என் மலர்
நீங்கள் தேடியது "ஹோமம்"
- நாளை முதல் 30-ந்தேதி வரை சுப்பிரமணியசாமி ஹோமம் நடக்கிறது.
- அனைத்துப் பக்தர்களும் ஹோமத்தில் பங்கேற்று வழிபடலாம்.
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் தெலுங்கு கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு ஒரு மாதம் ஹோம மஹோற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று கணபதி ஹோமத்துடன் ஹோம மஹோற்சவம் தொடங்கியது.
அதையொட்டி நேற்று காலை பஞ்சமூர்த்திகளுக்கு மஞ்சள், குங்குமம், பால், தயிர், தேன், சந்தனம், விபூதி ஆகியவற்றால் திருமஞ்சனம் நடந்தது. மாலை கணபதி பூஜை, புண்யாஹவச்சனம், வாஸ்துபூஜை, பர்யாக்னிகரணம், மிருதசங்கிரஹணம், அங்குரார்ப்பணம், கலச ஸ்தாபனம், அக்னிபிரதிஷ்டை, கணபதி ஹோமம், லகு பூர்ணாஹூதி நடந்தது. இன்று (வியாழக்கிழமை) கணபதி ஹோமம் நடக்கிறது.
நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 30-ந்தேதி வரை சுப்பிரமணியசாமி ஹோமம் நடக்கிறது. 30-ந்தேதி மாலை 5.30 மணிக்கு சுப்பிரமணியசாமி திருக்கல்யாணம் நடக்கிறது. 31-ந்தேதி தட்சிணாமூர்த்தி ஹோமம், நவம்பர் மாதம் 1-ந்தேதி கால பைரவர் ஹோமம், 2-ந்தேதி நவக்கிரஹ ஹோமம், 3-ந்தேதியில் இருந்து 11-ந்தேதி வரை காமாட்சி ஹோமம் (சண்டியாகம்), 12-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை கபிலேஸ்வரர் ஹோமம் (ருத்ர யாகம்) நடக்கிறது. 22-ந்தேதி சிவன்-பார்வதி திருக்கல்யாணம் நடக்கிறது. 23-ந்தேதி சண்டிகேஸ்வரர் ஹோமம், திரிசூல ஸ்நானம், பஞ்சமூர்த்திகள் வழிபாடு நடக்கிறது.
அனைத்துப் பக்தர்களும் ஹோமத்தில் பங்கேற்று வழிபடலாம். பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த ஹோம மஹோற்சவத்தின் ஒரு பகுதியாக புனித கபில தீர்த்தத்தில் நீராடி கபிலேஸ்வரர் சன்னதியில் நடக்கும் ஹோமத்தில் பங்கேற்று வழிபட்டால் பாவம் விலகி புண்ணிய பலன் கிடைக்கும் என்று அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.
- திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஹோம மஹோற்சவம் நடந்து வருகிறது. விழாவின் 2-வதுநாளான நேற்று கணபதி ஹோமம் நிறைவடைந்தது.
முன்னதாக காலை 8 மணியில் இருந்து காலை 11 மணிவரை யாக சாலையில் கணபதி பூஜை, நித்யஹோமம், மகா பூர்ணாஹுதி, கணபதி கலச உத்வாசனம், மகா அபிஷேகம், கலசாபிஷேகம், நிவேதனம், ஆரத்தி நடந்தது.
மாலை 6 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை சுப்பிரமணியசாமிக்கு கலச ஸ்தாபனம், லகு பூர்ணாஹுதி, சிறப்பு தீபாராதனை நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- தட்சிணாமூர்த்திக்கு கலச ஸ்தாபனம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது.
- இன்று கால பைரவர் ஹோமம் நடக்கிறது.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஹோம மஹோற்சவம் நடந்து வருகிறது. அதையொட்டி 28-ந்தேதியில் இருந்து 3 நாட்கள் சுப்பிரமணியசாமி ஹோமமும், நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் சுப்பிரமணியசாமி திருக்கல்யாணமும் நடந்தது.
அதைதொடர்ந்து நேற்று தட்சிணாமூர்த்தி ஹோமம் நடந்தது. யாகசாலையில் காலை 8 மணியில் இருந்து காலை 11 மணி வரை தட்சிணாமூர்த்தி ஹோமம், பூர்ணாஹுதி, கலச உத்வாசனம், மகாசாந்தி அபிஷேகம், தட்சிணாமூர்த்தி கலசாபிஷேகம் நடந்தது. மாலை 6 மணியளவில் தட்சிணாமூர்த்திக்கு கலச ஸ்தாபனம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது.
அதில் பங்கேற்று வழிபட்ட பக்தர்களுக்கு மேல்துண்டு, ஜாக்கெட், அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) கால பைரவர் ஹோமம் நடக்கிறது.
- காமாட்சியம்மனுக்கு கலச ஸ்தாபனம், சிறப்பு தீப ஆராதனை நடந்தது.
- இன்று முதல் 11-ந்தேதி வரை சண்டி யாகம்நடக்கிறது.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஹோம மஹோற்சவம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் கால பைரவர் ஹோமமும், நேற்று நவகிரக ஹோமமும் நடந்தது. அதையொட்டி காலை யாகசாலையில் நவக்கிரகஹோமம், பூர்ணாஹுதி, கலச உத்வாசனம், மகாசாந்தி அபிஷேகம், நவக்கிரக கலசாபிஷேகம் நடந்தது. மாலை காமாட்சியம்மனுக்கு கலச ஸ்தாபனம் மற்றும் சிறப்பு தீப ஆராதனை நடந்தது.
ஹோம மஹோற்சவத்தில் கோவில் துணை அதிகாரி தேவேந்திரபாபு, உதவி அதிகாரி சீனிவாசுலு, கண்காணிப்பாளர்கள் பூபதி, சீனிவாசலு, கோவில் ஆய்வாளர் பாலகிருஷ்ணா மற்றும் அர்ச்சகர்கள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) முதல் 11-ந்தேதி வரை காமாட்சி ஹோமம் (சண்டி யாகம்) நடக்கிறது.
- சிறப்பு ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
- சண்டியாகம் வருகிற 11-ந்தேதி வரை நடக்கிறது.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஹோம மஹோற்சவம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று காமாட்சி ஹோமம் எனப்படும் சண்டியாகம் தொடங்கியது. நேற்று காலை யாக சாலையில் உற்சவர் காமாட்சி தாயாரை எழுந்தருள செய்தனர். தாயார் முன்னிலையில் சிறப்புப்பூஜைகள், நித்ய ஹோமம், சண்டிஹோமம், லகுபூர்ணாஹுதி, நிவேதனம் நடந்தது. சிறப்பு ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
மாலை ஹோமம், சண்டிபாராயணம், சஹஸ்ர நாமார்ச்சனை நடந்தது. பின்னர் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சண்டியாகம் வருகிற 11-ந்தேதி வரை நடக்கிறது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- சரப சூழினிக்கு தீபாராதனை நடைபெற்றது.
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் பிளாஞ்சேரியில் காமாட்சி கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு தனி சன்னதி கொண்டு அஷ்ட பைரவர்கள் சூழ சரபசூழினி அம்மன் அருள் பாலிக்கிறார். நேற்று பவுர்ணமியையொட்டி சரபசூழினி அம்பாளுக்கு ஜெயமங்களா யாகம் நடைபெற்றது.
பரம்பரை அறங்காவலர் சரப சூழினி உபாசகர் எஸ். நாகராஜ சிவாச்சாரியார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் பூஜைகளை செய்தனர். மகா தீபாராதனையை தொடர்ந்து சரப சூழினி சன்னதிக்கு எடுத்துவரப்பட்ட புனித நீரால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சரப சூழினிக்கு தீபாராதனை நடைபெற்றது.
ஜெயமங்களா யாகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். யாக ஏற்பாடுகளை ஆலய அர்ச்சகர் என். கண்ணன் குருக்கள் மற்றும் ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர்.
- இன்று முதல் 22-ந்தேதி வரை கபிலேஸ்வரர் ஹோமம் நடக்கிறது.
- கடந்த 3-ந்தேதியில் இருந்து காமாட்சி ஹோமம் நடந்து வந்தது.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதியில் இருந்து கார்த்திகை ஹோம மஹோற்சவம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 3-ந்தேதியில் இருந்து காமாட்சி ஹோமம் (சண்டி யாகம்) நடந்து வந்தது. அதன் நிறைவு விழா நேற்று நடந்தது. அதையொட்டி யாகசாலையில் நேற்று காலை 8 மணியில் இருந்து பகல் 11 மணி வரை சண்டி ஹோம சமாப்தி, மகாபூர்ணாஹுதி, கலச உத்வாசனம், மகா அபிஷேகம், மூலவர் காமாட்சி தாயாருக்கு கலசாபிஷேகம் நடந்தது. மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை கபிலேஸ்வரருக்கு கலச ஸ்தாபனம், பூஜை, ஜெபம், ஹோமம், நிவேதனம், ஆரத்தி நடந்தது.
ஹோமத்தில் கோவில் துணை அதிகாரி தேவேந்திரபாபு, உதவி அதிகாரி சீனிவாசலு, கண்காணிப்பாளர் பூபதி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 22-ந்தேதி வரை கபிலேஸ்வரர் ஹோமம் எனப்படும் ருத்ர யாகம் நடக்கிறது.
- திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ருத்ர யாகம் நடைபெற்று வந்தது.
- இன்று சண்டிகேஸ்வரர் ஹோமம் நடக்கிறது.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ருத்ர யாகம் நடைபெற்று வந்தது. 11 நாட்கள் நடைபெறும் இந்த ருத்ர யாகம் நேற்றுடன் நிறைவடைந்தது.
இதன் ஒரு பகுதியாக காலையில் மூலவர் கபிலேஸ்வர சுவாமிக்கு ருத்ரயாகம் சமாப்தி, மஹாபூர்ணாஹுதி, மகாசாந்தி அபிஷேகம், கலசாபிஷேகம் நடந்தது.
இன்று (புதன் கிழமை) சண்டிகேஸ்வரர் ஹோமம் நடக்கிறது.
- நிறைவு நாளில் சண்டிகேஸ்வரர் ஹோமம் நடந்தது.
- பஞ்சமூர்த்திகள் வைபவம் நடந்தது.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் தெலுங்கு கார்த்திகை மாதத்தில் ஒரு மாதம் ஹோம மஹோற்சவம் கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதியில் இருந்து நடந்து வந்தது. முதலில் கணபதி ஹோமம், சுப்பிரமணியசாமி ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம், பைரவர் ஹோமம், நவக்கிரக ஹோமம், காமாட்சி ஹோமம், கபிலேஸ்வரர் ஹோமம் நடந்து வந்தது.
நிறைவு நாளான நேற்று சண்டிகேஸ்வரர் ஹோமம் நடந்தது. பின்னர் மகா பூர்ணாஹுதி, கலச உத்வாசனம், மகாசாந்தி அபிஷேகம், கலசாபிஷேகம், திரிசூல ஸ்நானம், அங்குரார்ப்பணம் நடந்தது. மாலை லட்சதீப ஆராதனை, பஞ்சமூர்த்திகளான விக்னேஸ்வரர், சுப்பிரமணியசாமி, கபிலேஸ்வரர், காமாட்சி தாயார், சண்டிகேஸ்வரருக்கு ஆராதனை, அதன்பிறகு பஞ்சமூர்த்திகள் வைபவம் நடந்தது. இத்துடன் ஒரு மாதம் நடந்த ஹோம மஹோற்சவம் முடிந்தது.
- 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு, சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.
- ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.
தரங்கம்பாடி:
திருக்கடையூர் அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத சோமவாரம் நடைபெற்றது.
இதில் 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு, சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.
பின்னர், சிவாச்சாரியார்கள் புனிதநீர் நிரப்பப்பட்ட சங்குகளுடன் கொடி மரம் மற்றும் கோயிலை வலம் வந்து, அமிர்தகடேஸ்வரருக்கு சங்காபிஷேகம் செய்தனர்.
இதனை தொடர்ந்து அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.
இதில் தருமபுர ஆதினம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரம்மச்சாரிய சாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
இதில் கோவில் குருக்கள்கள் கணேசன், ரவி, மகேஷ், ஆடிட்டர் குருசம்பத், கோவில் கண்காணிப்பாளர் மணி, காசாளர் களியராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- 6 நாட்கள் ஹோம மஹோற்சவம் நடத்தப்படுகிறது.
- இன்று சுப்பிரமணியசாமி ஹோமம் நடக்கிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி உத்தரவின்பேரில் உலக நல்லிணக்கத்துக்காக திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் 6 நாட்கள் ஹோம மஹோற்சவம் நடத்தப்படுகிறது. ஹோம மஹோற்சவத்தின் தொடக்க நாளான நேற்று கணபதி பூஜை, கணபதி ஹோமம் நடந்தது.
அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, அவரின் மனைவி சொர்ணலதாரெட்டி, பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர், கோவில் துணை அதிகாரி தேவேந்திரபாபு, உதவி அதிகாரி பார்த்தசாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) சுப்பிரமணியசாமி ஹோமம், நாளை (புதன்கிழமை) துர்கையம்மன், லட்சுமி, சரஸ்வதி ஹோமம், 19-ந்தேதி நவக்கிரக ஹோமம், 20-ந்தேதி தட்சிணாமூர்த்தி ஹோமம், 21-ந்தேதி ருத்ர மற்றும் மிருத்யுஞ்சயசாமி ஹோமம் நடக்கிறது.
- இன்று சுப்ரமணிய சாமி ஹோமம் நடைபெறுகிறது.
- யாகசாலையில் பக்தி சொற்பொழிவு நடந்தது.
திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோவிலில் மகாஉற்சவத்தின் ஒரு பகுதியாக நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. யாகசாலையில் காலை 8.30 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தி சொற்பொழிவு நடந்தது.
கலச ஸ்தாபன பூஜை, நவக்கிரக ஆவாஹனம், அக்னி பிரதிஷ்டை, ஹோமம், லகு பூர்ணாஹுதி, நிவேதனம், ஆரத்தி ஆகியவையும் நடந்தது. இன்று (புதன்கிழமை) சுப்ரமணிய சாமி ஹோமம் நடைபெறுகிறது.