என் மலர்
நீங்கள் தேடியது "ஹர்மன்பிரீத் கவுர்"
- மகளிர் பிரிமீயர் லீக் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது.
- இதில் டெல்லியை வீழ்த்திய மும்பை 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
மும்பை:
மகளிர் பிரிமீயர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
இந்நிலையில், கோப்பை வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் கூறியதாவது:
நாங்கள் கணக்கிட்டு ரிஸ்க் எடுத்தோம். அது எங்களுக்கு உதவியது. 150 (149) என்பது ஒரு நல்ல ஸ்கோர் அல்ல, ஆனால் அது போன்ற போட்டிகளில் அழுத்தமான ஆட்டங்களில், அது எப்போதும் 180 ரன்கள்தான். மேலும் எங்கள் பந்து வீச்சாளர்களுக்குத்தான் பெருமை.
பவர்பிளேயில் எங்களுக்கு திருப்புமுனைகளைத் தர முடியும் என்ற நம்பிக்கை பந்து வீச்சாளர்களுக்கு இருந்தது. இஸ்மாயில் மற்றும் சீவர் பிரண்ட் எங்களுக்கு அந்த வாய்ப்பை உருவாக்கி ஆட்டத்தை அமைத்துக் கொடுத்தார்கள்.
இன்று அணியில் அனைவரும் பந்து வீசிய விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவருக்கும் விஷயங்களை மிகவும் தெளிவுபடுத்தினோம், அவர்களின் பாத்திரங்களை தெளிவுபடுத்த ஒருவருக்கொருவர் சந்திப்புகளை நடத்தினோம்.
வெற்றிக்கான திறவுகோல் விஷயங்களை எளிமையாக வைத்திருப்பதும், சரியான விஷயங்களை மீண்டும் மீண்டும் செய்வதும் ஆகும். நாங்கள் விஷயங்களை எளிமையாக வைத்திருக்க விரும்பினோம், ஒரு அணியாக, நாங்கள் அதைச் செய்தோம்.
நான் பேட் செய்ய உள்ளே சென்றபோது அது எளிதானது அல்ல. நான் அங்கேயே இருந்து ஸ்ட்ரைக் செய்துகொண்டே இருந்தால் நாட் சீவர் பிரண்ட் அங்கே இருந்தால் நான் ரிஸ்க் எடுக்கத் தேவையில்லை என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அவரை ஆதரிக்க விரும்பினேன் என தெரிவித்தார்.
- ஜூனியர் உலகக் கோப்பை போட்டியை பார்த்த பிறகு அவர்களை போல நாமும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை பெற்றுள்ளோம்.
- ஏலத்திற்கு முன்பாக எங்களுக்கு மிகவும் முக்கியமான ஆட்டம் (பாகிஸ்தானுக்கு எதிரான மோதல்) நடக்கிறது.
மும்பை:
முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) போட்டி அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதற்கான ஏலம் வருகிற 13-ந்தேதி மும்பையில் நடக்கிறது. வீராங்கனைகள் ஏலம் முதல்முறையாக நடப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு முந்தைய நாள் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது.
இதனால் கவனச்சிதறல் ஏற்படுமா என்பது குறித்து இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரிடம் கேட்கப்பட்ட போது அவர் கூறியதாவது:-
ஏலத்திற்கு முன்பாக எங்களுக்கு மிகவும் முக்கியமான ஆட்டம் (பாகிஸ்தானுக்கு எதிரான மோதல்) நடக்கிறது. எங்களது கவனம் எல்லாம் அந்த போட்டி மீதே இருக்கும். மற்ற எல்லாவற்றையும் விட உலகக் கோப்பை தொடரே மிகவும் முக்கியமானது. ஒரு வீராங்கனையாக எது நமக்கு முக்கியமானது, கவனச்சிதறல் இல்லாமல் எப்படி அதன் மீது தொடர்ந்து கவனம் செலுத்துவது என்பது தெரியும்.
நாங்கள் எல்லோரும் ஓரளவு முதிர்ச்சியானவர்கள். எது முக்கியம் என்பதை அறிவோம். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியை பார்த்த பிறகு அவர்களை போல (இந்திய ஜூனியர்) நாமும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை பெற்றுள்ளோம்.
பெண்கள் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிக்காக நாங்கள் பல ஆண்டுகளாக காத்திருக்கிறோம். அது விரைவில் நடக்கப்போகிறது. அடுத்த 2-3 மாதங்கள் பெண்கள் கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். பெண்கள் பிக்பாஷ் (ஆஸ்திரேலியா) மற்றும் தி ஹன்ட்ரட் (இங்கிலாந்து) ஆகிய போட்டிகள் அவர்களது நாட்டில் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு உதவிகரமாக இருக்கிறது என்பதை பார்த்து இருக்கிறோம்.
இதே போல் நமது நாட்டிலும் நடக்கும் என்று நம்புகிறேன். இந்த போட்டியின் மூலம் இந்திய இளம் வீராங்கனைகளுக்கு சர்வதேச நட்சத்திரங்களுடன் இணைந்து விளையாடும் அனுபவம் கிடைக்கும். நமது நாட்டில் பெண்கள் கிரிக்கெட்டின் மேம்பாட்டுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும்.
இவ்வாறு ஹர்மன்பிரீத் கவுர் கூறினார்.
- மகளிர் கிரிக்கெட்டில் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சுசி பேட்ஸ் 143 போட்டிகளில் விளையாடி இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
- இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிகபட்சமாக 148 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 8வது தொடர் தென்னாப்பிரிக்காவில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி, வருகின்ற 26 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளும், பி பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது. விதிகளின்படி லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்.
இந்திய மகளிர் அணி இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் அயர்லாந்து மகளிர் அணியை எதிர்கொள்கிறது. இதில், இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறும். எனவே, இந்த போட்டி இந்திய அணிக்கு வாழ்வா? சாவா? போட்டியாக இருக்கும்.
இந்தநிலையில், இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், இன்று நடைபெறும் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதன் மூலம் டி20 போட்டிகளில் முக்கிய உலக சாதனையை படைக்க இருக்கிறார்.
கடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கவுர் தனது 149-வது போட்டியில் களமிறங்கினார். தற்போதைய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிகபட்சமாக 148 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இன்றைய அயர்லாந்து அணிக்கு எதிராக கவுர், தனது 150வது டி20 போட்டியில் களமிறங்குகிறார். இதன்மூலம், ஒட்டுமொத்த ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட்டில் 150 டி20 போட்டிகளில் விளையாடும் முதல் வீராங்கனை என்ற பெருமையை படைக்க இருக்கிறார்.
மகளிர் கிரிக்கெட்டில் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சுசி பேட்ஸ் 143 போட்டிகளில் விளையாடி இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
2023 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. கடந்த சனிக்கிழமை இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி களமிறங்கி தனது முதல் தோல்வியை சந்தித்தது.
இதையடுத்து, அயர்லாந்து அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றிபெற்றால் நிச்சயம் அரையிறுதிக்கு தகுதிபெறும். அதற்காக, கவுர் தலைமையிலான இந்திய அணி நிச்சயம் போராடும். இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு க்கெபெர்ஹா ,செயின்ட் ஜார்ஜ் பூங்கா மைதானத்தில் நடைபெறுகிறது.
- இந்திய வீராங்கனைகளான புனியா 7, யாஷிகா 15, ஸ்மிருதி மந்தனா 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
- கவூர் 80 பந்துகளில் 48 ரன்கள் எடுத்திருந்த போது காயம் காரணமாக வெளியேறினார்.
மிர்புர்:
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 20 ஓவர் தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரை வசப்படுத்திய இந்திய அணி கடைசி ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.
இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகள் இடையே மிர்புரில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் வங்காளதேச அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை சாய்த்தது.
இந்த நிலையில் இந்தியா - வங்காளதேசம் மோதும் 2-வது ஒருநாள் போட்டி மிர்புரில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீராங்கனைகளாக புனியா 7, யாஷிகா 15, ஸ்மிருதி மந்தனா 36 என ஆட்டமிழந்தனர். இதனையடுத்து கேப்டன் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

கேப்டன் கவுர் 48 ரன்கள் எடுத்த நிலையில் 1 ரன் எடுக்க முயற்சித்த போது பேட் ஸ்லிப்பாகி கீழே விழுந்தார். இதனால் வலியால் துடித்த அவர் சிறிது நேரத்தில் களத்தில் இருந்து வெளியேறினார். அவர் 80 பந்துகளில் 48 ரன்கள் எடுத்திருந்தார். காயத்தை பொறுத்து அவர் மீண்டும் களத்தில் இருங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 மகளிர் உலக கோப்பை நாக் அவுட் சுற்றில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி அவர் 2 ரன்கள் எடுக்க கிரிசை நோக்கி பேட்டை ஊன்றிய போது எதிர்பாரதவிதமாக பேட் தரையில் சிக்கி கொண்டது. அதனால் அவர் ரன் அவுட் முறையில் வெளியேறினார். அதேபோல இந்த முறையும் நடந்துள்ளது.
- இந்திய கேப்டனின் செயல்பாடுகள் ஏற்கத்தக்க ஒன்றாக இல்லை.
- அவர் நடந்து கொண்ட விதம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது.
வங்கதேசத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து ஆடிய மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
இந்நிலையில் 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் செயல் கிரிக்கெட்டில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அவர் அவுட் ஆனதும், கோபத்தில் ஸ்டம்புகளை பேட்-ஆல் அடித்து அம்பயர்களை கடுமையாக சாடினார்.
இதனை சமூக வலைதளங்களில் சரி என்று ஒருதருப்பும், தவறு என்று மறு தரப்பும் மாறி மாறி கருத்துக்களை பரிமாறி வருகிறது.
இந்நிலையில் உடனுக்குடன் கோபம் அடைவது ஏற்றுக் கொள்ள முடியாது என முன்னாள் இந்திய மகளிர் அணியின் கேப்டன் டியானா எடுல்ஜி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-

இந்திய கேப்டனின் செயல்பாடுகள் ஏற்கத்தக்க ஒன்றாக இல்லை. அவர் நடந்து கொண்ட விதம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. நீங்கள் தான் கேப்டன். நீங்கள் தான் அணியை வழிநடத்தி சென்று, அடுத்து வர இருக்கும் ஜூனியர்களுக்கு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும். அவர்கள் உங்களின் நடத்தையை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களும் இதே போன்ற செயல்பட வாய்ப்புகள் உண்டு.
உடனுக்குடன் கோபம் அடைவது ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் ஐ.சி.சி. விதிகளின் கீழ் விளையாடி வருகின்றீர்கள். அதிர்ஷ்டவசமாக அது சீரிசின் கடைசி போட்டியாக அமைந்தது. பி.சி.சி.ஐ. இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். முதலில் 90 முதல் 100 சதவீதம் வரை போட்டிக்கு பங்களிப்பை கொடுங்கள். போட்டிகளில் வெற்றி பெற்றாலே, அளவுக்கு அதிகமாகவே நட்சத்திர அந்தஸ்து தானாக கிடைத்து விடும்.
எல்லோரும் வெற்றி பெற வேண்டும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன், ஆனால் அம்பயரிங் போட்டியின் ஒருபங்கு மட்டும் தான். சில சமயங்களில் அது சாதகமாக இருக்கும், சில சமயங்களில் அது இருக்காது. ஆனால், அதனை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருப்பது அவசியம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோபத்தில் ஸ்டம்புகளை பேட்டால் அடித்து உடைத்ததுடன், அம்பயர்களையும் பகிரங்கமாக விமர்சனம் செய்தார்.
- ஹர்மன்பிரீத் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக ஐசிசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வங்காளதேச அணியுடனான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நடந்துகொண்ட விதம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அவர் அவுட் ஆனதும், கோபத்தில் ஸ்டம்புகளை பேட்டால் அடித்து உடைத்ததுடன், அம்பயர்களையும் பகிரங்கமாக விமர்சனம் செய்தார்.
அவரது இந்த செயல்பாடுகள் ஐசிசி விதிகளை மீறும் செயல் என்பதால் அவர் அடுத்த இரண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டி சம்பளத்தில் 75 சதவீதத்தை அபராதமாக செலுத்தவும் ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
ஹர்மன்பிரீத் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக ஐசிசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"இந்திய கேப்டன் குற்றங்களை ஒப்புக்கொண்டதுடன், எமிரேட்ஸ் ஐசிசி சர்வதேச போட்டி நடுவர்கள் குழுவின் அக்தர் அகமது முன்மொழிந்த தடைகளை ஏற்க ஒப்புக்கொண்டார். எனவே அவர் மீது முறையான விசாரணை தேவையில்லை, தண்டனைகள் உடனடியாக செயல்படுத்தப்பட்டன" என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
- பெண்கள் கிரிக்கெட்டில் இதை நாம் அடிக்கடி பார்க்க முடியாது.
- கிரிக்கெட்டில் நீங்கள் ஆக்ரோஷமாக செயல்படலாம். ஆனால், அந்த ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
லாகூர்:
வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் நடத்தை விதிகளை மீறியதற்காக இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஐசிசியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையால், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இரண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாது.
மேலும், அவரது போட்டி கட்டணத்தில் 75% அபராதம் விதிக்கப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இந்த தண்டனையால் ஹர்மன்பிரீத் கவுரால் ஆசிய விளையாட்டு போட்டிகளில் சில போட்டிகளை விளையாட முடியாமல் போகும்.
இந்நிலையில், ஹர்மன்பிரீத் செயலை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரீடி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இது இந்தியாவுக்கு மட்டுமல்ல. கடந்த காலங்களிலும் நாம் இவற்றைப் பார்த்திருக்கிறோம். இருப்பினும், பெண்கள் கிரிக்கெட்டில் இதை நாம் அடிக்கடி பார்க்க முடியாது. களத்தில் அவரது செயல்பாடு அதிகமாகவே இருந்தது. ஐசிசியின் கீழ் இது ஒரு பெரிய நிகழ்வு. நீங்கள் எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறீர்கள். அவ்வாறு இருக்கையில் உங்கள் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது. கிரிக்கெட்டில் நீங்கள் ஆக்ரோஷமாக செயல்படலாம். ஆனால், அந்த ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று நடக்கிறது.
- இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் 1-2 என்ற கணக்கில் தோற்ற நிலையில் இங்கிலாந்து அணி இந்த தொடரில் களம் இறங்குகிறது.
மும்பை:
ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி கடந்த செப்டம்பரில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பிறகு பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும். சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் 1-2 என்ற கணக்கில் தோற்ற நிலையில் இங்கிலாந்து அணி இந்த தொடரில் களம் இறங்குகிறது.
இந்திய அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா, ஷபாலி வர்மாவும், பந்து வீச்சில் தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ராகர், புதுமுக வீராங்கனைகள் ஸ்ரேயங்கா பட்டீல், சைகா இஷாக்கும் வலு சேர்க்கிறார்கள். இங்கிலாந்து அணியில் பேட்டிங்கில் நாட் சிவெர் புருன்ட், டேனி வியாட், கேப்டன் ஹீதர் நைட்டும், பந்து வீச்சில் சோபி எக்லெஸ்டன், சாரா கிளெனும் மிரட்டுவார்கள்.
இங்கிலாந்துக்கு எதிராக 27 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கும் இந்திய அணி இதுவரை 7 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அந்த அணிக்கு எதிராக உள்ளூரில் 9 ஆட்டங்களில் ஆடியதில் 2-ல் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. எனவே இங்கிலாந்துக்கு எதிரான தங்களது முந்தைய மோசமான நிலையை மாற்ற இந்தியா எல்லா வகையிலும் முயற்சிக்கும். அதேநேரத்தில் தங்களது ஆதிக்கத்தை தொடர இங்கிலாந்து தீவிரம் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இது குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹீதர் நைட் கூறுகையில், '20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு கடைசியில் வங்காளதேசத்தில் நடக்க இருக்கிறது. அதுபோன்ற சீதோஷ்ண நிலை இங்கு நிலவுவதால் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராக இந்த தொடர் முக்கியமானதாகும். அதனை நாங்கள் சரியாக பயன்படுத்தி கொள்வோம்' என்றார்.
இந்திய பெண்கள் அணியின் புதிய பயிற்சியாளர் அமோல் முஜூம்தார் கூறுகையில், 'நாங்கள் உலகக் கோப்பையை நோக்கி பயணிக்கிறோம். அதனால் ஒவ்வொரு தொடரும் முக்கியமானது. வீராங்கனைகளும் சாதிக்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள். நாம் அச்சமின்றி விளையாட வேண்டியது அவசியமாகும். பீல்டிங் மற்றும் உடல்தகுதிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கிறோம். இவற்றில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த தொடருக்கு பிறகு நிறைய பயிற்சி முகாம் நடத்த உள்ளோம்' என்றார்.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா செயலியிலும் பார்க்கலாம்.
- இங்கிலாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இந்திய அணி தோல்வியடைந்தாலும் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மகளிர் கிரிக்கெட்டில் யாரும் படைக்காத சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்து பெண்கள் அணி 3 டி20, ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதலில் டி20 தொடரும் அடுத்து டெஸ்ட் போட்டியும் நடைபெறும்.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மும்பையில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தோல்வியடைந்தாலும் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மகளிர் கிரிக்கெட்டில் யாரும் படைக்காத சாதனை படைத்துள்ளார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ஆட்டங்களில் கேப்டனாக இருந்தவர் என்ற உலக சாதனையை படைத்தார். இந்த போட்டியையும் சேர்த்து அவர் 101 ஆட்டங்களுக்கு கேப்டனாக பணியாற்றியுள்ளார்.
இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் மெக் லானிங் 100 ஆட்டங்களில் கேப்டனாக இருந்ததே சாதனையாக இருந்தது.
- ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகள் கடும் சவாலாக இருக்கும்.
- எங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும். இது ஆஸ்திரேலிய அணிக்கும் நன்கு தெரியும்.
மும்பை:
9-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 3-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை துபாய் மற்றும் சார்ஜாவில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்துடன் அக்.4-ந்தேதி மோதுகிறது. தொடர்ந்து 6-ந்தேதி பாகிஸ்தானையும், 9-ந்தேதி இலங்கையையும், 13-ந்தேதி நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவையும் சந்திக்கிறது.
இந்த போட்டிக்கு புறப்படுவதற்கு முன்பாக இந்திய பெண்கள் அணியின் கேப்டன் 35 வயதான ஹர்மன்பிரீத் கவுர் நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கோப்பையை தட்டித்தூக்குவதே எங்களது பிரதான இலக்கு. ஒரு அணியாக அதற்காகத் தான் முயற்சிக்கிறோம். உலகில் எந்த இடத்தில் விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல. எப்போதும் அணிக்கு ஆதரவாக இருக்கும் ரசிகர்கள் மற்றும் நாட்டுக்காக கோப்பையை வென்று கொண்டுவர வேண்டும் என்பதே ஒரே எதிர்பார்ப்பு. அதை இந்த தடவை செய்ய முடியும் என்று நம்புகிறேன்.
2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறினோம். கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் இறுதி சுற்றை நெருங்கி வந்து தோல்வி கண்டோம். இந்திய அணிக்கு என்று ஒரு பாரம்பரியம் உள்ளது. அது முக்கியமான தருணங்களில் ஜொலித்து கோப்பையை வெல்வது வரை எடுத்து செல்லும்.
அணி குறித்து பேச வேண்டும் என்றால், சில வீராங்கனைகள் நீண்ட காலமாக விளையாடி வருகிறார்கள். அணியில் தங்களுக்குரிய பங்களிப்பு என்ன என்பது அவர்களுக்கு தெரியும். நமது அணி மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. உலகக் கோப்பைக்கு செல்லும் மிகச்சிறந்த இந்திய அணி இது தான் என்று சொல்ல முடியும். எல்லா வகையிலும் போட்டிக்கு தயாராகி உள்ளோம்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகள் கடும் சவாலாக இருக்கும். எங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும். இது ஆஸ்திரேலிய அணிக்கும் நன்கு தெரியும். தங்களை ஒரு அணியால் வீழ்த்த முடியும் என்றால் அது இந்தியா தான் என்பதை ஆஸ்திரேலியர்கள் அறிவார்கள்.
என்னை பொறுத்தவரை பல உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் உள்ளது. 19 வயதில் எப்படி ஆடினேனோ அதே உத்வேகத்துடன் இப்போதும் விளையாட விரும்புகிறேன். துபாய், சார்ஜாவில் ஆடும் போது அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் வருகை தந்து உற்சாகப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு ஹர்மன்பிரீத் கவுர் கூறினார்.
- முதலில் ஆடிய இந்தியா 172 ரன்கள் அடித்தது.
- ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரித் கவுர் அரை சதம் விளாசினர்.
துபாய்:
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று துபாயில் நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 172 ரன்கள் அடித்தது.
தொடக்க வீராங்கனைகளான ஷபாலி வர்மா-மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 98 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய மந்தனா அரை சதம் விளாசினார். ஷபாலி வர்மா 43 ரன்னில் வெளியேறினார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கவுர் 27 பந்தில் அரைசதம் விளாசி 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தொடர்ந்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 90 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால் இந்தியா அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் ஆஷா சோபனா, அருந்ததி ரெட்டி தலா 3 விக்கெட்டும், ரேணுகா தாக்கூர் சிங் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
நடப்பு தொடரில் இந்திய மகளிர் அணி பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும்.
- ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் மிதாலி ராஜ் முதலிடத்தில் உள்ளார்.
- 2-வது இடத்துக்கு மந்தனா- ஹர்மன்பிரீத் கவுர் இடையே போட்டி நிலவுகிறது.
நியூசிலாந்து மகளிர் அணி 3 ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 259 ரன்கள் குவித்தது. இதனையடுத்து விளையாடிய இந்தியா 183 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்டர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் மிதாலி ராஜ் முதல் இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்த இரண்டு இடங்கள் முறையே ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் உள்ளனர். ஸ்மிருதி மந்தனா 87 போட்டியில் விளையாடி 3590 ரன்கள் குவித்து 2-வது இடத்தில் உள்ளார். கவுர் 115 போட்டிகளில் விளையாடி 3589 ரன்கள் எடுத்து 3-வது இடத்தில் உள்ளனர்.
ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 1 ரன்னில் இருவருக்கும் இடையே போட்டி நிலவுகிறது. மிதாலி ராஜ் 7805 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.