என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரம்பலூர்"

    • மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காரில் புறப்பட்டு சாலை மார்க்கமாக தஞ்சாவூர் வருகிறார்.
    • தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    தஞ்சாவூா்:

    நாட்டில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலத்தில் 40 தொகுதிகளிலும் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

    அதன்படி, தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 20 நாட்களுக்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இன்று மாலை திருச்சி சிறுகனூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் திருச்சி, பெரம்பலூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

    பின்னர், பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காரில் புறப்பட்டு சாலை மார்க்கமாக தஞ்சாவூர் வருகிறார். தஞ்சையில் அவருக்கு தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இன்று இரவில் தஞ்சை சங்கம் ஓட்டலில் தங்குகிறார்.


    இதையடுத்து நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு திருவாரூர் அருகே உள்ள கொரடாச்சேரியில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தஞ்சை தொகுதி தி.மு.க வேட்பாளர் முரசொலி, நாகை தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் செல்வராஜ் ஆகியோரை அறிமுகம் செய்து ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

    பின்னர், பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு இரவில் சாலை மார்க்கமாக காரில் புறப்பட்டு திருச்சி விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு திருச்சி, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 100 அரசுப் பள்ளிகளுக்கு ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான கணினிகளைத் தமது சொந்த நிதியில் இருந்து வழங்கியுள்ளார்.
    • பாரிவேந்தரின் பிறந்தநாளின் போது, 100 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அவர்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    மக்களவை தேர்தலுக்கான கட்சிகளின் களப் பணிகள் தமிழ்நாட்டில் சூடுபிடித்துள்ளது. முதற்கட்டமாக அதுவும் ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், போட்டியிடும் கட்சிகளும் அதன் கூட்டணிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒவ்வொரு தொகுதியிலும் அதன் எம்.பிக்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்று மக்களுக்கு கொண்டு சேர்க்கின்றனர்.

    அந்த வகையில், பெரம்பலூர் தொகுதி எம்பியும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனருமான பாரிவேந்தர் தனது தொகுதி மக்களுக்கு செய்துள்ள நற்பணிகளை பட்டியலிட்டு இருக்கின்றனர். அப்படி என்ன திட்டங்களை தொகுதி மக்களுக்காக செய்திருக்கிறார் என்று பார்ப்போம்.

    பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 100 அரசுப் பள்ளிகளுக்கு ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான கணினிகளைத் தமது சொந்த நிதியில் இருந்து வழங்கியுள்ளார்.

    தமது ஏழ்மை நிலையால் உயர்கல்வி படிக்க வழியில்லாமல் சாலை ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டு வந்த, கடலூர் மாவட்டம்

    வேப்பூர் ஒன்றியம் வி.சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த, சத்யாதேவி என்ற மாணவிக்கு எஸ்.ஆர்.எம். கல்லூரியில் வேளாண் உயர்கல்வியும், தங்கும் விடுதி மற்றும் உணவு ஆகியவற்றை மூன்று ஆண்டுகளுக்கும் முழுவதும் இலவசமாக வழங்கியுள்ளார்.

    ஒவ்வொரு ஆண்டும் பாரிவேந்தரின் பிறந்தநாளின் போது, 100 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அவர்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட மூன்று தொகுதிகளில் அலுவலகங்கள் திறந்துவைத்து பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்வு கண்டு வருகிறார்.

    முசிறிப் பகுதி விவசாய மக்களின் பல ஆண்டு கோரிக்கையான கொரம்பு அமைப்பதற்கு நேரில் ஆய்வு செய்து தீர்வு காண வழிவகை செய்துள்ளார்.

    பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கோரிக்கை வைத்ததின் பேரில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்க ரூ.1 கோடி நிதி எஸ்.ஆர்.எம். அறக்கட்டளை மூலம் தரப்பட்டது.

    இதன் மூலம் உடும்பியம், அன்னமங்கலம், திருவாலந்துறை, நூத்தப்பூர், பெரிய வடகரை, சாத்தனூர் உள்பட 10 கிராமங்கள் பயன்பெற்றன. 

    பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட மூன்று கிராமங்களுக்குச் சொந்த நிதியில் போர்வெல் அமைத்துக் கொடுத்தார். தொட்டியம் - நத்தம் கிராமத்தில் ரூ.3 லட்சத்தில் மயான சாலை அமைத்துள்ளார்.

    லால்குடி - திண்ணியத்தில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தாருக்கு ரூ.1 லட்சம் உதவி பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 2020-ம் ஆண்டு ஏற்பட்ட

    கடும் வறட்சியால், குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க, தமது சொந்தச் செலவில் லாரிகள் மூலம் தேவைப்பட்ட கிராமங்களுக்குக் குடிநீர் வழங்கினார்.

    வெளிநாட்டில் தவித்தவர்களுக்கு தேடிச் சென்று உதவிய பாரிவேந்தர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மினி வேன் டயர் வெடித்ததால் கிணற்றுக்குள் விழுந்து, 8 பேர் பலியாகினர்.

    பலியானோர் குடும்பங்களுக்குத் தமது சொந்த நிதியில் தலா ரூ.1 லட்சம் வழங்கி விபத்தில் உயிரிழந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்விச் செலவையும் தாமே ஏற்றுக்கொண்டார்.

    வேலை வாய்ப்பிற்காக இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்று, அங்கு எதிர்பாரா விதமாக மரணமடைந்த 6 நபர்களின் சடலங்களை, வெளியுறவுத்துறை மற்றும் வெளிநாட்டுத் தூதர்கள் மூலம் அவர்களின் உடல்களைக் குடும்பத்தாரிடம் சேர்க்க வழிவகை செய்தார்.

    கொரோனா காலத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாட்டங்களைச் சார்ந்த 11 பேர் அயல்நாட்டில் பணியிழந்து தாயகம் திரும்ப இயலாமல் தவித்த நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து பத்திரமாகத் தாயகம் திரும்ப வழிவகை செய்யப்பட்டது.

    வெகுகாலமாகத் தொடர்கின்ற தமிழக மீனவர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் வலியுறுத்தினார்.

    பொருளாதாரப் பற்றாக்குறையால் சிகிச்சை பெற இயலாமல் உயிரிழக்கும் ஏழை மக்களைக் காக்கும் பொருட்டு, பிரதம மந்திரி நிவாரண நிதியின் மூலம் நோய்வாய்ப்பட்ட ஏழை மக்கள் இலவச சிகிச்சை பெற பிரதமருக்குப் பரிந்துரை செய்ததன் பேரில், பிறந்த குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தோர் வரை 40 க்கும் மேற்பட்ட ஏழை நோயாளிகள்

    ஒவ்வொருவரும் ரூ. 4 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை உயர்தரமான இலவசச் சிகிச்சை பெற்று பயன் அடைந்தனர். இலவச உயர்கல்வித் திட்டத்திற்கான ஆணையைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் பாரிவேந்தர் வழங்கினார்.

    இதன்படி 2019-ல் கொடுத்த தமது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் வருடத்திற்கு 300 மாணவர்கள் வீதம் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் 1200 மாணவ, மாணவியர்களுக்கு இலவச உயர் கல்வியை, தமது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் வழங்கினார்.

    50 ஆண்டு கால கனவுத் திட்டமான அரியலூர் - பெரம்பலூர்- துறையூர்- நாமக்கல் புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டத்திற்குப் பாராளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்ற அன்றிலிருந்து இன்று வரை பிரதமர், நிதி அமைச்சர், ரெயில்வே துறை அமைச்சர் மற்றும் ரெயில்வே வாரியம் என அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து இலவச உயர்கல்வித் திட்டத்திற்கான ஆணையைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் பாரிவேந்தர் வழங்கினார்.

    முறையாக எடுத்துக் கூறியதால் தற்பொழுது 2023 ஜூலையில் புதிய ரெயில் தடம் அமைப்பதற்கான சர்வே மேற்கொள்ளப்படும் என ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் விரைவில் பெரம்பலூருக்கு ரெயில் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    கொரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளுக்காகப் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி தமிழக அரசுக்கு வழங்கினார்.

    பாரிவேந்தர் எம்.பி.யின் இத்தகைய பணிகளுக்கு தொகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    • கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. மோடி பிரதமராக உள்ளார்
    • மோடி தேசபக்தி கொண்டவர். அவர் ஒரு மகான், புண்ணியவான், சந்நியாசி. இரவு பகல் பாராமல் மோடி நாட்டுக்காக உழைத்து கொண்டிருக்கிறார்.

    இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கி வருவதால், பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    அந்த வகையில், இன்று திருச்சியில் உள்ள தும்பலம், அயித்தாம்பட்டி, வாளசிராமணி பகுதியில் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது பொது மக்களுக்கு மத்தியில் அவர் பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். 2019-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். வெற்றி பெற செய்த நான் உங்களுக்காக என்ன செய்தேன் என்று கேட்கலாம். உங்களுக்காக பாராளுமன்றத்திலே பேசிருக்கிறேன், ரெயில்வே மந்திரி, நிதிமந்திரி, பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறேன் இவை அனைத்தையும் உங்களுக்கு புத்தமாக போட்டு கொடுத்திருக்கிறேன்.

    இந்த புத்தகம் எல்லாருடைய வெற்றிக்கும் வந்து சேர்ந்திருக்கும். இல்லையென்றாலும் விரைவில் வரும். மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்பிக்கள் இது போன்ற புத்தகங்கள் போடுவதில்லை. பாராளுமன்ற உறுப்பினரின் பணிக்கு மதிப்பெண்கள் கொடுத்தால் எனக்கு நீங்கள் 100 மதிப்பெண்கள் கொடுப்பேர்கள். அந்த அளவிற்கு இந்த பகுதியில் நான் வேலை செய்துள்ளேன்.

    ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் வேலை உங்களின் பிரச்சனைகளை பாராளும்னறத்தில் பேசுவது. உங்களின் பிரச்சினைகளை தீர்க்க மத்திய அரசு 17 கோடி கொடுத்தது. அந்த 17 கோடி ரூபாயில் எனது பாராளுமன்ற தொகுதிக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளேன்.

    குறிப்பாக இந்த தொகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் போதுமான வகுப்பறைகள் இல்லாமல் இருந்தது. பெண்கள் மரத்தடியில் அமர்ந்து படித்து கொண்டிருந்தார்கள். அதனால் அரசுப்பள்ளிகளுக்கு 42 வகுப்பறைகளை கட்டி கொடுத்துள்ளேன். எந்தெந்த ஊருக்கு சமுதாய கூட்டங்கள் கேட்டீர்களா அங்கெல்லாம் சமுதாய கூடங்கள் கட்டி கொடுத்துள்ளேன்.

    இதேபோல் நியாயவிலை கடைகள், நீர்த்தேக்க தொட்டிகள், கழிப்பறைகள் கட்டி கொடுத்துள்ளேன்.

    மீண்டும் என்னை எம்.பி.யாக நீங்கள் தேர்ந்தெடுத்தால் இந்த தும்பலம் தொகுதியில் சமுதாய கூடம் கட்டி கொடுப்பேன். அதே போல் காவேரி ஆற்றில் இருந்து குடிநீர் கேட்டுள்ளீர்கள். நான் மீண்டும் வென்றால் காவேரி குடிநீர் திட்டம் கொண்டு வருவேன்.

    பெரம்பலூர் தொகுதியில் ஏழை மாணவர்களால் உயர்கல்வி பெற முடியாமல் தவித்தனர். அதனால் ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களில் 1200 மாணவர்களுக்கு மருத்துவம் , எஞ்ஜினியர், விவசாயம் ஆகிய உயர்கல்விகளை படிக்க வைத்துள்ளேன். எனது தொகுதியில் 1200 மாணவ, மாணவிகள் பட்டாதாரிகளாக ஆக்கியுள்ளோம். இதுவரை எந்த எம்பி செய்யாத ஒன்றை நான் செய்திருக்கிறேன். இதுவரை 118 கோடி மாணவர்களுக்காக செலவு செய்திருக்கிறேன்.

    நீங்கள் மீண்டும் என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால், 1500 ஏழை குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன். குறிப்பாக இதய நோய், சிறுநீரக செயல் இழப்பு, போன்ற பல லட்சம் செய்ய கூடிய மருத்துவ சிகிச்சைகளுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன் .

    இந்த 1500 குடும்பங்களுக்கு 10 லட்சம் மதிப்பிலான இன்சூரன்ஸ் செய்து இந்த சிகிக்சை கிடைக்க வழிவகை செய்வேன். இவை அனைத்தும் என் தனிப்பட்ட வாக்குறுதிகள்.

    கேணிப்பள்ளம் ஊரை விட்டு இயங்கி வரும் கல்குவாரி உள்ளது. அங்கிருந்து வரும் புழுதியால் கிராம மக்கள் பாதிப்படைகின்றனர். அதனால் குழந்தைகளுக்கு மூச்சி திணறல் ஏற்படுகிறது என்று நீங்கள் என்னிடம் கூறியுள்ளீர்கள். நான் மீண்டும் எம்.பி.யாக வென்றால் அந்த கல் குவாரியின் இடத்தை மாற்றி அமைப்பேன் என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன்.

    கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. மோடி பிரதமராக உள்ளார். மோடி தேசபக்தி கொண்டவர். அவர் ஒரு மகான், புண்ணியவான், சந்நியாசி. இரவு பகல் பாராமல் மோடி நாட்டுக்காக உழைத்து கொண்டிருக்கிறார்.

    தற்போது கூட பாஜக ஆட்சியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களால் பல நூறு ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை மீட்டு மோடி ராமர் கோவில் கட்டியுள்ளார். நாம் எல்லாரும் இந்தியர்கள் இந்துக்கள். நம் தாய் நாட்டின் மீது நமக்கு பற்று வேண்டும்.

    மோடி ஆட்சியில் காசியில் நடைபெற்ற தமிழ் சங்கம் நிகழ்ச்சியில் இங்கிருந்து பல ஆயிரக்கணக்கானோர் சென்றனர். காசிக்கு செல்வது புண்ணியம்.

    மீண்டும் மோடி 3-வது முறையாக பிரதமராக மக்கள் வாக்களிக்க போகிறார்கள். வட மாநிலங்களில் மோடிக்கு பெரும் ஆதரவு உள்ளது. இந்த முறை தமிழ்நாட்டில் இருந்து பாஜக சார்பாக நாம் எம்.பிக்களை அனுப்ப வேண்டும்.

    பாஜக ஆட்சியில் எந்த அமைச்சர் மீதும் எந்த ஊழல் குற்றசாட்டும் இல்லை. அந்த வகையில் ஊழல் இல்லா ஆட்சியை மோடி கொடுத்திருக்கிறார்.

    இந்தியா முழுவதும் ஊழல் செய்த கட்சி என்றால் திமுகவை தான் அழைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை டெல்லிக்கு அனுப்பாதீர்கள்.திமுக அமைச்சர்கள் பலர் மீது ஊழல் குற்றசாட்டு உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அவர்கள் கைது செய்யப்படலாம்.

    சுட்டெரிக்கும் சூரியனை மறந்து விட்டு கல்விக்கடவுளான சரஸ்வதி அமர்ந்திருக்கும் தாமரை சின்னத்தில் எனக்கு வாக்களித்து நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    • இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்
    • தேர்தல் நெருங்கி வருவதால், பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்

    இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கி வருவதால், பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    அந்த வகையில், இன்று பெரம்பலூர் தொகுதியில் உள்ள அரணாரை பகுதியில் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது பொது மக்களுக்கு மத்தியில் அவர் பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். 2019-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். வெற்றி பெற செய்த நான் உங்களுக்காக என்ன செய்தேன் என்று கேட்கலாம். உங்களுக்காக பாராளுமன்றத்திலே பேசிருக்கிறேன், ரெயில்வே மந்திரி, நிதிமந்திரி, பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறேன். இவை அனைத்தையும் உங்களுக்கு புத்தமாக போட்டு கொடுத்திருக்கிறேன்.

    இந்த புத்தகம் எல்லாருடைய வெற்றிக்கும் வந்து சேர்ந்திருக்கும். இல்லையென்றாலும் விரைவில் வரும். மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்பிக்கள் இது போன்ற புத்தகங்கள் போடுவதில்லை.

    ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் வேலை உங்களின் பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் பேசுவது. உங்களின் பிரச்சினைகளை தீர்க்க மத்திய அரசு 17 கோடி கொடுத்தது. அந்த 17 கோடி ரூபாயில் எனது பாராளுமன்ற தொகுதிக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளேன்.

    குறிப்பாக இந்த தொகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் போதுமான வகுப்பறைகள் இல்லாமல் இருந்தது. பெண்கள் மரத்தடியில் அமர்ந்து படித்து கொண்டிருந்தார்கள். அதனால் அரசுப்பள்ளிகளுக்கு 42 வகுப்பறைகளை கட்டி கொடுத்துள்ளேன். எந்தெந்த ஊருக்கு சமுதாய கூட்டங்கள் கேட்டீர்களா அங்கெல்லாம் சமுதாய கூடங்கள் கட்டி கொடுத்துள்ளேன்.

    இதேபோல் நியாயவிலை கடைகள், நீர்த்தேக்க தொட்டிகள், கழிப்பறைகள் கட்டி கொடுத்துள்ளேன்.

    தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்றத்திற்கு சென்ற 38 எம்.பிக்களின் 75% பேர் மத்திய அரசு கொடுத்த 17 கோடியை முழுமையாக செலவு செய்யவில்லை. அப்படியென்றால் அவர்களுக்கும் மக்களின் மீது அக்கறை இல்லை என்ற அர்த்தம். எம்.பி.க்கள் செலவு செய்யாத தொகை மீண்டும் மத்திய அரசுக்கே சென்று விடும். இதுதான் திமுக எம்.பி.க்களின் நிலைமை.

    நான் மட்டும் தான் மத்திய அரசு கொடுத்த ஒட்டுமொத்த நிதியையும் செலவு செய்துள்ளேன்.

    பெரம்பலூர் தொகுதியில் ஏழை மாணவர்களால் உயர்கல்வி பெற முடியாமல் தவித்தனர். அதனால் ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களில் 1200 மாணவர்களுக்கு மருத்துவம் , எஞ்ஜினியர், விவசாயம் ஆகிய உயர்கல்விகளை படிக்க வைத்துள்ளேன். எனது தொகுதியில் 1200 மாணவ, மாணவிகள் பட்டாதாரிகளாக ஆக்கியுள்ளோம். அவர்களுக்கு வேலையும் வாங்கி கொடுத்துள்ளேன். இதுவரை எந்த எம்பி செய்யாத ஒன்றை நான் செய்திருக்கிறேன். இதுவரை 118 கோடி மாணவர்களுக்காக செலவு செய்திருக்கிறேன்.

    நீங்கள் மீண்டும் என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால், 1500 ஏழை குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன். குறிப்பாக இதய நோய், சிறுநீரக செயல் இழப்பு, போன்ற பல லட்சம் செய்ய கூடிய மருத்துவ சிகிச்சைகளுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன் .

    இந்த 1500 குடும்பங்களுக்கு 10 லட்சம் மதிப்பிலான இன்சூரன்ஸ் செய்து இந்த சிகிக்சை கிடைக்க வழிவகை செய்வேன். இவை அனைத்தும் என் தனிப்பட்ட வாக்குறுதிகள்.

    ஒருகாலத்தில் சென்னை - திருச்சி செல்வதற்கு 5 மணிநேரம் ஆகும். இப்போது மூணரை மணிநேரத்தில் செல்வதற்கு சிறப்பான சாலைகள் போடப்பட்டதற்கு மோடி அரசு தான் காரணம். நாட்டின் அடிப்படை கட்டமைப்பு சரியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர் மோடி.

    கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. மோடி பிரதமராக உள்ளார். பாஜக ஆட்சியில் எந்த அமைச்சர் மீதும் எந்த ஊழல் குற்றசாட்டும் இல்லை. அந்த வகையில் ஊழல் இல்லா ஆட்சியை மோடி கொடுத்திருக்கிறார்.

    மீண்டும் மோடி 3-வது முறையாக பிரதமராக மக்கள் வாக்களிக்க போகிறார்கள். வட மாநிலங்களில் மோடிக்கு பெரும் ஆதரவு உள்ளது. இந்த முறை தமிழ்நாட்டில் இருந்து பாஜக சார்பாக நாம் எம்.பிக்களை அனுப்ப வேண்டும்.

    இந்தியா முழுவதும் ஊழல் செய்த கட்சி என்றால் திமுகவை தான் அழைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை டெல்லிக்கு அனுப்பாதீர்கள்.திமுக அமைச்சர்கள் பலர் மீது ஊழல் குற்றசாட்டு உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அவர்கள் கைது செய்யப்படலாம். ஆகவே ஊழல் கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள்.

    மற்றவர்கள் சம்பாதிக்க வந்தவர்கள், ஊழல்வாதிகள், மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிப்பவர்கள். மக்களிடம் கொள்ளையடித்த அந்த பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க கூடாது.

    என்னை எதிர்த்து போட்டியிடுபவர்கள் எல்லாம் ஊழல்வாதிகள். மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடிப்பவர்களின் குடும்பம், அவர்கள் கொள்ளையடித்தது போதாது என்று அவர்களின் மகனை வேட்பளராக நிறுத்தியுள்ளார்கள். ஆகவே மக்கள் ஊழல் செய்யும் திமுகவை ஆதரிக்க கூடாது.

    யார் மக்களுக்கு சேவை செய்கிறார்கள் என்பதை பார்த்து அவர்களுக்கு வாக்களியுங்கள் . ஆகவே தாமரையில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள்.

    • லஞ்சம் கொடுக்க விரும்பாத துரைராஜ் இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
    • நல்லுச்சாமியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே அம்மாபாளையத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த திருமண மண்டபத்திற்கு தடையின்மை சான்றிதழ் பெற பெரம்பலூர் தாசில்தார் அலுவலகத்தில் துரைராஜ் விண்ணப்பித்தார். அப்போது தடையின்மை சான்று வழங்குவதற்கு துரைராஜிடம் துணை தாசில்தார் பழனியப்பன் (வயது 42) ரூ.20 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத துரைராஜ் இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

    இதையடுத்து ரசாயன பவுடர் தடவிய ரூ.20 ஆயிரத்தை பழனியப்பனிடம் கொடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி துரைராஜ் நேற்று மாலை பெரம்பலூர் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேமசித்ரா தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் அலுவலகத்தின் அருகே மறைந்திருந்தனர்.

    அங்கு துரைராஜ் லஞ்ச பணத்தை பழனியப்பனிடம் கொடுக்க முயன்றார். அப்போது பழனியப்பன், அலுவலகத்தில் இருந்த கீழக்கரை கிராம நிர்வாக அலுவலர் நல்லுச்சாமியை (42) லஞ்ச பணத்தை வாங்கி வைக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து நல்லுச்சாமி துரைராஜிடம் இருந்து பணத்தை வாங்கி, பழனியப்பன் வைக்க கூறிய இடத்துக்கு கொண்டு சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விரைந்து சென்று நல்லுச்சாமியையும், பழனியப்பனையும் கையும், களவுமாக பிடித்தனர். அப்போது நல்லுசாமி துணை தாசில்தார் கூறியதன் அடிப்படையில் தான் பணம் பெற்றதாக கூறினார். இந்த நிலையில் துணை தாசில்தார் பழனியப்பன் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார்.

    இதையடுத்து நல்லுச்சாமியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். நெஞ்சு வலிப்பதாக கூறிய துணை தாசில்தார் பழனியப்பனை சிகிச்சைக்காக அவரது மேலதிகாரி தாசில்தார் சரவணன் மூலமாக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இரவு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மருத்துவமனை டாக்டர்களிடம் கேட்ட போது, அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. வேண்டும் என்று நெஞ்சு வலிப்பதாக கூறி வருகிறார் என தெரிவித்துள்ளனர்.

    அதைத் தொடர்ந்து இன்று காலை அவரிடம் விசாரணை செய்ய திட்டமிட்டனர். அதன்படி இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேம சித்ரா, தாசில்தார் சரவணனை தொடர்பு கொண்டு காலையில் மருத்துவமனைக்கு வாருங்கள்.பழனியப்பனிடம் விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.

    அப்போது காலை 7 மணி அளவில் பழனியப்பன் மருத்துவமனையில் இருந்து மாயமாகி விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஸ்கேன் எடுக்க செல்வதாக வார்டில் இருந்து சென்ற அவர் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது.

    இந்த தகவலை அறிந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சூப்பிரண்டு ஹேம சித்ரா கூறும்போது, பழனியப்பனை விசாரணை செய்வதற்கு முன்பாக அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதால் அவரது உயர் அதிகாரியான தாசில்தார் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். இப்போது அவர் அங்கிருந்து மாயமானதாக தகவல் சொல்கிறார்கள். நான் தாசில்தாரிடம் அறிக்கை கேட்டிருக்கிறேன் என்றார்.

    தப்பி ஓடிய பழனியப்பனுக்கு பெரம்பலூர் நாரணமங்கலம் சொந்த ஊராகும். அவர் அங்கு பதுங்கி இருக்கிறாரா என பெரம்பலூர் போலீசார் தேடி வருகின்றனர்.

    லஞ்சம் வாங்கிய வழக்கில் பிடிபட்ட துணை தாசில்தார் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பெரம்ப லூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • இனிமேல் கட்சியில் வேலை செய்தால்தான் பதவி.
    • நமக்கு செல்வாக்கு இல்லாத காரணத்தினால் நம்மை மிரட்டுகிறார்கள்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வபெருந்தகை கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் 40 சதவீதம் வாக்கு வங்கி நாம் வைத்திருந்தோம். தற்போது எந்த அளவிற்கு உள்ளது என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். குறை நம்மிடம் தான் உள்ளது. நாம் மற்றவர்களை குறை சொல்லக்கூடாது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வீட்டில் உள்ளவர்களை காங்கிரஸ் கட்சியில் சேருங்கள்.

    நம்மிடம் கட்டமைப்பு உள்ளது. இனிமேல் கட்சியில் வேலை செய்தால்தான் பதவி, பதவி வாங்கி வைத்துக்கொண்டு சும்மா உட்கார்ந்து இருப்பவர்களின் பதவி பறிக்கப்படும். நாம் கட்சி பணி செய்யவில்லை என்றால் பெருந்தலைவர்கள், தியாகிகளின் ஆன்மாக்கள் நம்மை மன்னிக்காது.

    ராகுல்காந்தி என் ரத்தம் இந்த மண்ணில் உள்ளது என்று கூறியுள்ளார். அது என்னவென்று உங்கள் அனைவருக்கும் தெரியும். அவரைப்போல் அனைவரும் பாடுபட வேண்டும். நம்மிடம் செல்வாக்கு இல்லாத காரணத்தினால் தான் அண்ணாமலை இறுமாப்புடன் நம் கட்சியை பற்றி பேசி வருகிறார்.

    ஒற்றுமை இருந்தால், செல்வாக்கு இருந்தால் நம் மீது கை வைக்கும் பொழுது கிராமம், நகரம் என அனைத்து இடங்களிலும் பஸ், வேன், லாரி ஏன் விமானத்தை கூட மறித்தால் நம் பலம் அவர்களுக்கு புரியும்.

    நமக்கு செல்வாக்கு இல்லாத காரணத்தினால் நம்மை மிரட்டுகிறார்கள். சமயங்களில் கூட்டணி கட்சிகளுடன் சிறு மனக்கசப்புகள் ஏற்படுகிறது.

    2026 சட்டமன்ற தேர்தலுக்கு சரியாக 23 மாதங்கள் இருந்தாலும் 18 மாதங்களுக்குப் பிறகு தேர்தல் காய்ச்சல் வந்துவிடும். ஆகவே நமக்கு இன்னும் 18 மாதங்கள் தான் உள்ளது. அதற்குள் நாம் கட்சியை வளர்த்தாக வேண்டும்.

    பெரம்பலூர் சிறிய மாவட்டம் என்பதால் முதலில் இங்கு கட்சியை பலப்படுத்த வேண்டும். அண்ணாமலை, இந்திரா காந்தியை பற்றியும், நேருவை பற்றியும் அவதூறாக பேசி வருகிறார். ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் நாட்டை விட்டு ஓட பார்த்தார்களாம். இவரா பிடித்து அழைத்து வந்தார்.

    என்ன அப்பட்டமான பொய் சொல்கிறார், 2026 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு என்று ஓர் இடத்தை நாம் உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கடந்த 2-ந்தேதி அதிகாலை துணை தாசில்தார் பழனியப்பன் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார்.
    • அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்ட் அருகே கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்துக்கு தடையின்மைச் சான்று வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற துணை தாசில்தார் பழனியப்பன், கீழக்கரை விஏஓ நல்லுசாமி ஆகியோர் கடந்த 1-ந்தேதி இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டபோது, பழனியப்பன் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால், அவரை பெரம்பலூர் தாசில்தார் சரவணன் பொறுப்பில் ஒப்படைத்து, அவருக்கு உரிய சிகிச்சை அளித்து 2-ந்தேதி விசாரணைக்கு அழைத்து வருமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

    பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது கடந்த 2-ந்தேதி அதிகாலை துணை தாசில்தார் பழனியப்பன் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு தப்பி ஓடிய துணை தாசில்தார் பழனியப்பனை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டுள்ளார்.

    • தி.மு.க அரசின் திட்டங்களால் பயன் பெற்று வரும் மக்களின் திருவிழாக் கொண்டாட்டம்.
    • அரியலூர் -பெரம்பலூர் மக்கள் தந்த நம்பிக்கையால் மனநிறைவுடன் நவம்பர் 15 அன்று இரவு சென்னை வந்து சேர்ந்தேன்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாவட்டந்தோறும் கள ஆய்வு என்று நாமக்கல்லில் அறிவித்து, கோவை, விருதுநகர் மாவட்டங்களில் நேரடி ஆய்வை மேற்கொண்ட உங்களில் ஒருவனான நான், கடந்த 14,15-ம் தேதிகளில் அரியலூர் - பெரம்பலூர் மாவட்டங்களில் நேரடிக் கள ஆய்வை மேற்கொண்டு, இரு மாவட்ட மக்களுக்குமான திட்டங்களை வழங்கி, கழக உடன்பிறப்புகளுடனும் கலந்தாலோசனை நடத்தியது மனதுக்குப் பெரும் நிறைவைத் தந்தது.

    மக்கள் நின்று வரவேற்பளிப்பதை, இன்றைய அரசியல் களத்தில், 'ரோடு ஷோ' என்கிறார்கள். ஷோ என்றால் காட்சி எனப் பொருளாகும். நம்மைப் பொருத்தவரை, இது வெறும் காட்சியும் அல்ல, மக்கள் நமக்கு காட்சிப் பொருளுமல்ல. திராவிட மாடல் அரசின் நல்லாட்சிக்குக் கிடைக்கின்ற மகத்தான வரவேற்பு. தி.மு.க அரசின் திட்டங்களால் பயன் பெற்று வரும் மக்களின் திருவிழாக் கொண்டாட்டம்.

    ஜெயங்கொண்டத்திலிருந்து அரியலூருக்கு செல்லும் வழியெங்கும் மக்கள் திரண்டு நின்றனர். உங்களில் ஒருவனான என்னைப் பார்த்ததுமே மக்கள் மகிழ்ச்சியுடன் கையசைத்து, ஆரவாரம் செய்ததுடன், "இனி எப்போதும் நம்ம ஆட்சிதான்", "திராவிட மாடல் ஆட்சி சூப்பர்.. அடுத்ததும் நாமதான்" என்றதுடன், 234 தொகுதிகளில் 200-க்கு மேல் நாம் வெற்றி பெறவேண்டும் என்ற இலக்குடன் நான் வலியுறுத்தி வருவதை மனதில் வைத்து "நிச்சயம் 200 ஜெயிப்போம்" என்று உற்சாகக் குரலுடன் உத்தரவாதம் அளித்தனர்.

    மக்கள் அளித்த உறுதியையும், அவர்கள் காட்டுகின்ற பாசத்தையும் பார்த்து பரவசமடைந்ததுடன், மக்களுக்கான திட்டங்கள் சரியாகப் போய்ச் சேர வேண்டியதை இத்தகைய கள ஆய்வுகள் மூலம் உறுதி செய்வதன் அவசியத்தையும் உணர்ந்தேன்.

    இரு மாவட்ட அரசுத் திட்டங்களின் ஆய்வுப் பணிகளையும், கழகத்தின் ஆக்கப் பணிகளையும் நிறைவு செய்து, அரியலூர் -பெரம்பலூர் மக்கள் தந்த நம்பிக்கையால் மனநிறைவுடன் நவம்பர் 15 அன்று இரவு சென்னை வந்து சேர்ந்தேன். நவம்பர் 28, 29-ம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்திற்கு செல்ல இருக்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் வந்து உடன்பிறப்புகளாம் உங்களைக் கண்டு மகிழ்வேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அம்மாபட்டி கிராமத்திற்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    திருச்சி:

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தொடர்ந்து மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடலில் நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

    திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. துறையூரில் பெரிய ஏரி, சின்ன ஏரி நிரம்பி அருகில் சிங்களாந்தபுரம் கிராமத்தில் உள்ள ஏரிக்கு செல்கிறது.

    பச்சமலையில் பெய்த மழையால் அதிக அளவு நீர்வரத்து ஏற்பட்டதால், திருச்சி-துறையூர் சாலைகளில் இருந்து அம்மாபட்டிக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டு நீர் நிரம்பி காட்சியளிக்கிறது.


    இந்த சாலையானது சிங்களாந்தபுரம் ஏரிக்கு அருகில் உள்ளது. இதனால் சிங்களாந்தபுரம் ஏரி நிரம்பியதால் அருகில் உள்ள விளைநிலங்கள் மற்றும் சாலைகள் முழுவதும் துண்டிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் அப்பகுதிக்கு சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். குறுக்கு சாலையில் உள்ள தண்ணீர் அளவானது தற்போது உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் அம்மாபட்டி கிராமத்திற்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழையால் 150 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், அரியலூர், செந்துறை ஆகிய பகுதிகளில் ஒரே நாளில் அதிக கன மழை பெய்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    தொடர் மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தின சாமி உத்தரவிட்டுள்ளார்.

    இன்று காலை வரை பதிவான மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-

    ஜெயங்கொண்டம் 205, செந்துறை 195.4, அரியலூர் 179, சுத்தமல்லி டேம் 152, குருவாடி 115, ஆண்டிமடம் 111.2, திருமனூர் 90, தா.பழூர் 39.4.

    எரையூர்-166, அகரம் சீகூர் 140, லெப்பைக்குடிக்காடு 139, வேப்பந்தட்டை-127, தலுதலை-122, கிருஷ்ணாபுரம்-111, வி.களத்தூர்-95, பெரம்பலூர்-94, படுவேட்டைக்குடி 71, செட்டிகுளம் 75, பாடாலூர் 21.

    ஆவுடையார்கோவில் 143, மணமேல்குடி 135, மீமிசல் 67, விராலிமலை 63, நாகுடி 66.20, கீழாநிலை 63.90, ஆயின்குடி 57.20, அறந்தாங்கி 56.40, கீரனூர் 50.40, இலுப்பூர் 48.80, ஆதன கோட்டை 48, திருமயம் 46.70, கந்தர்வகோட்டை 45.40, புதுக்கோட்டை 44.10, பெருங்களூர் 40.60, மழையூர் 40.60, உடையாளிபட்டி 39, அன்னவாசல் 35.60, ஆலங்குடி 35, குடுமியான் மலை 34.50, கரையூர் 30.80, பொன்னமராவதி 25.40, கறம்பக்குடி 27, அரிமளம் 20.

    மாவட்டம் முழுவதும் மொத்தம் 1264.10 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 52.67 ஆகும்.

    • திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே இருந்த வீட்டில் புகுந்தது.
    • இடிபாடுகளுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.

    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெய்குப்பை கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிந்து நேற்று இரவு ஒரு சுற்றுலா பஸ்சில் கோவிலுக்கு புறப்பட்டனர். பஸ்சை சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 42) என்பவர் ஓட்டி சென்றார்.

    நெய்குப்பையில் இருந்து பக்தர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட பஸ் அரை கிலோ மீட்டர் தூரம் சென்றபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே இருந்த ஓட்டு வீட்டில் திடீரென புகுந்தது. இதில் வீட்டில் சுவர் இடிந்து விழுந்தது.

    இந்த விபத்தில் வீட்டு க்குள் தூங்கிக் கொண்டிருந்த சன்னாசி மனைவி லட்சுமி ( 40) என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அருகில் தூங்கிக் கொண்டிருந்த கணவர் சன்னாசி, மகன் முத்து, மகள் தேன்மொழி ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    சுற்றுலா பஸ் வீட்டின் சுவரில் மோதுவதற்கு முன்பாக அருகில் நின்று கொண்டிருந்த மினி பஸ் மீது மோதி விட்டு பின்னர் வீட்டுக்குள் புகுந்தது. அப்போது பஸ்ஸில் பயணம் செய்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

    அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெய்குப்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் அறிந்து வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். புத்தாண்டு தினத்தில் கோவிலுக்கு சென்ற பஸ் விபத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தொடர்ந்து கைகளத்தூர் போலீசார் விரைந்து சென்று மணியை கொலை செய்த தேவேந்திரனை மடக்கி பிடித்தனர்.
    • கொலை செய்யப்பட்ட மணியின் உறவினர்கள் கைகளத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தடை வட்டம், கைகளத்தூர் கிராமத்தில் பொங்கல் தின விழாவை முன்னிட்டு 2 சமூகத்தினருடைய பிரச்சனை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் தலைமையில் சுமூக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இந்த பேச்சுவார்த்தை நடைபெற்ற கொண்டிருக்கும் பொழுதே ஒரு தரப்பை சேர்ந்த தேவேந்திரன் மற்றொரு தரப்பை சேர்ந்த தொழிலாளி மணி என்பவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் மணி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் உண்டானது. அங்கு கூடி இருந்தவர்கள் நாலாபுறமும்சிதறி ஓடினர். மேலும் அங்கு மோதல் அதிகரிக்கும் சூழல் உண்டானது. இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கபப்ட்டனர்.

    இதனை தொடர்ந்து கைகளத்தூர் போலீசார் விரைந்து சென்று மணியை கொலை செய்த தேவேந்திரனை மடக்கி பிடித்தனர். பின்பு அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் கொலை செய்யப்பட்ட மணியின் உறவினர்கள் கைகளத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இதன் காரணமாக ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு சட்டரீதியான இழப்பீடு வழங்கவேண்டும்.
    • தீண்டாமையின் தொடர்ச்சியாகவே இந்த சாதிய வன்கொடுமை நடந்துள்ளது.

    பெரம்பலூரில் தலித் இளைஞர் கழுத்து அறுத்துப் படுகொலை செய்யப்பட்ட விவாகரத்தில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்வதோடு, உடந்தையாக இருந்த காவல்துறையினர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கை.களத்தூர் கிராமம் காந்தி நகரைச் சேர்ந்த மோகன் என்பவரின் மகன் மணிகண்டன் (வயது 30) என்கிற தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொடூரமான இந்த படுகொலையை சிபிஐ(எம்) வன்மையாக கண்டிக்கிறது. தீண்டாமையின் தொடர்ச்சியாகவே இந்த சாதிய வன்கொடுமை நடந்துள்ளது. சமாதானம் பேசலாம் என்று குற்றவாளிகளிடம் காவலர்களும், வஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஒருவரும் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இவர்களின் முன்னிலையிலேயே இந்தக் கொலை நடைபெற்றுள்ளது.

    சட்ட ரீதியாக காவலர்கள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தியிருக்க வேண்டும். மாறாக கொலையாளி தேவேந்திரனிடம் கொலை செய்யப்பட்டவரை அழைத்துச் சென்றதன் மூலம் காவலர்களும் அந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்துள்ளனர். குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்வதோடு, இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த காவல்துறையினர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

    கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு சட்டரீதியான இழப்பீடும் அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும், இத்தகைய நிகழ்வுகளில் சட்டத்திற்குப் புறம்பாக குற்றவாளிகளுக்கு உடந்தையாக காவல்துறை செயல்படுவதைத் தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று சிபிஐ(எம்) தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது" என்று தெரிவித்துள்ளார்.

    ×