search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொழுக்கட்டை"

    • தண்ணீரில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய், சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
    • வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.

    நாளை விநாயகர் சதுர்த்தி. விநாயகருக்கு மிகவும் பிடித்தமான பூரண கொழுக்கட்டையை சுலபமாக பக்குவமாக செய்யும் முறையை விரிவாக பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பச்சரிசி மாவு - 1 கப்

    தேங்காய் -1 மூடி

    வெல்லம் - 150 கிராம்

    ஏலக்காய் - 2

    உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

    செய்முறை:

    பச்சரிசியை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்து பின் மிக்ஸியில் நைஸாக மாவாக அரைக்கவும். பின்னர் அதனை அடிகனமான வாணலியில் ஈரம் போக வறுத்து ஆற விடவும்.

    மாவு 1 கப் என்றால் 2 மடங்கு அளவு தண்ணீரில் ஊற்றி அதில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய், சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    தண்ணீர் நன்கு கொதித்தவுடன் மாவில் ஊற்றி கிளறவும். ஆறிய பின்னர் கையில் பிசைந்து உருட்டிக்கொள்ளவும். எல்லா வகை பூரண கொழுக்கட்டைகளுக்கும் மாவு தயாரிக்கும் விதம் இதுதான்.

    வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் நெய் ஊற்றி, அதில் துருவிய தேங்காயை சேர்த்து லேசாக கிளற வேண்டும். (கலர் மாறக்கூடாது).

    பின்னர் வடிகட்டிய வெல்ல கரைசலை சேர்க்க வேண்டும். லேசாக கிளறி விடவும். சிறிது நேரத்தில் தேங்காய், வெல்லம் கெட்டியானவுடன் ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கவும்.

    மாவை சிறு சிறு உருண்டையாக உருட்டி கொள்ள வேண்டும். வாழையிலையில் உருண்டையை வைத்து தட்டி நடுவில் பூரணம் வைத்து கிண்ணம் போல் குவித்து மூட வேண்டும்.

    இட்லி தட்டில் வைத்து ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்க வேண்டும். சூப்பரான சுவையான தேங்காய் பூரண கொழுக்கட்டை தயார்.

    • வாணலியில் வெல்லத்தை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
    • நெய், தேங்காய் துருவல், ஏலக்காய்ப்பொடி சேர்த்து கிளற வேண்டும்.

    தேவையான பொருட்கள்:

    பலாச்சுளை பொடியாக நறுக்கியது - 1/2 கப்

    அவல் - 1 கப்

    வெல்லம் - 1 கப்

    அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி

    தண்ணீர் - 1 1/2 கப்

    தேங்காய் துருவல் - 1/4 கப்

    ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி

    நெய் - 1 மேசைக்கரண்டி

    செய்முறை:

    * வாணலியில் நெய் சேர்த்து அவலை வறுத்து மிக்சியில் பொடித்துக்கொள்ள வேண்டும்.

    * பலாப்பழத்தை துண்டுகளாக்கி கொள்ளவும்.

    * வாணலியில் வெல்லத்தை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டிக்கொள்ளவும். வடிகட்டிய வெல்ல தண்ணீரை கொதிக்க வைத்து அதனுடன் பொடித்த அவல், அரிசி மாவை சேர்த்து கிளற வேண்டும்.

    * அதனுடன் நெய், தேங்காய் துருவல், ஏலக்காய்ப்பொடி சேர்த்து கிளற வேண்டும்.

    * பின்னர் கொழுக்கட்டையாக பிடித்து ஆவியில் வேக வைத்தால் பலாப்பழ கொழுக்கட்டை ரெடி. இந்த மாவை வாழை இலையில் தட்டியும் ஆவியில் வேக வைக்கலாம்.

    • திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நடைபெறும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
    • ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசியில் ஆடி கோபத்ம விரதம் கடைபிடிக்கப்படுவது,

    ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம்.

    ஆடி செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை படைத்து

    வழிபட்டால், பக்தர்கள் நினைத்த காரியம் நடைபெறும் என்பது ஐதீகம்.

    அம்மனுக்கு பிடித்தமான கூழ், கொழுக்கட்டையை படைத்து வழிபட்டால்

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும்.

    மேலும், திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நடைபெறும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

    துளசியை வழிபடுங்கள்...

    ஆடி மாதம் துளசி வழிபாடு அரிதான பல பலன்களைத் தரும்.

    ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் (துவாதசி வரையில்) துனமும் தவறாமல் துளசியை வழிபட்டு வந்தால்

    குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசியில் ஆடி கோபத்ம விரதம் கடைபிடிக்கப்படுவது,

    இந்த தினத்தில் பெண்கள் பசுவை வழிபடுவதால், லட்சுமி கடாட்சம் கிட்டும்.

    அதேபோல், ஆடி வெள்ளிக் கிழமைகளில் புற்றுக்கு பால் தெளித்து, பூஜை செய்தால்,

    பெண்களின் சாதகத்தில் காணப்படும் நாகதோஷம் நிவர்த்தியாகும்.

    • பூர நட்சத்திர நாளில் விநாயகருக்கு அன்ன அபிஷேகம் செய்ய இல்லத்தில் வளம் கொழிக்கும்.
    • திருவலஞ்சுழி வெள்ளை விநாயகருக்குப் பச்சைக் கற்பூரம் மட்டுமே சார்த்தப்பெற்று வருகிறது.

    விநாயகருக்கு அபிஷேகப் பொருள்கள் எல்லாம் உகந்தன.

    ஆயினும் சில குறிப்பிட்ட தலங்களில் ஒரு சில அபிஷேகப் பொருள்கள் மட்டும் குறிப்பாக சிறப்பித்துக் செய்யப்பெறுகின்றன.

    அவ்வகையில் திருவலஞ்சுழி வெள்ளை விநாயகருக்குப் பச்சைக் கற்பூரம் மட்டுமே சார்த்தப்பெற்று வருகின்றது.

    பாலபிஷேகம்:

    வேலூருக்கு அருகில் உள்ள சேண்பாக்கம் என்னும் ஊரில் பால விநாயகருக்குத் தாமரைத் தண்டு நூலால் நெய் விளக்கேற்றி பாலபிஷேகம் செய்தால் புத்திரப் பேறு கிடைக்கும்.

    சந்தன அபிஷேகம்:

    செஞ்சேரிமலை என வழங்கப்பெறும் தென்சேரிகிரி மலையின் அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள இவ்விநாயகருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்ய குழந்தை பாக்கியம் ஏற்படும்.

    பரணி, ரோகிணி புனர்பூசம், அஸ்தம், மூலம் ஆகிய நட்சத்திர நாட்களில் இந்த விநாயகரை சந்தன அபிஷேகம் செய்து வணங்குவது சிறப்பைத் தரும்.

    தேனபிஷேகம்:

    திருப்புறம்பயத் தலத்தில் சிப்பி கிளிஞ்சல் முதலான கடல்படு பொருள்களால் ஆக்கப்பெற்ற விநாயகர் தேன் அபிஷேகப் பிரியர்.

    இவருக்கு எவ்வளவு தேன் அபிஷேகம் செய்யப்பட்டாலும் கீழே வழிந்தோடாமல் அனைத்தும் விநாயகர் வடிவுக்குள் போகக் காணலாம்.

    திருநீற்று அபிஷேகம்:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் முன்புறம் உள்ள பொற்றாமரைக் குளத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள விநாயகர் திருநீற்று விநாயகர் என அழைக்கப்படுகின்றார்.

    அங்கு வரும் பக்தர்கள் அனைவரும் கைகளாலேயே அவருக்கு விபூதி அபிஷேகம் செய்து வணங்குகின்றனர்.

    மகம், உத்திரம், விசாகம், கேட்டை, பூராடம் ஆகிய நட்சத்திர நாட்களில் இந்த விநாயகருக்குத் திருநீறு அபிஷேகம் செய்ய நினைத்த காரியம் பலிதமாகும்.

    கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம்:

    மிருகசீரிஷம், பூரம், அனுஷம் ஆகிய நட்சத்திர நாட்களில் விநாயகருக்குக் கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம் செய்தால் வெற்றி உண்டாகும்.

    அன்ன அபிஷேகம்:

    பூர நட்சத்திர நாளில் விநாயகருக்கு அன்ன அபிஷேகம் செய்ய இல்லத்தில் வளம் கொழிக்கும்.

    சொர்ணாபிஷேகம்:

    திருவோணம் நட்சத்திர தினத்தன்று விநாயகருக்குச் சொர்ணாபிஷேகம் செய்யச் செல்வம் கொழிக்கும்.

    • நீர் - சரிந்த அவரின் தொந்தி, நீரைக் குறிக்கும்.
    • காற்று - இரண்டு புருவங்களும் சேர்ந்த அரைவட்டம், காற்றைக் குறிக்கும்

    பஞ்சபூதங்களின் மொத்த உருவம்தான் விநாயகப் பெருமான்.

    அவர் உடலின் ஒவ்வொரு பாகமும் ஒரு பெரும் சக்தியை உணர்த்துகிறது.

    நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகியன ஐம்பெரும் சக்திகள்.

    இந்த பஞ்சபூதங்களை நம் முன்னோர்கள் வணங்குவதற்குக் காரணம் அவை மனிதர்களால் அடக்கமுடியாத மாபெரும் சக்திகள் ஆகும்.

    அத்தகைய ஐம்பெரும் சக்திகளையும் உள்ளடக்கிய விநாயகர் பற்றிய விவரம் வருமாறு:

    நிலம் (பூமி) - விநாயகரின் மடித்து வைத்துள்ள ஒரு பாதம், பூமியைக் குறிப்பதாகும்

    நீர் - சரிந்த அவரின் தொந்தி, நீரைக் குறிக்கும்.

    நெருப்பு - அவரது மார்பு, நெருப்பைக் குறிக்கும்

    காற்று - இரண்டு புருவங்களும் சேர்ந்த அரைவட்டம், காற்றைக் குறிக்கும்

    ஆகாயம் - இருபுருவங்களின் அரைவட்டம் நடுவில் வளைந்திருக்கும் கோடு ஆகாயத்தைக் குறிக்கும்.

    • அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளை ஆகிவிட்டது.
    • அன்றிலிருந்து அத்தினம் விநாயகர் சதுர்த்தி என்ற புனித தினமாக ஆகி விட்டது.

    விநாயகர் என்றால் "மேலான தலைவர்" என அர்த்தப்படும்.

    "விக்னேஸ்வரர்" என்றால் "இடையூறுகளை நீக்குபவர்" என்றும், "ஐங்கரன்" என்றால் ஐந்து கரங்களை உடையவரெனவும் அர்த்தப்படும்.

    "கணபதி என்பது கணங்களுக்கு அதிபதி என்று பொருள்படும்.

    இவ்வாறே அவரது சகல நாமங்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் அந்தந்தப் பெயர்களிலேயே பொதிந்துள்ளன.

    உண்மையில் விநாயகர் அவதரித்த திதியையே (அவர் அவதரித்த தினம்) விநாயக சதுர்த்தி எனக் கொள்ளப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன.

    ஒருமுறை சிவபிரான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி நீராடச்சென்றார்.

    அப்போது தனக்கு காவல் காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் உருவாக்கி அனுக்கிரகத்தால் அதற்கு உயிரூட்டினார்.

    அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளை ஆகிவிட்டது.

    எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாதெனப் பிள்ளையாருக்கு அறிவுறுத்தி விட்டு பார்வதி தேவியார் நீராடச் சென்று விட்டார்.

    அச்சமயத்தில் வந்த சிவபிரானைப் பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

    அதனால் கோபம் கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை வெட்டி விட்டு உள்ளே சென்று விட்டார்.

    நீராடி முடிந்ததும் தேவியார் வெளியே வந்து பிள்ளையார், சிரச்சேதமுற்றுக் கிடந்த கோலத்தைக் கண்டு சீற்றங்கொண்டார்.

    தான் உருவாக்கிய பிள்ளையாரைச் சிவனே சிதைத்து விட்டதை அறிந்த அவர் ஆவேசம் கொண்டவராக காளியாக உருக்கொண்டு வெளியேறி மூவுலகிலும் தமது கண்ணில் பட்ட சகலவற்றையும் அழிக்கத் தொடங்கினார்.

    காளியின் ஆவேச நர்த்தனத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபிரானிடம் சென்று முறையிட்டனர்.

    காளியைச் சாந்தப்படுத்துவதற்கு சிவன் எண்ணி, தனது கணங்களை அழைத்து வட திசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் வெட்டி வருமாறு பணித்தார்.

    அதன்படி கணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்ககளுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது.

    அவர்கள் அதன் தலையைக் கொய்து சென்று இறைவனிடம் கொடுக்கவும், அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பார்வதியின் பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிரூட்டி விட்டார்.

    இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக் கொண்டார்.

    சிவபிரான் அந்தப் பிள்ளையாருக்கு "கணேசன்" என நாமம் சூட்டித் தமது கணங்களுக்கு கணபதியாகவும், நியமித்தார் என "நாரதபுராணத்தில்" தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுவே பிள்ளையாரின் அவதார சரிதம். இந்த நிகழ்ச்சி நடந்தது. சுக்கில பட்ஷ சதுர்த்தியன்றாகும்.

    அன்றிலிருந்து அத்தினம் விநாயகர் சதுர்த்தி என்ற புனித தினமாக ஆகி விட்டது.

    • ஆலய பூசாரி பூஜை முடிப்பார். அப்போது அவருக்கு அருள் வரும்.
    • இரவில் வெந்த கொழுக்கட்டையை பூஜித்து படையல் போடுவார்கள்.

    திருநெல்வேலி மாவட்ட தென்கோடியில் தெற்கு கருங்குளம் என்ற கிராமத்தில் பூ அய்யப்பன் ஆலயம் அமைந்துள்ளது.

    இங்கு பங்குனி உத்திரத்தன்று மெகா கொழுக்கட்டை வழிபாடு செய்கின்றனர்.

    இது முழுக்க முழுக்க ஆண்களே செய்யும் வேலை.

    விரதம் இருந்து, எச்சில் படாமல் இருக்க வாயில் துணி கட்டிக் கொண்டு செய்வர்.

    ஒரு கோட்டை நெல்லில் இருந்து பெறப்படும் பச்சரிசி 42 படி இருக்கும்.

    இது கிலோ கணக்கில் பார்த்தால் 63 கிலோ வரும் இந்தப் பச்சரிசியை ஆண்களே இடித்து மாவாக்குவார்கள்.

    மாவில் நீர் விட்டுப் பிசைந்து உருட்டித் தட்டுவார்கள்.

    இதை காட்டுக் கொடி நிரவி, அதன் மீது இலைகளை பரப்பி உருட்டித் தட்டிய அரிசி மாவை அடுக்குவார்கள்.

    அதன் மீது சிறுபயறு, தேங்காய்த் துருவல் கலந்து பூரணத்தையும் வைப்பர்.

    இப்படி மாவு, பூரணம் என மாறி மாறி அடுக்கியபின் காட்டு இலையை பரப்பி மூடி,

    காட்டுக்கொடியால் உருண்டை வடிவில் கட்டிவிடுவார்கள்.

    மெகா கொழுக்கட்டை உருவாகி விட்டது.

    இதற்கு முன்பே கட்டைகள் எடுத்து தணல் உருவாக்கி இருப்பார்கள்.

    ஆலய பூசாரி பூஜை முடிப்பார். அப்போது அவருக்கு அருள் வரும்.

    சாமி ஆடியப்படியே ஐந்தாறு பேர் சேர்ந்து தூக்கும் கொழுக்கட்டையை இவர் ஒருவரே அனாயசமாகத் தூக்கி தணல் நடுவே போடுவார்.

    யாராலும் நெருங்க முடியாத தணலில் அங்கிருந்து கொழுக்கட்டையை உருட்டிப் புரட்டி வேக வைத்து விடுவார்.

    இரவில் வெந்த கொழுக்கட்டையை பூஜித்து படையல் போடுவார்கள்.

    ஆயிரக்கணக்கானோர் இவ்வழிபாட்டை தரிசிப்பார்கள்.

    பின் மறுநாள் கொழுக்கடையை பிரித்து ஊரில் உள்ள எல்லா வீடுகளுக்கும் பிரசாதமாக கொடுப்பார்கள்.

    • பெரிய பாத்திரத்தில் வைத்து தொடர்ந்து 24 மணி நேரம் ஆவியில் வேகவைத்தனர்.
    • கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    திருச்சி:

    திருச்சி மலைக்கோ ட்டையில் தாயுமான சுவாமி கோவில் உச்சியில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இதில் மேலே அமைந்துள்ளது உச்சிப்பிள்ளையார் கோவில் என்றும், கீழே அமைந்துள்ளது மாணிக்க விநாயகர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் அமாவாசை முடிந்து 4-வது நாள் வரும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி விழா இன்று தொடங்கி 14 நாட்கள் நடக்கிறது.

    முதல் நாளான இன்று 150 கிலோ எடை கொண்ட மெகா கொழுக்கட்டையைக் கொண்டு மாணிக்க விநாயகருக்கும், உச்சிப்பிள்ளையாருக்கும் தலா 75 கிலோ படையலிட்டு நெய்வேத்தியம் செய்யப்பட்டது. பின்னர் அந்த கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    இதற்காக நேற்று காலையில் இருந்தே கோவில் மடப்பள்ளி பணியாளர்கள் ஈடுபட்டனர். பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக் காய், எள், நெய், தேங்காய் ஆகியவற்றை ஒன்றாக கலந்தனர். பின்னர் இரு பங்காக பிரித்து துணியில் கட்டி பெரிய பாத்திரத்தில் வைத்து தொடர்ந்து 24 மணி நேரம் ஆவியில் வேகவைத்தனர்.

    இன்று காலை 9.30 மணிக்கு இந்த மெகா கொழுக்கட்டை தொட்டில் போன்ற அமைப்பில் எடுத்து செல்லப்பட்டு உச்சிப்பிள்ளையாருக்கு படைக்கப்பட்டது.

    அதேபோல் காலை 10 மணிக்கு அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு மெகா கொழுக்கட்டை எடுத்து செல்லப்பட்டு படையல் இடப்பட்டது.

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இன்று அதிகாலை முதலே மலைக் கோட்டைக்கு பக்தர்கள் வரத் தொடங்கினர். தொடர்ந்து விநாயகருக்கு பல்வேறு மங்கல பொருட்களால் அபிஷேகங்கள் செய்து தீபாராதனைகள் நடந்தன.

    பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவை முன்னிட்டு இன்று முதல் தொடர்ந்து 14 நாட்கள் வரை பால கணபதி, நாகாபரண கணபதி, லட்சுமி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜ அலங்காரம், மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாருடர், சித்திபுத்தி கணபதி, நடன கணபதி ஆகிய அலங்காரங்களில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 

    • ராஜவிநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
    • விநாயகருக்கு கொழுக்கட்டை வைத்து படைக்கப்பட்டது.

    திருவாரூர்

    திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை தெற்கு தெருவில் உள்ள ராஜவிநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி விநாயகருக்கு கொழுக்கட்டை வைத்து படைக்கப்பட்டது.

    இதேபோல் ஞான சித்தி விநயாகர் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. நீடாமங்கலம் மேலராஜவீதி சித்தி விநாயகர், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் கலங்காமற்காத்த விநாயகர், ஆக்ஞாகணபதி,

    நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர், சந்தானராமர் கோவில் தும்பிக்கையாழ்வார், காசிவிசுவநாதர் கோவில் விநாயகர், நீடாமங்கலம் லெட்சுமி நாராயண பெருமாள் கோவில் விநாயகர், பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவில் விநாயகர் உள்ளிட்ட சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

    • இந்த ஹோமத்தில் 108 மூலிகைகள், வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
    • விக்கினங்கள் விலகவும், நன்மைகள் ஓங்கவும் இவை செய்யப்படுகின்றன.

    விநாயகர் சதுர்த்தி பிறந்த கதை

    முன்னொரு காலத்தில் சிவபெருமானின் பக்தனான கஜமுகாசுரன் என்பவன் வரம் பல பெற்றமையால் இறுமாப்புக் கொண்டு தேவர்களைப் பல வழிகளிலும் துன்புறுத்தி வந்தான்.

    அவன் தன்னை மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ யாரும் கொல்ல முடியாதபடி வரம் பெற்று இருந்ததால் தேவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினர்.

    எனவே அனைத்து தேவர்களும் ஒன்றாக திரண்டு சிவபெருமானிடம் சரண் அடைந்தனர். இதனால் அவர் ஆவணி மாத சதுர்த்தி அன்று விநாயகரை யானை முகத்தோடும், மனித உடலோடும் படைத்து கஜமுகாசுரனை அழிக்க அனுப்பி வைத்தார்.

    விநாயகருக்கும் கஜமுகாசுரனுக்கும் கடும்போர் நடந்தது. முடிவில் விநாயகர் பெருமான் தனது கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவனை அழிக்க ஏவினார்.

    அசுரனோ, மூஞ்சுறாய் வந்து எதிர்த்து நின்றான். விநாயகப் பெருமான் அவனை சம்ஹாரம் செய்தார்.

    பின்னர் அவர் மூஞ்சுறைத் தனது வாகனமாக்கிக் கொண்டு அருளினார். இதன்மூலம் அனைவரும் சுபிட்சம் பெற்றனர்.

    எனவே அன்று முதல் ஆவணி மாத சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால் தீராதவினைகள் தீரும். சகல பபாக்கியங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்

    விநாயகர் சதுர்த்தி விரதம்

    விநாயகர் சதுர்த்தி விரதம் ஆவணி மாதம் சதுர்த்தியில் தொடங்கி, புரட்டாசி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தி வரை மேற்கொள்ளப்படுகிறது. ஆவணி மாதம் அமாவாசைக்கு அடுத்த நான்காவது நாள் விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது.

    அன்று விடியற்காலையில் எழுந்து வீட்டை நன்றாக பெருக்கி, மெழுகி சுத்தம் செய்துவிட்டு வீட்டு வாசலில் மாவிலை, தோரணங்களை கட்ட வேண்டும்.

    வீட்டின் வாசலுக்கு இருபுறமும் வாழைமரக் கன்றையும் கட்டி வைக்கலாம்.

    பூசை அறையைக் கழுவி, மொழுகி, கோலம்போட்டு, அதன் மையப்பகுதியில் ஒரு பலகை வைத்து மேலும் ஒரு கோலம் போட்டு தலைவாழை இலை விரித்து பச்சரிசையைப் பரப்பி வைக்க வேண்டும்.

    அதில் வலது கை மோதிர விரலால் பிள்ளையார் சுழி போட்டு "ஓம்" என்று எழுதி மண்பிள்ளையாரை வைக்க வேண்டும்.

    அதற்கு அறுகம்புல், எருக்கம்பூ, விபூதி, சந்தனம் மலர்களால் அலங்கரிக்க வேண்டும். அதன்பிறகு விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம், தேங்காய், வெல்லம் கலந்த மாவு உருண்டை, விளாம்பழம், அப்பம், சுண்டல், அவல், பொரி, கடலை, எள்ளுருண்டை போன்ற நிவேதனப் பொருள்களை வைத்து தூபமிட்டு சாம்பிராணி புகை காட்டி சூடம் ஏற்றி வழிபட வேண்டும்.

    அப்பொழுது விநாயகருக்குரிய அகவல், கவசம், சகஸ்ரநாமம், காரிய சித்திமாலை, அவ்வையார் அருளிய விநாயகர் அகவல் ஆகியவற்றை பாடுவது நற்பலன்களை தரும்.

    ஆலயங்களில் விநாயகர் சதுர்த்தி பூஜை

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு எல்லா விநாயகர் கோவிலிலும் விசேஷ பூஜைகள் நடைபெறும். விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் கணபதி ஹோமம் நடைபெறும்.

    விக்கினங்கள் விலகவும், நன்மைகள் ஓங்கவும் இவைகள் செய்யப்படுகின்றன. இந்த ஹோமத்தில் 108 மூலிகைகள், வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    கணபதி ஹோமத்திற்குரிய திரவியங்கள் எட்டு. அவை மோதகம், அவல், நெய், பொரி, சத்துமா, கரும்பு, கொப்பரைத் தேங்காய், சுத்தமான எள், வாழைப்பழம், இதை தவிர அறுகம்புல், விளாம்பழம், நாவல்பழம், மாதுளம்பழம் இவைகளையும் ஹோம நிவேதனமாக செய்ய வேண்டும்.

    முதலில் தைலக்காப்பு, பிறகு மாகாப்பு (அரிசி மாவு) பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், பழ வகைகள், தயிர், கரும்புச்சாறு, விபூதி, சந்தனம், பன்னீர் அபிஷேகங்கள் செய்யப்படும். மாலையில் விநாயகருக்கு சந்தனக்காப்பு, விபூதிக்காப்பு, பூவலங்காரம் நடைபெறும். துளசி இலைகள் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் பூஜைக்கு உகந்தது.

    • வன்னி இலைக்கு ஸ்ரீசுமிபத்ரம் என்றும் பெபயர்.
    • உறவினர்களுடன் நிவேதனம் செய்த பிரசாதங்களை சாப்பிட வேண்டும்.

    நாமம் சொல்லி வழிபடுங்கள்!

    ஆவணி மாதம் சுக்ல பட்சம் சதுர்த்தி திதி தினமே விநாயக சதுர்த்தி தினமாகும்.

    அன்று உங்கள் வீட்டின் வடக்குப் பகுதியில் ஒரு மண்டபம் செய்து நெல் அல்லது பச்சரிசி பரப்பி அதில் அஷ்ட (எட்டு) தளத்துடன் கூடிய தாமரையை வரைந்து, அதன் மேல் பிள்ளையாரை வைத்து அருகம்புல், சந்தனம் ஆகியவற்றால் பக்தியுடன் பூஜை செய்ய வேண்டும்.

    குறிப்பாக இருபத்தோரு அருகம்புல்லை நல்ல வாசனையுள்ள சந்தனத்தில் நனைத்துக் கொண்டு கீழ்க்கண்ட பத்து நாமங்களை சொல்ல வேண்டும்.

    1. கணாதிபாய நம, 2. உமாபுத்ரா நம, 3. அக நாசநாய நம, 4.விநாயகாய நம, 5. ஈசபுத்ராய நம, 6. ஸர்வஸித்திதாய நம, 7. இபவக்த்ராய நம, 8. ஏகதந்தாய நம, 9. மூஷிக வாஹனாய நம, 10. குமார குரவே நம

    என்று பத்து நாமங்கள் சொல்லி இரண்டு அருகம்புல்லாலும் கடைசியில் மேற்கூறிய பத்து நாமங்களையும் ஒரு முறை சொல்லி ஒரு அரும்கம்புல்லாலும் கணபதிக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

    தூப தீபம் காண்பித்து நெய்யில் செய்த கொழக்கட்டை (21), மாவுப் பலகாரங்கள், தேங்காய் (21), வாழைப்பழம் (21), நாவல் பழம் (21), விளாம்பழம் (21), கொய்யா பழம் (21), கரும்புத்துண்டு (21), வெள்ளரிக்காய் (21), அப்பம் (21) இட்லி (21) முதலானவற்றை நிவேதனம் செய்தல் வேண்டும்.

    பூஜையை முடித்த பிறகு திருமணம் ஆகாத 21 வயது பையனுக்கு தட்சணையுடன் மோதகம் தந்து பெரியோர்களிடம் ஆசி பெற செய்ய வேண்டும். உறவினர்களுடன் நிவேதனம் செய்த பிரசாதங்களை சாப்பிட வேண்டும்.

    மறுநாள் காலை புனர்பூஜை செய்து விநாயகரை தண்ணீரில் கரைக்க வேண்டும். இவ்வாறு சித்தி விநாயக விரதத்தை செய்பவர்களுக்கு எந்த ஒரு காரியத்திலும் இடையூறு ஏற்படாது.

    வளம் தரும் வன்னி இலை

    வன்னியின் இலையைக் கொண்டு பக்தியுடன் ஈஸ்வரார்ப்பணம் செய்யும்போது எப்படி தீயில் சம்பந்தப்பட்ட பொருள் சுத்தம் அடைகிறதோ, அதுபோல மனிதனும் மனமும் புத்தியும் சுத்தம் அடைந்து தெய்வீக ஞானம் அடைந்தவனாகிறான்.

    இதன் காரணமாகவேதான் வன்னி பத்ரத்தை தனக்கு உகந்த பத்ரமாக வைத்துக் கொண்டு வன்னி மரத்தடியிலும் கணேசர் எழுந்தருள்கிறார்.

    வன்னி இலைக்கு ஸ்ரீசுமிபத்ரம் என்றும் பெபயர். விநாயகர் பூசையில் இருப்தொரு (நாமாவளியால்) அருகம்புல்லால் அர்ச்சிக்கப்படுவதுபோல் இருப்பதொரு பத்ர(இலை)ங்களால் அர்ச்சிக்கப்பட வேண்டும். அதற்கு "ஏக விம்சதி பாத்திர பூசை" என பெயர்.

    அதில் மாசிப்பச்சை, கண்டங்கத்திரி, வில்வதளம், அருகம்புல், ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, அரளி, விஷ்ணு கிராந்தி, நெல்லி, மரிக்கொழுந்து, நொச்சி, ஜாதி எவன்னெருக்கு, கரிசிலாங்கண்ணி, வெண்மருதை, கிளுவை, நாகை என்ற பத்ரங்கள் கூறப்படுகிறது.

    வன்னி இலையைக் கொண்டு வழிபட்டு சாம்பன் என்ற மன்னனும் அவன் மந்திரியும் "பேறு" பெற்றதாக வரலாறுகள் கூறுகின்றன.

    நாமும் வன்னி இலைகளால் விநாயகப் பெருமானை பூஜித்து வணங்கி வளம் பெறுவோம்.

    • மாதுளை இலை - நல்ல புகழை அடையலாம்
    • மாயையை அகற்றினால் நல்ல பண்புகள் வெளியில் வரும் என்பதை உணர்த்தவே கொழுக்கட்டை படைக்கப்படுகிறது.

    கணபதி அர்ச்சனை

    விநாயக புராணத்தில் கணபதிக்கு என்னென்ன இலைகளை கொண்டு அர்ச்சனை செய்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் என்னவென்பதை விரிவாகவே கூறியுள்ளார்கள்.

    மருவு இலை- துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும்

    எருக்க இலை- குழந்தைப் பேறு

    அரச இலை- எதிரிகள் அழிவார்கள்

    அகத்தி இலை- துயரங்கள் நீங்கும்

    அரளி இலை- அனைவரும் அன்போடு இருப்பார்கள்.

    வில்வ இலை- இன்பங்கள் பெருகும்

    வெள்ளெருக்கு- சகலமும் கிடைக்கும்

    மாதுளை இலை- நல்ல புகழை அடையலாம்

    கண்டங்கத்திரி இலை- லட்சுமி கடாட்சம்

    கொழுக்கட்டை நைவேத்தியம்

    தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து செய்யப்படும் மோதகம் என்றழைக்கப்படும் கொழுக்கட்டை கணபதிக்கு மிகவும் பிடித்தமான நைவேத்தியம் ஆகும்.

    கொழுக்கட்டையின் தத்துவம் என்ன வென்று அறிவீர்களா?

    மேலே இருக்கும் மாவுப் பொருள் அண்டம், உள்ளே இருக்கும் பூரணம் பிரம்மம், நமக்குள் இருக்கின்ற நல்ல பண்புகளான பூரணத்தை மாவான மாயை மறைத்துக் கொண்டுள்ளது.

    மாயையை அகற்றினால் நல்ல பண்புகள் வெளியில் வரும் என்பதை உணர்த்தவே கொழுக்கட்டை படைக்கப்படுகிறது.

    முதன் முதலாக விநாயகருக்கு கொழுக்கட்டையைப் படைத்து வழிபட்டவர் யார் என்று தெரியுமா?

    வசிஷ்டரின் மனைவியான அருந்ததி.

    பிள்ளையார் செய்வோம்

    சாணம், புற்றுமண், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளையார் உருவம் செய்து வழிபட்டால் அனைத்துவிதமான நலன்களும் பெற்று மோட்சம் அடைவர் என்று விநாயக புராணம் கூறுகின்றது.

    விநாயகருக்கு உகந்தவை

    தும்மைப்பூ, செம்பருத்தி மலர், சங்கு புஷ்பம், எருக்கம்பூ, மாவிலை, அருகம்புல், வில்வ இலை ஆகியவை விநாயகரை அர்ச்சனை செய்யவும் மாலையாக அணிவிக்கவும் மிகவும் உகந்தவையாக கருதப்படுகிறது.

    விநாயகரின் அஷ்ட அவதாரங்கள்

    1.வக்ரதுண்டர்

    2. மஹோத்ரதர்

    3. கஜானனர்

    4.லம்போதரர்

    5. விகடர்

    6. விக்னராஜர்

    7. தூம்ரவர்ணர்

    8. சூர்ப்பகர்ணர்

    என்று எட்டு விதமான அவதாரங்களை விநாயகப் பெருமான் எடுத்ததாக விநாயக புராணம் கூறுகின்றது. அவர் எதற்காக எட்டுவிதமான அவதாரங்களை எடுத்தார் என்றால், மனிதர்களிடையே காணப்படும் தீய குணங்கள் எட்டு (காமம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம், மமதை, மோகம், அகந்தை)

    அந்த எட்டு குணங்களையும் நீக்கி நமக்கு ஞானமளிப்பதற்காகவே அவர் எட்டுவிதமான அவதாரங்களை எடுத்தார்.

    அந்த எட்டுவிதமான அவதாரங்களையும் நினைவிற்குக் கொண்டு வந்து வணங்க விநாயக மந்திரம் துணைபுரிகிறது.

    இந்த மந்திரத்தை தினசரி பாராயணம் செய்பவர்கள் அனைத்து விதமான சந்தோஷங்களையும் அடைவார்கள்.

    ×