search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 159268"

    • அறம் வளர்த்த நாயகி சமேத காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதன பெருமைகள் பல கொண்டதாகும்.
    • இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுடன் இணைந்த அறம் வளர்த்த நாயகி சமேத காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதன பெருமைகள் பல கொண்டதாகும்.

    இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமி- அம்பாள் மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்கார பூஜைகள், தீபாராதனை மற்றும் சுவாமிகள் எழுந்தருளல் ஆகிய நிகழ்சிகள் தொடர்ந்து நடந்து வந்தன. சிவனடியார்கள் இல்லங்குடி, சிவானந்த நடராஜன், ரமணகிரி, பண்டார சிவன்பிள்ளை ஆகியோர் தேவாரம் பாடி வந்தனர்.

    சுவாமி, அம்பாள் கேடய சப்பரத்தில் புறப்படுதல், சமய சொற்பொழிவு மற்றும் விழா நாட்களில் சுவாமி, அம்பாள் புறப்பாடு, கும்பபூஜை, அபிஷேகம், தீபாராதனை, திருமுறை பாடல்கள், திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கல், திருமுறை பண்ணிசை, நடராஜர் ஊருகுச் சட்டசேவை, நடராஜர் சிகப்பு, வெள்ளை, பச்சை சாத்தி புறப்பாடு, திருச்சுன்னம் இடித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றது.

    இன்று (வியாழக்கிழமை) சிறப்பு பூஜையுடன் சித்திரை விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சங்கர், செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • நுகர்வோர் பேரவையின் திருச்செந்தூர் வட்டார கிளை சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சியில் நோன்பின் நன்மைகள் குறித்து எடுத்துக்கூறப்பட்டது.

    உடன்குடி:

    தமிழ்நாடு நுகர்வோர் பேரவையின் திருச்செந்தூர் வட்டார கிளை சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி குலசேகரன்பட்டினத்தில் நடந்தது. தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாநில தலைவர் ஏ.வி.பி. மோகனசுந்தரம் தலைமை தாங்கி நோன்பின் நன்மைகள், மகிமைகள், மற்றும் சமத்துவம், சகோதரத்துவம் மனித நேயம் ஆகிய செயல்பாடுகளுடன் ஒவ்வொரு மனிதனும் எப்படி செயல்பட வேண்டும், சகோதர தத்துவத்துடன் எப்படி வாழ வேண்டும் என்று பேசினார்.

    ஆத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் கமால்தீன் முன்னிலை வகித்தார். திருச்செந்தூர் வட்டார தலைவர் ரஹ்மத்துல்லா வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினராக அரசு வக்கீல் சந்திரசேகர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் குலசேகரன்பட்டினம் நகரத்தலைவர் ஆறுமுகராஜா, செயலாளர் மரிய இருதயராஜ், உடன்குடி ஒன்றிய ஆலோசகர் பேச்சுமுத்து, ஆத்தூர் கவுன்சிலர் கேசவன் மற்றும் திருமணி உட்பட பலன் கலந்து கொண்டனர். வட்டார தலைவர் ரஹமத்துல்லா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். முடிவில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    • கச்சி விநாயகர் கோவிலிருந்து பால்குடம் எடுத்து வீதி உலா வரப்படுகிறது.
    • பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது.

    உடன்குடி:

    உடன்குடி அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுடன் இணைந்த அறம் வளர்த்தநாயகி கோவில் பழமை வாய்ந்த கோவிலாகும். இது தென் மாவட்டங்களில் முக்கிய கோவில்களில் ஒன்றாகும்.

    இக்கோவிலில் வருகிற 31-ந் தேதி வருசாபிஷேக விழா நடக்கிறது. இதை முன்னிட்டு 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6மணிக்கு யாகசாலை பூஜைகள், பல்வேறு மந்திரங்கள் ஒதபடும். காலை 7மணிக்கு கச்சி விநாயகர் கோவிலிருந்து பால்குடம் எடுத்து வீதி உலா வந்து கோவிலுக்கு வருதல். காலை 9மணி முதல் நண்பகல் 12மணிக்குள் மூலஸ்தான சுவாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், கும்பாபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகேஸ்வர பூஜை, உச்சிக்கால தீபாராதனை ஆகியவை நடக்கிறது. பகல் 12மணிக்கு சிறப்பு அன்னதானம், இரவு 7மணிக்கு சிறப்பு திரு விளக்கு பூஜை, இரவு 7.30 மணிக்கு சிறப்பு அலங்காரம் அர்ச்சனை, கற்பூர ஆராத்தி, இரவு 8.30மணிக்கு உற் சவமூர்த்திக்கு சோடாச உபசார தீபாராதனை, இரவு 9மணிக்கு சுவாமி அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் நடக்கிறது.

    ஏற்பாடுகளை தக்கார் சங்கர், செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், வருசாபிஷேக சிறப்பு கட்டளைதாரர்கள், குலசேகரன்பட்டினம் சைவ வேளாளர் பெருமக்கள் செய்து வருகின்றனர்.

    • குலசேகரன்பட்டினம் செய்யது சிராஜுதீன் தர்காவில் கந்தூரி விழா 12 நாள் சிறப்பாக கொண்டாடப்படும்.
    • தர்கா முன்பு உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு கந்தூரி விழா தொடங்கியது.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் கடற்கரையில் அமைந்துள்ள செய்யது சிராஜுதீன் தர்கா தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற தர்காவில் ஒன்றாகும். இங்கு வருடம் தோறும் கந்தூரி விழா 12 நாள் சிறப்பாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டு திருவிழா நேற்று மாலை 6 மணிக்கு யானை மீது கொடிப்பட்டம் வைத்து ஊர்வலமாக சென்று தர்கா முன்பு உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றத்துடன் விழா தொடங்கியது. விழா நாட்களில் தினசரி காலை, மாலையில் சிறப்பு தொழுகை மார்க்க உபன்னியாசம் தொடர்ந்து நடைபெறும். விழாவின் முக்கிய நாட்களான வருகிற 4-ந் தேதி நள்ளிரவு 1 மணிக்கு சந்தனம் பூசப்பட்டு அபூர்வ துவா ஓதி ஓதப்படும், 5-ந் தேதி நள்ளிரவு 2 மணிக்கு தர்காவில் இருந்து சந்தனக்கூடு அலங்காரத்துடன் ஊர் முழுவதும் சுற்றி வரும் வீடு தோறும் தப்ரூக் வழங்கப்படும்.

    6-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு வான வேடிக்கை, 7-ந் தேதி இரவு 7 மணி 10 மணி வரை விளக்கு ஏற்றப்படும், 8-ந் தேதி கொடி இறக்கப்பட்டு கந்தூரிவிழா நிறைவு பெறும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மூத்தவல்லி ரஹ்மத்துல்லா இமாம் செய்து வருகிறார்.

    • குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் 1008 பால்குட அபிஷேக விழா நாளை தொடங்குகிறது.
    • முத்தாரம்மன் தேர் பவனி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் ஸ்ரீகாமதேனு குரூப்ஸ் அபிஷேக வழிபாட்டு மன்றத்தினர், ஸ்ரீராஜலட்சுமி குரூப்ஸ் மற்றும் ஆன்மீக பெருமக்கள், ஸ்ரீ முத்தாரம்மன் தசரா நண்பர்கள் அன்னதான குழுவினர் இணைந்து நடத்தும் 1008 பால்குட அபிஷேக விழா நாளை தொடங்குகிறது.

    இதனை முன்னிட்டு நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு அரசடி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, 5 மணிக்கு ஸ்ரீஞானமூர்த்தீஸ்வரர், சமேத ஸ்ரீமுத்தாரம்மனுக்கு மஹா அபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகம், 108 கலசாபிஷேகம் நடை பெறும்.

    இரவு 7மணிக்கு அலங்கார மஹாதீபாராதனை, 8.30 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு கற்பூரஜோதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை மறுநாள் (1-ந் தேதி) காலை 6 மணிககு மஹாகணபதி ஹோமம், மஹாலெட்சுமி ஹோமம், காலை 6.20 மணிக்கு தனபூஜை, கோபூஜை, கஜபூஜை, 6.30 மணிக்கு 108 கலசபூஜை, உலக நன்மை வேண்டிய மஹாதீபாராதனை நடைபெறும்.

    காலை 6.45 மணிக்கு சிதம்பரேஸ்வரருக்கு மகா தீபாராதனை, காலை 7மணிக்கு கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து முத்தாரம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வருதல், 9 மணிக்கு அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கு மகாதீபா ராதனை நடைபெறுகிறது.

    காலை 9.30 மணிக்கு குலசை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலிருந்து கோலாட்டம், யானை ஊர்வலத்துடன், மேளதாளம் முழங்க 1,008 பால்குட பவனி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலுக்கு வந்து சேரும்.

    பிற்பகல் 12 மணிக்கு விவசாயம் தழைக்கவும், மழைவேண்டியும் 1008 பால்குட அபிஷேகம், 108கலசாபிஷேகம், 108 சங்காபிஷேகமும் நடக்கிறது. மதியம் 3மணிக்கு 108சுமங்கலி பெண்கள் குலவையிட கும்மி, மாலை 5.மணிக்கு அம்பாள் ஊஞ்சல் சேவை, மாலை 6மணிக்கு

    1, 008 மஹா திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெறுகிறது.

    இரவு 8 மணிக்கு முத்தாரம்மன் தேர் பவனியும், இரவு 8.30மணிக்கு ஸ்ரீபைரவருக்கு வடைமாலை அணிந்து சிறப்பு பூஜையும் நடக்கிறது.

    இந்த 2 நாள் நிகழ்ச்சியில் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.இதற்கான ஏற்பாடுகளை இந்த அமைப்பின் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • முத்தாரம்மன் கோவிலில் பால்குட அபிஷேக விழா 31-ந் தேதி நடைபெறுகிறது.
    • இரவு 8.10 மணிக்கு முத்தாரம்மன் திருத்தேரில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    உடன்குடி:

    ஸ்ரீகாமதேனு குரூப்ஸ் அபிஷேக வழி பாட்டு மன்றத்தினர், ஸ்ரீராஜ லட்சுமி குரூப்ஸ் மற்றும் ஆன்மீக பெருமக்கள், முத்தாரம்மன் தசரா நண்பர்கள் அன்னதான குழுவினர் இணைந்து குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பால்குட அபிஷேக விழா 31-ந் தேதி நடைபெறுகிறது.

    இதை முன்னிட்டு அன்று மாலை 4.10 மணிக்கு அரசடி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 5மணிக்கு ஸ்ரீஞானமூர்த்தீஸ்வரர், சமேத ஸ்ரீமுத்தாரம்மனுக்கு மஹா அபிஷேகம், 108சங்காபிஷேகம், 108கலாசாபிஷேகம், இரவு 7மணிக்கு அலங்கார மஹாதீபாராதனை, இரவு 8.30மணிக்கு வில்லிசை, இரவு 12மணிக்கு கற்பூர ஜோதி உள்ளிட்ட நிகழ்ச்சி கள் நடக்கிறது.

    ஜனவரி 1-ந் தேதி காலை 6மணிக்கு கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம், காலை 6.20மணிக்கு தனபூஜை, கோபூஜை, கஜபூஜை, காலை 6.30மணிக்கு 108கலச பூஜை, உலக நன்மை வேண்டிய தீபாராதனை, காலை 6.45மணிக்கு சிதம்பரேஸ்வரருக்கு மகாதீபாராதனை, காலை 7மணிக்கு கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து முத்தாரம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வருதல், காலை 8.10மணிக்கு அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கு தீபாராதனை, காலை 8.30மணிக்கு குலசை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலிருந்து கோலாட்டம், யானை ஊர்வலத்துடன் மேளதாளம் முழங்க 1008பால்குட பவனி முக்கியவீதிகள் வழியாக வருதல், பகல் 12.20மணிக்கு விவசாயம் தழைக்க, மழைவேண்டி 1008பால்குட அபிஷேகம், 108கலசாபிஷேகம், 108சங்காபிஷேகமும் நடக்கிறது. மதியம் 3மணிக்கு 108சுமங்கலி பெண்கள் குலவையிட கும்மி, மாலை 5.10மணிக்கு அம்பாள் ஊஞ்சல் சேவை, மாலை 6மணிக்கு 1008மஹா திருவிளக்கு பூஜை வழிபாடு, இரவு 8.10மணிக்கு முத்தாரம்மன் திருத்தேரில் பவனியும், இரவு 8.30மணிக்கு ஸ்ரீபைரவருக்கு வடை மாலை அணிந்து சிறப்பு பூஜையும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை இந்த அமைப்பின் நிர்வாகி கள் செய்து வருகின்றன.

    • குலசேகரன்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் அய்யப்ப பக்தர்கள் குழுவின் முதல் நாள் இரவு கன்னி பூஜை நடந்தது.
    • வழிபாட்டின் 3-ம் நாளில் இருமுடி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    உடன்குடி:

    உடன்குடியூனியனுக்கு உட்பட்ட குலசேகரன்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் அய்யப்ப பக்தர்கள் குழுவின் 36- வது ஆண்டை முன்னிட்டு முத்தாரம்மன் கோவில் கலையரங்கத்தில் முதல் நாள் இரவு கன்னி பூஜை நடந்தது. 2-ம்நாள் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுபுற பகுதியில் இருந்து ஏராளமான அய்யப்ப பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 3-ம் நாள் இருமுடி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், மனோகரன், சாத்தாக்குட்டி, சுயம்புராஜ், முருகன் மற்றும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
    • திறப்பு விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணபிரியா தலைமை தாங்கினார்.

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட குலசேகரன் பட்டினம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

    இதன் திறப்பு விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணபிரியா தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் பிரம்ம சக்தி, மாவட்ட கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், குலசேகரன்பட்டினம் ஊராட்சி துணைத் தலைவர் கணேசன், உடன்குடி யூனியன் கவுன்சிலர் முருகேஸ்வரி ராஜதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடன்குடி யூனியன் ஆணையாளர் ஜான்சிராணி அனைவரையும் வரவேற்றார். கூடுதல் பி.டி.ஒ.பழனிச்சாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.

    இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வளர்மதி, மாநில மாணவரணி முன்னாள் துணை அமைப்பாளர் உமரி ஷங்கர், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் இளங்கோ, தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட கவுன்சிலர்கள் ஜெசி பொன்ராணி, செல்வக் குமார், பொதுக்குழு உறுப்பினர் செந்தில், உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப், ஊராட்சி மன்றவார்டு உறுப்பினர்கள் ராமலிங்கம் என்ற துரை, இசக்கி, முத்துசாமி, மிராஉம்மாள், தனலெட்சுமி, செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ரசூல் தின் நன்றி கூறினார்.

    • வெளிநாடுகளின் எல்லைகளில் ராக்கெட் பயண தாக்கம் இருக்கக்கூடாது என்று சர்வதேச சட்டங்கள் கூறுகின்றன.
    • ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரன்பட்டினத்தில் அதிக எடையுள்ள விண்கலத்தை விண்வெளிக்கு செலுத்த முடியும்.

    ஸ்ரீஹரிகோட்டாவை விட பூமத்திய ரேகைக்கு சற்று அருகில் குலசேகரன்பட்டினம் உள்ளது. எனவே கணிசமான எரிபொருளை சேமிக்க முடியும் என்பதால் ராக்கெட் ஏவுவதற்கான செலவு மிச்சமாகும். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தும்போது தென்கிழக்கு திசையை நோக்கி சென்று இலங்கை வரை இதனுடைய தாக்கம் ஏற்படும்.

    வெளிநாடுகளின் எல்லைகளில் ராக்கெட் பயண தாக்கம் இருக்கக்கூடாது என்று சர்வதேச சட்டங்கள் கூறுகின்றன. இந்தவகையில் ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் இந்த பிரச்சினைகள் இல்லை. குலசேகரன்பட்டினத்தில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள் தெற்கு திசையை நோக்கி சில கட்டுப்பாடுகளோடு விண்வெளியில் செலுத்த முடியும்.

    தற்போது ராக்கெட்டுக்கு தேவைப்படும் திரவ எரிபொருள், இங்கிருந்து மிக அருகில் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள திரவ எரிபொருள் மையத்தில் இருந்து 1,497 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விசாகப்பட்டினத்திற்கு கொண்டு சென்று ஸ்ரீஹரிகோட்டாவுக்கு மாற்றப்படுகிறது.

    குலசேகரன்பட்டினத்தில் ஏவுதளம் அமையும்போது, 1000-க்கும் மேற்பட்ட கிலோ மீட்டர் தொலைவுக்கு எரிபொருள் மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களை மகேந்திரிகிரியில் இருந்த நேரடியாக கொண்டு செல்ல முடியும் என்பதால் பெரும் செலவு மிச்சமாகும். இதுதவிர ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரன்பட்டினத்தில் அதிக எடையுள்ள விண்கலத்தை விண்வெளிக்கு செலுத்த முடியும்.

    • திருச்செந்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மாதவன்குறிச்சி, சாத்தான்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட படுக்கப்பத்து, பள்ளக்குறிச்சிஆகிய கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
    • ஸ்ரீஹரிகோட்டாவை விட பூமத்திய ரேகைக்கு சற்று அருகில் குலசேகரன்பட்டினம் உள்ளது.

    தூத்துக்குடி:

    விண்வெளி துறையில் இந்தியா வியத்தகு சாதனைகளை படைத்து வருகிறது.

    ராக்கெட்டுகளை விண்வெளியில் செலுத்தி ஆய்வு மேற்கொள்வதிலும், புதிய வசதிகளை பெறுவதிலும் இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இந்தியாவின் அனைத்து விண்வெளி திட்டங்களும் ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்தே செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    வரும் ஆண்டுகளில் இஸ்ரோ திட்டமிடும் ஏவுகணைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு மற்றொரு ஏவுதளம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

    அதன்படி தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினத்தில் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இதற்கு முக்கிய காரணம், குலசேகரன்பட்டினத்தில் இயற்கையாகவே விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்பும் சூழல் இருந்தது தான்.

    ராக்கெட் ஏவுவதற்கு ஏற்ற இடம் நிலநடுக்கோடு பகுதி ஆகும். இந்த பகுதியில் இருந்து ராக்கெட்டுகளை ஏவுவதால், ராக்கெட்டின் முழு ஆற்றலையும் பெற முடியும். இதனால் அதிக எடை கொண்ட செயற்கை கோள்களை விண்வெளிக்கு செலுத்த முடியும்.

    ஸ்ரீஹரிகோட்டா நிலநடுக்கோடு பகுதியில் இருந்து 13.72 டிகிரி வடக்கில் அமைந்துள்ளது. தொலையுணர்வு செயற்கை கோள்களை தெற்கு நோக்கியும், தொலை தொடர்பு செயற்கை கோள்கள் கிழக்கு நோக்கியும் ஏவப்படுகின்றன. இங்கிருந்து ஏவப்படும் அனைத்து ராக்கெட்டுகளும் 104 டிகிரி கோணத்தில் ஏவப்படுகிறது. ஆனால் 90 டிகிரி கோணத்தில் ஏவுவதே சிறந்தது.

    குலசேகரன்பட்டினத்தில் இந்த அம்சம் இயற்கையாகவே உள்ளது. இதனால் அங்கு 2,233 ஏக்கரில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க முடிவு செய்து அதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.

    காலி இடங்களுக்கு ஏக்கருக்கு அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலை வழங்கப்பட்டது. மேலும் குலசேகரன்பட்டினம் அருகே கடற்கரையை ஒட்டி அரைவட்ட வடிவில் நிலம் எடுக்கப்படுகிறது.

    திருச்செந்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மாதவன்குறிச்சி, சாத்தான்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட படுக்கப்பத்து, பள்ளக்குறிச்சிஆகிய கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதில் 141 ஏக்கர் புறம்போக்கு நிலம் தவிர, மீதம் உள்ள பட்டா நிலங்கள் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படடது.

    இதனை 8 பகுதியாக பிரித்து பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கென 8 தாசில்தார்கள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு தாசில்தார் தலைமையிலும் 13 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு இந்த பணிகளை கண்காணிப்பதற்காக ஒரு வருவாய் அலுவலர் மற்றும் துணை ஆட்சியர் அந்தஸ்திலான அதிகாரியும் நியமிக்கப்பட்டனர்.

    தற்போது நிலங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட்டு இஸ்ரோ வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.

    இதனையடுத்து ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ள இடத்தில் நில அளவீடு பணிகள் முடித்து தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்தது.

    கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் படுக்கப்பத்து பகுதி எள்ளுவிளை பகுதியில் இருந்து அமராபுரம், கூடல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் கம்பி வேலிகள் அமைப்பதற்காக கான்கிரீட் அமைத்து கற்கள் நடப்பட்டது. தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த தடுப்பு வேலி அமைக்கும் பணியும் முடிந்தது.

    அடுத்தகட்டபணிகளாக குடியிருப்புகளை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. இதில் கூடல்நகர் பகுதியில் உள்ள 37 குடியிருப்புகளுக்கு உடன்குடி ஒன்றியம் செட்டியா பத்து ஊராட்சி அய்யா நகர் பகுதியில் தனியார் நிலங்களை வாங்கி மக்களுக்கு கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    அதற்காக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ், திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன், ஊராட்சி துணைத் தலைவர் செல்வகுமார், ஊராட்சி செயலர் கணேசன் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து இரு இடங்களிலும் ஆய்வு செய்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரோ தலைவர் சோம்நாத் குலசேகரன்பட்டினத்தில் ஆய்வு செய்தார்.

    அப்போது, குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவது முழு திருப்தியாக உள்ளது. இங்கிருந்து சிறிய வகை ராக்கெட்டுகளை சிறப்பாக விண்ணில் செலுத்த முடியும். தெற்கு நோக்கிய ஏவுதலுக்கு சிறந்த இடமாக குலசேகரன்பட்டினம் உள்ளது.

    ஏவுதளம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் 100 சதவீதம் முடிவடைந்து உள்ளது. அரசிடம் இருந்து சில அனுமதியும், பாதுகாப்பு அனுமதியும் பெற வேண்டியது உள்ளது. நாங்கள் ஏவுதளம் அமைப்பதற்கு தயாராக உள்ளோம். விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்றார்.

    எனவே விரைவில் ஏவுதளம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு கட்டுமான பணிகள் தொடங்கினால் 2 ஆண்டுகளுக்குள் கட்டுமான பணிகள் முடிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், 2024 அல்லது 2025-க்குள் பணிகள் முடிந்து ஏவுதளம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் போது வேலைவாய்ப்பு பெரும், வணிக ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். குறிப்பாக இந்த ஏவுதளம் மூலம் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் அது தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்கின்றனர்.

    மேலும், தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், குலசேகரன் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமையும்போது தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஸ்ரீஹரிகோட்டாவை விட பூமத்திய ரேகைக்கு சற்று அருகில் குலசேகரன்பட்டினம் உள்ளது. எனவே கணிசமான எரிபொருளை சேமிக்க முடியும் என்பதால் ராக்கெட் ஏவுவதற்கான செலவு மிச்சமாகும். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தும்போது தென்கிழக்கு திசையை நோக்கி சென்று இலங்கை வரை இதனுடைய தாக்கம் ஏற்படும். வெளிநாடுகளின் எல்லைகளில் ராக்கெட் பயண தாக்கம் இருக்கக்கூடாது என்று சர்வதேச சட்டங்கள் கூறுகின்றன. இந்தவகையில் ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் இந்த பிரச்சினைகள் இல்லை. குலசேகரன்பட்டினத்தில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள் தெற்கு திசையை நோக்கி சில கட்டுப்பாடுகளோடு விண்வெளியில் செலுத்த முடியும்.

    தற்போது ராக்கெட்டுக்கு தேவைப்படும் திரவ எரிபொருள், இங்கிருந்து மிக அருகில் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள திரவ எரிபொருள் மையத்தில் இருந்து 1,497 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விசாகப்பட்டினத்திற்கு கொண்டு சென்று ஸ்ரீஹரிகோட்டாவுக்கு மாற்றப்படுகிறது. குலசேகரன்பட்டினத்தில் ஏவுதளம் அமையும்போது, 1000-க்கும் மேற்பட்ட கிலோ மீட்டர் தொலைவுக்கு எரிபொருள் மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களை மகேந்திரிகிரியில் இருந்த நேரடியாக கொண்டு செல்ல முடியும் என்பதால் பெரும் செலவு மிச்சமாகும். இதுதவிர ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரன்பட்டினத்தில் அதிக எடையுள்ள விண்கலத்தை விண்வெளிக்கு செலுத்த முடியும்.

    பொதுவாக ராக்கெட் ஏவுதளம் அமையும் இடமானது காற்றின் வேகம், மணிக்கு 30 கிலோ மீட்டருக்கு குறைவாகவும், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகாத பகுதியாகவும், புயல், மின்னல் மற்றும் மழையின் தாக்கம் குறைவாக உள்ள பகுதிகளாகவும் இருக்க வேண்டும்.

    நிலையான கால சூழ்நிலை, நல்ல வெளிச்சம், குறைந்த பனி மற்றும் மேகமூட்டம் உள்ள பகுதியாக இருக்க வேண்டும். அந்த வகையில் குலசேகரன்பட்டினம் பகுதி ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு சிறந்த இடமாக கண்டறியப்பட்டுள்ளது.

    • குலசை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நள்ளிரவில் விமர்சையாக நடந்தது.
    • பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுகின்றனர்.

    கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு கட்டி, நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராகச் சென்று காணிக்கை வசூலித்தனர்.

    பெரும்பாலான பக்தர்கள் காளி, சிவன், பார்வதி, ராமர், லட்சுமணன், அனுமார், பிரம்மன், விஷ்ணு, கிருஷ்ணர் போன்ற சுவாமி வேடங்களையும், அரசன், அரசி, போலீஸ்காரர், குறவன், குறத்தி, கரடி, அரக்கன் போன்ற பல்வேறு வேடங்களையும் அணிந்து இருந்தனர். இதனால் தென் மாவட்டங்களில் காணும் இடமெல்லாம் வேடம் அணிந்த பக்தர்களாகவே காட்சி அளிப்பதால் தசரா திருவிழா களைகட்டியது.

    விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். தினமும் காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மாலையில் சமய சொற்பொழிவு, பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இந்நிலையில், பத்தாம் நாளான இன்று (புதன்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு குலசை தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் விமர்சையாக நடைபெற்றது.

    நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி மகிஷா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கோவிலுக்கு பக்தர்கள் மற்றும் தசரா குழுவினர் எளிதில் வந்து செல்லும் வகையில் தனிப்பாதைகள் அமைக்கப்பட்டன. விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

    2 ஆண்டுகளுக்கு பின் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அன்னை முத்தாரம்மன் ரிஷபம் வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் பவனி வந்துபக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
    • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்தசரா பெருந்திருவிழாவில் 3 -ம் நாளான இன்று இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன் ரிஷபம் வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் பவனி வந்துபக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    முன்னதாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிசேகங்களும் மாலை 4 மணிக்கு சமய சொற்பொழிவு, இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும்.

    விரதம் இருந்து வரும் பக்தர்கள் அதிகாலையில் கடலில் நீராடி, காப்பு கட்டி விரதத்தை தொடர்ந்து வருகின்றனர். கோவில் திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடிஇணை ஆணையர் அன்புமணி, உதவிய ஆணையர் சங்கர், செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தசரா குழுவினர் வந்து கடலில் புனித நீர் எடுத்து கோவில் வளாகத்திற்கு வந்து சுவாமி தரிசனம் செய்வதும் நடந்து கொண்டிருக்கிறது.

    தூத்துக்குடி மாவட்ட மருத்துவ துறை, போலீஸ் துறை, மின்சார துறை போன்ற பல்வேறு அரசு துறை அதிகாரிகள் குலசேகரன்பட்டினம் நகரம் முழுவதும் வலம் வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    துப்புரவு பணிகள் தீவிரம்

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவையொட்டி சுமார் 15 நாட்கள் உடன்குடி மற்றும் குலசேகரன் பட்டினம் பகுதியில் வேடமணிந்து பக்தர்கள் வீதி வீதியாக நடமாடுவார்கள். பல இடங்களில் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் ஆங்காங்கே அமர்ந்திருந்து உணவு தயாரித்து சாப்பிடுவார்கள். அதனால் குலசேகரன்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சொர்ன பிரியா, துணைத்தலைவர் கணேசன் ஆகியோர் மேற்பார்வையில் துப்புரவு பணியாளர்கள் குலசேகரன்பட்டினம் நகர் முழுவதும் இரவு பகலாக துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அதுபோல உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சியில் தலைவர் ஹூமைராஅஸ்ஸாப் கல்லாசி, துணைத் தலைவர் மால் ராஜேஷ், செயல் அலுவலர் பாபு ஆகியோர் மேற்பார்வையில் இரவு பகலாக துப்புரவு பணி தொடர்ந்து நடந்து வருகிறது.கிருமி நாசினிகள் தெளிப்பதும், குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துவதும், கழிவு நீரை தேங்க விடாமல் தடுப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றது.

    ×