என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆந்திரா"
- விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆறுதல்.
- காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆந்திரா மாநிலம் சித்தூரில் லாரி மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம், மொகிலி காட் அருகே சித்தூர்-பெங்களூரு நெடுஞ்சாலையில், திருப்பதியில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆந்திர மாநில அரசுப் பேருந்து, லாரி மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்துள்ளார்.
நாயுடு சம்பவத்தை பார்வையிட்டார் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ உதவிகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- தெலங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்குத் தெலுங்கு திரைப் பிரபலங்கள் நிதி வழங்கி வருகின்றனர்.
- பாலய்யா, பவன் கல்யாண், ஜூனியர் என்.டி.ஆர். அல்லு அர்ஜுன் ஆகியோர் நிதி அளித்து உதிவினர்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பெய்து வரும் மழையை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆந்திராவின் குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களும் குறிப்பாக விஜயவாடா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்குத் தெலுங்கு திரைப் பிரபலங்கள் நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான பவன் கல்யாண் , பிரபாஸ், மகேஷ் பாபு, சிரஞ்சீவி, பாலய்யா, பவன் கல்யாண், ஜூனியர் என்.டி.ஆர். அல்லு அர்ஜுன் ஆகியோர் நிதி அளித்து உதிவினர்.
இந்நிலையில் தமிழ் சினிமவின் முன்னணி நடிகரான சிம்பு 6 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். தமிழ் நடிகர் ஆந்திராவில் நடந்த பேரிடருக்காக நிதிக் கொடுத்தது மிகவும் பெருந்தன்மையான விஷயம் என்று நெட்டிசன்கள் சிம்புவை பாராட்டி வருகின்றனர்.
சிம்பு தற்பொழுது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விஜயவாடா நகரப் பகுதியில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.
- வெள்ளம் பாதித்த பகுதிகளை படகு மற்றும் JCB-யில் சென்று சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார்.
ஆந்திரா, தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால் வெள்ளக்காடாக மாறியது.
விஜயவாடா நகரப் பகுதியில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் உணவு குடிநீர் மருந்து கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.
ஹெலிகாப்டர் டிரோன்கள் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து தற்போது தண்ணீர் வடியத் தொடங்கி உள்ளது. இதனால் நிவாரண முகாம்களில் இருந்த பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
விஜயவாடாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை படகு மற்றும் JCB-யில் சென்று சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார்.
இந்நிலையில், விஜயவாடா மதுரா நகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார். அப்போது ரயில் தண்டவாளத்தின் அருகே உள்ள பாலத்தில் நின்று கொண்டிருந்த சமயத்தில் ரயில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திரா மழை வெள்ளத்தில் அதிக அளவு பாதிக்கப்பட்டு உள்ளதால் மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். முதல் தவணை வெள்ள நிவாரண நிதியாக ரூ.5 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்துள்ளார்.
#AndhraPradesh Chief Minister #ChandrababuNaidu narrowly escaped, when a speeding train passed just a few feet from him, while he was standing on a bridge beside a railway track on Thursday during an inspection of #flood affected Madhuranagar in #Vijayawada. The incident… pic.twitter.com/fF4SwV6s4U
— Surya Reddy (@jsuryareddy) September 5, 2024
- வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் உணவு குடிநீர் மருந்து கிடைக்காமல் அவதி.
- ஹெலிகாப்டர் டிரோன்கள் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
திருப்பதி:
ஆந்திரா, தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக பெய்தபலத்த மழையால் வெள்ளக்காடாக மாறியது.
விஜயவாடா நகரப் பகுதியில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் உணவு குடிநீர் மருந்து கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.
ஹெலிகாப்டர் டிரோன்கள் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து தண்ணீர் வடியத் தொடங்கி உள்ளது.
இதனால் நிவாரண முகாம்களில் இருந்த பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். வீடுகளுக்கு திரும்பிய மக்கள் தங்கள் வீடுகளில் இருந்த பொருட்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்து இருப்பதைக் கண்டு கண்ணீர் வடித்தனர்.
வீட்டின் முன்பாக நிறுத்தி இருந்த கார் ஆட்டோ லாரி உள்ளிட்டவை 4 நாட்களாக தண்ணீரில் மூழ்கியதால் சேதம் அடைந்து உள்ளது.
மேலும் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டு இருந்த பைக்குகள் மழை வெள்ளத்தில் அடித்துச் சென்று ஆங்காங்கே குவியல் குவியலாக காணப்படுகிறது.
வீடு முழுவதும் சேறு படிந்து உள்ளதால் வீட்டை சுத்தம் செய்ய தண்ணீர் இல்லாமல் வீட்டிற்கு வெளியே குழந்தைகள் முதியவர்களுடன் காத்துக் கொண்டு உள்ளனர்.
வீடுகளை சுத்தம் செய்வதற்காக விஜயவாடாவிற்கு 100 தீயணைப்பு வாகனங்களும் மற்ற மாவட்டங்களில் இருந்து நகராட்சி, மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் 400 பேரும் வரவழைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வீடுகளில் உள்ள சேற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மழை வெள்ளம் வடிந்த பகுதிகளில் சகதியில் பாதிப்பு குறைந்த நிலையில் மனித உடல்கள் கிடந்தன. அவற்றை தீயணைப்பு வீரர்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் ஆங்காங்கே ஆடு மாடுகள் செத்துக்கிடக்கின்றன. இதனால் விஜயவாடா நகரப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
கடந்த 4 நாட்களாக மனித உடல்கள் தண்ணீரில் இருந்ததால் அழுகி அடையாளம் காண முடியாமல் சிதைந்து கிடப்பதாக தெரிவித்தனர். இதனால் மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மழை வெள்ளம் குறித்து முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-
மழை வெள்ளத்தால் சுமார் 7 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடைசி நபர் வரை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான நிவாரணம் வழங்குவதே எனது அரசின் லட்சியம். வெள்ள நிவாரணம் வழங்கி வரும் அனைவருக்கும் நன்றி.
ஆந்திரா மழை வெள்ளத்தில் அதிக அளவு பாதிக்கப்பட்டு உள்ளதால் மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். முதல் தவணை வெள்ள நிவாரண நிதியாக ரூ.5 ஆயிரம் கோடி வழங்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வங்கி கடன்களை வங்கி அதிகாரிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில வெள்ளத்திற்கு அல்லு அர்ஜுன் தலா ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்தார்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பெய்து வரும் மழையை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.1 கோடி வழங்கவுள்ளதாக நடிகர் பிரபாஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில முதலமைச்சர்கள் பொது நிவாரண நிதிக்கு நடிகர்கள் மகேஷ் பாபு, சிரஞ்சீவி, பாலய்யா, பவன் கல்யாண், ஜூனியர் என்.டி.ஆர். , அல்லு அர்ஜுன் ஆகியோர் தலா ரூ.50 லட்சம் நிதியுதவி அளிப்பதாக தெரிவித்தனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மீட்கப்பட்டவர்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகிறார்கள்.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக மாநிலத்தின் தலைநகரான அமராவதி நகரை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.
கொட்டி தீர்க்கும் கனமழையால் மாநிலத்தின் அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகிறார்கள். மழை வெள்ளத்தில் சிக்கி சுமார் 4½ லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகிறார்கள். மீட்கப்பட்டவர்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திரா, தெலுங்கானாவில் பெய்துவரும் மழை காரணமாக தமிழக ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்கு தலா ₹50 லட்சம் வழங்குவதாக ஆந்திரா துணை முதலமைச்சரும் நடிகருமான பவன் கல்யாண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ் பாபு ஆகியோர் அறிவித்துள்ளனர்.
- 4,200 பயணிகளை ஏற்றிச் செல்ல 84 அரசு பஸ்கள் அந்த இடத்தில் ஏற்பாடு செய்தனர்.
- பயணிகளுக்காக சென்னை நோக்கி மேலும் 2 சிறப்பு ரெயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
தெலுங்கானாவில் மழை வெள்ளம் காரணமாக செகந்திராபாத்-விசாகப்பட்டினம் கோதாவரி எக்ஸ்பிரஸ்; புதுடெல்லி-சென்னை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மற்றும் ஐதராபாத்-தாம்பரம் சார்மினார் விரைவு ரெயில்கள் கொண்டப்பள்ளி மற்றும் ராயனப்டு ரெயில் நிலையங்களுக்கு இடையே நிறுத்தப்பட்டன.
ரெயில் பயணிகளை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விஜயவாடா ரெயில் நிலையத்திற்கு 4,200 பயணிகளை ஏற்றிச் செல்ல 84 அரசு பஸ்கள் அந்த இடத்தில் ஏற்பாடு செய்தனர்.
கோதாவரி எக்ஸ்பிரஸ் பயணிகளுக்காக விஜயவாடா ரெயில் நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி 3 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மற்றும் சார்மினார் எக்ஸ்பிரஸ் பயணிகளுக்காக சென்னை நோக்கி மேலும் 2 சிறப்பு ரெயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
ஒரே நேரத்தில், பெங்களூருவில் சிக்கித் தவிக்கும் பயணிகளை டானாபூருக்கும், தானாபூரில் இருந்து பெங்களூரு சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கும் கொண்டு செல்ல 2 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.
நெக்கொண்டாவில் இருந்து மொத்தம் 74 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு சுமார் 5,600 பயணிகள் காசிப்பேட்டைக்கு அழைத்து வரப்பட்டனர்.
காசிப்பேட்டையில் இருந்து டானாபூருக்கு ஒரு சிறப்பு ரெயிலும், காசிபேட்டையில் இருந்து பெங்களூருக்கு மற்றொரு சிறப்பு ரெயிலும் இயக்கப்பட்டன. 10,000 பயணிகள் பாதுகாப்பாக அவர்களது செல்லும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
- கனமழைக்கு ஆந்திராவில் 17 பேரும், தெலுங்கானாவில் 16 பேரும் பலியாகியுள்ளனர்.
- இரு மாநிலங்களிலும் பெய்து வரும் கன மழையால் வீடுகள், பயிர்கள், சாலைகள் சேதமடைந்துள்ளன.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கனமழைக்கு ஆந்திராவில் 17 பேரும், தெலுங்கானாவில் 16 பேரும் பலியாகியுள்ளனர்.
தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பெய்து வரும் மழையை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்
கடந்த 3 நாட்களாக இரு மாநிலங்களிலும் பெய்து வரும் கன மழையால் வீடுகள், பயிர்கள், சாலைகள் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கவுள்ளதாக நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான பாலய்யா அறிவித்துள்ளார்.
இதற்கு முன்பு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில முதலமைச்சர்கள் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம் நன்கொடை வழங்குவதாக தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தெரிவித்திருந்தார்.
- குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் பலத்த மழை பெய்தது.
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை JCB-யில் சென்று முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார்.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் பலத்த மழை பெய்தது.
இதனால் ஆந்திராவில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இன்று ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விஜயவாடா பகுதிகளை JCB-யில் சென்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார்.
இந்நிலையில், விஜயவாடாவில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு ட்ரோன் மூலம் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த மழை வெள்ளம் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லக்கூடிய ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தில் இருந்து செல்லக்கூடிய 18 ரெயில்களை தெற்கு ரெயில்வே இன்று ரத்து செய்துள்ளது.
Vijayawada: విజయవాడలో వరద బాధితులకు డ్రోన్ ద్వారా ఆహార పంపిణీ#vijayawada #Drone #andhrapradeshnews #TeluguNews pic.twitter.com/OEAOUmDWQZ
— Eenadu (@eenadulivenews) September 2, 2024
- குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் பலத்த மழை பெய்தது.
- கனமழையால் ஆந்திராவில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் பலத்த மழை பெய்தது.
இதனால் ஆந்திராவில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. அதிகாரிகளின் அறிவுறுத்தலை மீறி வெள்ளம் பாதித்த இடங்களுக்கு படகுகளில் சென்று சந்திரபாபு நாயுடு பார்வையிட்டார்.
இந்நிலையில், இன்று ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விஜயவாடா பகுதிகளை JCB-யில் சென்று சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார்.
இந்த மழை வெள்ளம் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லக்கூடிய ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தில் இருந்து செல்லக்கூடிய 18 ரெயில்களை தெற்கு ரெயில்வே இன்று ரத்து செய்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விஜயவாடா பகுதிகளை ஜே.சி.பி. வாகனத்தில் சென்று ஆந்திரப்பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பார்வையிட்டார்.#ChandrababuNaidu | #VijayawadaFloods | #AndhraRains | #DailyThanthi pic.twitter.com/MACO535xj0
— DailyThanthi (@dinathanthi) September 2, 2024
- பல ரெயில்களை தெற்கு மத்திய ரெயில்வே ரத்து செய்துள்ளது.
- சில ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
சென்னை:
ஆந்திரா மாநிலத்தில் பலத்த மழை பெய்து வெள்ளபாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டு தண்டவாளம் அந்தரத்தில் தொங்குகின்றன. இதனால் ரெயில் போக்குவரத்து முடங்கியுள்ளது.
பல ரெயில்களை தெற்கு மத்திய ரெயில்வே ரத்து செய்துள்ளது. சில ரெயில்களை மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
இந்த மழை வெள்ளம் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லக்கூடிய ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களுக்கு செல்லும் பெரும்பாலானா ரெயில்கள் ஆந்திரா வழியாத்தான் கடந்து செல்ல வேண்டும்.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தில் இருந்து செல்லக்கூடிய 18 ரெயில்களை தெற்கு ரெயில்வே இன்று ரத்து செய்துள்ளது.
தண்ட வாளத்தில் வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் ரெயில்களை இயக்க முடியாத நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்ட்ரல்-பூரி, அகமதாபாத்-சென்ட்ரல் நவஜீவன் எக்ஸ்பிரஸ், சென்ட்ரல்-சாலிமர் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மைசூரு-ஹவுரா, ஹவுரா-மைசூரு எக்ஸ்பி ரஸ், ஐதராபாத்-தாம்பரம், சென்ட்ரல்-சாப்ரா கங்கா காவேரி எக்ஸ்பிரஸ், சாப்ரா-சென்ட்ரல், சென்ட்ரல்-டெல்லி கிராண்ட் டிரங்க் எக்ஸ் பிரஸ், டெல்லி-சென்ட்ரல் கிராண்ட் டிரங் எக்ஸ்பிரஸ், தாம்பரம்-ஐதராபாத், சென்ட்ரல்-டெல்லி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொச்சுவேலி-கோர்பா எக்ஸ்பிரஸ், பிலாஸ்பூர்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம்-பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ், காக்கிநாடா-பெங்களூரு சேஷாத்திரி எக்ஸ்பிரஸ், பெங்களூரு-காக்கிநாடா எக்ஸ்பிரஸ் ஆகியவை 4-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய பெரும்பாலான ரெயில்கள் நேற்று முதல் ரத்து செய்யப் பட்டதால் சென்ட்ரல் நிலையத்தில் பயணிகள் பயணத்தை தொடர முடியாமல் தவிக்கின்றனர்.
முன்பதிவு செய்த பயணிகள் சொந்த ஊர் செல்ல முடியாமல் சென்ட்ரல் நிலையத்தில் தங்கி உள்ளனர்.
பயணிகளுக்காக உதவி மையங்களும் திறக்கப்பட்டு உள்ளன. சென்ட்ரல் நிலையத்தில் 044-25354995, 044-25354151 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பேசினால் தகவல் கிடைக்கும்.
இதுதவிர விஜயவாடா, ராஜ முந்திரி, ஒங்கோல், தெனாலி, நெல்லூர், கூடூர், குடிவாடா, குண்டூர், ஐதராபாத், செகந்திரபாத் உள்ளிட்ட 18 ரெயில் நிலையங்களை தொடர்பு கொள்ளவும் செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதேபோல ஆந்திரா மார்க்கமாக சென்னை சென்ட்ரல் மற்றும் பிற நகரங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. 15 ரெயில்கள் வேறு வழிகளில் மாற்றி விடப்பட்டிருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம், கூட்டமாக வரத் தொடங்கினர். அவர்களை நிலையத்திற்குள் விடாமல் முன் பகுதியிலே ரெயில்வே ஊழியர்கள் தகவல்களை பெறுவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
ரெயில்கள் ரத்து, தாமதம் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள 'கியூ ஆர் கோடு' வசதியை சென்ட்ரல் நிலையத்தின் நுழைவு பகுதியில் வைத்திருந்தனர்.
இதனை ஸ்கேன் செய்தால் ரெயில்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ரெயில் நிலையத்தினுள் அனுமதிக்கப்பட்டால் நெரிசல் ஏற்படும் எனக் கருதி முன்எச்சரிக்கையாக இந்த நடவடிக்கையினை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
- ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் தண்ணீரில் மிதந்து வருகிறது.
- அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
திருப்பதி:
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் தண்ணீரில் மிதந்து வருகிறது. இது குறித்து தெலுங்கு திரையுலக மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-
தெலுங்கு மாநிலங்களில் பெய்து வரும் மழையின் பாதிப்பு அதிக அளவு உள்ளது. பல கிராமங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
இதுபோன்ற சூழ்நிலைகளில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் என்னுடைய ஒரே வேண்டுகோள் அவசரமில்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.
வைரஸ் காய்ச்சல் அபாயம் இருப்பதால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது போன்ற பேரிடர்கள் ஏற்படும் போது எங்கள் ரசிகர்கள் எப்போதும் மக்கள் மற்றும் பாதிக்கப்ப ட்டவர்களுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். ரசிகர்கள் அனைவரும் தற்போதும் மக்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்