என் மலர்
நீங்கள் தேடியது "நீலகிரி மாவட்டம்"
- கார் மூலமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள பிளாக் தண்டருக்கு சென்றார்.
- நீலகிரிக்கு சென்றுள்ள முதலமைச்சருக்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக இன்று நீலகிரி மாவட்டத்திற்கு கள ஆய்வுக்காக சென்றுள்ளார்.
இதற்காக அவர் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 12 மணிக்கு கோவை விமான நிலையம் சென்றடைந்தார்.
அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கார் மூலமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள பிளாக் தண்டருக்கு சென்றார்.
அங்கு அவர் சிறிது நேரம் தங்கி ஓய்வெடுத்துவிட்டு, மாலை 5 மணிக்கு பிளாக்தண்டரில் இருந்து கார் மூலமாக நீலகிரிக்கு சென்றார்.
நீலகிரிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நீலகிரி மாவட்ட தி.மு.க சார்பில் 3 இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் உள்ள குஞ்சப்பனை என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டிருந்த பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
- ஏதாவது சந்தேகம் இருப்பின் 1077 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள அறிவுறுத்தல்.
- மாவட்டத்தின் முக்கிய பகுதிகளை இரவு நேரத்தில் கண்காணிக்கவும் ஏற்பாடு.
நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படும் என்ற சமூக வலைதள செய்திகளை நம்ப வேண்டாம் என ஆட்சியர் லட்சுமி திவ்யா தெரிவித்துள்ளார்.
போலியான செய்திகாளை கண்டு மக்கள் பதற்றமடைய வேண்டாம் எனவும் நீலகிரி ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
ஏதாவது சந்தேகம் இருப்பின் 1077 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மாவட்டத்தின் முக்கிய பகுதிகளை இரவு நேரத்தில் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், நீலகிரி மாவட்டத்திலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக இணைய தளத்தில் தகவல் பரவிய நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
- நீலகிரி மாவட்டத்தின் அபாயகர பகுதிகளை புவியியல்துறையை சேர்ந்த அதிகாரிகள் விரைவில் ஆய்வு செய்ய உள்ளனர்.
- பருவமழை பாதிப்புகள் குறித்து 1077 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் தீயணைப்புத்துறை பயன்படுத்த உள்ள பேரிடர் மீட்புக்கருவிகள் மற்றும் உபகரணங்களை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு அவற்றின் செயல்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், தேவாலா மற்றும் குந்தா ஆகிய பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் முகாமிட்டு தயார்நிலையில் உள்ளனர். மேலும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் உஷார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர பல்வேறு துறைகளை சேர்ந்த 500 பேர் அடங்கிய 42 குழுவினர் மாவட்டம் முழுவதிலும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு போல நீலகிரி மாவட்டத்திலும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சமூகவலைதளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பும் நபர்கள் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பொய்யான செய்திகளை பொதுமக்கள் நம்பி அச்சமோ, பீதியோ அடைய வேண்டாம்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் நீலகிரி மாவட்டத்தின் அபாயகர பகுதிகளை புவியியல்துறையை சேர்ந்த அதிகாரிகள் விரைவில் ஆய்வு செய்ய உள்ளனர்.
பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் பொதுமக்கள் அருகிலுள்ள தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கிக்கொள்ளலாம். மேலும் பருவமழை பாதிப்புகள் குறித்து 1077 தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடுவட்டம் பேரூ ராட்சியில் மிகவும் அபாயகரமான இந்திரா நகர் மற்றும் டி.ஆர்.பஜார் ஆகிய பகுதிகளை நேரில் பார்வையிட்ட கலெக்டர், நடுவட்டம் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக குடியிருப்பு களையும் ஆய்வு செய்தார்.
- கடந்த 7-ந்தி அன்று, மாவட்டக் கல்வி அதிகாரி (DEO) மூலம் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
- கூட்டத்தில் பள்ளிகளின் வருகைப்பதிவை மேம்படுத்துதல் மற்றும் மாவட்டத்தின் பள்ளிகளில் ஒட்டுமொத்த கல்வித் திறனை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
நீலகிரி:
மாவட்ட கல்வி அலுவலர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நீலகிரி மாவட்டத்தில் 287 அரசு நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகள் உள்ளன. கல்வியின் தரம் மற்றும் மாணவர்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான சமீபத்திய முயற்சியாக, கடந்த 7-ந்தி அன்று, மாவட்டக் கல்வி அதிகாரி (DEO) மூலம் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் பள்ளிகளின் வருகைப்பதிவை மேம்படுத்துதல் மற்றும் மாவட்டத்தின் பள்ளிகளில் ஒட்டுமொத்த கல்வித் திறனை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு அரசுப் பள்ளியையும் மூடும் திட்டமோ, உத்தரவுகளோ இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
- ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் கட்சி கொடியேற்றி அண்ணா, கருணாநிதி ஆகியோரது உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- நீலகிரி மாவட்ட திமுக செயலாளராக 5-வது முறை பொறுப்பேற்றுள்ளார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட திமுக செயலாளராக 5-வது முறை பொறுப்பேற்றுள்ள பா.மு.முபாரக், ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் கட்சி கொடியேற்றி அண்ணா, கருணாநிதி ஆகியோரது உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், ஊட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் காமராஜ், ஊட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, தொரை,
உதயதேவன், மாவட்ட அமைப்பாளர்கள் இமயம் சசிகுமார், காந்தல் ரவி, கர்ணன், எல்கில் ரவி, சோலூர் பேரூராட்சி செயலாளர் பிரகாஷ்குமார், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் உமாராஜன், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் ராம்குமார், மாயன், பேரூராட்சி தலைவர்கள் ஜெககுமாரி, கௌரி, சத்யவாணி, ஹேமமாலினி, ஊட்டி நகர பொருளாளர் அணில்குமார்,
மாவட்ட பிரதிநிதிகள் கார்திக், தம்பி இஸ்மாயில், முத்து, தொமுச கவுன்சில் செயலாளர் ஜெயராமன், எல்.பி.எப் முருகன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் பாபு, நாகராஜ், மேத்யூஸ், மெல்ரோஸ் செல்வராஜ், வெங்கடேஷ், மார்கெட் ரவி, ராஜூ, ராமன், வெங்கடேஷ், குண்டன், குரூஸ், உதகை நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், கீதா, நாகமணி, விஷ்னுபிரபு, கஜேந்திரன், ரகுபதி, வனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க. மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக்கிற்கு குன்னூர் நகர தி.மு.க. சார்பில் பஸ் நிலைம் அருகில் நகர தி.மு.க. செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான ராமசாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பா.மு. முபாரக் அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.
இதில் மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், பொது குழு உறுப்பினர் சதக்கதுல்லா, குன்னூர் நகர்மன்ற தலைவர் ஷிலாகேத்ரின், நகர்மன்ற துணை தலைவர் வாசிம்ராஜா, நகர திமுக துணை செயலாளர் முருகேஷ், நகர பொருளாளர் ஜெகநாத்ராவ், குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை 91 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.
- நீலகிரி மாவட்டத்தில் மின்சாரத்துறை சாா்ந்த 200 பணியாளா்கள் களத்தில் பணியாற்றி வருகின்றனா்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த ஒருவார காலமாக கனமழை பெய்தது. நேற்றும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
குறிப்பாக அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு உள்பட அணைபகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.தொடர் மழையால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஆங்காங்கே பெய்த தொடர் மழையால் கூடலூர் வட்டாரத்தில் புஞ்சங்கொல்லி, கூடலூர் நகரம், ராக்வுட், ஊட்டி வட்டாரத்தில் அண்ணா காலனி, மினிட்மந்து, காந்திபேட்டை, கேத்தி பாலாடா, இத்தலார் கிண்ணக்கொரை, மஞ்சூர், குன்னூர் வட்டாரத்தில் சேலாஸ், கோத்தகிரி வட்டாரத்தில் மைனலா மட்டம் உள்ளிட்ட இடங்களில் 79 மின் கம்பங்கள் சேதமானது.மின்வாரிய ஊழியர்கள் சேதமான மின்கம்பங்களை மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் மழைக்கு 61 வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. இதுதவிர கூடலூர், பந்தலூர், ஊட்டி, மஞ்சூர் பகுதிகளில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.
தற்போது மழை சற்று ஓய்ந்திருப்பதால் மாவட்டம் முழுவதும் மீட்புபணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. மண்குவியல்களும் அகற்றப்பட்டது.சேதமான மின்கம்ப ங்களை மாற்றி அமைத்து மின்சாரம் வினியோகிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்றது. கூடலூர் மங்குழி ஆற்றில் சேதம் அடைந்த பாலம் உள்ள பகுதியில் மீட்பு பணிகள் துரிதப்ப டுத்தப்பட்டுள்ளன. மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் பொக்லைன் எந்திரம் மூலமாக சீரமைப்பு பணி நடந்து வருகிறது.
இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிப்படைந்த பகுதிகளை அமைச்சர்கள் ராமச்சந்திரன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், செந்தில்பாலாஜி ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் தென்மேற்கு பருவ மழை தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பின்னர் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா், ராமசந்திரன் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை 91 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. எதிா்காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் மண் சரிவு மற்றும் வெள்ள சேதங்கள் ஏற்படுவதை தவிா்க்க பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளை முழுமையாக ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்க மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பேரிடா் மீட்பு படையின் 80 வீரா்கள் கூடலூா் பகுதிக்கு வரவழைக்க ப்பட்டுள்ளனா். நீலகிரியில் அடுத்த 2 நாள்களுக்கு கன மழை பெய்யும் என எச்சரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து துறையினரும் தயாா் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மின் துறை அமைச்சா் செந்தில் பாலாஜி கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையினால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் சாய்ந்துள்ளன. சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் தாழ்வாக செல்லக்கூடிய 189 மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் மின்சாரத்துறை சாா்ந்த 200 பணியாளா்கள் களத்தில் பணியாற்றி வருகின்றனா். தேவைப்படும் பட்சத்தில் கோவை மாவட்டத்திலிருந்தும் பணியாளா்கள் வரவழைக்க–ப்படுவா் என்றார்.
நாட்டு மக்களின் குறைகளை அறியும் வகையில் அவர்களிடம் கருத்து கேட்கும் புதிய திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தி உள்ளார். அதன்படி நாடு முழுவதும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் மக்கள் தங்களது குறைகள் அல்லது கருத்துகளை படிவத்தில் பூர்த்தி செய்து அளிக்கும் வகையில் பெட்டிகள் வைக்கப்படுகின்றன. இந்த திட்ட தொடக்க விழா கோத்தகிரியில் நடைபெற்றது. காமராஜர் சதுக்கத்தில் உள்ள பா.ஜனதா மாவட்ட அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு மாவட்ட தலைவர் கேப்பிடல் போஜன் தலைமை தாங்கினார். மணிகண்டன் வரவேற்றார். செயற்குழு உறுப்பினர்கள் அன்பரசன், கணேசன். முருகன், ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகன் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீலகிரியில் தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் கிராமங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் சேரம்பாடி பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. பந்தலூரில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. 36 சுய உதவி குழுக்களுக்கு ரூ.2½ கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் நீலகிரியில் இதுவரை 1 லட்சம் பேர் இணைந்து உள்ளனர். விடுபட்டவர்களை இணைக் கும் பணி நடந்து வருகிறது. இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களுக்கு 800 வீடுகள் கட்டும் திட்டம் நிறைவேற்றப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. தாழ்த்தப்பட்டோர் தொழில் தொடங்க ரூ.493 கோடியில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்கான பயிற்சி மற்றும் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுவது, நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு வாக்குக்காக பணம் வழங்குவது போல உள்ளது என்று முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார். இது தவறான பிரசாரம். விவசாயிகளுக்காக கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட்டு, முதற்கட்டமாக தலா ரூ.2 ஆயிரம் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் விவசாயிகளின் பிரதிநிதிகளை கலந்து ஆலோசித்து கொண்டு வரப்பட்ட சிறந்த திட்டம். இந்துஸ்தான் பிலிம் தொழிற்சாலையை புனரமைப்பது, பச்சை தேயிலைக்கு போதுமான குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்வது குறித்த வாக்குறுதி பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்.
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் நீலகிரியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பல்நோக்கு சிறப்பு ஆஸ்பத்திரி அமைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். கோத்தகிரியில் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்க வங்கிகள் தயங்கி வருவதாக கூறப்படுகிறது. எவ்வித பிணையும் இன்றி முத்ரா திட்டத்தின் கீழ் வங்கிகள் கடன் வழங்க வேண்டும். கடன் வழங்காத வங்கி மேலாளர்கள் மீது புகார் வந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து கோத்தகிரியில் தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் கேம்ப்லைன், இடுக்கொரை, அருள்நகர் ஆகிய பகுதிகளில் ஆணைய துணை தலைவர் முருகன் சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் மார்க்கெட் பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் ரவிக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கோல்டி சாராள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இருக்கும் நிலையில் அரசு பணியில் காலி இடங்களை நிரப்ப மறுப்பதோடு, சேர்க்கப்படும் பணியிடம் கூட ஒப்பந்த நியமனமாக, வெளிமுகமை நியமனமாக மாற்ற வழிவகுக்கும் அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும், 21 மாத ஊதிய நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த 22-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
நீலகிரியில் கடந்த 2 நாட்களாக ஊட்டி ஏ.டி.சி. திடல், மத்திய பஸ் நிலையம், கூடலூர் ஆகிய இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த நிலையில் நேற்று 4-வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 4-வது நாளாக பணிக்கு செல்லாமல் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் ஒன்று கூடினர். பின்னர் நூற்றுக்கணக்கானோர் முக்கிய சாலையான ஊட்டி-குன்னூர் சாலை சந்திப்பு பகுதியில் திரண்டனர். இதனால் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். ஜாக்டோ-ஜியோ நிர்வாகி தினகரன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். போராட்டத்தை சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஆல்தொரை தொடங்கி வைத்தார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 365 பெண்கள் உள்பட 640 பேரை போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர் அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால், ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மட்டும் வந்திருந்தனர்.
ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கியது. இப்பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர்கள் தாங்களாகவே பாடங்களை படித்துக்கொண்டு இருந்தனர். பிளஸ்-2 மாணவர்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து பாடங்களை படித்தனர். இதனால் வகுப்பறைகள் வெறிச்சோடி இருந்தது. ஊட்டி தலையாட்டுமந்து நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வராத காரணத்தால், 4-வது நாளாக நேற்றும் மூடப்பட்டு இருந்ததை காண முடிந்தது. சில பள்ளிகளில் நன்றாக படிக்கும் மாணவர்கள் சக மாணவர்களுக்கு பாடம் நடத்தினர்.
ஜாக்டோ-ஜியோ சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் 730 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நிர்வாகிகள் 58 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 143-ன் படி சட்ட விரோதமாக கூடுதல், 341-ன் படி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 4-வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர்(ஜாக்டோ-ஜியோ) வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அனைத்து துறைகளை சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பு இருந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஊர்வலமாக புறப்பட்டு, புதிய பஸ் நிலையம் வந்தனர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 444 பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வாறு ஊட்டி, கூடலூரில் மொத்தம் 1,084 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. #JactoGeo
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் பனிப்பொழிவு தொடங்கும். ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் படிப்படியாக பனிப்பொழிவு குறைந்து மாத இறுதிக்குள் குளிர்காலம் முடிந்து விடும்.
ஆனால் தற்போது ஜனவரி மாதம் இறுதி ஆகியும் பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கம் குறையவில்லை. தினசரி மாலையில் 6 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு மறுநாள் காலை 11 மணி வரை நீடிக்கிறது.
இதன் காரணமாக ஊட்டி, தலைக்குந்தா, கேத்தி பள்ளத்தாக்கு, குன்னூர் ஜிம்கானா போன்ற பகுதிகளில் புல்வெளிகள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் எங்கு பார்த்தாலும் பனி படர்ந்து வெண்ணிறமாக காட்சியளிக்கிறது.
இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து 4,5,6 டிகிரி செல்சியசாக குறைந்து காணப்படுகிறது. இன்று காலையில் தாவரவியல் பூங்காவில் 00.73 டிகிரி செல்சியசாக வெப்பநிலை பதிவாகி இருந்தது.
இரவில் வெளியே நிறுத்திவைக்கப்படும் வாகனங்களில் விழும் பனிப்பொழிவு ஐஸ் கட்டியாக மாறிவிடுகிறது. புல்வெளியில் படர்ந்துள்ள பனிப்பொழிவு காலையில் வெகு நேரம் நீடிப்பதால் கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அவைகளும் சூரிய ஒளியில் நின்று தங்கள் உடலை சூடாக்கி கொள்கின்றது. சாலையோர வியாபாரிகள் கனமான கம்பளி ஆடைகளை அணிந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலை வெகுநேரம் குளிர் வாட்டி வதைப்பதால் உள்ளூர் வாசிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குளிரால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடியே காணப்படுகிறது.
தொடர் பனிப்பொழிவு, கடுங்குளிர் காரணமாக சுற்றுலா பயணிகளின் வரத்தும் குறைவாகவே காணப்படுகிறது.#tamilnews
நீலகிரி மாவட்டத்தில் உறைபனி காலம் தொடங்கி விட்டது. மாவட்டம் முழுவதும் காஷ்மீர்போல் பனி படர்ந்து காட்சியளிக்கிறது. தலைக்குந்தா, கிளன்மார்கன், போர்வே, இத்தலார், போர்த்தி ஆகிய இடங்களில் உறைபனியின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.
நகர் பகுதியான ரேஸ்கோர்ஸ், கூடைப்பந்து மைதானம், அரசு தாவரவியல் பூங்கா ஆகிய இடங்களில் வெப்ப நிலை 6 டிகிரி செல்சியசாக பதிவானது. தலைகுந்தா, கிளன்மார்கன் ஆகிய இடங்களில் 0 டிகிரி செல்சியசாக வெப்பநிலை குறைந்தது.
வெப்பநிலை குறைவால் தண்ணீர் பனிக்கட்டியானது. இதனால் குடிநீர் குழாய்களில் தண்ணீர் வினியோகம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குழாய்களிலும் தண்ணீர் பனிக்கட்டியாக உறைந்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
டீசல் உறைந்ததால் வாகனங்கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் சாலைகளில் வாகனங்களை அதிகம் காணமுடியவில்லை. உறைபனியால் 1000 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட தேயிலைச் செடிகள், மலைக்காய் கறிச்செடிகள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு முடங்கியுள்ளனர்.
உலக புகழ்பெற்ற சுற்றுலா தலங்களான படகு இல்லம், அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பனியின் தாக்கத்தால் பொதுமக்கள் காய்ச்சல் உள்ளிட்ட உபாதைகளால் அவதிப்பட்டனர். ரோட்டோரங்களில் பொதுமக்கள் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகிறார்கள். மாலை நேரங்களில் மக்கள் கூட்டமின்றி ஊட்டி நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது. #tamilnews
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாசில்தார் அப்துல் ரகுமான் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த1-ந் தேதி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். அவரை தொடர்ந்து கோத்தகிரியை சேர்ந்த ஒருவரும் கோவையில் உயிரிழந்தார். மேலும் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
30 மாணவர்கள்-10 ஆசிரியர்களுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி
இந்தநிலையில் ஊட்டியில் இயங்கி வரும் மத்திய அரசு கட்டுபாட்டில் உள்ள சர்வதேச பள்ளியில் படிக்கும் 30 மாணவர்களுக்கும், 10 ஆசிரியர்களுக்கும் பன்றி காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதால் அவர்கள் கோவையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுவதாக தகவல் பரவியது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும் போது
அந்த பள்ளியில் படிக்கும் சென்னையை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருந்ததால், அந்த வகுப்பில் படிக்கும், விடுதியில் உள்ள 27 மாணவர்களுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டது. அந்த மாணவர் மட்டும் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இது மற்ற மாணவர்களின் பெற்றோருக்கு பீதியை ஏற்படுத்தியது. இந்த பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பெற்றோர்களின் ஏற்பாட்டின் அடிப்படையில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 80 பேரும், ஆசிரியர்கள், விடுதி ஊழியர்கள் 27 பேரும் என மொத்தம் 107 பேர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சுகாதாரதுறை அதிகாரிகளிடம் கேட்ட போது கூறியதாவது:-
மருத்துவ பரிசோதனைக்கான அவர்களது பெற்றோரின் விருப்பபடி மாணவர்கள் கோவைக்கு சென்றுள்ளனர். இது அவர்களது விருப்பம். இதில் யாரும் தலையிட முடியாது என்றனர்.
காய்ச்சல் பாதிப்பு குறித்து மாவட்ட சுகாதாரதுறை இணை இயக்குனர் இரியன் ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக 190 பேர் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். மேலும் 28 பேர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவர்களில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதால் அவர் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 4 பேருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதால் அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறியுள்ளார். #swineflu
தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை போதிய அளவுக்கு பெய்யவில்லை. இயல்பான அளவுக்கு சற்று குறைவாகவே பெய்துள்ளது. அதாவது 30 செ.மீ.க்கு பதில் 26 செ.மீ. மழைதான் பெய்துள்ளது.
தேனி மாவட்டத்திலும், நெல்லை மாவட்டத்திலும் வழக்கத்தை விட மிக அதிகமாக பெய்துள்ளது. தேனி மாவட்டத்தில் இயல்பாக பெய்யவேண்டிய மழை 14 செ.மீ., ஆனால் 41 செ.மீ. மழை பெய்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு 13 செ.மீ., ஆனால் 31 செ.மீ. மழை பெய்துள்ளது. 20 மாவட்டங்களில் குறைவாக மழை பெய்துள்ளது. 9 மாவட்டங்களில் இயல்பான அளவுக்கு பெய்துள்ளது.
இந்த நிலையில் சென்னை வானிலை மைய அதிகாரி கூறுகையில், “வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும். ஆனால் நெல்லை, கன்னியாகுமரி, தேனி, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்” என்றார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
கோபிசெட்டிபாளையம் 8 செ.மீ., சத்திரப்பட்டி (திண்டுக்கல் மாவட்டம்) 6 செ.மீ., உளுந்தூர்பேட்டை, தாளவாடி தலா 5 செ.மீ., அரண்மனை புதூர், ஆயிக்குடி, தாராபுரம், பொள்ளாச்சி, போடிநாயக்கனூர், காங்கேயம் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் 35 இடங்களில் குறைந்த அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. #Rain #MeteorologicalDepartment