என் மலர்
நீங்கள் தேடியது "தெற்கு ரெயில்வே"
- மறுமார்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 9 மணிக்கு கிளம்பி 10.30 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.
- நாள்தோறும் 3 சேவைகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை ஏ.சி. வசதியுள்ள மின்சார ரெயில் சேவை கடந்த 19-ந்தேதி தொடங்கியது. சென்னையில் வெயில் கொளுத்தி வரும் வேலையில் ஏ.சி. மின்சார ரெயிலுக்கு பயணிகள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்த ரெயில் காலை 7 மணிக்கு கடற்கரையில் இருந்து தொடங்கி துறைமுகம், பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, திரிசூலம், தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கபெருமாள்கோவில், பரனூர் ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக 8.35 மணிக்கு செங்கல்பட்டு செல்லும்.
மறுமார்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 9 மணிக்கு கிளம்பி 10.30 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.
பின்னர், கடற்கரையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு 5.25 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும். மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. பின்னர், இரவு கடற்கரையில் இருந்து 7.35 மணிக்கு புறப்பட்டு 8.30 மணிக்கு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. நாள்தோறும் 3 சேவைகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று மதியம் இயக்கப்படும் ஏ.சி. மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை - செங்கல்பட்டுக்கு பிற்பகல் 3.45 மணிக்கு செல்லும் ஏ.சி. பெட்டி கொண்ட மின்சார ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- சென்னையில் வெயில் கொளுத்தி வரும் வேலையில் ஏ.சி. மின்சார ரெயிலுக்கு பயணிகள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
- புறநகர் ஏ.சி. ரெயிலுக்கான கட்டணம் அதிகம் என்று பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை ஏ.சி. வசதியுள்ள மின்சார ரெயில் சேவை கடந்த 19-ந்தேதி தொடங்கியது.
சென்னையில் வெயில் கொளுத்தி வரும் வேலையில் ஏ.சி. மின்சார ரெயிலுக்கு பயணிகள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
வழக்கமான மின்சார ரெயில் கட்டணத்தை விட ஏ.சி. மின்சார ரெயிலில் கட்டணம் பல மடங்கு அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது குறைந்தபட்ச கட்டணம் ரூ.35-ம், அதிகபட்ச கட்டணம் ரூ.105 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரெயில் பயணிகள் உடனான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் புறநகர் ஏ.சி. ரெயிலுக்கான கட்டணம் அதிகம் என்று பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கு பதில் அளித்த தெற்கு ரெயில்வே நிர்வாகம், சென்னை புறநகர் ஏ.சி. ரெயிலுக்கான கட்டணம் குறைய வாய்ப்பு இல்லை என்று உறுதியாக தெரிவித்துள்ளது. கட்டண நிர்ணயம் என்பது தெற்கு ரெயில்வே முடிவு செய்ய முடியாது எனவும் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், புறநகர் ஏ.சி. ரெயில் இயக்கப்பட வேண்டிய நேரம் குறித்து பயணிகள் வாட்ஸ் அப் மூலம் கருத்து தெரிவிக்கலாம். பயணிகள் தங்கள் கருத்துகளை 63747 13251 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பவும் அறிவுறுத்தி உள்ளது.
பீக் அவர்ஸ் நேரங்களில் கூடுதல் ரெயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
- ரெயில் சேவை இன்று காலை 7 மணிக்கு கடற்கரையில் இருந்து தொடங்கியது.
- மறுமார்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 9 மணிக்கு கிளம்பி 10.30 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.
சென்னை:
சென்னை பெருநகரத்தோடு புறநகர் பகுதி மக்களை இணைக்கும் போக்குவரத்து சேவையில் மின்சார ரெயில் சேவை முக்கிய பங்காற்றுகிறது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மின்சார ரெயிலின் சேவை இன்றியமையாதது. அந்தவகையில், தெற்கு ரெயில்வேயின் சென்னை ரெயில்வே கோட்டத்தின் கீழ் நாள்தோறும் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றது.
இதற்கிடையே, கோடை காலத்தில் வெயிலால் பயணிகள் சிரமம் அடைவதை தவிர்க்கும் வகையில், மின்சார ரெயில்களில் ஏ.சி. பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிடையே, சாதாரண மின்சார ரெயிலுக்கு பதிலாக முழுவதுமாக ஏ.சி. பெட்டிகள் கொண்ட மின்சார ரெயில்களை தயாரித்து பயன்படுத்த தெற்கு ரெயில்வே திட்டமிட்டது. இதுகுறித்து ஆய்வுகளும் செய்யப்பட்டது.
பின்னர், பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) ஏ.சி. மின்சார ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. மொத்தம் 12 பெட்டிகள் கொண்ட இந்த ஏ.சி. மின்சார ரெயில் தயாரிப்பு பணி கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்தது. கடற்கரை-செங்கல்பட்டு இடையே ஏ.சி. மின்சார ரெயில் சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த மார்ச் மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டது.
இந்த நிலையில், சென்னையின் முதல் ஏ.சி. மின்சார ரெயில் இன்று முதல் இயக்கப்பட்டது.
அதன்படி முதல் ரெயில் சேவை இன்று காலை 7 மணிக்கு கடற்கரையில் இருந்து தொடங்கியது.
இந்த ரெயில் துறைமுகம், பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, திரிசூலம், தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கபெருமாள்கோவில், பரனூர் ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக 8.35 மணிக்கு செங்கல்பட்டு செல்லும்.
மறுமார்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 9 மணிக்கு கிளம்பி 10.30 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.
- ஏ.சி. மின்சார ரெயில் பயணிகள் சேவையை தொடங்குவதற்காக தாம்பரம் பணிமனையில் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
- சிறப்பு விருந்தினரின் தேதிக்காக ரெயில் தொடக்க விழா நிறுத்தி வைக்கப்பட்டது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கடற்கரை - தாம்பரம், கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில்களில் பயணம் செய்து வருகிறார்கள்.
ஆனால் இந்த வழித்தடத்தில் குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண மின்சார ரெயில்களே இயக்கப்பட்டு வருகின்றன. எனவே இந்த வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். பயணிகளின் கோரிக்கையை ஏற்று சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக மின்சார ரெயில் தயாரிக்கப்பட்டு கடந்த மாதம் சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டம் நடைபெற்றபோது ஏ.சி. பகுதியில் அதிர்வு பிரச்சனை எழுந்தது. இதையடுத்து அது சரி செய்யப்பட்டது. தற்போது ஏ.சி. மின்சார ரெயில் பயணிகள் சேவையை தொடங்குவதற்காக தாம்பரம் பணிமனையில் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பாம்பன் பாலத்தை திறந்து வைத்தபோது அதனுடன் சேர்த்து சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் சேவையையும் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் அப்போது தொடக்க விழா நடத்தப்படவில்லை.
நேற்று முன்தினம் நாடு முழுவதும் ஏ.சி. வசதி கொண்ட 14 புதிய புறநகர் ரெயில் சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டன. ஆனால் அப்போதும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கப்படவில்லை. சென்னையில் ஏ.சி. மின்சார ரெயில் சேவையை தொடங்கும் பணிகள் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், "இந்தியா முழுவதும் உள்ள பல நகரங்களில் குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் ஏ.சி. வசதி கொண்ட மின்சார ரெயில் முதல் முறையாக இயக்கப்பட உள்ளது. தற்போது சிறப்பு விருந்தினரின் தேதிக்காக ரெயில் தொடக்க விழா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" என கூறினர்.
இந்நிலையில், நாளை முதல் தமிழ்நாட்டின் முதல் குளிர்சாதன மின்சார ரயில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. 12 பெட்டிகள் கொண்ட சென்னையின் முதல் குளிர்சாதன மின்சார புறநகர் ரயில் கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் விரைவில் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் 29 கிமீ பயணத்திற்கு ரூ.95 ஆகவும், 9 கிமீக்கு ரூ.35 ஆகவும், 24 கிமீக்கு ரூ.70 ஆகவும், 34 கிமீக்கு ரூ.95 ஆகவும் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
- ரெயில் பயணிகள் குறிப்பிட்ட அளவு மட்டுமே சுமைகளை (லக்கேஜ்) கொண்டு செல்ல வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.
- தடையை மீறி கொண்டு செல்லும் நபர்களிடம் இருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும் 160 ரெயில்களும், எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து 100 ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த 2 ரெயில் நிலையங்களை ஒவ்வொரு நாளும் தலா 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதுவே விடுமுறை மற்றும் விழா நாட்களில் எண்ணிக்கை அதிகரிக்கும். ரெயில் பயணிகள் வெடிபொருட்கள், ரசாயன மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி கொண்டு செல்லும் நபர்களிடம் இருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோடை விடுமுறையை கொண்டாட சென்னையில் இருந்து ஏராளமான பயணிகள் தங்களின் சொந்த ஊர்களுக்கும், ஊட்டி, கொடைக்கானல் ஆகிய சுற்றுலாத்தலங்களுக்கும் செல்கிறார்கள். ரெயில் பயணிகள் குறிப்பிட்ட அளவு மட்டுமே சுமைகளை (லக்கேஜ்) கொண்டு செல்ல வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. ஆனால், சமீப காலமாக பயணிகள் கூடுதல் சுமை ஏற்றி செல்கிறார்கள். இதுகுறித்து தெற்கு ரெயில்வேக்கு பல்வேறு புகார்கள் வந்தது. எனவே, ரெயில்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் சுமை எடுத்துச் செல்லும் பயணிகளிடம் கட்டணம் விதிக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில் கூறியிருப்பதாவது:-
ரெயில்களில் ஏ.சி. முதல் வகுப்பு பெட்டியில் 70 கிலோ வரையிலும், 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் 50 கிலோ வரையிலும், 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் 40 கிலோ வரையிலும் பயணிகள் எடுத்து செல்ல அனுமதி உண்டு. இதேபோல, முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை பெட்டிகளில் பயணிப்பவர்கள் 40 கிலோ வரையிலும், 2-ம் வகுப்பு பெட்டிகளில் பயணிப்பவர்கள் 35 கிலோ வரையிலும் மட்டுமே உடைமைகளை எடுத்துச் செல்ல வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலான எடையில் உடைமைகளை கொண்டு வரும் பயணிகளுக்கு 10 முதல் 15 கிலோ வரையிலான கூடுதல் சுமைக்கு ஒவ்வொரு கிலோவுக்கும் 1.5 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல, பயணிகள் கொண்டுவரும் உடமைகளை அளவீடு செய்யும் நடைமுறைகள் குறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.
- பராமரிப்பு பணிகள் காரணமாக செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ், திருச்சி - ஈரோடு இன்று கரூர் வரை மட்டும் இயக்கப்படும்.
- ஈரோட்டிலிருந்து செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் பிற்பகல் 3.05 மணிக்கு கரூரில் இருந்து புறப்படும்.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஈரோடு ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கரூர் வழியாக செல்லும் ரெயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ், திருச்சி - ஈரோடு இன்று கரூர் வரை மட்டும் இயக்கப்படும்.
ஈரோட்டிலிருந்து செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் பிற்பகல் 3.05 மணிக்கு கரூரில் இருந்து புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புதுச்சேரியில் இருந்து 9, 16 ஆகிய தேதிகளில் மாலை புறப்பட்டு திருப்பதி செல்லும் பயணிகள் ரெயில், அதற்கு மாற்றாக முண்டியம்பாக்கத்தில் இருந்து மாலை 3.55 மணிக்கு புறப்படும்.
- எழும்பூரில் இருந்து வரும் 9, 16 ஆகிய தேதிகளில் காலை புறப்பட்டு புதுச்சேரி செல்லும் பயணிகள் ரெயில் விழுப்புரம்-புதுச்சேரி இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, விழுப்புரத்தில் நிறுத்தப்படும்.
சென்னை:
திருச்சி கோட்டத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் சில ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* தாம்பரத்தில் இருந்து வரும் 9, 16 ஆகிய தேதிகளில் காலை 9.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயில் விக்கிரவாண்டி-விழுப்புரம் இடையே பகுதி நேர ரத்துசெய்யப்பட்டு, விக்கிரவாண்டியில் நிறுத்தப்படும்.
* சென்னை எழும்பூரில் இருந்து வரும் 9, 16 ஆகிய தேதிகளில் காலை 6.35 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி செல்லும் பயணிகள் ரெயில் விழுப்புரம்-புதுச்சேரி இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, விழுப்புரத்தில் நிறுத்தப்படும்.
* விழுப்புரத்தில் இருந்து வரும் 9, 16 ஆகிய தேதிகளில் மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் பயணிகள் ரெயில், அதற்கு மாற்றாக விக்கிரவாண்டியில் இருந்து மதியம் 1.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும்.
* விழுப்புரத்தில் இருந்து 9, 16 ஆகிய தேதிகளில் மதியம் 2.35 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரெயில், அதற்கு மாற்றாக சேர்ந்தனூர் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.48 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும்.
* புதுச்சேரியில் இருந்து 9, 16 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் பயணிகள் ரெயில், அதற்கு மாற்றாக முண்டியம்பாக்கத்தில் இருந்து மாலை 3.55 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும்.
* சென்னை எழும்பூரில் இருந்து 9, 16 ஆகிய தேதிகளில் காலை 10.20 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16127), அதற்கு மாற்றாக எழும்பூரில் இருந்து காலை 11.50 மணிக்கு (1 மணி நேரம் 30 நிமிடம் தாமதம்) புறப்பட்டு குருவாயூர் செல்லும்.
* திருச்சியில் இருந்து 9, 16 ஆகிய தேதிகளில் காலை 11 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் (22676), அதற்கு மாற்றாக திருச்சியில் இருந்து மதியம் 12 மணிக்கு (1 மணி நேரம் தாமதம்) புறப்பட்டு எழும்பூர் வரும்.
* புதுச்சேரியில் இருந்து 9, 16 ஆகிய தேதிகளில் மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும் அதிவிரைவு ரெயில் (12868), அதற்கு மாற்றாக புதுச்சேரியில் இருந்து மாலை 3.05 மணிக்கு (50 நிமிடம் தாமதம்) புறப்பட்டு ஹவுரா செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- எந்த ரெயில், எந்த பிராந்தியம் வழியாக கடந்து சென்றாலும், அந்த பிராந்தியத்தின் உணவு, பயணிகளுக்கு கிடைக்கச் செய்வோம்.
- வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என எந்த பகுதியாக இருந்தபோதிலும், அந்த பகுதி உணவு வகைகள் கிடைக்கும்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவை கேள்வி நேரத்தில் தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் ஒரு கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டில் ஓடும் 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தென் இந்திய உணவு வகைகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று அவர் கோரினார். ரெயில்களின் சமையலறை பெட்டி ஊழியர்கள் பெரும்பாலும் இந்தியிலேயே பேசுவதால், பயணிகள் தங்கள் தேவைகளை கேட்பதில் சிரமம் நிலவுவதாகவும் அவர் கூறினார்.
அதற்கு ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-
ரெயில் பயணிகளுக்கு உள்ளூர் உணவு கிடைப்பதை உறுதி செய்யும் முக்கியமான பரிசோதனையை தெற்கு ரெயில்வேயில் ரெயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இன்னும் நிறைய ரெயில்களில் உள்ளூர் உணவுகள் கிடைக்கும்.
இத்திட்டம், நாடு முழுவதற்குமானது. எந்த ரெயில், எந்த பிராந்தியம் வழியாக கடந்து சென்றாலும், அந்த பிராந்தியத்தின் உணவு, பயணிகளுக்கு கிடைக்கச் செய்வோம்.
வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என எந்த பகுதியாக இருந்தபோதிலும், அந்த பகுதி உணவு வகைகள் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு கேள்விக்கு அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-
ரெயில் பாதுகாப்பில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. லாலுபிரசாத் யாதவ் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, ஆண்டுக்கு சுமார் 700 ரெயில் விபத்துகள் நடந்தன. மம்தா பானர்ஜி ரெயில்வே மந்திரியாக இருந்தபோது சுமார் 400 விபத்துகள் நடந்தன. மல்லிகார்ஜுன கார்கே ரெயில்வே மந்திரியாக இருந்தபோது சுமார் 385 விபத்துகள் நடந்தன.
ஆனால், தற்போது முடிவடைந்துள்ள 2024-2025 நிதியாண்டில் 81 ரெயில் விபத்துகள்தான் நடந்தன. ரெயில் விபத்துகளை மேலும் குறைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
- சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 12.35, 1.15 மாலை 3.10 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
- கடற்கரை-எண்ணூர் இடையேயும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
சென்னை:
சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி - கவரைப்பேட்டை ரெயில் நிலையம் இடையே இன்று மற்றும் 5 ஆகிய தேதிகளில் மதியம் 1.20 மணி முதல் மாலை 5.20 மணி வரை (4 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்காரணமாக, அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் சில மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முழுவதுமாக ரத்து
* சென்ட்ரலில் இருந்து காலை 10.30, 11.35 மதியம் 1.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30 மாலை 3.15, 3.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
* சென்ட்ரலில் இருந்து காலை 5.40, 10.15, மதியம் 12.10 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 12.35, 1.15 மாலை 3.10 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 12.40, 2.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
* ஆவடியில் இருந்து காலை 4.25 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
பகுதி நேர ரத்து
* செங்கல்பட்டில் இருந்து காலை 9.55 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்பட்டு, கடற்கரையில் நிறுத்தப்படும்.
* கும்மிடிப்பூண்டியில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி - கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, கடற்கரையில் இருந்து புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று மற்றும் 5 ஆகிய தேதிகளில் மட்டும் காலை 10.30 மணிக்கு சென்ட்ரல் - பொன்னேரி, மதியம் 1.18 மணிக்கு பொன்னேரி - சென்ட்ரல், மாலை 3.56 மணிக்கு எண்ணூர் - சென்ட்ரல், காலை 11.35, மதியம் 1.40 மணிக்கு சென்ட்ரல்- மீஞ்சூர், மாலை 4.14 மணிக்கு மீஞ்சூர் - சென்ட்ரல், மதியம் 2.40 மணிக்கு கடற்கரை - பொன்னேரி, மாலை 4.47 மணிக்கு பொன்னேரி - கடற்கரை, மதியம் 12.40 மணிக்கு கடற்கரை-எண்ணூர் இடையேயும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
- யானைகள் ரெயில் தண்டவாளங்களை கடக்கும் 11 இடங்கள் அடையாளம் காணப்பட்டது.
- 2 இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழ்நாடு - கேரள வனப்பகுதிகளில் தண்டவாளங்களை கடக்க முற்படும்போது ரெயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க கோரியும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தெற்கு ரெயில்வே நிர்வாகம் மேற்கொள்ளக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் திண்டுக்கல்லைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தெற்கு ரெயில்வே தரப்பில் ஆஜரான வக்கீல் ராம்குமார், 'ரெயில் மோதி யானைகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு மற்றும் கேரள வனத்துறையுடன் இணைந்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் கோவை, பாலக்காடு ஒட்டிய வனப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது.
யானைகள் ரெயில் தண்டவாளங்களை கடக்கும் 11 இடங்கள் அடையாளம் காணப்பட்டது. இதில் 9 இடங்களில் சுரங்க வழித்தடங்கள் அமைக்கப்பட்டு தண்டவாளங்களுக்கு அடியில் யானைகள் கடந்து செல்லும் வகையில் வழி அமைக்கப்பட்டுள்ளது. 2 இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல போத்தனூர் - மதுக்கரை பகுதிகளில் தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் யானை நடமாட்டத்தைக் கண்டறியும் வகையில் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் 12 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் 2 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இந்த நவீன கேமராக்கள் யானைகள் ரெயில் தண்டவாளங்களுக்கு அருகில் உள்ள 150 மீட்டர் தூர சுற்றளவுக்குள் வந்தால் உடனடியாக அருகில் உள்ள ரெயில் நிலைய மேலாளர் மற்றும் ரெயி்ல் ஓட்டுநர்களுக்கு தகவல்களை அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
தெற்கு ரெயில்வே நிர்வாகத்தின் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக பாலக்காடு - போத்தனூர் வழித்தடத்தில் கடந்த 27 மாதங்களாக ரெயில் மோதி ஒரு யானை கூட சாகவில்லை.'' என்று கூறினார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இதுகுறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி தெற்கு ரெயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர்.
- தமிழகத்தில் வருகிற 31ஆம் தேதி அரசு விடுமுறையாகும்.
- அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி சென்னை புறநகர் ரெயில் சேவை இயக்கப்படும்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திங்கட்கிழமையன்று (மார்ச் 31ஆம் தேதி) புறநகர் ரெயில் சேவை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் வருகிற திங்கட்கிழமை அரசு விடுமுறையாகும்.
- மதுரையில் இருந்து புறப்பட்டு காச்சிகுடா செல்லும் சிறப்பு ரெயில், வரும் ஏப்ரல் 9-ந்தேதி முதல் மே 7-ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு சார்லபள்ளி செல்லும் சிறப்பு ரெயில், வரும் ஏப்ரல் 4-ந்தேதி முதல் மே 2-ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
கோடை காலத்தை முன்னிட்டு பயணிகள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரெயில்கள் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* தெலுங்கானா மாநிலம் காச்சிகுடாவில் இருந்து புறப்பட்டு மதுரை வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.07191), வரும் ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 5-ந்தேதி வரையிலும் (திங்கட்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து புறப்பட்டு காச்சிகுடா செல்லும் சிறப்பு ரெயில் (07192), வரும் ஏப்ரல் 9-ந்தேதி முதல் மே 7-ந்தேதி வரையிலும் (புதன்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.
* மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட்டில் இருந்து புறப்பட்டு ஈரோடு வரும் சிறப்பு ரெயில் (07189), வரும் ஏப்ரல் 4-ந்தேதி முதல் மே 2-ந்தேதி வரையிலும் (வெள்ளிக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, ஈரோட்டில் இருந்து புறப்பட்டு நாந்தேட் செல்லும் சிறப்பு ரெயில் (07190), வரும் ஏப்ரல் 6-ந்தேதி முதல் மே 4-ந்தேதி வரையிலும் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.
* காச்சிக்குடாவில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில் வரும் சிறப்பு ரெயில் (07435), வரும் ஏப்ரல் 4-ந்தேதி முதல் மே 2-ந்தேதி வரையிலும் (வெள்ளிக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு காச்சிக்குடா செல்லும் சிறப்பு ரெயில் (07436), வரும் ஏப்ரல் 6-ந்தேதி முதல் மே 4-ந்தேதி வரையிலும் (ஞாயிற்றுக்கிழமை) நீட்டிக்கப்பட்டுள்ளது.
* ஐதராபாத் சார்லபள்ளியில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் வரும் சிறப்பு ரெயில் (07601), வரும் ஏப்ரல் 3-ந்தேதி முதல் மே 1-ந்தேதி வரையிலும் (வியாழக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு சார்லபள்ளி செல்லும் சிறப்பு ரெயில் (07602), வரும் ஏப்ரல் 4-ந்தேதி முதல் மே 2-ந்தேதி வரையிலும் (வெள்ளிக்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.