என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிர்கள் நாசம்"

    • 3,156 விவசாயிகள் பாதிப்பு
    • அதிகாரி தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த புயல் மழை காரணமாக 1,912 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நாசமாகின.

    இதனால் 2,814 விவசாயிகள் பாதிப்படைந்தனர். 76 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பருப்பு வகை பயிர்கள் நாசமாகின.

    இதனால் 116 விவசாயிகள் பாதிப்படைந்தனர். 170.91 ஹெக்டேர் பரப்பள வில் பயிரிடப்பட்ட நிலக்கடலை பயிரும் நாசமாகின, 225 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதேபோன்று தினை வகை பயிர்களும் பாதிப்பட்டுள்ளன.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 2,160 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பயிர்கள் நாசமானது.

    மேலும் 24.1 ஹெக்டேர் பரப்பளவில் மிளகாய் பயிர்கள், 31.31 ஹெக்டேர் பரப்பளவில் வாழை மரங்கள், 28.15 ஹெக்டேர் பரப்பளவில் காய்கறி பயிர்கள் நாசமாகின ஆக மொத்தம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2,243 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் நாசமானது. 3,259 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • விவசாய பயிர்களை நாசமாக்கும் பன்றிகளை ஒழிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • வயலை சுற்றி கம்புகள் நட்டு அதில் வெடிகளை கட்டி வெடிக்க செய்வோம்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் கீழமேல்குடி கிராமத்தில் பன்றிகளிடம் இருந்து விவசாய பயிர்களை காப்பாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நீர்நிலை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் வெள்ளமுத்து மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளாக பயிர்களை பன்றிகள் அழித்து வருவதால் விவசாயம் பொய்த்து போகும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதியில் விவசாயம் செய்வது நிறுத்தப்பட்டு கருவேல மரங்கள் மண்டி கிடக்கிறது.

    இந்த பகுதியில் 2 ஏக்கரில் விவசாயம் செய்து நெல் விளைந்த நிலையில் பன்றிகள் தினந்தோறும் பயிர்களை அழித்து வருகிறது.இரவு 3 முறை பன்றிகள் நுழைந்து நன்றாக விளைந்து நிற்கும் நெற் பயிர்களை அழித்து வருகிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் 40 முதல் 50 நெல் மூடைகள் மகசூல் வரும். பன்றிகள் அழிப்பதால் விளைச்சல் பாதியாக குறையும் ஆபத்து உள்ளது.

    இரவு நேரங்களில் பன்றிகள் வராமல் தடுப்ப தற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். இரவு நேரத்தில் விழித்திருந்து வெடி போட்டு பன்றிகளை விரட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். வயலை சுற்றி கம்புகள் நட்டு அதில் வெடிகளை கட்டி வெடிக்க செய்வோம்.

    பன்றிகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க ேவண்டும்.

    இந்த பாதிப்பு தொடர்பாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் முறையிட்டோம்.நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கொடுத்த உறுதி மொழியை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேன்கனிக்கோட்டை அருகே பயிர்களை காட்டு யானைகள் நாசம் செய்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் இரவு நேரத்தில் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள விவசாய பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மணியம்பாடி கிராமத்திற்குள் 10 காட்டு யானைகள் புகுந்தன. பின்னர் அவைகள் அங்குள்ள விவசாய நிலத்திற்கு சென்று முட்டைக்கோஸ், வாழை உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் நாசம் செய்தன.

    பின்னர் அவைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டன. யானைகளால் பயிர்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பதை கண்டு விவசாயிகள் கவலை அடைந்தனர். இது குறித்து அறிந்த தேன்கனிக்கோட்டை வனச்சரகர் வெங்கடாசலம் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டனர்.

    பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
    கொடைக்கானலில் கன மழையால் ஏரி உடைந்து 50 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். #Gajastorm

    கொடைக்கானல்:

    கொடைக்கானலை புரட்டிப்போட்ட கஜா புயலால் ஆயிரக்கணக்கான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. மேல்மலை கிராமங்களில் மின் வினியோகம் இன்னும் சீராகவில்லை.

    கடந்த 16-ந் தேதி சுழற்றி அடித்த சூறாவளி புயலின்போது கன மழை கொட்டி தீர்த்தது. இதில் பூண்டி கிராமத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள கீழ்மடை பள்ளம் ஏரிக்கரை நிரம்பியது. இதனால் கடந்த 2 நாட்களாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

    நேற்று மேலும் மழை பெய்யத் தொடங்கியதால் ஏரியின் மதகுகள் உடைந்து தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது. இதனால் அப்பகுதியில் 50 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கேரட், உருளைகிழங்கு, பூண்டு, பீன்ஸ் ஆகிய பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கின.


    ஏற்கனவே அறுவடை செய்த காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு பல லட்சம் நஷ்டம் ஆகியது. தற்போது மீதி இருந்த பயிர்களும் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.

    ஏரியில் இருந்து தண்ணீர் அதிக அளவு வெளியேறியதால் பொதுமக்களே ஒன்றுதிரண்டு அப்பகுதியில் தண்ணீர் வெளியேறுவதை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிக சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. 150 அடி நீளம், 30 அடி அகலம், 19 அடி உயரம் உடைய கீழ்மடை பள்ளம் ஏரியில் தேக்கப்பட்டிருந்த தண்ணீர் முழுவதும் வெளியேறியது.

    இதனால் தற்போது அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. மீண்டும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் கரையோரத்தில் விவசாயிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இந்த ஏரியின் கரையை கான்கிரீட் சுவரால் நிரந்தரமாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Gajastorm

    ×