search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சபாநாயகர்"

    • ஜெகதீப் தன்கர், 'கார்கே ஜி இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு உதவியுள்ளேன்' என்று சிரித்தபடி தெரிவித்தார்.
    • கடந்த நாட்களில் தான் பேசும்போது மைக்கை அணைத்து விடுவதாக கார்கே ஜெகதீப் தன்கரை குற்றம்சாட்டியதால் அவையில் இருவருக்கும் இடையில் இறுக்கமான சூழல் நிலவியது

    நேற்று நடந்த பாராளுமன்ற மக்களை கூட்டத்தொடரில் ராகுல் காந்தியின் அதிரடி உரை அவையை களேபரம் ஆகியது தெரிந்ததே. அதேசயம் பாராளுன்றத்தில் நடந்த மாநிலங்களவை கூட்டத்தொடரின் நேற்றைய கூட்டத்தில் மக்களவையில் நடந்ததற்கு நேர் மாறாக காங்கிரஸ் தலைவர் கார்கேவின் கருத்துக்களால் சிரிப்பலை ஏற்பட்ட சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    நேற்று நடந்த மாநிலங்களவை கூட்டத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேச எழுந்த போது தனக்கு கால்வலி இருப்பதால் உட்கார்ந்து பேச கார்கே அனுமதி கேட்டார். அதற்கு அனுமதி அளித்த மாநிலங்களவை சபாநாயகரும் துணைக் குடியரசுத் தலைவருமான ஜெகதீப் தன்கர், 'கார்கே ஜி இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு உதவியுள்ளேன்' என்று சிரித்தபடி தெரிவித்தார்.

    இதற்கு பதிலளித்த கார்கே, 'ஆமாம் நீங்கள் எங்களுக்கு [எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு] சில சமயம் உதவுகிறீர்கள். நான் அதை நினைவு கூர்கிறேன்' என்று நகைச்சுவை தொனிக்க தெரிவித்தார். மேலும் ஜனாதிபதி உரை குறித்து தொடர்ந்து பேசத் தொடங்கிய கார்கே பாஜக எம்.பி சுதான்சு சதுர்வேதியை குறிப்பிட்டு பேசும்போது, இடையில் நிறுத்தி, 'மன்னிக்கவும், திவேதி, திரிவேதி, சதுர்வேதி ஆகிய பெயர்கள் என்க்கு எப்போதும் குழப்பமாக உள்ளது.

    நான் தெற்கில் [தென்னிந்தியாவில்] இருந்து வருவதால் இதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை; என்று நகைச்சுவையாக தெரிவிக்க அரங்கமே சிரிப்பலையால் அதிர்ந்தது.இதற்கு சிரித்தபடி பதிலளித்த சபாநாயகர் ஜெகதீப் தன்கர், 'நீங்கள் விரும்பினால் இந்த விவகாரம் குறித்துஅரை மணி நேரத்துக்கு வேண்டுமானாலும் நாம் விவாதிக்கலாம்' என்று தெரிவித்தார்.

    முன்னதாக கடந்த நாட்களில் தான் பேசும்போது மைக்கை அணைத்து விடுவதாக கார்கே ஜெகதீப் தன்கரை குற்றம்சாட்டியதால் அவையில் இருவருக்கும் இடையில் இறுக்கமான சூழல் நிலவிய நிலையில் நேற்றைய கூட்டம் அந்த இறுக்கத்தை தளத்தியது என்றே கூறலாம். கடந்த ஜூன் 27 ஆம் தேதி தொடங்கிய மாநிலங்களவை கூட்டொடர் நாளையுடன் முடிவடைவது குறிப்பிடத்தத்க்கது. 

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்களவையை நடத்துவதற்கு சபாநாயகரும், துணை சபாநாயகரும் தேர்வு செய்யப்பட வேண்டும்.
    • துணை சபா நாயகர் பதவி தொடர்பாக விரைவில் தெளிவான முடிவு தெரியவரும்

    புதுடெல்லி:

    பாராளுமன்ற சட்ட விதிகளின்படி பாராளுமன்ற மக்களவையை நடத்துவதற்கு சபாநாயகரும், துணை சபாநாயகரும் தேர்வு செய்யப்பட வேண்டும். சபா நாயகர் இல்லாத நேரத்தில் சபையை நடத்த வேண்டிய முழு பொறுப்பும் துணை சபாநாயகருக்கு உண்டு என்று சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அந்த வகையில் பாராளுமன்றத்தில் சபாநாயகர் பதவியை ஆளும் கட்சியும், துணை சபாநாயகர் பதவியை எதிர்கட்சிகளும் பெறும் வகையில் ஒருமித்த கருத்து இதுவரை மரபுபோல இருந்து வந்தது.

    ஆனால் கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் மத்தியில் பா.ஜ.க. தனிப்பெரும் பான்மை பெற்று ஆட்சி அமைத்த நிலையில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற இயலாத நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளால் கேட்க இயலவில்லை.

    பா.ஜ.க.வும் துணை சபாநாயகர் பதவிக்கு யாரையும் தேர்வு செய்யவில்லை. அதற்கு பதில் சபையை நடத்துவதற்கு எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ள நிலையில் துணை சபாநாயகர் பதவியை எப்படியாவது பெற்று விடவேண்டும் என்று தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தியா கூட்டணி சார்பில் துணை சபாநாயகர் பதவிக்கு உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரசாத் எம்.பி.யை களம் இறக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

    சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த பிரசாத் எம்.பி. அயோத்தி ராமர் கோவில் இருக்கும் பைசாபாத் தொகுதியில் இருந்து தேர்வாகி இருக்கிறார். தலித் இனத்தை சேர்ந்தவரான இவரை துணை சபாநாயகர் தேர்வுக்கு முன்நிறுத்துவதன் மூலம் பா.ஜ.க.வுக்கு மிக கடுமையான சவாலை ஏற்படுத்த முடியும் என்று இந்தியா கூட்டணி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே துணை சபாநாயகர் பதவியை பற்றி பா.ஜ.க. மூத்த தலைவர்களும் ஆலோசனை நடத்தினார்கள். துணை சபாநாயகர் பதவியை தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் அல்லது ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு பா.ஜ.க. விட்டுக் கொடுக்கும் என்று முதலில் தகவல் வெளியானது.

    பிறகு துணை சபாநாயகர் பதவியையும் பா.ஜ.க.வே வைத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியானது. துணை சபாநாயகர் மூலம் முக்கிய முடிவுகளை எட்ட முடியும் என்பதால் பா.ஜ.க. தலைவர்கள் மிக தீவிரமாக ஆய்வு செய்து வந்தனர்.

    இந்த நிலையில் துணை சபாநாயகர் பதவியை கடந்த 10 ஆண்டுகளாக நிரப்பாமல் விட்டதுபோல இந்த தடவையும் கைவிட்டு விட பா.ஜ.க. தீர்மானித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதை உறுதிப்படுத்துவது போல சபாநாயகர் ஓம்பிர்லா பாராளுமன்ற மக்களவையை வழிநடத்த 10 பேர் கொண்ட எம்.பி.க்கள் குழுவை அமைத்து அறிவித்துள்ளார்.

    அந்த எம்.பி.க்கள் குழுவில் ஜெதாம்பிகை பால், பி.சி.மோகன், சந்தியா ராய், திலிப்சைக்கியா (4 பேரும் பா.ஜ.க.), குமாரி செல்ஜா (காங்கிரஸ்), ஆ.ராசா (தி.மு.க.), ககோலி கோஸ் (திரிணாமுல் காங்கி ரஸ்), கிருஷ்ணபிரசாத் (தெலுங்குதேசம்), அவதேஸ் பிரசாத் (சமாஜ்வாடி) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    என்றாலும் துணை சபா நாயகர் பதவி தொடர்பாக விரைவில் தெளிவான முடிவு தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பதவி ஏற்றதும் எமர்ஜென்சி தொடர்பான தீர்மானம் கொண்டு வந்து ஓம் பிர்லா பேசினார்.
    • இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

    எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்தனர். அப்போது, சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் எம்ர்ஜென்சி தொடர்பான தீர்மானம் கொண்டு வந்து பேசியது தங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிவித்ததாக காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கேசி வேணுகோபால் கூறியதாவது:-

    சபாநாயகர் ஓம் பிர்லா உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. ராகுல் காந்திதான் எதிர்க்கட்சி தலைவர் என்று சபாநாயகர் அறிவித்துவிட்டார். அதன்பின் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று ராகுல் காந்தி ஓம் பிர்லாவை சந்தித்தார்.

    நாடாளுமன்ற செயல்பாடு பற்றி பல விசயங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, ஓம் பிர்லாவிடம், எமர்ஜென்சி விவகாரம் குறித்து பேசினார். அப்போது சபாநாயகர் குறிப்பில் இருந்து அதை தவிர்த்திருக்கலாம். அது அரசியல் தொடர்பான குறிப்பு என்பது தெளிவாக தெரிகிறது. அது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

    இவ்வாறு கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

    மேலும், தனியாக வேணுகோபால் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுத்தியுள்ளார். அதில் "பதவி ஏற்ற நிலையில் உங்கள் இருக்கையில் இருந்து சுமார் 50 வருடத்திற்கு முன்னதாக நடைபெற்ற எமர்ஜென்சி தொடர்பான தீர்மானம் கொண்டு வந்து பேசியது அதிர்ச்சி அளித்தது. தலைவர் பதவியில் இருந்து இப்படி ஒரு அரசியல் குறிப்பை வெளியிடுவது நாடாளுமன்ற வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவையாகும்" எனத் தெரிவித்துள்ளார்.

    • முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தினார்.
    • இந்திரா காந்தி, எமர்ஜென்சிக்கு எதிரான முழக்கங்களை பாஜக எம்.பி.க்கள் எழுப்பினர்.

    மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இணைந்து ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

    சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடியும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து சபாநாயகர் உரையாற்றினார். அவர் கூறுகையில்,

    * முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தினார்.

    * இந்திரா காந்தியால் சர்வாதிகாரம் திணிக்கப்பட்டது. 25 ஜூன் 1975 எப்போதும் கருப்பு தினமாக அறியப்படும்.

    * எமர்ஜென்சியின்போது நாட்டின் அதிகாரத்தை சிதைத்ததோடு ஒட்டுமொத்த தேசமும் சிறைக்குள் அடைக்கப்பட்டது.

    * எமர்ஜென்சி காலத்தில் ஊடக சுதந்திரம் நசுக்கப்பட்டது என்று கூறினார்.

    இதையடுத்து எமர்ஜென்சி காலத்தில் உயிர்நீத்தவர்களுக்கு மக்களவையில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    எமர்ஜென்சியை நினைவுகூர்ந்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசிய நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். இதையடுத்து மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    இதனையடுத்து, 50 ஆண்டுகளுக்கு முன் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலையை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், பிரகலாத் ஜோஷி, கிரண் ரிஜிஜு மற்றும் லாலன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் இந்திரா காந்தி, எமர்ஜென்சிக்கு எதிரான முழக்கங்களை பாஜக எம்.பி.க்கள் எழுப்பினர்.

    • இந்திரா காந்தியால் சர்வாதிகாரம் திணிக்கப்பட்டது. 25 ஜூன் 1975 எப்போதும் கருப்பு தினமாக அறியப்படும்.
    • எமர்ஜென்சி காலத்தில் உயிர்நீத்தவர்களுக்கு மக்களவையில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    புதுடெல்லி:

    மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இணைந்து ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

    சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடியும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து சபாநாயகர் உரையாற்றினார். அவர் கூறுகையில்,

    * முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தினார்.

    * இந்திரா காந்தியால் சர்வாதிகாரம் திணிக்கப்பட்டது. 25 ஜூன் 1975 எப்போதும் கருப்பு தினமாக அறியப்படும்.

    * எமர்ஜென்சியின்போது நாட்டின் அதிகாரத்தை சிதைத்ததோடு ஒட்டுமொத்த தேசமும் சிறைக்குள் அடைக்கப்பட்டது.

    * எமர்ஜென்சி காலத்தில் ஊடக சுதந்திரம் நசுக்கப்பட்டது என்று கூறினார்.

    இதையடுத்து எமர்ஜென்சி காலத்தில் உயிர்நீத்தவர்களுக்கு மக்களவையில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    எமர்ஜென்சியை நினைவுகூர்ந்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசிய நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.

    இதையடுத்து மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓம் பிர்லாவுக்கு பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
    • இந்திய அரசியலமைப்பை காக்கும் உங்கள் கடமையைச் செய்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

    மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இணைந்து ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

    ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடியும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து ராகுல் காந்தி கூறுகையில்,

    * எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதன் மூலம், இந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்த எங்களை அனுமதிப்பதன் மூலம், இந்திய அரசியலமைப்பை காக்கும் உங்கள் கடமையைச் செய்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

    * எதிர்க்கட்சிகள் மக்களின் குரலை எதிரொலிக்கும். உங்களையும் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து உறுப்பினர்களையும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன் என்று கூறினார்.

    • காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலராம் ஜாகருக்கு அடுத்தபடியாக 2-வது முறையாக சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வாகி உள்ளார்.
    • ஓம் பிர்லா சபாநாயகராக இருந்தபோதுதான் 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.

    மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இணைந்து ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

    ஓம் பிர்லாவுக்கு பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

    சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து அவர் கூறுகையில்,

    * அவையின் இருக்கையில் ஓம் பிர்லா அமர்ந்திருப்பது இந்த அவையின் அதிர்ஷ்டம்.

    * தேசத்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய இந்த அவை உங்களுக்கு துணை நிற்கும்.

    * 18-வது மக்களவை பல்வேறு புதிய சாதனைகளை படைத்து வருவதை நாம் பார்க்கிறோம்.

    * காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலராம் ஜாகருக்கு அடுத்தபடியாக 2-வது முறையாக சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வாகி உள்ளார்.

    * 2-வது முறை சபாநாயகராக உங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு மிகப்பெரியது.

    * எதிர்காலத்திலும் எங்களை வழிநடத்த உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்.

    * 17-வது மக்களவையில் பல்வேறு மிக மிக முக்கியமான சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டன.

    * ஓம் பிர்லா சபாநாயகராக இருந்தபோதுதான் 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.

    * 3 புதிய குற்றவியல் நடைமுறை மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

    * மூன்றாம் பாலினத்தவர்கள் உரிமைகள் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.

    * 17-வது மக்களவையில் ஓம் பிர்லாவின் பங்களிப்பு அளப்பரியது.

    * அவையில் பல்வேறு புதிய முன்னெடுப்புகளை ஓம் பிர்லா மேற்கொண்டார்.

    * ஓம் பிர்லா தலைமையில் ஜி20 நாடுகளின் சபாநாயகர்கள் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

    * வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தொலைநோக்கு சிந்தனையை அடைய தேசம் சரியான பாதையில் செல்கிறது.

    * மக்களவை என்பது வெறும் நான்கு சுவர் அல்ல 140 கோடி மக்களின் விருப்ப மையம்.

    * கொரோனா போன்ற மிக சிக்கலான கால கட்டங்களிலும் அவையை திறம்பட நடத்தினார் என்று கூறினார்.

    • சபாநாயகர் பதவிக்கான இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட கொடிக்குன்னில் சுரேஷ் தோல்வி அடைந்தார்.
    • பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இணைந்து ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

    புதுடெல்லி:

    மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்கட்சிகள் சார்பில் மவெலிக்கரா எம்.பி. கே. சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர்.

    சபாநாயகர் பதவிக்கான இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட கொடிக்குன்னில் சுரேஷ் தோல்வி அடைந்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் சபாநாயகராக ஓம் பிர்லா தேவு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இணைந்து ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

    ஓம் பிர்லாவுக்கு பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

    • நாங்கள் துணை சபாநாயகர் பதவி பற்றி கேட்டோம். அப்போது எங்களுக்கு எந்த உறுதிமொழியும் வழங்கப்படவில்லை.
    • இந்தத் தேர்தலின் முழுப்பொறுப்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமையால்தான் என்றார்.

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதியாக தேர்வானவர்கள் எம்.பி.க்களாக பதவி ஏற்றுக்கொண்டுள்ளனர். கடந்த 24-ந்தேதி தொடங்கிய முதல் நாள் பாராளுமன்ற கூட்டத்தில் 262 பேரும், நேற்று 271 பேரும் எம்.பி.க்களாக பதிவியேற்றுக்கொண்டுள்ளனர்.

    புதிய எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதற்காக ஒடிசாவை சேர்ந்த மகதாப்பை தற்காலிக சபாநாயகராக ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து அவரது முன்னிலையில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர்.

    இதையடுத்து, பாராளுமன்ற சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 11 மணிக்கு நடைபெற இருக்கிறது. பாராளுமன்ற வரலாற்றில் மூன்றாவது முறையாக நடைபெற இருக்கும் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்கட்சிகள் சார்பில் மவெலிக்கரா எம்.பி. கே. சுரேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இந்த நிலையில், சபாநாயகர் தேர்தலில் எதற்காக போட்டியிடுகிறோம் என்பது குறித்து எதிர்கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுரேஷ் கூறியதாவது:-

    நாங்கள் சபாநாயகருக்கு எதிராக தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. ஆனால் மோடி தலைமையிலான அரசாங்கம், இந்திய கூட்டணியை குறிப்பாக காங்கிரஸ் கட்சித் தலைமையை அணுகியபோது, நாங்கள் துணை சபாநாயகர் பதவி பற்றி கேட்டோம். அப்போது எங்களுக்கு எந்த உறுதிமொழியும் வழங்கப்படவில்லை.

    முதலில் நீங்கள் சபாநாயகர் தேர்தலை ஆதரவு அளிங்கள், அதன் பிறகு துணை சபாநாயகரை பற்றி பேசலாம் என்றனர்.

    அந்த பதில் எங்களுக்கு திருப்திகரமாக இல்லை. எனவே, சபாநாயகர் தேர்தலில் போட்டியிட எங்கள் தலைவர்கள் முடிவு செய்தனர்.

    இந்த தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிடிவாதமான நிலைப்பாட்டால் ஏற்பட்டது. இல்லாவிட்டால் தவிர்த்திருக்கலாம். ஆனால், அவர்கள் எதிர்க்கட்சிகளுடன் ஒத்துழைக்க தயாராக இல்லை. துணை சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சிக்கு வாய்ப்பளிக்க தயாராகவும் இல்லை.

    அதனால் தான் இன்று தேர்தல் நடக்கிறது. ஆனால், இந்தத் தேர்தலின் முழுப்பொறுப்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமையால்தான் என்றார்.

    • எதிர்கட்சிகள் சார்பில் மவெலிக்கரா எம்.பி. சுரேஷ் போட்டியிடுகிறார்.
    • மக்களவையில் துணை சபாநாயகர் பதவியை தர பா.ஜ.க. மறுத்தது.

    பாராளுமன்ற சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 11 மணிக்கு நடைபெற இருக்கிறது. பாராளுமன்ற வரலாற்றில் மூன்றாவது முறையாக நடைபெற இருக்கும் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்கட்சிகள் சார்பில் மவெலிக்கரா எம்.பி. கே. சுரேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஓம் பிர்லா ராஜஸ்தானின் கோட்டா தொகுதி எம்.பி. ஆவார். இவர் மூன்றாது முறையாக எம்.பி.-ஆக பதவியேற்றுள்ளார். எதிர்கட்சி சார்பில் போட்டியிடும் மவெலிக்கரா சுரேஷ் எட்டாவது முறையாக எம்.பி.-ஆக பதவியேற்று இருக்கிறார்.

    முன்னதாக 1952 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் பாராளுமன்றத்தில் சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. மக்களவையில் துணை சபாநாயகர் பதவியை தர பா.ஜ.க. மறுத்தது.

    இதனால் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்வு செய்யப்படும் சபாநாயகருக்கு எதிர்கட்சிகள் ஆதரவு தர மறுத்தது. சபாநாயகருக்கு ஆதரவு இல்லை என்ற நிலைப்பாடு காரணமாக சபாநாயகரை தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்படுகிறது.

    • சபாநாயகருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • மறைந்த எம்.பி.க்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு சமீபத்தில் 7 கட்டங்களாக நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பாரதீய ஜனதா கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.

    காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணிக்கு 234 இடங்கள் கிடைத்தன. பாராளுமன்றத்தில் 240 எம்.பி.க்களுடன் பாரதீய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பாரதீய ஜனதா இந்த தடவை ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் கிடைக்காததால் 16 எம்.பி.க்கள் வைத்துள்ள தெலுங்கு தேசம், 12 எம்.பி.க்கள் வைத்துள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்து இருக்கிறது. நரேந்திர மோடி கடந்த 9-ந்தேதி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார்.

    அவருடன் மத்திய மந்திரிகளும் பதவி ஏற்றனர். இந்தநிலையில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்கவும், சபாநாயகர், துணை சபா நாயகரை தேர்வு செய்யவும் பாராளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு கூடியது. இன்றும், நாளையும் முதல் 2 நாட்கள் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்க உள்ளனர்.

    முன்னதாக இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் தற்காலிக சபாநாயகருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பாராளுமன்ற தற்காலிக சபாநாயகராக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 7 தடவை தொடர்ந்து வெற்றிபெற்ற எம்.பி.யான பா.ஜனதா எம்.பி. பர்த்ரு ஹரி மகதாப் பதவி ஏற்றுக்கொண்டார்.

    அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். இந்த எளிய விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அதன்பிறகு தற்காலிக சபாநாயகர் ஜனாதிபதி மாளிகையில் இருந்து புறப்பட்டு பாராளுமன்ற கட்டிடத்துக்கு வந்தார்.

    இதையடுத்து புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழா தொடங்கியது. பர்த்ருஹரி மகதாப் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து இன்றைய கூட்டத்தை தொடங்கினார். முதலில் மறைந்த எம்.பி.க்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதையடுத்து பாராளுமன்ற ஆளும் கட்சி தலைவர் என்ற முறையில் எம்.பி.யாக பதவி ஏற்க பிரதமர் மோடிக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று முதல் நபராக பிரதமர் மோடி எம்.பி.யாக பதவி ஏற்றார்.

    இதைத் தொடர்ந்து தற்காலிக சபாநாயகருக்கு உதவுவதற்கு 5 எம்.பி.க்கள் கொண்ட குழு அமைக் கப்பட்டது. அந்த குழுவில் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த எம்.பி. கொடிகுன்னில் சுரேஷ், தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பந்தோ பாத்யாய, பா.ஜ.க.வை சேர்ந்த ராதாமோகன் சிங், பகன்சிங் குலஸ்தே ஆகிய 5 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

    பாராளுமன்றத்தில் உள்ள 543 எம்.பி.க்களுக்கும் தற்காலிக சபாநாயகரால் மட்டுமே பதவி பிரமாணம் செய்து வைக்க இயலாது என்பதால் அவருக்கு உதவ இந்த 5 எம்.பி.க்கள் குழு அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த 3 எம்.பி.க்கள் அந்த குழுவில் இடம் பெற மறுத்துவிட்டனர்.

    இதையடுத்து தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப்பும், பா.ஜ.க. எம்.பி.க்கள் இருவரும் புதிய எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சியை மேற்கொண்டுள்ளனர். பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய மந்திரிகள் புதிய எம்.பி.க்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து ஆங்கில எழுத்து வரிசை அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு புதிய எம்.பி.க்களாக பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர். இன்று மாலை வரை புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு நிகழ்வு நடைபெற உள்ளது.

    நாளை (செவ்வாய்க்கிழமை) புதிய எம்.பி.க்கள் பதவிஏற்பு தொடர்ந்து நடைபெறும். நாளையுடன் அனைத்து எம்.பி.க்களும் பதவி ஏற்று விடுவார்கள். அதற்கேற்ப மாநிலம் வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    • ஆந்திர மாநிலம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • அமராவதி கட்டுமான பணிகளுக்கு விரைந்து நடவடிக்க நிதி பங்களிப்பை கேட்க வேண்டும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் என். டி. ஆர் மாவட்டம் விஜயவாடாவில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடந்தது.

    பாராளுமன்ற சபாநாயகர் தேர்தல் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா என்னிடம் போனில் பேசினார். நான் தெலுங்கு தேசம் கட்சிக்கு சபாநாயகர் பதவி தேவையில்லை. அரசுக்கு நிதி மட்டுமே வேண்டும் என்று கூறினேன்.

    ஆந்திர மாநிலம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல உதவி வேண்டுமென கேட்டேன். ஆந்திர மக்கள் கூட்டணியை நம்பி ஆட்சியை கொடுத்ததாக அவரிடம் தெரிவித்தேன். மேலும் பதவிகள் கேட்டால் மாநில நலன்கள் பாதிக்கப்படும். மாநில நலன்களே நமக்கு முக்கியம்.


    ஒவ்வொரு எம்.பி.க்கும் 3 துறைகளை ஒதுக்குகிறேன். அந்தந்த துறைகளில் உள்ள நிதி மற்றும் திட்டங்களை மாநிலத்திற்கு கொண்டுவர வேண்டும். எம்.பி.க்கள் சம்பந்தப்பட்ட மத்திய மந்திரிகளுடன் பேசி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    தெலுங்கு தேசம் கட்சிக்கு 16 எம்.பி.க்கள் பலம் இருப்பதால் மாநிலத்திற்கு கூடுதல் நிதி கிடைக்க முயற்சி எடுக்க வேண்டும். போலாவரம், அமராவதி கட்டுமான பணிகளுக்கு விரைந்து நடவடிக்க நிதி பங்களிப்பை கேட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பாராளுமன்ற சபாநாயகர் பதவியை சந்திரபாபு நாயுடு கேட்டு அடம்பிடிப்பதாக தகவல் வந்த நிலையில் சந்திரபாபு நாயுடு தற்போது பதவியை விரும்பவில்லை எனக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×