என் மலர்
நீங்கள் தேடியது "நாம் தமிழர்"
- சாட்டை சேனலில் வருகின்ற கருத்துகள், செய்திகள் அனைத்தும் அவரது தனிப்பட்டக் கருத்தாகும்.
- அவற்றிற்கு எந்த வகையிலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பு ஏற்காது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் "திருச்சி துரைமுருகன் நடத்தும் சாட்டை வலையொளிக்கும் (YouTube Channel) நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்புமில்லை.
அதில் வருகின்ற கருத்துகள், செய்திகள் அனைத்தும் அவரது தனிப்பட்டக் கருத்தாகும். அவற்றிற்கு எந்த வகையிலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பு ஏற்காது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
- தமிழ் தேசிய புலிகள் என்ற தனது கட்சி பெயரை இந்திய ஜனநாயக புலிகள் என்று மன்சூர் அலிகான் மாற்றினார்.
- 2019 மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் மன்சூர் அலிகான், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்
வரும் மக்களவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிட உள்ளதாக நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.
இது தொடர்ப்பிக்க அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலம் மக்கள் மனம், மகிழம் பூவாய் மகிழ! செஞ்சி கோட்டையின் செம்மாந்தர்கள் கொடி பறக்க, செய்யாறு மக்களின் சோற்றில் நெய்யாறு ஓட, நான் சுசுவாசி அல்ல, பந்தா வாசி அல்ல, மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வந்த-வாசி! அரசியல் பொதுநல, சந்நியாசி! போளூர் மக்களின் புகழூர் தாய்மார்கள் வயிற்றில் பால் வார்த்திடும், பாலூர்,ஆரணியே, அன்ண பட்சினியே, நினை, என் ,மனதின் ஆழ்நிலை சக்தியாய், தாயார், மகளாய் துதித்து, பணி செய்ய, ஆணையிடுவாய், தாழ்திறவாய், தரணி போற்றும், ஆரணியே" என மன்சூர் அலிகான் தெரிவித்துளார்.
அண்மையில் தான் தமிழ் தேசிய புலிகள் என்ற தனது கட்சி பெயரை இந்திய ஜனநாயக புலிகள் என்று மன்சூர் அலிகான் மாற்றினார்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் மன்சூர் அலிகான், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முத்துமலை முருகன் கோவிலில் பாரதிராஜா சுவாமி தரிசனம் செய்தனர்.
- நான் தமிழன் என்ற ஒரு காரணத்திற்காகவே நாம் தமிழரை ஆதரிக்கிறேன்.
கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ்பாண்டியன், சின்னம் தராத நிலையில், சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே ஏத்தாப்பூரில் உள்ள முத்துமலை முருகன் கோவிலில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
இந்த பிரச்சாரத்தை திரைப்பட இயக்குநர் பாரதிராஜா பங்கேற்று துவக்கி வைத்தார். முன்னதாக அவர் முத்துமலை முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். இதன் பிறகு இயக்குநர் பாரதிராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில், நான் அரசியல்வாதி அல்ல. பொது மனிதனாக சொல்கிறேன். நாம் தமிழர் கட்சியினர் சீமான் வழியில் வெற்றி பெறுவார். இளைஞர்கள் மூலம் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும். நான் தமிழன் என்ற ஒரு காரணத்திற்காகவே நாம் தமிழரை ஆதரிக்கிறேன். எந்த சின்னம் கொடுத்தாலும் சீமான் வெற்றி பெறுவார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். என் பிள்ளை சீமானுக்கு புல்லும் ஆயுதம்
சீமானுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டேன். எம்ஜிஆர் காலத்தில் இருந்து போதைப்பொருள் பழக்கம் இருப்பதாகவும், எதிர்க்கட்சியினர் இதுபோல குற்றச்சாட்டுகளை தெரிவித்து தான் வருகிறார்கள்" என அவர் தெரிவித்தார்.
- இம்முறை வலுவான எதிர்க்கட்சி அமைந்துள்ளது.
- விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து இன்று மாலை 7.15 மணியளவில் புதுடெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் மோடி 3-வது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்கிறார். பிரதமருடன் 30 மந்திரிகள் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மோடி பதவியேற்பு விழாவுக்கு செல்லும் முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த், "மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருக்கு பிறகு 3-வது முறையாக மோடி பதவி ஏற்கிறார், இது அவருடைய சாதனை. இம்முறை வலுவான எதிர்க்கட்சி அமைந்துள்ளது என்று கூறினார்.
மேலும், மாநில கட்சி அந்தஸ்து பெற்றுள்ள விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
இதனையடுத்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் ரஜினிகாந்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில்,
"நாடாளுமன்றத் தேர்தலில் 8.2% வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சியாக நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்றமைக்கு வாழ்த்து தெரிவித்த பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் வென்று மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்றுள்ளது.
- நாம் தமிழர் கட்சி 8.19% வாக்குகளை எட்டிப் பிடித்து மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருப்பது தமிழக அரசியலில் புதிய திருப்புமுனை.
மாநில கட்சி அந்தஸ்து பெற்றுள்ள விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,
"தேசம் என்றால் மக்கள். தேர்தலென்பது மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான களம். நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் என் அன்பிற்கினிய தம்பிகள் இருவர் படைத்திருக்கும் சாதனை எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமத்துவ சமுதாயம் படைக்க சமரசமின்றி போராடி வரும் தம்பி திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் வென்று மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்றுள்ளது. சிறுத்தைகளின் கால் நூற்றாண்டு கால தேர்தல் அரசியலில் இது ஒரு மைல் கல் சாதனை.
புதிய சின்னத்தோடு தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையிலும் தீரத்துடன் களம் கண்ட தம்பி சீமானின் நாம் தமிழர் கட்சி 8.19% வாக்குகளை எட்டிப் பிடித்து மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருப்பது தமிழக அரசியலில் புதிய திருப்புமுனை.
அரசியல் உங்களைத் தாக்கும் முன், உங்கள் தாக்கம் அரசியலில் இருக்கட்டுமென இளையோரை தொடர்ந்து வலியுறுத்துகிறவன் நான். ஜனநாயகம் வலுப்பெற அரசியலில் புதிய குரல்களும், இளைஞர்களின் பங்களிப்பும் அதிகரித்தே ஆகவேண்டும்.
மக்களின் நம்பிக்கையைப் பெற்று மாநிலக் கட்சி அங்கீகாரம் பெற்ற தம்பிகள் இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்" என்று தெரிவித்துள்ளார்.
- அ.தி.மு.க.வின் இந்த முடிவால் இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
- தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது.
சென்னை:
விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். அ.தி.மு.க. சார்பிலும் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அ.தி.மு.க.வோ விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக் கணிப்பதாக அதிரடி அறி விப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிசாமி வெளி யிட்டுள்ள அறிக்கையில், "விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற வாய்ப்பு இல்லாததால் தேர்தலை புறக்கணிப்பதாக" தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வின் இந்த முடிவால் இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடாமல் அ.தி.மு.க. விலகி உள்ளதால் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. களத்தில் இல்லாத நிலையில் தி.மு.க.-பா.ம.க. இடையிலேயே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் தேர்தல் புறக்கணிப்பு முடிவை தி.மு.க. கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. பாரதீய ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க. வைத்துள்ள ரகசிய உடன்பாடு இதன் மூலம் வெளிப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
அ.தி.மு.க.வின் தேர்தல் புறக்கணிப்பு பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க.வுக்கு சாதகமாக அமைய வாய்ப்பு இருப்பதாகவும் இது மறைமுக ஆதரவு என்றும் அவர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகளை அ.தி.மு.க., பா.ம.க. ஆகிய இரண்டு கட்சிகளும் கணிசமாக பிரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் போட்டியில் இருந்து அ.தி.மு.க. விலகியுள்ளதால் அது பா.ம.க.வுக்கு கூடுதல் ஓட்டுகள் கிடைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருப் பதாகவே கூறப்படுகிறது.
இதனால் பா.ம.க.வினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விக்கிரவாண்டி தொகுதி போட்டியில் இருந்து விலகியுள்ள போதிலும் தி.மு.க. வை தோற்கடிக்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க. நிச்சயம் உறுதியாக இருக்கும்.
அதற்கேற்ற வகையில் அ.தி.மு.க.வினரின் செயல் பாடுகள் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தி.மு.க., பா.ம.க. வேட்பா ளர்களோடு நாம் தமிழர் கட்சியின் அபிநயாவும் தனித்து போட்டியிடுகிறார். தி.மு.க., பா.ம.க. இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் நாம் தமிழர் வேட்பாளர் வழக்கம் போல கணிசமான ஓட்டுகளை வாங்குவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 3 பேர் மட்டுமே களத்தில் நிற்பதால் நாம் தமிழர் கட்சி வேட்பா ளர் பிரிக்கும் ஓட்டுகளும் விக்கிரவாண்டி தொகுதி யில் முக்கியத்துவம் பெறும் என்றே எதிர்பார்க்கப்ப டுகிறது.
பாராளுமன்ற தேர்தலில் 8 சதவீத ஓட்டுகளை வாங்கி அங்கீகரிக்கப்பட்ட கட்சி யாக மாறி இருக்கும் நாம் தமிழர் கட்சியும் விக்கிர வாண்டி தொகுதியில் உற்சாகமாக களம் இறங்கியுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியில் யாரும் எதிர்பாராத வகையில் அதிக வாக்குகளை நாங்கள் வாங்குவோம் என்று அந்த கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் தேர்தல் புறக்கணிப்பு, தேர்தலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதிக ஓட்டு கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பெறுவோம் என்று தி.மு.க.வினர் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு விக்கிரவாண்டி தொகுதியிலும் பெரிய வெற்றியை பெறுவதற்கு ஆளும் கட்சியான தி.மு.க. வேகம் காட்டி வருகிறது. அந்த கட்சி நிர்வாகிகளும் சுறுசுறுப்போடு தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.
பா.ம.க., நாம் தமிழர் கட்சியினரும் தேர்தல் பணியில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது.
- தமிழ்நாட்டில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது சமூகவிரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா?
- பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கின்றேன்.
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்மநபர்கள் வெட்டியதில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இவரது படுகொலை சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கலும், தமிழக அரசுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்.
இது குறித்த எக்ஸ் தள பதிவில், "பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சென்னை பெரம்பூரிலுள்ள அவரது வீட்டின் அருகிலேயே படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டின் தலைநகரிலேயே தேசிய கட்சியின் மாநிலத்தலைவருக்கே உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது என்றால் திமுக ஆட்சியில் சாதாரண பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்?
ஏற்கனவே சேலம் மற்றும் கடலூரில் அதிமுக நிர்வாகிகள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அடுத்தடுத்து நிகழும் படுகொலைகள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு சீரழிந்துள்ளது என்பதையே காட்டுகிறது.
திமுக ஆட்சியில் நேர்மையான அரசு அதிகாரிகள் முதல் அரசியல் தலைவர்கள், அப்பாவி பொதுமக்கள் வரை நாள்தோறும் நிகழும் படுகொலைகள் தமிழ்நாட்டில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது சமூகவிரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா? என்ற ஐயத்தை எழுப்புகிறது.
கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியவில்லை. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பட்டப்பகலில் நடைபெறும் படுகொலைகளை தடுக்க முடியவில்லை. மக்கள் சாலைகளில் நிம்மதியாக நடமாடக்கூட முடியவில்லை. இதெற்கெல்லாம் காவல்துறையை தமது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்ன பதில் கூறப்போகிறார்? இதுதான் இந்தியாவே திரும்பிப்பார்க்கும் திராவிட மாடலா? இதுதான் முதலமைச்சர் கூறிய எந்த கொம்பனும் குறைசொல்ல முடியாத ஆட்சியா? என்ற கேள்விகள் ஒவ்வொரு சாமானியன் மனதிலும் எழுகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களை படுகொலை செய்த கும்பலை விரைந்து கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள் முதல் அப்பாவி பொதுமக்கள் வரை படுகொலை செய்யப்படும் கொடூரங்கள் தொடராது தடுத்திட, இனியாவது காவல்துறையை முடுக்கிவிட்டு கடும் நடவடிக்கை எடுத்து, சட்டம் ஒழுங்கை விரைந்து சீர்செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அரசியல் நண்பர்களுக்கும், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கின்றேன்.
சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்" என்று பதிவிட்டுள்ளார்.
- தவெக மாநாடு, சுற்றுப் பயணம், சீமானின் விமர்சனம் குறித்து ஆலோசனை.
- சீமான் விஜய்யை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் பதிலடி கொடுக்க திட்டம் ?
தமிழக வெற்றிக் கழகத்தின் அவசர நிர்வாகிகள் கூட்டம் பனையூரில் நாளை காலை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக நிர்வாகிகளுடன் அக்கட்சித் தலைவர் விஜய் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
தவெக மாநாடு, சுற்றுப் பயணம், சீமானின் விமர்சனம் குறித்து ஆலோசனை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீமான் விஜய்யை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் பதிலடி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- தமிழ்நாட்டில் பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
- அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதை எதிர்த்து வருகிற 5-ந்தேதி அனைத்து கட்சிகள் கூட்டம் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மார்ச் 5-ந்தேதி நடைபெற உள்ள அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதில் நாம் தமிழர் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று வேலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "தொகுதி மறுவரையறை தொடர்பான தமிழ்நாடு அரசின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன். தொகுதி மறுவரையறை தொடர்பாக 2003ம் ஆண்டே அறிக்கை விட்டிருக்கேன். இந்த விவகாரத்தில் தனித்துதான் போராடுவோம்" என்று தெரிவித்தார்.
- பெண்களை சீமான் இழிவாக பேசி வருகிறார் என்று பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
- சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை வைத்துள்ளது.
சீமான் தன்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக விஜயலட்சுமி அளித்த புகார் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சீமானுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் இருந்து சீமானை விடுவிக்க முடியாது என்றும்
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கின் விசாரணையை 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த வழக்கின் விசாரணைக்கு இடையே விஜயலட்சுமி குறித்து சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்களை சீமான் இழிவாக பேசி வருகிறார் என்று பலரும் சீமானுக்கு கண்டனம் தெரிவித்தனர்.பெண்களை சீமான் இழிவாக பேசி வருகிறார் என்று பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், உயர்நீதிமன்றத்திரன் இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை வைத்துள்ளது.
இதனிடையே, சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் வெளிப்பக்க கதவில் மீண்டும் சம்மன் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. போலீசார் சம்மன் நோட்டீசை ஒட்டிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் அந்த சம்மனை சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் கிழித்தெறிந்தார்.
அதன்பேரில் சம்மனை கிழித்த சீமான் வீட்டு பணியாளரை கைது செய்வதற்காக நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன்ராஜேஷ் சீமான் வீட்டுக்கு சென்றார்.
அங்கு காவலாளிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சம்மனை கிழித்தவர் மற்றும் சீமான் வீடு காவலாளியை போலீசார் கைது செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியை விட்டு அண்மையில் வெளியேறிய காளியம்மாளிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், சம்மனை வீட்டில் கொடுத்திருக்கலாம். அதை இவ்வளவு பெரிய விஷயமாக மாறியிருக்க தேவையில்லை.நேர்மையான முறையில் அரசு அதிகாரி இவ்விஷயத்தை கையாண்டிருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
சில நாட்களாக பெண்கள் குறித்து சீமான் இழிவாக பேசியது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, "சீமான் பெண்கள் பற்றி பேசிய வீடியோவை இன்னும் சரியா பாக்கல" என்று காளியம்மாள் பதில் அளித்தார்.
- நாம் தமிழர் கட்சி ஆா்ப்பாட்டம் நடந்தது.
- கபடி போட்டிக்கான தடையை நீக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் போது கபடிப் போட்டிகள் கிராமங்களில் நடத்துவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் கபடி போட்டியின் போது சில ஊா்களில் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து தற்காலிகமாக கபடிப்போட்டிகள் நடத்த போலீசார் அனுமதி மறுத்து வருகின்றனர். போட்டி நடத்தத் தடையும் விதித்துள்ளது.
போலீசார் நடவடிக்கையால் கபடிப் போட்டிகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, தடையை நீக்க வலியுறுத்தி ராமநாதபுரம் அரண்மனை முன்பு நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் வெண்குளம் ராஜு தலைமை வகித்தார். பாராளுமன்ற தொகுதி செயலாளர் குமரன், மாவட்ட செயலா்கள் கண். இளங்கோ, காமராஜ், மாவட்டத் தலைவர் நாகூர் கனி, மாநில பேச்சாளர் வினோத் உள்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கபடி போட்டிக்கான தடையை நீக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கபடிப் போட்டிக்கு அனுமதி கோரி தொடா்ந்து ஆா்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.
- சோழவந்தான் பகுதியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
- நாம்தமிழர் கட்சி பேரூர் நிர்வாகி சங்கர் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தானில் பெருந்தலைவர் காமராஜ ரின் 120-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதையொட்டி பெரியகடை வீதியில் உள்ள அவரது சிலைக்கு, நாடார் உறவின்முறை பரிபாலன சங்கத்தின் தலைவர் தங்கபாண்டியன், செயலாளர் பி.ராஜகுரு ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தி இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அழகர்சாமி, ஜெயராஜ், சீனி வாசன், துரைபாண்டி யன், ஜெயசேகர், பாண்டி யராஜன், ஐஸ்ஜெயராஜ், மீனா, காசியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் துணைதலைவர் லதாகண்ணன், வார்டு உறுபினர்கள் குருசாமி, சத்யபிரகாஷ், முத்துலட்சுமி சதீஸ் மற்றும் பேட்டை பெரியசாமி, பேரூர் செயலாளர் முனியாண்டி, வார்டு செயலாளர் நாகேந்திரன் தவமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் அ.ம.மு.க. கட்சியின் ஒன்றிய செயலாளர் விரும்பராஜன் தலைமையில் பேரூர் செயலாளர்கள் திரவியம், வாடிப்பட்டி மதன், மதுரை தெற்கு மாவட்ட துணைசெயலாளர் வீரமாரிபாண்டியன், மாவட்ட விவசாய அணி முள்ளைசக்தி மற்றும் வழக்கறிஞர் காசிநாதன், மீனாட்சிசுந்தரம் ஜெயராமன், தவமணி, மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதே போல நாம்தமிழர் கட்சி பேரூர் நிர்வாகி சங்கர் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.