என் மலர்
நீங்கள் தேடியது "ஆந்திர பிரதேசம்"
- அமராவதியை வெறும் நகரமாக மட்டுமல்லாமல், நிறைவேறிய கனவாகவும் நான் பார்க்கிறேன்.
- மரபும் வளர்ச்சியும் இணைந்த ஒரு இடமாக அமராவதி உள்ளது.
பிரதமர் மோடி இன்று மாலை ஆந்திர பிரதேச மாநிலம் அமராவதி சென்றார். நின்று போன அமராவதி திட்டத்தை மீண்டும் தொடங்கி வைத்தார். மொத்தமாக 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சயில் பிரதமர் பேசியதாவது:-
* அமராவதியை வெறும் நகரமாக மட்டுமல்லாமல், நிறைவேறிய கனவாகவும் நான் பார்க்கிறேன்
* மரபும் வளர்ச்சியும் இணைந்த ஒரு இடமாக அமராவதி உள்ளது.
* ஆந்திராவில் இன்று தொடங்கப்பட்ட ரூ.60,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் விக்சித் பாரத்திற்கான அடித்தளம்
* அமராவதி வெறும் நகரம் அல்ல. எனர்ஜழி, ஆந்திராவை 'நவீன பிரதேசமாக' மாற்றும்.
* ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பெரிய அளவிலான திட்டங்களை விரைவாக செயல்படுத்தும் திறன் கொண்டவர்
* அமராவதி எதிர்காலத்தில் ஐடி, செயற்கை நுண்ணறிவு, பசுமை ஆற்றல், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் முன்னணி நகரமாக மாறும்.
* உள்கட்டமைப்பு மிக வேகமாக நவீனமயமாக்கப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
- வெடி விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- வெடி விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆந்திர பிரதசேம் மாநிலம், அனகபள்ளி மாவட்டத்தில் உள்ள கைலாசப்பட்டினத்தில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில், 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.
மேலும, வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்த பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
ஆந்திராவின் அனகாப்பள்ளி மாவட்டத்தில் நடந்த தொழிற்சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- சம்பவம் நடைபெற்ற தினம், பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு தேர்வு நடைபெற்று வந்தது.
- இந்த சம்பவம் குறித்து ராஜநகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தின் காக்கிநாடா மாவட்டத்தை அடுத்த ராஜநகரம் பகுதியில் உள்ள ஜில்லா பரிஷத் உயர்நிலை பள்ளியில் மாணவரை சக மாணவனே கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளியில் ஒன்பதம் வகுப்பு பயின்று வரும் உதய் சங்கர் என்ற மாணவர், சக மாணவரான பின்கெ ஸ்ரீஹரி சாய்நாத்-ஐ கத்தியால் குத்தினார். இருவருடன், உதய் சங்கரின் ஒன்றுவிட்ட சகோதரியும் அதே வகுப்பில் பயின்று வருகிறார். இந்த நிலையில், உதய் சங்கரின் சகோதரியை ஸ்ரீஹரி கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக உதய் சங்கர் இவ்வாறு செய்திருக்கிறார்.
சம்பவம் நடைபெற்ற தினம், பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு தேர்வு நடைபெற்று வந்தது. தேர்வின் இடையில் திடீரென எழுந்து நின்ற உதய் சங்கர், தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பின்கெ ஸ்ரீஹரி சாய்நாத்-ஐ கத்தியை கொண்டு கடுமையாக குத்தினார். கத்தியால் குத்தியதோடு அவரை, உதய் சங்கர் கடுமையாக திட்டித் தீர்த்தார்.
கத்தி குத்து வாங்கிய ஸ்ரீஹரியை பள்ளியின் தலைமை ஆசிரியர் அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவமனையில் ஸ்ரீஹரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ராஜநகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் உதய் சங்கரை காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர்.
- ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் சட்டப் பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியது.
- ஆந்திர சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை துவங்குகிறது.
விஜயதசமி முதல் ஆந்திர பிரதேச மாநிலத்தின் தலைநகராக விசாகப்பட்டினம் செயல்படும் என்று அம்மாநில சட்டமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் இன்று ஆந்திர பிரதேச சட்டமன்ற கூட்டம் கூடியது.
ஆந்திர பிரதேச மாநிலத்தின் மழைகால கூட்டத் தொடர் நாளை (செப்டம்பர் 21) துவங்க இருக்கும் நிலையில், இன்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில், புதிய தலைநகர் பற்றிய அறிவிப்பு வெளியானது. நவம்பர் 2-ம் தேதி துவங்கும் விஜயதசமி நாள் முதல் முதலமைச்சர் அலுவலகம் விசாகப்பட்டினத்திற்கு மாறுகிறது.
இதே போன்று மற்ற அமைச்சர்களும் விசாகப்பட்டினத்தில் இருந்து பணியாற்ற தயாராக வேண்டும். ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் தனியே பிரிந்ததில் இருந்து, ஆந்திரா மாநில தலைநகராக அமராவதி நகரம் செயல்பட்டு வருகிறது. இம்மாநிலத்தின் மிகப் பெரிய நகரம் விசாகப்பட்டினம் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆந்திர அணிக்காக விளையாட மாட்டேன் என்று ஹனுமா விஹாரி தெரிவித்தார்.
- சமூக வலைதளத்தில் தன் தரப்பு விளக்கத்தையும் பதிவிட்டிருந்தார்.
ரஞ்சி கோப்பையின் காலிறுதி போட்டியில் ஆந்திர பிரதேசம் அணி மத்திய பிரதேசம் அணியுடன் மோதி தோல்வியை தழுவி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இதைத் தொடர்ந்து ரஞ்சி கோப்பை தொடரில் இனி எப்போதும் ஆந்திர பிரதேசம் அணிக்காக விளையாட மாட்டேன் என்று அந்த அணியை சேர்ந்த ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார்.
அரசியல் காரணங்களுக்காகவே தான் அணியில் இருந்து விலகியதாக ஹனுமா விஹாரி தெரிவித்து இருந்தார். ஹனுமா விஹாரி குற்றச்சாட்டை முழுமையாக மறுத்த, ஆந்திரா அணியின் விக்கெட் கீப்பர், பேட்டர் கே.ன். ப்ருத்விராஜ், தனது சமூக வலைதளத்தில் தன் தரப்பு விளக்கத்தையும் பதிவிட்டிருந்தார்.

அதில், "நீங்கள் கமென்ட்களில் தேடிக்கொண்டிருக்கும் நபர் நான் தான். ஆனால் நீங்கள் கேள்வியுற்ற தகவல் முற்றிலும் பொய்யான ஒன்று. போட்டி மற்றும் ஒருவரின் சுய மரியாதையை விட பெரியது எதுவும் கிடையாது. தனிநபர் தாக்குதல் மற்றும் ஆபாச மொழியை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அணியில் உள்ள அனைவருக்கும், அன்று என்ன நடந்தது என நன்றாகவே தெரியும். இந்த அனுதாப விளையாட்டை எப்படி வேண்டுமானாலும் விளையாடி கொள்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஹனுமா விஹாரி வெளியிட்டுள்ள பதிவில், "ஒட்டுமொத்த அணிக்கும் தெரியும்" என்ற தலைப்பில் கடிதம் ஒன்றின் புகைப்படத்தை இணைத்துள்ளார்.
அந்த கடிதத்தில், "ரஞ்சி கோப்பையில் அணியை சேர்ந்த வீரர் நான் தவறான மொழியை பயன்படுத்தியதாகவும், அவரை மோசமாக நடத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் உண்மை என்னவென்றால், நான் பயன்படுத்திய வார்த்தைகள் நம் அணிக்குள் வழக்கமாக பயன்படுத்தும் வார்த்தை தான். அணியின் டிரெசிங் அறையில் இந்த வார்த்தைகள் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது."

"ஆனாலும், ஒருவர் இதனை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டுள்ளார். நாம் அனைவரும் ஒரே அணியை சேர்ந்தவர்கள், சமயங்களில் அணியில் உள்ள உதவியாளர் குழுவும் இது போன்ற சூழலை எதிர்கொண்ட சம்பவங்கள் உள்ளன. அந்த வகையில், விஹாரியே எங்களது அணியின் கேப்டனாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களுக்கு அவரிடம் எந்த பிரச்சினையும் இருந்ததில்லை. அவர் எப்போதும் எங்களிடம் இருக்கும் திறமையை சிறப்பாக வெளிக்கொண்டு வந்துள்ளார்."
"அவரது தலைமையில் நாங்கள் ஏழு முறைக்கும் அதிகாக தகுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறோம். இந்த ரஞ்சி தொடர், வீரர்களாக எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஆந்திரா ரஞ்சி வீரர்களாக எங்களுக்கு விஹாரி அணியில் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறோம்," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் அதில் அணி வீரர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
- இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்தல் முடிவுகள் ஜூன் 4 -ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியது.
அப்போது, இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால், அம்மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரே கட்டமாக 175 தொகுதிகள் கொண்ட ஆந்திரப் பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 13-ம் தேதி நடைபெறுகிறது.
ஒடிசா மாநிலத்தில் 4 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. மே 13-ம் தேதி 28 தொகுதிகளும், மே 20-ம் தேதி 35 தொகுதிகளுக்கும், மே 25-ம் தேதி 42 தொகுதிகளுக்கும், ஜூன் 1-ம் தேதி மீதமுள்ள 42 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் முடிவுகள் ஜூன் 4 -ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- பாராளுமன்ற தேர்தல் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
- பிரதமர் மோடி செய்த காரியம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் பிராஜகளம் பொதுக்கூட்டம் இன்று மாலை ஆந்திர பிரதேச மாநிலத்தில் நடைபெற்றது. ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் பால்நாட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் 2024 பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க., ஜன சேனா கட்சி மற்றும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த பொதுக் கூட்டத்தில் ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் உரையாற்றினார். அப்போது, பொதுக் கூட்டத்தை பார்க்க வந்த தொண்டர்களில் சிலர், அங்கிருந்த மின்கம்பத்தில் ஏறினர். இதை பார்த்ததும் பிரதமர் மோடி செய்த காரியம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் உரையின் போது தொண்டர்கள் மின்கம்பத்தில் ஏறுவதை பார்த்த பிரதமர் மோடி, உடனே குறுக்கிட்டு பவன் கல்யாணிடம் உரையை நிறுத்துமாறு கூறினார். தொண்டர்களிடம் பேசிய பிரதமர் மோடி, அவர்களை மின் கம்பத்தில் இருந்து கீழே இறங்க வலியுறுத்தினார்.
"அங்கு மின் வயர்கள் உள்ளன. அங்கு என்ன செய்கின்றீர்கள்? உங்களது உயிர் எங்களுக்கு விலைமதிப்பற்றது. தயவு செய்து கீழே இறங்குங்கள். ஊடகத்தினர் உங்களது புகைப்படங்களை எடுத்துள்ளனர். இப்போது கீழே வாருங்கள். அங்கிருக்கும் காவலர்கள், தயவு செய்து மக்களை பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால், எங்களுக்கு அது மிகுந்த வலியை ஏற்படுத்திவிடும்," என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தனது இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார். பிறகு, ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் தனது உரையை முடித்தார்.
- ஆந்திர பிரதேச மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
- ஒட்டுமொத்த ஆந்திர பிரதேச மாநிலமும் பிரதமர் மோடிக்கு ஆதரவு.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் பாராளுமன்ற தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பல கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளன. அந்த வகையில், ஆந்திர பிரதேச மாநிலத்தில் மே 13 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதே நாளில் அம்மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற இருக்கிறது.
ஆந்திராவில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பரப்புரைக்காக ஆந்திர பிரதேச மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சுற்று பயணத்தின் அங்கமாக அம்மாநிலத்தின் தர்மவரம் பகுதியில் அமித் ஷா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த பகுதியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியுள்ளனர். இதுவே ஒட்டுமொத்த ஆந்திர பிரதேச மாநிலமும் பிரதமர் மோடி மற்றும் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக இருப்பதை எடுத்துரைக்கிறது."
"இங்கு தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றியை பெறப்போகிறது. ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் இந்தியா கூட்டணி ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியாது..," என்று தெரிவித்தார்.
- எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
- தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு அடுத்த வாரம் பதவியேற்க உள்ளார்.
ஆந்திர பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்கரை அந்த பகுதியில் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. இந்த கடற்கரை சார்ந்த சுற்றுலா தலத்திற்கு, முன்னதாக இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் - அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட்டு இருந்தது.
எனினும், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, இந்த சுற்றுலா தலத்திற்கு ஒய்.எஸ்.ஆர். வியூ பாயிண்ட் என பெயர் மாற்றம் செய்தார். இவரது இந்த நடவடிக்கைக்கு அப்போதைய எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஜென் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்தது. இதனால் ஆந்திராவின் அடுத்த முதலமைச்சராக தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு அடுத்த வாரம் பதவியேற்க உள்ளார்.
இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர். வியூ பாயிண்ட் கடற்கரையின் பெயர் பலகையில் தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் அப்துல் கலாம் வியூ பாயிண்ட் என்ற பழைய பெயரை மீண்டும் ஸ்டிக்கரிங் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
- ஆந்திர சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.
- தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனைக் கூட்டம் விஜயவாடாவில் நடைபெற்றது.
அமராவதி:
சமீபத்தில் நடைபெற்ற ஆந்திர பிரதேச சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 164 இடங்களைக் கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனைக் கூட்டம் விஜயவாடாவில் இன்று நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, கூட்டணி கட்சிகளிடன் ஆதரவு கடிதங்களுடன் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யான் ஆளுநர் மாளிகை விரைந்தனர். எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் அப்துல் நசீரிடம் வழங்கிய சந்திரபாபு நாயுடு ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இந்நிலையில், ஆந்திராவில் ஆட்சி அமைக்க வரும்படி சந்திரபாபு நாயுடுவுக்கு ஆளுநர் அப்துல் நசீர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, சந்திரபாபு நாயுடு நாளை ஆந்திர பிரதேச முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
- துர்க்கையாவிடம் போதிய பண வசதி இல்லை.
- டெப்போவில் இருந்து அரசு பஸ் காணாமல் போயுள்ளது என அதிகாரிகளிடம் அதன் ஓட்டுநர் புகாராக தெரிவித்து இருக்கிறார்.
ஆந்திர பிரதேசத்தில் ஆத்மகுரு மண்டலத்திற்கு உட்பட்ட வேங்கடாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் துர்க்கையா. வாகன ஓட்டுநராக இருந்து வருகிறார்.
இவர், நந்தியால் மாவட்டத்தில் முச்சுமர்ரி பகுதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் அவரது மனைவி சொந்த ஊருக்கு சென்றிருந்தார். அவரை காண ஊருக்கு செல்லலாம் என துர்க்கையா முடிவு செய்துள்ளார்.
ஆனால் அவரிடம், போதிய பண வசதி இல்லை. அப்போது அதிர்ஷ்டம் வேறு வடிவில் வந்துள்ளது. ஆத்மகுரு பஸ் நிலையத்தில் யாரும் கேட்பாரின்றி அரசு பஸ் ஒன்று தனியாக நின்றிருக்கிறது. அதன் சாவிகளும் பஸ்சிலேயே இருந்துள்ளன.
இதனைப் பார்த்த ஓட்டுநரான துர்க்கையாவுக்கு உடனடியாக யோசனை ஒன்று வந்துள்ளது. ஊரிலுள்ள மனைவியை காண அந்த பஸ்சை ஓட்டி செல்வது என முடிவு செய்திருக்கிறார். அரசு பஸ்சில் ஏறி அதனை இயக்கி, மாமியார் வீட்டுக்கு சென்றார்.
ஆனால், சந்தேகத்திற்குரிய வகையில், ஆட்கள் யாருமில்லாமல் தனியாக சென்ற அரசு பஸ்சை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். விசாரணையில், அரசு பஸ்சை அங்கீகாரமின்றி பயன்படுத்தியதற்காக, துர்க்கையாவை போலீசார் கைது செய்தனர்.
எனினும், அவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என அவருடைய குடும்பத்தினரும், உறவினர்களும் கூறுகின்றனர். டெப்போவில் இருந்து அரசு பஸ் காணாமல் போயுள்ளது என அதிகாரிகளிடம் அதன் ஓட்டுநர் புகாராக தெரிவித்து இருக்கிறார்.
இதன் அடிப்படையிலும், சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டும் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து துர்க்கையாவிடம் இருந்த அரசு பஸ்சை போலீசார் பறிமுதல் செய்தனர். அரசு பஸ் பின்னர், ஆத்மகுரு டெப்போ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
துர்க்கையா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதற்காக அவருக்கு எதிராக போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.
- கிறிஸ்தவ அமைப்பு விடுதியில் மாணவர்களுக்கு பிரியாணி, சமோசா வழங்கப்பட்டது.
- விடுதியில் சாப்பிட்ட 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
ஆந்திராவில் கெட்டுப்போன பிரியாணி மற்றும் சமோசா சாப்பிட்ட 3 பழங்குடியின மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அனகாபள்ளி மாவட்டம் கொடவரோட்லா மண்டல் பகுதியில் உள்ள கிறிஸ்தவ அமைப்பின் விடுதிகளை சேர்ந்த மாணவர்கள் அங்கு வழங்கப்பட்ட சமோசா மற்றும் பிரியாணியை சாப்பிட்டனர்.
விடுதிகளில் சமோசா, பிரியாணி சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 30-க்கு் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், இரண்டு மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக உத்தர பிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி இறந்து கிடந்ததால், மாணவர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியது. இந்த வரிசையில், ஆந்திர மாநிலத்திலும் உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.