகமாக நடக்கிறது. அவசர, அவசரமாக கிளம்பி சென்று சீக்கிரமாக மேக்கப்பை முடித்துவிடுமாறு நிறைய பேர் சொல்கிறார்கள். ஒருவேளை மேக்கப் சரி இல்லை என்றால் அதனை மாற்ற நேரம் இல்லாமல் போய் விடும். அதனால் மேக்கப் செய்ய அழகுக்கலை நிபுணருக்கு போதுமான நேரம் கொடுங்கள்.

    * ஆண்கள், பெண்கள் எல்லோருக்குமே இளநரை பிரச்சினை இருக்கிறது. அதனை முதலிலேயே சரிபடுத்திவிட வேண்டும். திருமணத்திற்கு முந்தைய நாள் டை அடித்துக்கொள்ளலாம் என்று தள்ளிவைக்காதீர்கள்.

    * ஒருசிலர், ‘நாங்கள் பார்க்க கலராக தெரிய வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்’ என்று அழகுக்கலை நிபுணர்களிடம் சொல்கிறார்கள். அப்படி குறுக்கு வழியில் அழகை கூட்ட நினைப்பது ஆபத்தானது. இயல்பான அழகையும், நிறத்தையும் சற்று மேம்படுத்துவதில் மட்டும் அக்கறைகாட்டுங்கள். 
    சிறிய அளவு 'பட்ஜெட்' கொண்ட வீடாக இருந்தாலும் கண் கவரும் அலங்கார பொருட்கள் மற்றும் அமைப்புகள் மூலம் ஒவ்வொரு அறையையும் அழகாக காண்பிக்கவே பெண்கள் விரும்புவார்கள்.
    சிறிய அளவு 'பட்ஜெட்' கொண்ட வீடாக இருந்தாலும் கண் கவரும் அலங்கார பொருட்கள் மற்றும் அமைப்புகள் மூலம் ஒவ்வொரு அறையையும் அழகாக காண்பிக்கவே அனைவரும்(பெண்கள்) விரும்புவார்கள். பொதுவாக, எல்லா அறைகளுக்கும் உள் அலங்காரம் தேவை என்ற நிலையில், ஒரு சில அறைகளை நமக்கு பிடித்தமான வகையில் அழகுபடுத்த முடியும்.

    ஒரே தோற்றம் :

    சமையல் அறை, 'வார்ட்ரோப்ஸ்' என்ற அலமாரிகள், பூஜை அறை, டி.வியை வைப்பதற்கான 'கேபினட்டுகள்', குட்டி பசங்களின் ஸ்கூல் புராஜக்ட் மற்றும் பரிசு கோப்பைகள் வைக்கும் கண்ணாடி பொருத்திய அலமாரிகள், பல்வேறு 'லேமினேஷன்கள்' ஆகியவற்றை ஒரே மாதிரியாக அமைத்தால், வித்தியாசமான அழகாக இருக்கும். சமையல் அறையில் 'வாட்டர் புரூப்' கொண்ட பொருட்களையும் பயன்படுத்தலாம்.

    அலமாரிகள் அவசியம் :

    சுவர் அலமாரிகள் 'ஸ்லைடிங்' கதவுகள் கொண்டதாக இருப்பது வழக்கம். வீட்டில் குறைவான உபயோகம் கொண்ட பொருட்களை சுவர் அலமாரிகள் அல்லது மர கதவு பொருத்தப்பட்ட 'லாப்ட்' அமைப்புகளில் வைத்து பராமரிப்பது வழக்கம். பொதுவாக கான்கிரீட் பரண்கள் அதிகமாக அமைப்பதில் பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. 'வார்ட்ரோப்' அமைக்கும்போது மேற்கூரையை தொடும் வகையில் உயரமாக அமைத்துவிட்டால், சூட்கேஸ்கள் உள்ளிட்ட 'டிராவல் பேக்' போன்றவற்றை அவற்றில் வைப்பது சுலபமாக இருக்கும்.



    சுவர் அலமாரிகள் :

    'வால்க் இன் க்ளோசட்' என்ற அலமாரிகளை உள்ளே அமைத்து ஒற்றை கதவு பொருத்தப்படும் முறையானது இப்போது மெதுவாக பல இடங்களில் பரவி வருகிறது. இந்த முறையில் அதிக செலவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஒற்றைக் கதவு என்பதால் பொருட்கள் வைக்க நிறைய இடம் கிடைக்கும். நமது செலவுகளை பொறுத்து இரண்டு அறைகளுக்கு இடைவெளிகளில் இதை அமைத்துக்கொள்ளலாம். வீட்டு கட்டுமான பணிகளின்போதே இந்த முறைக்கான இடத்தை கச்சிதமாக தேர்வு செய்து கொள்வது சிறப்பு.

    'ஸ்கர்டிங்' பலகைகள் :

    நவீன சமையலறை அமைப்பில் கவனிக்க வேண்டிய விஷயம், கேபினட்டுகளை தாங்கக்கூடிய 'புஷ்' அமைப்பை மறைக்கும் 'ஸ்கர்டிங்' என்ற சிறிய பலகைகள் ஆகும். மேலும், அங்கே குப்பைகள் சேராமல் தடுக்கவும் இந்த அமைப்பு பயன்படும். அந்த 'ஸ்கர்டிங்' அமைப்பை மரத்தால் செய்யப்பட்டதாக இல்லாமல் 'பி.வி.சி' தயாரிப்புகளான 'பிளாஸ்டிக்' பொருள்கள் மூலம் அமைத்து, தண்ணீர் பாதிப்புகள் வராமல் தடுக்கலாம்.



    அழகிய படுக்கையறை :

    பொதுவாக, படுக்கையறை கதவு திறந்தவுடன் கண்ணில் படுக்கை படாதவாறு அமைக்கவேண்டும். படுக்கையறைக்கு போதுமான வெளிச்சம் இருக்குமாறு ஜன்னல்களை கச்சிதமாக அமைக்கவேண்டும். அறை நடுவில் கட்டில் போடும்போது 'சைடு டேபிள்' இருப்பின் அவற்றின் மீது புத்தகங்களை வைத்து உபயோகப்படுத்தலாம். சிறிய அறையாக இருந்தாலும் முக்கியமாக கருதப்படுவது படுக்கை அறையாகும்.

    படிக்கும் இடம் :

    அலுவலக பணிகள் மற்றும் பள்ளி மாணவர்களின் வீட்டுப்பாடம் போன்றவற்றை செய்வதற்காக பல வீடுகளில் 'லேப்டாப்' பயன்படுத்தப்படுவது வழக்கம். அதை பயன்படுத்தும்போதும், 'சார்ஜ்' செய்யும்போதும் தனியாக வைத்து பராமரிப்பதற்காக தனியிடம் தேவைப்படும். முக்கியமாக பசங்கள் படிக்கும்போது அமைதியாக இருப்பது அவசியம். அந்த அறைகளில் 'டிரெஸ்ஸிங் டேபிள்' வைக்கப்படும் சூழலில் அலமாரிகளில் கண்ணாடியை பதித்துக்கொள்ளலாம்.
    ×