என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகைக்காக மூதாட்டி கொலை"

    • தலையணையால் அமுக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓட்டம்.
    • கைதானவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரத்தை அடுத்த தேரிப்பனை பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி வசந்தா (வயது 70).

    இவர்களது மகள் சபீதா, மகன் வினோத் ஆகியோர் கோவையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மற்றொரு மகனான விக்ராந்த் சாத்தான்குளம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

    விக்ராந்த் ஆனந்தபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஜெயபால் இறந்துவிட்டதால் வசந்தா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    நேற்று சபீதா தனது தாயாருக்கு போன் செய்தார். வெகுநேரமாகியும் வசந்தா அழைப்பை ஏற்கவில்லை. இதனால் அவர் தனது தம்பி விக்ராந்துக்கு போன் செய்து விபரத்தை கூறினார்.

    உடனே விக்ராந்த் தேரிப்பனையில் உள்ள தனது உறவினர் ஒருவரை வீட்டுக்கு அனுப்பினார். அவர் வசந்தா வீட்டுக்கு சென்றபோது முன்பக்க கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது.

    அதே நேரம் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. அதன்மூலம் வீட்டுக்கு சென்றபோது வசந்தா இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவர் தலையணையால் அமுக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. வசந்தா அணிந்திருந்த நகைகள் அறுத்து எடுக்கப்பட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து அவரது மகன் விக்ராந்த் மெஞ்ஞானபுரம் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், டி.எஸ்.பி.க்கள் சுகுமார், மகேஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.


    தொடர்ந்து நடந்த விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் செல்வரதி (24) என்பவர் நேற்று வசந்தா வீடு அருகே சந்தேகத்திற்கிடமாக நடமாடியதும், இதனால் அவரை வசந்தா கண்டித்ததும் தெரியவந்தது.

    எனவே இந்த விரோதத்தில் செல்வரதி வசந்தாவை கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதினர். இதைத்தொடர்ந்து செல்வரதியை போலீசார் தேடியபோது அவர் கணவர் ஊரான மீரான்குளத்துக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் செல்வரதியை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர் வசந்தாவை தலையணையால் அமுக்கி கொலை செய்து விட்டு வசந்தா அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி வந்தது உறுதியானது.

    இதையடுத்து போலீசார் செல்வரதியை கைது செய்தனர். அவரிடம் இருந்து நகையை பறிமுதல் செய்தனர். இவர் மீது ஏற்கனவே நகைக்காக சிறுவனை கடத்தி கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக ஒரு வழக்கு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த கொலையில் செல்வரதியுடன் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எருமப்பட்டி அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்த பக்கத்து வீட்டு பெண்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    எருமப்பட்டி, 

    எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிப்பட்டி கங்கானித் தெருவில் வசித்து வந்தவர் சண்முகம். இறந்து விட்டார். இவருடைய மனைவி அமராவதி(வயது 70). இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அமராவதி தனது 2-வது மகன் ஞானபிரகாசம் மற்றும் மகள் ராஜேஸ்வரி ஆகியோருடன் வசித்து வந்தார். கடந்த 9-ந்தேதி காலை மகனும், மகளும் வேலைக்கு சென்றுவிட்டனர். மாலையில் வீடு திரும்பிய அவர்கள் அமராவதி கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அமராவதி அணிந்திருந்த 4பவுன் செயின், காதில் கிடந்த ¾பவுன் தோடு, பீரோவில் இருந்த 10பவுன் நகையும் திருடப்பட்டிருந்தது.

    இது குறித்த புகாரின்பேரில் எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் அமராவதி வீட்டின் பக்கத்து வீட்டில் வசித்துவந்த ஜோதி(31) என்ற பெண்ணிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் ஜோதி, அதேபகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்துவரும் தேவிகா(34), மலையாளி மனைவி பூங்கோதை(35) ஆகியோர் சேர்ந்து நகைக்காக மூதாட்டி அமராவதியை கழுத்தை நெரித்து கொலை செய்ததும், நகைகளை திருடியதும் தெரியவந்தது. 

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சப்-இன்ஸ்பெக்டர் மாதையன் ஆகியோர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 14பவுன் நகைகளும் மீட்கப்பட்டது.
    ×