என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223193"

    • வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.63 ஆயிரமாக உள்ளது.
    • ஒரு கிராம் வெள்ளி ரூ.63-க்கு விற்கிறது.

    சென்னை:

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37 ஆயிரத்து 840-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 730 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.63 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.63-க்கு விற்கிறது.

    • அரசே தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும்.
    • 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்களை, விவசாய பணிக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும்.

    அவிநாசி:

    கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம், சேவூர் அருகேயுள்ள மங்கரசவளையபாளையம் பகுதியில் நடந்தது.மாநில தலைவர் சண்முகம், திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன், அவிநாசி தலைவர் வேலுச்சாமி, ஒருங்கிணைப்பாளர் மயில்சாமி, ராஜகோபால் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    அரசே தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும். கொப்பரை தேங்காய்க்கு 150 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். பால் கொள்முதல் விலையாக, மாட்டுப்பால் லிட்டருக்கு, 60 ரூபாய், எருமைப்பால், லிட்டருக்கு 80 ரூபாய் உயர்த்த வேண்டும்.100 நாள் வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்களை, விவசாய பணிக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும். தென்னை, பனை விவசாயிகளின் நலன் கருதி கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும்.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.
    • வெள்ளி இன்று கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.64-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த வாரம் உயர்ந்து வந்தது. ஆனால் இந்த வார தொடக்கத்தில் இருந்தே விலை குறைந்து வருகிறது. கடந்த 4-ந்தேதி ஆயுதபூஜையன்று 1 பவுன் தங்கம் ரூ.38,200-க்கு விற்கப்பட்டது. மறுநாள் அது ரூ.38,680 ஆக அதிகரித்தது. 6-ந்தேதி மீண்டும் விலை உயர்ந்து ரூ.38,720-க்கு விற்கப்பட்டது. கடந்த 8 மற்றும் 9-ந்தேதிகளிலும் அதே விலையில் நீடித்தது.

    இந்த வார தொடக்கமான நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.520 குறைந்து ரூ.38,200-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு மேலும் ரூ.280 குறைந்துள்ளது. இன்று 1 பவுன் தங்கம் ரூ.37,920-க்கு விற்கப்படுகிறது.

    நேற்று 1 கிராம் தங்கம் ரூ.4775-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.4740-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி இன்று கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.64-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.64 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.

    • வெள்ளி விலையும் சரிவை சந்தித்து இருக்கிறது.
    • கிராம் ரூ.66-ல் இருந்து ரூ.64.80 ஆகவும், கிலோ ரூ.66 ஆயிரத்தில் இருந்து ரூ.64,800 ஆகவும் குறைந்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று கிராம் ரூ.4,840-க்கு விற்பனையானது. இன்று இது ரூ.4,805 ஆக விற்பனை ஆகிறது. பவுன் ரூ.38,720-ல் இருந்து ரூ.38.440-ஆக குறைந்துள்ளது.

    ஒரே நாளில் தங்கம் கிராம் ரூ. 35-ம் பவுன் ரூ.280-ம் குறைந்துள்ளது.

    இதேபோல வெள்ளி விலையும் சரிவை சந்தித்து இருக்கிறது. கிராம் ரூ.66-ல் இருந்து ரூ.64.80 ஆகவும், கிலோ ரூ.66 ஆயிரத்தில் இருந்து ரூ.64,800 ஆகவும் குறைந்து உள்ளது.

    • வெள்ளி விலை சற்று குறைந்து இருக்கிறது.
    • கிராம் ரூ 66.50-ல் இருந்து ரூ.66 ஆகவும் கிலோ ரூ 65,500-ல் இருந்து ரூ.60 ஆயிரமாகவும் குறைந்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. இன்று தங்கத்தின் விலை பவுனுக்கு 40 ரூபாய் அதிகரித்து உள்ளது.

    நேற்று பவுன் ரூ38,680-க்கு விற்பனை ஆனது. இன்று இது ரூ.38,720 ஆக உயர்ந்து உள்ளது. கிராம் ரூ. 4,835-ல் இருந்து ரூ.4.840 ஆக உயர்ந்தது. தங்கம் ஒரே நாளில் கிராம் ரூ.5-ம் பவுன் ரூ.40-ம் அதிகரித்து உள்ளது.

    வெள்ளி விலை சற்று குறைந்து இருக்கிறது. கிராம் ரூ 66.50-ல் இருந்து ரூ.66 ஆகவும் கிலோ ரூ 65,500-ல் இருந்து ரூ.60 ஆயிரமாகவும் குறைந்து உள்ளது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்தது.
    • வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. கிராம் ரூ.66.50-க்கும். கிலோ ரூ.66.500-க்கும் விற்பனை ஆகிறது.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

    நேற்று ஒரு கிராம் ரூ.4,840-க்கு விற்பனை ஆனது. இன்று இது ரூ.4,835-க்கு விற்பனையாகிறது. பவுன் ரூ.38,720-ல் இருந்து ரூ.38,680 ஆக குறைந்துள்ளது. தங்கம் ஒரே நாளில் கிராம் 5 ரூபாயும். பவுன் 40 ரூபாயும் குறைந்துள்ளது.

    வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. கிராம் ரூ.66.50-க்கும். கிலோ ரூ.66.500-க்கும் விற்பனை ஆகிறது.

    • சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் ஆயுதபூஜை, நேற்று விஜயதசமி விழா கோலகலமாக கொண்டா டப்பட்டது.
    • இதை தொடர்ந்து சேலத்தில் மார்க்மகெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.500-க்கு விற்பனை

    சேலம், அக்.6-

    சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் ஆயுதபூஜை, நேற்று விஜயதசமி விழா கோலகலமாக கொண்டா டப்பட்டது. கோவில்களில் சாமிக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம், பூைஜ கள் செய்யப்பட்டது. வீடு கள், நிறுவனங்களில் சாமி படங்களுக்கு மலர்க ளால் அலங்காரம் செய்யப்பட்டது.

    மேலும் கோவில்களில் வழிபட பூக்கள் அதிக அளவில் பொதுமக்கள் வாங்கிச்சென்றனர். இதனால் ஆயுத பூைஜ, சரஸ்வதி பூைஜயை முன்னிட்டு பூக்களில் விலை பல மடங்கு அதிகமாக இருந்தது. குறிப்பாக ஒரு கிலோ குண்டு மல்லிகை பூ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் இன்று பூக்கள் விலை பாதியாக குறைந்துள்ளது. சேலம் வ.உ.சி. மார்க்கெட், பழைய பஸ் நிலையத்தையொட்டி உள்ள பூ மார்க்கெட்டுகளில் பூக்களில் விைல விபரம் வருமாறு-

    குண்டு மல்லிகை பூ- ரூ.500, முல்லை- ரூ.360, ஜாதி மல்லிகை- ரூ.280, காக்காட்டான்- ரூ.240, கலர் காக்கட்டான் - ரூ.200, சம்மங்களி - ரூ.70, சாதா சம்மங்கி- ரூ.70, அரளி - ரூ.60, வெள்ளை அரளி - ரூ.60, மஞ்சள் அரளி - ரூ.60, செவ்வரளி- ரூ.80, ஐ.செவ்வரளி- ரூ.80, நந்தியாவட்டம் - ரூ.15, சி.நந்திவட்டம் - ரூ.15.

    • வரத்து 7 டன் என வியாபாரிகள் தெரிவித்தனா்.
    • மர முருங்கைக்காய் கிலோ ரூ. 32-க்கு விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனா்.

    வெள்ளக்கோயில்:

    வெள்ளக்கோவில் பகுதியில் விளையும் முருங்கைக்காய், இப்பகுதியில் செயல்பட்டு வரும் வாரச்சந்தைகள் மற்றும் தனியாா் கொள்முதல் மையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. வெள்ளக்கோவில் முத்தூா் சாலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தனியாா் கொள்முதல் மையம் செயல்பட்டு வருகிறது.

    அங்கு இந்த வாரம் கரும்பு முருங்கைக்காய் கிலோ ரூ. 46, செடி முருங்கைக்காய் கிலோ ரூ. 42, மர முருங்கைக்காய் கிலோ ரூ. 32-க்கு விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனா். வரத்து 7 டன் என வியாபாரிகள் தெரிவித்தனா். 

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரையோரப் பகுதியில் வாழைத்தார் விலை திடீர் வீழ்ச்சி அடைந்தது.
    • கடந்த வாரத்தை விட இன்று பூவன் வாழைத்தார் ஒன்றின் விலை ரூ.100 முதல் ரூ. 200 வரை வீழ்ச்சி.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரையோரப் பகுதிகளான ஜேடர்பாளையம், பிலிக்கல்பாளையம், அண்ணா நகர், பாண்டமங்க லம், பொத்தனூர், பரமத்திவேலூர், அணிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி மோகனூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தமிழகத்தின் சேலம், தர்மபுரி, ஈரோடு, கோவை, கரூர் திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

    இப்பகுதியில் விளையும் வாழைத்தார்களை வியாபாரிகள் வாழைத் தோப்பில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்கின்றனர். சிறு விவசாயிகள் விளைவிக்கும் வாழைத்தார்களை விற்பனை செய்ய பரமத்திவேலூரில் தினசரி வாழைத்தார் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஆயுத பூஜைக்கு இரு தினங்களே உள்ள நிலையில் இன்று வாழை தாருக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் வாழைத்தார்களை மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். மூவாயிரத்துக்கும் அதிகமான வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த நிலையில் வெளியூர் வியாபாரிகள் அதிகம் வராததால் வாழைத்தார்களுக்கு சரியான விலை கிடைக்கவில்லை.

    கடந்த வாரம் ரூ. 500 முதல் 600 ரூபாய்க்கு விற்பனையான பூவன் வாழைத்தார் ஒன்றின் விலை இன்று ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனையானது. கடந்த வாரத்தில் ரூ.400 ரூபாய்க்கு விற்பனையான பச்சை நாடன் தற்போது ரூ. 300 முதல் ரூ.350- க்கு விற்பனையானது. கடந்த வாரம் 300 ரூபாய்க்கு விற்பனையான ரஸ்தாலி, கற்பூரவள்ளி ரக வாலைத்தார்கள் இன்று விலை அதிகரித்து ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனையானது. கடந்த வாரத்தை விட இன்று பூவன் வாழைத்தார் ஒன்றின் விலை ரூ.100 முதல் ரூ. 200 வரை வீழ்ச்சி அடைந்தது. ஆயுத பூஜையை ஒட்டி வாழைத்தார்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த விவசாயிகளுக்கு வாழைத்தார் விலை வீழ்ச்சி பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    • பச்சைமிளகாயில் காரம் அதிகம் ஆனால் விலையோ குறைவு என பல்லட வட்டார விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
    • ஒரு வாரத்திற்கு சுமார் ரூ. 3 ஆயிரம் செலவு செய்து மருந்து அடிக்கப்படுகிறது.

    வீரபாண்டி :

    பச்சைமிளகாயில் காரம் அதிகம் ஆனால் விலையோ குறைவு என பல்லட வட்டார விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

    பல்லடம் வட்டம், கரைப்புதூர் ஊராட்சி அக்கணம்பாளையத்தை சேர்ந்த அரசன் தோட்டம் பகுதியை சேர்ந்த விவசாயி கோவிந்தசாமி வயது (55) மிளகாய் சாகுபடி செய்து வருகிறார். அவர் இது குறித்து கூறுகையில்; மிளகாய்க்கு போதிய விலை கிடைப்பதில்லை பச்சை மிளகாய் நாற்று நட்டு 60 நாட்களுக்கு மேல் ஆகிறது காய் பிடிப்பதற்கு. பச்சை மிளகாய் செடியில் வெள்ளை விழுவதால் இலைகள் சுருங்கி பூக்கள் பாதிப்பை ஏற்பட்டு காய்கள் சரியாக பிடிப்பதில்லை. ஒரு வாரத்திற்கு சுமார் ரூ. 3 ஆயிரம் செலவு செய்து மருந்து அடிக்கப்படுகிறது. 20-25 நாட்களுக்கு ஒரு முறை பறிக்கலாம். வியாபாரிகள் தோட்டத்திற்கே வந்து விற்பனைக்கு எடுத்து செல்கிறார்கள். ஒரு மாதத்திற்கு 1500கிலோ வரை கிடைக்கும். ஆட்கள் கூலி உயர்வு உயர்ந்துள்ளது.

    பராமரிப்புக்கும் அதிக செலவாகிறது. ஒரு கிலோ குறைந்த பட்சமாக 35 முதல் 40வரை விலை விற்றால் மட்டுமே ஓரளவு லாபம் கிடைக்கும்.ஆனால் ஒரு கிலோ 20 முதல் 25வரை மட்டுமே விலை போகிறது. இதனால் தொடர்ந்து மிளகாய் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கவலையுடன் தெரிவித்தார்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்பகுதிகளில் ஆயுத பூஜை பண்டிகை நெருங்கி வருதால், பொரி விலை கிடு கிடுவென உயர்ந்து வருகிறது.
    • தற்போது 50 பக்கா கொண்ட பொரி மூட்டை ஒன்று ரூ.550 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்பகுதிகளில் ஆயுத பூஜை பண்டிகை நெருங்கி வருதால், பொரி விலை கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. பொரி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து பொரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் பரமத்தியைச் சேர்ந்த துரையன் கூறியதாவது:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொரி தயார் செய்யப்பட்டாலும், நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் பகுதியில் தயார் செய்யப்படும் பொரிக்கு, மக்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு அதிகம்.பொரி தயாரிப்பதற்கான கர்நாடக மாநிலத்தில் இருந்து நெல் வாங்கி வந்து பின் அதை ஊறவைத்து அரிசியாக எடுத்து பெரி தயார் செய்து வந்தோம்.

    தற்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வியாபாரிகளே நேரடியாக அரிசியாக கொண்டு வந்து பொரி தயாரிக்கும் எங்களிடம் விற்பனை செய்கின்றனர். அந்த அரிசி மூலம் பொரி தயார் செய்யப்படுகிறது. பாரம்பரிய முறையில் நாங்கள் பொரி தயார் செய்து வருகிறோம்.

    கடந்த ஆண்டு 50 கிலோ கொண்ட பொரி தயாரிக்கும் அரிசி சிப்பம் ஒன்று ரூ.1750 க்கு வாங்கி வந்தோம். ஆனால் தற்போது 50 கிலோ கொண்ட சிப்பம் அரிசி ரூ.2500 க்கு வாங்கி வருகிறோம். இதன் காரணமாக கடந்த ஆண்டு 50 பக்கா கொண்ட பொரி மூட்டை ஒன்று ரூ.420 வரை விற்பனை செய்யப்பட்டது.தற்போது 50 பக்கா கொண்ட பொரி மூட்டை ஒன்று ரூ.550 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு பொரி அனுப்பப்படுகிறது.ஆயுத பூஜை பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பரமத்தி வேலூர் பகுதியில், பொரி தயாரிப்பு பணி விறுவிறுப்படைந்துள்ளது. அதே சமயம், கடந்த ஆண்டைக் காட்டிலும், தற்போது பொரியின் விலையும் கடும் ஏற்றம் கண்டுள்ளது.

    • உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • இந்த உத்தரவை மீறிடும் உர விற்பனை நிலையங்கள் மீது உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் விவசாயிகளுக்கு உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் போதிய அளவு உரங்கள் கையிருப்பில் உள்ளது. பெரம்பலூர் மாவட்ட உர விற்பனையாளர்கள் ஆதார் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விற்பனை செய்ய வேண்டும். இந்த உத்தரவை மீறிடும் உர விற்பனை நிலையங்கள் மீது உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மொத்த உர விற்பனையாளர்கள் வெளி மாவட்டங்களுக்கு உரங்களை மாற்றம் செய்திடவும், விற்பனை செய்திடவும் கூடாது. மேலும் உரங்களை வெளி மாவட்டங்களில் இருந்தும் கொள்முதல் செய்யக்கூடாது. விவசாயிகளின் தேவைக்கு மேல் அதிகமாகவும் மற்றும் இணை உரம் வழங்கக்கூடாது. ஒரே நபருக்கு அதிக அளவு உரம் வழங்கக்கூடாது. குறிப்பிட்ட விவசாயிகளின் பெயரில் அதிகப்படியாக உர விற்பனை கண்டறியப்பட்டால் சில்லரை விற்பனை உரிமம் எந்த முன் அறிவிப்பும் இன்றி ரத்து செய்யப்படும். விவசாயம் மேற்கொள்ளாத நபர்களுக்கு உரம் விற்பனை செய்யக்கூடாது.

    திடீர் ஆய்வின் போது மேற்காணும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உர விற்பனையாளர்களின் விற்பனை உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, அவர்கள் மீது குற்ற வழக்கு தொடரப்படும். விவசாயிகள் தாங்கள் உரம் வாங்க செல்லும் போது ஆதார் அட்டையுடன் சென்று உரம் பெற்றுக்கொண்டு உரிய பட்டியல் கேட்டு பெற வேண்டும். உர மூட்டையின் மேல் அச்சிடப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    ×