என் மலர்
நீங்கள் தேடியது "முக அழகிரி"
- பறக்கும் படையினர் சோதனை செய்தபோது தாசில்தார் காளிமுத்துவை தாக்கியதாக மு.க.அழகிரி உள்ளிட்ட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- மு.க.அழகிரியுடன் முன்னாள் மண்டல தலைவர் ஆர்.எம்.பி. சின்னான், எம்.எல்ராஜ், கோபிநாதன், உதயகுமார், முபாரக் மந்திரி மற்றும் பலர் உடன் வந்தனர்.
மதுரை:
கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது மதுரை மேலூரில் உள்ள வல்லடியார் கோவிலில் இருந்து முன்னாள் மத்திய மந்திரி மு.க. அழகிரி பிரசாரத்தை தொடங்கினார்.
அப்போது பறக்கும் படையினர் சோதனை செய்தபோது தாசில்தார் காளிமுத்துவை தாக்கியதாக மு.க.அழகிரி உள்ளிட்ட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு மதுரை மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்காக இன்று மு.க.அழகிரி, முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன், ரகுபதி, திரு ஞானம், ஒத்தப்பட்டி செந்தில், பொன்னம்பலம், தமிழரசன், நீதி தேவன், சேகர், மயில்வாகனன், ராகவன், ராமலிங்கம், சோலை நாகராஜ், வெள்ளையன், பாலகிருஷ்ணன், அய்யனார், கருப்பணன், பாலு, போஸ் உள்பட 20 பேர் ஆஜரானார்கள்.
இதில் திருஞானம் இறந்து விட்டதால் மற்ற அனைவரும் நீதிபதி நீலா பானு முன்பு ஆஜரானார்கள். இவர்கள் மீண்டும் வருகிற ஜனவரி 6-ந் தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
பின்னர் வெளியே வந்த மு.க.அழகிரியிடம் நிருபர்கள் பேட்டி கேட்க முயன்றபோது கருத்து சொல்ல மறுத்து விட்டார். இருந்தபோதிலும் நீதிமன்ற செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது என்று மட்டும் தெரிவித்துவிட்டு சென்றார்.
மு.க.அழகிரியுடன் முன்னாள் மண்டல தலைவர் ஆர்.எம்.பி. சின்னான், எம்.எல்ராஜ், கோபிநாதன், உதயகுமார், முபாரக் மந்திரி மற்றும் பலர் உடன் வந்தனர்.
- மு.க.அழகிரிக்கு உதயநிதி ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
- அமைச்சரான பிறகு முதல் முறையாக மு.க. அழகிரியை சந்தித்துள்ளார்
மதுரை:
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டை தொடங்கி வைப்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மதுரை வந்து சேர்ந்தார்.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பெரியப்பா மு.க.அழகிரியை மதுரையில் உள்ள வீட்டில் சந்தித்தார். மு.க.அழகிரி தனது வீட்டு வாசலில் காத்திருந்து உதயநிதியை வரவேற்று அழைத்துச் சென்றார். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். இந்த சந்திப்பின்போது மு.க.அழகிரிக்கு உதயநிதி ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். அமைச்சரான பிறகு முதல் முறையாக மு.க. அழகிரியை உதயநிதி ஸ்டாலின் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
- மு.க.அழகிரி வீட்டிற்கு உதயநிதி ஸ்டாலின் சென்றது அழகிரியின் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்தபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
மதுரை:
தி.மு.க.வின் தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்த முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி 2014-ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் அரசியலில் இருந்து விலகியிருந்தார்.
இந்தநிலையில் கடந்த மாதம் மதுரை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மு.க.அழகிரியின் வீட்டிற்கு சென்றார். அவரை மு.க.அழகிரியும், அவரது மனைவி காந்தி அழகிரியும் உச்சி முகர்ந்து வரவேற்றனர்.
இந்த சந்திப்பு குறித்து கேட்டதற்கு தனது பெரியப்பா வீட்டிற்கு வந்திருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். அதேபோல் தம்பி முதலமைச்சராகவும், தம்பி மகன் அமைச்சராகவும் இருப்பது பெருமையாக இருப்பதாக மு.க.அழகிரி தெரிவித்திருந்தார்.
மு.க.அழகிரி வீட்டிற்கு உதயநிதி ஸ்டாலின் சென்றது அழகிரியின் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தும் என அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
உதயநிதி ஸ்டாலினை போன்றே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மதுரை வரும்போது மு.க.அழகிரியை சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்பு தி.மு.க.வினர் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் கடந்த 5 மற்றும் 6-ந்தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டார்.
அப்போது அவர் மு.க.அழகிரியின் வீட்டிற்கு சென்று அவரை சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக மு.க.அழகிரி வீடு உள்ள பகுதியில் ரோடு பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மு.க.அழகிரியின் வீட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லவில்லை.
மதுரையில் 2 நாட்கள் ஆய்வு மேற்கொண்டிருந்த அவர், நேற்று மாலை நாகர்கோவிலுக்கு புறப்பட தயாரானார். அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்தபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது அவர் மு.க.அழகிரியின் நலம் குறித்து விசாரித்துள்ளார். மு.க.அழகிரியும், மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார். அவர்கள் இருவரும் 5 நிமிடங்கள் பேசியதாக கூறப்படுகிறது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் மு.க.அழகிரியின் வீட்டிற்கு நேரில் சென்று வந்த நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரியுடன் போனில் பேசி நலம் விசாரித்திருப்பது மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் கோபாலபுரம் வீட்டில் வசித்து வருகிறார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி இருவரும் கோபாலபுரம் வீட்டில் சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
சென்னை:
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் (வயது 90) கோபாலபுரம் வீட்டில் வசித்து வருகிறார்.
வயது முதிர்வு காரணமாக வீட்டிலேயே இருக்கும் அவரை அவ்வப்போது அவரது மகன்களான மு.க.அழகிரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகியோர் தனித்தனியாக நேரம் கிடைக்கும்போது வந்து பார்த்து செல்வது வழக்கம்.
இந்தநிலையில் இன்று தயாளு அம்மாளுக்கு 90-வது பிறந்தநாள் என்பதால் கோபாலபுரம் வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடினார்கள்.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது அண்ணன் மு.க.அழகிரி, தம்பி மு.க. தமிழரசு, செல்வி, கனிமொழி, தயாநிதிமாறன், அமிர்தம் ஆகியோர் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
இவர்களுடன் அமைச்சர் உதயநிதி, நடிகர் அருள்நிதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி இருவரும் கோபாலபுரம் வீட்டில் சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
- மதுரையில் நடைபெற்று வரும் குற்ற வழக்கில் அரசு தரப்புக்கோ அல்லது குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கும் மனுதாரருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
- விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரும் மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல.
புதுடெல்லி:
மதுரையை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் பாஸ்கரன் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், 'கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி தரப்பினர் தாக்கியதாக மேலூர் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மு.க.அழகிரி உள்ளிட்ட 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் 2020-ம் ஆண்டு மதுரை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி இந்த வழக்கை முடித்து வைக்க முயற்சி செய்கின்றனர்.
எனவே இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள், 'மதுரையில் நடைபெற்று வரும் குற்ற வழக்கில் அரசு தரப்புக்கோ அல்லது குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கும் மனுதாரருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரும் இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல. சாகசமிக்கதாகவும் தோன்றுகிறது.
இதன்படி இந்த மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மனுவை தள்ளுபடி செய்கிறோம்' என்று உத்தரவிட்டனர்.
- முன்னாள் அமைச்சர் பொன்முடி நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
- மு.க.அழகிரி, மு.க.தமிழரசு ஆகியோர் பொன்முடியை இன்று சந்தித்து பேசினர்.
சென்னை:
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், பொன்முடியுடன் மு.க.அழகிரி சந்தித்து பேசினார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடியின் இல்லத்தில் மு.க.அழகிரி, மு.க.தமிழரசு ஆகியோர் பொன்முடியை சந்தித்து பேசிவிட்டு புறப்பட்டு சென்றனர்.
- வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோவிலுக்குள், ஓட்டுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் அளிக்கப்பட்டது.
- மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர்.
மதுரை:
கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோவிலுக்குள், ஓட்டுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர். இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.கஅழகிரி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அழகிரியுடன் இருந்தவர்கள் தன்னை அடித்து, உதைத்ததாக தாசில்தார் காளிமுத்து கீழவளவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதனையடுத்து மு.க.அழகிரி, அப்போதைய மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று மதுரை மாவட்ட கோர்ட்டில் நீதிபதி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர்.
- கோவிலில் மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து என்பவரை அங்கிருந்தவர்கள் தாக்கியதாக புகார் கூறப்பட்டது.
- மு.க.அழகிரி உள்பட 17 பேர் கோர்ட்டில் நேரில் ஆஜரானார்கள்.
மதுரை:
கடந்த 2011-ம் ஆண்டில் தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. பல்வேறு கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோவிலில் முன்னாள் மத்திய மந்திரி மு.க. அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலில் மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து என்பவரை அங்கிருந்தவர்கள் தாக்கியதாக புகார் கூறப்பட்டது. அதன் பேரில் கீழவளவு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் மு.க.அழகிரி, மதுரை மாநகராட்சி முன்னாள் துணைமேயர் மன்னன், ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது தேர்தல் நடத்தை விதிகள் மீறல் உள்பட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவானது.
இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. பல்வேறு கட்ட விசாரணைகளுக்கும் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி உள்ளிட்டோர் ஆஜராகி வந்தனர். விசாரணை முடிவில் கடந்த வாரம் இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதி முத்துலட்சுமி பிறப்பித்தார். இதையடுத்து இன்று மு.க.அழகிரி உள்பட 17 பேர் கோர்ட்டில் நேரில் ஆஜரானார்கள். அப்போது மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் மீதமுள்ள மற்றொரு திருஞானம், கருப்பணன், சோலை, ராமலிங்கம் ஆகிய 4 பேரும் இறந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் மு.க.அழகிரி உள்ளிட்டோர் விடுதலையானதால் தி.மு.க.வினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
- துரை தயாநிதிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
- மேல் சிகிச்சைக்காக துரை தயாநிதி வேலூரில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வேலூர்:
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி. இவர் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தார். இவரது மகன் துரை தயாநிதி. இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து துரை தயாநிதி சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக துரை தயாநிதியை வேலூரில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் இன்று சேர்த்தனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
- சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துரை தயாநிதியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2வது முறையாக நேரில் சென்று சந்தித்து, உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும், துரை தயாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
முதலமைச்சர் வருகையொட்டி வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- கடந்த மார்ச் மாதம் மேல் சிகிச்சைக்காக துரை தயாநிதியை வேலூரில் உள்ள சிஎம்சி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- துரை தயாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.
வேலூர்:
மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி. இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் மேல் சிகிச்சைக்காக துரை தயாநிதியை வேலூரில் உள்ள சிஎம்சி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு சிகிச்சை குறித்து கேட்டறிந்து சென்றனர்.
இந்த நிலையில் துரை தயாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. இதனால் அவர் இன்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த துரை தயாநிதி தனது காரில் ஏறி கிளம்பி சென்றார். அவருடன் மு.க.அழகிரியும் சென்றார்.
இதனால் சி.எம்.சி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
- கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மு.க.அழகிரி தனது தி.மு.க. எதிர்ப்பை கைவிட்டு மவுனம் காத்தார்.
- மன்னிப்பு கடிதம் தி.மு.க. முதன்மை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மூலம் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
மதுரை:
தி.மு.க. தென் மண்டல அமைப்பு செயலாளராகவும், மத்திய மந்திரியாகவும் இருந்து மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தி.மு.க.வினரின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர் மு.க.அழகிரி. கடந்த 2009 ஆம் ஆண்டு மதுரை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மு.க.அழகிரி அமோக வெற்றி பெற்று மத்திய கேபினட் மந்திரியானார். இதனால் தி.மு.க.வில் மு.க.அழகிரியின் ஆதிக்கம் மேலோங்க தொடங்கியது.
இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி உத்தரவின் பேரில் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மு.க.அழகிரியை தி.மு.க.வில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். மேலும் அவரது ஆதரவாளர்கள் 15 பேரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து மு.க.அழகிரி தி.மு.க.வுக்கு எதிராக பல்வேறு சமயங்களில் அரசியல் வியூகங்களை கையாண்டார். மு.க.ஸ்டாலினையும் பொது நிகழ்ச்சிகளில் விமர்சித்தார்.
கடந்த 2016 சட்டசபை தேர்தல் மற்றும் 2019 பாராளுமன்ற தேர்தல்களில் தி.மு.க.வுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்த மு.க.அழகிரி, தனது ஆதரவாளர்களை எதிரணிக்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபடுத்தினார். இது தி.மு.க. தலைமைக்கு மு.க.அழகிரி மீது மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மு.க.அழகிரி தனது தி.மு.க. எதிர்ப்பை கைவிட்டு மவுனம் காத்தார். பின்னர் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மு.க. அழகிரி, மு.க.ஸ்டாலினை பாராட்டி கருத்துக்களை தெரிவித்தார். மு.க. அழகிரியின் திடீர் மனமாற்றம் தி.மு.க.வினர் மத்தியில் பரவலாக பேசும் பொருளானது. மு.க.அழகிரியை தி.மு.க.வில் மீண்டும் கட்சி தலைமை சேர்த்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் பேசப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
இதற்கிடையே மு.க.அழ கிரி தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் நிலையில் அவரது ஆதரவாளர்கள் மீண்டும் தி.மு.க.வில் சேர்ந்து கட்சி பணி ஆற்ற விருப்பம் தெரிவித்தனர். இது தொடர்பாக மு.க.அழகிரி தனது கண்ணசைவை காட்டாத நிலையில் ஆதரவாளர்கள் 15 பேரில் 9 பேர் மட்டும் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு மன்னிப்பு கடிதம் எழுதி மதுரை நகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. மூலம் கட்சி தலைமைக்கு அனுப்பி உள்ளனர்.
மன்னிப்பு கடிதம் எழுதியவர்கள் முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன், முன்னாள் மண்டல தலைவர் கோபிநாதன், உதய குமார் எம்.எல்.ராஜ், முபாரக் மந்திரி, அன்பரசன், கொட்டாம்பட்டி ராஜேந்திரன், இசக்கிமுத்து ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களது மன்னிப்பு கடிதம் தி.மு.க. முதன்மை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மூலம் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் நிலையில் இரண்டு மாதங்கள் ஆகியும் கட்சி தலைமையிடம் இருந்து எவ்வித பதிலும் வராததால் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மன்னிப்பு கடிதம் எழுதியவர்களில் ஒருவர் கூறுகையில், அண்ணன் மு.க. அழகிரி தலைமையில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தி.மு.க.வை வளர்க்க அயராது பாடுபட்டோம். பல தேர்தல்களில் இரவு-பகல் பாராது உழைத்து தி.மு.க.வுக்கு வெற்றியை பெற்று தந்துள்ளோம். அந்த தகுதியின் அடிப்படையில் மீண்டும் கட்சியில் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். இதற்காகவே மன்னிப்பு கடிதத்தை தி.மு.க. தலைமைக்கு எழுதி அனுப்பினோம். ஆனாலும் இதுவரை மேலிடத்திலிருந்து எந்தவிதமான உத்தரவும் வரவில்லை என்று தெரிவித்தார்.
மு.க.அழகிரி ஆதரவாளர்களின் மன்னிப்பு கடிதம் கொடுக்காத சிலர் கூறும்போது, தி.மு.க.வில் சேர அண்ணன் அழகிரி இதுவரை யாருக்கும் அனுமதி தரவில்லை. ஆனால் சிலர் அவர்களாகவே தனிப்பட்ட முறையில் கட்சியில் சேர ஆர்வம் தெரிவித்து மன்னிப்பு கடிதம் கொடுத்து தங்களை இணைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் அவர்களது விருப்பத்தை கட்சி மேலிடம் ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை என்றார்.
எனவே மன்னிப்பு கடிதம் கொடுத்த மு.க.அழகிரி ஆதரவாளர்கள் தி.மு.க.வில் மீண்டும் சேர்க்கப்படுவார்களா? அல்லது தனித்து விடப்படுவார்களா? என்பது கட்சி மேலிடத்தின் கையில் தான் இருக்கிறது என்று மதுரை முக்கிய தி.மு.க. நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.