search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாவட்டங்கள்"

    • ரெயில் மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஜோசப், தம்புசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்.
    • டெல்டா மாவட்டங்களில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    தஞ்சாவூா்:

    காவிரியில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் விட மறுக்கும் மற்றும் காவிரி ஒழுங்காற்றுகுழு உத்தரவுபடி தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழகத்திற்கு உரிய நீரை திறக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் இன்று (செவ்வாய்க்கிழமை) தஞ்சை, திருவாரூர் , நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 டெல்டா மாவட்டங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த இரு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் இணைந்து அறிவித்தன.

    அதன்படி டெல்டா மாவட்டங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ரெயில் நிலையத்திற்கு வந்த மயிலாடுதுறை பயணிகள் ரெயிலை விவசாயிகள் தண்டவாளத்தில் அமர்ந்து மறித்தனர். இந்த ரெயில் மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஜோசப், தம்புசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்.

    இந்த ரெயில் மறியல் போராட்டத்தில் சி.பி.ஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஆர்.வீரமணி, துரை அருள்ராஜன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆர்.சதாசிவம், வி.எம்.கலியபெருமாள், ஏ.ராஜேந்திரன், எம்.ஆர்.முருகேசன், பி.பரந்தாமன் உட்பட 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது விவசாயிகள் கர்டாக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுப்பட்டவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கபட்டனர். இதன் பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    இதே போல் திருவாரூரில் இருந்து பட்டுகோட்டை நோக்கி சென்ற பயணிகள் ரெயிலை திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தில் விவசாயிகள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்திற்கு திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. மாரிமுத்து தலைமை தாங்கினார். போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுப்பட்ட எம்.எல்.ஏ. மாரிமுத்து உள்பட அனைவரையும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் பயணிகள் ரெயில் ½ மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    இதைப்போல் நீடாமங்கலம் ரெயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் திருவாரூர் மாவட்டத் துணைச்செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் திருவாரூர் மாவட்ட பொருளாளர் ராவணன் ஆகியோர் தலைமையில் காரைக்கால் பயணிகள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், வலங்கைமான் (சிபிஎம்) ஒன்றிய செயலாளர் ராதா மற்றும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரையும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதைத் தொடர்ந்து ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதைப்போல் திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, கும்பகோணம், நாகை, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் விவசாய சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் டெல்டா மாவட்டங்களில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    • அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது
    • தமிழகத்தில் சராசரியாக வெப்பநிலை 29.5 டிகிரி செல்ஸியஸ் முதல் 33.4 டிகிரி செல்ஸியஸ் என்ற அளவில் உள்ளது

    காலநிலை மாற்றம் :

    உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவிலும் தண்ணீர் பஞ்சம், வெப்ப அலை என்ற ரூபங்களில் ருத்ர தாண்டவம் ஆடத்தொடங்கியுள்ளது. ஒருபுறம் பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட நகரங்கள் தண்ணீர் பஞ்சத்தில் தத்தளித்து வரும் நிலையில் நாடு முழுவதும் ஹீட் ஸ்ட்ரோக் மரணங்கள்  அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் காலநிலை குழப்பத்தால் வெயிலுடன் சேர்ந்து திடீரென கொட்டித்தீர்க்கும் கனமழையும் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. அதிகரிக்கும் வெப்பத்தால் தமிழகமும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழக   மக்களுக்கு பீதியைக் கிளப்பும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

     

    ஆய்வு முடிவுகள் :

    அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, தொடர் நகரமயமாக்கல் காரணமாக தமிழக நகரங்கள் உட்பட இந்தியாவில் உள்ள 21 நகரங்களில் அடுத்த 25 ஆண்டுகளுக்குள் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக அதிகரித்து 2050 வாக்கில் தற்போது வெயில் காலத்தில் உள்ளதை விட இரண்டு மடங்கு வெப்பம் வருடத்தின் 8 மாதங்களுக்கும் வீசி மக்களை தாங்கமுடியாத அவதிக்குள்ளாக்கும் என்று தெரியவந்துள்ளது.

     

    தமிழகத்துக்கு என்ன பாதிப்பு? 

    தமிழகத்தில் கடந்த 30 வருடங்களாக சராசரியாக வெப்பநிலை 29.5 டிகிரி செல்ஸியஸ் முதல் 33.4 டிகிரி செல்ஸியஸ் என்ற அளவில் உள்ளது. மேலும் சராசரி மழைப்பொழிவு 763 மி.மீ முதல் 1432 மி.மீ ஆக உள்ளது.

    தற்போதுள்ள சராசரி வெப்பநிலை 2050 இல் 0.4 டிகிரி செல்ஸியஸ் அதிகரிக்கும் என்றும் 2080 இல் 1.3 டிகிரி அளவுக்கு செல்ஸியஸ் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 2100 ஆம் ஆண்டு வாக்கில் சராசரி வெப்ப நிலை 1.7 டிகிரி செல்ஸியஸ் அதிகரிக்கும்.

     

    தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் வரும் காலங்களில் அதிக வெப்பம் பதிவாகும். அதுமட்டுமின்றி சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் வெப்ப அலை தற்போது உள்ளதை விட 2 மடங்கு அதிகமாக வீசும். குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிக பாதிப்பு இருக்கும்.

     

    வெயில் மட்டுமின்றி வழக்கத்துக்கு மாறான மழைப்பொழிவும் தமிழகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் இயல்புக்கு மாறாக குறிகிய காலத்திலேயே அதிக மழை கொட்டித்தீர்க்கும். 2050 இல் சராசரி மழைப்பொழிவு 4 சதவீதமும், 2080 இல் 11 சதவீதமும், 2100 இல் 16 சதவீதமும் அதிகரிக்கும்.

     

    மாசுபாடு அதிகமாகும் பட்சத்தில் இதுவே 2050 இல் 7 சதேவீதமாகவும், 2100 இல் 26 சதவீதமாகவும் கூட அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் இந்த சராசரி மழைபொழிவின் மாற்றம் கண்கூடாக தெரியும். 24 மணிநேரத்தில் 6 முதல் 7 சென்டிமீட்டர் என்ற அளவில் கூட மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று  ஆய்வில் தெரியவந்துள்ளது.

    • தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 72 மாவட்டங்கள் உள்ளன.
    • கூடுதல் மாவட்டங்களை உருவாக்கவும் திட்டமிட்டு உள்ளார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 72 மாவட்டங்கள் உள்ளன. இதில் 4 மாவட்டங்களுக்கு தலைவர் பதவி காலியாக உள்ளது.

    வழக்கமாக புதிய மாநில தலைவர் பதவிக்கு வந்ததும் தனது ஆதரவாளர்களை மாவட்ட தலைவர்களாக நியமிப்பது வழக்கம். அந்த வகையில் தற்போதைய மாநில தலைவர் செல்வப் பெருந்தகை 40 மாவட்ட தலைவர்கள் வரை மாற்றி விட்டு புதிய தலைவரை நியமிக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டது.

    இதற்காக மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் சென்றார். இன்னும் பல மாவட்டங்களுக்கு செல்லவில்லை. அடுத்த வாரம் முதல் மீண்டும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். இந்த சுற்றுப்பயணம் முடிந்ததும் மாவட்ட தலைவர்கள் மாற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையில் கட்சி பணியை தீவிரப்படுத்த மாவட்டங்களை பிரித்து கூடுதல் மாவட்டங்களை உருவாக்கவும் திட்டமிட்டு உள்ளார்கள்.

    அதாவது 2 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி ஒரு மாவட்டம் என்ற அடிப்படையில் 117 மாவட்டங்களை உருவாக்க முடிவு செய்துள்ளார்கள். இதன் மூலம் கூடுதலான 45 புதிய மாவட்டங்கள் உருவாகும். நிர்வாகிகள் பலருக்கு இதன் மூலம் புதிய பதவிகளும் கிடைக்கும்.

    புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டாலும் புதிய மாவட்ட தலைவர்களும் நியமிக்கப்படுவார்கள்.

    இதில் 10 பேர் வரை பெண்களாகவும், சிறுபான்மையினர், இளைஞர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளதாகவும் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    ×