என் மலர்
நீங்கள் தேடியது "மும்பை விமான நிலையம்"
- அதிகாரிகள் அவரை விமான நிலைய போலீசாரிடம் ஓப்படைத்தனர்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை:
மும்பை விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் விமானத்தில் பயணி ஒருவர் அதிகளவில் போதைப்பொருள் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் கடந்த 9-ந்தேதி வெளிநாட்டில் இருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.
அப்போது, உகாண்டா நாட்டை சேர்ந்த பயணி ஒருவர் பதற்றத்துடன் காணப்பட்டார். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரது உடைமைகளில் சோதனை நடத்தினர். இதில் எந்த பொருளும் சிக்காததால் அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
இதில், அவர் போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்ததாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் அவரை விமான நிலைய போலீசாரிடம் ஓப்படைத்தனர்.
போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையில் அவர் போதைப்பொருளை கேப்சூல் வடிவில் விழுங்கி கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் கடந்த 13-ந்தேதி இனிமா கொடுத்து அவரது வயிற்றில் இருந்த 785 கிராம் கோகைன் என்ற போதைப்பொருளை வெளியே எடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.
இதன் சர்வதேச மதிப்பு ரூ.7 கோடியே 85 லட்சம் ஆகும். இது குறித்து உகாண்டா நாட்டை சேர்ந்த பயணியை கைது செய்து, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பயணியின் பையில் சந்தேகத்துக்கு இடமாக 2 பெரிய புத்தகங்கள் இருந்தன.
- அதிகாரிகள் அந்த புத்தகங்களை எடுத்து பார்த்தனர்.
மும்பை :
மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு சம்பவத்தன்று சார்ஜாவில் இருந்து விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் அசர்பைஜான் நாட்டை சேர்ந்த பயணி ஒருவர் வந்து இறங்கினார். அவரது உடைமைகளை சுங்க வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பயணியின் பையில் சந்தேகத்துக்கு இடமாக 2 பெரிய புத்தகங்கள் இருந்தன. அதிகாரிகள் அந்த புத்தகங்களை எடுத்து பார்த்தனர்.
அப்போது புத்தகங்களின் பக்கங்களுக்கு இடையே அமெரிக்க டாலர் நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. 2 புத்தகங்களிலும் 90 ஆயிரம் அமொிக்க டாலர்களை பதுக்கி கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் இந்திய மதிப்பு ரூ.73 லட்சம் ஆகும்.
கடத்தலுக்கு பல்வேறு நூதன வழிகள் கையாளப்படும் வேளையில், புத்தகங்களில் டாலர் நோட்டுகளை மறைத்து வைத்து கடத்தி வந்த மற்றொரு நூதன முயற்சி அதிகாரிகளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த வெளிநாட்டு பயணியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல மும்பை விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் துபாயில் இருந்து விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பாலஸ்தீனத்தை சேர்ந்த பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
சோதனையில் அந்த பயணி உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்த 2½ கிலோ தங்க பசையை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க பசையின் மதிப்பு ரூ.1 கோடியே 30 லட்சம் ஆகும். தங்கம் கடத்தி வந்த பயணியை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மே 2ம் தேதி அன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விமான நிலைய ஓடுபாதைகள் தற்காலிகமாக மூடப்படும்.
- விமான நிலையத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டு உறுதி செய்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதைகள் பருவமழைக்கு முந்தைய பராமரிப்பு பணிக்காக வரும் மே மாதம் 2ம் தேதி 6 மணி நேரம் மூடப்படும் என்று விமானப்படையினருக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது, மே 2ம் தேதி அன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விமான நிலைய ஓடுபாதைகள் தற்காலிகமாக மூடப்படும் என்றும் 5 மணிக்கு மேல் வழக்கம் போல் ஓடுபாதைகள் இயங்கும் என்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை விமான நிலையத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டு உறுதி செய்துள்ளது.
- இந்திய பயணியின் பையில் இருந்து 1496 கிராம் எடையுள்ள வெள்ளைப் பொடியை கண்டெடுத்தனர்.
- உகாண்டா நாட்டு பெண் ஒருவரையும் அதிகாரிகள் பொறி வைத்து பிடித்து, கைது செய்துள்ளனர்.
மும்பை:
அடிஸ் அபாபாவிலிருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்த விமான பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். வழக்கமான அந்த சோதனையின் போது ஒரு இந்திய பயணியின் பையில் இருந்து 1496 கிராம் எடையுள்ள வெள்ளைப் பொடியை கண்டெடுத்தனர். பரிசோதனையில் இது கொக்கைன் போதைப்பொருள் என தெரிய வந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட இந்த கொக்கைனின் மதிப்பு ரூ.15 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த பயணியையும், அவரிடமிருந்து அந்த போதைப்பொருளை பெற்றுச்செல்ல நாவி மும்பை பகுதியின் வாஷி பகுதிக்கு வந்த உகாண்டா நாட்டு பெண் ஒருவரையும் அதிகாரிகள் பொறி வைத்து பிடித்து, கைது செய்துள்ளனர்.
- மும்பை விமான நிலையத்தில் கடுமையான மழை பெய்து வந்தது.
- விபத்தில் சிக்கிய ஜெட் விமானத்தில் தீ பற்றியது.
மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய போது ஜெட் விமானம் ஓடுபாதையில் சறுக்கி விபத்தில் சிக்கியது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆறு பயணிகள், இரண்டு பணியாளர்கள் என எட்டு பேர் இந்த ஜெட் விமானத்தில் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் காயமுற்றனர். இந்த சம்பம் இன்று (செப்டம்பர் 14) மாலை 5.02 மணிக்கு அரங்கேறி இருக்கிறது.
நல்ல வேளையாக இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. மும்பை விமான நிலையத்தில் கடுமையான மழை பெய்து வந்ததும், இந்த விபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய ஜெட் விமானத்தில் தீ பற்றியது. எனினும், மீட்பு படையினர் விரைந்து வந்து, தீயை அணைத்தது.

விபத்தைத் தொடர்ந்து ஓடுபாதையில் இருந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, முறையான பாதுகாப்பு பரிசோதனைகள் நிறைவு பெற்று, அதனை தேசிய விமான போக்குவரத்து துறை உறுதிப்படுத்திய பிறகே ஓடுபாதையில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.
இந்த விபத்து மும்பை விமான நிலையத்தின் 27-வது ஓடுபாதையில் ஏற்பட்டது. மழை காரணமாக பாதையில் வழுவழுப்பாக இருந்ததும், 700 மீட்டர்கள் வரை பார்க்கக்கூடிய நிலை இல்லை என்று கூறப்படுகிறது. விபத்தை தொடர்ந்து ஓடுபாதையில் மற்ற விமானங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இதன் காரணமாக கிட்டத்தட்ட ஐந்து விமானங்கள் மற்ற ஓடுபாதை வழியாக கிளம்பி சென்றன. விபத்தில் சிக்கியது லியர்ஜெட் 45 ரக ஜெட் விமானம் ஆகும். இதனை கனடாவை சேர்ந்த வான்வழி போக்குவரத்து நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. இந்த விமானம் வி.எஸ்.ஆர். வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை தெரிவித்து இருக்கிறது.
- மற்றொரு எச்சரிக்கை 24 மணிநேரத்திற்குப் பிறகு இருக்கும் என மின்னஞ்சலில் கூறப்பட்டு இருந்தது.
- மர்மநபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை:
மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் விமான நிலையத்தின் டெர்மினல் 2-வை தகர்க்கப்போவதாகவும், வெடிப்பைத் தடுக்க 48 மணி நேரத்திற்குள் 1 மில்லியன் டாலர்களை பிட்காயினில் தரவேண்டும் என்றும் மர்மநபர் மின்னஞ்சலில் தெரிவித்திருந்தார்.
மேலும், "உங்கள் விமான நிலையத்திற்கு இது இறுதி எச்சரிக்கை. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் பிட்காயினுக்கு மாற்றப்படாவிட்டால், 48 மணி நேரத்தில் டெர்மினல் 2 ஐ வெடிக்கச் செய்வோம். மற்றொரு எச்சரிக்கை 24 மணிநேரத்திற்குப் பிறகு இருக்கும்" என மின்னஞ்சலில் கூறப்பட்டு இருந்தது.
இதுகுறித்து, விமான நிலைய அதிகாரி ஒருவர் சஹார் காவல் நிலையத்தை அணுகி, மர்மநபர் மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகள் 385 (பணம் பறிப்பதற்காக ஒரு நபருக்கு காயம் ஏற்படும் என்ற பயத்தில்) மற்றும் 505 (1) (பி) (அச்சம் அல்லது அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்ட அறிக்கைகள்) கீழ் எப்.ஐ.ஆர். (பொது அல்லது பொது அமைதிக்கு எதிராக) அடையாளம் தெரியாத நபர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
- கோவாவில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டு வந்தது.
- விமானத்தில் இருந்து இறங்க படிக்கட்டு வைக்கப்பட்டதால் பயணிகள் அவசர அவசரமாக கீழே இறங்கினார்கள்.
மும்பை:
டெல்லியில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து செல்லும் சில விமானங்கள் தரை இறங்க முடியாததால் திருப்பி விடப்பட்டுள்ளன. விமானங்கள் புறப்படுவதில் பல மணி நேரம் தாமதமாகிறது.
கோவாவில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டு வந்தது. டெல்லியில் பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் தரை இறங்க முடியவில்லை. இதனால் அந்த விமானம் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமானநிலையத்தில் தரை இறக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தில் இருந்து இறங்க படிக்கட்டு வைக்கப்பட்டதால் பயணிகள் அவசர அவசரமாக கீழே இறங்கினார்கள். உடனே அவர்கள் விமான ரன்வேயின் அருகில் விமானங்கள் நிறுத்தும் இடத்துக்கு சென்று அமர்ந்தனர்.
உடனே குடும்பத்துடன் அவர்கள் உணவுகளை சாப்பிட ஆரம்பித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்ததும் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று பயணிகளை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் பயணிகள் நகராமல் தொடர்ந்து சாப்பிடுவதில் மும்முரமாக இருந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்துக்கு விமான நிறுவனம் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் மன்னிப்பு கேட்டுள்ளனர். இது தொடர்பாக அந்த நிறுவனம் டெல்லியில் மோசமான வானிலை காரணமாக விமானம் திருப்பி விடப்பட்டது. இதற்கு பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சுமார் 12 மணி நேரம் விமான பயணிகள் தவித்தனர்.
- பனிபொழிவால் டெல்லியில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது
- இரவு உணவு கூட கிடைக்காமல் பயணிகள் தவித்துள்ளனர்
கடந்த நவம்பர் 2023 முதல், வட இந்தியாவில் பனிப்பொழிவு மிக கடுமையாக உள்ளது.
குறிப்பாக, தலைநகர் புது டெல்லியில், பனிப்பொழிவின் கடுமை அதிகரித்துள்ளதால் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று கோவாவில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய 6E 2195 எனும் விமானம், பனிப்பொழிவின் காரணமாக டெல்லிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, மும்பை விமான நிலையத்தில் தரையிறங்க, விமான நிலைய அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
கோவாவில் இருந்து புறப்படும் போதே இவ்விமானம் அதிக தாமதத்திற்கு உள்ளானதால், பயணிகள் மிகுந்த கோபத்தில் இருந்தனர்.
மும்பையில் தரையிறக்கப்பட்டதும் அவர்களுக்கு முறையான இரவு உணவு கூட கிடைக்காமல் திண்டாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டி இருந்ததால், சில பயணிகள், விமான நிலைய ஓடுபாதையிலேயே அமர்ந்து உணவு உண்டனர். இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து, மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் அனைவருடனும் பேச்சு வார்த்தை நடத்தினார்.
தொடர்ந்து, அத்துறையின் சார்பில் மும்பை விமான நிலையத்திற்கும், இண்டிகோ விமான அலுவலகத்திற்கும் விளக்கம் தர கோரி, "ஷோ காஸ் நோட்டீஸ்" (showcause notice) அனுப்பப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:
இண்டிகோ மற்றும் மும்பை சர்வதேச விமான நிலையங்கள் சூழ்நிலையை எதிர்கொள்ளும் விதமாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்கவில்லை.
பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருந்தால் இச்சம்பவம் நடந்திருக்காது. பயணிகள் இறங்கியவுடன் நிலையத்திற்கு விரைந்து செல்லும் வகையில் விமானத்தை நிறுத்த இடத்தை ஒதுக்காமல், தொலைவில் புதிய இடத்தை நிலையம் வழங்கியது பெரும் தவறு. இதனால் பல பயணிகள் நடக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.
பயணிகளுக்கு இதனால் உணவு விடுதி மற்றும் ஒப்பனை அறைக்கான வசதி உடனடியாக கிடைக்கவில்லை.
இந்த தவறுகளுக்கு அந்த நோட்டீசில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
- வாயில் நீர் ஊற வைக்கும் மிகவும் சுவையான பானி பூரியின் விலை, மும்பையில் ரூ.25 முதல் ரூ.50 வரை மட்டுமே.
- உணவகத்தை நடத்துபவர்களுக்கு நேரடியாக விமான நிலைய நிர்வாகத்தார் வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ இடங்களை கொடுப்பதில்லை.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் பானி பூரி விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. இதன் விலை ரூ.333 என அதில் எழுதி வைக்கப்பட்டிருந்தது.
இதைப் பார்த்த சில பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். வாயில் நீர் ஊற வைக்கும் மிகவும் சுவையான இந்த பானி பூரியின் விலை, மும்பையில் ரூ.25 முதல் ரூ.50 வரை மட்டுமே. இந்நிலையில் இது விமான நிலையத்தில் ரூ.333-க்கு விற்கப்படுவது சரியல்ல என்று பயணி ஒருவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இந்த விலையைப் பார்த்ததுமே பசி பறந்துபோய் விடும் என்றும் அவர் கருத்தைப் பதிவு செய்து உள்ளார்.
மேலும் பானி பூரி, தஹி பூரி, சேவ் பூரி படங்களுடன் அந்த விலைப்பட்டியல் இருக்கும் புகைப்படத்தையும் எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இந்த எக்ஸ் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதனிடையே இந்தப் பதிவுக்கு எக்ஸ் தளத்தில் கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ஒருவர் கூறும்போது, "விமான நிலையத்தில் அது விற்பனை செய்யப்படுவதால் அதன் விலை அதிகரித்துள்ளது. விமான நிலையக் கட்டணம், பராமரிப்பு கட்டணம், செயல்பாட்டு கட்டணம், பயன்பாட்டுக் கட்டணம், ஊதியம் உள்ளிட்ட பல விவகாரங்கள் அதில் சேர்கின்றன. அதனால்தான் வெளியில் ரூ.33-க்கு கிடைக்கும் பானி பூரி இறுதியில் விமான நிலையத்தில் ரூ.333-க்குக் கிடைக்கிறது" என்றார். மற்றொரு பயணி ஒருவர் கூறும்போது, "இது நிச்சயம் பகல் கொள்ளை என்று தெரிவித்துள்ளார். பெரும்பாலான பயனர்கள் இதை பகல் கொள்ளை என்றே தெரிவித்துள்ளனர்.
மற்றொரு பயணி கூறும்போது, "உணவகத்தை நடத்துபவர்களுக்கு நேரடியாக விமான நிலைய நிர்வாகத்தார் வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ இடங்களை கொடுப்பதில்லை. இதற்காக சில நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளன. அந்த நிறுவனங்கள் மூலமாக உணவகங்கள் விமான நிலையத்தில் வாடகைக்கு இடத்தைப் பிடிக்கின்றன. ஒருவேளை, உணவகங்களுக்கு விமான நிலைய நிர்வாகம் நேரடியாக இடத்தை வாடகைக்குக் கொடுத்தால் உணவுகளின் விலை குறைய வாய்ப்பு உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
- ஒரு பயனர், விமான நிலையங்களுக்கும் இந்த கிருமி வந்துவிட்டது என பதிவிட்டிருந்தார்.
- ஏராளமான பயனர்கள் தங்களது பதிவில், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளனர்.
டெல்லி, மும்பையில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்வே நடைமேடைகளில் இளம்பெண்கள் திடீரென நடனமாடுவது, இளைஞர்கள் சாகசம் செய்வது போன்ற செயல்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதுபோன்ற செயல்கள் மற்ற பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதால் பொது இடங்களில் அத்துமீறும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஆனாலும் அதை சில பயணிகள் கண்டுகொள்வதில்லை.
இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் இளம்பெண் ஒருவர் தரையில் படுத்து உருண்டு நடனம் ஆடும் காட்சிகள் எக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. சல்வார் குர்தா அணிந்திருக்கும் அந்த பெண் 2000-ம் ஆண்டில் வெளிவந்த குருசேத்ரா எனும் இந்தி படத்தில் இடம்பெற்ற 'ஆப் க ஆனா' என்ற பாடலுக்கு நடனம் ஆடுகிறார். சல்வார் துப்பட்டாவை தூக்கி வீசி நடனம் ஆடிய அவர் திடீரென விமான நிலையத்திற்குள் தரையில் படுத்து உருண்டு நடனம் ஆடும் காட்சிகளை பார்த்த பயனர்கள் அந்த பெண்ணின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு பயனர், விமான நிலையங்களுக்கும் இந்த கிருமி வந்துவிட்டது என பதிவிட்டிருந்தார். ஏராளமான பயனர்கள் தங்களது பதிவில், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளனர்.
The virus has reached the airports pic.twitter.com/vSG15BOAZE
— desi mojito ?? (@desimojito) May 29, 2024
- தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் குபேரா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார்.
- வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழ், தெலுங்கு மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ராஷ்மிகா. எனினும் இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து விஜய்யின் வாரிசு படத்தில் ராஷ்மிகா நடித்திருந்தார்.
இருப்பினும் தமிழில் போதிய வரவேற்பு கிடைக்காததால் தெலுங்கு, இந்தி மொழி படங்களில் அவர் நடித்து வருகிறார். அண்மையில் ராஷ்மிகா நடிப்பில் இந்தியில் வெளியான அனிமல் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
அவர் தற்போது புஷ்பா 2, ரெயின்போ, கேர்ள்ஃப்ரண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதே போல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் குபேரா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார்.
இந்நிலையில், மும்பை விமான நிலையத்தில் ரசிகர் ஒருவர் தனது கையைத் தொட்டு செல்ஃபிக்கு போஸ் கொடுக்கச் சொன்னதால் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு அசவுகரியம் ஏற்பட்டது. இருப்பினும் அவர் அமைதியாகவும், பணிவாகவும் அந்த சூழ்நிலையை கையாண்டார்.
இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. வீடியோ காட்சிகளை கண்ட ராஷ்மிகாவின் ரசிகர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனது பாஸ்போர்ட்டில் உள்ள 12 பக்கங்களைக் கிழித்து மோசடியில் ஈடுபட்டனர்.
- தாய்லாந்துக்கு பயணம் மேற்கொள்ள இருந்த துஷார் பவார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்
ஜூலை 11 அன்று மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்துக்கு பயணம் மேற்கொள்ள இருந்த துஷார் பவார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
33 வயதான துஷார் பவார், தனது பாஸ்போர்ட்டில் உள்ள 12 பக்கங்களைக் கிழித்து மோசடியில் ஈடுபட்டதாகவும், அதில் அவர் தாய்லாந்து, பேங்காங் உள்ளிட்ட நாடுகளுக்கும் பயணம் செய்த விவரங்கள் உள்ளது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2023 - 2024 ஆம் ஆண்டுகளில் 3 முறை தாய்லாந்து சென்றதாகவும் அந்த விஷயம் தனது மனைவிக்கு தெரிந்தால் பிரச்சனையாகும் என்று பாஸ்போர்ட்டின் சில பக்கங்களை கிழித்ததாக அவர் ஒப்பு கொண்டுள்ளார்.
பாஸ்போர்ட்டில் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட துஷார் தற்போது நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.