என் மலர்
நீங்கள் தேடியது "உணவு பாதுகாப்புத்துறை"
- உணவை சாப்பிட்ட குழந்தைக்கு திடீரென வாந்தி ஏற்பட்டது.
- பல்வேறு உணவுப் பொருட்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் பர்மான். இவர் டெலிவரி ஆப் மூலம் புதுச்சேரி-கடலூர் சாலையில் உள்ள தனியார் மாலில் இயங்கி வரும் சர்வதேச உணவகத்தில் 4 கோழி இறைச்சி பர்கர் மற்றும் கோழி நகட்ஸ் ஆர்டர் செய்தார். அந்த உணவை சாப்பிட்ட அவரது குழந்தைக்கு திடீரென வாந்தி ஏற்பட்டது.
பின்னர் மீதமுள்ள பர்கரை எடுத்து பார்த்தபோது, அதில், வேகாத கோழி இறைச்சி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து, பர்மான், உணவகத்திற்கு சென்று அங்குள்ள ஊழியர்களிடம் வேகாத கோழி இறைச்சி பர்கரை காண்பித்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த உணவகத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, உணவகத்தின் நிர்வாக அதிகாரியிடம் இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியதுடன், அங்கிருந்த பர்கர் மற்றும் பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சி உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.
அதோடு 2 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவில்லை எனில் உணவகத்திற்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
- நிகழ்ச்சியில் 450-க்கும் மேற்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் பங்கேற்றனர்.
- அழுக்கடைந்த கீறல் விழுந்த குடிநீர் கேன்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டாம்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான உணர்திறன் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்ற இந்த மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் 450-க்கும் மேற்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் பங்கேற்றனர். அப்போது, அவர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வழங்கப்பட்டன.
குறிப்பாக, ஒரு குடிநீர் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. அழுக்கடைந்த கீறல் விழுந்த குடிநீர் கேன்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதுமட்டுமன்றி நேரடியாக சூரிய ஒளியில் வைக்கப்பட்டு இருக்கும் குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் குடிநீரின் தரத்தை உறுதி செய்வது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டது.
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் செயல்படும் 450 குடிநீர் உற்பத்தி நிறுவனங்களில் அடுத்து வரும் வாரங்களில் ஆய்வு செய்ய இருப்பதாகவும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உணவு தயாரிப்பு கூடத்துக்கு ரூ.3 ஆயிரம் அபராதம்.
- பன்னின் மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூா் காங்கயம் சாலையில் பேக்கரி கடை உள்ளது. இந்தக்கடையில் வாடிக்கையாளா் ஒருவா் கடந்த செவ்வாய் கிழமை குழந்தைக்கு பன் வாங்கிக் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டுக் கொண்டிருந்தாா். அப்போது, பன்னுக்குள் மனித பல் இருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தார்.
இதுகுறித்து கடையின் உரிமையாளரிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து, கடையின் பின்புறம் உள்ள தயாரிப்புக் கூடத்துக்கு சென்று வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். மேலும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு செல்போன் மூலமாக புகாா் தெரிவித்தார்.
இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலா் விஜய லலிதாம்பிகை உத்தரவின்பேரில், உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஆறுச்சாமி கடையின் உணவுப் பொருட்கள் தயாரிப்பு கூடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உணவுப் பொருட்கள் தயாரிப்பு கூடம் சுகாதாரமாக இல்லாதது தெரியவந்தது.
இதையடுத்து கடையின் உணவு தயாரிப்பு கூடத்துக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், தற்காலிகமாக சீல்வைத்து மூடினர். மேலும், பல் இருந்த பன்னின் மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறைபாடுகளை நிவா்த்தி செய்த பின்னா் ஆய்வு நடத்தப்பட்டு பேக்கரி தயாரிப்பு கூடத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் தெரிவித்தனா்.
- இயற்கை உணவுப் பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- போலியாக தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
தாராபுரம் :
ஆர்கானிக் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் அதற்கான முத்திரை, உணவுப்பாதுகாப்பு உரிமம் ஆகியவற்றை கவனித்து வாங்க உணவுப்பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் பலர் ஆர்கானிக் எனும், இயற்கை உணவுப் பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி இயற்கை உணவுப் பொருட்கள் என்ற பெயரில், போலியாக தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு உணவுப்பொருள் நிஜமாகவே இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டதா என்பதை கண்டறிய தெரியாத வாடிக்கையாளர்களே, இது போன்ற நிறுவனங்களின் இலக்கு.
பொதுமக்கள் மீது சுமத்தப்படும் இந்த மோசடி வியாபாரத்தை தடுக்க கடைகளில் உணவுப்பாதுகாப்பு துறை ஆய்வு நடத்தி வருகிறது. இந்நிலையில் ஆர்கானிக் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் அதற்கான முத்திரை, உணவுப்பாதுகாப்பு உரிமம் ஆகியவற்றை கவனித்து வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், வேளாண் துறையுடன் இணைந்து, 'ஆர்கானிக்' உணவுப் பொருட்களின் உற்பத்தி முறைகள், பரிசோதனை முறைகள், விற்பனை குறித்து உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.பொதுமக்கள் ஆர்கானிக் பொருட்கள் வாங்கும் போது போலிகளை தவிர்க்க ஆர்கானிக் முத்திரை, உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு எண் லேபிளில் உள்ளதா என்பதை உறுதி செய்து பின்னரே வாங்க வேண்டும் என்றனர்.
- எண்ணூர் பகுதியில் சுகாதாரமற்று குடிநீர் கேன்கள் விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
- 19 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் தரமில்லாத குடிநீர் கேன்கள் விநியோகம் செய்த 6 கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
சென்னை:
எண்ணூர் பகுதியில் சுகாதாரமற்று குடிநீர் கேன்கள் விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து இன்று காலை உணவு பாதுகாப்பு கமிஷனர் லால் வினா தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது எண்ணூர் பகுதியில் உள்ள குடிநீர் ஆலையில் ஆய்வு செய்தபோது உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அபராதம் விதித்து, சுகாதாரமற்று விற்பனைக்கு வைத்துதிருந்த 200 குடிநீர் கேன்களை பறிமுதல் செய்தனர்.
19 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் தரமில்லாத குடிநீர் கேன்கள் விநியோகம் செய்த 6 கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
உரிய ஐ.எஸ்.ஐ. தரச்சான்று இல்லாமல் கேன் வாட்டர் சப்ளை செய்து வந்த கடைகளுக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
உரிய அனுமதியுடன் கேன் வாட்டர் விநியோகம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து கடைகளில் விற்பனை செய்யப்பட்ட குடிநீர் மாதிரியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பினர்.
- ஆய்வில் ஏலக்காய் தரம் பிரிக்கும் மையங்கள் உரிய உரிமம் அனுமதி பெறாமல் செயல்பட்டு வருவது தெரிய வந்தது
- ஆய்வு பரிசோதனைக்காக ஏலக்காய் மாதிரிகளையும் எடுத்துச் சென்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடியில் சுமார் 150 க்கும் மேற்பட்ட ஏலக்காய் தரம் பிரிக்கும் மையங்கள் இயங்கி வருகின்றன. தென்னிந்தியாவிலேயே ஏலக்காய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் பகுதியாக போடி திகழ்ந்து வருகிறது.
சுமார் 20,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஏலக்காய் தொழிலை நம்பி உள்ளனர். போடியை சுற்றியுள்ள கேரள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் விளையும் பணப் பயிரான ஏலக்காய்க்கு உலகம் முழுவதும் ஏற்றுமதி முக்கியத்துவம் உள்ளது. முதல் தர ஏலக்காய் கிலோ ரூ.1300 வரை விற்பனையாகும் நிலையில் தற்போது இங்கு இயங்கி வரும் ஏலக்காய் தரம் பிரிப்பு மையங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் ஏலக்காய் தரம் பிரிக்கும் மையங்கள் உரிய உரிமம் அனுமதி பெறாமல் செயல்பட்டு வருவது தெரிய வந்தது. மேலும் சில ஏலக்காய் தரம் பிரிக்கும் மையங்களில் உரிய முறையில் உரிமம் மற்றும் அனுமதி பெறாமலும் காய்களின் தரத்தை உயர்த்தி காட்டுவதற்காக செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்படுவது தெரிய வந்தது.
கண்ணாடி டம்ளரில் போடப்பட்ட ஏலக்காயில் உள்ள செயற்கை நிறமூட்டிகள் கரைந்து நிறம் மாறிக்காட்சி அளித்தது கண்டு அதிர்ச்சி அடைந்த உணவுத்துறை அதிகாரிகள் உடனடியாக செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் காய்களின் மாதிரிகளை ஆய்வுக்குகொண்டு சென்றனர்.
சுமார் 3 டன் ஏலக்காய் நிறமூட்டப்பட்டதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட கடைகளிலேயே தனியாக ஒரு அறையில் வைத்து பூட்டி சாவியை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இந்நிலையில் இன்று 2வது நாளாக போடியில் உள்ள பல்வேறு ஏலக்காய் தரம் பிரிக்கும் மையம் மற்றும் ஏற்றுமதி கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 5 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் போடி அரண்மனை பின்புறம் உள்ள கோட்டை கருப்பசாமி கோவில் அருகில் உள்ள ஏலக்காய் தரம் பிரிக்கும் மையம், சுப்புராஜ் நகர் 4வது தெருவில் உள்ள தரம் பிரிக்கும் மையம் மற்றும் போடி கஸ்பா அருகில் உள்ள ஏலக்காய் தரம் பிரிக்கும் மையமாகிய 3 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் முதல் தர ஏலக்காயில் செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் 1.5 டன் எடையுள்ள ஏலக்காய் மூட்டைகள் கைப்பற்றப்பட்டு அவரவர்கள் தரம் பிரிக்கும்மையத்திலேயே ஒரு அறையில் பூட்டி வைத்து சென்றனர்.
ஆய்வு பரிசோதனைக்காக ஏலக்காய் மாதிரிகளையும் எடுத்துச் சென்றனர். இந்த ஏலக்காய் மாதிரிகள் ஆய்விற்கு அனுப்பப்பட்டு விரைவில் முடிவுகள் தெரிந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஏலக்காய் மாதிரிகளில் செயற்கை நிறமூட்டிகள் பயன் படுத்தப்பட்டுள்ளதா? என தெரிய வரும். அவ்வாறு செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டு இருந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ராகவன் தலைமையில் இன்று காலை முதல் தொடர்ந்து பல்வேறு கடைகளில் ஆய்வு நடைபெற்று வருகிறது.
- சென்னையில் அசைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி கிலோ கணக்கில் கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
- 5 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
நாமக்கல்லில் சவர்மா சிக்கன் உணவு சாப்பிட்ட சிறுமி பலியான சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அசைவ உணவகங்களில் அடிக்கடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையிலும் அசைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி கிலோ கணக்கில் கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியதை தொடர்ந்து தரமில்லாத உணவுகளை சமைத்து பரிமாறிய உணவகங்கள் மீது பொதுமக்கள் அதிக அளவில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக 307 புகார்கள் பெறப்பட்டு உள்ளன. இது தொடர்பாக உரிய விளக்கம் கேட்டு 206 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 1187 கிலோ அளவில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 115 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ரூ.1 கோடி 61 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
5 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறும்போது, அசைவ உணவகங்களில் நடத்தப்பட்டு வரும் இந்த சோதனை தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.
- உங்கள் கடையில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்து கிறீர்களா, புகையிலைப்பொருட்கள் பயன்படுத்துகிறீர்களா என பல்வேறு கேள்விகளை கேட்டனர்.
- புகாரை தொடர்ந்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற நபர்களை தேடி வந்தனர்.
முத்தூர்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாராபுரம் சாலை களிமேடு பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் சிவசாமி. இவரது மனைவி தனலட்சுமி (வயது 43). சம்பவத்தன்று தனலட்சுமி கடையில் இருந்தபோது அவரது கடைக்கு ஒரு ஆண் மற்றும் பெண் ஒருவர் காரில் வந்தனர்.
அவர்கள் நாங்கள் கோவை மண்டல மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் என கூறியதுடன், உங்கள் கடையில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்து கிறீர்களா, புகையிலைப்பொருட்கள் பயன்படுத்துகிறீர்களா என பல்வேறு கேள்விகளை கேட்டனர்.
மேலும் ரூ.2 ஆயிரத்து 500 பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதனால் பதறிப்போன தனலட்சுமி கடையில் இருந்த பணம் ரூ.2500-ஐ அவர்களிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கி கொண்டு அந்த 2 பேரும் காரில் ஏறி சென்றுவிட்டனர்.
இதில் சந்தேகம் அடைந்த தனலட்சுமி அக்கம் பக்கத்தில் உள்ள கடைகளில் விசாரித்து பார்த்துள்ளார். அப்போது மற்ற கடைகளுக்கு இதுபோல் கூறி யாரும் வரவில்லை என கூறியதை அடுத்து தனலட்சுமி தனது கணவரிடம் தெரிவித்தார். பின்னர் காங்கயம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரை தொடர்ந்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற நபர்களை தேடி வந்தனர். தொடர்ந்து அவர்கள் வந்த கார் எண்ணை வைத்து தேடி வந்தனர்.
அப்போது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கள் என ஏமாற்றி பணம் பறித்து சென்றது கோவையை சேர்ந்த சக்திவேல்(24), அவரது மனைவி சத்தியபிரியா(23) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடை த்தனர். மேலும் அவர்கள் கூலி வேலைக்கு சென்று வந்ததுடன், இது போல் பணம் கேட்டு மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் காங்கயம் பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உணவு பாதுகாப்புத்துறை மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி உறைதல் பணிக்கு மட்டுமே இந்த திரவ நைட்ரஜனை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- ஆய்வு மதுரை முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மதுரை:
கர்நாடக மாநிலத்தில் கடந்த வாரம் திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்ட ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவனின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பிறகு அவரது உடல்நிலை தேறி வரும் நிலையில் தமிழகத்தில் இந்த திரவ நைட்ரஜன் பயன்பாட்டிற்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
திரவ நைட்ரஜனை நேரடியாக உணவுப்பொருட்களில் கலந்து விற்பனை செய்யக்கூடாது, அதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி உறைதல் பணிக்கு மட்டுமே இந்த திரவ நைட்ரஜனை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் மதுரை நகர் பகுதி முழுவதும் திரவ நைட்ரஜன் பயன்படுத்தும் கடைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி நேற்று மதியம் முதல் இரவு வரை மதுரை தெப்பக்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் உணவு கடைகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அதில் திரவ நைட்ரஜன் பயன்படுத்தும் ஸ்மோக் பிஸ்கட் கடையின் உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழை ரத்து செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் கடை சுற்றியும் ஒட்டப்பட்டுள்ள விளம்பர ஸ்டிக்கர்களும் அகற்றப்பட்டு உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த ஆய்வு மதுரை முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
- திரவ நைட்ரஜன் உட்கொள்ளப்படும் போது உதடு, நாக்கு, தொண்டை, நுரையீரல் மற்றும் வயிற்று பகுதியை சேதப்படுத்துகிறது.
- 6 மாதங்களுக்கு முன்பே திருச்சியில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் ஸ்மோக்கிங் பிஸ்கெட் விற்றவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சென்னை:
அமிலம் கலந்து உணவுப் பொருட்கள் வினியோகம் என்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வாடிக்கையாளர்களை கவர ஐஸ்கிரீம், பிஸ்கெட் ஆகியவற்றின் மீது திரவ நைட்ரஜனை கலப்பது சாப்பிடும் போது புகையை வரவழைக்கும்.
இதனால் ஆர்வமுடன் அதை வாங்கி சாப்பிடுகிறார்கள். ஆனால் இது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் ஸ்மோக் பிஸ்கெட், ஸ்மோக் பீடா, ஸ்மோக் ஐஸ்கிரீம் விற்பனைக்கு சென்னையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உணவு உட்கொள்ளும் தருணத்தில் திரவ நைட்ரஜனை அதன் மீது கலந்தால் வாயில் இருந்து புகை அதிக அளவில் வரும். இதை சுவாசிப்பதால் ஜீரண மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும்.
இதுதொடர்பாக சென்னை உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பால், தயிர், க்ரீம்கள், விப்பிங் க்ரீம்கள், கொழுப்பு குறைவான க்ரீம்கள், பதப்படுத்தப்பட்ட பழங்கள், பழ ரசங்கள், காய்கறிச் சாறுகள், காபி, தேநீர், மூலிகை பானங்கள் உள்ளிட்டவற்றை நுரைக்கச் செய்வதற்கும், கெட்டுப்போகாமல் பொட்டலமிடுவதற்கும் திரவ நைட்ரஜனை பயன்படுத்தலாம்.
அதே போல, திராட்சை ஒயினில் இருந்து ஆக்ஸிஜனை வெளியேற்றுவதற்கும் அதை பயன்படுத்தலாம். மற்றபடி வேறு எந்த வகையிலும் வணிகர்கள் திரவ நைட்ரஜனை உணவில் சேர்க்கக் கூடாது.
இந்த விதியை மீறினால் ரூ.2 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். குற்றம் நிரூபணமானால் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
அதுமட்டுமின்றி, திரவ நைட்ரஜன் கலந்த உணவுப் பொருளை உட்கொண்டு பாதிக்கப்பட்டவர் அல்லது அவரது குடும்பத்தினருக்கு சம்பந்தப்பட்ட வணிகரிடம் இருந்து இழப்பீடு பெற்றுத் தரப்படும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
திரவ நைட்ரஜன் உட்கொள்ளப்படும் போது உதடு, நாக்கு, தொண்டை, நுரையீரல் மற்றும் வயிற்று பகுதியை சேதப்படுத்துகிறது. நுரையீரலுக்குள் புகுந்தால் சுயநினைவும் இழக்க வாய்ப்பு உண்டு என்று எச்சரித்துள்ளார்கள்.
அதே நேரம் தொழில் துறை நோக்கங்களுக்காக திரவ நைட்ரஜன் பயன்பாட்டை அனுமதித்துள்ளார்கள். உணவுப் பொருட்களை உறைய வைக்க, குளிரூட்ட, பேக்கிங் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அந்த உணவு பொருட்கள் பல மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்குமாம்.
6 மாதங்களுக்கு முன்பே திருச்சியில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் ஸ்மோக்கிங் பிஸ்கெட் விற்றவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதே போல் சென்னையில் நடைபெற்ற வர்த்தக கண்காட்சியிலும் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் இப்போதுதான் தடை வந்துள்ளது.
உணவில் கலந்து பதப்படுத்தி வைத்திருந்தால் அதை சாப்பிடும் போது உடலை பதம் பார்க்காதாம். இதமாக இருக்குமாம். ஆனால் சாப்பிடும் போது அதன் மீது தெளித்து சாப்பிட்டால்தான் ஆபத்தாம்.
- ஸ்மோக் பிஸ்கெட் உள்ளிட்ட திரவ நைட்ரஜன் உணவுகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.
- உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க தடை உள்ளது.
புதுச்சேரி:
கர்நாடகாவில் ஸ்மோக் பிஸ்கெட் சாப்பிட்டு சிறுவன் துடிதுடித்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஸ்மோக் பிஸ்கெட்டை குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம். அது, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என, தமிழக உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்து, அதனை தடுக்க, தனிப்படை களம் இறக்கியுள்ளது.
புதுச்சேரியிலும் இந்த வகை ஸ்மோக் பிஸ்கெட்டுகள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. திருமண விழாக்கள், பொருட்காட்சிகள் போன்ற இடங்களிலும் திரவ நைட்ரஜன் பயன்படுத்தி செய்யப்படும் ஸ்மோக் உணவு கிடைக்கிறது.
திரவ நைட்ரஜன் தான் தற்போது வித்தியாசமான உணவு என்ற பெயரில் பல இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. காக்டெய்ல், மிட்டாய்கள், பிஸ்கெட்டுகள் அல்லது திரவ நைட்ரஜன் கலந்து செய்யப்படும் எந்த உணவாக இருந்தாலும் அது உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறியாமல் பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுக்கு அதனை வாங்கி கொடுக்கிறார்கள்.
உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க தடை உள்ளது. இந்த டிரை ஐஸ்களை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும்,10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க முடியும்.
இதுதொடர்பாக, தமிழக அரசும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் ஸ்மோக் பிஸ்கெட் விஷயத்தில் புதுச்சேரி அரசும், உணவு பாதுகாப்பு துறையும் மவுனமாக உள்ளது.
இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள ஸ்மோக் பிஸ்கெட் உள்ளிட்ட திரவ நைட்ரஜன் உணவுகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
- சாலையோரங்களில் பானி பூரி கடைகள் அதிகரித்துள்ளன.
- பயிற்சி அளித்து லைசென்சு வழங்கப்படும்.
சென்னை:
சென்னையில் பெருகி வரும் கையேந்தி பவன் போல சாலையோரங்களில் பானி பூரி கடைகளும் அதிகரித்து உள்ளன. நகரின் எந்த பகுதியில் பார்த்தாலும் முக்கிய இடங்களில் வட மாநிலத்தவர்கள் பானிபூரி விற்பனை செய்வதை காண முடியும்.
சிறிய முதலீட்டில் நடக் கும் இந்த தொழில் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் உள்ளன. பானிபூரி விற்பனையை முறைப்படுத்தவும் சுகாதாரமாக விற்கவும் உணவு பாதுகாப்புத்துறை புதிய முயற்சியை மேற்கொண்டது.
சாலையோரங்களில் செயல்படும் சாலையோர பானிபூரி கடைகளுக்கு கட்டாயம் லைசென்சு பெற வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. ஒரு வருடத்திற்கான லைசென்சு கட்டணமாக ரூ.100 செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும்.
சென்னையில் நேற்று ஒரேநாளில் 600 வட மாநிலத்தவருக்கு பானிபூரி தொழில் செய்வதற்கான லைசென்சு வழங்கப்பட்டன.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை சென்னை மாவட்ட அதிகாரி சதீஷ் குமார் கூறியதாவது:-
சென்னையில் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் பானிபூரி விற்பனை நடக்கிறது. 100-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கலாம். அவற்றை வரையறைப்படுத்தவும், பானிபூரி தயாரித்து விற்பனை செய்வதில் சுகாதாரத்தை பின்பற்றவும், கலப்படம் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது.
பழைய எண்ணெய், மீதமுள்ள பழைய உணவுப்பொருட்களை பயன்படுத்தக் கூடாது, சுகாதாரமான முறையில் விற்பது குறித்து மாநகராட்சி அம்மா மாளிகையில் பயிற்சி அளிக்கப்பட்டது. வரும் நாட்களில் வார்டு வாரியாக இந்த பயிற்சி அளித்து லைசென்சு வழங்கப்படும்.
உணவுப்பொருட்கள் விற்பனை செய்வதை முறைப்படுத்தும் நோக்கத்தில் பானிபூரி விற்பனையாளர்களுக்கு லைசென்சு அவசியமாக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.