என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய ரூபாய்"
- ரணில் விக்ரமசிங்கே அடுத்த வாரம் 2 நாள் பயணமாக இந்தியா வரவுள்ளார்.
- இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துடன் இந்தியா வளர்ச்சியை காண்கிறது
கொழும்பு :
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே அடுத்த வாரம் 2 நாள் பயணமாக இந்தியா வரவுள்ளார். இந்த பயணத்தின்போது அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே உரையாற்றினார்.
அப்போது இந்தியாவின் வளர்ச்சி குறித்து பேசிய அவர் "ஜப்பான், கொரியா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் கிழக்கு ஆசியா 75 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது. இ்ப்போது இந்தியாவுக்கான நேரம். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துடன் இந்தியா வளர்ச்சியை காண்கிறது" என்றார்.
முன்னதாக உரையாற்றிய இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்தின் தலைவர் டி.எஸ். பிரகாஷ் இலங்கைப் பொருளாதாரத்தில் இந்திய ரூபாயை மேம்படுத்துமாறு அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய ரணில், "இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு நிகரான பொதுவான நாணயமாக மாறினால் அதை பயன்படுத்துவதில் இலங்கைக்கு எந்த தயக்கமும் இல்லை. அதை எப்படி செய்வது என்று நாம் கண்டுபிடிக்க வேண்டும். இதுபோன்ற மாற்றங்களை வெளியுலகில் இருந்து எடுத்துக் கொள்ள நாம் மனதை விசாலமாக வைத்திருக்க வேண்டும்" என கூறினார்.
மேலும் அவர், "உலகம் வளர்ச்சியடைந்து வருகிறது, குறிப்பாக பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா விரைவான வளர்ச்சியை அடைந்து வருகிறது" என தெரிவித்தார்.
- இலங்கை இந்தியா இடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
- அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் இந்திய பயணம் குறித்து இலங்கை வெளியுறவு மந்திரி விரிவாக பேசினார்.
இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளதார நெருக்கடியின்போது இந்தியா பல்வேறு வகைகளில் அந்த நாட்டுக்கு உதவியது. நிதி உதவி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கியதோடு, இலங்கைக்கு சர்வதேச நிதியம் கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் இந்தியா செய்தது. இந்த சூழலில் கடந்த ஆண்டு இலங்கை அதிபராக பதவியேற்றதற்கு பிறகு முதல் முறையாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அரசு முறை பயணமாக கடந்த 20-ந் தேதி இந்தியா வந்தார்.
இந்த பயணத்தின்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த நிலையில் இலங்கை தலைநகர் கொழும்புவில் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி அலி சப்ரி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் இந்திய பயணம் குறித்து விரிவாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இரு நாடுகளுக்கும் இடையே துறைமுக இணைப்பின் முக்கியத்துவம் குறித்து இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். அடுத்தகட்டத்தை அடைய, எங்களுக்கு முதலீடுகள் தேவை. இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் வழிகளை நாங்கள் விவாதித்தோம். இரு அரசாங்கங்களுக்கு இடையில் மட்டுமன்றி தனியார் துறைகளுக்கு இடையிலான உறவும் வலியுறுத்தப்பட்டன
தென்னிந்திய பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியில் இலங்கைக்கு நன்மையளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் பரிசீலிக்கப்பட்டது. இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உதவும் வகையில் இந்திய பல்கலைக்கழகத்தை இணைத்துக்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. டாலர், யூரோ மற்றும் யென் ஆகியவற்றை ஏற்றுக்கொள்வது போல் இந்திய ரூபாயை பொது பணமாக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்.
இந்திய ரூபாயின் நேரடி பயன்பாட்டை அனுமதிப்பது, இந்திய சுற்றுலா பயணிகள் மற்றும் வணிகர்களுக்கு பல நாணய மாற்றங்களின் தேவையைத் தடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரிக்ஸ் மாநாட்டில் சீன யுவானை செலாவணிக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டது
- 2023ல் பல நாடுகள் தங்களுக்கிடையே மாற்று கரன்சியை பயன்படுத்த உடன்பட்டன
உலக நாடுகளில் வல்லரசாக அமெரிக்கா திகழ முக்கிய காரணம் அதன் ராணுவ பலமும், சர்வதேச வர்த்தகங்களில் அமெரிக்க கரன்சியான டாலர் (Dollar), பெருமளவில் பயன்படுத்தப்படுவதும்தான்.
அமெரிக்காவின் டாலர் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகளை பல நாடுகள் சில ஆண்டுகளாக எடுக்க துவங்கின.
கொரோனாவிற்கு முந்தைய காலகட்டத்தில் சீனா அதன் கரன்சியை வர்த்தகத்திற்கு பயன்படுத்த பிரிக்ஸ் (BRICS) மாநாடுகளில் முன்மொழிந்தது. ஆனால், கோவிட் பெருந்தொற்றால் இந்த முடிவு தள்ளி போடப்பட்டது.

2021ல் துவங்கிய, டாலருக்கு மாற்றாக ஒரு கரன்சியை தேடும் டீ-டாலரைசேஷன் (de-Dollarization) எனப்படும் இந்த முயற்சி, 2023ல் வேகமெடுக்க தொடங்கியது.
ரஷியா மற்றும் அர்ஜெண்டினா சீனாவுடனான வர்த்தகத்திற்கு சீன யுவான் (Yuan) பயன்படுத்த தொடங்கின.
கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் சீனாவும், இந்தியாவும் தங்கள் நாட்டு கரன்சிகளை மாற்றாக கொண்டு வர முயற்சி எடுத்தன.
எண்ணெய் சாராத வர்த்தகத்திலும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இலங்கையும், செலாவணிக்கு "இந்திய ரூபாய்" பயன்படுத்த உடன்பட்டுள்ளன.
லத்தீன் அமெரிக்கா, தென் கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் பல நாடுகள் டாலருக்கு மாற்று கரன்சிக்கான தேடுதலை துவங்கியுள்ளன.
ஒரு சில நாடுகள் டிஜிட்டல் கரன்சி மற்றும் கிரிப்டோகரன்சிகளில் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராகி விட்டன.
எதிர்காலத்தில் பல நாடுகள் டாலருக்கு மாற்றான வழிமுறையில் தீவிரமாக வணிகத்தில் ஈடுபடும் போது டாலருக்கான தேவை குறையும் என்றும் இதன் காரணமாக அமெரிக்காவிற்கு உள்நாட்டிலும் அயல்நாடுகளிலும் சிக்கல்கள் அதிகமாகும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- நேற்று 1 டாலரின் மதிப்பு ₹85.18 ஆக இருந்தது
- அந்நியச் செலாவணி கையிருப்பு ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் திங்களன்று (டிசம்பர் 23) 85.12 ஆக சரிந்தது. தொடர்ந்து நேற்று [செய்வ்வாய்கிழமை] 1 டாலரின் மதிப்பு ₹85.18ஆக இருந்த நிலையில், இன்று [புதன்கிழமை] மேலும் சரிந்து ₹85.41ஆக உள்ளது. தொடர்ச்சியாக 6வது முறையாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாயின் மதிப்பை வீழ்ச்சியடையச் செய்து வருகிறது. அமெரிக்கக் கடன் பத்திரங்கள் அதிகரிப்பு மற்றும் இறக்குமதியாளர்களிடமிருந்து வலுவான டாலர் தேவை ஆகியவை இந்த வீழ்ச்சிக்குக் காரணம்.
மேலும் மாத இறுதியில் டாலரின் தேவை அதிகரித்தது மற்றும் அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் இறக்குமதி வரி பற்றிய அச்சமும் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. எதிர்காலத்தில் நிலையான ரூபாய் மதிப்பு சரிவு தொடரலாம் என்று வர்த்தகர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
- கடந்த மாதம் 27-ந்தேதி இதுவரை இல்லாத அளவில் 85.80 ரூபாய் அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்தது.
- 85.64 ரூபாயாக இருந்த நிலையில் இன்று காலை 11 பைசா குறைந்து 85.75 ஆக உள்ளது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீச்சியை கண்டு வரும் நிலையில் இன்று காலை 11 பைசா குறைந்து 85.75 ரூபாயாய உள்ளது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த ஆண்டு மிகவும் மோசமான வகையில் சரிந்து காணப்பட்டது. 2025-ம் ஆண்டு பிறந்த நிலையிலும் சரிவு தொடர்ந்து நீடிக்கிறது. நேற்று 85.64 ரூபாயாக இருந்தது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி (interbank foreign exchange) ஓபனில் இந்திய ரூபாயின் மதிப்பு 85.69 ரூபாயாக இருந்தது. பின்னர் நேற்றைய மதிப்பை விட 11 பைசா குறைந்து 85.75 ரூபாயாக குறைந்தது. கடந்த மாதம் 27-ந்தேதி இதுவரை இல்லாத அளவில் 85.80 ரூபாய் அளவிற்கு சரிவை கண்டது.
2024-ம் ஆண்டில் பெரும்பாலான நாட்டின் நாணயங்களுக்கு நிகரான டாலர் மதிப்பு உயர்ந்ததாகவும், இந்த ஆண்டு தொடர்ந்து வலுவான நிலையில் இருப்பதாகவும் அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வெளிநாட்டு நிதி வெளியேற்றம் மற்றும் அமெரிக்க நாணய மதிப்பு உயர்வு ஆகியவற்றின் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து வருகிறது.
டொனால்டு டிரம்ப் அதிபராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து சரிந்த வண்ணம் உள்ளது.
- சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, தொடர்ந்து வெளியேறும் வெளிநாட்டு மூலதனம் வீழ்ச்சிக் காரணம்.
- வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி மாற்றத்தின் வர்த்தக தொடக்கத்தில் 27 பைசா குறைந்துள்ளது.
வாரத்தின் முதல் நாளான இன்றைய வர்த்தகம் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 27 பைசா குறைந்து இதுவரை இல்லாத அளவிற்கு 86.31 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, தொடர்ந்து வெளியேறும் வெளிநாட்டு மூலதனம் மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தையில் வெளிப்படும் எதிர்மறையான டிரெண்ட் ஆகியவை இந்திய பண வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு வளர்ச்சியால் சந்தையில் எதிர்பார்த்ததை விட டாலர் மதிப்பு வலுப்பெற்றதாகவும் கூறப்படுகிறது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி மாற்றத்தில், இன்று காலை வர்த்தகத்தில் டாலருக்கு இணையான இந்திய ரூபாய் 86.12 ஆக தொடங்கியது. பின்னர் 27 பைசா சரிந்து 86.31 ரூபாய இருந்தது. இது முந்தைய நாள் வர்த்தக முடிவில் இருந்து இது 27 பைசா சரிவாகும்.
- 2024 அக்டோபரிலிருந்து ரூபாய் மதிப்பு கிட்டத்தட்ட 4% வீழ்ச்சியடைந்துள்ளது.
- அமெரிக்காவின் புதிய வர்த்தகக் கட்டுப்பாடுகள் அமெரிக்க டாலரின் மதிப்பை உயர்த்தியுள்ளது.
வாரத்தின் முதல் நாளான இன்றைய வர்த்தகம் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 67 பைசா குறைந்து இதுவரை இல்லாத அளவிற்கு 87.31 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பின் எதிரொலியாக அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 87 ரூபாய்க்கு மேல் சரிந்துள்ளது. 2024 அக்டோபரிலிருந்து ரூபாய் மதிப்பு கிட்டத்தட்ட 4% வீழ்ச்சியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் புதிய வர்த்தகக் கட்டுப்பாடுகள் அமெரிக்க டாலரின் மதிப்பை உயர்த்தியுள்ளது. அமெரிக்க டாலரின் வலிமை சீன யுவான் உட்பட பிற ஆசிய நாணயங்களையும் பாதித்துள்ளது. சீன யுவானின் சரிவு இந்திய நாணயத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூபாய் மட்டுமல்ல, டிரம்ப் வரிவிதிப்பின் விளைவாக இந்திய பங்குச் சந்தைகளும் வீழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.