என் மலர்
நீங்கள் தேடியது "ட்விட்டர்"
- ட்விட்டர் புளூ பயனர்கள் தங்களின் மொபைல் நம்பரை வழங்கி வெரிஃபை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
- தற்போதுள்ள புளூ செக்மார்க்குகள் அடுத்த சில மாதங்களில் படிப்படியாக நீக்கப்பட்டு விடும் என எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார்.
இந்திய பயனர்களுக்கான ட்விட்டர் புளூ சந்தா விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. டிப்ஸ்டரான முகுல் ஷர்மா ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்டை வெளியிட்டு இருக்கிறார். எனினும், இதுபற்றி ட்விட்டர் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. சிறு இடைவெளிக்கு பின் ட்விட்டர் புளூ மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அந்த வரிசையில், ட்விட்டர் புளூ இந்திய விலை விவரங்கள் லீக் ஆகி இருக்கிறது.
ஐஒஎஸ் பயனர்களுக்கு ட்விட்டர் புளூ சந்தாவுக்கான கட்டணம் ரூ. 999 வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு பயனர்கள் இந்த சேவைக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், ஐஒஎஸ் பயனர்களுக்கு ட்விட்டர் புளூ சந்தாவின் விலை அதிகமாக இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

சர்வதேச சந்தையில் ட்விட்டர் புளூ ஐஒஎஸ் விலையை ஒப்பிடும் போது இந்திய விலை சற்று அதிகமாகவே இருக்கும் என தெரிகிறது. இந்தியா தவிர தற்போது ட்விட்டர் புளூ சேவை வெளியிடப்பட்டு இருக்கும் நாடுகளில் ஐஒஎஸ் பயனர்கள் மாத சந்தாவாக 11 டாலர்கள் செலுத்த வேண்டும். ட்விட்டர் வெப் பயனர்கள் மாதம் 7 டாலர்கள் வரை சந்தாவாக செலுத்த வேண்டும் என தெரிகிறது. எனினும், இது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.
ட்விட்டர் புளூ சந்தாவில் பயனர்களுக்கு, ட்விட்களை எடிட் செய்யும் வசதி, 1080 பிக்சல் தரத்தில் வீடியோ அப்லோடு செய்யும் வசதி, ரீடர் மோட் என ஏராளமான அம்சங்கள் வழங்கப்படுகிறது. தற்போதைய தகவல்களின் படி ட்விட்டர் வெரிஃபிகேஷன் செக்மார்க்குகள் புது நிறங்களில் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி வியாபாரங்கள் மற்றும் கோ-ஆபரேஷன்களுக்கு கோல்டு நிறமும், அரசு, சர்வதேச அக்கவுண்ட்களுக்கு கிரே நிறமும் வழங்கப்படுகிறது.
முதற்கட்டமாக ட்விட்டர் புளூ சந்தா அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் மட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது. வரும் நாட்களில் மற்ற நாடுகளில் இந்த அம்சம் வழங்குவது பற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
- பீர் குவளையை பிடித்தவாரும் மார்க் கடலில் சர்ஃபிங் செய்து விடுமுறையை கொண்டாடும் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
- மார்க்கை கலாய்த்து எலான் மஸ்க் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பேஸ்புக், வாட்சப், இன்ஸ்ட்டாகிராம் உள்ளிட்ட சமூக வலிதளங்களை நிர்வகிக்கும் மெட்டா சிஇஓ மார்க் ஜூகர்பெர்க் மற்றும் எக்ஸ் [ட்விட்டர்] உரிமையாளரும் ஸ்பேஸ் எக்ஸ் டெஸ்லா உள்ளிட்டவற்றின் நிறுவனருமான எலான் மஸ்க்கிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் கடந்த ஜூலை 4 ஆம் தேதி அமெரிக்க சுதந்திர தினத்தின்போது, கோட் சூட் அணிந்தவாறு ஒரு கையில் அமெரிக்க கோடியை ஏந்தியவாறும், மறு கையில் பீர் குவளையை பிடித்தவாரும் மார்க் கடலில் யாட்ச்சில் சர்ஃபிங் செய்து விடுமுறையை கொண்டாடும் வீடியோவை இன்ஸ்ட்டாகிராமில் பகிரவே அது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
இந்த வீடியோ வைரலாக நிலையில் மார்க்கை கலாய்த்து எலான் மஸ்க் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், அவர் யாட்ச்களில் பொழுதைப்போக்கி கொண்டாட்டங்களில் ஈடுபடட்டும்.அதைவிட நான் வேலை செய்யவே விரும்புகிறேன். I prefer to work என்று தெரிவித்துள்ளார். ப்ளூம்பெர்க் அறிக்கைபடி பணக்காரர் பட்டியலில் மார்க் ஜூகர்பெர்கைவிட எலான் மஸ்க் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- 2 நிறுவனங்களின் தலைமையிடத்தை டெக்சாஸ் மாகாணத்திற்கு மாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
- டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் இந்த ராக்கெட் சோதனை தலமான ஸ்டார்பேஸ் Starbase பகுதிக்கு மாற்றம் செய்யப்படும்
அமெரிக்காவைச் சேர்ந்த உலக பணக்காரரும் முன்னணி தொழிலதிபருமான எலான் மஸ்க் தனது நிறுவனங்களான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் [ட்விட்டர்] ஆகியவற்றின் தலைமையிடங்களை மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளார்.
விண்வெளி உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் சமீபத்தில் அவர் சொந்தமாக்கிக்கொண்ட சமூக வலைதளமான எக்ஸ் [ட்விட்டர்] ஆகியவை தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் எக்ஸ் -இல் அவர் அளித்த பேட்டியில் தனது இந்த 2 நிறுவனங்களின் தலைமையிடத்தை மற்றொரு அமெரிக்க மாகாணமான டெக்சாஸ் மாகாணத்திற்கு மாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.


கலிபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட பாதுகாப்பு சட்டத்தின்படி, பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களின் பாலினம் மற்றும் பெயரை பள்ளித் தரவுகளில் மாற்றினால் அதை ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு தெரிவிக்கக்கூடாது. இது LGBTQ+ மாணவர்களுக்கான தனியுரிமையாக பார்க்கப்படுகிறது. இந்த சட்டத்தாலும், இதற்கு முன்பு சமீப காலங்களாக கொண்டுவரப்பட்ட வெவ்வேறு சட்டங்களாலும் குடும்பங்களும் நிறுவனங்களும் பெறும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கருதுவதால் அங்கிருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளதாக மஸ்க் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதன்படி தற்போது கலிபோர்னியாவின் ஹாத்ரோன் [HAWTHRONE] பகுதியில் செயல்பட்டு வரும் இரு நிறுவனங்களும் டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் இந்த ராக்கெட் சோதனை தலமான ஸ்டார்பேஸ் Starbase பகுதிக்கு மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது. அமெரிக்காவில் மாகாணங்கள் சுயாட்சி பெற்று இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

- மோடியின் எக்ஸ் தள கணக்கை பின்தொடருவோர் எண்ணிக்கை கடந்த ஜூலை 14 ஆம் தேதி 10 கோடியை தாண்டியது.
- பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவின் மற்ற அரசியல் தலைவர்களின் ஃபாலோயர்ஸை ஒப்பிடும்போது பிரதமர் மோடியை பின் தொடர்வோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.
அந்த வகையில் பிரதமர் மோடியின் எக்ஸ் தள கணக்கை பின்தொடருவோர் எண்ணிக்கை கடந்த ஜூலை 14 ஆம் தேதி 10 கோடியை தாண்டியது. உலக அளவிலும் சொற்ப தலைவர்களுக்கே இந்த அளவிலான ஃபாலோயர்ஸ் உள்ளனர்.

பிரதமர் மோடி, கடந்த 2009 ஆம் ஆண்டு எக்ஸ்[ட்விட்டர்] தளத்தில் கணக்கை தொடங்கினார். இந்நிலையில் தற்போது 10 கோடி ஃபாலோயர்களை எட்டியதற்கு பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எக்ஸ் தளத்தில் உரிமையாளர் எலான் மஸ்க் மோடிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மஸ்க் தனது எக்ஸ் பதிவில், உலகில் அதிகம் பின்தொடரப்படும் தலைவர்களில் ஒருவராக ஆனதற்கு வாழ்த்துகள் பிரதமர் நரேந்திர மோடி என்று தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு மோடியை எக்ஸ் [ட்விட்டர்] தளத்தில் பின்தொடரும் கணக்குகளில் 60 சதவீதம் போலியானவை என்று சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.
- பலகட்ட சோதனைகளை அடுத்து ட்விட்டர் வலைதளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எடிட் பட்டன் வழங்கப்பட்டு வருகிறது.
- முதற்கட்டமாக அமெரிக்காவில் உள்ள பயனர்களில் கட்டணம் செலுத்துவோருக்கு மட்டும் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் நிறுவனம் அமெரிக்காவில் கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் பயனர்களுக்கு மட்டும் எடிட் பட்டன் வசதியை செயல்படுத்தி வருகிறது. முன்னதாக கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் எடிட் பட்டன் வழங்குவதாக ட்விட்டர் அறிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து தான் அமெரிக்காவில் முதற்கட்டமாக எடிட் பட்டன் வழங்கப்பட்டு உள்ளது.
எடிட் ட்விட் அம்சத்தின் சோதனை அமெரிக்காவில் நீட்டிப்பதாக ட்விட்டர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்த வசதி முதற்கட்டமாக ட்விட்டர் புளூ பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. ட்விட்டர் தளத்தில் எடிட் செய்யும் வசதியை வழங்க அதன் பயனர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த வசதி மூலம் பதிவிட்ட ட்விட்டர் பதிவுகளை அதன் பின் எடிட் செய்ய முடியும்.

இந்த வசதியை கொண்டு ட்விட்டர் பதிவுகளில் தவறுதலாக ஏற்படும் பிழைகளை திருத்த முடியும். எனினும், இந்த அம்சம் போலி தகவல்கள் பரவ உதவும் என கூறி ட்விட்டர் இத்தனை ஆண்டுகளாக எடிட் வசதியை வழங்காமல் இருந்து வந்தது. எனினும், தற்போது இந்த நிலை மெல்ல மாற துவங்கி உள்ளது.
மாதத்திற்கு 4.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 410 செலுத்தி ட்விட்டர் புளூ சேவையை பயன்படுத்துவோருக்கு எடிட் ட்விட் அம்சம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் கொண்டு ட்விட் செய்த முப்பது நிமிடங்களில் சில முறை ட்விட்டர் பதிவுகளை மாற்ற முடியும். இவ்வாறு எடிட் செய்யப்படும் ட்விட்களில் ஐகான் மற்றும் டைம்ஸ்டாம்ப் வழங்கப்படும். இதை கொண்டு ட்விட் எடிட் செய்யப்பட்டு உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
- ட்விட்டர் தளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எடிட் ட்விட் வசதி ஒருவழியாக வழங்கப்பட இருக்கிறது.
- முதற்கட்டமாக எடிட் ட்விட் வசதி ட்விட்டர் புளூ சந்தாதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்பட இருக்கிறது.
ட்விட்டர் நிறுவனம் தனது தளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எடிட் ட்விட் வசதியை செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் வழங்க இருக்கிறது. முதற்கட்டமாக எடிட் ட்விட் வசதி புளூ சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. ட்விட்டர் புளூ சந்தாவுக்கான மாதாந்திர கட்டணம் 4.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 397.4 ஆகும்.
எடிட் ட்விட் வசதி மூலம் பயனர்கள் பதிவிட்ட ட்விட்களை குறிப்பிட்ட நேரத்திற்கு பின் மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு எடிட் செய்யப்பட்ட ட்விட்ள் மாற்றப்பட்ட விவரம் ஐகான், டைம்-ஸ்டாம்ப் மற்றும் லேபல் மூலம் மற்ற பயனர்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் ட்விட் எடிட் செய்யப்பட்டு இருப்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

இதோடு எடிட் செய்யப்பட்ட ட்விட் வரலாற்றை பார்க்கும் வசதியும் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் ட்விட் பதிவிடப்பட்ட நேரம், எடிட் செய்யப்பட்ட நேரம், எத்தனை முறை எடிட் செய்யப்பட்டுள்ளது போன்ற விவரங்கள் இடம்பெற்று இருக்கும். "ட்விட்டர் தளத்தில் எடிட் ட்விட் வசதி செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் பொது மக்களிடையே சோதனைக்கு வழங்கப்பட இருக்கிறது" என பிளாட்பார்மர் கேசி நியூடன் தெரிவித்து இருக்கிறார்.
புது அம்சம் மூலம் ட்விட்களை எடிட் செய்து மாற்றிக் கொள்ள முடியும், ஆனாலும் அவற்றை எத்தனை முறை எடிட் செய்ய முடியும் என்பதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக ட்விட் செய்த முப்பது நிமிடங்கள் கழித்தே அவற்றை எடிட் செய்ய முடியும். கூடுதலாக அடுத்த முப்பது நிமிடங்களில் ட்விட்களை ஐந்து முறை மட்டுமே எடிட் செய்ய முடியும்.
- ட்விட்டர் நிறுவனம் தனது சேவையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த எடிட் செய்யும் வசதியை சமீபத்தில் அறிமுகம் செய்தது.
- தற்போது ட்விட்டர் எடிட் அம்சத்தை பயன்படுத்துவது பற்றி புது தகவல் வெளியாகி உள்ளது.
ட்விட்டர் நிறுவனம் தனது தளத்தில் ட்விட்களை எடிட் செய்யும் வசதியை சமீபத்தில் அறிவித்தது. இது ட்விட்டரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த அம்சமாகும். இது பற்றிய வலைதள பதிவில் ட்விட்டர் நிறுவனம் எடிட் வசதி வழங்குவதை உறுதிப்படுத்தி இருக்கிறது. முன்னதாக தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களை வைத்து எடிட் வசதி சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த அம்சம் வெளியீட்டுக்கு தயாராகி விட்டது.
ட்விட்களை எடிட் செய்ய முடியும், ஆனாலும் அவற்றை எத்தனை முறை எடிட் செய்ய முடியும் என்பதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக ட்விட் செய்த முப்பது நிமிடங்கள் கழித்தே அவற்றை எடிட் செய்ய முடியும். கூடுதலாக அடுத்த முப்பது நிமிடங்களில் ட்விட்களை ஐந்து முறை மட்டுமே எடிட் செய்ய முடியும். இத்துடன் ட்விட் எடிட் செய்யப்பட்டு இருப்பதை அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.

எடிட் செய்யப்பட்ட ட்விட்களை தெரியப்படுத்தும் வகையில் டைம்ஸ்டாம்ப், ஐகான் மற்றும் லேபல் இடம்பெறும். உண்மையான ட்விட்டர் பதிவு எடிட் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை வாசகரக்கள் எளிதில் அறிந்து கொள்ள முடியும். அந்த லேபிலை க்ளிக் செய்ததும், ட்விட்களின் எடிட் வரலாற்றை பார்க்க முடியும். அதில் ட்விட் எத்தனை முறை எடிட் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். தற்போதைக்கு இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதற்கட்டமாக எடிட் செய்யும் வசதி ட்விட்டர் புளூ சந்தாதாரர்களுக்கு மட்டும் வழங்கப்படும். அதன் பின் தளத்தில் அனைவருக்கும் இந்த வசதியை வழங்குவது பற்றி ட்விட்டர் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. பயனர்கள் இந்த அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதை பொருத்து, மேலும் அதிக பகுதிகளில் இந்த அம்சத்தை வழங்குவது பற்றி ட்விட்டர் முடிவு செய்ய இருக்கிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கலாம்.
இந்தியாவில் ட்விட்டர் புளூ சந்தா வசதி இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை என்பதால், ட்விட்களை எடிட் செய்யும் வசதி தற்போதைக்கு கிடைக்கவில்லை. அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் மட்டுமே ட்விட்டர் புளூ சந்தா வழங்கப்பட்டு இருக்கிறது. மற்ற நாடுகளிலும் இந்த சேவை வழங்கப்படுமா என்பது தெளிவற்ற நிலையிலேயே உள்ளது.
- ட்விட்டர் தளத்தில் எடிட் பட்டன் வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.
- தற்போதைய தகவல்களின் படி ஒரு வழியாக இந்த வசதி வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.
ட்விட்டர் நிறுவனம் தனது சேவையில் எடிட் பட்டன் வழங்குவதற்கான சோதனையை துவங்கி இருக்கிறது. நிறுவனத்திற்குள் எடிட் பட்டன் டெஸ்டிங் துவங்கி இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. மேலும் விரைவில் எடிட் ட்விட் அம்சத்தை விரைவில் ட்விட்டர் புளூ சந்தாதாரர்கள் பயன்படுத்த முடியும் என்றும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
புதிய எடிட் ட்விட் அம்சம் மூலம் யார் வேண்டுமானாலும், ட்விட் எடிட் செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை பார்த்து தெரிந்து கொள்ள முடியும். ட்விட் செய்த முதல் அரை மணி நேரத்திற்குள் அதனை எத்தனை முறை வேண்டுமானாலும் எடிட் செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

இவ்வாறு எடிட் செய்யப்பட்ட ட்விட்களில், உண்மையான பதிவு எடிட் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை உணர்த்தும் ஐகான், டைம்ஸ்டாம்ப் மற்றும் லேபல் உள்ளிட்டவை தெளிவாக காட்சியளிக்கும். இதன் மூலம் ட்விட்டர் பதிவு எத்தனை முறை எடிட் செய்யப்பட்டு இருக்கிறது, எந்த நேரத்தில் எடிட் செய்யப்பட்டது என்பதை அனைவரும் அறிந்து கொள்ளலாம்.
ட்விட்டர் பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக எடிட் பட்டன் இருந்து வந்த நிலையில், ஒரு வழியாக இந்த அம்சம் வழங்கப்பட இருக்கிறது. எனினும், இந்த அம்சம் அனைவருக்கும் கிடைக்க மேலும் சில காலம் ஆகும்.
- அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஷாப்பிஃபை உடன் ட்விட்டர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
- ஷாப்பிங் வசதியை பயனர்கள் பெறுவதற்காக, தனியாக ஒரு ஆப்ஷனை ட்விட்டர் நிறுவனம் அதில் கொண்டுவர உள்ளது.
உலக அளவில் மிகவும் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்று ட்விட்டர். அந்நிறுவனம் தனது பயனர்களை கவரும் விதமாக பல்வேறு சிறப்பம்சங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது புது அப்டேட்டாக, ட்விட்டர் வாயிலாக அதன் பயனர்கள், நேரடியாக ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்கும் வசதியை, அந்நிறுவனம் விரைவில் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஷாப்பிஃபை உடன் ட்விட்டர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. ட்விட்டர் மூலம் இந்த ஷாப்பிங் வசதியை பயனர்கள் பெறுவதற்காக, தனியாக ஒரு ஆப்ஷனை அந்நிறுவனம் அதில் கொண்டுவர உள்ளது. இதன் மூலம் அனைத்து முன்னணி பிராண்ட்களின் பொருட்களையும், இனி ட்விட்டர் வாயிலாக வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில், தன்னுடைய ஜாதியை குறிப்பிட்டு, நான் அந்த ஜாதியை சேர்ந்தவள் என பேசியிருப்பார். இந்த வீடியோவை பதிவிட்டு பலர் கமல்ஹாசனை கிண்டல் செய்து விமர்சித்து வருகின்றனர்.
‘பள்ளி விண்ணப்பத்தில் ஜாதியை குறிப்பிட மறுப்பது ஜாதியை ஒழிக்காது. ஜாதியை தெரியாமல் குழந்தைகளை வளர்க்க வேண்டும்’ என பலர் குறிப்பிட்டுள்ளனர். மேலும், தனது ஜாதியை பெருமையாக உங்களது மகள் குறிப்பிடுகிறார். இது எப்படி ஜாதியை ஒழிக்கும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உங்களை மிகவும் பாதித்த நூல் எது? என்ற கேள்விக்கு கமல்ஹாசன் ‘பூணூல்’ என பதிலளித்திருந்தார். இந்த பதிலும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.