search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகள்"

    • போனில் உள்ள மகளின் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை டவுன்லோடு செய்து சமூக வலைதளங்களில் தனது கணவர் பரப்பியுள்ளார்
    • மகள் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

    கர்நாடகாவில் 18 வயது மகளின் அந்தரங்க வீடியோக்களை தந்தையே சமூக வலைதளங்களில் பரப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தையின் இந்த செயலை அறிந்து மகள் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். இதனைதொடர்ந்து பெண்ணின் தாய் தனது கணவன் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

    அவரது புகாரில், உறவினரின் பையனை மகள் காதலித்து வந்தது தனது கணவனுக்கு பிடிக்கவில்லை. எனவே அந்த பையனை வீட்டுக்கு அழைத்து வந்து அடித்து துன்புறுத்தி, அவனின் செல் போனில் உள்ள மகளின் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை டவுன்லோடு செய்து சமூக வலைதளங்களில் தனது கணவர் பரப்பியுள்ளார்.

    மேலும் தன்னையும் தனது மகளையும் தொடர்ந்து அடித்து துன்புறுத்தியதால் இருவருக்குமே காயங்கள் ஏற்பட்டுள்ளது. தனது வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதால் மனமுடைந்த மகள் நேற்று பினாயில் குடித்து தற்கொலை செய்ய முயன்றாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகாரின் மீது போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். 

    • தண்டனை கொடுத்த தந்தையின் செயலுக்கு இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
    • பத்து வினாடிகளுக்கு மேல் போராடிய அவள் சோர்வடைந்தாள்.

    சீனாவில் நீண்ட நேரம் தொலைக்காட்சியை பார்த்த 3 வயது குழந்தை கையில் கிண்ணத்தை கொடுத்து, அதனை கண்ணீரால் நிரப்புமாறு தண்டனை கொடுத்த தந்தையின் செயலுக்கு இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    சீனாவின் குவாங்சி ஜுவாங் பகுதியில் உள்ள யூலின் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    இரவு உணவு தயாரித்தபோது, தந்தை தனது மகள் ஜியாஜியாவை சாப்பாட்டு மேஜைக்கு அழைத்தார். ஆனால் டிவி பார்ப்பதில் மூழ்கியிருந்ததால் அவள் பதிலளிக்கவில்லை.

    விரக்தியடைந்த அவர் தொலைக்காட்சியை ஆஃப் செய்தார். இதனால் ஜியாஜியா அழத் தொடங்கினாள்.

    இதைக்கண்ட ஜியாஜியா தந்தை ஒரு கிண்ணத்தை அவளிடம் கொடுத்து, இந்த கிண்ணத்தை உன் கண்ணீரால் நிரப்பியவுடன் நீ டிவி பார்க்க மீண்டும் தொடங்கலாம் என்று கூறி உள்ளார்.

    ஜியாஜியா தனது கண்களுக்கு கீழே கிண்ணத்தை வைத்து கண்ணீரை சேகரிக்க முயற்சி செய்தார். பத்து வினாடிகளுக்கு மேல் போராடிய அவள் சோர்வடைந்தாள்.

    இந்த வீடியோ ஜியாஜியா அம்மா பகிர்ந்துள்ளார். பின்னர் ஜியாஜியா தந்தை அவளை சிரிக்கச்சொல்லி போட்டோ எடுத்தார். பின் சிரிக்கும் புகைப்படத்தையும் அழும் புகைப்படத்தையும் அவளிடம் காண்பித்தது வேடிக்கையாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    சில நிமிடங்களுக்கு பின் பெற்றோர் குழந்தையை சமாதானப்படுத்தினாலும் அவர்களின் இந்த செயலை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

    • மொத்த மருத்துவமனையிலும் ஒரே ஒரு மருத்துவரே உள்ளார் என்று அங்குள்ளவர்கள் குற்றமசாட்டுகின்றனர்.
    • கூட்டநெரிசலில் திடீரென ஒருவர் பின் ஒருவராக மயங்கிவிழுந்தனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். இந்த விபத்து நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் அலறல் அந்த பகுதியையே ஆட்கொண்டுள்ளது.

    விபத்தில் சிக்கிய தனி நபர்களின் கதைகள் மனதை ரணமாக்குவதாக உள்ளன. டிரக்கில் கிடத்தப்பட்ட 6 சடலங்களுக்கு மத்தியில் அமர்ந்து அழுதுகொண்டிருக்கும் பெண் ஒருவர் அங்கு உள்ள தனது குழந்தையின் உடலை வெளியே எடுக்க உதவி கேட்டு அழுகிறார். படுகாயமடைந்த பலர் மருத்துவமனை நுழைவிடத்தில் கிடத்தப்பட்டு சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். மொத்த மருத்துவமனையிலும் ஒரே ஒரு மருத்துவரே உள்ளார் என்று அங்குள்ளவர்கள் குற்றமசாட்டுகின்றனர்.

    அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட போதுமான வசதிகள் அங்கு இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. படுகாயமடைந்தவர்கள்  ஓருவர் மீது ஒருவர் உயிரிழந்த உடல்களைப் போல் கிடக்கும் காட்சிகள் காண்போரை கலங்கடிக்கிறது. உயிரிழந்தவர்களுக்கு  மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் அறிவித்திருக்கும் நிலையில் முதலில், படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

    கூட்ட நெரிசலில் உயிர்பிழைத்தவர்கள் சொல்லும் விவரங்கள் மேலும் அதிர்ச்சியூட்டுகின்றன. நிகழ்ச்சி முடிந்ததும் போலே பாபா அமர்ந்திருந்த இடத்தின் காலடி மண்ணை எடுக்க பலர் காத்திருந்தனர். நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோதே திடீரென ஒருவர் பின் ஒருவராக மயங்கிவிழுந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் தனது தாய், மனைவி, 16 வயது மகள் ஆகிய மூவரையும் இழந்த வினோத் என்பவர் கூறுகையில், 'நான் அனைத்தையும் இழந்து நிற்கிறேன். அவர்கள் வெளியே ஒன்றாக வெளியே சென்றனர் என்பது மட்டுமே எனக்கு தெரியும், ஆனால் இங்கே வந்தது தெரியாது. இந்த விபத்தை கேள்விப்பட்டு அவர்கள் இங்கே வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வந்து தேடியபோது எனது மனைவி மகள் உடல்களை கண்டெடுத்தேன். எனது தாயின் உடல் கிடைக்கவே இல்லை' என்று தெரிவித்துள்ளார்.

    மகளைத் தொலைத்த தாய் ஒருவர் கூறுகையில், எனது மகளால் பேச முடியாது அழ மட்டுமே முடியும் அவளை எங்கு தேடியும் இந்த இடத்தில்  கண்டுபிடிக்கமுடியவில்லை என்று தேடியபடி செய்தியாளர்களிடம் தெரிவிக்கிறார்.

    குழந்தைகளை இழந்த தாய்மார்கள், தாய்மார்களை இழந்த குழந்தைகள் என பலர் இந்த சம்பவத்தில் பெரிய இழப்புகளை சந்தித்துள்ளனர். பல வருடங்களாக போலே பாபாவின் சத்சங்கத்தை கேட்க வந்துகொண்டிருந்தவர்களே இந்த கூட்டத்தில் அதிகம். இதற்கிடையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து போலே பாபா தலைமறைவாகியுள்ளார் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். 

    • சிறுவன் தனது வகுப்பு தோழியுடன் ஒரு கடையில் கூல்ட்ரிங்க்ஸ் குடித்துள்ளார்.
    • சிறுவனை கொலை செய்து விடுவேன் என்றும் பெண்ணின் தந்தை மிரட்டியுள்ளார்.

    உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் வழக்கறிஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து 17 வயது சிறுவனை கடத்தி சென்று கொடுமைப்படுத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அந்த சிறுவனை உயிருடன் காவல்துறையினர் மீட்டுள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக பேசிய கல்யாண்பூர் காவல் உதவி ஆணையர் அபிஷேக் பாண்டே, "பாதிக்கப்பட்ட 17 வயது சிறுவன் மருந்தகம் இளங்கலை படிப்பு படித்து வருகிறார். அந்த சிறுவன் தனது வகுப்பு தோழியுடன் ஒரு கடையில் கூலட்ரிங்க்ஸ் குடித்துள்ளார். இதனை பார்த்த பெண்ணின் தந்தை அந்த சிறுவனை தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்தி சென்று கொடுமைப்படுத்தியுள்ளார்.

    அந்த சிறுவனை கொலை செய்து விடுவேன் என்றும் பெண்ணின் தந்தை மிரட்டியுள்ளார். மீட்கப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.

    சிறுமியின் தந்தையான வழக்கறிஞர் பிரஜ் நரேன் நிஷாத் மற்றும் அவரது சகோதரர் தேஜ் நரேன் மீது கடத்தல், கொலை முயற்சி உட்பட பல பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

    அதே சமயம் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகப் பாதிக்கப்பட்ட சிறுவன் மீது போஸ்கோ வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வழக்கறிஞர்களின் கடும் அழுத்தத்தின் காரணமாகவே இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தந்தை மகள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது
    • டாக்சி டிரைவர்தான் தனது மகளைக் கொன்றதாக போலீசிடம் நாடகமாடியுள்ளார்.

    தந்தையர் தின கொண்டாட்டங்களுக்கு மத்தியில் டெல்லியில் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த தனது மகளை தந்தை கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் கஞ்வாலா பகுதியில் ரத்தத்தில் தோய்ந்த இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் நடந்திய விசாரணையில் அப்பெண்ணின் தந்தையே கொலையை அரங்கேற்றியுள்ளது தெரியவந்தது.

    அந்த பெண் தனது காதலனைத் திருமணம் செய்துகொள்ள விரும்பிய நிலையில் அவரது தந்தை தான் பார்த்த மாப்பிளையை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியுள்ளார். இதனால் தந்தை மகள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கஞ்வாலா பகுதிக்கு தனது மகளை டாக்சியில் அழைத்து வந்த தந்தை கண்ணாடி அறுக்கும் உபகரணத்தை வைத்து மகளை அறுத்துக் கொன்றுள்ளார்.

    மேலும், டாக்சி டிரைவர்தான் தனது மகளைக் கொன்றதாக போலீசிடம் நாடகமாடியுள்ளார். இறுதியில் உண்மை தெரியவந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை கண்ணாடி அறுக்கும் தொழில் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

    • அவரது சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றார்.
    • சமூக வலைதளங்களில் டோனி தனது வளர்ப்பு நாயுடன் இருக்கும் புகைப்படமும் வைரலாகி வருகிறது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் 18-ந் தேதி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது.

    இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இருந்து முன்னாள் கேப்டன் எம் எஸ் டோனி விடைபெற்றார். அதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றார்.


    தந்தையர் தினமான இன்று தனது எக்ஸ் தள பதிவில் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள் என்று கூறி டோனி மகளுடன் தனது வளர்ப்பு நாயை தொட்டு வருடும் புகைப்படமும் வைரலாகி வருகிறது.

    தற்போது சமூக வலைதளங்களில் டோனி தனது வளர்ப்பு நாயுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. 

    • கள்ளக்காதல் விவகாரத்தில் 3 உயிர்கள் பறிபோன சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • அடையாறு துணை கமிஷனர் பொன் கார்த்திக்குமார், சைதாப்பேட்டை உதவி கமிஷனர் சீனிவாசன் ஆகியோரும் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.

    சென்னை:

    சென்னை மேற்கு மாம்பலம் கிருஷ்ணப்ப நாயக்கர் தெருவில் வசித்து வந்தவர் மோகன். 55 வயதான இவர் பழைய இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

    இவரது மனைவி யமுனா. 13 வயதில் சாய் சுவாதி என்ற மகளும், 5 வயதில் தேஜஸ் என்ற மகனும் இருந்தனர். சாய் சுவாதி 9-ம் வகுப்பு படித்து வந்தார். தேஜஸ் யு.கே.ஜி. படித்து வந்தான்.

    மனைவி யமுனா அதே பகுதியில் உள்ள அச்சகத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று காலையில் அவர் வேலைக்கு சென்று விட்டார். இதனால் மோகன் குழந்தைகளோடு வீட்டில் இருந்தார். மனைவி யமுனாவுக்கு வேறு ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு

    உள்ளது. இதனை கண்டித்தும் அவர் கள்ளக்காதலை கைவிடாமல் தொடர்ந்துள்ளார்.

    இந்த விவகாரம் நேற்று மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் யமுனா வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் குழந்தைகளோடு இருந்த மோகன், வேறு ஒருவருடனான தொடர்பை மனைவி கைவிட மறுக்கிறாளே என்கிற வேதனையில் இருந்தார்.

    இதை தொடர்ந்து தனது குழந்தைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து கதவை உள் பக்கமாக பூட்டிக் கொண்டு மனதை கல்லாக்கிய மோகன் மகள் சாய் சுவாதியின் கழுத்தை அறுத்தார். இதில் அவள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானாள்.

    இதைத் தொடர்ந்து தனது 5 வயது மகன் தேஜசையும், மோகன் ஈவு இரக்கமின்றி கயிற்றால் கழுத்தை நெரித்து கொன்றார். பின்னர் தானும் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

    வேலை முடிந்து யமுனா மாலை 6.30 மணி அளவில் வீடு திரும்பினார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து வெளியில் இருந்து கணவர் மற்றும் குழந்தைகளை யமுனா கூப்பிட்டு பார்த்தார். ஆனால் யாரும் பதில் அளிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினரின் உதவியோடு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தார்.

    அங்கே அவர் கண்ட காட்சி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கணவர் தூக்கில் தொடங்கியதையும், குழந்தைகள் இறந்து கிடப்பதையும் பார்த்து யமுனா கதறி அழுதார். இதுபற்றி குமரன் நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் அமுதா விரைந்து சென்று விசாரணை நடத்தினார். அடையாறு துணை கமிஷனர் பொன் கார்த்திக்குமார், சைதாப்பேட்டை உதவி கமிஷனர் சீனிவாசன் ஆகியோரும் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். 3 பேரின் உடலையும் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களது உடலை பார்த்து உறவினர்களும் கதறி அழுது கண்ணீர் வடித்தனர்.

    கள்ளக்காதல் விவகாரத்தில் 3 உயிர்கள் பறிபோன சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் யமுனாவின் கள்ளக்காதல் விவகாரத்தால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.

    மோகனுக்கும் யமுனாவுக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. ஆரம்பத்தில் அவர்களது வாழ்க்கை சந்தோஷமாகவே சென்றுள்ளது. முதலில் பெண் குழந்தை பிறந்த பின்னர் 2-வதாக 8 ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தை பிறந்துள்ளது. 2 குழந்தைகள் மீதும் மோகன் அளவு கடந்த பாசம் வைத்திருந்துள்ளார். மனைவி யமுனாவின் தவறான தொடர்பால் மனமுடைந்த அவர் பின்னர் குழந்தைகளுக்காகவே வாழ தொடங்கியுள்ளார். கள்ளத் தொடர்பால் ஏற்பட்ட பிரச்சினை பூதாகரமாக வெடித்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களது விவகாரம் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் சைதாப்பேட்டை போலீசாரும் விசாரணை நடத்தியுள்ளனர்.

    பின்னர் மோகன், மனைவியோடு வாழ்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதன்படி கடந்த 2 மாதங்களாக மேற்கு மாம்பலத்தில் வசித்து வந்துள்ளனர். இதன் பிறகும் யமுனா கள்ளக் காதலை கைவிடாததால் வாழப்பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்ள மோகன் முடிவு செய்தார். மனைவி தவறான பழக்கத்தில் இருப்பதால் குழந்தைகள் அனாதையாகி விடுமோ என அஞ்சியே அவர்களை கொன்றுள்ளார்.

    ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிரேத பரிசோதனை நடைபெறும் நிலையில் அங்கு யமுனாவின் வீட்டாரும், மோகனின் வீட்டாரும் குவிந்துள்ளனர். அவர்கள் கண்ணீர் மல்க காணப்பட்டனர். இரு வீட்டாருக்கும் பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

    • இந்த படத்தில் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
    • இந்த படத்திற்காக ரூ. 200 கோடி பணம் செலவிடுகிறார்.

    பாலிவுட் பாட்ஷா', 'கிங் கான்' என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக்கான். பிரபல நடிகர் ஷாருக்கானுக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    டைரக்டர் ஆகவேண்டும் என்பது மூத்த மகனின் கனவு அதற்காக தயாராகி வருகிறார். கடைசி மகன் பள்ளியில் படித்து வருகிறார். ஷாருக்கானின் மகள் சுகானா கான். அமெரிக்கா 'ஆக்டிங்' ஸ்கூலில் படித்துள்ளார்.




    ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு பதான் படம் வெளியாகி, மகத்தான வசூலை அள்ளியது. இந்த படத்தில் இந்திய 'ரா' பிரிவின் ரகசிய உளவாளியாக நடித்திருந்தார். பதான் படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்தார். இந்த படம் 1000 கோடி வசூல் சாதனை படைத்தது.

    இந்நிலையில் ஷாருக்கான் அடுத்ததாக 'தி கிங்' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சுஜோய் கோஷால் இயக்க உள்ளார். இப்படத்தை ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' தயாரிக்கிறது.




    இந்த படத்தில் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் கதாநாயகியாக நடிக்க உள்ளார். தனது மகள் அறிமுகமாகும் படம் என்பதால், இந்த படத்திற்காக ரூ. 200 கோடி பணம் செலவிடுகிறார்.

    இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் தந்தை மகள் ஆகிய இருவரும் படம் முழுவதும் நடிக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் ஷாருக்கான் இப்படத்தில் 'டான்' கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இதற்காக அவர் நீளமான தலைமுடி மற்றும் தாடி வளர்க்க இருப்பதாகவும் கூறப்படுகிறது




    இப்படத்தில் சித்தார்த் ஆனந்த் நடிக்க உள்ளார். படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    மேலும் சஹானா கானின் நடிப்பு ரசிகர்களை கவரும் வகையில் இப்படத்தை ஷாருக்கான் உருவாக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 'மே' மாதம் தொடங்க உள்ளது. 2025 -ல் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இதன் புகைப்படங்களை ஐஸ்வர்யா ராய் இன்ஸ்டாகிராம் இணைய தளத்தில் பகிர்ந்து உள்ளார்
    • ஐஸ்வர்யாராய் போல ஆராத்யா அழகாக வசீகரமாக உள்ளார்

    பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் 1994 - ல் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். 

    பிரபல இயக்குனர்மணி ரத்னம் ' இருவர் ' படத்தில் தமிழில் அறிமுகமானார். இவர் 2007-ல் அபிஷேக்பச்சனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 'ஆராத்யா' என்ற மகள் உள்ளார்.

    இந்நிலையில் குஜராத் ஜாம்நகரில் அம்பானி மகன் திருமண முந்தைய விழா கொண்டாட்டத்தில் ஆராத்யா புதிய சிகை அலங்காரத்தில் பங்கேற்றார்.அதை தொடர்ந்து நேற்று ஐஸ்வர்யா ராயின் தந்தை, கிருஷ்ணராஜ் ராய்,நினைவு தினத்தில் ஆராத்யா கலந்து கொண்டார்.

    இதன் புகைப்படங்களை ஐஸ்வர்யா ராய் இன்ஸ்டாகிராம் இணைய தளத்தில் பகிர்ந்து உள்ளார்.இந்த புகைப்படங்களில் தனது தாத்தாவின் போட்டோ முன் சிறுமி ஆராத்யா,ஐஸ்வர்யாராய், அவரது தாய் பிருந்தியாராய் நிற்பது போன்று இடம் பெற்று உள்ளது. 




     

    ஐஸ்வர்யா தனது அப்பாவை ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூர்வது வழக்கம்.இந்த ஆண்டும் இந்த நிகழ்ச்சியில் எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பார்த்து ரசிகர்கள் வியந்து உள்ளனர்.

    மேலும் ஐஸ்வர்யாராய் போல ஆராத்யா அழகாக வசீகரமாக உள்ளார். மிகவும் நன்றாக வளர்க்கப்பட்டவளாகவும் இருக்கிறார் என புகழ்ந்து உள்ளனர்

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நிலத்தை அளவீடு செய்ய ஏற்கனவே முனியம்மாள் மற்றும் அவரது மகள் மாதம்மாள் (40) எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
    • அதிர்ச்சியடைந்த நில அளவீடு செய்யவந்த நில அளவயர் ஜோதி, தொப்பூர் போலீசில் புகார் அளித்தார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே தண்டுக்காரம்பட்டியில் சாலம்மாள் (வயது50).

    இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக, 85 சென்ட் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தால் அதன் அருகில் உள்ள சாலம்மாளின் சகோதரியான முனியம்மாள் (60) என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதில், சாலம்மாள் தன்னுடைய நிலத்தை நில அளவயர் மூலம் முழுமையாக அளவீடு செய்ய முடிவு செய்தார். அதன்படி நிலத்தை அளவீடு செய்ய தாசில்தாரிடம் மனு அளித்து, தொப்பூர் போலீசார் பாதுகாப்புடன் பாகலஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் மாதேஷ், நில அளவயர் ஜோதி உள்ளிட்டோர் தண்டு காரம்பட்டி ஏரி அருகே உள்ள நிலத்தை அளவீடு செய்ய சென்றனர்.

    இந்த நிலத்தை அளவீடு செய்ய ஏற்கனவே முனியம்மாள் மற்றும் அவரது மகள் மாதம்மாள் (40) எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில், அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை கண்டதும் கோபமடைந்து அதிகாரிகளிடம் முனியம்மாளும், மாதம்மாளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது, நில உரிமையாளர் சாலம்மாள் அவருடன் வந்த உறவினர் மற்றும் தொப்பூர், எஸ்.எஸ்.ஐ., சரவணன் உள்ளிட்டோர் மீது முனியம்மாள் அவரது மகள் மாதம்மாள் கரைத்து வைத்திருந்த மாட்டு சாணத்தை ஊற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இச்சம்பவத்தால், அதிர்ச்சியடைந்த நில அளவீடு செய்யவந்த நில அளவயர் ஜோதி, தொப்பூர் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்பட 2 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து முனியம்மாள், அவரது மகள் மாதம்மாள் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கைதான 2 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 2 குழந்தைகளுக்கு தாயான ஜோஸ்பின் ஷீபா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில் :

    அருமனை அருகே உள்ள இடைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வில்சன் (வயது 45). இவர் கடந்த 2016-ம் ஆண்டு கணவரை இழந்த 2 குழந்தைகளுக்கு தாயான ஜோஸ்பின் ஷீபா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

    இந்த நிலையில் சம்ப வத்தன்று வீட்டில் இருந்த ஜோஸ்பின் ஷீபா, தனது மகள் ஆஷீகா (8)வுடன் மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காததால், அருமனை போலீசில் வில்சன் புகார் செய்தார். அதில், கேரள மாநிலம் மலப்புரத்தில் ஜினு என்பவருடன் ஜோஸ்பின் ஷீபா இருப்பதாகவும் அவரை மீட்டுத் தர வேண்டும் என்றும் குறிப்பி ட்டு உள்ளார். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போல், குழந்தைகளுடன் மாயமான ஜோஸ்பின் ஷீபாவை, போலீசார் மலப்புரத்தில் இருந்தே அழைத்து வந்த தாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகள்-மகனுக்கு தோசை கரண்டியால் தந்தை சூடு வைத்தார்.
    • மது போதையில் நடந்த சம்பவம்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 35), கொத்தனார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், புகழினி (10) என்ற மகளும், நித்திஷ் (8) என்ற மகனும் உள்ளனர். கவுல்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புகழினி 5-ம் வகுப்பும், நித்திஷ் 3-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.இவர்கள் 2 பேரும் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றனர். ஆசிரியர் தினத்தையொட்டி பள்ளியில் ஆசிரியை ஒருவர் நித்திசுக்கு சாக்லேட் வழங்கும் போது, அவனது வலது கை மணிக்கட்டு அருகில் தீக்காயம் இருப்பதை கண்டு விசாரித்தார். அதற்கு நித்திஷ் தனது தந்தை மது போதையில் தனக்கும், அக்காள் புகழினிக்கும் கடந்த 2-ந்தேதி தோசை கரண்டியால் சூடு வைத்ததில், 2 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டதாகவும், இதனை தட்டி கேட்ட தனது தாயை தந்தை மத்துக்கட்டையால் தாக்கினார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டியதாக நாங்கள் இதுகுறித்து யாரிடம் கூறவில்லை என்று கூறினான்.

    இதையடுத்து அந்த ஆசிரியை இந்த சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தார். அவர் குழுந்தைகள் நலக்குழுவினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பள்ளிக்கு வந்த குழந்தைகள் நலக்குழு பணியாளர் வந்து நித்திஷிடம் விசாரணை நடத்தி, அவனுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளித்து குன்னத்தில் உள்ள காப்பகத்திலும், புகழினியை பெரம்பலூரில் உள்ள காப்பகத்திலும் சேர்த்துள்ளனர்.

    ×