என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோஸ் பட்லர்"

    • இங்கிலாந்து அணியில் மார்க் வுட், மலான் விளையாடுவது சந்தேகமாக இருக்கிறது
    • உலகத்தரம் வாய்ந்து ஆடுகளத்தில் சிறந்த அணியை எதிர்கொள்ள இருக்கிறோம்

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் நாளை நடைபெறும் 2-வது அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. போட்டி நடைபெறும் அடிலெய்டில் நாளை மழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இதனால், மழை வராமல் இருந்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம் என சொல்ல இயலாது. அடிலெய்டு மைதானம் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலிக்கு ராசியானது. மேலும், சூர்யகுமார் யாதவ் அபாரமான ஃபார்மில் உள்ளார்.

    இவர்கள் இருவரையும் விரைவாக வெளியேற்றினால்தான் இறுதி போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்ய முடியும் என இங்கிலாந்து நினைத்தால் அதில் தவறு ஏதும் இல்லை.

    இந்த நிலையில் நாளைய போட்டி குறித்து இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் கூறியதாவது:-

    மார்க் வுட், தாவித் மலான் ஆகியோர் காயத்தில் இருந்து எவ்வாறு மீண்டு வருகிறார்கள் என்று பார்க்க இருக்கிறோம். முடிந்த அளவு அவர்களுக்கு சிகிச்சை அளித்து அணியில் சேர்க்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.

    தாவித் மலான் மீண்டும் ஒருநாள் லேசாக காயத்துடன் காணப்படுகிறார். மார்க் வுட்டிற்கும் இன்னும் லேசாக வலி உள்ளது. நாங்கள் மெடிக்கல் டீம் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். அதேபோல் இரண்டு வீரர்கள் மீதும் நம்பிக்கை வைத்துள்ளோம்.

    இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்து நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். என்னுடைய பார்வையில், உலகின் தலைசிறந்த மைதானத்தில், சிறந்த அணியை எதிர்கொள்ள இருக்கிறோம். சிறந்த ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.

    அது சிறந்த தருணமாக இருக்க போகிறது. ஒரு வீரராக நீங்கள் அதில் ஈடுபட விரும்பும் நேரம். இந்திய ரசிகர்கள் இந்தியா- பாகிஸ்தான் இறுதிப் போட்டியை மிகவும் ஆவலும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் நிச்சயமாக இந்தியா- பாகிஸ்தான் இறுதிப் போட்டியை விரும்பவில்லை. இந்தியாவின் நாளைய திட்டத்தை முறியடிப்போம்.

    ஆகவே, அது நடக்காமல் இருக்க எங்களால் முடிந்ததை செய்ய முயற்சிப்போம்.

    இவ்வாறு பட்லர் தெரிவித்தார்.

    • கொல்கத்தாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் 0 ரன்னில் ரன் -அவுட் ஆனார்.
    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லருக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    கொல்கத்தா:

    ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 13.1 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 151 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 47 பந்தில் 98 ரன்களும், சாம்சன் 29 பந்தில் 48 ரன்களும் எடுத்தனர்.

    தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் (0 ரன்) ரன் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இந்நிலையில், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லருக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    பட்லர் ரன் அவுட் ஆகி பெவிலியனுக்கு திரும்பிய போது கோபத்தில் பவுண்டரி எல்லைக்கோட்டை பேட்டால் அடித்தார். இதன் காரணமாக ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லருக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

    ஐபிஎல் நடத்தை விதிகளின் கீழ் லெவல் 1 குற்றங்கள் பொதுவாக கிரிக்கெட் உபகரணங்கள், ஆடைகள் அல்லது மைதான பொருத்துதல்கள் மற்றும் பொருத்துதல்களை துஷ்பிரயோகம் செய்வதை உள்ளடக்கியது; நடவடிக்கை அல்லது வாய்மொழி துஷ்பிரயோகம் மூலம் நடுவரின் முடிவில் எதிர்ப்பை வெளிப்படுத்துதல், ஆபாசமான, புண்படுத்தும், அல்லது அவமதிக்கும் மொழியைப் பயன்படுத்துதல் மற்றும்/அல்லது ஒரு ஆபாசமான சைகை செய்தல் மற்றும் அதிகப்படியான கவர்ச்சியில் ஈடுபடுதல் அல்லது பெவிலியன்/டிரஸ்ஸிங் ரூம் ஷெட்களை நோக்கி ஆக்ரோஷமாக சைகை செய்தல் அல்லது ஆக்ரோஷமாக அல்லது ஏளனமாக செயல்படுதல் உள்ளிட்ட குற்றங்கள் லெவல் 1 குற்றங்களாக உள்ளதாக கூறப்படுகிறது.

    • உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் (50 ஓவர்) அக்டோபர் 5-ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது.
    • ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தற்காலிக இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் (50 ஓவர்) அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    அகமதாபாத்தில் நடைபெறும் உலக கோப்பை போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் சந்திக்கிறது.

    இந்நிலையில், உலக கோப்பை தொடருக்கான தற்காலிக இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்த பென் ஸ்டோக்ஸ் தற்போது அந்த முடிவை திரும்பப் பெற்றுள்ளார் . இதனால் பென் ஸ்டோக்ஸ் உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளார்.

    இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக் அணியில் இடம்பெறவில்லை.

    உலக கோப்பைக்கான தற்காலிக இங்கிலாந்து அணி:

    ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ்.

    • இந்திய அணியை கூடுதலாக 20-25 ரன்களை அடிக்கவிட்டோம்.
    • பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்தபோதும், அவருக்கு ஒரு ஓவரை கூட கொடுக்கவில்லை.

    டி20 உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதியில் இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி ரோகித், சூர்யகுமார் ஆகியோரிடன் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 171 ரன்கள் எடுத்தது. இந்த மைதானத்தில் இதுவே அதிகமான ஸ்கோர்தான்.

    கடினமான இலக்கை நோக்கி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பட்லர்- சால்ட் ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. இதனால் 3 ஓவரில் 26 ரன்கள் எடுத்தது. உடனே சுதாரித்து கொண்ட ரோகித், அக்சர் படேலை ஓவர் வீச அழைத்தார். அதன் விளைவு முதல் பந்திலேயே பட்லர் அவுட் ஆனார்.

    இதனை தொடர்ந்து அடுத்து வந்த வீரர்கள் சுழற்பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் 16.4 ஓவரில் இங்கிலாந்து 103 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    இந்நிலையில் சுழலுக்கு சாதகமான இந்த மைதானத்தில் மொயின் அலிக்கு ஒரு ஓவர் கூட கொடுக்காததே தோல்விக்கு காரணம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணியை கூடுதலாக 20-25 ரன்களை அடிக்கவிட்டோம். பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்தபோதும், மொயின் அலிக்கு ஒரு ஓவரை கூட கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால், இந்தியாவை நிச்சயம் கட்டுப்படுத்தியிருப்போம்.

    இதுதான், நான் செய்த பெரிய தவறு. மொயின் அலிக்கு ஓவர்களை கொடுத்திருந்தால், வெற்றி வாய்ப்பு இருந்திருக்கும்'' எனக் கூறினார்.

    • ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் பங்கேற்கிறது.
    • இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 11-ம் தேதி தொடங்குகிறது.

    லண்டன்:

    ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 11-ம் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு இங்கிலாந்து அணி கேப்டனாக விக்கெட் கீப்பரும், அதிரடி வீரருமான பிலிப் சால்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இங்கிலாந்து டி20 அணி கேப்டனான ஜோஸ் பட்லர் வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஜேமி ஓவர்டன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜோஸ் பட்லரை விடுவித்தது.
    • ஒரு வேளை இதுவே கடைசியாக இருக்கும் பட்சத்தில் ராஜஸ்தான் அணிக்கு நன்றி என பட்லர் கூறினார்.

    ஐபிஎல் 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு அணியின் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் ராஜஸ்தான் அணி மட்டும் 6 வீரர்களை தக்க வைத்தது.

    அந்த வகையில் 1. சஞ்சு சாம்சன் (ரூ. 18 கோடி), 2, ஜெய்ஸ்வால் (ரூ. 18 கோடி), 3. ரியான் பராக் (ரூ. 14 கோடி), 4. துருவ் ஜுரேல் (ரூ. 14 கோடி), 5. ஹெட்மையர் (ரூ. 11 கோடி), 6. சந்தீப் சர்மா (ரூ. 4 கோடி). ஆகியோரை தக்கவைத்துள்ளது.

    இந்நிலையில் ஒரு வேளை இதுவே கடைசியாக இருக்கும் பட்சத்தில் ராஜஸ்தான் அணிக்கு நன்றி என தன்னை விடுத்தது குறித்து இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் உருக்கமாக பேசியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஒரு வேளை இதுவே கடைசியாக இருக்கும் பட்சத்தில் ராஜஸ்தான் அணிக்கு நன்றி. எனது கிரிக்கெட் பயணத்தின் சிறந்த தருணம் 2018ல் தான் தொடங்கியது. கடந்த 6 ஆண்டுகளில் இந்த பிங்க் ஜெர்ஸியில்தான் நான் நிறைய அற்புதங்களை நிகழ்த்தியுள்ளேன். என்னையும் என் குடும்பத்தையும் அணைத்து அரவணைத்துக்கொண்டதற்கு நன்றி. 

    • டி20 தொடரில் விளையாடி வருகிறது.
    • இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

    இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்றிரவு சென்னையில் நடைபெற்றது.

    இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 165 ரன்களை அடித்தது. இதில் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் 3 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அவர் 150 சிக்சர்களை அடித்த வீரர் ஆகியுள்ளார். இதுவரை 131 போட்டிகளில் விளையாடி இருக்கும் பட்லர் 151 சிக்சர்கள் அடித்துள்ளார்.

    இதன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 சிக்சர்களை தாண்டிய நான்காவது வீரர் ஆகியுள்ளா பட்லர். இந்தப் பட்டியலில் இந்திய அணியின் ரோகித் சர்மா 205 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார். நியூசிலாந்து அணியின் மார்ட் டின் குப்தில் 173 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்திலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-இன் முகமது வாசிம் 158 சிக்சர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

    • அதிரடியாக விளையாடும் ஸ்டைலுக்கு இந்திய அணியை ரோகித் எடுத்து வந்துள்ளார்.
    • நாங்களும் அதே போல விளையாட விரும்புகிறோம்.

    இங்கிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதில் முதலில் நடந்த டி20 தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நாளை தொடங்க உள்ளது.

    இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு ரோகித் சர்மாவின் அதிரடியான அணுகுமுறை மிகவும் சரியானது என்றும் அந்த அணுகுமுறையை நாங்களும் பின்பற்றி இத்தொடரில் இந்தியாவை வீழ்த்துவோம் என்று இங்கிலாந்து கேப்டன் பட்லர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கடந்த உலகக் கோப்பையை திரும்பிப் பார்க்கும் போது கிரிக்கெட்டின் அதிரடியாக விளையாடிய 2 அணிகள் தான் இறுதிபோட்டியில் விளையாடின. டிராவிஸ் ஹெட் இறுதிபோட்டியில் பேட்டிங் செய்த விதத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். அதனாலேயே அவர்களுக்கு வெற்றியும் கிடைத்ததை உங்களால் பார்க்க முடிந்தது.

    அதே போல இறுதிபோட்டியில் பேட்டிங் செய்ய வந்த ரோகித் சர்மா கேப்டனாக அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றிக்கு தள்ளியதற்காக பாராட்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அதிரடியாக விளையாடும் ஸ்டைலுக்கு அவர் இந்திய அணியை எடுத்து வந்துள்ளார். எனவே நாங்களும் அதே போல விளையாட விரும்புகிறோம். அதற்கு எதிரணியை பேட்டிங்கில் அழுத்தத்தின் கீழ் தள்ளுவதற்கான வழியை நாங்கள் கண்டறிய வேண்டும். அதே போல விக்கெட்டுகள் எடுக்க வேண்டும்.

    எதிரணி வீரர்கள் அதிக நேரம் பேட்டிங் செய்தால் அவர்கள் உங்களுக்கு வலியை ஏற்படுத்துவார்கள். எனவே நாங்கள் விக்கெட்டுகளை எடுப்பதற்கான வழியை கண்டறிய முயற்சிப்போம். இவை அனைத்தும் திட்டங்களை செயல்படுத்துவதைப் பற்றியதாகும். அதை செயல்படுத்தி நன்றாக விளையாடினால் நல்ல முடிவுகள் கிடைக்கும்.

    என்று பட்லர் கூறினார். 

    நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை ஜோஸ் பட்லர் பெற்றார்.
    அகமதாபாத்:

    ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்தது. 

    இதையடுத்து, 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. அந்த அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன் கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. 

    நடப்பு ஐபிஎல் தொடரில் 4 சதங்களுடன் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லர் கைப்பற்றினார்.

    இந்நிலையில், நேற்றைய போட்டியில் ஜோஸ் பட்லர் புதிய சாதனை படைத்தார். ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னரை பின்னுக்குத் தள்ளி பட்லர் 2-வது இடத்தை பிடித்தார். பட்லர் இதுவரை 863 ரன்கள் எடுத்துள்ளார்.

    இந்தப் பட்டியலில் பெங்களூரு அணியின் விராட் கோலி (973 ரன்கள் - 2016 ஆம் ஆண்டு ) முதல் இடத்தில் உள்ளார். 3-வது இடத்தில் டேவிட் வார்னர் (848 ரன்கள் - 2016) உள்ளார்.
    • இங்கிலாந்தின் ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 163 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.
    • நெதர்லாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் ஜேசன் ராய் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    ஆம்ஸ்டெல்வீன்:

    இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 49.2 ஓவரில் 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் எட்வர்ட்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 64 ரன்னில் ஆட்டமிழந்தார். பாஸ் டி லீட் 56 ரன்னில் அவுட்டானார். தொடக்க ஆட்டக்காரர் மேக்ஸ் ஒடோவ் அரை சதமடித்து 50 ரன்னில் வெளியேறினார்.

    இங்கிலாந்து சார்பில் டேவிட் வில்லே 4 விக்கெட்டும், பிரிடன் கார்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தி அணியின் வெற்றிக்கு உதவினார். பிலிப் சால்ட் 49 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், இங்கிலாந்து 30.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. ஜேசன் ராய் 101 ரன்னும், ஜோஸ் பட்லர் 86 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முழுமையாக கைப்பற்றியது.

    • முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 232 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • அதிரடியாக ஆடிய இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    ஆம்ஸ்டெல்வீன்:

    நெதர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி பங்கேற்றுள்ளது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஆம்ஸ்டெல்வீனில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நெதர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 498 ரன்கள் குவித்தது. சால்ட் 93 பந்துகளில் 122 ரன்னும், டேவிட் மலான் 125 ரன்னும் குவித்து ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடிய ஜோஸ் பட்லர் 47 பந்தில் சதமடித்து அசத்தினார். அவர் 70 பந்துகளில் 162 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். லிவிங்ஸ்டன் 22 பந்துகளில் 66 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.

    இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன்களை குவித்து இங்கிலாந்து உலக அணி சாதனை படைத்துள்ளது.

    இதையடுத்து, 499 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நெதர்லாந்து களமிறங்கியது. ஆனால், நெதர்லாந்து 49.4 ஓவரில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, இங்கிலாந்து 232 ரன்கள் வித்தியசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக ஸ்காட் எட்வர்ட்ஸ் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இங்கிலாந்து சார்பில் மொயீன் அலி 3 விக்கெட்டும், டேவிட் வில்லி, ரீஸ் டாப்லி, சாம் கர்ரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    அதிரடியாக ஆடிய ஜோஸ் பட்லர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    உலகக்கோப்பையில் இந்த மூன்று பேட்ஸ்மேன்களும் ஜொலிப்பார்கள் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக் கணித்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இங்கிலாந்து  ஆடுகளங்கள் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், சுமார் 55 போட்டிகளில் 45-க்கும் மேற்பட்டதில் 300 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் முன்னணி பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது. ஒவ்வொரு அணிகளும் தலா 9 ஆட்டங்களில் விளையாடும் என்பதால் முன்னணி பேட்ஸ்மேன்கள் சர்வ சாதாரணமாக 500 ரன்களை தாண்டுவார்கள்.



    இந்நிலையில் ரன் குவிப்பில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் ஆகியோர் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.
    ×