search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலைஞர்"

    • தோட்டக்கலை பயிர்களில் அதிக மகசூல் பெற நடவடிக்கை
    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் நடப்பு நிதியாண்டில் தேசிய தோட்டக்கலை இயக் கம் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 3 லட்சம் நிதி இலக்கு பெறப்பட்டுள் ளது. நடவுப் பொருள் உற்பத்தி இனத்தின் கீழ் புதிதாக திசு வளர்ப்பு கூடம் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் மானியம் வீதம் ஒரு எண்ணத்திற்கு ரூ.20 லட்சம் நிதி இலக்கும், அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் திறந்த வெளி மகரந்த சேர்க்கை மூலம் காய்கறிகள் மற்றும் நறுமணப் பயிர்களின் விதை உற்பத்தி செய்ய ஹெக்டேருக்கு ரூ.35 ஆயிரம் மானியம் வீதம் அரை ஹெக்டேருக்கு ரூ.17500 நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது.

    பரப்பு விரிவாக்க இனத்தின்கீழ், உயர் ரக காய்கறி குழித்தட்டு நாற்று மூலம் சாகுபடி செய்திட ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் மானியம் வீதம் 70 ஹெக்டேருக்கு ரூ.14 லட்சம் நிதி இலக்கும், பல்லாண்டு வாசனைத் திரவிய பயிர்களான நல்ல மிளகு, கிராம்பு மற்றும் ஜாதிக்காய் நடவு செய் திட ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் மானியம் வீதம் 275 ஹெக்டேருக்கு ரூ.55 வட்சம் நிதி இலக்கும் பெறப்பட்டுள்ளது.

    அன்னாசி சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ.26,250 மானியம் வீதம் 40 ஹெக்டே ருக்கு ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் நிதி இலக்கும், கோகோ பயிர் சாகுபடி செய்திட ஹெக்டேருக்கு ரூ.12 ஆயிரம் மானியம் வீதம் 70 ஹெக் டேருக்கு ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் நிதி இலக்கும், இஞ்சி பயிர் சாகுபடி செய்திட ஹெக்டேருக்கு ரூ.12 ஆயிரம் மானியம் வீதம் 20 ஹெக்டேருக்கு ரூ.2 லட்சத்து நாற்பதாயிரம் நிதி இலக்கும் பெறப்பட்டுள்ளது.

    நீர் ஆதார அமைப்பு உருவாக்குதல் இனத்தின் கீழ் தனிநபர் நீர் அறுவடை அமைப்பு ஒன்றிற்கு ரூ.75 ஆயிரம் மானியம் வீதம் மூன்று அமைப்பிற்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் நிதி இலக்கும், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மற்றும் பூச்சி மேலாண்மை இனத் தின் கீழ் ஹெக்டேருக்கு ரூ.6,200 மானியம் வீதம் 500 ஹெக்டேருக்கு ரூ.6 லட் சம் நிதி இலக்கும் பெறப் பட்டுள்ளது. விவசாயி களுக்கான உள் மாநில அளவிலான தோட்டக்கலை சார்ந்த பயிற்சிக்கு விவசாயி ஒருவருக்கு ரூ.2 ஆயிரம் வீதம் 50 விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம், மாநில அளவிலான பயிற்சிக்கு தலா ஒரு விவசாயிக்கு ரூ.10.500 வீதம் 10 விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் மற்றும் மாவட்ட அள விலான கருத்தரங்கிற்கு ரூ.2 லட்சம் நிதி இலக்காக பெறப்பட்டுள்ளது. தேசிய தோட்டக் கலை இயக்க திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி இலக்கில் 80 சதவிகிதம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் இந்த வருடம் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்துக்க ளில் செயல்படுத்தப்படும்.

    இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும். விவசாயி கள் www.tnhorticulture.tn.gov.in/tnhortnet என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார தோட்ட கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகலாம்.

    இவ்வாறு கூறி உள்ளார்.

    • திருமங்கலத்தில் நாளை அமைதி பேரணி நடக்கிறது.
    • கலைஞரின் 4-ந் ஆண்டு நினைவுதினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது.

     மதுரை

    மதுரை புறநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலகம் போற்றும் உத்தம தலைவர், தமிழர்களின் ஒப்பற்ற தலைவர், செம்மொழி கண்ட நாயகர், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் 4-ந் ஆண்டு நினைவுதினம் வருகிற 7-ந் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது.

    இதையொட்டி மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து மாபெரும் அமைதிப் பேரணி புறப்பட்டு, திருமங்கலத்தில் உள்ள தி.மு.க. அலுவலகம் சென்றடைந்து அங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்படுகிறது.

    கருணாநிதி நினைவே ந்தலை போற்றும் இந்த நிகழ்ச்சிகளில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், முன்னோடிகள், ஊராட்சி செயலாளர்கள், தொண்டர்கள் திரளானோர் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    திமுக தலைவர் கருணாநிதி மரணம் நமது இதயத்தில் இடியாக இறங்கியுள்ள நிலையில், அவரது சிறுவயது முதல் அரசியல் வாழ்க்கையை பார்க்கலாம். #RIPKalaignar #Karunanidhi #DMK #கலைஞர்
    சென்னை:

    நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924-ம் ஆண்டு ஜூன் 3-ல் ஏழை குடும்பத்தில் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. தனது பள்ளிப் பருவத்திலேயே நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    நீதிக்கட்சியின் தூணாக இருந்த பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14-ம் வயதில், சமூக இயக்கங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தனது வளரும் பருவத்தில், வட்டார மாணவர்கள் சிலரின் உதவியுடன் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை உருவாக்கினார். 

    இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. சில காலத்துக்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான ‘அனைத்து மாணவர்களின் கழகம்’ என்ற அமைப்பாக உருபெற்றது.இது திராவிட இயக்கத்தின் முதல் மாணவர் பிரிவாக இருந்தது. 

    கருணாநிதி, மற்ற உறுப்பினர்களுடனான சமூகப் பணியில் மாணவர் சமூகத்தையும் ஈடுபடுத்தினார். தி.மு.க. கட்சியின் உத்தியோகபூர்வ செய்தித்தாளான முரசொலி வளர்ந்து அதன் உறுப்பினர்களுக்காக ஒரு பத்திரிகை ஒன்றை அவர் ஆரம்பித்தார். 



    கருணாநிதி தமிழ் அரசியலில் களமிறங்குவதற்கு உதவிய முதல் பிரதான எதிர்ப்பு, 1953-ம் ஆண்டு கல்லக்குடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இந்த தொழிற்துறை நகரத்தின் அசல் பெயர் கள்ளகுடி. இது வட இந்தியாவில் இருந்து ஒரு சிமென்ட் ஆலை ஒன்றை உருவாக்கிய சிம்மோகிராம் பிறகு டால்மியாபுரத்தில் மாற்றப்பட்டது. 

    தி.மு.க. அந்த பெயரை கள்ளுகுடிக்கு மாற்ற வேண்டுமென விரும்பினார் . கருணாநிதி மற்றும் அவருடைய தோழர்கள் ரெயில் நிலையத்திலிருந்து டால்மியாபுரம் என்ற பெயரை அழித்தனர் மற்றும் ரெயில்களின் பாதைகளைத் தடுப்பதைத் தடுக்கிறார்கள். ஆர்ப்பாட்டத்தில் இருவர் இறந்தனர், கருணாநிதி கைது செய்யப்பட்டார்

    1957 இல் நடைபெற்ற திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ் நாட்டில் மத்தியஅரசால் இந்தி திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1957-ம் ஆண்டு அக்டோபரில் அன்றைய நாளை இந்தி எதிர்ப்பு நாளாக பெருந்திரளான மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பது என முடிவானது. 



    1963-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னையில் கூட்டப்பட்டது. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் மத்திய அரசின் புரிந்துகொள்ளாமையை உணர்த்தும் விதமாக இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்பு போராட்டம் நடத்துவெதென மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. நவம்பர் 16 அன்று அண்ணாதுரையும், நவம்பர் 19 அன்று கருணாநிதியும் கைது செய்யப்பட்டு 25 நவம்பர் அன்று ஐகோர்ட் உத்தரவால் விடுவிக்கப்பட்டனர்.

    1957-ம் ஆண்டு திமுக தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து கருணாநிதி குளித்தலையில் போட்டியிட்டு வென்று, முதல் முறையாக திமுக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைக்கவும், முதல் முறையாக கருணாநிதி தனது சட்டமன்ற வரலாற்றைத் துவக்கவும் வழிவகுத்தது.

    1967-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிய பிடித்தது. தி.மு.க.வின் தொடக்க கால உறுப்பினர் கருணாநிதி. அவர், 1957ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 40 ஆண்டுகளாக தி.மு.க.வின் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார். தமிழகத்தின் முதல்வராக ஐந்துமுறை கருணாநிதி பதவி வகித்துள்ளார்.

    1969 - 1971, 1971 - 1976, 1989 - 1991, 1996 - 2001, 2006 - 2011  ஆகிய ஆண்டுகளில் அவர் முதல்வராக பதவி வகித்துள்ளார். இன்றளவும் பெருமையாக கூறக்கூடிய, இன்றைய தேதியிலும் மற்ற மாநிலங்கள் கொண்டு வராத பல முற்போக்கு, முன்னேற்ற திட்டங்களை அவர் தனது ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தினார். 
    ×