search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நக்சல்"

    • மண்டிமர்கா காட்டுப் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது.
    • காயமுற்றவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாபூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 ஜவான்கள் கொல்லப்பட்டனர். மேலும் நான்கு ஜவான்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்த மாநில காவல் பணிக்குழு மூத்த கான்ஸ்டபில் பரத் லால் சாஹூ மற்றும் கான்ஸ்டபில் சதெர் சிங் தாக்குதலில் உயிரிழந்தனர். தரெம் காவல் எல்லைக்கு உட்பட்ட மண்டிமர்கா காட்டுப் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது.

    இந்த தாக்குதலில் காயமுற்ற புருஷோத்தமன் நாக், கோமல் யாதவ், சியாராம் சொரி மற்றும் சஞ்சய் குமார் ஆகியோபருக்கு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து அவர்களை வேறொரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் தலைக்கு ரூ.47 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சல் அமைப்பின் தலைவர் போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார்.
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம், ரஜ்னாண்ட்கோன் பகுதியை சேர்ந்தவர் பகத் சிங், இவர், நக்சல் அமைப்பின் மூத்த தலைவர்களுல் ஒருவராக இருந்து வருகிறார்.

    இவருக்கு நக்சலைட் அமைப்பு தொடர்பான பல்வேறு வழக்குகளில் தொடர்பு இருப்பதால், இவரை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்தனர். மேலும், இவரது தலைக்கு ரூ.47 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநில போலீசார் கூட்டாக அறிவித்திருந்தனர்.

    இந்நிலையில், சரணடையும் நக்சல்களின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் சத்தீஸ்கர் போலீசாரிடம் நேற்று பகத் சிங் சரணடைந்தார்.

    பழங்குடியின மக்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய நக்சல் இயக்கத்தில் சேர்ந்த பகத் சிங் மீது நக்சல் இயக்க முக்கிய தலைவர்கள் நம்பிக்கை இல்லாமல் சந்தேகத்துடன் இருந்ததாலும்,  நக்சல் அமைப்பில் உள்ள பழங்குடி இனத்தவர்கள் மீது பாகுபாடு காட்டப்பட்டதாலும்  அவர் அமைப்பில் இருந்து விலகி சரணடைந்துள்ளார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    தாமாக முன்வந்து சரணடைந்த நக்சலைட் இயகத்தை சேர்ந்த பெண்ணுக்கு, போலீசார் தரப்பில் 3 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது. #Naxal
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம், கோண்டகோன் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில், நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த பிசாந்தி நீதம் என்ற பெண் அம்மாவட்டத்தின் கூடுதல் எஸ்.பி மகேஷ்வர் நாக் முன்னிலையில் இன்று சரணடைந்தார்.

    நக்சல் இயக்கத்தில் கொரில்லா படைப்பிரிவில்  இருந்த பிசாந்தி நீதமின் தலைக்கு போலீசார் 3 லட்சம் பரிசுத் தொகை அறிவித்திருந்தனர். ஆனால், பிசாந்தி போலீசாரிடம் சரணடைந்ததால் அவரது தலைக்கு அறிவிக்கப்பட்டிருந்த பரிசு தொகையான ரூபாய் 3 லட்சத்திற்கான காசோலையை போலீசார் அவரிடம் அளித்தனர்.  

    சரண்டர் ஆகும் நபர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி தரும் மாநில அரசின் திட்டத்தால் கவரப்பட்டு, போலீசாரிடம் சரணடைந்ததாக பிசாந்தி தெரிவித்தார். அவருக்கு திருந்தி வாழ தேவையான அரசின் மறுவாழ்வு நலத்திட்டங்கள் அனைத்தும் ஏற்படுத்தி தரப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. #Naxal
    ×