என் மலர்
நீங்கள் தேடியது "ஆத்தூர்"
- ஆத்தூர் வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி. காா்த்திகேயன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது.
- டாஸ்மாக் கடையை வருகிற 15-ந் தேதி முதல் நிரந்தரமாக மூடப்படுமென்று அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே உள்ள குமராபண்ணையூர், செல்வன்புதியனூர் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும், ஆத்தூர் புன்னைக்காயல் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆத்தூர் மெயின் பஜாரில் பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
இதனால் திருச்செந்தூர்- தூத்துக்குடி போக்குவரத்து முடங்கியது. ஏரல், குரும்பூர் வழியாக மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று மாலை வரை போராட்டம் தொடர்ந்தது. இதனையடுத்து ஆத்தூர் வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி. காா்த்திகேயன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது.
ஆத்தூா்-புன்னைக்காயல் சாலையிலுள்ள டாஸ்மாக் கடையை வருகிற 15-ந் தேதி முதல் நிரந்தரமாக மூடப்படுமென்றும், அதுவரை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போலீஸ் பாதுகாப்புடன் தற்காலிகமாக இயங்குமென்றும் அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
மேலும் சாலை அமைப்பதற்கான பணிகள் ஜூலை 15-ந் தேதி தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- குமரன் என்பவர் வழிமறித்து அவதூறாகப் பேசி மகாலிங்க காந்தியை அரிவாளால் வெட்டினார்.
- அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால் குமரன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
ஆத்தூர்:
ஆத்தூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் தொழிலாளி மகாலிங்க காந்தி. இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ரேவதி என்பவருக்கும் குப்பை கொட்டுவது தொடர்பாக தகராறு இருந்து வருகிறது.
இந்நிலையில் மகாலிங்ககாந்தி, ஈஸ்வரி ஆகியோர் ஆத்தூர்- புன்னக்காயல் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ரேவதியின் உறவினரான குமரன் (வயது39) என்பவர் வழிமறித்து அவதூறாகப் பேசி மகாலிங்க காந்தியை அரிவாளால் வெட்டினார்.
இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்
கூச்சலிட்டதால் குமரன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.காயமடைந்த மகாலிங்க காந்தி சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து ஈஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
குறிப்பாக ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி பகுதிகளில் இன்று அதிகாலை கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல்வெளிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
ஏற்காட்டில் பெய்த மழையால் குளிர்ந்த சீேதாஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.
சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஜங்சன், கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளில் இன்று அதிகாலை லேசான மழை பெய்தது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 20 மி.மீ. மழை பெய்துள்ளது. ஆத்தூர் 19, கெங்கவல்லி 14, பெத்தநாயக்கன்பாளையம் 11, சேலம் 10.6, தம்மம்பட்டி 7,சங்ககிரி 4, வீரகனூர், எடப்பாடி, கரியகோவில் பகுதிகளில் தலா 2, காடையாம்பட்டி, ஓமலூர், ஆனை–மடுவு ஆகிய பகுதிகளில் தலா 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 93.6 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடதக்கது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருமந்துறை, தும்பல், பாப்பிநாயக்கன்பட்டி, செக்கிடிபட்டி, தாண்டானூர், கொட்ட வாடி, குமாரபாளையம், பெரிய கிருஷ்ணாபுரம், வைத்தியகவுண்டன் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாக்கடைவசதி, கழிப்பிடம், சாலை, மின்விளக்கு, ரேசன்கடை, பஸ்வசதி குறித்து பொதுமக்களிடம் கேட்கப்பட்டது.
இதில் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், ஆத்தூர் எம்.எல்.ஏ சின்னதம்பி, ஏற்காடு எம்.எல். ஏ சித்ரா ஆகியோர் குறைகளை கேட்டனர். அப்போது பெத்தநாயக்கன் பாளையம் தாசில்தார் பிரகாஷ், பெத்தநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கந்தசாமி, வட்டாரவளர்ச்சி அலுவலர் சாந்தி, பெத்தநாயக்கன் பாளையம் வடக்கு ஒன்றிய செயலர் ரமேஷ், தெற்கு ஒன்றியசெயலர் முருகேசன், நரசிங்கபுரம் நகர செயலர் மணிவண்ணன், ஏத்தாப்பூர் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் குப்புசாமி, உட்பட பலர் கலந்து கொண்டு மேற்கண்ட அனைத்து ஊர்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து குறைகளை கேட்டு அதனை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள்.