என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாராஷ்டிரா அரசு"

    • மகாராஷ்டிராவில் மராத்தி தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமல்ல என்பதை மத்திய அரசு ஏற்கிறதா?
    • பாஜக ஆளும் மாநிலத்திலேயே இந்தி கட்டாயமில்லை என கூறியிருப்பதால் மத்திய அரசு தன் முடிவை மாற்றிக் கொள்ளுமா?

    மகாராஷ்டிர மாநில பாஜக அரசின் முடிவை சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து முதலமைசசர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்தியை 3வது மொழியாக திணிக்க முயன்ற மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸூக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கடுமையான எதிர்ப்பு எழுந்த பிறகு மகாராஷ்டிராவில் மராத்தி மொழி கட்டாயம் என பட்னாவிஸ் கூறுகிறார்.

    இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தி திணிக்கப்படுவதற்கு எதிராக எழுந்த கண்டனத்தின் வெளிபாடு தான் இது.

    மகாராஷ்டிராவில் மராத்தி தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமல்ல என்பதை மத்திய அரசு ஏற்கிறதா? பாஜக ஆளும் மாநிலத்திலேயே இந்தி கட்டாயமில்லை என கூறியிருப்பதால் மத்திய அரசு தன் முடிவை மாற்றிக் கொள்ளுமா?

    தேசிய கல்விக்கொள்கையின்படி 3வது மொழியை கற்பது கட்டாயமல்ல என மத்திய அரசு தெளிவான உத்தரவு பிறப்பிக்குமா ?

    தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்திற்கு ரூ.2,152 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

    அநீதியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கான ரூ.2,152 கோடியை மத்திய அரசு விடுவிக்குமா?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மகாராஷ்டிராவில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சி தேர்தல் ஆணையத்தின் ஆசியுடன் அமைக்கப்பட்டது.
    • பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மட்டும் மொழி மற்றும் மதம் குறித்த அரசியல் ஏன் நடக்கிறது என்றார்.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி தலைவரான ஆதித்ய தாக்கரே இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மகாராஷ்டிராவில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சி தேர்தல் ஆணையத்தின் ஆசியுடன் அமைக்கப்பட்டது. இந்த அரசாங்கம் பல விஷயங்களில் நம்மை தவறாக வழிநடத்தவும், முட்டாளாக்கவும் முயன்றதால் 'முட்டாள்' அரசாங்கம் என அழைக்கப்படுகிறது.

    தேர்தல் பிரசாரத்தின் போது, முதல் மந்திரி விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என கூறினார். ஆனால் இப்போது துணை முதல் மந்திரி அஜித் பவார் இதுபோன்ற எதுவும் செய்யப்படாது என்று கூறுகிறார்.

    பெண்கள் பயனாளிகளுக்கு வழங்க அரசாங்கத்திடம் நிதி இல்லாததால் அந்தத் திட்டமும் மூடப்பட உள்ளது.

    பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மட்டும் மொழி மற்றும் மதம் குறித்த அரசியல் ஏன் நடக்கிறது?

    ஒவ்வொருவரும் வெவ்வேறு மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த மொழி உள்ளது, அது மதிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

    • முதல்வர் யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.
    • பட்நாவிஸ் முதல்வராக பதவி ஏற்பார். இரண்டு பேர் துணை முதல்வராக பதவி ஏற்கலாம் எனத் தகவல்

    மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் மகாயுதி கூட்டணி (பா.ஜ.க., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்) அமோக வெற்றி பெற்றது.

    முதல்வர் யார் என்பதில் கூட்டணிக்குள் இழுபறி நீடிக்கிறது. ஏற்கனவே முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டேதான் மீண்டும் முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என சிவசேனா கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். அதேவேளையில் பாஜக 130 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றதால் பட்நாவிஸ் முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என பா.ஜ.க. தலைவர்கள் கூறி வந்தனர்.

    தேசியவாத காங்கிரஸ் தலைவரும், ஏற்கனவே துணை முதல்வராக இருந்தவருமான அஜித் பவார், தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் பட்நாவிஸ் இன்று மாலை முதல்வராக பதவி ஏற்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்பாரா? என்பது தெரியவில்லை.

    முதல்வராக இருந்த நிலையில், துணை முதல்வராக பதவி ஏற்க தயக்கம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. இன்று மாலை பட்நாவிஸ் பதவி ஏற்கும்போதுதான் யாரெல்லாம் மந்திரி சபையில் இடம் பிடிக்கிறார்கள் என்பது தெரியவரும்.

    இந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக பதவி ஏற்கவில்லை என்றால், சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.-க்கள் புதிய அரசின் எந்தவொரு பொறுப்பையும் ஏற்கமாட்டார்கள் என அக்கட்சியின் தலைவர் உதய் சமந்த் தெரிவித்துள்ளார்.

    ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், சிவசேனா கட்சி அரசின் எந்தவொரு பொறுப்பையில் ஏற்றுக் கொள்ளாது எனத் தெரிவித்துள்ளார். அவர் துணை முதல்வராக வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்றார்.

    இதற்கிடையே பட்நாவிஸ் உடன் இரண்டு பேர் துணை முதல்வராக பதவி ஏற்பார்கள் என பா.ஜ.க. தலைவர் ஒருவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக பதவி ஏற்க தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியானது.
    • தற்போது அவர் துணை முதல்வராக பதவி ஏற்பார் என சிவசேனா தலைவர் உதய் சமந்த் தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் மகாயுதி கூட்டணி (பா.ஜ.க., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்) அமோக வெற்றி பெற்றது.

    முதல்வர் யார் என்பதில் கூட்டணிக்குள் இழுபறி நீடிக்கிறது. ஏற்கனவே முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டேதான் மீண்டும் முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என சிவசேனா கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். அதேவேளையில் பாஜக 130 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றதால் பட்நாவிஸ் முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என பா.ஜ.க. தலைவர்கள் கூறி வந்தனர்.

    தேசியவாத காங்கிரஸ் தலைவரும், ஏற்கனவே துணை முதல்வராக இருந்தவருமான அஜித் பவார், தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் பட்நாவிஸ் இன்று மாலை முதல்வராக பதவி ஏற்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்க தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியானது.

    ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக பதவி ஏற்கவில்லை என்றால், சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.-க்கள் புதிய அரசின் எந்தவொரு பொறுப்பையும் ஏற்கமாட்டார்கள் என அக்கட்சியின் தலைவர் உதய் சமந்த் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றுக் கொள்வார் என உதய் சமந்த் தெரிவித்துள்ளார்.

    இதன்மூலம் கூட்டணிக்குள் நிலவி வந்த முதல்வர் பதவி, துணை முதல்வர் பதவி தொடர்பான குழப்பம் தீர்வுக்கு வந்துள்ளது.

    • ஹலோ என்ற சம்பிரதாய வார்த்தை மேற்கத்திய கலாச்சாரம்.
    • மகாத்மா காந்தி கூட வந்தே மாதரத்தை ஆதரித்தார்.

    மும்பை:

    மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி மகாராஷ்டிரா மாநிலம் வார்தா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அம்மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் சுதிர் முங்கந்திவார் தெரிவித்துள்ளதாவது:

    உத்தியோகபூர்வ அல்லது தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகளின் போது அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், "ஹலோ" என்பதற்குப் பதிலாக "வந்தே மாதரம்" என்று தெரிவிக்க வேண்டும். அரசுத் துறைத் தலைவர்கள் தங்கள் ஊழியர்களை அவ்வாறு செய்ய ஊக்குவிக்க வேண்டும். "ஹலோ" என்ற சம்பிரதாய வார்த்தை மேற்கத்திய கலாச்சாரத்தை சித்தரிக்கிறது. அதற்கு எந்த உணர்வும் இல்லை.

    வந்தே மாதரம் என்றால், நாங்கள் எங்கள் தாய்க்கு தலைவணங்குகிறோம் என்று பொருள். எனவே, பொதுமக்களும் "ஹலோ" என்பதற்குப் பதிலாக வந்தே மாதரம் என்று சொல்லுங்கள். சுதந்திரப் போராட்டத்தின் போது மகாத்மா காந்தி கூட வந்தே மாதரத்தை ஆதரித்தார்.

    வந்தே மாதரம் கூட கட்டாயமில்லை. 'ஜெய் பீம்' அல்லது 'ஜெய் ஸ்ரீ ராம்' என்றும் சொல்லலாம், தங்கள் பெற்றோரின் பெயரைக் குறிப்பிடலாம். ஆனால் தொலைபேசி அழைப்பைப் பெறும்போது ஹலோ சொல்வதை தவிர்க்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள். இவ்வாறு அவர் கூறினார்.

    இதனிடையே, விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், "ஜெய் பலிராஜா" ( (விவசாயிக்கு வாழ்த்துக்கள்) மற்றும் "ராம் ராம்" என்ற வார்த்தைகளை பயன்படுத்துமாறு காங்கிரஸ தொண்டர்களை மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படேல் கேட்டுக் கொண்டுள்ளார்.

    நமது நாடு விவசாயப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லும் போது 'ஜெய் பலிராஜா', 'ராம் ராம்' என்று சொல்வோம் என்பதே எங்களது நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜெயின் சமூகத்தினரின் எதிர்ப்பால் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஆடுகள் ஏற்றுமதி செய்வதை அம்மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது. #SheepExport #Maharashtra
    மும்பை:

    விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஏற்றுமதி செய்ய மகாராஷ்டிர அரசு முடிவு செய்தது. அதன்படி முதற்கட்டமாக இரண்டாயிரம் ஆடுகளை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நேற்று மதியம் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

    ஆனால், இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெயின் சமூகத்தினர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் ஆதரவு கோரி ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் நோக்கி மிகப்பெரிய பேரணியை நடத்தினர். இதனால், ஆடுகள் ஏற்றுமதி திட்டத்தை அம்மாநில அரசு ஒத்திவைத்துள்ளது. போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, ஏற்றுமதி குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பேசிய திகம்பர் ஜெயின் மகாசபா சமிதியின் தலைவர், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க இதைவிட சிறந்த வழிகள் பல இருப்பதாகவும், ஆடுகளை ஏற்றுமதி செய்வதற்கு நாங்கள் முழுமையாக எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். #SheepExport #Maharashtra
    உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 5 மாணவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. #Everest #MahaGovt
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள ஆஷரம்ஷாலாஸ் பள்ளியைச் சேர்ந்த 10 மாணவர்கள் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி சிகரத்தில் ஏற தொடங்கினர். ஆனால் அவர்களில் 5 மாணவர்கள் மட்டுமே எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக அடைந்தனர். மீதி 5 பேர் பயணத்தை முடிக்கவில்லை.


    இந்நிலையில், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த உமாகந்த் மகாவி, பர்மேஷ் அலே, மனிஷா துர்வே, கவிதாஸ் காத்மோட் மற்றும் விகாஸ் சோயம் ஆகிய 5 மாணவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் மற்றும் போலீசில் பணி வழங்கப்படும் என மாநில நிதி மந்திரி சுந்தீர் முகந்திவார் தெரிவித்தார். மற்ற 5 மாணவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபா வழங்கப்படும் என அறிவித்தார்.

    நாட்டிற்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகள் தெரிவித்தார். #Everest #MahaGovt
    மகாராஷ்டிரா மாநில காவல்துறையில் பணியாற்றும் பெண் போலீஸ் கான்ஸ்டபிள் பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. #Maharashtrawomancop #sexchangesurgery
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம், பீட் மாவட்டத்தை சேர்ந்தவர் லலிதா சால்வே(29). மாநில காவல்துறை பணியில் சேர்ந்த இவர் தற்போது இம்மாவட்டத்துக்கு உட்பட்ட மஜால்கான் காவல் நிலையத்தில் பெண் கான்ஸ்டபிள் ஆக வேலை செய்து வருகிறார்.

    கடந்த 1988-ம் பிறந்த லலிதா, நான்காண்டுகளுக்கு முன்னர் தனது உடலில் ஏற்பட்ட குரோமசோம்களின் கிளர்ச்சியை உணர்ந்த தனது ஆண் நண்பர்களைப்போல் நாமும் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டார். 

    பெண்ணின் உடல் அமைப்புடனும், ஆணுக்குரிய இதர இயல்புகளையும் சமநிலைப்படுத்த இயலாமல் திண்டாடிய லலிதா, பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு முழுவதுமாக ஆணாகவே மாறிவிட தீர்மானித்திருந்தார். இதற்காக, லலித் என்ற ஆண் பெயரையும் தனக்கு சூட்டி கொண்டார்.

    பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி கேட்டும், இதற்கான விடுமுறை கேட்டும் மாவட்ட காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு லலிதா விண்ணப்பித்திருந்தார்.

    ஆனால், போலீஸ் வேலைக்கு ஆண்-பெண்களிடம் உயரம், எடை மற்றும் இதர உடல் அமைப்புகள் வெவ்வேறானவை என குறிப்பிட்ட காவல்துறை அவரது விண்ணப்பத்தை நிராகரித்து விட்டது.

    இதைதொடர்ந்து, ஒருமாத மருத்துவ விடுமுறை அளிக்குமாறும், அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஆண் காவலராக பணியை தொடர அனுமதிக்குமாறும் மாநில காவல்துறை டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும் என்ற  கோரிக்கையுடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மும்பை ஐகோர்ட்டை லலிதா அணுகினார். விடுமுறை அளிக்க முடியாது என டி.ஜி.பி. சார்பில் பதில் அளிக்கப்பட்டது.

    இது அரசு துறை சார்ந்த விவகாரம் என்பதால் மாநில நிர்வாக தீர்ப்பாய நீதிமன்றத்தை நாடுமாறு ஐகோர்ட் அறிவுறுத்தியது. இதற்கிடையில், பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக மும்பை ஜே.ஜே. மருத்துவமனை டாக்டர்களுடன் ஆலோசனை நடத்திய லலிதா தனது கோரிக்கையை முன்வைத்து கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ்-ஐ சந்தித்து மனு அளித்திருந்தார்.

    இந்நிலையில், பிறப்புறுப்பு மாற்று அறுவை செய்துகொள்ள லலிதாவுக்கு அனுமதி அளித்து உயரதிகாரிகளிடம் இருந்து தற்போது கடிதம் வந்துள்ளதாகவும், இந்த தகவல் லலிதாவுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பீட் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஸ்ரீதர் இன்று தெரிவித்துள்ளார். #Maharashtrawomancop #sexchangesurgery
    ×