search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 213976"

    • 2 நாட்கள் நடக்கிறது
    • பல்வேறு வகையான போட்டிகளில் பங்கேற்பதற்கு தேர்வு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ராஜேஷ் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் வருகிற ஏப்ரல் மாதம் வரை நடைபெற வுள்ள பல்வேறு வகை யான விளையாட்டுப் போட்டிகளுக்கு தமிழ் நாடு அணிக்கான வீரர்கள், வீராங்க னைகள் தேர்வு கீழ்க்கா ணும் விளையாட்டுகள் விவரப்படி நடைபெற உள் ளது. தேர்வு நடைபெறும் தேதி, இடம், நேரம் விவரம் வருமாறு:-

    வருகிற 14-ந்தேதி காலை 7 மணிக்கு சென்னை ஜவகர் லால் நேரு உள் விளையாட்ட ரங்கத்தில் கூடைப்பந்து போட்டிக்கு மாணவர்கள் 12 பேரும் மாணவிகள் 12 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். 13-ந்தேதி காலை 7 மணிக்கு சென்னை ஜவகர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் கால்பந்து போட்டிக்கு மாணவிகள் 20 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    13-ந்தேதி காலை 7 மணிக்கு திருச்சி அண்ணா விளை யாட்டரங்கத்தில் வளை கோல்பந்து போட் டிக்கு மாணவர்கள் 18 பேர் தேர்வு செய்யப் பட உள்ளனர்.

    13-ந்தேதி காலை 7 மணிக்கு சிவகங்கை மாவட்ட விளை யாட்டு அரங்கத்தில் கோ-கோ போட்டிக்கு மாணவிகள் 15 பேர் தேர்வு செய்யப்பட உள் ளனர். 13-ந்தேதி காலை 7 மணிக்கு சென்னை ஜவகர்லால் நேரு விளையாட்டரங் கத்தில் கையுந்து பந்து போட் டிக்குமாணவர்கள் 12 பேரும், மாணவிகள் 12 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    வயது வரம்பை பொறுத் தவரையில் 1-1-2004 அன்று அல்லது அதற்குப் பின்னர் பிறந்த விளையாட்டு வீரராக இருத்தல் வேண்டும். ஆதார் கார்டு அல்லது பாஸ்போர்ட். பள்ளியில் பயில்வதற்கான சான்றிதழ், பிறப்பு சான்றி தழ் (குறைந்தபட்சம்) 5 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட தாக இருத்தல் வேண்டும். (அதாவது 2012 ஜனவரி மாதம் 1-ந் தேதி அல்லது அதற்கு முன் நக ராட்சி அல்லது கிராம பஞ்சாயத்தால் வழங்கப் பட்டது).

    தமிழ்நாடு அணி தேர்வு செய்யப்பட்ட பின்னர் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு உத்தரவாதம் அளிக்க இயலாது. தேர்வு போட்டிக்கு தினப்படி, பயணப்படி வழங்கப்பட மாட்டாது. எனவே இந்த தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் வீரர், வீராங்க னைகள் தேர்வு நடை பெறும் இடங்களில் குறிப் பிட்ட நாளில் தகுந்த ஆவ ணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தென்னைக்கு தெளிக்க தண்ணீரில் கலக்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை தவறுதலாக எடுத்து குடித்ததாக தெரிகிறது.
    • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே வில்லுக்குறி அடுத்த மணக்கரை அவரிவிளையை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ஐயப்பகோபு (வயது 46).

    எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். இவர் விடுமுறையில் கடந்த 4-ம் தேதி ஊருக்கு வந்திருந்தார். ஐயப்பகோபுக்கு அதிக குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்த ஐயப்பகோபு போதையில் தென்னைக்கு தெளிக்க தண்ணீரில் கலக்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை தவறுதலாக எடுத்து குடித்ததாக தெரிகிறது. இதில் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்த அவரை மீட்டு நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஐயப்பகோபு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மனைவி துர்கா (36) இரணியல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழக அரசு சார்பில் தேசிய கொடியுடன் வரவேற்கும் குழுவில் இடம் பெற்றார்.
    • கல்வித்துறையினர் விமானம் மூலம் பெங்களூரு அழைத்து சென்றுள்ளனர்.

    அவிநாசி :

    அவிநாசியிலுள்ள ஸ்ரீ ரமணசேவா ஆஸ்ரமம் குழந்தைகள் இல்லத்தில் தங்கி அருண்பாண்டி, நவீன் மற்றும் கவுதம் ஆகியோர் சேவூர் மற்றும் கருக்கன்காட்டுப்புதூர் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

    3 பேரும் 20ந் தேதி நடைபெற்ற வட்டார அளவிலான சதுரங்க போட்டியில் பங்கேற்றனர்.இதில் 16 வயது பிரிவில், நவீன் முதலிடம், கவுதம் இரண்டாமிடமும், 16-18 வயது பிரிவில், அருண்பாண்டி மூன்றாம் இடமும் பெற்றனர்.இதனை தொடர்ந்து 25ம் தேதி அரசு பள்ளிகளிடையே மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் அருண்பாண்டி முதலிடம் பிடித்தார்.இதனால் அருண்பாண்டி, சென்னையில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க வரும் வெளிநாட்டு வீரர்களை தமிழக அரசு சார்பில் தேசிய கொடியுடன் வரவேற்கும் குழுவில் இடம் பெற்றார். இதற்காக அவரை கல்வித்துறையினர் விமானம் மூலம் பெங்களூரு அழைத்து சென்றுள்ளனர்.

    • சுதந்திர போராட்ட வீரர் வாளுக்குவேலி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • மாநில துணை பொது செயலாளர் ஆதிமுத்துக்குமார் தலைமை தாங்கினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பஸ்நிலையம் முன்பு மறத்தமிழர்சேனை சார்பில் சுதந்திரபோராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலத்தின் 221-வது பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது.

    மாநில துணை பொது செய லாளர் ஆதிமுத்துக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜவஹர்சிவா, மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், மாவட்டசெயலாளர் முத்துகுமார், மூவேந்தர் முன்னேற்றகழக மாநில பொருளாளர் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட பொருளாளர் கோட்டூர்சாமி வரவேற்றார். வாளுக்குவேலி உருவபடத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. இதில் அ.தி.மு.க. ஒன்றிய நிர்வாகி மகேந்திரன், அ.ம.மு.க. நகர செயலாளர் மதன், சுகுமாறன், தே.மு.தி.க ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், மூவேந்தர் முன்னேற்றகழக வடக்கு மாவட்ட செயலாளர் செந்தில் பாண்டி, வழக்கறிஞர் விஜயக்குமார், லயன்ஸ் நகரதலைவர் பாலாஜி, நாம்தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் மகேந்திரன், ஆனந்த், காங்கிரஸ் நகர செயலாளர் முருகானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கச்சைகட்டி கிளை செயலாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.

    சென்னை பூந்தமல்லியில் உள்ள சிஆர்பிஎப் பயிற்சி மையத்தில் அதிகாரிகள் அளித்த தண்டனையால் மன உளைச்சல் ஏற்பட்டு ராஜேஷ்குமார் என்ற வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். #CRPF
    சென்னை:

    சென்னை பூந்தமல்லியில் சிஆர்பிஎப் பயிற்சி மையம் உள்ளது. இங்கு பணியாற்றிய ராஜேஷ் குமார் (40) என்ற வீரர் பணி நேரத்தில் செல்போனில் பேசியதால், அதிகாரிகள் தண்டனை அளித்ததாக கூறப்படுகிறது.

    இதனால், மன உளைச்சல் அடைந்த ராஜேஷ் குமார் இன்று தன்னுடைய துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×