search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூகுள்"

    • மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
    • தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் அமைக்க கூகுளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

    தமிழகத்தை தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக்குவதற்கும், 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை எட்டுவதற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    உலக நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் முதலீடுகளை செய்ய வைப்பதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார். இதற்காக முதலமைச்சர் துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்த்து வந்தார்.

    இதன் தொடர்ச்சியாக கடந்த 27-ந் தேதி சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக புறப்பட்டு சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அங்குள்ள சான்பிரான்சிஸ்கோ சென்றடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    அங்கு நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் அவர் பங்கேற்றார். இதில் முன்னணி தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டன.

    இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    தமிழகத்தில் 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஒரே நாளில் ரூ.900 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளன.

     

    இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கூகுள் தலைமை அலுவலகத்தில் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளன.

    தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் அமைக்க கூகுளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

    நான் முதல்வன் திட்டத்தின்கீழ், 20 லட்சம் மாணவர்களுக்கு ஏ.ஐ. திறன் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து ஆப்பிள், கூகுள், மைக்ரோ சாப்ட் நிறுவனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    • சுதந்திர தினத்தை ஒட்டி விசேஷ டூடுல் வெளியிட்ட கூகுள்.
    • பல்வேறு விசேஷ நாட்களில் டூடுல் வெளியிடுவதை கூகுள் வழக்கமாக கொண்டுள்ளது.

    உலகின் முன்னணி தேடுப்பொறி சேவையை வழங்கும் நிறுவனம் கூகுள். உலக அளவில் விசேஷ நாட்களில் சிறப்பு டூடுலை தனது வலைதளத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது.

    அந்த வகையில், இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது. டூடுலில் இந்திய பாரம்பரிய முறைப்படி உருவாக்கப்பட்ட வண்ணங்கள் நிறைந்த கதவுகளில் கூகுள் என்ற வார்த்தை இடம்பெற்று இருக்கிறது.

    வழக்கம் போல விசேஷ டூடுலை க்ளிக் செய்ததும் இந்திய சுதந்திர தின சிறப்புகள், அதுபற்றிய வலைத்தள பதிவுகள் அடங்கிய சிறப்பு வலைப்பக்கம் திறக்கிறது.

    • சூசன் 2 ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்தார்.
    • கூகுள் நிறுவனத்தின் வரலாற்றில் சூசன் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

    2 ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்த யூடியூப் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ. சூசன் வோஜ்சிக்கி இன்று காலமானார்.

    சூசன் வோஜ்சிக்கி கடந்த 2014-ம் ஆண்டு முதல் யூடியூப் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்தார். உடல்நல பிரச்சனை காரணங்களால் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

    சூசன் மரணத்திற்கு கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அவரது எக்ஸ் பதிவில், "2 ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்த என் நண்பர் சூசனின் இழப்பு எனக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் வரலாற்றில் சூசன் முக்கிய பங்கு வகித்துள்ளார்" என்று பதிவிட்டுள்ளார். 

    • இரட்டை மாத்திரை வடிவ கேமரா கட்அவுட்களுடன் கூடிய அசத்தலான வடிவமைப்பை காட்டுகிறது.
    • பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் மாடல் கூகுள் பிக்சல் 8 ப்ரோவின் வடிவமைப்பை ஒத்திருக்கிறது.

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் மற்றும் பிக்சல் 9 ப்ரோவின் வெளியீட்டு விவரங்களை கூகுள் ஒருவழியாக வெளியிட்டது. கூகுள் நிறுவனம் பிக்சல் 9 ப்ரோ மற்றும் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போன்களை ஆகஸ்ட் 13-ந் தேதி வெளியிட உள்ளது.

    கூகுள் எக்ஸ் தளத்தில், வரவிருக்கும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டது. டீஸர்களின் படி புது சாதனங்கள் ஜெமினி ஏஐ வசதி கொண்டிருக்கும் என்பதை காட்டுகிறது.

    அதிகாரப்பூர்வ டீசர்களின் படி இரட்டை மாத்திரை வடிவ கேமரா கட்அவுட்களுடன் கூடிய அசத்தலான வடிவமைப்பை காட்டுகிறது. கேமராக்கள் பின்புற பேனலின் மேல்-இடது மூலையில் செவ்வக வடிவம் கொண்ட பகுதியில் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிகழ்வானது இந்திய நேரப்படி ஆகஸ்ட் 13 ஆம் தேதி இரவு 10.30-க்கு நடைபெற உள்ளது. இந்த தகவலைத் தவிர, வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் பற்றிய வேறு எந்த தகவலையும் கூகுள் வெளியிடவில்லை. இருப்பினும், ஆன்லைனில் புது சாதனங்கள் குறித்து பல தகவல்கள் வெளியாகி உள்ளன.

    டீசரில் ஸ்மார்ட்போனின் உள்பக்க திரையில் கேமராவை வெளிப்படுத்தவில்லை. என்றாலும், திரையின் இடது பக்கத்தில் பஞ்ச்-ஹோல் ரக செல்பி கேமராவைக் கொண்டிருக்கும் என்று கூறப்பிடுகிறது.

    பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் மாடல் அப்சிடியன் (Obsidian) மற்றும் போர்சிலைன் (Porcelain) கலர்களில் கிடைக்கிறது. இதன் எதிர்பார்க்கப்படும் விலை 256 GB மாடலுக்கு EUR1,899 (தோராயமாக ரூ. 1,68,900) மற்றும் 512 GB மாடலுக்கு EUR 2,029 (தோராயமாக ரூ. 1,80,500) ஆகும்.

    பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் மாடல் கூகுள் பிக்சல் 8 ப்ரோவின் வடிவமைப்பை ஒத்திருக்கிறது. இதன் பேனலில் டிரிபிள் ரியர் கேமராக்கள், ஃபிளாஷ் மற்றும் லேசர் ஆட்டோஃபோகஸ் கொண்ட சிறிய கேமரா உள்ளது.

    வரவிருக்கும் பிக்சல் 9 ப்ரோ மற்றும் பிக்சல் 9 ப்ரோ XL ஆகியவை ஒரே மாதிரியான மூன்று 50MP பின்புற கேமரா அமைப்பை பகிர்ந்து கொள்ளும். ஆனால் திரை அளவு மற்றும் பேட்டரி திறன் ஆகியவற்றில் வேறுபடும். இது பயனர்களுக்கு நிலையான மற்றும் பெரிய மாடலுக்கு இடையே தேர்வை வழங்குகிறது.

    பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் அப்சிடியன் (Obsidian), போர்சிலைன் (Porcelain), ஹசல் (Hazel) சேஜ் கிரீன், (sage green) மற்றும் பின்ர் (Pink) போன்ற கலர்களில் கிடைக்கிறது.

    இதன் எதிர்பார்க்கப்படும் விலைகள் 128 ஜிபிக்கு EUR1,099 (தோராயமாக ரூ. 97,500), 256 ஜிபிக்கு EUR1,199 (தோராயமாக ரூ. 1,06,400), மற்றும் 256 ஜிபிக்கு EUR1,329 (தோராயமாக ரூ. 1,18,000). இதுதொடர்பான விரிவான தகவல்கள் வெளியீட்டின்போது, கூகுள் பிக்சல் வாட்ச் 3 ஐ வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பிக்சல் 8 ஸ்மார்ட்போனுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.
    • ப்ளிப்கார்ட் தளத்தில் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 8 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் சிறப்பு தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டதை விட தற்போது ரூ. 14 ஆயிரம் வரை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    விலை குறைப்பு மட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் வங்கி சார்ந்த சலுகைகள் பயன்படுத்தும் போது கூடுதல் பலன்கள் பெற முடியும். தற்போது பிக்சல் 8 ஸ்மார்ட்போனுக்கு மட்டுமே இத்தகைய சலுகைகள் வழங்கப்படுகின்றன.

     


    சலுகை விவரங்கள்:

    இந்தியாவில் பிக்சல் 8 ஸ்மார்ட்போன் ரூ. 75 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போனிற்கு ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ரூ. 14 ஆயிரம் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பயனர்கள் பிக்சல் 8 ஸ்மார்ட்போனை ரூ. 61 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும்.

    பிக்சல் 8 ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஐசிஐசிஐ வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 4 ஆயிரம் வரை கூடுதல் பலன் பெற முடியும். இவ்வாறு செய்யும் போது ஸ்மார்ட்போனின் விலை ரூ. 57 ஆயிரத்து 999 என மாறிவிடும்.

    ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பிக்சல் 8 ஸ்மார்ட்போனிற்கு எவ்வளவு காலம் வரை இந்த விலை குறைப்பு வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

    • அந்நிறுவனம் அதிக தொகை கொடுத்து வாங்கிய நிறுவனமாக இருக்கும்.
    • 2022-இல் 5.4 பில்லியன் டாலர்கள் கொடுத்து சைபர் செக்யூரிட்டி நிறுவனத்தை வாங்கியது.

    சைபர்செக்யுரிட்டி நிறுவனமான விஸ் (Wiz)-ஐ கூகுள் நிறுவனம் கையகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியதாகவும் கூறப்படுகிறது.

    கடந்த 2020 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட விஸ் நிறுவனம் மிக குறுகிய காலக்கட்டத்தில் அசுர வளர்ச்சியை பெற்றது. இந்நிறுவனத்திற்கு ஆசார் ராப்பப்போர்ட் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். கடந்த மே மாத வாக்கில் ஐபிஓ-வுக்கு தயாரான விஸ் நிறுவன மதிப்பீடு 12 பில்லியன் டாலர்கள் ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    உலகளவில் நிர்வாகிகள் மற்றும் சைபர் செக்யூரிட்டி வல்லுநர்களுக்கு கிளவுட் சார்ந்த சேவைகளை விஸ் வழங்கி வருகிறது. இஸ்ரேலிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்களான சைபர்ஸ்டார்ட்ஸ், இன்டெக்ஸ் வென்ச்சர்ஸ், இன்சைட் பார்ட்னர்ஸ் மற்றும் செக்யோவா கேப்பிட்டல் உள்ளிட்டவை விஸ் சேவைகளை பயன்படுத்தி வருகின்றன.

    விஸ் நிறுவனத்தை கூகுள் கைப்பற்றும் பட்சத்தில் கூகுள் நிறுவன வரலாற்றிலேயே அந்நிறுவனம் அதிக தொகை கொடுத்து வாங்கிய நிறுவனமாக விஸ் இருக்கும். கூகுள் நிறுவனம் முன்னதாக 2022 ஆம் ஆண்டு மாண்டியன்ட் என்ற சைபர் செக்யூரிட்டி நிறுவனத்தை 5.4 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.

    உலகளவில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், கூகுள் நிறுவனம் தொடர்ச்சியாக சைபர் பாதுகாப்பு துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை விலைக்கு வாங்கி வருவது பேசு பொருளாக இருக்கிறது.

    • கூகுள் மொழிபெயர்ப்பு சேவையில் கடந்தாண்டு 24 புதிய மொழிகள் சேர்க்கப்பட்டது.
    • தற்போது கூகுள் மொழிபெயர்ப்பு சேவையில் மொத்தமாக 243 மொழிகளை மொழிபெயர்ப்பு செய்யலாம்.

    2006 ஆம் ஆண்டு கூகுள் மொழிபெயர்ப்பு சேவை தொடங்கப்பட்டது. உலகம் எங்கும் லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு மொழிகளை படிப்பதற்கு கூகுள் மொழிபெயர்ப்பு சேவை உதவி செய்து வருகிறது.

    இந்நிலையில், கூகுள் தனது மொழிபெயர்ப்பு சேவையைக் கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது.

    கடந்தாண்டு 24 புதிய மொழிகள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்தாண்டு 110 புதிய மொழிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    கூகுள் தனது மொழிபெயர்ப்பு சேவையில் 110 புதிய மொழிகளை இணைத்ததன் மூலம் மொத்தமாக 243 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிதாக சேர்க்கப்பட்ட 110 மொழிகளில் அவதி, போடோ, காசி, கோக்போரோக், மார்வாடி, சந்தாலி மற்றும் துலு போன்ற ஏழு இந்திய மொழிகளும் அடங்கும்.

    • 2022 ஆம் ஆண்டு எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார்.
    • டுவிட்டர் நிறுவனத்தில் பணிப்புரிந்த 80 சதவீத பணியாளர்களை பணி நீக்கம் செய்ய அதிரடி முடிவை எடுத்தார்.

    2022 ஆம் ஆண்டு எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார். அப்பொழுது அவரது நெருங்கிய நண்பர்களான ஸ்டீவ் டேவிஸ் மற்றும் ஜேம்ஸ் மஸ்க்- ஐ டுவிட்டர் நிறுவனத்தில் உள்ள பணியாளர்கள் நாம் தரும் சம்பளத்திற்கு தகுதியானவர்களா? என்று ஆராய கூறினார்.

    அதன்படி டுவிட்டர் நிறுவனத்தில் பணிப்புரிந்த 80 சதவீத பணியாளர்களை பணி நீக்கம் செய்ய அதிரடி முடிவை எடுத்தார். இந்த முடிவு காரணமாக ப்ராடக்ட் அண்ட் டிசைன் பிரிவில் பணியாற்றி வந்த பலர் பாதிக்கப்பட்டனர்.

    உலகின் பெரிய நிறுவனமான டுவிட்டர் தனது பணியாளர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்தது, மற்ற பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களையும் இது குறித்து பரிசீலனை செய்ய வைத்தது. இந்நிகழ்வை தொடர்ந்து வேலை வாய்ப்பு எண்ணிக்கை கணிசமாக குறைய தொடங்கியது.

    இதே ஃபார்முலாவை பெரும்பான்மையான நிறுவனங்கள் கையில் எடுத்தனர். கூகுள், மைக்ரோசாஃப்ட் மற்றும் அமேசான் போன்ற பிரபல நிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டு மட்டும் 1.5 லட்சத்திற்கு அதிகமானோரை பணி நீக்கம் செய்தது.

    இதில் பாதிக்கப்பட்டவர்களில் பலர் மிட்டில் மேனேஜர்ஸ் எனப்படும் ஊழியர்கள் மற்றும் தலைமை பொறுப்புகளில் வகிப்பவர்களுக்கு இடையில் பணியாற்றும் மேலாளர்கள் தான். ஒரு நிறுவனத்தை மொத்தமாக விலைக்கு வாங்கி, உடனடியாக அதன் ஊழியர்கள் எண்ணிக்கையை பெருமளவு குறைத்த எலான் மஸ்க்-இன் நடவடிக்கை தொழில்நுட்ப துறையில் பேசுபொருளாக மாறியது.

    இந்த நிலையில், எலான் மஸ்க்-இன் இந்த நடவடிக்கை காரணமாகவே தொழில்நுட்ப துறையில் இயங்கி வரும் இதர முன்னணி நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கையை தீவிரப்படுத்த காரணமாக அமைந்தது என தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • மதுரையில் பிறந்த சுந்தர் பிச்சை தனது வாழ்க்கையில் பெரும் பகுதியை இரண்டு ஊரில் கழித்துள்ளார்,
    • சுந்தர் பிச்சைக்கு இன்று 52 வயதாகிறது.

    உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனம் ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சைக்கு இன்று பிறந்த நாள். ஜூன் 10, 1972 ஆம் ஆண்டு பிறந்த சுந்தர் பிச்சைக்கு இன்று 52 வயதாகிறது.

    பிறப்பு மற்றும் கல்வி

    சுந்தர் பிச்சை தமிழ் நாட்டில், மதுரை மாவட்டத்தில் பிறந்தார். இவரது தந்தை ரகுநாத பிச்சை மற்றும் தாயார் லட்சுமி ஆவார். இவர் சென்னையில் உள்ள சவகர் வித்தியாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பும், வனவாணி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பும் படித்தார். பிறகு ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல் பயின்ற இவர், ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில், பொருளறிவியல் பட்டம் பெற்றார்.

    வாழ்க்கை

    மதுரையில் பிறந்த சுந்தர் பிச்சை தனது வாழ்க்கையில் பெரும் பகுதியை இரண்டு ஊரில் கழித்துள்ளார், ஒன்று சென்னை மற்றொன்று அமெரிக்காவில் லாஸ் ஆல்டோஸ்.

    • ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
    • கூகுள் தனது டுடூல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருகிறது.

    9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த போட்டி அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் தொடங்கியது.

    வருகிற 29-ந்தேதி வரை நடைபெறும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா அணியும், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமிபியா, ஸ்காட்லாந்து, ஓமன் அணியும், 'சி' பிரிவில் வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்து, உகாண்டா, ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினியா அணியும், 'டி' பிரிவில் தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், நெதர்லாந்து, நேபாளம் அணியும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று பிரிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர்-8 சுற்றுக்குள் நுழையும் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    இந்நிலையில், 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை சிறப்பிக்கும் வகையில் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

    இணைய தேடு பொறியில் முதன்மை நிறுவனமான கூகுள் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்கள், பிரபலங்களின் பிறந்த நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் அதன் தேடு பொறியில் புதிய டூடுலை மாற்றியமைக்கும். தனது டுடூல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

    • அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு போட்டியாக டிஜிட்டல் வணிகத்தில் அதானி குழுமம் களமிறங்குவது வணிக உலகில் முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது.
    • பிரத்தியேக கிரெடிட் கார்டு சேவைகளையும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான கவுதம் அதானியின் அதானி குழுமம் ஆன்லைன் வணிகம் மற்றும் யுபிஐ பரிவர்த்தனை சேவைகளை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

     

    இந்தியாவில் தற்போது ஆன்லைன் வணிகம் மற்றும் பரிவர்த்தனைகளில் முதன்மையாக விளங்கும் கூகுள் நிறுவனம் மற்றும் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு போட்டியாக டிஜிட்டல் வணிகத்தில் அதானி குழுமம் களமிறங்குவது வணிக உலகில் முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது.

     

    முதற்கட்டமாக பொது டிஜிட்டல் பேமெண்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) ஆகிவற்றில் பரிவர்த்தனைக்கான உரிமத்தைப் பெற அதானி குழுமம் விண்ணப்பிக்க உள்ளது. அதைத்தொடர்ந்து பிரத்தியேக கிரெடிட் கார்டு சேவைகளையும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அரசாங்கத்தின் கீழ் இயங்கும் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான ஓபன் நெட்வொர்க் (ONDC) உடன் இணைந்து ஆன்லைன் ஷாப்பிங் சேவைகளை வழங்க அதானி குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

     

    அதானி குழுமத்தின் பிற வணிகங்களான எரிவாயு மற்றும் மின் வணிக நுகர்வோர்களையும், விமான பயணிகளையும் அதன் ஆன்லைன் பரிவர்த்தனை சேவைகளை பயன்படுத்தச் செய்யும் என்று தெரிகிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அந்த சேவையை பயன்படுத்தும் அனைவரும் பாதிக்கப்படுவர்.
    • பல பில்லியன் டாலர்கள் இழக்கும் சூழல் உருவானது.

    உலகின் முன்னணி தேடுப்பொறி நிறுவனம் கூகுள். உலகளவில் ஏராளமான பயனர்கள் கூகுள் நிறுவன சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இணையம் சார்ந்து கூகுள் நிறுவனம் ஏராளமான சேவைகளை பயனர்களுக்கு வழங்கி வருகிறது. அவ்வாறு கூகுள் வழங்கி வரும் ஸ்டோரேஜ் சார்ந்த சேவை தான்- கூகுள் கிளவுட்.

    கூகுள் கிளவுட் சேவையை கொண்டு பயனர்கள் தங்களின் மிகமுக்கிய தரவுகள் அனைத்தையும் என்க்ரிப்ட் செய்யப்பட்ட வடிவில் மிகவும் பாதுகாப்பாக சேமித்து வைத்துக் கொள்ளலம். தெரியாத்தனமாக கிளவுட் சேவையில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அந்த சேவையை பயன்படுத்தும் அனைவரும் பாதிக்கப்படுவர். இதே போன்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

    இந்த சம்பவத்தில் ஓய்வூதிய நிதி சேவையை வழங்கி வரும் யூனிசூப்பர் நிறுவன பயனர்கள் சுமார் ஐம்பது லட்சம் பேரின் ஓய்வூதிய நிதி இருப்பு கொண்ட விவரங்கள் தவறுதலாக கூகுள் கிளவுட் சர்வெர்களில் இருந்து அழிக்கப்பட்டு விட்டது. இதை கூகுள் கிளவுட் தலைமை செயல் அதிகாரி தாமஸ் குரியனும் உறுதிப்படுத்தி இருந்தார்.

    மேலும், விவரங்கள் தெரியாமல் அவிந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இந்த சம்பவத்தில் யூனிசூப்பர் நிறுவன பயனர்களுக்கு சொந்தமான பல பில்லியன் டாலர்கள் இருப்பு கொண்ட அக்கவுண்ட்கள் பாதிக்கப்பட்டன.

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஓய்வூதிய நிதி நிறுவனம் யூனிசூப்பர். இந்நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தும் சுமார் ஐம்பது லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களால் தங்களது ஓய்வூதியை நிதி சார்ந்த அக்கவுண்டை ஒருவார காலத்திற்கு இயக்க முடியாத சூழல் உருவானது. இதனால் பயனர்கள் ஓய்வூதிய நிதி நிலவரத்தை பார்க்க முடியாமலும், சிலரது அக்கவுண்டில் பணம் குறைந்து இருப்பதுமான பிரச்சினைகள் ஏற்பட்டது.

    ஓய்வூதிய நிதி சார்ந்த பிரச்சினை தொடர்பாக யூனிசூப்பர் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில் இந்த பிரச்சினை விரைவில் சரி செய்யப்பட்டு விடும் என்றும் இதற்கான அப்டேட் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. இதே தகவலை யூனிசூப்பர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர் சுன் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தார்.

    மேலும், இந்த சம்பவத்தில் யூனிசூப்பர் நிறுவனம் தனது தரவுகளை கூகுள் கிளவுட் மட்டுமின்றி மேலும், சில நிறுவனங்களின் சர்வெர்களில் ஸ்டோர் செய்து வைத்திருக்கிறது. இதன் காரணமாக இந்த பிரச்சினையின் பாதிப்புகள் பெருமளவுக்கு குறைந்துள்ளது.

    இதுதவிர கூகுள் கிளவுட் தரப்பில் இதுபோன்ற பிரச்சினை எப்படி ஏற்பட்டது என்பதை கண்டறிந்து இருப்பதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் கூகுள் கிளவுட் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். 

    ×