என் மலர்
நீங்கள் தேடியது "பாட புத்தகம்"
- எக்ஸ் தளத்தில் ஒருவர் புத்தகத்தில் உள்ள பாடத்தினை புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
- இந்த யுகத்தில் இதை ஏற்றுக்கொண்டு பாடத்திட்டத்தில் இது போன்ற தலைப்புகளை சேர்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.
புதுடெல்லி:
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு பாட புத்தகத்தில் டேட்டிங் மற்றும் ரிலேசன்ஷிப் குறித்த பாடங்கள் இடம்பெற்றிருப்பது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதில் டேட்டிங் மற்றும் உறவுகள், பேய், கேட்பிஷிங், சைபர்புல்லிங் போன்ற அத்தியாயங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புத்தகம் சிறந்த நட்பு போன்ற தலைப்புகளை உள்ளடக்கி உள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் ஒருவர் புத்தகத்தில் உள்ள பாடத்தினை புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
அதில், இளம் வயது என்பது உணர்ச்சிகளால் நம் மனதையும், இதயத்தையும் அடிக்கடி குழப்பும் பருவம். இப்படியான பருவத்தில் மாணவர்களுக்கு வெவ்வேறு டேட்டிங் விதிமுறைகள் குறித்த வழிகாட்டுதலை வழங்கி இருப்பது வரவேற்கத்தக்கது என கூறி உள்ளார்.
மற்றொரு பயனர், காலம் மாறிக்கொண்டிருக்கிறது, இப்போதெல்லாம் மக்கள் மிக இளம் வயதில் இருந்தே டேட்டிங் செய்ய தொடங்குகிறார்கள். இந்த யுகத்தில் இதை ஏற்றுக்கொண்டு பாடத்திட்டத்தில் இது போன்ற தலைப்புகளை சேர்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.
இந்த சிக்கலான இயக்கவியலை புரிந்துகொள்ள குழந்தைகளுக்கு உதவுவது நம் நாட்களில் டேட்டிங் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை விட மிகவும் சிறந்தது என பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், இது நேர்மையாக பெரியது. இந்திய கல்வி முறையின் உண்மையான வளர்ச்சியை அனைவரும் பார்க்க விரும்புகிறார்கள் என பதிவிட்டுள்ளார்.
இதுபோன்று நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், புத்தகத்தில் இடம்பெற்ற இந்த தலைப்பு விவாத பொருளாக மாறி உள்ளது.
- தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலம் 4 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
- கோடை விடுமுறைக்கு பின்னா் பள்ளிகள் ஜூன் மாதம் 2-வது வாரத்தில் திறப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின்னா் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்காக அச்சடிக்கப்பட்ட விலையில்லா பாடநூல்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இதேபோன்று தமிழ்நாடு காகித நிறுவனம் மூலம் நோட்டு புத்தகங்களும் முழுமையாக மாவட்ட வாரியாக அனுப்பப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் மாவட்ட கிடங்குகளில் இருக்கும் நிலையில் அவை பள்ளிகளுக்கு வழங்கும் பணிகளைத் தொடங்க கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.
இது குறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் மாநில அரசின் பாடத்திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு வழங்குவதற்காக 2 கோடியே 68 லட்சம் விலையில்லா பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. மேலும், மாணவா்களுக்கு விற்பனை செய்ய ஒரு கோடியே 32 லட்சம் பாடப்புத்தகங்கள் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலம் 4 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
கோடை விடுமுறைக்கு பின்னா் பள்ளிகள் ஜூன் மாதம் 2-வது வாரத்தில் திறப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பை அரசு வெளியிடும். பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் 1 முதல் 7-ம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு முதல் பருவத்துக்கான பாட நூல்களையும், 8 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் படிக்கும் மாணவர் களுக்கான முழுமையான பாடநூல்களையும் வழங்க தயாா் நிலையில் இருக்கு மாறும், மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் மாவட்ட கிடங்குகளில் இருக்கும் நிலையில் அவை பள்ளிகளுக்கு வழங்கும் பணிகளைத் தொடங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவா்கள் தெரிவித்தனா்.
- பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தீவிரம்.
- ‘இல்லம் தேடி கல்வி மையம்” மூலம் மாலைநேர சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடந்தன.
மதுரை
தமிழகத்தில் கடந்த மாதம் 14-ந் தேதி பொது தேர்வு முடிந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ- மாணவிகளுக்கு ஜூன் 13-ந் தேதி (நாளை) முதல் பள்ளி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை திறக்கப்பட உள்ளன. ஒரு வாரமாக பள்ளி வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன. பள்ளியில் தூய்மை பணிகள், கட்டிடத்தின் உறுதி நிலை, சீரான மின்இணைப்பு, கழிவு நீர் தொட்டிகளை மூடுதல் ஆகிய பணிகளை தலைமை ஆசிரியர் மேற்பார்வையில் ஊழியர்கள் செய்தனர்.
மதுரை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 166 பள்ளிக்கூ டங்கள் உள்ளன. இங்கு 5 லட்சத்து 15 ஆயிரத்து 276 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். நாளை பள்ளி திறக்கும் நாள் அன்றே பாடபுத்தகங்கள் வழங்குவதற்கான ஏற்பாடு கள் நடந்து வருகின்றன. அன்றைய தினமே புதிய மாணவர் சேர்க்கையும் நடக்கிறது.மதுரை மாவட்டத்தில் 1-10ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு காலை 9.10 முதல், மாலை 4.10 வரை வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9 முதல் மாலை 4 வரை வகுப்புகள் நடைபெறும்.
பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டபோதிலும் 'இல்லம் தேடி கல்வி மையம்" மூலம் மாலைநேர சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடந்தன. மாணவர்கள் கல்வி கற்பதில் தயக்க நிலை- இடையூறு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
To the Minister of School Education, West Bengal.
— Farhan Akhtar (@FarOutAkhtar) August 19, 2018
There is a glaring error with the image used in one of the school text books to depict Milkha Singh-ji. Could you please request the publisher to recall and replace this book?
Sincerely. @derekobrienmphttps://t.co/RV2D3gV5bd
தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த பாடபுத்தகங்கள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
தனியார் பள்ளிகள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் பாட புத்தகங்களை விலைக்கு வாங்குகின்றன. பின்னர் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு விற்பனை செய்கின்றன.
2017-18 கல்வி ஆண்டில் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் சீரமைக்கப்பட்டு பாட புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இந்த கல்வி ஆண்டுக்கான 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்பு திருத்தப்பட்ட பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் அச்சடித்து வெளியிட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் விற்பனை வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது.
இதற்கிடையே 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்பு பாடப் புத்தகங்கள் விலை 60 சதவீதம் உயர்ந்து இருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். 11-ம் வகுப்பு கணக்கு, வேதியியல், இயற்பியல் பாடப்புத்தகங்கள் இந்த ஆண்டு இரு மடங்குக்கு மேல் விலை உயர்ந்து இருக்கிறது.
இது குறித்து தமிழ்நாடு பாடநூல் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், பாடப்புத்தகங்கள் மிக தரமான தாள்களில் அச்சடிக்கப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து பாடப்புத்தகங்களிலும் வரிகளுக்கு இடையே உள்ள இடைவெளிகள், படங்கள் ஆகியவை சீரமைக்கப்பட்டு இருக்கிறது என்றார்.
திருத்தப்பட்ட பாடப் புத்தகங்களின் வடிவமைப்புகளை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் முற்றிலும் மாற்றி அமைத்து இருக்கிறது. இதுகுறித்து தனியார் பள்ளி முதல்வர் ஒருவர் கூறும் போது, புதிய பாடப்புத்தகங்களின் விலை உயர்ந்து இருப்பது உண்மைதான். ஆனால் புத்தகங்கள் வண்ணமயமாகவும், மாணவர்களுக்கு பிடிக்கும் வகையிலும் உள்ளன என்றார். #TNtextbooks #schoolbooks
ராஜஸ்தான் மாநில கல்வி வாரியத்தின் கீழ் தனியார் ஆங்கில பள்ளிகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில், ஆங்கில வழிக்கல்வி 8-ம் வகுப்பு பாடபுத்தகத்தில் சுதந்திர போராட்ட வீரர் பால கங்காதர திலகரை பயங்கரவாதிகளின் தந்தை என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைதி வழியில் சென்று கொண்டிருந்த சுதந்திர போராட்டத்தை சிதைத்த அவர் பயங்கரவாதத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார் என கூறப்பட்டுள்ளது. காங்கிரசின் மிதவாத கொள்கைகளில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து ஆயுத போராட்டம் மூலமே சுதந்திரம் கிட்டும் என முழங்கியவர்களில் திலகரும் ஒருவர்.

ஆனால், வார்த்தை சிக்கல் காரணமாக அவரை பயங்கரவாதத்தின் தந்தை என பாடபுத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #Rajasthan