search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராதாகிருஷ்ணன்"

    • மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டன.
    • ராதாகிருஷ்ணன் மாவட்ட நிர்வாகத்திடம் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் வணிக கட்டிடங்களுக்கு சொத்து வரி வசூலிப்பது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    13 லட்சம் சொத்து வரி செலுத்துபவர்கள் மாநகராட்சி எல்லைக்குள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் ஆண்டுக்கு 1800 கோடி ரூபாய் சொத்து வரியாக வசூலிக்கப்படுகிறது. சொத்து வரி செலுத்தாத நீண்ட காலமாக உள்ள வணிக பிரமுகர்கள் இடமிருந்து வசூலிக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக் கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு சொத்து வரி மதிப்பீடு செய்து வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

    சென்னையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது. அவற்றிற்கு சொத்து வரி வசூலிப்பதன் மூலம் மாநகராட்சியின் வருவாயை பெருக்க அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

    இது தொடர்பாக மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் மாவட்ட நிர்வாகத்திடம் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.

    முதலில் 20,000 கட்டிடங்களுக்கு சொத்து வரி மதிப்பீட்டை தொடங்க திட்டமிட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் தியாகராயநகர், ஆலந்தூர், மணலி, மாதவரம் ஆகிய பகுதிகளில் புறம்போக்கு நிலத்தில் கட்டிடங்கள் அதிக அளவில் உள்ளன.


    இதுபோன்ற கட்டிடங்களை சுட்டிக் காட்டி அவற்றை மதிப்பீடு செய்து சொத்து வரி வசூலிக்க முடியும் என்று அரசிடம் விளக்கம் அளித்துள்ளது.

    கிராம நத்தம் தவிர தி. நகர் போன்ற பகுதிகளில் சட்டபூர்வ வாரிசுகள் இல்லாமல் உரிமை கோரப்படாத நிலங்களில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் உள்ளன. நகரில் இது போன்ற நிலங்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொத்துக்கள் உள்ளன. அவர்களுக்கு பட்டா இல்லை. ஆனால் பல தலைமுறைகளாக குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதுபோன்ற சொத்துகள மீது அரசு முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விரிவாக்கப்பட்ட பகுதிகளில் கிராம நத்தம் உள்ள பல கட்டிடங்களுக்கு சொத்துவரி மதிப்பீடு செய்யவில்லை. இந்து சமய அறநிலையத் துறை நிலங்கள் மற்றும் வக்பு வாரிய நிலங்களில் உள்ள பல கட்டிடங்களுக்கு சொத்து வரி மதிப்பீடு செய்யவில்லை.

    பட்டா இல்லாத கட்டிடங்களுக்கு சொத்து வரி நிர்ணயம் செய்வது குறித்து விரைவில் முடிவு எடுக்கும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சைதாப்பேட்டை அபித்காலனியில் சிறப்பு மருத்துவ முகாமும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.
    • மருத்துவ முகாமினைத் தொடர்ந்து மூன்று நாட்கள் நடத்தப்படவும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் ராதாகிருஷ்ணன் சைதாப்பேட்டை அபித் காலனியில், மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மருத்துவ முகாம் மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    சைதாப்பேட்டை அபித் காலனியில் உள்ள வெளி மாநிலத் தொழிலாளி ராஜேஷ்குமார் என்பவரின் மகன் யுவராஜ் (வயது 11) என்பவர் நோய்த் தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்ததைத் தொடர்ந்து,

    சைதாப்பேட்டை அபித்காலனியில் சிறப்பு மருத்துவ முகாமும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.

    இதனை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இப்பகுதி மக்களுக்கு பிளிச்சீங் பவுடர், ஓ.ஆர்.எஸ் கரைசல், ஆகியவற்றினையும் இப்பகுதி மக்களிடம் வழங்கி, வீட்டின் குடிநீர்த் தொட்டியினை சுத்தம் செய்திடவும், சுற்றுப்புறப் பகுதியினை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தி, விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினார்.

    இப்பகுதியில் 12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டாக்சி சைக்ளின் (Doxycycline) மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளதையும், லைசால், பிளீச்சிங் பவுடர் (Lysol, Bleaching powder) கொண்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளதையும், மக்களிடம் மருத்துவப் பணியாளர்கள் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனை நடவடிக்கைகளையும் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.


    இப்பகுதிக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரின் உள்ளதை உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, இப்பகுதியில் தொடர் கண்காணிப்பினை மேற்கொள்ளவும், இம்மருத்துவ முகாமினைத் தொடர்ந்து மூன்று நாட்கள் நடத்தப்படவும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை ஆகியவற்றினை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்நிகழ்வின் போது மத்திய வட்டார துணை ஆணையாளர் பிரவீன் குமார், மண்டலக் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர நல அலுவலர் ஜெகதீசன், கூடுதல் மாநகர நல அலுவலர் ஆஷாலதா, சென்னைக் குடிநீர் வாரியம், மாநகராட்சி அலுவலர்கள், மருத்துவப் பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • அரசு நிறுவனங்கள், கேபிள்கள் பதிக்கும் பணிகள் காரணமாகவே சேறு, சகதியாக ரோடுகள் மாறுகின்றன.
    • மாதவரம், புழல், ஐஸ் அவுஸ் ஆகிய பகுதிகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியாகும் சாலைகள் பற்றி ஏற்கனவே பொதுமக்கள் புகார்கள் அனுப்பி உள்ளார்கள்.

    சென்னை:

    சென்னையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் பகுதிகள், சேறும், சகதியுமாக மாறும் இடங்கள் பற்றி 15 மண்டலங்களிலும் கண்டறியும் பணிகளை அதிகாரிகள் தொடங்கி உள்ளார்கள்.

    மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இது தொடர்பாக அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    கடந்த ஆண்டின் மதிப்பீட்டின் படி சென்னையில் 320 இடங்களில் மழை நீர் தேக்கம் ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம் அந்த பகுதிகளில் நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு திட்ட பணிகள் என்று கூறப்படுகிறது.

    அடுத்த சில நாட்களுக்கு மழை முன்னறிவிப்பு உள்ளது. 4 முதல் 5 செ.மீ. மழை பெய்யும் போது தான் சவால்கள் ஏற்படும் என்று கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

    சேறாக மாறும் சாலை பகுதிகளில் மெட்ரோ வாட்டர், குடிநீர் வாரிய பணிகள் நடந்தால் மணல் அதிகமாக குவித்து வைக்கப்பட்டிருக்கும்.

    அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

    மாதவரம், புழல், ஐஸ் அவுஸ் ஆகிய பகுதிகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியாகும் சாலைகள் பற்றி ஏற்கனவே பொதுமக்கள் புகார்கள் அனுப்பி உள்ளார்கள்.

    அரசு நிறுவனங்கள், கேபிள்கள் பதிக்கும் பணிகள் காரணமாகவே சேறு, சகதியாக ரோடுகள் மாறுகின்றன. எனவே நிறுவனங்களிடம் பணிகளின் தற்போதைய நிலை எப்போது முடிவடையும் என்பது பற்றியும் ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்யும் படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • 1,433 பேர் பங்கேற்ற பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
    • ஓட்டு எண்ணும் பகுதியில் 22 சி.சி.டி.வி. கேமரா அமைக்கப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வருகிற 4-ந் தேதி எண்ணப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குகளை எண்ணுவதற்காக அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பல்வேறு கட்ட பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

    வாக்குப்பதிவான மின்னணு எந்திரங்களை சீல் அகற்றி திறப்பது, அதன் பிறகு ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதிவான வாக்குகளை எவ்வாறு கணக்கிட்டு எண்ண வேண்டும் என்பது சம்பந்தமாக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னையில் வட சென்னை தொகுதி வாக்குகள் ராணிமேரி கல்லூரியிலும், மத்திய சென்னை தொகுதி வாக்குகள் லயோலா கல்லூரியிலும், தென் சென்னை தொகுதி வாக்குகள் அண்ணா பல்கலைக் கழகத்திலும் எண்ணப்பட உள்ளன.

    இதற்காக வடசென்னைக்கு 357 ஊழியர்கள், தென் சென்னைக்கு 374 ஊழியர்கள், மத்திய சென்னைக்கு 380 ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள், நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களுக்கான பயிற்சி வகுப்பு சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா மாளிகை அரங்கில் இன்று நடைபெற்றது.

    மொத்தம் 1,433 பேர் பங்கேற்ற இந்த பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் கமிஷனர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு இன்று முதல் கட்ட பயிற்சி நடக்கிறது. இந்த பயிற்சி இரவு வரை நடக்கிறது. சட்டமன்ற தொகுதி வாரியாக ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. வடசென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளில் 14 மேஜைகளும் மத்திய சென்னைக்கு உட்பட்ட 5 தொகுதிகளில் 16 மேஜைகளும், சோழிங்கநல்லூர் தொகுதியில் மட்டும் அதிகபட்சமாக 30 மேஜைகளிலும் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

    ஸ்ட்ராங் அறை ஸ்டோர் அறையில் ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் பகுதி, வளாகம் முழுவதும் கூடுதல் பாதுகாப்பு போடப்படும்.


    ஓட்டு எண்ணும் பகுதியில் 22 சி.சி.டி.வி. கேமரா அமைக்கப்படுகிறது. ஓட்டு எண்ணும் ஊழியர்கள் எந்த சட்டமன்ற தொகுதிக்கு போகிறார்கள் என்பது 3-ந்தேதி காலை 8 மணிக்கு முடிவு செய்யப்படும். அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் பொது பார்வையாளர்கள் 1-ந் தேதி வருகிறார்கள். அவர்கள் முன்னிலையில் 2-வது கட்ட பயிற்சி 3-ந்தேதி நடத்தப்படும். எந்த மேஜையில் யார் பணியில் ஈடுபடுவது என்பதை தீர்மானிக்கும் கடைசி கட்ட பணியாளர்கள் தேர்வு 4-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு நடைபெறும். 18 சட்டமன்ற தொகுகளிலும் மொத்தம் 268 மேஜைகளில் ஓட்டு எண்ணிக்கை நடக்கும். மொத்த சுற்றுகள் 321 ஆகும். எழும்பூர், துறைமுகம், ராயபுரம் சட்டசபை தொகுதிகளில் குறைந்த பட்சமாக 13 சுற்றுகள் ஓட்டு எண்ணப்படும். அதிகபட்சமாக திருவொற்றியூர், சோழிங்கநல்லூர் தொகுதியில் 23 சுற்றுகள் வரை ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு சுற்றுக்களின் இறுதி முடிவை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அறிவிப்பார்கள்.

    தபால் ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும். ஒவ்வொரு மேஜைக்கு 500 ஓட்டுகள் வீதம் எண்ணப்படும். தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டாலும் கடைசியில் தான் முடிவு அறிவிக்கப்படும்.

    ஒரு மேஜைக்கு ஒருவர் வீதம் வேட்பாளர்களின் முகவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். வேட்பாளர்களின் அடிப்படையில் மொத்தம் 14,290 முகவர்கள் ஓட்டு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். வடசென்னை 5040 முகவர்கள், தென் சென்னை 4786, மத்திய சென்னைக்கு 4464 பேர் வரை அனுமதிக்கப்படுவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது வடசென்னை தொகுதி தேர்தல் அதிகாரி கட்டா ரவி தேஜா உடனிருந்தார்.

    • எந்த உரிமமும் இன்றி ராட்வீலர் நாயை உரிமையாளர் வளர்த்து வந்துள்ளார்.
    • வீட்டில் செல்லப்பிராணிகளான நாய், பூனை, பறவைகள் வளர்ப்பவர்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

    சென்னை:

    சிறுமியை நாய்கள் கடித்த விவகாரம் தொடர்பாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பூங்காவில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் கூறுகையில்:

    * சென்னையில் நாய்கள் கடித்து காயமடைந்த சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும். சிறுமியின் மருத்துவ செலவை சென்னை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும்.

    * எந்த உரிமமும் இன்றி ராட்வீலர் நாயை உரிமையாளர் வளர்த்து வந்துள்ளார்.

    * நாய்களின் உரிமையாளருக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் வழங்கி உள்ளது.

    * நாய்களின் உரிமையாளர் புகழேந்தி, மனைவி வரலட்சுமி, மகன் வெங்கேடசன் ஆகிய 3 பேர் மீதும் ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    * வீட்டில் செல்லப்பிராணிகளான நாய், பூனை, பறவைகள் வளர்ப்பவர்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

    * சென்னையில் 10,000க்கும் மேற்பட்ட செல்லப்பிராணிகள் வளர்த்து வரும் நிலையில் வெறும் 1,200 பேர் மட்டுமே மாநகராட்சியில் பதிவு செய்துள்ளனர்.

    * செல்லப்பிராணிகளை பதிவு செய்ய வேண்டும் என வீடுதோறும் சென்று மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்படும் என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாய்களின் உரிமையாளருக்கு இன்று காலை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
    • நாய்களுக்கு, அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட வேண்டும்.

    சென்னை:

    சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவுக்குள் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை 2 நாய்கள் கடித்ததில் பலத்த காயம் அடைந்தார். சிறுமியை காப்பாற்றச் சென்ற தாயையும் நாய்கள் கடித்தது.

    நாய்கள் கடித்ததால் தலையில் படுகாயங்களுடன் சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் நாய்களை பூங்காவுக்குள் அழைத்து வந்த உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த விவகாரம் தொடர்பாக நாய்களின் உரிமையாளர் புகழேந்தி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    இதைத்தொடர்ந்து சிறுமியின் சிகிச்சை செலவை ஏற்பதாக நாய்களின் உரிமையாளர் புகழேந்தி கூறினார்.

    படுகாயம் அடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


    சென்னை ஆயிரம் விளக்கில் நாய்கள் கடித்து சிறுமி படுகாயம் அடைந்த விவகாரத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஏற்கனவே நாய்களின் உரிமையாளர் புகழேந்தி கைதான நிலையில், அவரது மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மத்திய அரசு தடை செய்துள்ள 23 வகை நாய்களில், ராட்வீலர் வகையும் ஒன்றாகும். ராட்வீலர் வகை நாய்களை இனப்பெருக்கம் செய்யக்கூடாது என்ற தடையும் உள்ளது.

    3 பேர் மீதும் 2 பிரிவுகளின் கீழ் ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல் நிலைய ஜாமினில் விடுவிக்க உள்ள பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நாய்களின் உரிமையாளருக்கு இன்று காலை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாநகராட்சியை பொருத்தவரை எந்த வளர்ப்பு பிராணியாக இருந்தாலும் லைசென்ஸ் பெற வேண்டும். நாய்களுக்கு, அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட வேண்டும்.

    இந்த சம்பவம் தொடர்பாக கால்நடைத் துறையுடன் சேர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு உள்ளது.
    • எம்.எல்.ஏ.க்கள், மேல்சபை எம்.பி.க்கள் பலர் களம் இறங்கி உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் பல தொகுதிகளில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்கள், மேல்சபை எம்.பி.க்கள் உள்பட பலர் களம் இறங்கி உள்ளனர். இவர்கள் வெற்றி பெற்றால், அவர்கள் எந்த பதவியை ராஜினாமா செய்கிறார்களோ அதற்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புகள் உள்ளன.

    கேரள மாநிலத்தில் கடந்த 26-ந் தேதி வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் அங்கு 5 இடைத்தேர்தல்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, வயநாடு தொகுதியில் மட்டுமின்றி உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

    கடந்த முறை வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற அவர், இந்த முறையும் அங்கு வெற்றியை பெறுவார் என தெரிகிறது. ஆனால் காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான ரேபரேலியில் அவர் வெற்றி பெற்றால், வயநாடு தொகுதியில் பெற்ற வெற்றியை ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது. இதனால் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு உள்ளது.

    இதேபோல், கேரள மாநிலத்தில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் ராதாகிருஷ்ணன், முகேஷ், ஷபி பரம்பில், கே.கே.சைலஜா மற்றும் வி.ஜாய் ஆகியோரும் பாராளுமன்ற தேர்தல் களத்தில் உள்ளனர். வடகரை தொகுதியில் பாலக்காடு எம்.எல்.ஏ. ஷபி, மட்டனூர் எம்.எல்.ஏ. சைலஜா போட்டியிடுகின்றனர்.

    கொல்லம் தொகுதியில் கொல்லம் எம்.எல்.ஏ. முகேஷ், அட்டிங்கல் தொகுதியில் வர்கலா எம்.எல்.ஏ. ஜாய், ஆலத்தூர் தொகுதியில் ராதா கிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் வெற்றி பெற்றால் அவர்களது எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்யும் போது அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன.

    • வாக்கு எண்ணும் மையத்தில் ஒரு அறைக்கு 16 கேமராக்கள் உள்ளன.
    • சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோரும் ஆய்வு மேற்கொண்டார்.

    நீலகிரி, ஈரோடு சிசிடிவி கேமராக்கள் பழுதான நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் சென்னையிலும் ஆய்வு செய்தார். உடன், சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோரும் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்த பிறகு, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    வாக்கு எண்ணும் மையத்தில் ஒரு அறைக்கு 16 கேமராக்கள் உள்ளன. போதுமான கேமராக்கள் இருக்கிறதா, முறையாக வேலை செய்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.

    சென்னையில் 3 தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில், 4 அடுக்கு பாதுகாப்பு டோப்பட்டுள்ளது. ஒரு ஷிப்டுக்கு 140 போலீசார் வீதம், 3 ஷிப்ட் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்

    • 48 லட்சம் வாக்காளர்களில் 56 சதவீதம் பேர் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • 2019ஐ காட்டிலும் பெரும்பாலான தொகுதிகளில் 4 சதவீதம் வரை வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.

    மக்களவை முதற்கட்ட தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில் சென்னை தேர்தல் நடத்தும் அலுவலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னை வாக்குகள் பதிவான இயந்திரங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

    வடசென்னையில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

    மத்திய சென்னை வாக்குப்பெட்டிகள் சென்னை லயோலா கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

    வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள லயோலா கல்லூரியில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட உள்ளது.

    அண்ணா பல்கலைக்கு வாக்குபெட்டிகள் கொண்டு வர கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.

    48 லட்சம் வாக்காளர்களில் 56 சதவீதம் பேர் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கட்டுப்பாடு அறையை திறக்க 2 சாவிகள் தேவைப்படும் வகையில் லாக் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சாவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருக்கும். மற்றொரு சாவி மாவட்ட அளவிலான தேர்தல் அதிகாரியிடம் இருக்கும்.

    பூத் சிலிப் வாங்கியவர்களுக்கு பெயர் விடுபட்டதற்கு பழைய பட்டியலை வழங்கி இருக்கலாம்.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும்.

    2019ஐ காட்டிலும் பெரும்பாலான தொகுதிகளில் 4 சதவீதம் வரை வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.

    நகர்ப்புறங்களில் மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் காட்டியுள்ளனர்.

    விழிப்புணர்வு ஏற்படுத்திய போதிலும் சென்னையில் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னையில் மருத்துவ முகாம்கள் மூலம் 5.64 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்.
    • மழைக்கு பின் தொற்றுநோய் எதுவும் பரவவில்லை.

    சென்னை :

    சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சியின் முக்கிய பகுதிகளில் 100 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துவிட்டன. சென்னை மாநகராட்சியில் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் 42 சதவீத வடிகால் பணிகள் முடிந்துள்ளன.

    கடந்த இரண்டரை ஆண்டுகளில் 876 கிலோ மீட்டருக்கு மழைநீர் வடிகால்கள் போடப்பட்டுள்ளன. 876 கி.மீ. பணிகள் நடைபெற்றதால் தான் 60 விழுக்காடு தண்ணீர் 48 மணி நேரத்திற்குள் வடிந்தது.

    சென்னையில் மருத்துவ முகாம்கள் மூலம் 5.64 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். மழைக்கு பின் தொற்றுநோய் எதுவும் பரவவில்லை. மருத்துவ முகாம்கள் தொடரும் என்றார்.

    • சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 4 மட்டும் இன்று செயல்படவில்லை.
    • வெள்ளம் பாதித்த பகுதிகளில் கடைசி தண்ணீர் வடியும் வரை பணிகள் மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    மழை வெள்ள பாதிப்புக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. இதையடுத்து மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார பணிகள் தீவிரப்படுத்துவது குறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 4 மட்டும் இன்று செயல்படவில்லை. தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நாளை பள்ளியை திறக்க மாற்று ஏற்பாடு செய்யப்படும். குடிநீர், கழிவறை, கொசுக்கள் பாதிப்பு இல்லாமல் இருக்க பொது சுகாதாரத்துறை மூலம் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வெள்ளம் பாதித்த பகுதிகளில் கடைசி தண்ணீர் வடியும் வரை பணிகள் மேற்கொள்ளப்படும்.

    வெள்ளம் வடிந்த பகுதிகளில் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், சேற்றுப்புண், சுவாச பிரச்சனை போன்றவை ஏற்படும். எலி காய்ச்சல் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அதற்கான மருந்து, மாத்திரை சாப்பிட வேண்டும்.

    இதுவரை 35 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை அள்ளப்பட்டுள்ளது. களப் பணியாளர்கள் முழு வீச்சில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    எண்ணூரில் எண்ணெய் பாதித்த வார்டு 1, 2 பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் அதிகாரிகள் மற்றும் தலைமை செயலாளர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். சி.பி.சி.எல். நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தினர். தனிக்குழு ஆய்வு மேற்கொள்கிறது. எண்ணெய் பாதிப்பை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கூடுதலாக நிவாரண நிதி வழங்கப்படும்.

    நிவாரணப் பணிகள் முடிந்தாலும் மறுவாழ்வு பணி, மீட்பு பணி போன்றவை தொடர்ந்து நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சமுதாய நலக்கூடங்கள், அம்மா உணவகங்கள், நிவாரண முகாம்களில் தினமும் உணவு தயாரித்து வழங்கப்படுகிறது.
    • நிவாரண முகாம்கள் மட்டுமின்றி அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்களுக்கும் உணவு வினியோகம் செய்து வருகிறோம்.

    சென்னை:

    சென்னையில் பெய்த கனமழை பாதிப்பில் 4-வது நாளாக இன்னும் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவுகள் வினியோகிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    சென்னையில் சில தாழ்வான பகுதிகளில் மண்டலம் வாரியாக 369 பாயிண்ட்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் அதை அகற்றி வருகிறோம். ஒரு மணி நேரத்துக்கு 25 பாயிண்ட் அளவில் மழைநீர் வடிகிறது.

    எங்களுக்கு சவாலாக உள்ள பகுதியாக பள்ளிக்கரணை, பெருங்குடி, பெரும்பாக்கம் பகுதிகள் உள்ளன. சென்னைக்குள் ராயபுரம், பட்டாளம், புளியந்தோப்பு, மணலி, சடையங்குப்பம், கொரட்டூர், பெரம்பூர், ஜமாலியா பகுதிகள் உள்ளன.

    சென்னையில் தேங்கிய மழைநீரை அகற்ற சென்னை மாநகராட்சி எல்லையில் 955 மோட்டார்கள் இயங்கி கொண்டிருக்கிறது. வெளி மாவட்டங்கள் மற்றும் புதிதாக வாங்கப்பட்ட 90 மோட்டார்களும் நீரை அப்புறப்படுத்தி வருகின்றன. இதில் அதிக உந்துதிறன் கொண்ட 52 மோட்டார்கள், 100 எச்.பி. மோட்டார்கள், 50 எச்.பி. மோட்டார்களும் இயங்கி கொண்டிருக்கிறது.

    தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் ஒரு வேளைக்கு 4 லட்சம் பேர்களுக்கு உணவு தயாரித்து வழங்கி வருகிறோம். சமுதாய நலக்கூடங்கள், அம்மா உணவகங்கள், நிவாரண முகாம்களில் தினமும் உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. நிவாரண முகாம்கள் மட்டுமின்றி அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்களுக்கும் உணவு வினியோகம் செய்து வருகிறோம்.

    15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மேற்பார்வையில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் 85 சதவீத இடங்களில் தண்ணீர் வடிந்துள்ளது. மற்ற பகுதிகளில் தண்ணீரை வடிய வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×