என் மலர்
நீங்கள் தேடியது "மணல் லாரி மோதல்"
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகேயுள்ள காக்கங்கரை ஆற்று பகுதியில் மணல் கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லாரி, டிராக்டர்களில் மணல் கடத்தி செல்கின்றனர். இன்று மதியம் ஒரு டிப்பர் லாரி மணல் கடத்தி கொண்டு காக்கங்கரை பஸ் நிறுத்தம் அருகே அதிவேகமாக வந்து கொண்டிருந்தது.
அப்போது, திருப்பத்தூர் அருகே உள்ள குனிச்சி கிரா மத்தில் இருந்து சிறுவன் உள்பட 3பேர் ஒரே பைக்கில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வேலம்பட்டி கொட்டாவூர் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர். காக்கங்கரை பஸ் நிறுத்த வளைவில் பைக் மீது மணல் கடத்தல் லாரி மோதியது.
இந்த கோர விபத்தில் போச்சம்பள்ளி கொட்டாவூரை சேர்ந்த மணி, மோட்டு என்ற 2 பேர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுடன் வந்த குனிச்சியை சேர்ந்த சிறுவன் வேலு மகன் பூவரசன் (வயது 26) படுகாயமடைந்தார்.
சிகிச்சைக்காக சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விபத்து ஏற்படுத்திய மணல் கடத்தல் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். கந்திலி போலீசார் இறந்தவர்களின் 2 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவாமிமலை:
கும்பகோணம கள்ள தெருவைச் சேர்ந்த சுகுமார்-வனிதா ஆகியோரின் மகன் கிஷோர் (வயது 6) இவர் தேவனாஞ்சேரியில் உள்ள பாட்டி சித்ரா வீட்டில் தங்கி தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை சித்ரா ஆதார் கார்டுக்கு புகைப்படம் எடுக்க மொபட்டில் கடிச்சம்பாடி கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்றார். அவருடன் கிஷோரும் சென்றான். அவர்கள் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் அள்ளி கொண்டு பின்னால் வந்த லாரி திடீரென மொபட் மீது மோதியது. இதில் கிஷோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சித்ரா அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் ரேகாராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிஷோர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணல் லாரி மோதி சிறுவன் பலியானதை அறிந்த பொதுமக்கள் லாரி கண்ணாடியை உடைத்து கும்பகோணம்- தேவனாஞ்சேரி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கும்பகோணம் அருகில் மணல் லாரி மோதி சிறுவன் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே பரளி அனியாளம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சின்னுசாமி (வயது 60). விவசாயி. இவர் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் வளையப்பட்டியில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் அதிவேகமாக வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் சின்னுசாமி பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வாகனத்தில் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சின்னுசாமியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து மோகனூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்து ஏற்பட்டதும் லாரி டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு அங்கிருந்து ஓடி விட்டார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. லாரி பதிவு எண்ணை வைத்து டிரைவர் யார்? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.