என் மலர்
நீங்கள் தேடியது "சிக்கிம்"
- தலாய் லாமாவை அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் வரவேற்றார்.
- பாரம்பரிய புத்த சடங்குடகளுடன் பெரும் வரவேற்பு அளித்தனர்.
திபெத்திய ஆன்மிகத் தலைவர் 14வது தலாய் லாமா, டென்சின் கியாட்சோ, 13 வருட இடைவெளிக்குப் பிறகு மூன்று நாள் பயணமாக இன்று காலை சிக்கிம் வந்தார்.
இவர், மூன்று நாள் பயணத்தில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் தங்கியிருக்கும் போது "போதிசத்துவர்களின் முப்பத்தி ஏழு நடைமுறைகள்" பற்றிய போதனைகளை வழங்குகிறார்.
கிழக்கு சிக்கிமில் உள்ள லிபிங் ராணுவ ஹெலிபேடில் இன்று காலை 10.30 மணியளவில் தரையிறங்கிய தலாய் லாமாவை அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் வரவேற்றார்.
அவருக்கு மாநிலத்தின் பல்வேறு மடங்களின் துறவிகள் 'ஷெர்பாங்' எனப்படும் நடனம் மற்றும் பிரார்த்தனையின் பாரம்பரிய புத்த சடங்குடகளுடன் பெரும் வரவேற்பு அளித்தனர்.
இதைதொடர்ந்து, தலாய் லாமாவிடம் ஆசி பெற பல்ஜோர் ஸ்டேடியத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சுமார் 40,000 பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று காங்டாக் எஸ்பி டென்சிங் லோடன் லெப்சா தெரிவித்தார்.
தலாய் லாமா கடந்த 2010ஆம் ஆண்டு சிக்கிம் சென்றிருந்தார். அதன் பிறகு, கடந்த அக்டோபரில் சிக்கிம் செல்ல திட்டமிடப்பட்டது. ஆனால், பெரும் வெள்ளம் காரணமாக தலாய் லாமாவின் சிக்கிம் பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது.
- ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என நேற்று தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார் அறிவித்தார்.
அதன்படி, வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் தேர்தல் ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது.
மேலும், மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால், அம்மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது.
மக்களவை, சட்டமன்ற மற்றும் இடைத்தேர்லுக்கு ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அருணாச்சல பிரதேசம், சிக்கிமில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சட்டப்பேரவைக்கு ஜூன் 4ம் தேதிக்கு பதிலாக ஜூன் 2ம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தலுக்கு ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
- சிக்கிம் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுவதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது
- சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார்
32 உறுப்பினர்களைக் கொண்ட சிக்கிம் சட்டசபைக்கும், மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு மக்களவைத் தொகுதிக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
2019 பாராளுமன்ற தேர்தலில் மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு மக்களவைத் தொகுதியில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா வெற்றி பெற்றது. சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 32 இடங்களில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 17 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது .
இந்நிலையில், சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார்.
அதில், சிக்கிம் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெண்களால் நடத்தப்படும் 'அம்மா உணவகம்' என்ற மலிவு விலை உணவகம் திறக்கப்படும் என அறிவித்துள்ளது.
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-
* சிக்கிம் மாநிலத்தில் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் தொடங்கப்படும்
* அடுத்த 5 ஆண்டுகளில் சிக்கிமில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு 25,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
* பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ், விவசாயிகள் ஆண்டுக்கு வழங்கப்படும் 6,000 ரூபாயை 9,000 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
- அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
- மொத்தம் உள்ள 60 இல் 10 தொகுதிகளில் ஆளும் கட்சியான பாஜக போட்டியின்றி வெற்றிபெற்றுள்ளது.
இந்தியாவில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு 6 கட்டங்களில் முறையே ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25 ஆகிய தேதிகளில் 6 கட்ட வாக்குப்பதிவு நடந்த நிலையில், மீதமுள்ள 57 தொகுதிகளுக்கு நேற்று (ஜூன் 1) கடைசி கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதற்கிடையே ஆந்திரா, ஒரிஷா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடத்தப்பட்டது,
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் இன்று (ஜூன் 2) வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
வழக்கமாக 8 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு காலை 6 மணிக்கே தொடங்கியது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 60 மக்களவைத் தொகுதிகளுக்கும், சிக்கிமில் உள்ள 32 மக்களவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதற்கட்ட தேர்தலின்போது சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற்று முடிந்தது.
அருணாச்சல பிரதேசத்தில் கடந்த 2019 தேர்தலில் 82.17 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் இந்த தேர்தலில் 82.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இங்கு மொத்தம் உள்ள 60 இல் 10 தொகுதிகளில் ஆளும் கட்சியான பாஜக போட்டியின்றி வெற்றிபெற்றுள்ளது.
அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பேமா கந்து, துணை முதலமைச்சர் சவ்னா மெய்ன் ஆகியோர் போட்டியின்றி வெற்றிபெற்றுள்ளனர். கடந்த 2019 தேர்தலில் 46 தொகுதிகளில் வெற்றி பபெற்று பாஜக ஆட்சியமைத்திருந்தது . மற்றொரு வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி ஆட்சியில் உள்ளது. முதலமைச்சராக பிரேம் சிங் தமன் ஆட்சியில் உள்ளார். சிக்கிமில் இந்த தேர்தலில் 79.88 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
- சிக்கிமில் இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையின்படி ஆளும் மாநிலக் கட்சியான சிக்கிம் க்ரந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்) கட்சி மொத்தம் உள்ள 32 இல் 29 சீட்களில் முன்னிலையில் உள்ளது.
இந்தியாவில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இதனோடு ஆந்திரா, ஒரிசா, அருணாச்சல்ப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 2) தொடங்கி நடைபெற்று வருகிறது.
வழக்கமாக 8 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு காலை 6 மணிக்கே தொடங்கியது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 60 மக்களவைத் தொகுதிகளுக்கும், சிக்கிமில் உள்ள 32 மக்களவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதற்கட்ட தேர்தலின்போது சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. அருணாச்சலில் உள்ள 60 இல் 50 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
ஏற்கனவே 60 இல் 10 தொகுதிகளில் ஆளும் கட்சியான பாஜக போட்டியின்றி வெற்றிபெற்ற நிலையில் தற்போதைய நிலவரப்படி பாஜக 42 சீட்கள் முன்னிலையில் உள்ளது. மாநில கட்சிகளான ஜே.டி (யு) 7 இடங்களிலும், என்.என்.பி 5 இடங்களிலும், பி.பி.ஏ ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளது உள்ளது. காங்கிரஸ் இதுவரை 5 இடங்களில் வென்றுள்ளது.
சுயேச்சை வேட்பாளர்கள் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி அருணாச்சல பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை நடைபெரும் மற்றொரு வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையின்படி ஆளும் மாநிலக் கட்சியான சிக்கிம் க்ரந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்) கட்சி மொத்தம் உள்ள 32 இல் 29 சீட்களில் முன்னிலையில் உள்ளது. இதன்மூலம் சிக்கிமில் மீண்டும் எஸ்.கே.எம் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
- 32 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று தொடங்கியது.
- சிக்கிம் எதிர்க்கட்சிகள் இடையே பரபரப்பு காணப்படுகிறது.
காங்டாக்:
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் மாநிலத்தில் செல்வாக்குமிக்க மாநில கட்சியான சிக்கிம் கிராந்தி காரி மோர்ச்சா கட்சியின் ஆட்சி நடந்து வந்தது.
முதல்-மந்திரியாக பிரேம்சிங் தமாங் ஆட்சி நடத்தி வந்தார். அவரது பதவி காலம் இந்த மாதத்துடன் முடிவதால் பாராளுமன்ற தேர்தலுடன் சிக்கிம் சட்டசபைக்கும் சேர்த்து தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
அதன்படி சிக்கிமில் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி 32 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. அந்த தேர்தலில் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவானது.
இந்த தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் பிற மாநில காட்சிகள் களத்தில் இருந்தாலும் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா மற்றும் எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளுக்கு இடையில் தான் கடும் போட்டி நிலவுகிறது.
சிக்கிமில் உள்ள 32 தொகுதிகளில் 146 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங், அவரது மனைவி கிருஷ்ண குமாரி ராய், முன்னாள் முதல்-மந்திரி பவன் குமார் சாம்லிங் மற்றும் முன்னாள் இந்திய கால்பந்து வீரர் பைச்சுங் பூட்டியா ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
இவர்களில் யார்-யார் வெற்றி பெறுவார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தேசிய கடசிகளானபாரதீய ஜனதாவுக்கும், காங்கிர சுக்கும் அங்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு செல்வாக்கு இல்லாததால் அந்த குட்டி மாநிலத்தை பெரிதாக யாரும் கண்டுகொள்ள வில்லை.
இந்தநிலையில் சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு தொடங்கியது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் உள்ள 6 இடங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
ஓட்டு எண்ணிக்கையில் தொடக்கத்தில் இருந்தே ஆளும் சிக்கிம் கிராந்தி காரி மோர்ச்சா கட்சி முன்னிலை பெற்றது. மொத்தம் உள்ள 32 தொகுதிகளில் 30 தொகுதிகளில் அந்த கட்சி வேட்பாளர்கள் முன்னிலை பெற்றது குறிப்பிடத்தக்கது.
முதல்-மந்திரி பிரேம்சிங் தமாங் முதல் சுற்று முடிவில் 6,443 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். அதே சமயத்தில் முன்னாள் முதல்-மந்திரி பவன்குமார் முதல் சுற்றில் பின்தங்கி இருந்தார்.
அதுபோல பிரபல முன்னாள் கால்பந்து வீரர் பைச்சுங் பூட்டியாவும் தனது பார்புங் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி இருந்தார். இதனால் சிக்கிம் எதிர்க்கட்சிகள் இடையே பரபரப்பு காணப்படுகிறது.
ஆளும் சிக்கிம் கிராந்தி காரி மோர்ச்சா மீண்டும் அமோக வெற்றியுடன் ஆட்சி அமைக்கிறது. அந்த கட்சி 90 சதவீத வெற்றியுடன் ஆட்சியை தக்க வைத்தது குறிப்பிடத்தக்கது. பிரேம் சிங் தமாங் மீண்டும் முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்கிறார்.
- சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்) கட்சி மொத்தம் உள்ள 32 இல் 26 இடங்களை வென்றுள்ளது.
- சிக்கிமில் மீண்டும் எஸ்.கே.எம் அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.
பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது.
அருணாசலபிரதேசத்தில் முதல்-மந்திரி பெமா காண்டு தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடந்தது. அங்குள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும், 2 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் 82 சதவீத வாக்குகள் பதிவானது.
சட்டசபை தேர்தலை பொறுத்த வரையில் பா.ஜனதா 60 தொகுதிகளிலும் போட்டியிட்ட நிலையில், காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே தனது வேட்பாளரை நிறுத்தியது. இது தவிர, தேசிய மக்கள் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட சில முக்கிய கட்சிகளும் களத்தில் உள்ளன.
அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிமில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.மாநிலத்தின் பல மாவட்டங்களில் உள்ள 24 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதலில் தபால் வாக்கு கள் எண்ணப்பட்டன. இதன் முடிவுகள் உடனுக்கு டன் வெளியிடப்பட்டன.
சிக்கிமில் ஆளும் மாநிலக் கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்) கட்சி மொத்தம் உள்ள 32 இல் 26 இடங்களை வென்றுள்ளது. மேலும் 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இதன்மூலம் சிக்கிமில் மீண்டும் எஸ்.கே.எம் அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. தற்போதைய முதலவர் பிரேம் சிங் தமாங் மீண்டும் முதலைவராகிறார். இதைத்தொடர்ந்து எஸ்.கே.எம் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபடாத தொடங்கியுள்ளனர். இதற்கிடையில் மற்றொரு மாநில கட்சியான சிக்கிம் ஜன்னநாயக முன்னணி கட்சி 1 இடத்தில வென்றுள்ளது. பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் 1 இடத்தில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- சிக்கிமில் கனமழை பெய்து வருவதால் பல முக்கிய இடங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
- சிக்கிமில் இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
சிக்கிம் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல முக்கிய இடங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்தை சரிசெய்து இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
அவ்வகையில், மழையால் துண்டிக்கப்பட்ட சிக்கிமின் காங்டாக்கின் டிக்சு-சங்க்லாங் சாலையில் 70 அடி நீளத்திற்கு பெய்லி பாலம் ஒன்றை ராணுவத்தினர் கட்டியுள்ளனர்.
ஜூன் 23 ஆம் தேதி பாலத்தில் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு 72 மணிநேரத்தில் இந்திய ராணுவத்தினர் பாலத்தை கட்டி முடித்துள்ளனர்.
- சிக்கிமின் சோராங் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
- நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித் தகவல் எதுவும் வெளியாகவில்லை.
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகி உள்ளது. சிக்கிமின் சோராங் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து வீடுகள் லேசாக அதிர்ந்ததால் மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித் தகவல் எதுவும் வெளியாகவில்லை.
- டீஸ்டா ஸ்டேஜ் 5 அணை மின் நிலையம் 510 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனுடையது.
- நிலச்சரிவு ஏற்பட்டதை அப்பகுதியில் உள்ள மக்கள் வீடியோ எடுத்துள்ளனர்.
சிக்கிம் மாநிலத்தில் உள்ள தேசிய நீர்மின் கழகத்தின் டீஸ்டா ஸ்டேஜ் 5 அணையின் நீர் மின் நிலையம் பயங்கர நிலச்சரிவில் சிக்கி சேதமடைந்தது .
510 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்த நீர்மின் நிலையத்தை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் அடிக்கடி சிறு சிறு நிலச்சரிவு ஏற்பட்டு வந்தது.
அதனால் நீர்மின் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதனால் இந்த பயங்கர நிலச்சரிவில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நிலச்சரிவு ஏற்பட்டதை அப்பகுதியில் உள்ள மக்கள் வீடியோ எடுத்துள்ளனர்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் மேகவெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் இந்த டீஸ்டா அணையின் சிலபகுதிகள் அடித்து செல்லப்பட்டதால், அணை செயலிழந்தது குறிப்பிடத்தக்கது.
- கஞ்சா செடியை வளர்த்த சிக்கிமை சேர்ந்த சாகர் - ஊர்மிளா தம்பதி கைது
- தான் வளர்த்த செடிகளின் புகைப்படத்தை ஊர்மிளா பேஸ்புக்கில் பதிவிட்டதால் போலீசில் சிக்கினார்
கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் கஞ்சா செடியை வளர்த்த சாகர் - ஊர்மிளா தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த சாகர் குருங் (37) மற்றும் அவரது மனைவி ஊர்மிளா குமாரி (38) ஆகியோர் பெங்களூரு நகரில் பாஸ்ட்புட் கடையை நடத்தி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஊர்மிளா குமாரி, தனது பேஸ்புக் பக்கத்தில் அடிக்கடி வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வந்துள்ளார். அவ்வகையில் தனது வீட்டின் பால்கனியில் உள்ள பூந்தொட்டிகளில் வளரும் விதவிதமான செடிகளின் வீடியோ மற்றும் படங்களை பேஸ்புக்கில் அவர் வெளியிட்டார்.
ஊர்மிளா பதிவிட்ட 17 பூந்தொட்டிகளில் 2 தொட்டிகளில் கஞ்சா பயிரிட்டிருந்தார். ஊர்மிளாவை பேஸ்புக்கில் பின்தொடர்பவர்கள் அப்புகைப்படத்தில் கஞ்சா செடி இருப்பதை கண்டறிந்து போலீசில் புகாரளித்துள்ளனர்.
இதனையடுத்து போலீசார் சாகர் மற்றும் ஊர்மிளாவை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 54 கிராம் எடையுள்ள கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், "அதிக பணம் சம்பாதிப்பதற்காக கஞ்சா பயிரிட்டோம் என்று தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் இந்த தம்பதியை போலீசார் ஜாமினில் விடுவித்தனர்.
- காணாமல் போன சுற்றுலாப் பயணிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- பீகாரில் இருந்து சுற்றுலா பயணி ஒருவர் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் விடுமுறை கொண்டாட சிக்கிம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிக்கிம் மாநிலத்தில் உள்ள ரிட் சூ பாலத்தின் விளிம்பில் நின்றுக் கொண்டு புகைப்படம் எடுக்க முயன்றபோது உள்ளூரைச் சேர்ந்த ஓட்டுனர் ஒருவரும், சுற்றுலா பயணி ஒருவரும் கால் இடறி அடுத்தடுத்து ஆற்றுக்குள் விழுந்தனர். இதில் இருவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
இந்நிலையில், இந்திய திபெத்திய எல்லைக் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், ஓட்டுனர் சடலமாக மீட்கப்பட்டார். மேலும், காணாமல் போன சுற்றுலாப் பயணிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பீகாரில் இருந்து சுற்றுலா பயணி ஒருவர் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் விடுமுறை கொண்டாட சிக்கிம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.