என் மலர்
நீங்கள் தேடியது "புதுச்சேரி முதல்வர்"
- குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தார்.
- ஏழை மக்களுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும்.
புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில் 2025- 26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து 7-வது நாள் கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. வட்டம் தொடங்கியதும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 9 மாதங்களுக்கு பிறகு பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட குழுவிற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, நியாய விலைக்கடைகள் இல்லாத பகுதிகளில் வாகனங்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தார்.
மேலும், கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசுகையில், "புதுச்சேரியில் அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் ஏழை மக்களுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும்" என அறிவித்தார்.
இந்நிலையில், புதுச்சேரியில் மஞ்சள் நிற ரேசன் அட்டை வைத்துள்ள மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
தற்போது சிவப்பு நிற ரேசன் அட்டைதாரர்களுக்கு மட்டும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சாதாரண குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மஞ்சள் நிற குடும்ப அட்டை என்பது ஆண்டு குடும்ப வருமானம் ரூ.1,20,000 வரை மட்டுமே பெரும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
- புதுச்சேரியில் ஆண்டு சராசரி மழையளவு 1,399 மி.மீ.. ஆனால் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 1688.8 மி.மீ மழை பெய்துள்ளது.
- புதுச்சேரி அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புகிறது.
ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை சரிசெய்ய ரூ.600 கோடி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சூறாவளி புயலின் போது ஏறத்தாழ 500 மரங்கள் மற்றும் 1,596 மின் கம்பங்கள் விழுந்து சேதமடைந்தன. மேலும் 2,15,750 ஏ.சி.எஸ்.ஆர் கண்டெக்டர்கள், 53 எண்ணிக்கையிலான ஆற்றல் திறன் கொண்ட மின்மாற்றிகள் மற்றும் 52 பள்ளிகள்/கல்லூரிகள் கட்டிடங்கள் சேதமடைந்தன.
புதுச்சேரியில் ஆண்டு சராசரி மழையளவு 1,399 மி.மீ.. ஆனால் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 1688.8 மி.மீ மழை பெய்துள்ளது. சுமார் 1,50,000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சுவிடுவது அவசியம் என்று கருதுவதால், இந்த அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புகிறது. இந்த நிர்வாகத்தின் அந்தந்தத் துறைகள், கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களைத் துறை வாரியாக கீழ்க்கண்டவாறு தற்காலிக மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளன.

முதற்கட்டமாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகள் மற்றும் உதவிகளை வழங்குவதற்காக ரூ.600 கோடி விடுவிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை காவல்துறை தேர்வில் வயது வரம்பை 24 ஆக உயர்த்த 3 தடவை கவர்னர் கிரண்பேடிக்கு கோப்புகள் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் கோப்பினை திருப்பி அனுப்பினார். மத்திய உள்துறை அமைச்சகம் வயது வரம்பில் தளர்வு கூடாது என பரிந்துரைத்திருப்பதாக கூறுகின்றனர் பரிந்துரை என்பது சட்டமாகாது.
அந்தந்த மாநிலத்துக்கு ஏற்ப வயது வரம்பு தளர்த்தப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரை இந்தியா முழுமைக்குமானது என்றால் அண்டை மாநிலமான தமிழகத்தில் வயது வரம்பு தளர்வு ஏன் அளிக்கப்படுகிறது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படை, வயது வரம்பு 24 ஆக இருப்பது ஏன்? மத்திய அரசே இதனை கடைப்பிடிக்கவில்லை. காவலர் பணியிடங்களை குரூப் ‘சி’ பிரிவில் தான் வருகிறது. வயது வரம்பை தளர்த்துவதற்கு கவர்னருக்கு அதிகாரம் இருக்கிறது. பணி நியமன விதிகளில் வயதை தளர்த்திக் கொள்ளலாம் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 5 நிமிடத்தில் முடிக்க வேண்டிய வேலைக்கு மத்திய அரசுவரை கவர்னர் கிரண்பேடி செல்ல வைத்து விட்டார்.
புதுவை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்வது, தேர்வு செய்யப்பட்ட அரசின் கடமை. இதற்காகத் தான் மத்திய உள்துறை வரை போராடி வருகிறோம்.
எல்லாவற்றிலும் தனக்குத் தான் அதிகாரம் என அடிக்கடி கூறி வரும் கவர்னர் இந்த விஷயத்தில் தனக்கு அதிகாரம் இல்லை என கூறுவதை மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார். #PuducherryCM #Narayanasamy #KiranBedi
ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் கடந்த 4 நாட்களாக மாற்று திறனாளிகளுக்கான கூடைப்பந்து போட்டிகள் நடந்தது. இதன் பரிசளிப்பு விழா நேற்று மாலை நடந்தது. இதில் புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி கலந்து கொண்டார். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
4 ஆண்டுகால மோடியின் ஆட்சியால் நாடு முன்னேறவில்லை. நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பிரதமர் மோடி பணத்தை மாற்றினால் கருப்பு பணத்தை ஒழித்துவிடலாம் என்றார். ஆனால் கருப்பு பணம் ஒழிந்தபாடில்லை. புதிதாக நோட்டு அச்சடிக்கப்பட்டதால் ரூ.20 ஆயிரம் கோடி செலவானதுதான் மிச்சம். ரூ. 20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடி கொண்டு வந்த ஜி.எஸ்.டி. வரியால் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டன. தொழிலாளர்கள் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.
நானும் ஊழல் செய்யமாட்டேன். வேறு யாரையும் ஊழல் செய்ய விடமாட்டேன் என வீராப்பு பேசி மோடி சவால் விட்டார். ஆனால் இப்போது ரபேல் போர் விமானம் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பது பூதாகரமாக கிளம்பி உள்ளது. இந்த ஊழல் குறித்து ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் சொல்லாமல் திணறி கொண்டிருக்கிறார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை மன்னித்து விடுதலை செய்ய தலைவர் ராகுல்காந்தி ஒப்புக்கொண்டார். அவர் ஒப்புக்கொண்டாலும் தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடு இல்லை.
எனினும் தலைவர் ராகுல்காந்தி கூறியதால் நானும் ஏற்றுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் பெயருக்குதான் அ.தி.மு.க. அரசு. ஆனால் அரசை இயக்கி வருபவர் பிரதமர் மோடி தான். பாரதிய ஜனதாவின் டீம்தான் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத்தை மோடி ஆட்டிப்படைக்க அதன்படி இங்குள்ள ஆட்சியாளர்கள் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #Rajivgandhi #RajivGandhiCase #PuducherryCM #Narayanasamy #PMModi
தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார்.
அதே விமானத்தில் பயணம் செய்த கனடா நாட்டில் பயிலும் முனைவர் பட்ட மாணவி சோபியா பாரதிய ஜனதாவை விமர்சித்து முழக்கமிட்டார். இதுபற்றி விமானம் இறங்கிய பின்னர் அந்த மாணவியிடம் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டார்.

இந்த நிலையில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் சகிப்பு தன்மை வேண்டும். மக்களின் குரலை ஒடுக்க கூடாது. இது ஜனநாயகம் இல்லை. அது சர்வாதிகாரமாகி விடும்.
இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார். #Sophia #Narayanasamy
புதுவை அரசின் மகளிர் மற்றும் மாற்றுதிறனாளிகள் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் புதுவையில் உள்ள அனைத்து தொகுதிகளையும் சேர்ந்த மாற்றுதிறனாளிகள் சுய தொழில் தொடங்கும் விதமாக கடன் உதவி வழங்கும் விழா சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் இன்று நடந்தது.
81 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 70 லட்சம் கடன் உதவியை முதல்-அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் போது, அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், சிவா, தனவேலு, பாஸ்கர், தீப்பாய்ந்தான், விஜயவேணி, எம்.என்.ஆர். பாலன் மற்றும் மகளிர் மற்றும் மாற்றுதிறனாளிகள் மேம்பாட்டு கழக தலைவர் ஆலிஸ்வாஸ், மேலாண் இயக்குனர் அனிதா ஆகியோர் உடன் இருந்தனர்.
முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது, அது இந்திய அரசியல் அமைப்பு அமர்வு 5 நீதிபதிகள் கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, முழு தீர்ப்பை நான் படிக்கவில்லை.
முக்கிய அம்சங்களை நான் கூற விரும்புகிறேன், புதுவைக்கு 100-க்கு 110 சதவீதம் இந்த தீர்ப்பு பொருந்தும். கவர்னர் அமைச்சரவையின் அறிவுரையின்படிதான் செயல்பட வேண்டும். அவருக்கு தனிப்பட்ட அதிகாரம் இல்லை என தொடர்ந்து 2 ஆண்டுகளாக அறிவுறுத்தி உள்ளேன். 19 முறை கடிதம் எழுதியுள்ளேன், அதிகாரிகளை அழைத்து தனியாக கூட்டம் போட அதிகாரம் இல்லை என கூறியுள்ளேன்.
பல பகுதிகளுக்கு சென்று பார்க்க உரிமை உண்டு. ஆனால், தனியாக உத்தரவு போட அதிகாரம் இல்லை என பல பத்திரிகை பேட்டியில் கூறியுள்ளேன். கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அனைத்தையும் டெல்லிக்கு அனுப்பக் கூடாது.
முக்கிய கொள்கை முடிவுகளை மட்டுமே அனுப்ப வேண்டும். நான் கூறிய அனைத்தும் நீதிமன்ற தீர்ப்பில் பிரதிபலித்துள்ளது. துணை நிலை ஆளுனர் மக்கள் நல திட்டங்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செய்யும்போது தடையாக இருக்க கூடாது.
கவர்னர் முட்டுக்கட்டை போட அதிகாரம் இல்லை என நான் கூறியது தீர்ப்பிலேயே வந்துள்ளது. அமைச்சரவை எடுத்த முடிவில் கை வைக்க அதிகாரம் இல்லை என நான் கூறியதை உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
கேபினட் முடிவு அனுப்பினால் அதில் கை வைக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை. டெல்லியில் நிலம் சட்டம்-ஒழுங்கு நிர்வாகம், நிதி ஆகியவற்றில் உரிமை இல்லை. ஆனால் புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருப்பதால், அனைத்து அதிகாரமும் சட்டசபைக்கு உண்டு.
கோப்புகள் அனுப்பும் போது காரணங்கள் கூறி கோப்புகளை திருப்பி அனுப்ப அவருக்கு அதிகாரம் இல்லை. இந்திய அரசியலமைப்பு சட்டம் மிக தெளிவாக கூறியிருப்பது கவர்னருக்கு எந்த முடிவெடுக்கவும் தனி அதிகாரம் இல்லை.
முழு அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கே உண்டு. இது சம்பந்தமாக நான் தொடர்ந்து 2 ஆண்டுகளாக கவர்னர், பிரதமர், உள்துறைக்கு கடிதம் எழுதியும் எனக்கு சரியான பதில் கூறவில்லை.

கவர்னர் அதிகாரிகளை அழைத்து தன்னுடைய அலுவலகத்தில் தினமும் கூட்டம் போடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அவருக்கு அதிகாரம் கிடையாது. தேவைப்பட்டால் கோப்பில் விளக்கம் வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட துறையின் செயலாளரை அழைத்து பேசலாம். அவரும்கூட சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் இது குறித்து பேச வேண்டும் என தெரிவித்துவிட்டு தான் செல்ல வேண்டும்.
அதிகாரிகளுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இந்த உத்தரவை நான் போட்டிருக்கிறேன். யார் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறினாலும் அவர்கள் மீது நீதிமன்றத்தில் மனு போட்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நான் தொடருவேன்.
2 ஆண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ள மரியாதையை குறைக்கும் வகையில் அதிகாரிகளை அழைத்து பேசி தன்னிச்சையாக செயல்பட வைத்ததை இனி நிறுத்தி கொள்வார்கள் என நினைக்கிறேன். கவர்னரை பொருத்தவரை உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
மக்களாட்சி தத்துவத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அமைச்சரவைக்கு உள்ள உரிமையில் அவர் தலையிட்டதால் தான் பிரச்சினை வந்தது. அதிகார போட்டி இதில் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார். #DelhiPowerTussle #PuducherryCM #Narayanasamy
நாகை அடுத்த நாகூரில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசை எதிர்பார்க்க தேவையில்லை. வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது
தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களை, அரசுத் துறைகளில் இணை செயலாளர்களாக நியமிக்கலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
மேலும், நிர்வாக சீர்கேட்டிற்கு வழி வகுக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சங் பரிவார அமைப்புகளை அரசு துறைகளில் உள்ளே கொண்டு வரவே மத்திய அரசு இந்த முயற்சியை எடுத்துள்ளது. புதுச்சேரி அரசு நிர்வாகத்தை தன் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய பா.ஜ.க அரசு முயற்சிக்கிறது. இதை ஒரு போதும் புதுச்சேரி அரசு ஏற்றுக் கொள்ளாது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரியில் கவர்னர் கிரண் பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையிலான அதிகார மோதல் தீவிரமடைந்துள்ளது. மத்திய அரசின் நம்பிக்கையை இழந்த பிறகு கவர்னராக கிரண்பேடி தொடரக்கூடாது என்றும், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

இதுவரை 3 முறை கவர்னரின் முடிவுக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதால், இதன் பிறகும் கவர்னராக கிரண்பேடி பதவியில் தொடர்வதா? என்பது குறித்து கிரண்பேடிதான் முடிவு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
நாராயணசாமியின் இந்த கருத்துக்கு கவர்னர் கிரண் பேடி டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்.
‘நான் ராஜினாமா செய்ய வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்துகிறார். ஒருவர் வேலையில் இருந்து விலகலாம், ஆனால் கொள்கையில் இருந்து விலக முடியாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்’ என கிரண் பேடி கூறியுள்ளார். தான் புதுச்சேரியின் வளர்ச்சிக்காக பாடுபடுவதாகவும் கிரண்பேடி கூறியுள்ளார். #KiranBedi