search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூத்துக்குடி"

    தூத்துக்குடியில் நாளை மறுநாள் அகில இந்திய வாலிபால் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியை கீதாஜீவன் எம்எல்ஏ தொடங்கி வைக்கிறார். #geethaJeevan
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் 4-ம் ஆண்டு மணிராஜ் நினைவு கோப்பைக்கான அகில இந்திய அளவிலான பள்ளி மாணவ- மாணவிகள் பங்குபெறும் மின்னொளி கைப்பந்து போட்டி வருகிற 22-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை நடக்கிறது.

    தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியில் நடைபெறும் முதல் நாள் போட்டியை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, உஷா அங்கோ, பால கிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

    இதையடுத்து 25-ந் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு சமத்துவ மக்கள் கழக மாநிலத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், நாம் இந்தியர் கட்சி நிறுவனத்தலைவர் ராஜா, முத்தையா குருமூர்த்தி, மாஸ்டர் மெர்வின் மணிராஜ் ஆகியோர் பரிசுகள் வழங்குகிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை மணிராஜ் நினைவு வாலிபால் கிளப் தலைவர் ராஜ்குமார், செயலாளர் ராஜசேகர், பொருளாளர் கணேசன் ஆகியோர் செய்து வருகின்றனர். #geethaJeevan
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    தர்மபுரி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் தேவராசன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் சின்னசாமி, மாதேஸ்வரன், கந்தசாமி, காதர், மாது, விஸ்வநாதன், கமலாமூர்த்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினார்கள்.

    சுற்றுச்சூழலை பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும். பொதுமக்களின் போராட்டத்தை முடக்கும் வகையில் மனிதாபிமானமற்ற முறையில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. துப்பாக்கி சூடு நடத்தியவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டக்குழுவினர் கோஷங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். 
    தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் வட்டத்தில் 144 தடை உத்தரவு வருகிற 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் அறிவித்துள்ளார். #Thoothukudi #SterliteProtest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நடைபெறுவதை தொடர்ந்து கடந்த 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று நடந்த போராட்டம் கலவரமாக மாறியது.

    10 பேர் துப்பாக்கி குண்டுக்கு பலியாகி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் 144 தடை உத்தரவை மேலும் நீட்டித்து இன்று ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு சட்டம்- ஒழுங்கை பராமரித்திட இன்று (23-ந்தேதி) 1 மணி முதல் 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி வரை குற்றவியல் நடைமுறை சட்டம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

    இந்த தடை உத்தரவு தூத்துக்குடி, திருச்செந்தூர் வட்டத்தை சேர்ந்த பகுதிகள் மற்றும் வேம்பார், குளத்தூர், ஆறுமுகமங்கலம், வேடநத்தம், ஓட்டப்பிடாரம், எப்போதும் வென்றான் ஆகிய குறுவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதற்கும் அமல்படுத்தி உத்தரவிடப்படுகிறது.


    இதன்படி 5 மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும், பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், சைக்கிள் மற்றும் வாகனங்களில் பேரணியாக செல்வதற்கும், அரிவாள், கம்பு உள்பட அபாயகரமான பொருட்களை கொண்டு செல்வதற்கும், சாதி கொடிக்கம்புகள் கொண்டு செல்வதற்கும், வாடகை வாகனங்கள் மூலம் ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்களை அழைத்து செல்வதற்கும் 144 பிரிவின் கீழ் தடை விதிக்கப்படுகிறது.

    இந்த தடை உத்தரவு பள்ளி-கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #SterliteProtest #Thoothukudi #BanSterlite
    ×