என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அநீதி"

    • வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் வசந்தபாலன்.
    • இவர் தற்போது அர்ஜுன் தாஸ் நடிப்பில் அநீதி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

    தமிழ் சினிமாவில் வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் வசந்த பாலன். இவர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ஜெயில் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்போது அநீதி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சார்ப்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன் நடித்துள்ளார். அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

     

    அநீதி

    அநீதி

    இந்நிலையில் அநீதி படத்தில் இடம்பெற்றுள்ள திகட்ட திகட்ட காதலிப்போம் என்ற பாடலை இன்று மாலை 6 மணிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இணையத்தில் வெளியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

    • வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் வசந்தபாலன்.
    • இவர் தற்போது அர்ஜுன் தாஸ் நடிப்பில் அநீதி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

    தமிழ் சினிமாவில் வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் வசந்த பாலன். இவர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ஜெயில் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்போது அநீதி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சார்ப்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன் நடித்துள்ளார். அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.


    அநீதி

    இதையடுத்து அநீதி படத்தில் இடம்பெற்றுள்ள திகட்ட திகட்ட காதலிப்போம் என்ற பாடலை இன்று மாலை 6 மணிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இணையத்தில் வெளியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகின. இந்நிலையில், இப்படத்தின் பாடல் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    • ராகுல்காந்தி பதவி பறிப்பு அநீதியானது என மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டியளித்தார்.
    • 140 பேரை போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர்

    ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து விருதுநகரில் மாணிக்கம்தாகூர் எம்.பி. தலைமையில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 140 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராகுல் காந்தி பதவிபறிப்பு என்பது அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். கர்நாடக மாநிலம் கோலார் சட்டசபை தொகுதியில் பேசிய பேச்சின் அடிப்படையில் குஜராத்தில் தீர்ப்பு பெற்று அவர் வீட்டை காலி செய்யும் வரை பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    ராகுல் காந்திக்கு இழைக்கப்பட்ட அநீதியை இனி மக்கள் மன்றத்திற்கு எடுத்து செல்வோம். கர்நாடக மாநில சட்ட சபையின் போதும் இந்த பிரச்சினையை மக்களிடம் எடுத்து செல்ல காங்கிரஸ் நடவடிக்கை மேற்கொள்ளும். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணா மலை தி.மு.க.வினர் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். இதனை தி.மு.க.வினர் சட்டபூர்வமாக எதிர்கொள்வர்.

    மத்திய அரசு சி.ஆர்.பி.எப். தேர்வினை தமிழில் நடத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் மத்திய அரசு அதற்கான நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கதாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மறியலில் விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் ஸ்ரீ ராஜாசொக்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ண சாமி, முன்னாள் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட நிர்வாகிகள் வக்கீல் சீனிவாசன், சிவகுருநாதன், வெயிலுமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அர்ஜுன் தாஸ்-துஷரா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் அநீதி.
    • இப்படத்தை வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் போன்ற படங்களை இயக்கிய வசந்தபாலன் இயக்கியுள்ளார்.

    தமிழ் சினிமாவில் வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன், ஜெயில் போன்ற படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் வசந்த பாலன். இவர் தற்போது "அநீதி" என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சார்ப்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன் நடித்துள்ளார். அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.



    படத்தின் வெளியீட்டு உரிமையை இயக்குநர் ஷங்கரின் 'எஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் பெற்றுள்ளது. 'அநீதி' திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. இந்நிலையில், 'அநீதி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படம் வரும் ஜூலை 21-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    • அர்ஜுன் தாஸ்-துஷரா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் அநீதி.
    • இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

    தமிழில் வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன், ஜெயில் போன்ற படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் வசந்த பாலன். இவர் தற்போது "அநீதி" என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சார்ப்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன் நடித்துள்ளார்.



    அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜூலை 21-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் வெளியீட்டு உரிமையை இயக்குநர் ஷங்கரின் 'எஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் பெற்றுள்ளது. 




    இந்நிலையில் 'அநீதி' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் நடிகை வனிதா விஜயகுமார் பேசியதாவது, "இத்திரைப்படத்தின் மூலம் ஒரு இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரை உலகில் நான் மீண்டும் பிரவேசிக்கிறேன். இது ஒரு மிகவும் அருமையான திரைப்படம். இதில் அதி முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் ஒன்றை எனக்கு அளித்த வசந்த பாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. திரைத்துறையின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருந்தும் வசந்த பாலனிடம் துளி அளவு கர்வம் கூட இல்லை.



    அத்தனை எளிமையாக அனைவரிடமும் பழகுகிறார். அர்ஜுன் தாசை தமிழ் திரை உலகின் ஷாருக்கான் என்று கூறலாம். மிகைப்படுத்துவதற்காக நான் இதை கூறவில்லை. 'அநீதி' படம் திரைக்கு வரும் போது நீங்கள் இதை உணர்வீர்கள். துஷரா விஜயன் மிகவும் திறமையான நடிகை. இப்படத்தில் பணியாற்றி உள்ள அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்கள். 'அநீதி' திரைப்படம் பெரிய வெற்றியை பெறும்" என்றார். 

    • நடிகர் அர்ஜுன் தாஸ் தற்போது "அநீதி" திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற ஜூலை 21-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழ் சினிமாவில் வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன், ஜெயில் போன்ற படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் வசந்த பாலன். இவர் தற்போது "அநீதி" என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சார்ப்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன் நடித்துள்ளார். அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.


    அநீதி போஸ்டர்

    இப்படத்தின் வெளியீட்டு உரிமையை இயக்குனர் ஷங்கரின் 'எஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, "அநீதி" திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இது தொடர்பான போஸ்டரை படகுழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    "அநீதி" திரைப்படம் வரும் ஜூலை 21-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் அர்ஜுன் தாஸ் தற்போது "அநீதி" திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு மாலைமலருக்கு பிரத்யேக பேட்டியளித்தனர்.

    இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "அநீதி". இதில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சார்ப்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன் நடித்துள்ளார். அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.



    இப்படத்தின் வெளியீட்டு உரிமையை இயக்குனர் ஷங்கரின் 'எஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் பெற்றது. இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் புரொமோஷனுக்காக மாலைமலருக்கு அநீதி படக்குழு சிறப்பு பேட்டியளித்தனர். அப்போது நடிகை துஷாரா விஜயனிடம் சார்ப்பட்டா பரம்பரை மாரியம்மா இந்த படத்துல எந்த மாதிரியான ரோல் பண்ணிருக்காங்க என்று கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதிலளித்த துஷாரா விஜயன், வேற மாரியா ஒன்னு பண்ணியிருக்கேன். நான் பண்ண கதாப்பாத்திரத்துலயே இது ரொம்ப வித்யாசமான கதாப்பாத்திரம். இந்த படம் ஒரு வித்யாசமான கேரக்டரா வந்திருக்கு என்றார்.



    • இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் உருவான திரைப்படம் “அநீதி”.
    • இப்படம் ஜூலை 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    வெயில், அங்காடி தெரு, காவிய தலைவன் போன்ற படங்களை இயக்கி திரைத்துறையில் நீங்கா இடம்பிடித்த இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் உருவான திரைப்படம் "அநீதி". இந்த படத்தில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சார்ப்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன் நடித்துள்ளார்.


    அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். திரில்லர் கதைக்களத்தில் உருவான "அநீதி" திரைப்படம் ஜூலை 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் பார்த்த பிரபலங்கள் பலர் படக்குழுவிற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், "அநீதி" திரைப்படத்தை பார்த்த நடிகர் சிவகுமார் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘அநீதி’.
    • இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'அநீதி'. இந்த படத்தில் துஷாரா விஜயன், வனிதா, பரணி, சுரேஷ் சக்ரவர்த்தி, காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ஜூலை 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


    இந்நிலையில், இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து நடிகர் காளி வெங்கட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "திக்குமுக்காடுற அளவிற்கு அநீதி படத்தை கொண்டாடுகிறீர்கள் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வாய்ப்பு கொடுத்த வசந்த பாலன் அவர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் ஷங்கருக்கும் என் நன்றி. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்திற்கு பேராதரவு கிடைத்திருக்கிறது என்று தெரிகிறது. உங்கள் அனைவருக்கும் திருப்பி என்ன கொடுப்பது என்று தெரியவில்லை" என்று பேசினார்.


    • மனிதர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்.
    • அநீதியின் காரணமாக கியாமத் நாளில் இருள் சூழ்ந்துகொள்ளும்.

    இன்று நம்மில் பலர், பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவது, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது, குர்ஆன் ஓதுவது, ஹஜ்ஜை நிறைவேற்றுவது போன்ற கடமைகளை செய்தாலே போதும், சுவனம் சென்று விடலாம் என்று நினைக்கிறார்கள்.

    ஆனால், சக மனிதர்களிடம் நல்ல முறையில் நடந்து, அன்பு, நேர்மை, நீதி ஆகிய நற்பண்புகளை வளர்த்து, போட்டி, பொறாமை, புறம், நம்பிக்கை துரோகம், சூழ்ச்சி போன்ற அல்லாஹ் வெறுக்கக்கூடிய செயல்களை வெறுத்து வாழ்ந்து, தங்கள் குழந்தைகளுக்கும் அதனையே கற்றுக்கொடுப்பதே சிறந்தது.

    மற்ற மனிதர்களிடம் நடந்து கொள்ளும் முறைக்கு அல்லாஹ்விடம் கேள்வி, கணக்கு கடுமையாக இருக்கும். ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் `வறியவர் யார்?' என்று கேட்கப்பட்டபோது, `இம்மையில் மூட்டை, மூட்டையாக நன்மைகளை சேர்த்து விசாரணைக்காக ஒருவர் வருவார். அவருடைய நன்மைகளில் இருந்து அவரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுக்கப்படும்.

    அதாவது இம்மையில் மற்றவர்களை திட்டி இருப்பார், அவதூறு கூறியிருப்பார், உரிமைகளைப் பறித்திருப்பார், அல்லது அநீதம் இழைத்திருப்பார். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு இனி கொடுக்க நன்மைகள் எதுவும் இல்லை எனும் நிலை வரும்போது அவர்களின் பாவங்கள் அந்த நபர் மீது சுமத்தப்படும். அவரது ஈடேற்றத்திற்கு ஒன்றுமே இருக்காது. இறுதியில் அவர் நரகில் தூக்கி வீசப்படுவார்', இவர்தான் வறியவர் என்று கூறினார்கள்.

    அண்டை வீட்டினர் அந்நியராக இருந்தாலும் அவர்களுக்கும் உபகாரம் செய்யச் சொல்லும் மார்க்கமாக இருக்கும் இஸ்லாம், அநீதி இழைக்கும் மக்களைப் பற்றியும், அநீதத்திற்கு உள்ளாக்கப்பட்ட மக்களின் நிலைமை பற்றியும் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.

    நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்: மனிதர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான், 'நான் அநீதியை என் மீது ஹராமாக்கிக் கொண்டேன். எனவே நீங்களும் உங்களுக்குள் அநீதி இழைத்துக் கொள்ளாதீர்கள். அநீதியின் காரணமாக கியாமத் நாளில் இருள் சூழ்ந்துகொள்ளும். அப்பொழுது ஈடேற்றம் பெறுவதற்கான வழியே இருக்காது'.

    ஒருவரை ஆளுநராக நியமித்து அனுப்பும் பொழுது, நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் உரிமைகளைப் பற்றி இவ்வாறு அறிவுரை பகர்வார்கள், 'அநீதி இழைக்கப்பட்டவரின் துஆவிற்கும், இறைவனுக்கும் எந்த வித தடையும் இருப்பதில்லை'.

    'அநீதி இழைக்கப்பட்டவர் பாவியாக இருந்தாலும் அவரின் துஆ அவசியம் ஏற்கப்படும்' என்றும் கூறப்பட்டுள்ளது.

    நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள், 'எவருடைய நாவின் தீங்கிலிருந்தும், கரங்களின் தீங்கிலிருந்தும் பிற மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களோ அவரே முஸ்லிம்'. நாம் பிறருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருக்க வேண்டுமே தவிர, நம்மால் மற்றவர்களுக்கு தொந்தரவோ, கெடுதலோ, அநியாயமோ ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். அநியாயம் என்று தெரிந்தும், அதைத் தட்டிக் கேட்காமல் இருப்பவர்களும் குற்றவாளிகளே.

    `முஃமின்கள் யார்' என்று கேட்கப்பட்டது. `யாரைப் பார்த்து பிறர் பயமற்று இருக்கிறார்களோ அவர்கள் தான் முஃமின்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் பதில் அளித்தார்கள். இன்று போகிற போக்கில் தங்கள் சொல்லாலும், செயலாலும் பிறருக்கு துன்பத்தைத் தரக்கூடிய மக்களை நாம் பார்க்கிறோம்.

    சரி, இறைவன் வெறுக்கக்கூடிய காரியங்களில் இருந்து நம்மை முழுவதுமாக விலக்கிக் கொள்வது எப்படி?

    நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடியே என்றால், நிச்சயம் நமது செயல்கள் எல்லாம் நற்செயல்களே.

    இரண்டாவதாக நம்முடைய வணக்க வழிபாடுகளில் உள்ளத்தூய்மையும், இறைவன் எனக்கு மிகச் சமீபமாக இருந்து என்னுடைய அத்தனை செயல்களையும் உற்று நோக்குகிறான் என்ற அச்சமும் இருக்க வேண்டும். எப்படிப்பட்ட அச்சம் என்றால், இறைவனைக் குறித்தான பயத்தில் தானாகவே கண்ணீர் வர வேண்டும். தொழுகையில் மட்டுமல்ல, பகலிலும், இரவிலும், குர் ஆன் ஓதும் பொழுதும், ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்தாலும், சும்மா இருந்தாலும் உள்ளச்சத்ததோடு உங்களைப் படைத்த இறைவனை நினைவு கூருங்கள்.

    இறைவன் நம்முடைய வணக்க வழிபாடுகளையும், மற்ற நற்குணங்களையும் பொருந்திக் கொள்வானாக. நம்முடைய பாவங்களையும் மன்னித்து, குடும்பம், குடும்பமாக சுவனத்தில் நுழையக் கூடியவர்களாக நம்மை ஆக்கி, அவனின் திருமுகத்தைப் பார்க்கக் கூடிய பெரும் பேற்றை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக! ஆமீன்!

    • ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை தற்போது மகாராஷ்டிராவில் நடந்து வருகிறது.
    • எங்களின் 2-வது இந்திய ஒற்றுமை யாத்திரையில் நியாய என்ற புதிய வார்த்தையைச் சேர்த்துள்ளோம் என்றார்.

    மும்பை:

    காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை தற்போது மகாராஷ்டிராவில் நடைபெற்று வருகிறது.

    மகாராஷ்டிர மாநிலத்தின் துலே பகுதியில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை இன்று நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:

    எங்களின் இரண்டாவது இந்திய ஒற்றுமை யாத்திரையில் நியாய என்ற புதிய வார்த்தையைச் சேர்த்துள்ளோம்.

    ஏனென்றால் எங்களின் முதல் யாத்திரையில் விவசாயிகள், இளைஞர்கள் அல்லது பெண் யாராக இருந்தாலும், வன்முறைக்கும் வெறுப்புக்கும் காரணம் சொன்னது அநீதிதான்.

    90 சதவீதம் இந்தியர்கள் அநீதியை எதிர்கொள்கிறார்கள் தினமும்.

    இது உங்களுக்கெல்லாம் தெரியுமா இல்லையா என்று தெரியவில்லை, ஆனால் இந்தியாவில் உள்ள 22 பேரின் சொத்து, 70 முக்கிய நபர்களின் சொத்துக்கு சமம் என தெரிவித்தார்.

    ×