என் மலர்
நீங்கள் தேடியது "ஆந்திரா"
- 4 பேர் ஒரு வீட்டில் வசிக்க, 700 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
- பிரதமருக்கு கூட இவ்வளவு பெரிய வீடு இல்லை
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும் ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திராவின் சதாம் உசேன் என்று அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.
ருஷிகொண்டா மலைகளில் உள்ள ஜெகன் மோகனின் ஆடம்பர மாளிகை குறித்து பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனான நாரா லோகேஷ், "ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தன்னை ஆந்திராவின் 'சதாம் உசேன்' என்றும், 30 ஆண்டுகள் ஆட்சியில் இருப்பேன் என்றும் நினைத்தார்.
என் தாத்தா முதல்வராக இருந்தார், என் அப்பா முதல்வராக இருந்தார், ஆனால் இவ்வளவு பெரிய அறைகளை நான் பார்த்ததில்லை. அவரது சகோதரி மற்றும் தாயார் ஜெகன் மோகன் குடும்பத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 4 பேர் ஒரு வீட்டில் வசிக்க, 700 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. பிரதமருக்கு கூட இவ்வளவு பெரிய வீடு இல்லை
அரண்மனை போன்ற இந்த வீட்டை என்ன செய்வது என்பது குறித்து தெலுங்கு தேசம் அரசு முடிவு செய்யும்" என்று தெரிவித்தார்.
சதாம் உசேன் ஈராக்கின் அதிபராக இருந்தார், 1979 முதல் 2003 வரை அந்த நாட்டை ஆட்சி செய்தார். அவரது ஆட்சி நிர்வாகம் சர்வாதிகாரமாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- அப்பாராவ், 20 ஆண்டுகளுக்கு முன்பு இராமேஸ்வரம் ரயிலில் ஏறி சிவகங்கை சென்றுள்ளார்
- பல ஆண்டுகளாக கொத்தடிமையாக்கப்பட்ட இவரின் விபரம், தொழிலாளர் நலத்துறைக்கு தெரியவந்தது.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் அருகே 20 ஆண்டுகளுக்கும் மேல் கொத்தடிமையாக ஆடு மேய்த்த முதியவர் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஆந்திராவைச் சேர்ந்த தொழிலாளி அப்பாராவ், 20 ஆண்டுகளுக்கு முன்பு ரெயிலில் செல்கையில் டீ குடிக்க இறங்கியவர் தவறுதலாக இராமேஸ்வரம் ரயிலில் ஏறி, விபரம் அறியாமல் சிவகங்கை சென்றுள்ளார்
கடம்பங்குளம் பகுதியைச் சேர்ந்த மலைக்கண்ணு, அவரை கூட்டிச் சென்று ஆடு மேய்க்க வைத்துள்ளார். மலைக்கண்ணு இறந்துவிட, அதே ஊரைச் சேர்ந்த மற்றொருவரும் ஊதியம் இல்லாமல் உணவு மட்டும் கொடுத்து ஆடுமேய்க்க வைத்துள்ளார்.
சொந்த ஊருக்கும் செல்ல அனுமதிக்கப்படாமல் பல ஆண்டுகளாக கொத்தடிமையாக்கப்பட்ட இவரின் விபரம், தொழிலாளர் நலத்துறைக்கு தெரியவந்து விசாரணை நடத்தி குடும்பத்தை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர்.
அப்பாராவின் மனைவி சீத்தாம்மா இறந்து விட்டதாகவும் மகளுக்கு திருமணமான தகவலும் தெரியவந்துள்ளது. மகள் மற்றும் மருமகனை அதிகாரிகள் வரவழைத்து அப்பாராவை ஒப்படைத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
- அழகிய ருஷிகொண்டா மலையின் கிட்டத்தட்ட பாதி பகுதி இந்த அரண்மனையை கட்டுவதற்காக அழிக்கப்பட்டுள்ளன.
- கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை கடுமையாக மீறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஆந்திர மாநிலம் ரிஷி கொண்டா மலையில் முன்னாள் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி ரூ.500 கோடி அரசு செலவில் பிரம்மாண்டமான அரண்மனை ஒன்றை கட்டினார். இது முதல் மந்திரியின் முகாம் அலுவலகம் என கூறப்பட்டது.
இந்த கட்டிடத்தில் விலை உயர்ந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது இது ஆந்திர மாநிலத்தின் ஷீஷ் மஹால் அரண்மனை என அழைக்கப்படுகிறது. இந்த பிரம்மாண்ட கட்டிடத்தின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
பிரமாண்டமான வளாகத்தின் உள்ளே தங்க முலாம் பூசப்பட்ட அலங்காரங்கள், இத்தாலிய பளிங்கு தரை மற்றும் பட்டுப் போன்ற அலங்காரங்கள் உட்பட ஆடம்பரமான உட்புறங்களை கொண்டுள்ளது.
இந்த அரண்மனை ஒரு முக்கிய கடலோர சுற்றுலா மையமான அழகிய ருஷிகொண்டா பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் நன்கு பரந்த தொகுதிகளைக் கொண்டுள்ளது.
விரிவான உள்கட்டமைப்பு நடைபாதை சாலைகள், வடிகால் அமைப்புகள், 100 கே.வி. மின் துணை மின்நிலையம் ஆகியவை என வியக்கும் வைக்கும் வகையில் அபரிதமான செலவில் அமைக்கப்பட்டுள்ளன.
ஜெகன்மோகன் ரெட்டி கட்டிய ஷீஷ்மஹால் அரண்மனையின் பிரம்மாண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த ஆடம்பரமான கட்டுமானம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை கடுமையாக மீறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அழகிய ருஷிகொண்டா மலையின் கிட்டத்தட்ட பாதி பகுதி இந்த அரண்மனையை கட்டுவதற்காக அழிக்கப்பட்டுள்ளன. இது கடுமையான சுற்றுச்சூழல் கவலைகளை எழுப்புவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு பேசுகையில்:-
முன்னாள் முதல் மந்திரி நீதிமன்றங்களை ஏமாற்றி சுற்றுச்சூழல்களை மீறி பிரம்மாண்ட மாக ஆடம்பர வாழ்க்கை நடத்துவதற்காக பொதுப் பணத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார்.
அரசியலில் இது போன்ற தலைவர்கள் இருப்பது உண்மையிலேயே நமக்கு தேவையா. இது போன்ற விவாகரத்தில் நீண்ட விவாதம் தேவை.
தற்போது இந்த கட்டிடங்களை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் அவற்றிலிருந்து அரசாங்கத்திற்கு வருவாய் ஈட்டுவது என்பதற்கு நாங்கள் எந்த விதமான ஆலோசனையும் செய்யவில்லை.
இந்த கட்டமைப்புகள் சுற்றுலாத் துறைக்கு சாத்தியமானது அல்ல. இந்த விவகாரத்தில் விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
டெல்லியில் முன்னாள் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அவருடைய பங்களாவை ஆடம்பரமாக ரூ.36 கோடி செலவில் புதுப்பித்தார்.
அதேபோல் ஆடம்பரமான வாழ்க்கை வாழ ஜெகன்மோகன் ரெட்டியும் ஷீஷ் மஹால் அரண்மனையை கட்டி உள்ளார் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஷீஷ் மஹால் அரண்மனை விவகாரம் ஆந்திர அரசியலில் தற்போது புதிய புயலை கிளப்பி உள்ளது. * * * ஷீஷ் மஹால் அரண்மனையின் பிரமாண்ட தோற்றம்.
+2
- உள்ளூர் மக்கள் சிலர் அங்கு சென்று, பெண்கள் மீது கொட்டப்பட்ட மண்ணை அகற்றி, இருவரையும் மீட்டனர்.
- குடும்பச் சொத்தில் உரிய பங்கை கேட்டதால கொல்ல முயன்றதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர்
ஆந்திராவில் சொத்து பிரச்சனை தொடர்பாக போராட்டம் நடத்திய பெண்களை உயிரோடு புதைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீகாகுளம் மாவட்டம் ஹரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த தாளம்மா மற்றும் அவரது மகள் சாவித்ரி ஆகியோருக்கும், அவர்களின் உறவினர்களான ஆனந்தராவ், பிரகாஷ் ராவ், ராமராவ் ஆகிருக்குமிடையே பூர்வீக நிலத்தின் உரிமை தொடர்பாக தகராறு உள்ளது. குடும்ப சொத்தில் தங்களுக்கு உரிய பங்கை தரக்கோரி இரண்டு பெண்களும் 2019ம் ஆண்டு முதல் போராடிவந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரண்டு பெண்களும் போராட்டம் நடத்தும்போது, டிராக்டரில் வந்த ராமராவ் மண்ணைக் கொட்டி உயிருடன் புதைத்து கொலை செய்ய முயன்றுள்ளனர். இதைப் பார்த்த உள்ளூர் மக்கள் சிலர் அங்கு சென்று, பெண்கள் மீது கொட்டப்பட்ட மண்ணை அகற்றி, இருவரையும் மீட்டனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குடும்பச் சொத்தில் தங்களுக்கு உரிய பங்கைக் கேட்டபோது தங்கள் மீது மண்ணைக் கொட்டி கொல்ல முயன்றதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர்.
பிரச்சனைக்குரிய நிலத்தில் ராமராவ், கட்டிடம் கட்டுவதற்காக மண் மற்றும் கிராவலை கொட்டி உள்ளார். இதைப் பார்த்த தாளம்மா மற்றும் அவரது மகள் சாவித்ரி இருவரும் அங்கு சென்று அந்த இடத்தில் தங்களுக்கும் பங்கு இருப்பதாக கூறி, மண் கொட்டுவதை தடுத்துள்ளனர். எனினும் ராமராவ் மண்ணை கொட்டியுள்ளார். அப்போது பெண்கள் இருவரும் அங்கு அமர்ந்து தர்ணா செய்துள்ளனர். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாத ராமராவ், அவர்கள் மீது மண்ணை கொட்டி உள்ளார்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்து வாக்குமூலம் பெற்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- இந்தியா பல துறைகளில் புதிய மைல்கற்களை அடைந்து வரலாற்று படைக்கிறது.
- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த பொருளாதார வழித்தடமானது, ரூ.3,778 கோடி செலவில் அமைகிறது
விசாகப்பட்டினம்:
தென் மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று ஆந்திராவில் ரூ.15233 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். ஆந்திர பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநில ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசரண், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மாநில அமைசச்க்ள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய பிரதமர் மோடி, 'இன்று உலகம் நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கும்போது, இந்தியா பல துறைகளில் புதிய மைல்கற்களை அடைந்து வரலாற்று படைக்கிறது. நமது வளர்ச்சியை உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. அரசின் அனைத்துக் கொள்கைகளும் சாமானிய மக்களின் நலனையே மையமாகக் கொண்டுள்ளன.
இன்று தொடங்கப்படும் பொருளாதார வழித்தடம், ஆந்திராவில் வர்த்தகம் மற்றும் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இணைப்பை மேம்படுத்தும். இந்த புதிய உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களால், ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகள் விரைவாக வளர்ச்சிபெறும். உலக நாடுகளின் விருப்பத்தேர்வின் மையப் புள்ளியாக இந்தியா மாறியுள்ளது. பிரதமரின் கதி சக்தி போன்ற திட்டங்கள் நாட்டிற்கு அதிக அந்நிய முதலீடுகளை கொண்டு வந்துள்ளன. கதி சக்தி திட்டமானது, உள்கட்டமைப்பு வளர்ச்சியை விரைவுபடுத்தியது மட்டுமின்றி, செலவுகளைக் குறைக்கவும் உதவியுள்ளது.' என்றார்.
பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த பொருளாதார வழித்தடமானது, ரூ.3,778 கோடி செலவில் ஆறு வழிச்சாலையாக அமைக்கப்பட உள்ளது. ராய்ப்பூர்-விசாகப்பட்டினம் வழித்தடத்தில் ஆந்திர பகுதியில் 100 கிமீ நீளத்திற்கு அமைய உள்ளது.
- உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான்.
- துக்கம் சந்தோசமாய் மாறும். சோதனைகளை, சாதனைகள் ஆகும்.
லட்சுமி கடாட்சம் தரும் திருப்பதி
திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவம்.
இங்கு கோரகர் சித்தா ஜீவசமாதி அடைந்ததால்தான் இக்கோயில் பிரபலம் அடைந்தது என சொல்வோரும் உண்டு.
ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளார் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் சிலர்.
கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினைதோஷம் வறுமை போக்கும், சந்ததி விருத்தி உண்டாகும் என்கிறது.
பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது. இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.
வாஸ்துபடி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமாக மலைகள் உள்ளன.
வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும் செல்வம் மலை போல் குவியும் என்று கௌரு திருப்பதிரெட்டி தனது வாஸ்து நுலில் எழுதி உள்ளார்.
உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான்.
சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சியுடன் உள்ளார்கள்.
அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.
சந்திரன்சக்தி மிகுந்த கோவில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.
மூலிகைகள் அதிகம் இருப்பதால் அரோக்கியம் உண்டாகிறது.
மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசி நிறைந்து காணப்படுகிறது.
திருப்பதி சென்றால் திருப்பம் என்பது போல திருப்பதி சென்று வந்ததால் கடன் பிரச்சினை தீர்ந்து கல்யாணம் உடனே ஆன கதைகள் உண்டு.
இரண்டு தினங்களாவது அங்கு தங்கவேண்டும்.
துக்கம் சந்தோசமாய் மாறும். சோதனைகளை, சாதனைகள் ஆகும்.
திருப்பதி கோவில் மகாலட்சுமிக்கு உண்டான கோவில் என பார்க்கப்படுவதால்தான் இவ்வளவு கூட்டம்.
செல்வம் உண்டியலில் அதிகம் குவிவதால், பணம், என்னும் காட்சி ஐ பார்த்தாலே பரவசம்தான்.
ஜோதிடப்படி மிதுன லக்னம், ரிசப லக்னம், கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள்களுக்கு பல நன்மைகள் உண்டாகும்.
அவர்கள் பெருமாள் வழி பாட்டில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். இவர்கள் நல்ல வசதிகளோடு இருக்கின்றனர்.
வடநாட்டவர் பெருமாள் தங்கள் பார்ட்டனர் என்று சொல்கிறார்கள்.
பெருமாள் சிரித்த ஆனந்தமான தனது பார்வைகள் அனைவரையும் ஆனந்தபடுத்தும்.
அங்கு சென்று வந்தால் மனம், சிந்தனை, குடும்பம் அனைத்தும் அமைதி ஆவதை உணரலாம்.
குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குலதெய்வமாக வணங்குகிறார்கள்.
நடந்து நாம் மலை ஏறினால், அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்கியத்திற்கு உதவும். நிமிர்ந்து மலை ஏறுவதால், நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழல்கின்றன.
- பண்டிகைகளில் நவராத்திரி மிகவும் சிறப்புக்குரியது.
- ஒன்பது இரவுகள் அம்பாளை வழிபடுவதனை 'நவராத்திரி' என்கிறோம்.
இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் நவராத்திரி மிகவும் சிறப்புக்குரியது. ஒன்பது இரவுகள் அம்பாளை வழிபடுவதனை 'நவராத்திரி' என்கிறோம். தீமையை அகற்றி நன்மையை பரவச் செய்வதை கருப்பொருளாகக் கொண்டு, இந்தியா முழுவதும் இந்த விழா கொண்டாடப்பட்டாலும், உள்ளூர் பழக்க வழக்கம் மற்றும் மரபுகளின்படி, மாநிலங்களுக்கு மாநிலம் இந்த விழா மாறுபடுகிறது.
வட மாநிலங்களில் நவராத்திரி விழா துர்க்கை தேவிக்கு முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டாலும், தென்னிந்தியாவில் சரஸ்வதி சாமுண்டி உன் ளிட்ட சில தெய்வங்களை இணைத்து கொண்டாடப்படுவது சிறப்புக்குரியது. நவராத்திரியை வெவ்வேறு விதமாக கொண்டாடும் இந்தியாவில் உள்ள சில மாநிலங்கள் பற்றி இங்கே...

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் துர்க்கை மட்டுமின்றி, சரஸ்வதி, லட்சுமி ஆகிய முப்பெரும் தேவியரின் வழிபாடு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. முதல் மூன்று நாட்கள் துர்க்கை, அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி, கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி என்று மூவருக்கும் சமமான வழிபாட்டு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. நவராத்திரியின் 10 நாட்களிலும் வீடு மற்றும் கோவில்கள், பொது இடங்களில் 'கொலு அமைப்பது என்பது விசேஷமானது. நவராத்திரியின் ஒன்பதாம் நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடுகிறார்கள். அதில் மாணவர்கள் தங்கள் கல்வி சார்ந்த பொருட்களையும், கலைஞர்கள் தங்களின் கலை சார்ந்த பொருட்களையும், ஒவ்வொரு உழைப்பாளர்களும் தங்கள் உழைப்பை முன்னிறுத்தும் பொருட்களையும் சரஸ்வதியின் உருவத்திற்கு முன்பாக வைத்து வணங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 10-ம் நாளில் மகிஷனை வதம் செய்த துர்க்கையின் வெற்றி தினமாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் இந்த விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். மைசூர் தசராவிற்கு அடுத்தபடியாக உலகப்புகழ்பெற்ற திருவிழாவாக இந்த தசரா திருவிழா உள்ளது.

கேரளா
பரசுராமரால் உருவாக்கப்பட்டதாக புராணங்கள் சொல்லும் கேரள மாநிலம் 'கடவுளின் தேசம்" என்று அழைக்கப்படுகிறது. இங்கு பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட 108 பகவதி அம்மன் கோவில்கள் இருக்கின்றன. நவராத்திரி விழாவின் போது இந்த ௧௦௮ கோவில்களும் துர்க்கையின் ஆலயங்களாக பாவித்து, அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இந்தியாவில் கல்வி அறிவு அதிகம் பெற்ற மாநிலமாகத் திகழும் கேரளாவில், தங்களின் கல்வி சார்ந்த பொருட்கள், வீட்டு விலங்குகள், வாகனங்களை வழிபடுவதை மக்கள் விரும்புகிறார்கள்.
நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சரஸ்வதி தேவியை வணங்குகிறார்கள். அப்போது மாணவர்கள் கரும்பு அல்லது வெல்லம் போன்ற நைவேத்தியங்களுடன், தங்களின் கல்வி சார்ந்த பொருட்களை சரஸ்வதி தேவியின் உருவத்திற்கு முன்பாக வைத்து வணங்குகிறார்கள்.

ஆந்திரா
நவராத்திரி பண்டிகையானது 'பதுக்கம்மா பண்டிகை' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த திருமணமான பெண்கள் பலரும். இனிமையான தாம்பத்ய வாழ்க்கை அமைய அன்னை கவுரி தேவியை வழிபடும் நிகழ்வாக இது இருக்கிறது. திருமணமாகாத பெண்கள் தங்கள் மனதிற்கு பிடித்த மண வாழ்க்கை அமைய வேண்டும் என்று இந்த வழிபாட்டில் இணைகிறார்கள். இந்த பண்டிகையின் இறுதிநாள் விழாவில், ராமலீலா நிகழ்வு நடத்தப்படும். அதாவது ராவணனின் உருவ பொம்மை செய்து, அதை நெருப்பு மூட்டி எரியூட்டுவார்கள்.
இந்த நிகழ்வில் ஆண்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள். அன்னை கவுரி தேவியின் வழிபாட்டிற்காக உள்ளூரில் உருவாகும் மலர்களைக் கொண்டு மலர் அடுக்குகளை உருவாக்குவார்கள். இது பன்னெடுங்காலமாக நடை பெறும் வழக்கமாகும். திருவிழாவின் இறுதிநாளில் இந்த மலர் அடுக்கானது, ஒரு ஏரி அல்லது ஆற்றில் விடப்படும்.

குஜராத்
நவராத்திரி விழாவானது. குஜராத் மாநிலத்தில் ஒரு தனித்துவமான முறையில் கொண்டாடப்படுகிறது. குஜராத் மக்கள், நவராத்திரியின் ஒன்பது நாட்களும், துர்க்கை மற்றும் துர்க்கையின் வெவ்வேறு ஒன்பது அவதாரங்களையும் போற்றும் வகையில் ஒன்பது நாட்கள் விரதம் மேற்கொள்கிறார்கள். நவராத்திரி நாளில் குஜராத் மக்கள் ஆடும் ஒரு வகை நடனம் பிரசித்தி பெற்றதாகும். இந்த நடனத்திற்கு "கர்பா நடனம்" என்று பெயர்.
நவராத்திரியின் ஒவ்வொரு நாள் மாலை வேளையிலும் நோன்பு இருக்கும் பெண்கள், பானைக்குள் ஏற்றிவைக்கப்பட்ட மெழுகுவர்த்தி முன்பாக நின்று தங்கள் பிரார்த்தனைகளை, வேண்டுதல்களை சொல்லி வழிபடுவார்கள். "கார்போ" என்று அழைக்கப்படும் இந்த பானை, வாழ்க்கையின் மூலத்தையும் ஒளி, சக்தியையும் குறிக்கும். 'கார்போ' என்பதே மருவி 'கர்ப என்றானதாக சொல்கிறார்கள்.
கர்பட் என்ற வார்த்தைக்கு "கருப்பை" என்றும் பொருள். பானைக்குள் உள்ள மெழுகுவர்த்தியும், அதன் ஒளியும்கருப்பையில் இருக்கும் உயிரை குறிக்கிறது. நவராத்திரியின் ஒவ்வொரு நாள் மாலையிலும் ஆண்களும், பெண்களும், துர்க்கா தேவி சிலையை சுற்றி ஆடும் பாரம்பரிய நடனமாக கரிபா நடனம் இருக்கிறது.

கர்நாடகா
கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெறும் தசரா உலகப் புகழ் பெற்றதாகும். இது ஒரு மாநில விழாவாகும். மைசூர் நகரின் மையத்தில் மிகவும் கண்கவர் நிகழ்ச்சிகளுடன் இந்த விழா கொண்டாடப்படுகிறது. கி.பி. 1610-ம் ஆண்டு முதல் அப்போதைய மன்னன் முதலாம் ராஜா உடையார் கடைப்பிடித்த சடங்குகளைப் பின்பற்றியே, இன்றளவும் இந்த மைசூர் தசரா நடைபெற்று வருகிறது. ஒன்பதாம் நாள் திருவிழாவான, மகாநவமி அன்று அரச வாள் ஒரு சிம்மாசனத்தில் வைத்து வணங்கப்படும்.
அதன்பின்னர் யானைகள் மற்றும் குதிரைகள் மூலமாக அந்த வாள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். 10-ம் நாள் தசமி அன்று. யானை மேல் தங்க பல்லக்கில், சாமுண்டீஸ்வரியின் (துர்க்கையின் வடிவம்) உருவத்தை வைத்து, நடனக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் சூழ்ந்துவர பிரமாண்டமான ஊர்வலம் நடைபெறும்.

இமாச்சலப் பிரதேசம்
நாட்டின் பிற மாநிலங்களில் நவராத்திரி கொண்டாட்டம் முடியும் பத்தாம் நாளில், இமாச்சலப் பிரதேசத்தில் இந்த விழா தொடங்குகிறது. 14 ஆண்டுகள் வனவாசம் சென்ற ராமர், அயோத்தி திரும்பியதை குறிக்கும் வகையில் இந்த கொண்டாட்டம் இருக்கும். பத்தாம் நாளில் `குலு தசரா' என்ற பெயரில் இந்த நிகழ்வை நடத்துகிறார்கள். குலு பள்ளத்தாக்கில் மிகப் பிரபலமான திருவிழா இதுவாகும்.
இந்த நாளில் குலு பள்ளத்தாக்கு முழுவதும் உள்ள தெருக்கள் வண்ண விளக்குகளால் பிரகாசமாக மின்னும். தெய்வங்களின் சிலைகளை பிரதான மைதானத்திற்கு எடுத்துச்செல்லும் பெரிய ஊர்வலம். அந்த ஊர்வலத்துடன் கலந்த மக்களின் உற்சாகம் மற்றும் ஆடல். பாடல் ஆகியவை இந்த விழாவின் சிறப்பம்சமாகும். பல்வேறு நடனம், கலாசார நிகழ்ச்சிகள் இந்த நாளை அழகாக்கும்.
இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளூர் தெய்வமான ரகுநாதரின் சிலை, அழகாக வடிவமைக்கப்பட்டு ஒரு தேரில் வைக்கப்படும். அந்த தேரை உள்ளூர் மக்கள் கயிறுகளால் இழுத்து நகரத்தின் பல பகுதிகளிலும் வலம் வருவார்கள்.
- ராஜினாமா கடிதம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பியதாக தகவல்.
- ஒய்.எஸ்.ஷர்மிளா, ஆந்திர காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு.
ஆந்திர மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமாகவும் இருப்பவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவரது சகோதரி ஒய்.எஸ். சர்மிளா. இவர் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியை தொடங்கி அதன் தலைவராக இருந்து வருகிறார்.
இவர் கடந்த 4ம் தேதி தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக் கொண்டார். டெல்லி அலுவலகத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
வரவிருக்கும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு, ஆந்திர மாநிலத்தில் சர்மிளாவிற்கு முக்கிய பதவி கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், ஆந்திர பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து கிடுகு ருத்ர ராஜு ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை கடந்த வாரம் அவர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
அண்மையில் கட்சியில் இணைந்த முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, ஆந்திர காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- மாமியார், மருமகள் இருவரும் தாய் மகள் போல பாசமாக இருந்தனர்.
- மாமியார் இறந்த துக்கத்தில் மருமகளும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், யாதகிரி குட்டா அடுத்த கொல்ல குடிசேவையை சேர்ந்தவர் பாரதம்மா (வயது 65). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இளைய மகனின் மனைவி மங்கம்மா (26). மாமியார் மருமகள் இருவரும் தாய் மகள் போல பாசமாக இருந்தனர். நேற்று அதிகாலை பாரதம்மாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார்.
மாமியாரின் உடலைப் பார்த்து மருமகள் மங்கம்மா கதறி அழுதார். சிறிது நேரத்தில் அவருக்கும் நெஞ்சுவலி ஏற்பட்டது. உறவினர்கள் மங்கம்மாவை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே மங்கம்மா பரிதாபமாக இறந்தார்.
மாமியார் இறந்த துக்கத்தில் மருமகளும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
வழக்கமாக மாமியார், மருமகள் சண்டையிட்டு அடித்துக் கொள்வது தான் வழக்கம். ஆனால் இந்த சம்பவம் மாமியார் மருமகள் பாசத்தை வெளிப்படுத்தி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
- 4 கண்டெய்னர் லாரிகளையும் பிடித்து சோதனையில் ஈடுபட்டனர்.
- ஐதராபாத் ரிசர்வ் வங்கிக்கு பணம் எடுத்து செல்லப்பட்டதாக தகவல்.
ஆந்திரா மாநிலம் கஜரம்பள்ளியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரியை வழிமறித்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில், கட்டுக்கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல், அடுத்தடுத்து வந்த 3 கண்டெய்னர் லாரிகளையும் பிடித்து சோதனையில் ஈடுபட்டனர். அனைத்து கண்டெய்னர் லாரிகளிலும் ரூ.2000 கோடி பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக நடத்திய விசாரணையில், கேரளாவில் இருந்து ஐதராபாத் ரிசர்வ் வங்கிக்கு பணம் எடுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
- ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 13-ந் தேதி தேர்தல்.
- வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 13-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மாநிலங்களில் தற்போது 105 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரிக்கிறது. பகல் நேரத்தில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் பிரசாரத்தை முடிக்க முடியாமல் அரசியல் கட்சிகள் திண்டாடி வருகின்றன.
இது ஒரு பக்கம் இருக்க வெயிலை காரணம் காட்டி அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு வரும் தொண்டர்கள் மற்றும் பணம் கொடுத்து அழைத்து வரப்படும் பொதுமக்கள் கூலியை அதிகரித்துவிட்டனர்.
தெலுங்கானா மாநிலத்தில் இது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கடந்த வாரம் வரை பிரசாரத்திற்கு வருபவர்களுக்கு ரூ.200 மற்றும் சாப்பாடு, தண்ணீர் பாட்டில் மட்டும் வழங்கப்பட்டது.
தற்போது வெயில் கொளுத்துவதால் வெயிலில் வெளியே வர தயங்குகின்றனர். அதையும் மீறி வருவதற்கு கூடுதலாக பணம் கேட்கின்றனர்.

பெண்கள் குறைந்தது ரூ.300, தண்ணீர் பாட்டில், மோர் பாக்கெட் மற்றும் ஸ்நாக்ஸ் கேட்கின்றனர். அதுவே ஆண்களாக இருந்தால் ரூ.500, தலைக்கு தொப்பி, தண்ணீர் பாட்டில், பீர், மோர், குளிர்பானம் சாப்பாடு ஆகியவற்றை கேட்கின்றனர்.

இதுவும் வேட்பாளர்களின் சார்பில் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கூட்டம் கூட்டுவதற்கான செலவு பல மடங்கு தற்போது உயர்ந்து விட்டது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
- வேட்பாளர் டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டுகளை வடிவமைத்து பிரசாரம்.
- டிஜிட்டல் போர்டுகள் பேட்டரி இணைப்பு கொடுப்பதால் பளிச்சென ஒளிருகிறது.
திருப்பதி, மே.5-
ஆந்திர மாநிலத்தில் வருகிற 13-ந் தேதி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் பொதுமக்களை கவரும் பல்வேறு வகையில் நூதன தேர்தல் பிரசாரங்களை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் சித்தூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டுகளை வடிவமைத்து வாலிபர்களின் முதுகில் தொங்கவிட்டு தெருத்தெருவாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
பகலில் சாதாரணமாக காணப்படும் டிஜிட்டல் போர்டுகள் இரவு நேரங்களில் பேட்டரி இணைப்பு கொடுப்பதால் பளிச்சென ஒளிருகிறது. இரவு நேரங்களில் வாலிபர்கள் தெருத்தெருவாக கொண்டு செல்லும்போது பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.