என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலீடு"

    • பணக்காரர்கள் தங்களது முதலீடுகளில் 33 சதவீதத்தை குடியிருப்பு ரியல் எஸ்டேட் துறையில் 33முதலீடு செய்கிறார்கள்.
    • பணக்காரர்கள் கமர்ஷியல் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.

    இந்தியாவில் 30 மில்லியன் டாலருக்கு ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.26 கோடி) மேல் சொத்து மதிப்பு கொண்ட பணக்காரர்கள் இதில் எல்லாம் அதிகப்படியாக முதலீடு செய்கிறார்கள் என்பது குறித்து 150 பணக்காரர்களிடம் கோடக் மஹிந்திரா வங்கி ஆய்வு செய்துள்ளது.

    இந்த ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    இந்தியாவில் உள்ள பணக்காரர்களில் தங்களது முதலீடுகளில் 45 சதவீதத்தை கமர்ஷியல் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்கிறார்கள். இதற்கு அடுத்தபடியாக குடியிருப்பு ரியல் எஸ்டேட் துறையில் 33% முதலீடு செய்கிறார்கள்.

    குடியிருப்பு ரியல் எஸ்டேட் துறையை விட கமர்ஷியல் ரியல் எஸ்டேட் துறையில் அதிக வருவமானம் கிடைப்பதால் பணக்காரர்கள் கமர்ஷியல் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.

    குறிப்பாக வெளிநாட்டு ரியல் எஸ்டேட்களிலும் பணக்காரர்கள் சமீப காலமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள். உலக அளவில் முதலீடு செய்யும் பணக்காரர்களில் 35% பேர் வெளிநாடுகளில் கமர்ஷியல் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளார்கள்.

    வெளிநாடுகளுக்கு குடிபெயரும் நோக்கத்தில் பெரும்பாலான பணக்காரர்கள் வெளிநாடுகளில் குடியிருப்பு ரியல் எஸ்டேட்களில் முதலீடு செய்கிறார்கள். கணக்கெடுப்பில் கலந்துகொண்ட பணக்காரர்களில் 5 இல் ஒருவர் வெளிநாடுகளுக்கு குடிப்பெயர் திட்டமிட்டு வருவதாக தெரிவித்தனர். அவர்களில் பெரும்பாலோர் தங்கள் இந்திய குடியுரிமையைத் தக்க வைத்துக் கொண்டு வெளிநாட்டில் நிரந்தரமாக வசிக்க விரும்புகிறார்கள்.

    பணக்காரர்கள் தங்களது முதலீடுகளில் 32 சதவீதத்தை பங்குசந்தையில் முதலீடு செய்கிறார்கள். அதில் 89% தனிப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை வாங்குகிறார்கள். இதற்கு அடுத்தபடியாக மியூச்சுவல் ஃபண்டுகளில் 83 சதவீதமும், PMS ஃபண்டுகளில் 55 சதவீதமும், காப்பீடு/ULIPகள் 40 சதவீதமும் முதலீடு செய்கின்றனர். குறிப்பாக அமெரிக்க பங்குகள், இந்திய முதலீட்டர்களிடையே தற்போது பிரபலமடைந்து வருகிறது.

    கொரோனா நோய்த்தொற்றிற்கு பிறகு பணக்காரர்கள் தங்களது பட்ஜெட்டில் 10 சதவீதத்தை ஆரோக்கியம் மற்றும் உடல்நலத்திற்கு செலவு செய்கிறார்கள்.

    2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் ரூ.26 கோடிக்கும் மேல் சொத்து மதிப்பு கொண்ட பணக்காரர்களின் எண்ணிக்கை சுமார் 2.18 லட்சமாக இருந்தது. இது 2028 ஆம் ஆண்டுக்குள் சுமார் 4.30 லட்சமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சில நாட்களுக்கு முன்பு பங்கு விலைகள் சரியத் தொடங்கியதால் அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்
    • கூரையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் இருப்பதைக் கண்டனர்.

    ஜார்க்கண்டில் பங்ச்சந்தையில் பணத்தை இழந்ததால் ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் சிட்கோரா காவல் பகுதியில் வசித்தவர் சஞ்சீவ் குமார் (25 வயது). இவருக்கு ஒரு மூத்த சகோதரனும் ஒரு சகோதரியும் உள்ளனர்.

    குமார், ஆன்லைனில் வகுப்பு எடுக்கும் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அவர் பங்குச் சந்தையில் அதிக அளவில் பணத்தை முதலீடு செய்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு பங்கு விலைகள் சரியத் தொடங்கியதால் அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் பங்குச் சந்தையில் தனது பணத்தை இழந்ததால் நேற்று (செவ்வாய்க்கிழமை) அவர் வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காலையில், பலமுறை கதவைத் தட்டியும் அவர் பதிலளிக்காததால், அவரது குடும்பத்தினர் அவரது அறைக்குள் நுழைந்து பார்த்தபோது கூரையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் இருப்பதைக் கண்டனர்.

    அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவிட்டனர். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வளர்கின்றனர்.

    தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050

    • இந்த நிறுவனம் ரூ.10 லட்சத்தில் டிரோன் வாங்க உள்ளது.
    • 300 பேர் ரூ.2 ஆயிரம் செலுத்தினார்கள் என்றால் முதலீடு ரூ. 6 லட்சமாகும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் சீனிவாசன்பி ள்ளை ரோட்டில் உள்ள தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடெட்டில் வேளாண் வணிகத்தை விவசாயிகளுக்கு கற்றுக் கொடுப்பது, பொருட்களை உற்பத்தி செய்வது மட்டு மின்றி சந்தைப்படுத்துவதில் சிறந்து விளங்குவது எப்படி என்பது குறித்து விவசாயிக ளுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

    மாவட்ட வளர்ச்சி மேலாளர் (நபார்டு) அனீஸ்குமார் தலைமை தாங்கினார்.

    தஞ்சை தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடெட் சேர்மன் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.

    இதில் ஈரோடு ஆதார நிறுவனம் திட்ட அலுவலர் முனைவர் வடிவேல் கலந்து கொண்டு பேசியதாவது:-

    பத்தாயிரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை இந்தியா முழுவதும் உருவாக்குகிற மத்திய அரசின் சிறப்பு திட்டம்.

    இதில் 10 ஆயிரத்தில் 3000 நிறுவனங்களை நபார்டு வங்கி மூலம் உருவாக்குவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடெட் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த திட்டத்தின் நோக்கம் என்னவென்றால் விவசாயிகளுக்கு உற்பத்தி தளத்தில் தலைமுறை தலைமுறையாக அனுபவ அறிவு இருக்கும்.

    ஆனால் சந்தைப்படுத்துதல் என்ற தளத்தில் அவர்களுக்கு அனுபவம் மிகவும் குறைவு.

    இதனால் 300 விவசாயிகள் ஒன்றாக சேர்ந்து நிறுவ னத்தை உருவாக்கினால் சந்தைபடுத்துதலில் ஒரு வலிமையை கொடுக்கும்.

    இந்த திட்டம் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல் சந்தையிலும் ஒரு வியாபாரி போல் பொருட்களை விற்க முடியும்.

    இந்த திட்டத்தில் குறைந்தபட்ச உறுப்பினர்கள் 300 பேர்.

    கம்பெனியின் ஒரு பங்கு என்பது ரூ.100 ஆகும்.

    ஒவ்வொரு விவசாயியும் 20 பங்கு வாங்கலாம். அப்படி என்றால் ரூ.2000 செலுத்த வேண்டும்.

    300 பேர் 2000 செலுத்தினார்கள் என்றால் முதலீடு ரூ.6 லட்சமாகும்.

    இதில் இணைப்பங்காக மத்திய அரசு ரூ.6 லட்சம் கொடுக்கிறது. இதனால் முதலீடு ரூ.6 லட்சமாகிவிடும். இது 750 நபர் வரை கொடுப்பார்கள்.

    உச்சபட்ச முதலீடு ரூ.30 பங்காகும்.

    இந்த கம்பெனியில் 10 பேர் கொண்ட இயக்குனர் குழு வந்துவிடும். அதில் முதன்மை செயல் அலுவலர், அக்கவுண்ட் மேனேஜர் நியமனம் செய்யப்படுவார்கள்.

    இவர்கள் விவசாயிகள் இடம் அறுவடை காலத்தில் பொருட்களை வாங்கி விடுவார்கள்.

    பின்னர் அந்த பொருட்களை சுத்தப்படுத்தி விலை ஏறும் போது மதிப்புக்கூட்டி சந்தைபடுத்துவார்கள்.

    வணிகத்தை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும்.

    இது 3 ஆண்டுகளுக்கான நிதி வழங்கும் திட்டமாகும்.

    இவர்களை வழி நடத்துவதற்கு ஆதார நிறுவனங்கள் என்று 247 பேரை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.

    ஈரோடு துள்ளியல் பண்ணை உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் என்பது ஆதார நிறுவனம் ஆகும்.

    தஞ்சாவூர் தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடெட்டை வளர்த்து எடுக்கும் பொறுப்பை நாங்கள் எடுத்துள்ளோம்.

    நாங்கள் இவர்களுடன் 5 ஆண்டு பயணம் செய்வோம்.

    ஆரம்ப காலகட்டத்தில் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ரூ.18 லட்சத்தை மத்திய அரசு கொடுக்கிறது.

    ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ரூ.2 கோடி வரைக் கடன் உதவி வழங்கப்படுகிறது.

    தஞ்சாவூர் நிறுவனமானது தென்ன ங்கன்று, நாற்றங்காலை கையில் எடுத்துள்ளது. கண்டிதம்பட்டு அருகே சொக்காலி கிராமத்தில் அரை ஏக்கரில் தென்னை நர்சரி அமைக்கப்பட்டுள்ளது.

    அடுத்த திட்டம் என்னவெ ன்றால் தேங்காயைடன் கணக்கில் கொள்முதல் செய்து பெரிய கம்பெனிகளுக்கு கொடுப்பது. குறிப்பிட்டு சொல்வது என்னவென்றால் இந்த நிறுவனம் ரூ.10 லட்சத்தில் டிரோன் வாங்க உள்ளது.

    அனைத்து பயிர்களுக்கும் இந்த டிரோன் மூலம் மருந்து தெளிக்கலாம்.

    அதேபோல் தென்னைக்கு வேர் வழி நுன்னூட்டம் கொடுப்பதால் தென்னை செழித்து வளரும்.

    தென்னை மற்றும் பிற பொருட்களில் இருந்து மதிப்பு கூட்டல் உணவுப் பொருட்கள் தயாரிப்பது மற்றொரு திட்டமாகும். இதற்கான எந்திரங்கள் ரூ.4 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளது.

    இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் வந்த பிறகு தரமான உணவு பொருட்கள் தயார் செய்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு சந்தைப்படுத்த முடியும்.

    எதிர்கா லத்தில் தஞ்சாவூரில் உள்ள இந்த கம்பெனி விவசாயிகளுக்கு பொருளாதார வளர்ச்சியை கொடுக்கும்.

    வேளாண் வணிகத்தை விவசாயிகளுக்கு கற்று கொடுப்பது அடிப்படை நோக்கமாகும்.

    ஜூலை மாதத்தில் சென்னையில் உணவு உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான கண்காட்சி நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் முதன்மை செயல் அலுவலர் நவீன் அரசன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்குமா? என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    • தற்போது பல ஏஜெண்டுகள் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

    தேவகோட்டை

    நியோமேக்ஸ் நிறுவனம் கூடுதல் வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் ரூ. 5000 கோடி வரை பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் அளிக்கப்பட்டது. அதன்பேரில் தேவகோட்டை பகுதியை சேர்ந்த சைமன், கபில் ஆகிய 2 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

    தேவகோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல ஆயிரம் கோடிகளை நியோமேக்ஸ் நிறுவனத்தில் அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். முதலீடு செய்தவர்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் விருந்து, ஊட்டி கொடைக்கானல் சுற்றுலா ஆகியவை ஏற்பாடு செய்து அவர்களை கவர்ந்துள்ளனர்.

    இதனால் அதிகளவில் முதலீட்டாளர்கள் சேர்ந்தனர். அவர்கள் தங்கள் உறவினர்களையும் முதலீடு செய்ய வைத்துள் ளனர். உறவினர்களை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர்.

    மேலும் மத்திய அரசு பணியில் இருப்பவர்கள், ஓய்வு பெற்றவர்கள், வெளிநாட்டில் வேலை செய்வோர் ஆகியோர் அதிகளவில் இந்த நிறுவனத்தில் அதிகளவில் முதலீடு செய்துள்ளனர்.

    அவர்களை குறிவைத்து நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என நம்ப வைத்து மோசடி செய்துள்ளனர்.

    எங்களிடம் நீங்கள் கொடுக்கும் பணத்தை ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து, அதில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை உங்களுக்கு வட்டி கொடுப்போம் என்று நியோமேக்ஸ் நிறுவனத்தின் ஏஜென்டுகள் முதலீட்டா ளர்களிடம் கூறியுள்ளனர்.

    முதலீட்டாளர் கூட்டங்களுக்கு இயக்கு னர்கள், ஏஜெண்டு கள் விலை உயர்ந்த கார்களில் வருவதை பார்த்து ஆர்வத்துடன் முதலீடு செய்துள்ளனர்.

    தேவகோட்டை பகுதி களில் நியோமேக்ஸ் மற்றும் அதன் கிளை நிறுவனங்களில் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் ஏஜெண்டு களாக உள்ளனர். இவர்க ளின் சொகுசு வாழ்க்கையை பார்த்து பொது மக்கள் ஆசைப்பட்டு அதிக பணத்தை கட்டியுள்ளனர்.

    ஆனால் தற்போது பல ஏஜெண்டுகள் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை நம்பி நியோமேக்ஸ் நிறுவ னத்தில் முதலீடு செய்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பணம் திரும்ப கிடைக்குமா? என்ற கலக்கத்தில் உள்ளனர்.

    • ஆன்லைனில் வேலைவாங்கி தருவதாகவும், பணம் டெபாசிட் செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாகவும், அதிக வட்டி தருவதாகவும் ஏமாற்றுகிறார்கள்.
    • நபர்கள் குறித்து சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கானவர்களிடம் பல லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எந்தவித ஆவணங்களும் இல்லாமல் கடன் தருவதாகவும், குறைவான வட்டியில் கடன் தருவதாகவும், முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாகவும் பொய்யான விளம்பரத்தை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். ஆன்லைனில் வேலைவாங்கி தருவதாகவும், பணம் டெபாசிட் செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாகவும், அதிக வட்டி தருவதாகவும் ஏமாற்றுகிறார்கள். தாங்கள் குடியிருக்கும் பகுதிகளில் இனிவரும் காலங்களில் இதுபோல் அரசால் அங்கீகரிக்கப்படாத நிதி நிறுவனங்களின் விளம்பரங்களை பார்த்து முதலீடு செய்ய வேண்டாம். இதுகுறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து உண்மை தன்மையை அறியலாம்.

    வீடு, கடையின் உரிமையாளர்கள் வாடகைக்கு விடும்போது அந்த நபர்கள் பற்றி முழுமையான விவரங்களை தெரிந்தும், அவர்களின் பான்கார்டு, ஆதார் கார்டு, நிரந்தர முகவரி ஆகிய ஆவணங்களை பெற வேண்டும். நபர்கள் குறித்து சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம்.

    ஆன்லைனில் தங்களது வங்கியின் மூலமாக பேசுவதாக கூறி வங்கி கணக்கை அப்டேட் செய்ய வேண்டும் என்றும், ஓ.டி.பி. நம்பரை பகிருமாறு கூறினால் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுத்துவிடுவார்கள். அவ்வாறு கூறாமல் எச்சரிக்கையாக இருங்கள். பொதுமக்கள் தங்களது வீடுகளிலும், வியாபார நிறுவனங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இதனால் குற்றவாளிகளை எளிதில் கண்டறிய முடியும். பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் கிராம கண்காணிப்பு கமிட்டி உருவாக்கி அதன் மூலமாக போலீசுடன் நல்லுறவு ஏற்படுத்தி புகார்களை தெரிவிக்கலாம்.

    வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்து வேலைக்கு வரும் நபர்கள் அந்த நிறுவனத்தின் உரிமையாளர், மேலாளர் அந்த நபரின் முழு விவர ஆதாரங்களை பெற வேண்டும். நபர் குறித்து போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. பொதுமக்கள் இதற்கு ஒத்ழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இதற்காக அதே ஊரைச் சேர்ந்தவ ஒரு சிலரை ஏஜெண்டுகளாக நியமனம் செய்தார்.
    • அவரிடம் பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு அதிக வட்டி கொடுத்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம் பரமநத்தம் ரோட்டை சேர்ந்தவர் இஸ்மாயில் ஷேக் என்பவரது மகன் ஷமீர் அகமது (வயது 26). இவர் கடந்த 2021-ம் ஆண்டு மூரார்பா ளையத்தில் அலுவலகம் அமைத்து, ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.12 ஆயிரம் வட்டி வழங்குவதாக அறிவித்தார். இதற்காக அதே ஊரைச் சேர்ந்தவ ஒரு சிலரை ஏஜெண்டுகளாக நியமனம் செய்தார்.இதனை நம்பி ஏராளமானோர் தங்களின் சேமிப்பு பணத்தை முதலீடு செய்தனர். ஆரம்ப காலத்தில் வட்டி வழங்கி ஷமீர் அகமது, கடந்த சில மாதங்களாக வட்டி வழங்கவில்லை. மேலும், மூரார்பாளையத்தில் இருந்து அலுவலகம், தொழில் நிறுவனங்களை மூடிவிட்டு தலைமறை வாகினார்.

    அவரிடம் பணிபுரிந்த ஏஜெண்டுகள், ஷமீர் அகமது சென்னையில் இருப்பதை கண்டுபிடித்து அவரை மூரார்பாளை யத்திற்கு அழைத்து வந்து, சங்கராபுரம் போலீசாரிடம் ஓப்படை த்தனர். போலீ சாரின் விசாரணையில் மோசடி மன்னன் ஷமிர் அகமது கூறியதாவது:-எனது சொந்த ஊர் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த முத்து கிருஷ்ணாபுரம் ஆகும். எனது சகோதரியை கள்ளக்கு றிச்சியில் திருமணம் செய்து கொடு த்துள்ளதால், அப்பகுதியில் எனக்கு பழக்கம் ஏற்பட்ட து. நான் கடந்த 15 வரு டமாக மூரார்பாளை யத்தில் வசித்து வருகிறேன். பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள எனக்கு திருமணமாகி ரூபா என்கிற அப்ரீன் என்ற மனைவியும், 1 ½ வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு சென்னை வேளச்சேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் நகைக்கடை உரிமையாளர், அவரிடம் பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு அதிக வட்டி கொடுத்தார்.

    அதேபோல் நானும் எனது பெயரில் மூரார்பாளையம் மற்றும் கள்ளக்குறிச்சியில் நிதி நிறுவனம் தொடங்கி ஏஜெண்டுகள் மூலம் வாடிக்கையாளர்களை பிடித்து பணத்தை பெற்று முதலீடு செய்தேன். நான் முதலீடு செய்த இடத்தில் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் தலைமறைவாகி சென்னையில் வாடகை வீட்டில் தங்கி இருந்தேன். பணத்தை முதலீடு செய்த பொதுமக்களின் தொந்தரவு தாங்க முடியாததால், அந்த வீ்ட்டை காலி செய்து விட்டு உறவினர் வீட்டில் வசித்து வந்தேன். இருந்தபோதும் என்னிடம் பணி புரிந்த ஏஜெண்டுகள் என்னை கண்டுபிடித்து விட்டனர். இவ்வாறு ஷமீர் அகமது தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளார். இதையடுத்து மோசடி மன்னன் ஷமீர் அகமதுவை, சங்கராபுரம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், ஷமீர் அகமது பொதுமக்களிடம் எவ்வளவு பணம் வசூல் செய்தார்? எத்தனை பேருக்கு பணத்தை திருப்பி கொடுத்துள்ளார் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை?. எனவே அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சங்கராபுரம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    • திருப்பூரை சேர்ந்த 25 வயதான இளம்பெண் ஐ.டி.துறையில் வேலை செய்து வருகிறார்.
    • பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதன் மூலமாக கிடைக்கும் லாபத்தொகையை காட்டியுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூரை சேர்ந்த 25 வயதான இளம்பெண் ஐ.டி.துறையில் வேலை செய்து வருகிறார். இவர் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் இவருடைய வாட்ஸ்-அப் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் வீட்டில் இருந்தபடியே தொழில் செய்து எளிய முறையில் பணம் சம்பாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நம்பிய அந்த இளம்பெண் குறுஞ்செய்தியில் கொடுக்கப்பட்ட டெலகிராம் செயலிக்குள் சென்று பார்த்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தை பாலோ செய்தால் உங்களுக்கு கமிஷனாக பணம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நம்பி அவ்வாறே அந்த இளம்பெண் செய்துள்ளார்.

    இவ்வாறு செய்ததன் மூலம் அவருக்கு கொஞ்சம் பணம் கிடைத்துள்ளது. பின்னர் அவருக்கு பண ஆசை மேலும் அதிகரித்தது. அதன்பிறகு ஒவ்வொரு போட்டியாக வைத்து அதில் வெற்றி பெற்றால் உங்களுக்கு கிடைக்கும் பணத்தொகை இவ்வளவு என்று அதிகப்படியான பணத்தை காட்டி இளம்பெண்ணுக்கு ஆசையை தூண்டியுள்ளனர். மேலும் பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதன் மூலமாக கிடைக்கும் லாபத்தொகையை காட்டியுள்ளனர். இதனால் அதிக பணம் சம்பாதிக்கும் எண்ணம் அந்த இளம்பெண்ணுக்கு ஏற்பட, ஒரு கட்டத்தில் வங்கியில் கடன் வாங்கி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளார். இவ்வாறு ரூ.17 லட்சத்து 76 ஆயிரத்து 800-ஐ அந்த இளம்பெண் முதலீடு செய்தார். அதற்காக கிரிப்டோ கரன்சி தொகையும் கணக்கில் வந்துள்ளது. ஆனால் லாபத்தொகை, முதலீடு தொகை உள்ளிட்ட எந்த பணத்தையும் இளம்பெண்ணால் எடுக்க முடியவில்லை. அதன்பிறகே அவருக்கு தெரியவந்தது, பணத்தாசையில் ஏமாறப்பட்டோம் என்று.

    இதைத்தொடர்ந்து அந்த பெண் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவுப்படி திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி கூறும்போது, ஐ.டி., பொறியியல் பட்டதாரிகள் தான் இதுபோன்ற மோசடிகளில் அதிகம் சிக்குகிறார்கள். முதலில் கொஞ்சம் பணத்தை சம்பாதிப்பது போல் அனுப்பி வைக்கிறார்கள். அதன்பிறகு ஒவ்வொரு டாஸ்க் வைத்து பணத்தை அதிகம் முதலீடு செய்ய தூண்டுகிறார்கள். அதிக பணத்தை முதலீடு செய்த பின்னர் லாப தொகையும், முதலீடு தொகையும் கொடுக்காமல் ஏமாற்றி விடுகிறார்கள். இதுபோன்ற மோசடி ஆசாமிகளின் இணையதள முகவரிக்குள் சென்றாலும் அடையாளம் காண முடியாத அளவுக்கு தொழில்நுட்ப மாறுபாடுகளை செய்துள்ளனர். சமீபத்தில் திருப்பூரில் இதுபோன்ற மோசடிகளில் படித்த இளைஞர்கள் தான் அதிகம் சிக்கி வருகிறார்கள். விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மோசடி ஆசாமிகள் விரிக்கும் வலையில் சிக்கிவிடுகிறார்கள்' என்றார்.திருப்பூர், நவ.23-

    திருப்பூரை சேர்ந்த 25 வயதான இளம்பெண் ஐ.டி.துறையில் வேலை செய்து வருகிறார். இவர் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் இவருடைய வாட்ஸ்-அப் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் வீட்டில் இருந்தபடியே தொழில் செய்து எளிய முறையில் பணம் சம்பாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நம்பிய அந்த இளம்பெண் குறுஞ்செய்தியில் கொடுக்கப்பட்ட டெலகிராம் செயலிக்குள் சென்று பார்த்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தை பாலோ செய்தால் உங்களுக்கு கமிஷனாக பணம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நம்பி அவ்வாறே அந்த இளம்பெண் செய்துள்ளார்.

    இவ்வாறு செய்ததன் மூலம் அவருக்கு கொஞ்சம் பணம் கிடைத்துள்ளது. பின்னர் அவருக்கு பண ஆசை மேலும் அதிகரித்தது. அதன்பிறகு ஒவ்வொரு போட்டியாக வைத்து அதில் வெற்றி பெற்றால் உங்களுக்கு கிடைக்கும் பணத்தொகை இவ்வளவு என்று அதிகப்படியான பணத்தை காட்டி இளம்பெண்ணுக்கு ஆசையை தூண்டியுள்ளனர். மேலும் பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதன் மூலமாக கிடைக்கும் லாபத்தொகையை காட்டியுள்ளனர். இதனால் அதிக பணம் சம்பாதிக்கும் எண்ணம் அந்த இளம்பெண்ணுக்கு ஏற்பட, ஒரு கட்டத்தில் வங்கியில் கடன் வாங்கி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளார். இவ்வாறு ரூ.17 லட்சத்து 76 ஆயிரத்து 800-ஐ அந்த இளம்பெண் முதலீடு செய்தார். அதற்காக கிரிப்டோ கரன்சி தொகையும் கணக்கில் வந்துள்ளது. ஆனால் லாபத்தொகை, முதலீடு தொகை உள்ளிட்ட எந்த பணத்தையும் இளம்பெண்ணால் எடுக்க முடியவில்லை. அதன்பிறகே அவருக்கு தெரியவந்தது, பணத்தாசையில் ஏமாறப்பட்டோம் என்று.

    இதைத்தொடர்ந்து அந்த பெண் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவுப்படி திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி கூறும்போது, ஐ.டி., பொறியியல் பட்டதாரிகள் தான் இதுபோன்ற மோசடிகளில் அதிகம் சிக்குகிறார்கள். முதலில் கொஞ்சம் பணத்தை சம்பாதிப்பது போல் அனுப்பி வைக்கிறார்கள். அதன்பிறகு ஒவ்வொரு டாஸ்க் வைத்து பணத்தை அதிகம் முதலீடு செய்ய தூண்டுகிறார்கள். அதிக பணத்தை முதலீடு செய்த பின்னர் லாப தொகையும், முதலீடு தொகையும் கொடுக்காமல் ஏமாற்றி விடுகிறார்கள். இதுபோன்ற மோசடி ஆசாமிகளின் இணையதள முகவரிக்குள் சென்றாலும் அடையாளம் காண முடியாத அளவுக்கு தொழில்நுட்ப மாறுபாடுகளை செய்துள்ளனர். சமீபத்தில் திருப்பூரில் இதுபோன்ற மோசடிகளில் படித்த இளைஞர்கள் தான் அதிகம் சிக்கி வருகிறார்கள். விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மோசடி ஆசாமிகள் விரிக்கும் வலையில் சிக்கிவிடுகிறார்கள்' என்றார்.

    • பல வியத்தகு சாதனை அறிவிப்புகளைத் தொடர்ந்து எதிர்பார்த்திருங்கள்.
    • தமிழ்நாட்டில் 3,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    வியட்நாம் நாட்டின் முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனமாக வின்ஃபாஸ்ட் தமிழ்நாட்டில் ரூ.16000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை கையெழுத்தாகிறது.

    தூத்துக்குடியில் அமையவுள்ள இந்த தொழிற்சாலையின் மூலம் தமிழ்நாட்டில் 3,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான @VinFastofficial

    தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளது.

    அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் ஈவிகார் மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை வின்ஃபாஸ்ட் நிறுவனம் அமைக்கவுள்ளது.

    இது வெறும் முதலீடு அல்ல; தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல்.

    தமிழ்நாட்டில் நடைபெறும் நல்லாட்சி மீதும், நம் மாநிலத்தின் ஆற்றல்மிகு மனிதவளத்தின் மீது நம்பிக்கை கொண்டு இந்தப் பெரும் முதலீட்டை மேற்கொள்ளும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தாருக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக எனது மனமார்ந்த நன்றிகள்!

    #TNGIM2024-இல் இன்னும் இதுபோன்ற பல வியத்தகு சாதனை அறிவிப்புகளைத் தொடர்ந்து எதிர்பார்த்திருங்கள்!

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • டிவிஎஸ் நிறுவனம் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு- 500 வேலை வாய்ப்புகள்.
    • மிகப்பெரிய முதலீடாக டாடா பவர் நிறுவனம் தமிழ்நாட்டில் ₹55,000 கோடி முதலீடு செய்யவுள்ளது.

    சென்னையில் இன்று தொடங்கி நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய அறிவித்துள்ளன. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளன.

    மிகப்பெரிய முதலீடாக டாடா பவர் நிறுவனம் தமிழ்நாட்டில் ₹55,000 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது.

    இந்நிலையில், தமிழகத்தில் முதலீடு செய்யும் டாப் 10 முதலீடுகள் குறித்து பார்ப்போம்.

    வின்ஃபாஸ்ட் நிறுவனம் தமிழகத்தில் ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம், தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ரூ.12,082 கோடி முதலீடு செய்துள்ளது. இதன்மூலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40,500 வோலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அடுத்ததாக, ஜேஎஸ்டபுள்ழு நிறுவனம் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. இதன் மூலம், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் 6600 வேலை வாய்ப்புகள் உருவாகும். 

    ஹூண்டாய் நிறுவனம் ரூ.6180 கோடி முதலீடு செய்கிறது. இதன்மூலம், 50 ஆயிரம் பேருக்கு பயிற்சி வாய்ப்புகள் உருவாகும்.

    பர்ஸ்ட் சோலார் நிறுவனம் ரூ. 5600 கோடி முதலீடு செய்கிறது. இதன்மூலம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 350 வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    டிவிஎஸ் நிறுவனம் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு- 500 வேலை வாய்ப்புகள்.

    பெகட்ரான் நிறுவனம் ரூ.1000 கோடி முதலீடு- செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 ஆயிரம் வேலை வாய்ப்புகள்.

    கோத்ரேஜ் நிறுவனம் ரூ.515 கோடி முதலீடு- செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 ஆயிரம் வேலை வாய்ப்புகள்.

    மிட்சுபிஷி நிறுவனம் ரூ.200 கோடி முதலீடு- திருவள்ளூர் மாவட்டத்தில் 60 சதவீத பெண் பணியாளர்கள் நியமிக்க வாய்ப்பு.

    குவல்காம் நிறுவனம் ரூ.177 கோடி முதலீடு- சென்னையில் 1600 வேலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்பு.

    • செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் வேலைகளை உருவாக்கவும், பறிக்கவும் முடியும்.
    • பல நாடுகளில் Al தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்தலில் முறைகேடுகள் செய்வதையும் நம்மால் காணமுடிகிறது.

    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரையாறறினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கணினிகளை மனிதர்கள் போல் செயல்படும் வகையில் வடிவமைக்க தொடங்கிவிட்டோம். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் வேலைகளை உருவாக்கவும், பறிக்கவும் முடியும்.

    AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஆங்கிலம், தமிழ் மற்றும் பிற பிராந்திய மொழிகளில் Content-களை உருவாக்கினால் அது வேலைவாய்ப்புகளை பெருக்கும். 

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் DeepFake உள்ளிட்ட எதிர்மறையான தாக்கங்கள்

    அதிகரித்துள்ள சூழலில், அதிகாரப்பூர்வ மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்ப்பதில் முக்கியத்துவம் செலுத்த வேண்டும்.

    பல நாடுகளில் Al தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்தலில் முறைகேடுகள் செய்வதையும் நம்மால் காணமுடிகிறது.

    மனிதர்களால் ஏற்படும் அழிவு மற்றும் இழப்பை AI தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி சரி செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 6,64,180 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
    • ஆட்சிக்கு வந்தது முதல் இன்று வரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன்.

    உலக முதலீட்டாளர் மாநாட்டின் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    தமிழ்நாட்டின் 20 ஆண்டு கால வளர்ச்சிக்கு இந்த மாநாடு வித்திட்டுள்ளது. இந்த மாநாட்டை உலகமே வியக்கும் வகையில் நடத்தி, என் இதயத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நீங்கா இடம் பிடித்துள்ளார்.

    இந்தியாவே வியக்கும் வகையில் முதலீடுகளை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஈர்த்துள்ளார். 

    ஆட்சிக்கு வந்தது முதல் இன்று வரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். 27 தொழிற்சாலைகளை திறந்து வைத்துள்ளேன். இதன்மூலம், 74,757 இளைஞர்கள், மகளிருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 6,64,180 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.

    உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் 14,54,712 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படுகிறது.

    12,35,945 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.

    2030-க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவு பொருளாதார மாநிலமாக தமிழகத்தை மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    உற்பத்தி மட்டுமின்றி ஏற்றுமதியையும் இலக்காக கொண்டு செயல்பட திட்டம். 

    9 நாடுகள் இந்த மாநாட்டில் பன்னாட்டு அரங்குகள் அமைத்து சிறப்பு சேர்த்துள்ளன.

    எங்கள் அரசு மீதும் கொள்கை மீதும் நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவோம்.

    தொழிற்சாலை அமைத்து, உற்பத்தி தொடங்கிய பின்னும் நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்.

    மாநாட்டில் முதலீடுகளை மேற்கொண்டுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    முதலீடு செய்யாதவர்களையும் முதலீடு செய்ய வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முதல் நாளில், வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது.
    • அதானி குழுமம் ரூ.24,500 கோடி முதலீடு- 4 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    சென்னையில் நேற்று தொடங்கி இன்று 2வது நாளாக நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய அறிவித்துள்ளன. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளன.

    முதல் நாளான நேற்று தமிழகத்தில் முதலீடு செய்த டாப் 10 நிறுவனங்களில், முதலாவதாக வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம், தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதைதொடர்ந்து, 2வது நாளாக இன்று மிகப்பெரிய முதலீடாக டாடா பவர் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.70,800 கோடி முதலீடு செய்கிறது. இதன்மூலம், 3800 வேலை வாய்ப்புகள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உருவாகும் என கூறப்புடுகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. 

    தொடர்ந்து, அதானி குழுமம் ரூ.24,500 கோடி முதலீடு- 4 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    மூன்றாவதாக சிபிசில் நிறுவனம் ரூ.17 ஆயிரம் கோடி முதலீடு- நாகப்பட்டினத்தில் 2400 வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    அதானி குழுமம் ரூ.13,200 கோடி முதலீடு- 1000 வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    எல் அண்டு டி நிறுவனம் ரூ.3500 கோடி முதலீடு- சென்னையில் 40 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    ராயல் என்ஃபீல்டு ரூ.3 ஆயிரம் கோடி முதலீடு- காஞ்சிபுரத்தில் 2000 வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    மைக்ரோசாப்ட் இந்தியா ரூ,2740 கோடி முதலீடு- சென்னையில் 167 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    ஹிந்துஜா குழுமம் ரூ.2500 கோடி முதலீடு- செங்கல்பட்டு மாவட்டத்தில் 300 வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    ஹைலி க்லோரி ஃபுட்வேர் நிறுவனம் ரூ.2302 முதலீடு- கள்ளக்குறிச்சியில் 2000 வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    திருவள்ளூரில் ஸ்டெல்லண்டிஸ் குழுமம் ரூ.2000 கோடி முதலீடு செய்கிறது.

    இதன்மூலம், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மொத்தமாக ரூ.6.64 லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    ×