search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223226"

    • ஐஸ்வர்யாவின் தங்கை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • தங்கை இறந்ததால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார்.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (35). இவரது மனைவி ஐஸ்வர்யா (வயது23). இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்தநிலையில் ஐஸ்வர்யாவின் தங்கை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தங்கை இறந்ததில் இருந்து ஐஸ்வர்யா மனம் உடைந்த நிலையில் இருந்து வந்தார்.

    மேலும் அவர் இறந்த துக்கம் தாங்காமல் வேதனைப்பட்டார். சம்பவத்தன்று ஐஸ்வர்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது திடீரென விரக்தி அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  

    • கோவையில் டாப்சிலிப் உள்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.
    • விடு முறை நாட்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் டாப்சிலிப், கவியருவி, சின்னகல்லார், பரம்பிகுளம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளன.

    எனவே கோவை மட்டு மின்றி வெளிமாவட்ட ங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனை மலை புலிகள் காப்பக சுற்றுலா தலங்களில் ஒவ்வொரு சீசனுக்கும் ஏற்ப சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். விடு முறை நாட்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். அதிலும் குறிப்பாக வால்பாறை செல்லும் சுற்றுலா பயணி கள் பலரும், போக்கு வரத்து சாலைக்கு வெகுஅருகில் உள்ள கவியருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்து வருகின்ற னர்.

    இங்கு மழை காலத்தி ன்போது, அருவியில் தண்ணீர் வரத்து அதிகளவில் இருக்கும். அப்போது சுற்றுலா பயணிகளின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும்.

    கவியருவியில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. எனவே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் அங்கு போதிய மழை இல்லை. வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    எனவே கவியருவியில் தண்ணீர் வரத்து மிகவும் குறைவாக உள்ளது.

    கடந்த பிப்ரவரி மாதம் இறுதிவரை நீர்வீழ்ச்சியின் ஓரத்தில் நூல் போல வந்து கொண்டு இருந்த தண்ணீர் வரத்து, கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் முற்றிலுமா க நின்றுபோ னது.

    எனவே கவியருவிக்கு செல்லும் வழி அடைக்கப்பட்டது.

    அங்கு வனத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே கவியருவிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். 

    • உக்கடம்-ஆத்துப்பாலம் 2-ம் கட்ட மேம்பால பணிகள் விரைவில் தொடங்கும்
    • உக்கடம்-கரும்புக்கடை வரை 55 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    கோவை, மே.22-

    கோவை உக்கடம்-ஆத்துப்பாலம் சாலை பொள்ளாச்சி செல்வதற்கும், குனியமுத்தூர் வழியாக கேரள மாநிலம் செல்வதற்கும் முக்கிய சாலையாக உள்ளது.

    மேம்பாலம்

    இச்சாலையில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக உக்கடம்-ஆத்துப்பாலம் இடையே 1.9 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது.

    முதல் கட்டமாக, உக்கடம் முதல் கரும்புக்கடை இடையே உள்ள மேம்பால பணிகளுக்கு ரூ.216 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

    உக்கடம்-கரும்புக்கடை வரை 55 தூண்கள் அமைக்கப்பட்டு அதில் ஓடுதளம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. மேலும், உக்கடம் பஸ் நிலையம் அருகே மேம்பாலத்தில் ரவுண்டானா அமைப்பதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

    அதே போல் உக்கடம் பஸ் நிலையம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளும் 90 சதவீதம் நிறைவடைந்து ள்ளன.

    2-ம் கட்ட மேம்பாலம் பணிகள்

    இதனிடையே, ரூ.265.44 கோடியில் உக்கடம்-ஆத்துப்பாலம் 2-ம் கட்ட மேம்பாலம் நீட்டிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மேம்பால பணி நீட்டிப்பின் மூலம் ஆத்துப்பாலத்தினை கடந்து பொள்ளாச்சி சாலை மற்றும் பாலக்காடு சாலையில் இறங்கும் வகையிலும், உக்கடம் சந்திப்பில் திருச்சி சாலைக்கு செல்லும் வகையில் இறங்குதளமும் அமைக்கப்பட உள்ளது.

    இந்த மேம்பால நீட்டிப்பு மூலம் 2.4 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைய உள்ளது. உக்க டத்தில் ரூ.233 கோடியில் 1.46 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல்கட்ட மேம்பாலம் கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளது.

    ஆனால் 2-ம் கட்ட மேம்பால பணிகள் நிலம் கையெகப்படுத்தும் பணி காரணமாக பாதிக்கப்ப ட்டுள்ளது. நொய்யல் ஆற்றில் பில்லர் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆனால் அதனை அடுத்து வரும் பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலையில் நிலம் கையெகப்படுத்தும் பணிகள் கிடப்பில் உள்ளது. இதன் காரணமாக மேம்பால பணிகள் கடந்த சில மாத காலமாக பாதிக்கப்பட்டுள்ளது.

    விரைவில் தொடக்கம்

    இதுகுறித்து அரசுதுறை அதிகாரி ஒருவர் கூறுகையில், உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பால த்தில் பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலையில் 2 இடங்களில் ஏறு தளமும், 2 இடங்களில் இறங்குதளமும் 5.50 மீட்டர் அகலத்துடன் அமைக்கப்படுகிறது. 2-ம் கட்ட மேம்பால பணிகளுக்காக நொய்யல் ஆற்றில் பில்லர் அமைக்கும் பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது. 2-ம் கட்ட மேம்பால பணிகள் தொடர்பாக பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலையில் நிலம் கையெகப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது என்றார்.

    • இளம்பெண் மில்லில் வேலை பார்த்த திருமணமான வாலிபரை காதலித்தார்.
    • காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கோவை,

    பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வர் 24 வயது இளம்பெண்.

    இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மலுமச்ச ம்பட்டியில் உள்ள மில்லில் வேலைக்கு சென்றார். அப்போது இளம்பெ ண்ணுக்கு அதே மில்லில் வேலை பார்த்த திருமண மான வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இது காதலாக மாறியது. இளம்பெண் அடிக்கடி அந்த வாலிபருடன் பேசி பழகி வந்தார்.

    இந்த காதல் விவகாரம் இளம்பெ ண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் திருமணமான வாலிபருடன் பழகுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் வேலைக்கு செல்வதயைும் நிறுத்தி விட்டனர். இள ம்பெண்ணி ன் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக மணமகனை தேடி வந்தனர். சம்பவ த்தன்று இளம்பெண்ணின் வீட்டிற்கு மணமகனின் வீட்டார் பெண் பார்க்க வருவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை அவரது பெற்றோர் செய்து வந்தனர்.

    அப்போது வீட்டில் இருந்த இளம்பெண் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இளம்பெ ண்ணை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    எனவே அவர்கள் மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி வடக்கிப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • நாகரத்தினம் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
    • போலீசார் இந்திரராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    பொள்ளாச்சி அருகே நல்லகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் நாகரத்தினம் (35). இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நாகரத்தினம் காலையில் வேலைக்கு சென்றார். இதனையடுத்து இவரது மனைவி வீட்டைப் பூட்டி விட்டு சாவியை குளியலறையில் வைத்துவிட்டு நுங்கு விற்பனைக்கு சென்றுள்ளார். பின்னர் இருவரும் பேரூர் கோவிலுக்கு செல்வதற்காக வீட்டில் இருந்த நகைகளை சரிபார்த்தனர். அப்போது அதில் இருந்த 8 பவுன் தங்க நகைகள் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது வீட்டில் வைக்கப்பட்டு இருந்த நகைகளை திருடியது கஞ்சபட்டி செட்டியார் காலனியை சேர்ந்த இந்திரராஜ் (33) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 30-க்கும் மேற்பட்ட காடர் குடும்பத்தினர் இங்கு வசித்து வருகிறார்கள்.
    • வீடுகளுக்கு மின்சாரம், டிஜிட்டல் கல்வி ஆகியவை வழங்கப்படு கின்றன.

     பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உலாந்தி வனச்சர கத்தில் பரம்பிக்குளம் செல்லும் வழியில் எருமைபாறை வனக்கிராமம் உள்ளது. ஆனைமலை குன்று காடுகளை பூர்வீகமாக கொண்ட 30-க்கும் மேற்பட்ட காடர் குடும்பத்தினர் இங்கு வசித்து வருகிறார்கள்.

    தேன் சேகரிப்பு, கிழங்கு தோண்டுதல், மிளகு, மூலிகை சேகரிப்பு மற்றும் சிறு வன மகசூல் ஆகிய வற்றை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

    இந்தநிலையில் உலாந்தி வனச்சரகத்தில் உள்ள பழங்குடியின கிராமங்க ளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரி டாப்சிலிப்பில் உள்ள வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தி ன் மாவட்ட செயலாளர் பரமசிவம் கூறியதாவது:-

    ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு அருகே கேரள மாநிலத்தின் பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு ரூ.7 லட்சம் மதிப்பில் கான்கிரீட் வீடுகள், நடைபாதைகள், வீடுகளுக்கு மின்சாரம், டிஜிட்டல் கல்வி ஆகியவை வழங்கப்படு கின்றன. ஆனால் இங்குள்ள பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர அரசு மறுக்கிறது. குறிப்பாக எருமை பாறை பழங்குடியின கிராமத்துக்கு மின் இணைப்பு வழங்க மின் மாற்றி அமைக்கப்பட்டும், இன்று வரை மின் இணைப்பு வழங்கவில்லை.

    கோழிகமுத்தி, கூமாட்டி கிராமங்களுக்கு நிலத்தடி யில் புதை வட கம்பி அமைத்து மின் இணைப்பு வழங்க வேண்டும். மேலும் சாலை வசதிகளை மேம்படு த்தி தர வேண்டும். பழங்குடி யினர் மேம்பாட்டுக்கு என வன த்துறை சோதனைச்சா வடி களில் வாகனங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்ப டுகிறது.

    உலாந்தி வனச்சரகத்தில் பழுதடைந்துள்ள ஆழ்துளை கிணறுகளை சீரமைத்து குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். வனத்துறையில் பணிபுரியும் பழங்குடியின ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு அளித்த இலவச பொருட்களான இலவச டி.வி., மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றுக்கு மலர் வளையம் வைத்து உலாந்தி வனச்சரகர் அலுவ லகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு ள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    பொள்ளாச்சி

    திருப்பூர் தண்ணீர் பந்தலை சேர்ந்த 29 வயது வாலிபர். இவர் அந்த பகுதியில் உள்ள கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    வாலிபர் அனைமலையில் உள்ள தனது தாய் மாமா வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கம். அப்போது வாலிபர் தனது தாய் மாமன் மகளான பிளஸ்-1 படிக்கும் 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.

    நாளுக்கு நாள் வாலிபரின் தொல்லை அதிகமாகவே மாணவி இது குறித்து தனது தாயிடம் கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பிளஸ்-1 மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 29 வயது வாலிபரை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.  

    • குடும்பம், குடும்பமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
    • பக்தர்களும் பஸ், வாகனங்களில் அதிகளவில் பழனி கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    பொள்ளாச்சி,

    திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பால தண்டாயுதபாணி கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் குடும்பம், குடும்பமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

    இதனால் எப்போதுமே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். வருகிற 27-ந் பழனி கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதனை காண தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தர உள்ளனர். தற்போது தைப்பூச திருவிழாவும் வர உள்ளது.

    இதனையொட்டி திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து கோவிலுக்கு பாத யாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இதுதவிர பக்தர்களும் பஸ், வாகனங்களில் அதிகளவில் பழனி கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    அடுத்த மாதம் 5-ந் தேதி பழனியில் தைப்பூச திருவிழா நடக்க உள்ளது. இதனை காண பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மக்கள் கோவிலுக்கு செல்வார்கள்.

    பக்தர்களின் வசதிக்காக பொள்ளாச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பழனிக்கு கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி வருகிற பிப்ரவரி மாதம் 3-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை 4 நாட்கள் தைப்பூச திருவிழாவையொட்டி பழனிக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக சுழற்சி முறையில் கூடுதலாக 25 சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் அந்த நேரத்தில் கூட்டத்தை பொறுத்து அதிக பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
    • பள்ளிக்கு செல்லாமல் தனது காதலனுடன் படம் பார்ப்பதற்காக கோவைக்கு வந்தார்.

    பொள்ளாச்சி

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.சம்பவத்தன்று மாணவி தனது பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் பள்ளிக்கு செல்லாமல் தனது காதலனுடன் படம் பார்ப்பதற்காக கோவைக்கு வந்தார்.

    பள்ளிக்கு சென்ற தங்களது மகள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிக்கு திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பள்ளிக்கு சென்று தேடினர். ஆனால் மாணவி பள்ளிக்கு வரவில்லை என ஆசிரியர்கள் கூறி விட்டனர்.

    இதனால் பயந்த பெற்றோர் இது குறித்து மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மாணவி தனது காதலனுடன் கோவைக்கு படம் பார்க்க சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கோவைக்கு வந்து மாணவியை தேடினர். அப்போது உக்கடம் பஸ் நிலையத்தில் காதலனுடன் சுற்றித்திரிந்த மாணவியை மீட்டனர். பின்னர் பொள்ளாச்சிக்கு அழைத்து சென்ற போலீசார் மாணவியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    மாணவியை படத்துக்கு அைழத்து சென்ற வாலிபரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

    • பொள்ளாச்சியை சேர்ந்த 15 வயது சிறுமி.
    • சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை

    கோவை சூலூரை சேர்ந்தவர் கார்த்திபன். இவரது மகள் சவுந்தர்யா (வயது 20). இவர் ஒண்டிப்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் வீட்டில் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    அதன் பின்னர் அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர்.

    ஆனால் அவர் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து கார்த்திபன் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சவுந்தர்யாவை தேடி வருகின்றனர்.

    பொள்ளாச்சியை சேர்ந்த 15 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.சம்பவத்தன்று அவர் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.

    இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.

    கோவை இருகூரை சேர்ந்தவர் சக்தி வடிவேல். இவரது மகள் சுவாதி (20). இவர் கள்ளிமடை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று சுவாதி செல்போனில் யாரிடமே பேசி கொண்டு இருந்தார்.

    சிறிது நேரத்தில் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வெளியே சென்றார்.

    அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுவாதியை தேடி வருகின்றனர்.

    கோவை பீளமேட்டை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் பவித்ரா (19). கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு சென்றனர் வீடு திரும்பவில்லை. புகாரின் பேரில் பீளமேடு போலீசார் பவித்ராவை தேடி வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் சிறுமி உள்பட 4 பேர் மாயமானதாக புகார் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
    • தண்ணீர் தேக்கும் வகையில் மதகு தயாராக உள்ளது.

    பொள்ளாச்சி,

    பரம்பிக்குளம்-ஆழியாறு எனும் பி.ஏ.பி திட்டத்தில் மேல் நீராறு, கீழ் நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு, திருமூர்த்தி என 9 அணைகள் உள்ளன.

    இதில் பரம்பிக்குளம் அணை திட்டத்தில் உள்ள தொகுப்பு பி.ஏ.பி அணைகளில் அதிக கொள்ளளவு கொண்டது. 17 டி.எம்.சி.க்கும் அதிகமாக கொள்ளளவு கொண்ட இந்த அணை ஒருமுறை நிரம்பி விட்டால் ஓர் ஆண்டுக்கு பாசனத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது.

    பி.ஏ.பி திட்டத்தில் தமிழகத்தில் 4.25 லட்சம் ஏக்கரும், கேரளத்தில் 22 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன. இது தவிர தமிழகத்தில் கோவை, திருப்பூர் ஆகிய 2 மாவட்டங்களுக்கும், கேரளத்தில் பாலக்காடு மாவட்டத்துக்கும் குடிநீர் ஆதாரமாக இந்த திட்டம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த செப்டம்பர் 20-ந் தேதி பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்ததால் அணையிலிருந்து 6 டி.எம்.சி தண்ணீர் வெளியேறியது. மதகு உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தமிழக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரை முருகன் நேரில் ஆய்வு செய்து மதகு உடைப்பை சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதை அடுத்து ரூ.7.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு புதிய மதகு அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது இந்தப் பணி நிறைவடைந்துள்ளது.புதிதாக பொருத்தப்பட்டுள்ள மதகு 42 அடி அகலமும், 27 அடி உயரமும் கொண்டது. இதன் எடை 42 டன் ஆகும்.

    மதகு பொருத்தும் பணி முழுமையாக நிறைவடைந்த நிலையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

    இதில் மதகு மேலும், கீழும் இயக்கப்பட்டு சங்கிலிகளின் தன்மையும் சோதிக்கப்பட்டது. தற்போது தண்ணீர் தேக்குவதற்கு தயாராக மதகு பொருத்தப்பட்டுள்ளது.

    சோதனை ஓட்டத்தி ன்போது சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.கடந்த சில வாரங்களாக 41 அடிக்கும் கீழ் இருந்த அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 44 அடியாக உயர்ந்துள்ளது. இதற்கு மேல் உயரும் நீர்மட்டம் புதிய மதகில் தடுக்கப்பட்டு தேக்கப்படும்.

    இது குறித்து பி.ஏ.பி அதிகாரிகள் கூறும்போது, மதகு பொருத்தும் பணி முழுமையாக நிறைவடைந்துவிட்டது. சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. தற்போது தண்ணீர் தேக்கும் வகையில் மதகு தயாராக உள்ளது என்றனர்.

    • 14 வயது மாணவர் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • மாணவர் அறிவியல் பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து இருந்தார்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நெகமத்தை சேர்ந்தவர் 14 வயது மாணவர். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த 18-ந் தேதி பள்ளியில் 2-வது திருப்புதல் தேர்வு நடந்தது. இந்த தேர்வு முடிவில் மாணவர் அறிவியல் பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து இருந்தார். இதனை தனது பெற்றோர்கள் கண்டிப்பார்கள் என அவர் நினைத்தார். இதனால் பயந்த மாணவர் வீட்டிற்கு திரும்பினார். பின்னர் வீட்டில் உள்ள குளியல் அறைக்கு சென்ற அவர் அங்கு இருந்த எறும்பு பொடியை கரைத்து குடித்தார். வெளியே வந்த அவர் வாந்தி எடுத்து மயங்கினார். இதனை பார்த்து அவரது தந்தை அதிர்ச்சியடைந்தார். பின்னர் உடனடியாக தனது மகனை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு மாணவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×